Thursday, 6 August 2026

தாத்தாவின் ஆவியும் ஐந்து பவுன் சங்கிலியும்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 43

தாத்தாவின் ஆவியும் ஐந்து பவுன் சங்கிலியும்!

இரவு 9:30.

மன்னார்குடி.

வடக்கு கோபுர வாசல்.

அய்யனார் கோயில் சந்து.

வீட்டு எண் 100/108.

அந்தக் காலத்து மச்சு வீட்டின் பெரிய ஹால்.

நடுவில் ஒரு பெரிய தேக்குமர ரவுண்ட் டேபிள். அதைச் சுற்றி நான்கு நாற்காலிகள். தமிழரசன், அவன் மனைவி ஜெயந்தி, அவனது ஆசிரியர் நண்பர் ஜூலியஸ். அப்புறம் மாந்திரீக ரத்னா ராகவன்.

மேஜை நடுவில் இரண்டு சிம்னி விளக்குகள்.

"தம்பி தமிழரசன், பேன் ஆப் பண்ணிடு," என்றார் ராகவன்.

"லைட் ஆப் பண்றது சரி. மன்னார்குடி கத்தரி வெயிலுக்கு மின்விசிறியையும் நிறுத்தினால் ஆவி வருதோ இல்லையோ, எனக்கு வேர்க்குரு கண்டிப்பாக வந்துடும் ஐயா," என்றான் தமிழரசன், ஸ்விட்சை ஆப் செய்தபடி.

"சீரியஸா இருங்க. காமெடி பண்ணாதீங்க." ஜெயந்தி தமிழரசனைப் பார்த்து முறைத்தாள். "நம்ம தாத்தா கடைசியா அந்த அஞ்சு பவுன் நகையை எங்கே வச்சார்னு தெரிஞ்சாகணும்."

தமிழரசனுக்கு இந்த இந்த மந்திரம், மாந்த்ரீகம், பேய், பிசாசு மேட்டரில் எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது. ஜெயந்தியின் பிடிவாதத்தால் வேறு வழியின்றி சம்மதித்திருந்தான்.

"சரி. எல்லாரும் கைகளைக் கோத்துக்கோங்க. கட்டைவிரல் தொட்டுக்கிட்டு இருக்கணும்," ராகவன் குரலைத் தணித்து, "ஆவியே வருக.. மறைந்த மாரியப்பனாரே வருக." என்று முணுமுணுத்தார்.

அறை கொஞ்சம் இருட்டானது போலத் தோன்றியது.

சிம்னி விளக்கின் சுடர் காற்றில்லாமல் நிலையாக எரிந்தது.

அமைதி.

தெருவில் ஒரு நாய் குரைத்தது.

தூரத்தில் ராஜகோபாலசுவாமி கோயில் யானை செங்கமலம் பிளிறும் சத்தம் லேசாகக் கேட்டது.

"மாரியப்பனாரே நீங்க இங்க வந்திருந்தா இந்த மேஜையை ஒரு தடவை தட்டுங்க.." என்றார் ராகவன்.

திடீரென்று, டக்!

ஜெயந்தி திடுக்கிட்டாள். "என்னங்க கேட்டதா?"

"மாரியப்பனாரே, அந்த நகை மருதவனத்துல பழைய வீட்டுல இருக்கா?"

டக்! டக்!

இரண்டு தட்டு. அப்படியென்றால். இல்லை.

"அப்போ இந்த அய்யனார் கோயில் சந்து வீட்டுலதான் இருக்கா?"

டக்!

ஒரு தட்டு.  அப்படியென்றால் ஆம்!.

"விடை கிடைச்சிருச்சு!" ராகவன் பரவசமானார்.

தமிழரசன் சடாரென்று எழுந்து போய் ஹால் லைட்டைப் போட்டான். ஒளி பளிச்சென்று அடித்தது. மேஜைக்கு அடியில் குனிந்து பார்த்தான். அங்கே அவனுடைய மகன் கபிலன், கையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்கேலுடன் உட்கார்ந்திருந்தான்.

"டேய் கபிலா! அங்கே என்னடா பண்ற?" என்றாள் ஜெயந்தி.

"அம்மா. நீங்க கொள்ளு தாத்தாகிட்ட கேள்வி கேட்கும் போதெல்லாம், அங்கிள் ராகவன் தன் காலால் மேஜையை முட்டுறாரு. எனக்குப் போர் அடிச்சுது, அதான் நான் ஸ்கேலால கீழ தட்டுனேன்," என்றான் கபிலன் வெகுளித்தனமாக.

ராகவன் திருதிருவென விழித்தார். "அது அறியாமலேயே தசை இயங்குற எபெக்ட்."

தமிழரசன் சிரித்தான். "போலியான ஆவி ஆட்டத்தைக் கண்டுபிடிச்சாச்சு. ராகவன் ஐயா! நீங்க கிளம்புங்க. ஜெயந்தி! தாத்தா நகை எங்கேன்னு தெரியலன்னாலும் பரவாயில்லை, இந்தச் சாமிடியாருக்குக் கொடுக்க வேண்டிய ஐயாயிரம் தப்பித்தது!"

ராகவன் அவசர அவசரமாகப் பையை எடுத்துக்கொண்டு ஓடாத குறையாக வெளியேறினார். "இந்த ராத்திரியில போட்டு இப்படிப் பாடாய்ப் படுத்திட்டீங்களப்பா" என்றபடி ஆசிரியர் ஜூலியசும் சிரித்தபடி விடைபெற்றார்.

*

நள்ளிரவு 12:00 மணி.

கபிலன் நன்றாகத் தூங்கி விட்டான். ஜெயந்தி அரைத் தூக்கத்தில்.

திடீரென விழித்து எழுந்த தமிழரசன் ஹாலில் இருந்த மேஜையை ஓரமாகத் தள்ள முயன்றான்.

"ஜெயந்தி! இந்த மேஜை ரொம்ப எடை அதிகமாக இருக்கு." என்றபடி மேஜையின் அடியில் இருந்த பிளாஸ்டிக் ஸ்கேலை எடுத்தான்.

திடீரென்று, டக்! டக்! டக்!

தமிழரசன் உறைந்துபோனான். சட்டென்று பாய்ந்து ஹால் லைட்டைப் போட்டான். ஜெயந்தியின் அரைத் தூக்கம் கலைந்து முழு விழிப்புக்கு வந்து விட்டாள்.

ஆனால், காலியான அந்தத் தேக்குமர மேஜை தானாக மூன்று முறை பலமாகத் தட்டியது.

ஜெயந்தி பயத்தில் தமிழரசனைப் பிடித்துக் கொண்டாள். "என்னங்க இது?"

மேஜையின் நடுவில் இருந்த மரப் பலகை லேசாக விலகி, உள்ளே இருந்து ஒரு பழைய டைரியும், அதனுடன் ஒரு சிறிய தங்கச் சங்கிலியும் வெளியே வந்தன.

அதே நேரம். அந்தத் தேக்கு மர மேசையின் ஓரத்தில் பெட்டி போன்ற அமைப்பில் வைக்கப்பட்டு இருந்த பழைய நேஷனல் பேனாசோனிக் ரேடியோ, ஸ்விட்ச் போடப்படாமலேயே லேசான கிர்ர்ர் சத்தத்துடன் இயங்கத் தொடங்கியது. அதிலிருந்து தெளிவாக மாரியப்பன் தாத்தாவின் குரல் ஒலித்தது.

"டேய் பேராண்டி தமிழரசா! அந்தச் சாமியார் ஏமாற்றுக்காரன்தான். ஆனா, என் பேத்தி மேல எனக்கு ஆசை இல்லாம போயிடுமா? நகை இந்த மேஜையோட ரகசிய டிராயர்ல இருந்து இந்நேரம் வெளிவந்திருக்கும். எடுத்துக்கடா!"

சத்தம் நின்றது.

ரேடியோ அமைதியானது.

தமிழரசனும் ஜெயந்தியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

தமிழரசன் மெதுவாகச் சொன்னான். "ஜெயந்தி! என்னோட நண்பன் விஜயராமன் தன்னோட பிளாக்ஸ்பாட்டுல ஆவி, கீவி அப்படியெல்லாம் எதுவும் கிடையாதுன்னு எழுதிருக்கான். ஆனா, இது தாத்தாவோட குரல் அப்படியே அச்சுப்பிசகாம. எப்படின்னுதான் தெரியல?"

"போயி உங்க பிரெண்டுகிட்ட சொல்லுங்க. நம்ம முன்னோர்கள் ஆவியா நம்மைச் சுற்றித்தான் இருக்காங்க. இனிமேலாவது ஆவி இல்லை, அதிசயம் இல்லைன்னு எழுதாம ஆவி உண்டுன்னு உண்மையை எழுதச் சொல்லுங்க! நீங்களும் உங்க பிரெண்டுக்குச் சேர்ந்துகிட்டு ஜால்ரா தட்டாதீங்க!" என்றாள் ஜெயந்தி கோபமாக.

தமிழரசன் தலையில் கையை வைத்துக் கொண்டு அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து விட்டான்.

உலகில் அறிவியலால் விளக்க முடியாத ஆவி அதிசயங்களும் நடக்குமோ என்னவோ என்ற கேள்வி அவன் மண்டையைக் குடைய ஆரம்பித்து விட்டது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

வாகன நம்பர் பிளேட்டின் வண்ண ரகசியம்!

வாகன நம்பர் பிளேட்டின் வண்ண ரகசியம்!

வாகனங்களின் நம்பர் பிளேட்டில் இடம் பெறும் வண்ணத்திற்குப் பின்னே உள்ள அறிய வேண்டிய அவசிய தகவலைக் கீழே காண்க.

*****

Wednesday, 5 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.08.2026

1) நேற்று சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

2) தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3) +1 படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

4) இணையத்தில் முன்பதிவு செய்து டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கும் திட்டம் இன்று முதல் அமலாகிறது.

5) தொடர்ந்து நடப்புக் காலாண்டிலும் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.






Education & GK News

1) The Tamil Nadu budget was presented in the Legislative Assembly yesterday.

2) An allocation of Rs. 44,527 crore has been made for the School Education Department in the Tamil Nadu budget.

3) The budget announced that Class 11 students will be provided with modern bicycles along with helmets.

4) The scheme to purchase liquor from TASMAC outlets via online booking comes into effect today.

5) The Reserve Bank has announced that there will be no change in the repo rate for the current quarter as well.

Tuesday, 4 August 2026

காவிரி – மலையிலிருந்து கடல் வரை

காவிரி – மலையிலிருந்து கடல் வரை

தலைக்காவிரியில் தோன்றுவதிலிருந்து காவிரிபூம்பட்டினத்தில் கடலில் கலப்பது வரை காவிரி கடக்கும் முக்கிய அணைகள் குறித்த படத்தைக் கீழே காண்க.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.08.2026

1) கபினி அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.

2) ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் 18000 கன அடியாக அதிகரித்துள்ளது.

3) தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

4) தமிழகத்தின் வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

5) 2029 இல் இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

6) 2015 முதல் 2024 காலகட்டத்தில் இந்தியாவில் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. காசநோயால் ஏற்படும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.

Education & GK News

1) Cauvery water released from the Kabini Dam has reached the Mettur Dam.

2) The inflow of Cauvery water to Hogenakkal has increased to 18,000 cubic feet per second.

3) The Tamil Nadu government's budget is being presented today.

4) Tamil Nadu's agriculture budget is being presented tomorrow.

5) Finance Minister Nirmala Sitharaman has stated that India will emerge as a five-trillion-dollar economy by 2029.

6) The incidence of tuberculosis in India has declined between 2015 and 2024; the mortality rate due to tuberculosis has also decreased.

மிஸ்டர் பேயே கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 42

மிஸ்டர் பேயே கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ்!

ஜனார்த்தனன் ஓடிச் சென்ற பிறகு, அந்த அறையின் மேஜை மீது இருந்த மடிக்கணினியில் ஒரு மென்பொருள் தானாக ஆப் ஆனது.

அது ஒரு முப்பரிமாண லேசர் படவீழ்த்தி. சுப்பையா தாத்தா என்பவர் நிஜ மனிதரும் அல்ல, பேயும் அல்ல! அது பக்கத்து வீட்டு ஏஐ மாணவன் பரமேஷ் சுடலைமுத்து உருவாக்கிய ஓர் ஆப்டிகல் இமேஜ்.

நவீன கேமராக்கள் அகச்சிவப்புக் கதிர்களை மட்டுமே கணிக்கும். ஆனால், லேசர் ஒளியால் உருவாக்கப்பட்ட பிம்பங்களுக்கு வெப்பம் இருக்காது. அதனால்தான் தெர்மல் கேமராவில் தாத்தாவின் உருவம் வெற்றிடமாகத் தோன்றியது. மைனஸ் 5 டிகிரி வெப்பநிலை என்பது அந்த பிராஜெக்டர் கருவி வெப்பமடையாமல் இருக்கப் பயன்படுத்தப்பட்ட லிக்விட் நைட்ரஜன் குளிரூட்டி உருவாக்கிய விளைவு!

மொத்தத்தில் அது ஜனார்த்தனின் பேய் பிடிக்கும் கிரஷைப் பயன்படுத்திக் கொண்டு பரமேஷ் சுடலைமுத்து விளையாடிய ஒரு ஜாலி விளையாட்டுதான் அந்தச் சம்பவம்.

இனி விசயத்திற்கு வருவோம்.

தொண்ணூறுகளில் பேய் என்றால் ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம், அல்லது மங்கலான ஒரு நிழல் படம். "இதோ பாருங்கள், மரத்தின் பின்னால் ஏதோ ஆவி தெரிகிறது!" என்று யாராவது ஒரு பிலிம் புகைப்படத்தைக் காட்டுவார்கள். மக்கள் பயந்து நடுங்குவார்கள்.

இப்போது காலம் மாறிவிட்டது. பேய் பிடிப்பவர்கள் இப்போது கையில் வேப்பிலை பிடிப்பதில்லை; கோஸ்ட் ஹண்டிங் கிட் வைத்திருக்கிறார்கள்.

இன்ப்ராரெட் கேமரா, எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டு சென்சார், எலெக்ட்ரானிக் வாய்ஸ் ரெக்கார்டர் என கையில் ஏந்திக்கொண்டு அவர்கள் நடமாடும்போது, பார்க்க உண்மையிலேயே நாசா விஞ்ஞானி செவ்வாய் கிரகத்தில் இறங்குவது போல் இருக்கிறது.

அமைதியான அறையில் எலெக்ட்ரானிக் வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்துவிட்டு, "இங்கே யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு அமைதியாக இருப்பார்கள். அப்புறம் ரெக்கார்டிங்கை ரீப்ளே செய்து, பின்னணியில் கேட்கும் லேசான ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்தைக் கேட்டு, "இதோ பாருங்கள், 'வெளியே போ' என்று ஆவி சொல்கிறது!" என்பார்கள். நமக்குத்தான் அது பக்கத்து வீட்டு ஏசி கம்ப்ரசரின் சத்தமாகவோ அல்லது பேன் சத்தமாகவோ தோன்றும்! அவர்களுக்கு அது ஆவியின் குரலாகவே தோன்றும். இது வெறும் தோற்ற மயக்கம்தான்.

தொழில்நுட்பம் வளர வளர, கேமராக்களின் ரெசல்யூஷன் கூடிக்கொண்டே போனது. விஜிஏ கேமராவில் தொடங்கி 12 மெகாபிக்சல், 50 மெகாபிக்சல், இப்போது 200 மெகாபிக்சல் வரை வந்துவிட்டோம். ஆச்சரியம் என்னவென்றால், கேமராக்கள் தெளிவடையத் தெளிவடைய, புகைப்படங்களில் இருந்த பேய்கள் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கி, இறுதியில் மறைந்தே விட்டன!

முன்பெல்லாம் ஆவி என்று சொல்லப்பட்ட அந்த வெளிச்சப் புள்ளிகளை விஞ்ஞானிகள் இப்போது சிம்பிளாக தூசு அல்லது கேமரா லென்ஸின் பிரதிபலிப்பு  என்கிறார்கள். இருட்டில் ப்ளாஷ் லைட் அடிக்கும்போது லென்ஸுக்கு மிக அருகில் பறக்கும் குட்டித் தூசு, அவுட் ஆப் போகஸில் பெரிதாக ஒளிரும்.

இந்த இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் ஆவி நம்பிக்கையாளர்கள், அது தூசு இல்லை, என் கொள்ளுத் தாத்தாவின் ஆவியேதான் என்று அலறுகிறார்கள்.

இங்கே பிரச்சனை கேமராவில் இல்லை; மனித மூளையில். அறிவியலில் இதற்கு பேரிடோலியா என்று பெயர். தெளிவில்லாத வடிவங்களில் நமக்குத் தெரிந்த உருவங்களைத் தேடும் மூளையின் தந்திரம் இது. நிலவில் பாட்டியைப் பார்ப்பதும், மேகத்தில் யானையைப் பார்ப்பதும், மங்கலான போட்டோவில் பேயைப் பார்ப்பதும் ஒரே ரகம்தான்.

உண்மையில், பேய்களுக்கு இந்த நவீனக் கேமராக்களைப் பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஹை டெபனிஷன் கேமராக்கள் வந்தவுடன் அவை அனைத்தும் அவுட் ஆப் போகஸ் ஆகிவிட்டன.

அறிவியல் எல்லாவற்றையும் விளக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், மனிதனுக்கு எப்போதும் கொஞ்சம் மர்மம் தேவைப்படுகிறது. ஏனென்றால், அது வெறும் தூசு என்று ஒப்புக்கொள்வதை விட, ஆவி என்று நம்புவதில்தான் கொஞ்சம் திரில் இருக்கிறது அல்லவா!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Monday, 3 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.08.2026

1) தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

2) இந்தியாவில் உறுப்பு மாற்ற சிகிச்சையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

3) நாடாளுமன்றத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை 38 ஆக உயர்த்தும் மசோதா நிறைவேறியது.

4) பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.

5) தமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை மழை வாய்ப்பு உள்ளது.

Education & GK News

1) The Tamil Nadu budget is being presented tomorrow.

2) Tamil Nadu ranks first in India for organ transplant procedures.

3) A bill to increase the number of Supreme Court judges to 38 has been passed in Parliament.

4) Prashant Kishor has won the Bihar by-election.

5) There is a possibility of rain in Tamil Nadu until August 9.