Tuesday 1 January 2019

இன்று ஒரு செய்தி - 02.01.2019

மூன்றாம் பருவம் தொடங்கி இருக்கிறது. இந்த இனிய நாளில் சில செய்திகளை நான் இளைய தலைமுறையாம் மாணவச் செல்வங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதல் செய்தி
அதிகாலையில் எழப் பழகுங்கள்.
இரண்டாம் செய்தி
எழுந்ததும் தன்சுத்தம் செய்து கொண்டு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மூன்றாம் செய்தி
தன்சுத்தத்தில் கவனமாக இருப்பது போல நம்மைச் சுற்றிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். முடிந்தவரை குப்பைகளை உருவாக்காமல் இருந்தாலே தூய்மைப் பணிக்கான தேவைகள் குறைந்து விடும். குப்பைகளை எப்படி உருவாக்காமல் இருக்கலாம் என்பதை தாள்களைக் கிழிப்பதற்கு முன் யோசியுங்கள். ஒருவேளை குப்பைகளை உருவாக்கி விட்டாலும் அதைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
நான்காம் செய்தி
உங்களுக்கு என்று ஒரு சுயஒழுக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாகவும் அதில் உறுதியாகவும் இருங்கள்.
ஐந்தாம் செய்தி
எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும், அலைபேசியைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள்.
ஆறாம் செய்தி
எதைத் தீர்மானித்தீர்களோ அதைச் செயல்படுத்துங்கள்.
நன்றி!
நல்ல ஒரு செய்தியோடு நாளையும் சந்திப்போம்!
இதன் யூடியுப் இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்...


No comments:

Post a Comment