குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 14
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 14
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 82
பேய்களைக் காட்டிப் பிழைத்தல்!
மனிதர்கள் பரப்பும் பெரும்பாலான அமானுஷ்ய பேய்க் கதைகளின் பின்னே
மூளையின் டெம்போரல் லோப் கோளாறுகளும், இயற்பியல் மற்றும் வேதியியல் தில்லாலங்கடிகளும்
அத்துடன் உளவியல் ரீதியான பயங்களுமே உள்ளன.
அப்படி ஒரு கதைதான் ஸ்மெர்ல் குடும்ப அமானுஷ்யம்.
1986 இல் பென்சில்வேனியாவில் வாழக் கிடைத்த ஸ்மெர்ல் குடும்பத்திற்கு
வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு மனிதன் தன் வீட்டுச்
சாக்கடை நாற்றத்தையும், மூளைக் கோளாறையும் வைத்துக்கொண்டு மீடியாவுக்கு பேட்டி கொடுக்க
மாட்டான்.
ஜாக் ஸ்மெர்ல் திடீரென ஒருநாள் கத்தினார், "என் வீட்ல
பேய் இருக்கு ஐயா! அது என் வீட்டை ஆக்கிரமித்து விட்டது, கதவைத் தட்டுது, சாக்கடை நாற்றம்
அடிக்குது, என் நாய் காத்துல பறக்குது!"
சாக்கடை நாற்றம் அடித்தால் எந்த ஒரு சராசரி மனிதனும் பிளம்பரைத்தான்
கூப்பிடுவான். ஆனால் ஜாக், பேய் நிபுணர்களான வாரன் தம்பதியைக் கூப்பிட்டார். ஏனென்றால்,
பிளம்பர் காசு கேட்பான்; வாரன் தம்பதி பேயைக் காட்டிப் பணம் பண்ணித் தருவார்கள்!
உடனே வாரன் தம்பதி லேண்ட் ஆனார்கள். வழக்கமான தங்கள் பிசினஸ்
கார்டை இறக்கினார்கள். "இது சாதாரண பேய் இல்ல ஐயா! நாலு பிசாசு சேர்ந்து குத்தகைக்கு
எடுத்திருக்கும் மகா மெகா பேய்!" என்றார்கள்.
இங்கேதான் நீங்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். உலகத்தில் எந்தப்
பேயும் ஏழை வீட்டில் குடியிருப்பதில்லை. எப்போதும் மீடியா வெளிச்சம் உள்ள, புத்தகம்
எழுத வசதியான வீடுகளில்தான் பேய்களுக்குப் பாஸ்போர்ட் அதாவது, குடிவரவு அனுமதி கிடைக்கிறது.
பின்னாள்களில் டாக்டர்கள் வந்து பரிசோதித்துப் பார்த்தபோதுதான்
பல உண்மைகள் தெரிய வந்தன. ஜாக் ஸ்மெர்லுக்கு இருந்தது மூளைக் கோளாறு. டெம்போரல் லோப்
எபிலெப்சி. இந்த நோய் உள்ளவர்களுக்கு இல்லாத ஒலிகள் கேட்கும், கண்ணுக்குப் புலப்படாத
உருவங்கள் தெரியும், மூக்குக்கு துர்நாற்றம் வீசும்.
அவர் பயந்த பயத்தில் குடும்பத்தினரும் சேர்ந்து பயந்து,
"ஆமாம்! நாறுகிறது!" என்று கதறியிருக்கிறார்கள். இதற்குப் பெயர் உளவியலில்
கூட்டு லூசுத்தனம். அதாவது, வீட்டின் தலைவன் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக நம்பும்போது,
பயத்தின் காரணமாகக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அதே போன்ற பிரமைகள் தோன்றத்
தொடங்கும்.
ஆனால், அந்த வீட்டில் சாக்கடை நாற்றம் இருந்தது உண்மை. அது
அந்த வீட்டின் கழிவுநீர்க் குழாயில் லீக்கேஜ்ஜால் ஏற்பட்டது! பேய்களால் ஏற்பட்டது அல்ல.
ஒரு பிளம்பரால் சரிசெய்யப்பட வேண்டிய சாதாரண பிரச்சனை, பேய், பிசாசு என்று விஸ்வரூபம்
எடுக்கப் போய் அதை நிரூபிக்க பெரிய பெரிய மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அங்கு வந்து
போக வேண்டியதாயிற்று. அவ்வளவுதான் மேட்டர்.
ஆனால், இந்தச் சாக்கடை லீக்கேஜை வைத்துக்கொண்டு அவர்கள் எழுதிய
தி ஹாண்டட் என்ற புத்தகம் அதிரிபுதிரி
ஹிட் அடித்ததுதான் சுவாரசியமான ட்விஸ்ட். அடுத்து இந்தப் புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்ட
தொலைக்காட்சி தொடரும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததுதான் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட். மொத்தத்தில்
அதிநவீன அறிவியலின் உலக மையம் என்ற சொல்லப்பட்ட அமெரிக்காவில் ஸ்மெர்ல் குடும்ப அமானுஷ்யத்தைப்
படித்தும் பார்த்தும் மக்கள் டாலர்களை மழையாகப் பொழிந்தார்கள்.
இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். மனிதன் இருட்டைக்
கண்டு பயந்த காலம் போய், தன் மூளைக் கோளாறைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டான் இல்லையா?
பயம் என்பது ஓர் அற்புதமான
வியாபாரம். அதைச் சரியாகப் பாக்கெட் செய்து விற்கத் தெரிந்தால், உங்கள் வீட்டுச் சாக்கடை
அடைப்பு கூட ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படம்தான்!
சுருக்கமாகச் சொன்னால், அமிட்டிவில் போல, அங்கே வாழ்ந்தது பிசாசு
அல்ல; மனிதனின் லேசான மூளைக் கோளாறும், அதை வைத்து கல்லா கட்டிய மீடியாவின் பேராசையும்தான்!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 13
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 81
பேய்களுக்குத் திருவிழா!
உலங்கும்
பேய்த் திருவிழாக்கள் பிரபலம்.
ஹாலோவீன்
என்றதும் நமக்கு ஞாபகம் வருவது, பூசணிக்காயைக் குடைந்து கண்ணும் மூக்கும் செய்து உள்ளே
லைட்டைப் போட்டு வைப்பதுதான். "ஒரு நாள் கூத்துக்கு எதற்கு இந்த அலப்பறை?"
என்று நீங்கள் நினைத்தால், சீனர்களைப் பாருங்கள். அவர்கள் ஒரு மாதம் முழுக்க பேய்களுக்கு
விருந்து வைக்கிறார்கள்.
பசி
எடுத்த பேய் என்றால் சும்மாவா? நாமாக இருந்தால் பயந்து நடுங்குவோம். ஆனால் சீனர்களோ,
"வாப்பா பேய், உட்கார்! என்ன சாப்பிடுகிறாய்?" என்று மெனு கார்டு கொடுக்காத
குறையாக உபசரிக்கிறார்கள்.
உண்மையில்,
உலகம் முழுவதுமே மனிதர்களுக்கு உயிருடன் இருக்கும் மனிதர்களை விட, செத்துப் போன ஆவிகளை
திருப்திப்படுத்துவதில்தான் அதிக ஆர்வம். அதுசரி உயிருள்ள மனிதன் பட்டினியால் செத்தால்
கூட, அவனுக்குச் சோறு போட யாருக்கும் மனம் வராது. அவனே செத்துப் போனால் அவனுக்கு ஆவி
படையல் வைக்க ஆயிரம் மனிதர்கள் தயார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த ஊரிலும்
இந்தத் திருவிழாக்கள் சோகமானவை அல்ல, செம ஜாலியான பார்ட்டிகள்!
சீனாவில்
நடக்கும் ஆவி திருவிழாக்கள் விசித்திரமானவை. ஆவிகள் வழிதவறி அலைந்துவிடக் கூடாது என்பதற்காக,
ஆற்று நீரில் சின்னச் சின்ன விளக்குகளை மிதக்க விட்டு கூகுள் மேப் போல வழி காட்டுவார்கள்.
போதாக்குறைக்கு, பேய்களுக்கு லஞ்சம் கொடுக்க காகிதப் பணத்தைத் தீயிலிட்டு எரிப்பார்கள்.
அந்த உலகத்திலும் பணவீக்கம் இருக்குமோ என்னவோ!
ஜப்பானியர்கள்
ஒருபடி மேலே போய், சொந்த ஊருக்குப் பயணம் செய்து, முன்னோர்களின் கல்லறைகளைக் கழுவி,
கெமிக்கல் போட்டுச் சுத்தம் செய்து, விளக்கேற்றி "சரி கிளம்பு, பை. டாடா!"
என்று வழியனுப்பி வைக்கிறார்கள்.
மெக்ஸிகோவில்
கல்லறையைச் சுற்றிலும் வண்ண மலர்களால் அலங்கரித்து, பெரிய விருந்தே வைக்கிறார்கள்.
செத்த பிறகும் இப்படி ஒரு ட்ரீட் கிடைத்தால், யார்தான் ஆவியாக வர மாட்டார்கள்?
நேபாளத்தில்
நிஜப் பசு மாட்டையோ அல்லது மாடு வேடமிட்ட குழந்தைகளையோ தெருவில் ஊர்வலமாக அழைத்துச்
செல்வார்கள். காரணம்? அந்த மாட்டின் வாலைப் பிடித்துக்கொண்டே ஆவிகள் நெக்ஸ்ட் வேர்ல்ட்
சென்றுவிடுமாம்.
மேற்கு
நாடுகளில் குழந்தைகள் பேய் வேடமிட்டு ட்ரிக்கா?
அல்லது ட்ரீட்டா? என்று சாக்லேட் கேட்ப்பதன் பின்னணியில் ஒரு மாபெரும் தந்திரம்
இருக்கிறது. பழங்காலப் பேகன் கலாச்சாரப்படி, நிஜப் பேய்கள் சாலையில் சுற்றும்போது,
"டேய், நானும் பேய்தான்டா, என் பக்கத்துல வராதே!" என்று ஏமாற்றத்தான் இந்த
மாஸ்க் நாடகம்.
அதேபோல,
பூசணிக்காயைக் குடைந்து விளக்கு வைப்பதும், கெட்ட ஆவிகளை டிஸ்மிஸ் செய்து, நல்ல ஆவிகளுக்கு
இன்விடேஷன் கொடுப்பதற்குத்தான்.
மனிதனுக்கு
ஓர் அசாத்திய நம்பிக்கை உண்டு. சாவு என்பது வாழ்க்கையின் முற்றுப்புள்ளி அல்ல; அது
வெறும் கமாதான்! அதனால்தான், வருஷத்திற்கு ஒருமுறை பேய்களுக்குப் படையல் போட்டு, ஒரு
ஹாய் சொல்லிவிட்டு வருகிறான்.
எல்லாவற்றையும்
விட ஒரு பெரிய நிதர்சன உண்மை இருக்கிறது. உயிரோடு இருக்கும்போது மனிதனை மதிக்காத சொந்தங்கள்
கூட, அவன் செத்துப் போன பிறகு வருடாவருடம் திதி கொடுத்து, படையல் போட்டு, மரியாதையாகப்
பிஸியாகவே வைத்திருக்கின்றன.
சுருக்கமாகச்
சொன்னால், உயிரோடு இருக்கும் மனிதர்களை விட, இறந்துபோன ஆவிகள் தான் இந்த உலகத்தை அதிகம்
பிஸியாக வைத்திருக்கிறார்கள்!
-
அட்ரஸைத் தேடுவோம்!
*****
நீட் மாதிரி வினா விடை – வேதியியல்
2
மருத்துவக் கனவோடு நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 12
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.09.2026
இன்று மகாகவி பாரதியாரின் 105 ஆவது
நினைவு நாள்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில்
1893 இல் உலகப் புகழ்பெற்ற உரையைச் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய தினம் இன்று.
1) டில்லியில்
பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது.
2) பிரிக்ஸ்
உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங்
இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
3) நிகழாண்டில்
சென்னையில் சைபர் மோசடிகளில் 370 கோடி ரூபாய் பணத்தை மக்கள் பிறகொடுத்துள்ளனர்.
4) 2040க்குள்
விண்வெளிக்கு இந்தியரை வெற்றிகரமாக அனுப்புவோம் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
5) இந்தியாவிடம்
190 அணுகுண்டுகள் இருக்கலாம் என அமெரிக்க நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
Education & GK News
Today
marks the 105th death anniversary of the great poet Bharathiyar.
Today also
marks the anniversary of the day in 1893 when Swami Vivekananda delivered his
world-renowned speech in Chicago, USA.
1) The BRICS summit begins in Delhi tomorrow.
2) Chinese President Xi Jinping is set to visit India
for the BRICS summit after a gap of seven years.
3) People in Chennai have lost Rs. 370 crore to cyber
fraud this year.
4) The Prime Minister has stated that an Indian will be
successfully sent into space by 2040.
5) A US organization has reported that India may possess
190 nuclear bombs.