Wednesday, 2 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.09.2026

1) முந்தைய ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாகத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

2) ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்றே டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் அன்றே வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

3) சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகராகத் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா நேற்று அவையை வழிநடத்தினார்.

4) தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மக்கள்தொகை குறைந்துள்ளது.

5) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1800 குறைந்தது.



Education & GK News

1) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has announced the withdrawal of cases filed against farmers and teachers during the previous administration.

2) The Chief Minister also announced that a digital driving license would be issued on the very day a candidate passes the driving test.

3) Sathyabhama, the MLA for the Tiruppur North constituency, presided over the Assembly yesterday, becoming its first female Speaker.

4) The population has declined in 12 districts of Tamil Nadu.

5) The price of gold dropped by Rs. 1,800 per sovereign.

ஆவி உலக மார்கெட்டிங்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 72

ஆவி உலக மார்கெட்டிங்!

"அன்னபெல்"

ஹாலிவுட்காரர்கள் இந்தப் பெயரைச் சொன்னால் போதும், லைட்டை அணைத்துவிட்டுப் போர்வையைப் போர்த்திக் கொள்வார்கள். 'தி கான்ஜுரிங்' படத்தில் மரத்தால் செய்யப்பட்ட பயங்கரமான, விகாரமான முகத்தைக் கொண்ட ஒரு பொம்மையைக் காட்டி நம்மை அலற வைத்திருப்பார்கள்.

உண்மை என்னவென்றால், நிஜமான அன்னபெல் அப்படிப்பட்ட மரப்பொம்மையே இல்லை. அது ரேகடி ஆன் என்ற பிராண்டைச் சேர்ந்த, பஞ்சு அடைக்கப்பட்ட ஒரு சாதாரண துணிப் பொம்மை. சிவப்பு நிறச் சணல் தலைமுடி, சிரிக்கும் முகம், துணியால் தைக்கப்பட்ட மூக்கு. பார்த்தால் பயத்திற்குப் பதிலாகப் பரிதாபம்தான் வரும்.

1970களில் டன்னா என்ற செவிலியர் மாணவிக்கு அவருடைய அம்மா வாங்கித் தந்த பொம்மை இது. "நாங்க வெளியில் போயிட்டு வந்தா பொம்மை நின்ன இடத்துல இருக்காது, கட்டிலுக்கு அடியில கிடக்கும், 'எங்களுக்கு உதவுங்கள்ன்னு பேப்பர்ல குறிப்புகள் இருக்கும்" என்று கிளப்பி விட்டார்கள்.

அங்கேதான் நுழைந்தார்கள் எட் மற்றும் லோரேன் வாரன் தம்பதியினர். இத்தம்பதியினர் அக்காலத்தில் அமெரிக்காவில் அமானுஷ்யத்தை வைத்துப் பிழைப்பு நடத்திய ஜோடி.

"இந்தத் துணிப் பொம்மைக்குள்ள அன்னபெல் ஹிக்கின்ஸ் என்ற 7 வயதுச் சிறுமியின் ஆவி புகுந்திருக்கு." என்று ஒரு த்ரில்லர் கதையை அரங்கேற்றினார்கள். அதைத் தங்கள் சொந்த அமானுஷ்ய அருங்காட்சியகத்தில் ஒரு கண்ணாடிக் கூண்டிற்குள் பூட்டி வைத்து, டிக்கெட் விற்று கல்லா கட்டினார்கள்.

அமெரிக்காவுக்கு அன்னபெல், சைல்ட்ஸ் ப்ளே என்றால், தமிழ்நாட்டின் நைன்டிஸ் கிட்ஸ்களுக்கு 'வா அருகில் வா' பொம்மைதான்.

இயக்குநர் கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில், ராஜா, ரம்யா கிருஷ்ணன், வைஷ்ணவி நடிப்பில் வந்த படம் இது. வரதட்சணைக் கொடுமையால் படுகொலை செய்யப்படும் ஒரு பெண், தன் ஆவியை ஒரு பேட்டரி பொம்மைக்குள் செலுத்திப் பழிவாங்குவதுதான் கதை.

அப்போது வீடுகளில் இருந்த பேசும் பொம்மைகளைப் பார்த்தாலே குழந்தைகள் அலறி ஓடக் காரணம் இந்தத் திரைப்படம்தான். ஹாலிவுட் அளவுக்கு பெரிய பட்ஜெட் இல்லையென்றாலும், 'கத்தி பிடிக்கும் பொம்மை', 'தலையைத் திருப்புவது' எனத் தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்பக் குடும்பப் பின்னணியில் ஆவி அமானுஷ்யத்தைச் சேர்த்து மக்களை அச்சுறுத்தப் பயன்படுத்தினார்கள்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இதில் பேயும் இல்லை, பிசாசும் இல்லை. ஏனென்றால் இவை அனைத்தும் மனித மூளை தனக்கே தெரியாமல் விரல் தசைகளுக்குக் கொடுக்கும் நுண்ணிய அழுத்தம், அதாவது ஐடியா மோட்டார் விளைவுதான். அப்புறம், அசையாத அல்லது அமைப்பற்ற பொருள்களில் மனித முகத்தையோ, அசைவுகளையோ கற்பனை செய்து கொள்ளும் உளவியல் கோளாறு அதாவது பரேடோலியாதான் இதன் பின்னணி. அதையும் தாண்டி, வீட்டில் இயல்பாக நடக்கும் சிறு மாற்றங்களைக்கூட உதாரணத்துக்குக் காற்றடிக்கும் போது கதவு சாத்தப்படுவதைக் கூட பொம்மையோடு தொடர்புபடுத்தித் தன்னைத்தானே பயமுறுத்திக்கொள்ளும் மனநிலையும் முக்கிய காரணம். இதை கன்பர்மேஷன் பயாஸ் என்பார்கள்.

ஹாரி ஹூடினி இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், இந்த அன்னபெல் பொம்மைகளைக் கிழித்துப் பஞ்சை வெளியே எடுத்து, போலி மீடியம்களின் முகத்திரையைக் கிழித்திருப்பார்.

சுருக்கமாகச் சொன்னால், அன்னபெல் முதல் தமிழ்நாட்டின் 'வா அருகில் வா' வரை எல்லாமே அமானுஷ்யப் பேய்கள் இல்லை; மனிதர்களின் பயத்தையும் திரைப்படத் துறையின் கற்பனையையும் மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான பிசினஸ்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 3

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 3

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 2

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 2

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 1

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 1

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.

*****

Tuesday, 1 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.09.2026

1) நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை உச்சநீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

2) தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் செப்டம்பர் 10 இல் பிரிட்டன் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

3) செப்டம்பர் 5 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4) செப்டம்பர் 4 இல் இ.ஒ.எஸ் – 5 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

5) ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி வசூல் 1.99 லட்சம் கோடியாக உள்ளது.

6) நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது.




Education & GK News

1) The Supreme Court has quashed the cases filed against students who participated in the NEET protests.

2) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay is set to visit Britain on September 10 to attract industrial investments.

3) The Meteorological Department has stated that temperatures in Tamil Nadu are likely to rise until September 5.

4) The EOS-5 satellite is scheduled to be launched into space on September 4.

5) GST collections for the month of August stand at Rs. 1.99 lakh crore.

6) The death toll from the floods in Nepal has crossed one thousand.

பேட்டரி கழன்ற பிசாசு

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 71

பேட்டரி கழன்ற பிசாசு

மொபைல் போனின் திரையிலும், தலை திருப்பிய பொம்மையின் பிளாஸ்டிக் கண்களிலும் பிரதிபலித்த அந்த நொடிக் கண பயம், தமிழரசனின் மூளையில் இருந்த அமிக்டாலா பகுதியைச் சுண்டி இழுத்தது.

ஆனால் அடுத்த ஐந்தாவது விநாடி, தமிழரசன் தன் மூச்சைச் சீராக்கிக் கொண்டான். சிந்திக்கும் பகுதி விழித்துக் கொண்டது.

தமிழரசன் தரையில் கிடந்த எமர்ஜென்ஸி லைட்டை எடுத்து, அதன் உடைந்த பாகங்களைப் பொருத்தி மீண்டும் பொம்மையின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சினான்.

"தமிழரசன்! வேணாம்டா! ஓடிடலாம்!" கோவிந்த் கதவின் பிடிமானத்தை இறுக்கமாகப் பிடித்தபடி கத்தினான்.

"நில்லு கோவிந்த்! அறிவியல் ஒருபோதும் தோற்காது. நாம தோற்கிற மாதிரி தோன்றும் போது, அங்கே ஏதோ ஒரு விஷயம் விடுபட்டுருக்குன்னு அர்த்தம்."

தமிழரசன் மெதுவாக முன்னேறி, நாற்காலியின் கீழே கிடந்த அந்தப் பொம்மையைச் சட்டெனக் கையில் எடுத்தான். பொம்மையின் பிளாஸ்டிக் கழுத்துப் பகுதியில் ஒரு மெல்லிய பிளவு இருந்தது.

"கோவிந்த், லைட்டை போடு. பவர் வந்துடுச்சுல்ல?"

கோவிந்த் நடுங்கும் விரல்களால் சுவிட்சைப் போட்டான். ஹால் வெளிச்சத்தில் மின்னியது.

தமிழரசன் தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய காந்தப் பேனாவை எடுத்து, பொம்மையின் நெஞ்சில் வைத்தான். அது டக் என்ற சத்தத்துடன் ஒட்டிக்கொண்டது.

"பாத்தியா கோவிந்த்?" தமிழரசன் புன்னகைத்தான்.

"என்ன தமிழரசன்?"

"தலையை 180 டிகிரி திருப்புறதுக்கு பெரிய பேய் ஒன்னும் தேவையில்லை. நைட்டினோல்ன்னு ஒரு மெட்டல் இருக்கு. அதை ஷேப் மெமரி அலாய்ன்னு சொல்வாங்க. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையோ, மின்சாரமோ பாயும்போது அது தன் பழைய வடிவத்துக்குத் திரும்பும். இந்த பொம்மையோட கழுத்துக்குள்ள அந்த நைட்டினோல் கம்பிதான் இருக்கு."

"சரி அப்போ அந்த மெசேஜ்? அந்த ஆள் கார் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான்னு வந்துச்சே?" கோவிந்தின் குரலில் இன்னும் சந்தேகம் தீரவில்லை.

தமிழரசன் தன் போனை எடுத்து, அந்த மெசேஜின் ஹெட்டர் டேட்டாவை ஸ்கேன் செய்யும் ஆப்சனைத் திறந்தான்.

"இது ஷேட்யூல்ட் எஸ்.எம்.எஸ். 5ஜி ரிமோட் சிப் வச்ச அதே ஆள், தன் போன்ல இருந்து ஒரு வாரத்துக்கு முன்னாடியே இந்த மெசேஜை இன்னைக்கு இரவு 1:16க்கு வர்ற மாதிரி ஆட்டோ செட் பண்ணி வச்சிருக்கான்!"

"அப்போ அந்த ஆள் இறந்தது உண்மையா?"

"உண்மைதான். ஆனா அவன் இறந்ததும், இந்த மெசேஜ் வந்ததும் வெறும் தற்செயல் நிகழ்வு! அவன் உயிரோட இருந்திருந்தா, அடுத்த வாரம் உன்கிட்ட இருந்து லட்சக்கணக்குல பணத்தைப் பறிக்க திட்டமிட்டிருப்பான். அவன் செத்துப் போனதால, அவன் செட் பண்ணின ஷெட்யூல்டு மெசேஜ் மட்டும் கரெக்டா ஒர்க் ஆகிருக்கு. அவ்வளவுதான்!"

கோவிந்த் நீண்ட பெருமூச்சு விட்டான். "அப்போ பொம்மைக்குள்ள பேய் இல்லையா?"

"பேய் இருக்கு கோவிந்த்! ஆனா அது பொம்மைக்குள்ள இல்ல, உன்னோட மனசுல இருக்கிற பயத்துக்குள்ளதான் இருக்கு!"

தமிழரசன் பொம்மையின் பேட்டரியைக் கழற்றி எறிந்துவிட்டு, கோவிந்தைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினான்.

"என்னங்கடா இது? எப்ப பார்த்தாலும் ஆவி ஆராய்ச்சி பண்றேன்னு ராத்திரியில மனுஷர தூங்க விடாம இதே வேலையாப் போச்சு!" என்று ஜெயந்தி தூக்கம் கலைந்த எரிச்சலில், அறைக் கதவைத் திறந்து கொண்டு, கையில் விளக்குமாற்றுடன் வெளியே வர, தமிழரசனும் கோவிந்தும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஹால் கதவைத் திறந்து கொண்டு அந்த நடுராத்திரியில் வெளியே ஓட தயாராயினர்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****