Wednesday, 8 July 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் 33 கேள்விகள்

தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் 33 கேள்விகளாவன,

1. கட்டிட எண் என்ன?

2.  வீட்டு கதவு எண் என்ன?

3. வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது?

4.வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது?

5. வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது?

6.  வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா?

7. எந்த மாதிரி வீட்டின் அமைப்பு?

8. குடும்ப எண் என்ன?

9. வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

10.  வீட்டுத் தலைவரின் பெயர் என்ன?

11. வீட்டுத் தலைவரின் பாலினம் என்ன?

12. குடும்பத் தலைவர் எந்த சாதி?

13. வீட்டின் உரிமை நிலை என்ன?

14. வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை?

15. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை?

16. குடிநீரின் முக்கிய ஆதாரம் எது?

17. குடிநீர் வசதி எப்படிக் கிடைக்கிறது?

18. மின்சார வசதி உள்ளதா?

19. கழிவறை உள்ளதா?

20. கழிவறை எந்த வகை?

21. கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா?

22. குளியல் வசதி இருக்கிறதா?

23. சமையலறை மற்றும் LPG / PNG இணைப்பு வசதி உள்ளதா?

24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது?

25. ரேடியோ / டிரான்சிஸ்டர் இருக்கிறதா?

26. தொலைக்காட்சி இருக்கிறதா?

27. இணையதளம் வசதி இருக்கிறதா?

28. மடிக்கணினி / கம்ப்யூட்டர் இருக்கிறதா?

29. தொலைபேசி /மொபைல் போன் /ஸ்மார்ட்போன் இருக்கிறதா?

30. சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் இருக்கிறதா?

31. கார் / ஜீப் / வேன் இருக்கிறதா?

32. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது?

33.  உங்கள் மொபைல் எண் (மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும்) என்ன?

*****

2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட பள்ளி வேலைநாட்கள் பட்டியல்

2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட பள்ளி வேலைநாட்கள் பட்டியல்

2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட பள்ளி வேலைநாட்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலைக் கீழே காண்க.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.07.2026

1) ஈரான் அமைதி ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தார் டிரம்ப் : உலக அரங்கில் பெரும் பரபரப்பு!

2) அமெரிக்கா தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகம் : இந்திய பங்குச்சந்தைகள் தடதட சரிவு!

3) இந்தோனேசியா பயணத்தை முடித்து ஆஸ்திரேலியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

4) கேரளாவில் பயங்கரம் : வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 5 பேரைத் தேடும் பணி தீவிரம்!

5) மும்பையை முடக்கிய கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் தண்டவாளங்கள்; புறநகர் ரயில் சேவை ஸ்தம்பித்தது!

6) கோடை வெயில் கொடூரம் : நாடு முழுவதும் ஜூன் மாத மின் நுகர்வு 11 சதவீதம் திடீர் உயர்வு!

Education & GK News

1) Trump abruptly scraps Iran peace deal : Major stir on the global stage!

2) Crude oil prices skyrocket following US attack : Indian stock markets plunge!

3) Prime Minister Narendra Modi arrives in Australia after concluding his visit to Indonesia!

4) Tragedy in Kerala : Intensive search underway for 5 people missing after the Wayanad landslide!

5) Heavy rains bring Mumbai to a standstill : Tracks submerged in floodwaters; suburban train services paralyzed!

6) Scorching summer heat : Nationwide electricity consumption sees a sudden 11% spike in June!

எமலோக டிக்கெட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 15

எமலோக டிக்கெட்!

ஜெர்மனியின் அந்த நள்ளிரவுத் தூறலில், பீட்டர் மூச்சிரைக்க ஓடிவந்து மார்த்தா வீட்டின் கதவை டமடமவெனத் தட்டினான்.

மார்த்தா கதவைத் திறந்தாள். "என்னடா பீட்டர், இந்த நேரத்துல? சாத்தான் எதாவது வர்றானா?"

"சாத்தான் வந்தாக்கூட பரவாயில்லை மார்த்தா, வெளிய பிலிப் அண்ணன் அந்த 'மாலியஸ் மாலிபிகாரம்' புத்தகத்தோடும் ஒரு கும்பலோடும் வந்துட்டு இருக்கான். உன் சாப்டர் க்ளோஸ்!"

"ஏன்? நான் என்ன பண்ணினேன்? நியாயமாத்தானே வாழ்க்கை நடத்திட்டு இருக்கேன்?"

"நீ நேத்து பிலிப் அண்ணன் வீட்டுப் பக்கமா போனப்ப, அவனோட செம்பொட்டை பூனை குறுக்க ஓடிச்சாம். அதுக்கப்புறம் அவனுக்கு லைட்டா விக்கல் எடுத்திருக்கு. அந்தப் புத்தகத்துல இருக்குற 42ஆவது பக்க லாஜிக் படி, நீ பூனையா மாறி அவன் காபியில எச்சில்ல துப்புனதா முடிவு பண்ணிட்டான். க்ரேமர் பாதிரியார் எழுதின கைடு புக்ல அப்படிப் போட்டிருக்காம்!"

வெளியே தீப்பந்தங்களோடு அந்தக் கும்பல் கத்தியது.

"மார்த்தா வெளியே வா! நீ சூனியக்காரியா இல்லையான்னு டெஸ்ட் பண்ணனும்!"

"இப்படி ஊர்க்காரனுங்க கத்துறானுங்களே. என்ன டெஸ்ட் பீட்டர்?" மார்த்தா நடுங்கினாள்.

"ரொம்ப சிம்பிள். உன்னைக் கையைக் காலைக் கட்டி ஆத்துல போடுவாங்க. நீ முங்கிச் செத்தா, அடப்பாவமே, நல்ல பொண்ணாச்சேன்னு ஊரே சேர்ந்து அழுகும். ஒருவேளை நீ கஷ்டப்பட்டு நீந்தி மேல வந்தா, பிசாசுதான் உன்னைத் தூக்கிவிட்டுச்சுன்னு சொல்லி உசுரோட உன்னைக் கட்டையில போட்டு லைவா கொளுத்துவாங்க. சுருக்கமா சொன்னா, செத்தா நீ நல்லவள்; தப்பிச்சா சூனியக்காரி. ரெண்டுலயுமே உனக்கு சாவு கன்பார்ம்."

"என்னடா இது கார்ப்பரேட் கம்பெனி இன்டர்வியூவ விட மோசமான லாஜிக்கா இருக்கு?"

"லாஜிக்கும் கிடையாது, மண்ணாங்கட்டியும் கிடையாது. இந்த 1487 இதான் ரூல். இப்ப எவனாவது ஒருத்தன் அவள் விட்ச்ன்னு கத்தினா போதும், ஊரே தீப்பந்தத்தை பத்த வைக்கும். கிளம்பு, புழக்கடை வழியா தப்பிச்சு ஓடலாம்" என்றான் பீட்டர்.

இருவரும் இருட்டில் குதித்து ஓட, பின்னாடி கும்பல் பிலிப்பின் பூனையையும், அந்த லோ பட்ஜெட் பேய் கைடு புத்தகத்தையும் தூக்கிக்கொண்டு, "சூனியக்காரி ஒழிக! பூனை வாழ்க!" என்று பயங்கர சீரியஸாகக் கத்திக்கொண்டு ஓடியது.

அறிவியலே இல்லாத ஊரில், அதுவும் மிகப்பெரிய தத்துவமேதைகன் அவதரித்த ஜெர்மனியில், ஒரு பைத்தியக்காரப் புத்தகத்தை கையில் வைக்கோல் போலப் பிடித்துக்கொண்டு மனிதர்கள் ஆடிய ஆட்டம் அது!

எதற்கு இந்தக் கதை?

1487க்குப் பிறகு ஜெர்மனி இப்படித்தான் மாறிப் போனது. ஐம்பதாயிரம் பெண்களை இப்படி நரபலி கொண்டது.

எல்லாவற்றுக்கும் காரணம் அந்த ஒரு புத்தகம்.

அதைப் பற்றிக் கொஞ்சம் டீட்டெய்லா சொல்லுங்க என்கிறீர்களா? நாளை வரை கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Tuesday, 7 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 08.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 08.07.2026

1) ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படும் போது 4.38 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

2) வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யும் முறை ஆகஸ்ட் 17 முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.

3) இந்தோனேசியாவின் உயரிய விருதான பின் டாங் ஆதி பூர்ணா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

4) இந்தியாவின் ஏவுகணைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்கிக் கொள்ள இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளது.

5) சீனாவில் கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.

6) ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 3 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது மீண்டும் மேற்காசியப் பகுதியில் போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Education & GK News

1) 4.38 lakh students will benefit from the breakfast scheme as it is implemented for classes 6 through 8.

2) A system for property registration from home is set to be implemented in Tamil Nadu starting August 17.

3) Indian Prime Minister Narendra Modi has been conferred with Indonesia's highest award, the 'Bintang Adipurna'.

4) Indonesia has expressed interest in purchasing Indian missiles and electronic voting machines.

5) Twenty people have lost their lives due to torrential rains in China.

6) Iran has attacked three oil tankers passing through the Strait of Hormuz, reigniting war tensions in West Asia.

சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையே…

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையே…

அட்ரஸ் – 14

மரணத்திற்குப் பின் ஒரு பெரிய கியூ நின்று கொண்டு இருந்தது.

ஜார்ஜின் வாழ்க்கைக் கணக்கைப் பார்த்து விட்டு, நடுலோகத்தின் அந்த குமாஸ்தா சொன்னார், "மிஸ்டர் ஜார்ஜ், டைரக்ட் சொர்க்கம் நோ சான்ஸ். சின்னச் சின்னப் பாவங்கள் இருக்கு. சோ, புர்கேட்டரி!"

"அப்படின்னா?" என்றார் ஜார்ஜ் புரியாமல்.

"சொர்க்கத்தோட வெயிட்டிங் ஹால். அங்கே உங்களை நெருப்புல போட்டு வாட்டுவாங்க. பாவக்கறை போனதும் சொர்க்கம்."

ஜார்ஜ் உள்ளே போனார். செம உஷ்ணம். ஐடி கம்பெனி சர்வர் ரூமில் ஏசி அணைந்தது போல இருந்தது. உடம்பில் நீல நிற ஜூவாலை பற்றியது. செம கடுப்பு.

"சார், இதுலேர்ந்து சீக்கிரம் ரிலீஸ் ஆக ஐடியா இருக்கா?" ஜார்ஜ் கத்தினார்.

"இருக்கு. பூமியில இருக்கிறவங்க உங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணா இங்கே தண்டனை குறையும். இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்!" என்றார் அந்த நடுலோக குமாஸ்தா.

அன்று நள்ளிரவு 2 மணி அளவில் ஜார்ஜ் தன் மகன் பெர்ணான்டஸ் கனவில் விசிட் அடித்தார்.

"டேய் பெர்ணான்டஸ். நான் புர்கேட்டரியில எரியறேன்டா. நாளைக்கு சர்ச்சுக்கு போய் எனக்காக ஒரு மாஸ் பூசை வையுடா ப்ளீஸ்!"

மறுநாள் காலை பெர்ணான்டஸ் அப்பாவுக்காக சர்ச்சுக்கு ஓடினான். உண்டியலில் ஐந்து நாணயங்களைக் கொடுத்து ரசீது வாங்கினான்.

அங்கே உண்டியலில் காசு விழுந்த அதே நொடி. புர்கேட்டரியில் ஜார்ஜைச் சுற்றியிருந்த நெருப்பு அணைந்தது. மேலே இருந்து சொர்க்கத்திற்கான லிப்ட் வந்து கதவைத் திறந்தது.

இதுதான் பனிரெண்டாம் ஐரோப்பாவில் நடந்த புர்கேட்டரி ப்ராசஸ்.

அதென்ன புர்கேட்டரி ப்ராசஸ் என்கிறீர்களா?

மரணத்திற்குப் பின் இரண்டு ஆப்ஷன்கள்தான் என்பது பழைய ரூல். ஒன்று சொர்க்கம் அதாவது, டேரக்ட் பிளைட், இன்னொன்று நரகம் அதாவது, ரிட்டர்ன் டிக்கெட் இல்லாத ஒன்வே.

இதற்கு இடையில் ஏதாவது ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்?

அதுதான் பனிரெண்டாம் நூற்றாண்டில் தேவாலயங்கள் கண்டுபிடித்த புர்கேட்டரி.

புர்கேட்டரி மரணத்திற்குப் பின் ஆன்மாக்கள் செல்லும் ஒரு தற்காலிக இடைநிலை உலகம். அதாவது, ஒருவர் பெரிய கிரிமினல் இல்லை, அதனால் நரகத்திற்குப் போக வேண்டியதில்லை. அதேநேரம், அப்புராணிப் புனிதரும் இல்லை, அதனால் நேராக சொர்க்கத்திற்கும் போக முடியாது. நடுவில் கொஞ்சம் பாவம், கொஞ்சம் புண்ணியம் செய்த ஆவரேஜ் மனிதர்களுக்கான இடம்தான் இந்த புர்கேட்டரி.

பெயரிலேயே புர்ஜ் இருப்பதால், அங்கே பாவம் செய்த ஆன்மாக்கள் எரிக்கப்படும். ஆனால், இது நரகத்து நெருப்பு மாதிரி நிரந்தர மிரட்டல் இல்லை. இது ஒரு தற்காலிக தெரபி. தங்கம் புடமிடப்படுவது போல, ஆன்மாவின் கறைகள் போகும் வரை அங்கே தொடர்ந்து எரிக்கப்படும்.

புர்கேட்டரியில் இருக்கும் ஆன்மாக்களால் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ள முடியாது. டைம் பிரேம் முடியும் வரை எரிய வேண்டியதுதான்.

அதனால்தான், அங்கிருக்கும் ஆன்மாக்கள் உதவி கேட்டு பூமிக்கு விசிட் அடிக்க ஆரம்பித்தன.

பூமியில் இருக்கும் நீங்கள், அந்த ஆன்மாக்களுக்காக உருகி உருகிப் பிரார்த்தனை செய்தால், அல்லது தேவாலயங்களுக்குக் காணிக்கை கொடுத்தால், புர்கேட்டரியில் இருக்கும் ஆன்மாவின் தண்டனைக் காலம் குறையும். உடனே அந்த ஆன்மாவுக்கு சொர்க்கத்தின் விசா கிடைத்துவிடும்.

டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே அமானுஷ்யங்களை வைத்து நடந்த மெகா மகா பிசினஸ் இது.

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் இதில் லாஜிக் ஜீரோ. ஆனால், மார்க்கெட்டிங் ரீதியாக இது ஒரு மாஸ்டர் பிரைன் பிளான். மரணத்திற்குப் பின்னும் மனிதனின் பயத்தை மூலதனமாக்கி, அமானுஷ்யங்களைத் தங்களுக்குச் சேல்ஸ் ரெப் ஆக மாற்றிய அந்த நெட்வொர்க்கிங் இருக்கிறதே, அது நிஜமாகவே அசாத்தியமானது.

உண்மையில், மனிதன் கடவுளைத் தேடிப் போகிறானோ இல்லையோ, தன் பாவங்களைக் கழுவ எப்போதுமே ஒரு ஷார்ட்கட்டையோ அல்லது ஒரு மிடில் ஏஜென்ட்டையோ தேடிக்கொண்டேதான் இருக்கிறான்.

அன்று அது புர்கேட்டரி மற்றும் பாவமன்னிப்புச் சீட்டு. இன்று அது வேறு வடிவம்.

மனிதர்கள் மாறும் வரை பிசினஸ் மாடல்கள் மாறலாம், ஆனால் பிசினஸ் மாறாது!

*****

மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான மதிப்பூதிய விவரம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான மதிப்பூதிய விவரம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் குறித்த விவரத்தைக் கீழே காண்க.

*****