Friday, 10 July 2026

காற்றில் கரையும் குளம்பொலி!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 17

காற்றில் கரையும் குளம்பொலி!

குளிர்காலத்து இருட்டுக்கு ஒரு விசித்திரமான குணம் உண்டு. அது ஒலிகளைப் பெருக்கி, மனிதர்களின் ஆதிப் பயங்களை நினவாக்கும்.

ஆல்ப்ஸ் மலை அடிவாரத்துக் கிராமத்தின் அந்தச் சின்னஞ்சிறு மரவீட்டில், புகைபோக்கியின் வழியே கசிந்த புகையை விடவும் அடர்த்தியாகப் பயம் சூழ்ந்திருந்தது.

தாமஸ் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். மரங்கள் இலைகளற்று, காற்றில் எலும்புக்கூடுகளாய் நின்றன. அன்று மாலைதான் அவனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால், இன்னும் அதற்கு ஞானஸ்நானம் செய்விக்கப்படவில்லை. பாதிரியார் அடுத்த வாரம்தான் மலை ஏறி வர வேண்டும்.

திடீரென்று, காட்டிலிருந்து அந்தச் சத்தம் கேட்டது.

விர்ர்ர்... விர்ர்ர்...

அது வெறும் காற்றின் சீறல் அல்ல. அதில் ஆயிரக்கணக்கான குதிரைகளின் குளம்படிச் சத்தமும், வேட்டை நாய்களின் வெறித்தனமான குரைப்பும் கலந்திருந்தன.

வைல்ட் ஹன்ட் கிளம்பிவிட்டது!

மேகக் கூட்டங்களைக் கிழித்துக் கொண்டு, காற்றில் மிதந்து வந்தது அந்தப் பேய்க் கூட்டம்.

முன்னால், ஒற்றைக் கண்ணும் எரியும் தாடியும் கொண்ட வோடன் கருப்பு நிறப் பெருங்குதிரையில் பாய்ந்து வந்தான். அவனது கையில் இருந்த ஈட்டி மின்னலைப் போல ஒளிர, பின்னால் கண்கள் இல்லாத அமானுஷ்ய உருவங்கள் பின்தொடர்ந்தன.

"தாமஸ், ஜன்னலை மூடு!" அவனது மனைவி தொட்டிலை அணைத்தபடி கதறினாள்.

அவர்கள் வீட்டின் கூரைக்கு மேலே அந்த வேட்டைக்கூட்டம் கடந்து சென்றபோது, வீட்டின் மர உத்திரங்கள் பலமாக நடுங்கின.

வோடனின் வேட்டை நாய்கள் வீட்டின் வாசலை மோப்பம் பிடித்தன. ஞானஸ்நானம் பெறாத அந்தக் பிஞ்சு ஆன்மாவின் வாசனை அவற்றுக்கு எட்டியிருந்தது.

வாசற்கதவின் கீழ் இருந்த இடுக்கின் வழியே ஒரு கருப்புப் புகை உள்ளே நுழைய முயன்றது.

தாமஸ் நடுங்கும் கரங்களால், மேசையின் மேல் இருந்த புனித நீரை எடுத்து வாசலில் தெளித்தான். சத்தம் சட்டென்று விலகி, ஆகாயத்தை நோக்கி நகர்ந்தது.

அப்பாடா என்று தாமஸ் மூச்சுவிடுவதற்குள், தொட்டிலில் இருந்த குழந்தையின் அழுகுரல் திடீரென நின்றது.

மனைவி மயங்கி விழுந்து கிடந்தாள்.

பயத்துடன் ஓடிச்சென்று பார்த்த தாமஸின் ரத்தம் உறைந்தது. தொட்டில் காலியாக இருந்தது! ஜன்னல் கதவு காற்றில் தானாகத் திறந்து மூடியது.

வெறிபிடித்தவனாகத் தாமஸ் கதவைத் திறந்து கொண்டு பனிப்பொழிவில் ஓடினான். தூரத்தில், மேகங்களுக்கு நடுவே வோடனின் குதிரைப்படை மறைந்து கொண்டிருந்தது.

அந்தப் பேய்க் கூட்டத்தின் நடுவே, ஓர் அமானுஷ்ய உருவத்தின் கைகளில் அவனது குழந்தை காற்றில் மிதந்தபடி அழுதுகொண்டே சென்றது. வோடன் தன் ஒற்றைக் கண்ணால் தாமஸைத் திரும்பிப் பார்த்து கொடூரமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு இடிமுழக்கமாய் ஒலித்தது.

மறுநாள் காலை, பனி படர்ந்த காட்டின் தரையில் குதிரைக் குளம்புகளின் தடங்கள் இருந்தன. ஆனால், அவை தாமஸின் வீட்டின் வாசலில் தொடங்கி, அப்படியே ஆகாயத்தை நோக்கி மறைந்திருந்தன.

இடைக்கால ஐரோப்பாவின் ஆகாயம், இன்னும் ஒரு புனிதமற்ற ஆன்மாவைத் தன்னுள் ஜீரணித்திருந்தது.

தாமஸ், காட்டின் நடுவே உறைந்த பனியாய் சிலையாக நின்றிருந்தான்.

என்னதான் ஆனது தாமஸின் குழந்தைக்கு?

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Thursday, 9 July 2026

ஐம்பதாயிரம் பேரைப் பரலோகம் அனுப்பிய புத்தகம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 16

ஐம்பதாயிரம் பேரைப் பரலோகம் அனுப்பிய புத்தகம்

நெருப்பு, சக்கரம் போன்ற கண்டுபிடிப்புகளுக்கு அடுத்தப்படியாக உலகை மாற்றிய கண்டுபிடிப்பு புத்தகம்தான்.

புத்தகங்கள் உலகையே புரட்டிப் போடும் நெம்புகோல்கள்.

அமானுஷ்யங்களின் அட்ரஸில் திடீரென ஏன் புத்தகம் வருகிறது என்கிறீர்களா? நேற்று சொன்ன கதையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

ஒரு புத்தகம் அப்படி அமானுஷ்யத்தால் ஐம்பதாயிரம் பெண்களைப் பரலோகம் அனுப்பியிருக்கிறது.

1487 இல் ஜெர்மனியில் ஒரு புத்தகம் ரிலீஸ் ஆனது. அதன் பெயர் மாலியஸ் மாலிபிகாரம்

இதற்கு லத்தீன் மொழியில் சுத்தியல் என்று பொருள். ஆனால், இது சாதாரண சுத்தியல் இல்லை; பேய்கள் மற்றும் சூனியக்காரிகளை நசுக்கும் சுத்தியல்.

நம்மூர் டூரிஸ்ட் கைடு மாதிரி, அந்த காலத்து ஐரோப்பாவில் பேய் ஓட்டுபவர்களுக்கும், சூனியக்காரர்களை கண்டுபிடிக்க நினைத்தவர்களுக்கும் இதுதான் அதிகாரப்பூர்வமான கைடு புத்தகம்.

ஹைரிச் க்ரேமர் என்ற ஒரு பாதிரியார்தான் இதை எழுதினார். மனிதருக்கு பெண்கள் என்றாலே அலர்ஜி போலிருக்கிறது. பெண்களுக்குத்தான் புத்திசாலிப்படியும், உடல்ரீதியாகவும் பலவீனம் அதிகம். அதனால் பிசாசுகள் அவர்களைத்தான் சீக்கிரம் கார்னர் செய்யும், என்று பக்கம்பக்கமாக அள்ளிவிட்டிருந்தார்.

இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருந்தது என்கிறீர்களா?

புத்தகத்தை மூன்று பாகங்களாகப் பிரித்திருந்தார் க்ரேமர்.

பாகம் 1: பேய்களும் பிசாசுகளும் நிஜமாகவே இருக்கின்றன. அதை நம்பாதவன் நாத்திகன், துரோகி.

பாகம் 2: சூனியக்காரிகள் எப்படியெல்லாம் மந்திரம் செய்கிறார்கள்? அதாவது, ஆண்களை எப்படி ஏமாற்றுகிறார்கள், மாடுகளின் பாலை எப்படி வற்ற வைக்கிறார்கள் என்ற ஏகப்பட்ட லிஸ்ட்!

பாகம் 3: இவர்களை எப்படிக் கண்டுபிடித்து, எப்படி கோர்ட்டில் விசாரித்து, எப்படி முடிக்க வேண்டும்?

அவ்வளவுதான்! இந்த புத்தகம் வந்ததும், ஐரோப்பாவே ஒரு காட்டுமிராண்டித்தனமான விட்ச் ஹன்ட் மோடுக்கு மாறியது.

சட்டம், ஒழுங்கு எல்லாம் காலி!

இந்த கைடு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, ஊருக்குள் யாராவது ஒரு பெண் கொஞ்சம் விசித்திரமாக நடந்துகொண்டாலோ, அல்லது யாருக்காவது பிடிக்காத பெண்ணாக இருந்தாலோ போதும். "அவள் சூனியக்காரி!" என்று முத்திரை குத்திவிடுவார்கள்.

அப்புறம் விசாரணை.

அந்த விசாரணை முறை எப்படித் தெரியுமா?

ஒரு பெண்ணின் கைகால்களைக் கட்டி ஆற்றில் தூக்கிப் போடுவார்கள். அவள் தண்ணீரில் மூழ்கி இறந்தால், "அவள் நல்லவள், பாவம்" என்று அத்தோடு விட்டுவிடுவார்கள்.

ஒருவேளை தப்பித்து மேலே வந்தால்,

"பார்த்தீர்களா! பிசாசுதான் இவளைக் காப்பாற்றியிருக்கிறது" என்று சொல்லி, தீயிலிட்டு கொளுத்திவிடுவார்கள்! எப்படிப் பார்த்தாலும் மரணம் நிச்சயம்!

ஓர் இருண்ட காலம் அது. சுமாராக 50,000 அப்பாவிப் பெண்கள் இந்த ஒற்றைப் புத்தகத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்று வரலாறு சொல்கிறது.

சுருக்கமாகச் சொன்னால்,

மனிதனின் மூடநம்பிக்கையும், அதிகார வெறியும், ஒரு தவறான புத்தகத்தோடு கைகோர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த 1487 இல் வந்த அந்தச் சுத்தியல் புத்தகம் ஒரு ரத்த சாட்சி. அறிவியலும், பகுத்தறிவும் இல்லாத ஒரு சமூகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் ஒரு வரலாற்றுப் பிழை அது!

நல்லவேளை, அப்போது வாட்ஸ்அப் இல்லை. இருந்திருந்தால் ஐரோப்பாவே காலியாகியிருக்கும்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.07.2026

1) பள்ளிக் கல்வியில் தமிழகம் தேசிய அளவில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக மத்திய அரசின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2) அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

3) பிஎஸ்என்எல் நிறுவனம் சாட்டிலைட் போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை 1.34 லட்ச ரூபாய் ஆகும்.

4) கேரளா, வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

5) மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

6) ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

7) அமெரிக்கா ஈரான் இடையிலான மோதல் நேற்றும் இரண்டாவது நாளாக நீடித்தது.

Education & GK News

1) A central government report indicates that Tamil Nadu continues to lead at the national level in school education.

2) The Madurai Bench of the High Court has ordered the submission of a report regarding the basic amenities in government schools.

3) BSNL has launched a satellite phone; it is priced at Rs. 1.34 lakh.

4) The death toll from the landslide caused by heavy rains in Wayanad, Kerala, has risen to six.

5) Four people have lost their lives due to heavy rains in Maharashtra.

6) The mortal remains of Iran's Supreme Leader, Ayatollah Ali Khamenei, were laid to rest yesterday.

7) The conflict between the United States and Iran continued for a second day yesterday.

Wednesday, 8 July 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள்

தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் 33 கேள்விகளாவன,

1. கட்டிட எண் என்ன?

2.  வீட்டு கதவு எண் என்ன?

3. வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது?

4.வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது?

5. வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது?

6.  வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா?

7. எந்த மாதிரி வீட்டின் அமைப்பு?

8. குடும்ப எண் என்ன?

9. வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

10.  வீட்டுத் தலைவரின் பெயர் என்ன?

11. வீட்டுத் தலைவரின் பாலினம் என்ன?

12. குடும்பத் தலைவர் எந்த சாதி?

13. வீட்டின் உரிமை நிலை என்ன?

14. வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை?

15. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை?

16. குடிநீரின் முக்கிய ஆதாரம் எது?

17. குடிநீர் வசதி எப்படிக் கிடைக்கிறது?

18. மின்சார வசதி உள்ளதா?

19. கழிவறை உள்ளதா?

20. கழிவறை எந்த வகை?

21. கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா?

22. குளியல் வசதி இருக்கிறதா?

23. சமையலறை மற்றும் LPG / PNG இணைப்பு வசதி உள்ளதா?

24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது?

25. ரேடியோ / டிரான்சிஸ்டர் இருக்கிறதா?

26. தொலைக்காட்சி இருக்கிறதா?

27. இணையதளம் வசதி இருக்கிறதா?

28. மடிக்கணினி / கம்ப்யூட்டர் இருக்கிறதா?

29. தொலைபேசி /மொபைல் போன் /ஸ்மார்ட்போன் இருக்கிறதா?

30. சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் இருக்கிறதா?

31. கார் / ஜீப் / வேன் இருக்கிறதா?

32. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது?

33.  உங்கள் மொபைல் எண் (மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும்) என்ன?

*****

2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட பள்ளி வேலைநாட்கள் பட்டியல்

2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட பள்ளி வேலைநாட்கள் பட்டியல்

2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட பள்ளி வேலைநாட்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலைக் கீழே காண்க.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.07.2026

1) ஈரான் அமைதி ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தார் டிரம்ப் : உலக அரங்கில் பெரும் பரபரப்பு!

2) அமெரிக்கா தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகம் : இந்திய பங்குச்சந்தைகள் தடதட சரிவு!

3) இந்தோனேசியா பயணத்தை முடித்து ஆஸ்திரேலியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

4) கேரளாவில் பயங்கரம் : வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 5 பேரைத் தேடும் பணி தீவிரம்!

5) மும்பையை முடக்கிய கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் தண்டவாளங்கள்; புறநகர் ரயில் சேவை ஸ்தம்பித்தது!

6) கோடை வெயில் கொடூரம் : நாடு முழுவதும் ஜூன் மாத மின் நுகர்வு 11 சதவீதம் திடீர் உயர்வு!

Education & GK News

1) Trump abruptly scraps Iran peace deal : Major stir on the global stage!

2) Crude oil prices skyrocket following US attack : Indian stock markets plunge!

3) Prime Minister Narendra Modi arrives in Australia after concluding his visit to Indonesia!

4) Tragedy in Kerala : Intensive search underway for 5 people missing after the Wayanad landslide!

5) Heavy rains bring Mumbai to a standstill : Tracks submerged in floodwaters; suburban train services paralyzed!

6) Scorching summer heat : Nationwide electricity consumption sees a sudden 11% spike in June!

எமலோக டிக்கெட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 15

எமலோக டிக்கெட்!

ஜெர்மனியின் அந்த நள்ளிரவுத் தூறலில், பீட்டர் மூச்சிரைக்க ஓடிவந்து மார்த்தா வீட்டின் கதவை டமடமவெனத் தட்டினான்.

மார்த்தா கதவைத் திறந்தாள். "என்னடா பீட்டர், இந்த நேரத்துல? சாத்தான் எதாவது வர்றானா?"

"சாத்தான் வந்தாக்கூட பரவாயில்லை மார்த்தா, வெளிய பிலிப் அண்ணன் அந்த 'மாலியஸ் மாலிபிகாரம்' புத்தகத்தோடும் ஒரு கும்பலோடும் வந்துட்டு இருக்கான். உன் சாப்டர் க்ளோஸ்!"

"ஏன்? நான் என்ன பண்ணினேன்? நியாயமாத்தானே வாழ்க்கை நடத்திட்டு இருக்கேன்?"

"நீ நேத்து பிலிப் அண்ணன் வீட்டுப் பக்கமா போனப்ப, அவனோட செம்பொட்டை பூனை குறுக்க ஓடிச்சாம். அதுக்கப்புறம் அவனுக்கு லைட்டா விக்கல் எடுத்திருக்கு. அந்தப் புத்தகத்துல இருக்குற 42ஆவது பக்க லாஜிக் படி, நீ பூனையா மாறி அவன் காபியில எச்சில்ல துப்புனதா முடிவு பண்ணிட்டான். க்ரேமர் பாதிரியார் எழுதின கைடு புக்ல அப்படிப் போட்டிருக்காம்!"

வெளியே தீப்பந்தங்களோடு அந்தக் கும்பல் கத்தியது.

"மார்த்தா வெளியே வா! நீ சூனியக்காரியா இல்லையான்னு டெஸ்ட் பண்ணனும்!"

"இப்படி ஊர்க்காரனுங்க கத்துறானுங்களே. என்ன டெஸ்ட் பீட்டர்?" மார்த்தா நடுங்கினாள்.

"ரொம்ப சிம்பிள். உன்னைக் கையைக் காலைக் கட்டி ஆத்துல போடுவாங்க. நீ முங்கிச் செத்தா, அடப்பாவமே, நல்ல பொண்ணாச்சேன்னு ஊரே சேர்ந்து அழுகும். ஒருவேளை நீ கஷ்டப்பட்டு நீந்தி மேல வந்தா, பிசாசுதான் உன்னைத் தூக்கிவிட்டுச்சுன்னு சொல்லி உசுரோட உன்னைக் கட்டையில போட்டு லைவா கொளுத்துவாங்க. சுருக்கமா சொன்னா, செத்தா நீ நல்லவள்; தப்பிச்சா சூனியக்காரி. ரெண்டுலயுமே உனக்கு சாவு கன்பார்ம்."

"என்னடா இது கார்ப்பரேட் கம்பெனி இன்டர்வியூவ விட மோசமான லாஜிக்கா இருக்கு?"

"லாஜிக்கும் கிடையாது, மண்ணாங்கட்டியும் கிடையாது. இந்த 1487 இதான் ரூல். இப்ப எவனாவது ஒருத்தன் அவள் விட்ச்ன்னு கத்தினா போதும், ஊரே தீப்பந்தத்தை பத்த வைக்கும். கிளம்பு, புழக்கடை வழியா தப்பிச்சு ஓடலாம்" என்றான் பீட்டர்.

இருவரும் இருட்டில் குதித்து ஓட, பின்னாடி கும்பல் பிலிப்பின் பூனையையும், அந்த லோ பட்ஜெட் பேய் கைடு புத்தகத்தையும் தூக்கிக்கொண்டு, "சூனியக்காரி ஒழிக! பூனை வாழ்க!" என்று பயங்கர சீரியஸாகக் கத்திக்கொண்டு ஓடியது.

அறிவியலே இல்லாத ஊரில், அதுவும் மிகப்பெரிய தத்துவமேதைகன் அவதரித்த ஜெர்மனியில், ஒரு பைத்தியக்காரப் புத்தகத்தை கையில் வைக்கோல் போலப் பிடித்துக்கொண்டு மனிதர்கள் ஆடிய ஆட்டம் அது!

எதற்கு இந்தக் கதை?

1487க்குப் பிறகு ஜெர்மனி இப்படித்தான் மாறிப் போனது. ஐம்பதாயிரம் பெண்களை இப்படி நரபலி கொண்டது.

எல்லாவற்றுக்கும் காரணம் அந்த ஒரு புத்தகம்.

அதைப் பற்றிக் கொஞ்சம் டீட்டெய்லா சொல்லுங்க என்கிறீர்களா? நாளை வரை கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****