Saturday, 6 June 2026

மூளைச் சுருளின் அன்வாண்ட்டட் பைல்களை டெலீட் செய்வது எப்படி?

மூளைச் சுருளின் அன்வாண்ட்டட் பைல்களை டெலீட் செய்வது எப்படி?

நம் மூளை எப்போதும் ஒரு ஓவர்லோடு ஆன ஹார்டு டிஸ்க் போல இருக்கிறது. வாட்ஸ்அப் மெசேஜ், ஆபீஸ் மெயில், இன்ஸ்டா ரீல்ஸ் எனத் தகவல்கள் நம்மைத் தாக்குகின்றன.

விளைவு?

சிஸ்டம் ஹேங் ஆகிறது.

இந்த ஹேங் ஓவரை எப்படித் தவிர்ப்பது?

இதற்கு நியூரோ சயின்டிஸ்ட்கள் சில வழிகளைச் சொல்கிறார்கள். அதைக் கொஞ்சம் பார்ப்போமா?

ஒரு நல்ல தூக்கம் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் வாய்ப்பை இரண்டு மடங்காக்குகிறது. ஒரு நாளைக்கு 7 முதல் 10 மணி நேரத் தூக்கம் அவசியம். குளிர்ந்த, இருட்டான அறைதான் மூளைக்கு பிடிக்கும். பகல் தூக்கம் 40 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. அதற்கு மேல் போனால் சிஸ்டம் ஸ்லீப் மோடுக்குப் போய்விடும்!

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நம் முன்னோர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள். இப்போதும் அதுதான் பொன் செய்யும் மருந்து. சூப்பர் மார்க்கெட்டில் 50 வகை தானியங்கள், ட்ரிப் அட்வைசரில் 200 ஹோட்டல்கள் என ஒரு நாளைக்கு நம் மூளை இவ்வளவுதான் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று ஒரு லிமிட் இருக்கிறது. அதற்கு மேல் போனால் நியூரல் பேட்டிக் வந்துவிடும். அப்புறம் தவறான முடிவுகளை எடுப்போம்.

எல்லா விஷயத்திலும் பெஸ்ட் தேடாதீர்கள். ஓரளவுக்கு ஓகே என்கிற முடிவை எடுங்கள். முக்கியமான முடிவுகளுக்கு மூளைச் சக்தியை மிச்சப்படுத்துங்கள்.

சாவி எங்கே? கத்தரிக்கோல் எங்கே? என்று தேடுகிறோம். கார் சாவியைத் தேடுவது போல காரைத் தேடுவதில்லை, ஏன்? இதற்கான பதிலை நீங்களே கொஞ்சம் யோசியுங்கள்.

ஒரே பொருளைப் பல இடங்களில் பயன்படுத்தினால், இரண்டு மூன்று வாங்கி வையுங்கள். கிச்சனுக்கு ஒரு கத்தரிக்கோல், ஆபீஸிற்கு ஒன்று. வீட்டுக்குள் நுழைந்ததும் சாவியைத் தொங்கவிட ஒரு கீ ஹூக்.

பால் வாங்க வேண்டும் என்று ஞாபகம் வர வேண்டுமா? ஒரு காலி பால் பாக்கெட்டை வாசலில் போட்டு வையுங்கள். மூளைக்குத் தரும் வேலையைக் குறையுங்கள். இதை விசுவல் ரிமைண்டர் என்கிறார்கள்.

எப்போதும் எதையாவது கவனித்துக்கொண்டே இருக்காதீர்கள். ரயிலில் வேடிக்கை பார்க்கும்போது அல்லது குளிக்கும்போதுதான் அந்த யுரேகா மொமென்ட் வரும். இதுதான் மூளையின் கிரியேட்டிவ் மோடு. இதற்காக எப்போதும் ஒரு நோட்புக் கையில் இருக்கட்டும். அந்த நேரத்தில் தோன்றும் ஐடியாக்களை உடனே பிடித்துவிடுங்கள்.

எப்போதும் டிஜிட்டல் வேண்டாம்.  பேப்பர் மற்றும் பென்சில் பெஸ்ட். டிஜிட்டல் உங்கள் மூளையை உங்களுக்கே தெரியாமல் சோர்வடைய வைக்கும். பேப்பர் மற்றும் பென்சில் உங்கள் மூளையை ரீஜெனரேட் செய்யும். டிஜிட்டலில் நோட்ஸ் எடுப்பதை விடப் பேப்பரில் எழுதுவது மூளைக்குக் கூடுதல் தெளிவைத் தரும்.

மூளைக்குள் எல்லாவற்றையும் போட்டு வைக்காதீர்கள். உங்கள் வேலைகளை நான்காகப் பிரியுங்கள். அவையாவன,

1) இப்போதே செய்ய வேண்டியவை. மிக முக்கியமான வேலைகள்.

2) முக்கியமான வேலை, ஆனால் உடனே முடிக்க வேண்டியதில்லை. காத்திருக்கலாம். பொறுமையாகச் செய்ய வேண்டிய வேலைகள்.

3) இப்போது முக்கியமில்லை, ஆனால் படிப்படியாகச் செய்ய வேண்டிய வேலைகள்.

4) செய்யவே தேவையில்லாதவை. இந்த வேலைகளைத்தான் முதலில் களையெடுக்க வேண்டும். ஏனென்றால் இவை வேலைகளே அல்ல. ஆக இந்தக் களையெடுத்தலைத்தான் முதலில் செய்ய வேண்டும்!

ஒரே நேரத்தில் நாலு வேலை செய்வது திறமை என்று நினைக்காதீர்கள். அது உங்களை மெதுவாக்கும். எனவே, மல்டி டாஸ்க்கிங் என்ற மாயையில் விழாதீர்கள்.

மொபைல் நோண்டிக்கொண்டே டிவி பார்ப்பது மூளையைக் குழப்பும்.

டிவி பார்த்துக்கொண்டே படித்தால் அந்தத் தகவல் ஸ்ட்ரியட்டம் பகுதிக்குப் போகும்  அது திறமைகளைச் சேமிக்கும் இடம். டிவி பார்க்காமல் படித்தால் அது ஹிப்போகாம்பஸ் பகுதிக்குப் போகும். அது தகவல்களைச் சேமிக்கும் இடம்.

எனவே, ஒரு நேரத்தில் ஒரு வேலை. போரடிக்கும் வேலையாக இருந்தாலும், அதை முடித்துவிட்டு அடுத்ததற்குப் போங்கள்.

ஒரு மெயில் நோட்டிபிகேஷன் வரும்போது உங்கள் ஐக்யூ 10 புள்ளிகள் குறைகிறதாம்! இதைத்தான் நீங்களே விரும்பி ஏற்றுக் கொள்ளும் டெக்னாலஜி டார்ச்சர் என்கிறார்கள் நியூரோ சயின்டிஸ்ட்கள். மெயிலை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் பாருங்கள், 50 முறை அல்ல!

மூளை ஒரு விஷயத்தில் முழுமையாக செட்டில் ஆக 50 நிமிடம் ஆகும். கடினமான வேலைகளுக்கு அந்த நேரத்தை ஒதுக்குங்கள். ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு பிரேக் எடுத்து 30 நிமிடம் நடப்பது அவசியம்.

அப்புறம் ஒரு முக்கியமான விசயம். வேலைகளைத் தள்ளிப்போடுதல் – இது சோம்பேறித்தனம் அல்ல, தன்னம்பிக்கை குறைவு என்கிறது ஆய்வு. தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில்தான் வேலையைத் தள்ளிப்போடுகிறோம். இதை ப்ரோக்ராஸ்டினேஷன் என்கிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு என்றால், இந்த வேலை ஜெயிச்சாலும் தோற்றாலும் நான் நான் தான் என்று உங்களை நீங்களே தேற்றிக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றவர்களை விடத் தோல்வி கண்டவர்களிடம்தான் மூளை அதிகம் கற்றிருக்கிறது என்கிறார்கள் நியூரோ சயின்ட்ஸ்ட்கள்.

வாழ்க்கை என்பது ஒரு பெரிய அல்காரிதம். அதைச் சிக்கலில்லாமல் ரன் செய்ய வேண்டும் என்றால், தேவையில்லாத பைல்களை அடிக்கடி டெலீட் செய்ய வேண்டும். மூளை என்பது ஒரு ஸ்டோரேஜ் டிவைஸ் மட்டுமல்ல, அது ஒரு பிராசஸர். அதற்கு அதிக லோடு கொடுக்காதீர்கள்.

இன்று மாலை உங்கள் ஸ்மார்ட்போனை ஆப் செய்துவிட்டு, ஜன்னல் ஓரம் அமர்ந்து ஒரு பத்து நிமிடம் சும்மா இருங்கள். உங்கள் மூளைத் திரையில் ஓடும் தேவையற்ற பாப்அப் விளம்பரங்கள் மெல்ல மறையும். அதுதான் உண்மையான மெண்டல் கிளாரிட்டி!

*****

Friday, 5 June 2026

குப்பை இல்லாக் கொண்டாட்டம்!

குப்பை இல்லாக் கொண்டாட்டம்!

நம் வீடுகள் இப்போது வெறும் வசிப்பிடங்கள் அல்ல, அவை ஒரு மினி மியூசியம். தேவையில்லாத பழைய துணிகள், ஓடாத வாட்ச்கள், எப்பவாவது உதவும் என்று சேர்த்து வைத்த பிளாஸ்டிக் டப்பாக்கள் என வீடு முழுக்க குப்பை.

வீட்டைச் சுத்தம் செய்வது என்பது வெறும் ஒட்டடை அடிப்பது மட்டுமல்ல, மனதைச் சுத்தப்படுத்துவதும் கூட என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

நம்மவர்கள் செய்யும் முதல் தப்பே, ஒரே நாளில் மொத்த வீட்டைச் சுத்தம் செய்யப் புறப்படுவதுதான். அதனால், இரண்டு மணி நேரத்தில் டயர்ட் ஆகி, பாதி வேலையில் டிசிஷன் பேட்டிக் வந்து அப்படியே விட்டுவிடுவார்கள்.

இந்த வாரம் முழுக்க வீட்டைச் சுத்தம் செய்வேன் என்று சொல்லாதீர்கள். இந்த சனிக்கிழமை இரண்டு மணி நேரம், இந்த ஒரு கப்போர்டை மட்டும் பார்ப்பேன் என்று இலக்கு வையுங்கள். சிம்பிள்!

சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் முன்பே, தேவையில்லாத பொருட்களை எங்கே போடப்போகிறோம் என்று முடிவு செய்யுங்கள்.

வாசலில் குப்பை மூட்டைகளை ஒரு வாரம் போட்டு வைத்தால், அதுவே ஒரு பெரிய மன அழுத்தமாகிவிடும். உடனே அப்புறப்படுத்துங்கள்.

தேவையற்ற பொருட்களைத் தயக்கமில்லாமல் தூக்கி எறிய உங்களுக்கு இந்த மூன்று ரூல்ஸ் போதும்.

1) ஒரு பொருள் உடைந்துவிட்டது, அதை ஒரு வருஷமாக நீங்கள் சரி செய்யவில்லை என்றால், இனிமேல் அதைச் செய்யப்போவதில்லை. தூக்குங்கள்!

2) எப்போதாவது உதவும் என்று எதையும் வைக்காதீர்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்றே உங்களுக்குத் தெரியாது! எனவே அப்படி எதையாவது வாங்கி வைத்திருந்தால் அதையும் கட்டம் கட்டித் தூக்குங்கள்.

3) யாரோ உங்களிடம் கொடுத்துச் சென்ற பொருள் ஒரு வருடமாக அங்கேயே இருக்கிறதா? திருப்பித் தந்துவிடுங்கள், அல்லது டிஸ்போஸ் செய்யுங்கள்.

அலமாரிக்கு மேலே, பரண் மேல் இருக்கும் பொருட்களை ஒருமுறை செக் பண்ணுங்கள். பல வருடங்களாகப் பார்க்காத அந்தப் பொருட்கள் உங்களுக்குத் தேவையில்லை என்பதே உண்மை.

இது எங்க பெரியம்மா கொடுத்த பெயிண்டிங் என்று பிடிக்காத ஒன்றைப் பாதுகாப்பது தேவையற்றது. பெரியம்மா ஒன்றும் கோபித்துக்கொள்ளப் போவதில்லை. அதற்கு பை பை சொல்லுங்கள்.

பொதுவாக உங்களுக்கு மிகவும் தேவையான அவசியமான முக்கியமான பொருள் என்றால், வீட்டில் தீப்பிடித்தால் எதைத் தூக்கிக்கொண்டு ஓடுவீர்களோ அதுதான். அதுதான் முக்கியம். மற்றதெல்லாம் வெறும் பொருட்கள்தான். ஒரு மெமரி பாக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள், அதில் மிக முக்கியமானவற்றை மட்டும் சேமியுங்கள்.

ஒரு சட்டையைப் போட்டால் உங்களுக்குத் தன்னம்பிக்கை வரவில்லை என்றால், அதை ஏன் வைத்திருக்கிறீர்கள்? பழைய துணிகள் மீண்டும் பேஷன் ஆகும் என்று காத்திருப்பது வீண். உங்களுக்குப் பிடிக்காத துணிகளைத் தானம் செய்யுங்கள்.

அப்புறம், இதையெல்லாம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொருட்களுக்கான ஒரு சிறு வழிகாட்டி இதோ.

பழைய போன்களை விற்பதற்கென்றே இணையதளங்கள் இருக்கின்றன. அங்கே கொடுத்தால் காசு கிடைக்கும். உங்கள் மேஜைக்கும் ஒரு ப்ரினெஸ் கிடைக்கும்.

தேவையில்லை என்று நினைக்கும் பழைய சோபா, பீரோக்களைத் தொண்டு நிறுவனங்களுக்குத் தரலாம்.

பழைய புத்தகங்களை அமேசானில் விற்கலாம் அல்லது மற்றவர்களுடன் பகிரலாம்.

பொருட்களைச் சேர்ப்பது ஒரு நோய். அவற்றை விடுவிப்பது ஒரு விடுதலை. அதிலும் தேவையில்லாத பொருட்களுக்கு டாடா சொல்வது மன ஆரோக்கியம்.

இன்று மாலை உங்கள் சூட்கேஸ்களைத் திறந்து பாருங்கள். உள்ளே பழைய ஜிப் போன பேக்குகள் இருந்தால் தயக்கமின்றித் தூக்கி எறியுங்கள். உங்கள் வீட்டின் வென்டிலேஷன் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது!

*****

Thursday, 4 June 2026

மூளைக்கு ஒரு ரெப்ரெஷ் பட்டன்!

மூளைக்கு ஒரு ரெப்ரெஷ் பட்டன்!

வார இறுதி நாட்கள் அப்படியே கரைந்து மாதங்களாகி, வருடங்களாக ஓடுகிறதா? இரவில் படுத்தால் உடல் அசதியில் இருக்கும், ஆனால் மூளைக்குள் ஏகப்பட்ட விண்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கும். புது பாஸ் கொடுத்த டார்ச்சர், கட்ட வேண்டிய இஎம்ஐ, சுகர் மற்றும் பிரசருக்கு போட வேண்டிய மாத்திரைகள் என ஒரு கொசுக்கூட்டம் போல எண்ணங்கள் உங்களை மொய்க்கிறதா?

இதற்குப் பெயர் இன்சோம்னியா மட்டுமல்ல, சிஸ்டம் ஓவர்லோடு! இதற்கு சைக்காலஜிஸ்ட்கள் பரிந்துரைக்கும் எளிய தீர்வு மைண்ட்புல்னஸ்.

மைண்ட்புல்னஸ் என்பது ஏதோ யோகா மேட் போட்டு, தலைகீழாக நின்று செய்ய வேண்டிய வித்தை அல்ல. இது ஒரு பிரைன் டிரெய்னிங்.

இதற்கு சைடு எபெக்ட் கிடையாது, காசு செலவில்லை. ரத்த அழுத்தம் குறையும், ஞாபக சக்தி கூடும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதையெல்லாம் யார் செய்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?

கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இதைச் சொல்லித்தருகிறார்கள். அவர்களுக்குத் தெரியும், நிம்மதியான ஊழியர்தான் அதிக புரொடக்டிவ் ஆக இருப்பார் என்று!

இந்தியா இந்த விசயத்தில் அப்படியே ஆப்போசிட் என்பதற்கு இன்போசிஸ் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் உழைத்துத் தள்ள வேண்டும் என்உறு உளறிக் கொட்டியதே சாட்சியம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா?

மிகவும் எளிது. ஒரு நாற்காலியில் நேராக உட்காருங்கள். நாற்காலி இல்லாவிட்டால் தரையில் கூட ஒரு துண்டை விரித்து உட்கார்ந்து கொள்ளலாம்.

உங்கள் மூக்கின் நுனியில் கவனம் வையுங்கள். காற்று உள்ளே போவதையும் வெளியே வருவதையும் மட்டும் கவனியுங்கள்.

அடுத்த ஐந்தாவது செகண்ட் உங்கள் மூளை நைட் என்ன டிபன்? என்று எங்காவது ஓடும். உடனே உங்களை நீங்களே திட்டிக்கொள்ளாதீர்கள். ஓ, மூளை அலைபாய்கிறதா? சரி, மீண்டும் மூச்சுக்கு வருவோம், என்று மென்மையாகத் திரும்புங்கள். இதுதான் பயிற்சி.

ஒரு நாளைக்கு இரண்டு நிமிடம் போதும். பிறகு பதினைந்து நிமிடம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். அப்புறம், போகப்போக அந்த ஸோன் உங்களுக்குப் பழகிவிடும்.

தியானம் என்பது கண்ணை மூடிக் கொண்டு செய்வது மட்டுமல்ல.

நடக்கும்போது, உங்கள் கால் பாதங்கள் தரையைத் தொடும் அந்த உணர்வை மட்டும் கவனியுங்கள்.

வேலைப்பளு அதிகமாக இருந்தால், எழுந்து போய் முகம் அலம்புங்கள், கை கழுவுங்கள். அந்தத் தண்ணீரின் குளிர்ச்சி, சோப்பின் மணம், தண்ணீர் ஓடும் சத்தம் மூளைக்கு இது ஒரு பிரைன் ரின்ஸ்.

பழைய கால வேலைகளான ஆட்டுக்கல்லில் இட்லிக்கு மாவு அரைப்பது, திருவையில் உளுந்து உடைப்பது, சமையல் பாத்திரத்தைப் பளிச்சென்று துலக்குவது, உங்கள் துணிகளை நீங்களே துவைத்துக் கொள்வது போன்ற கைகளால் செய்யும் வேலைகள் டெக்னாலஜி டார்ச்சருக்கு ஒரு சிறந்த மருந்து.

சாப்பிடும் போது, ஒவ்வொரு கவளத்தையும் ரசித்து மெதுவாகச் சாப்பிடுங்கள். மூளைக்கு வயிறு நிறைந்துவிட்டது என்று சொல்ல 20 நிமிடம் ஆகும். மெதுவாகச் சாப்பிட்டால் ஓவர் ஈட்டிங் கட்!

தூக்கம் வரவில்லையா? காலில் தொடங்கி தலை வரை ஒவ்வொரு உறுப்பாக மனதால் நினைத்து ரிலாக்ஸ் செய்யுங்கள். பொதுவாகத் தலைக்கு வருவதற்கு முன்பே நீங்கள் தூங்கி விடுவீர்கள்!

மற்றவர்கள் பேசும்போது உங்கள் இன்டெர்னல் குரலை ஆப் செய்துவிட்டு, அவர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள். ஒருவரை முழுமையாகக் கவனிப்பதே ஒரு பெரிய அன்புதான்.

மனதில் கவலை வந்தால், எனக்கு ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கிறது, என்று சொல்லாதீர்கள். அதற்குப் பதில், ஓ! என் மூளைக்குள் ஒரு கவலை மேகம் கடந்து போகிறது, என்று ஒரு கவிஞனைப் போல வேடிக்கை பாருங்கள். முடிந்தால் அதைப் பற்றி ஒரு கவிதை கூட எழுதிப் பாருங்கள்.

நீங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. நீங்கள் அவற்றைப் பார்க்கும் ஒரு சாட்சி. இப்படிப் பார்க்கத் தொடங்கிவிட்டால், கவலைகளின் பவர் கட் ஆகிவிடும்!

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத லூப் கிடையாது. வாழ்க்கையைக் கவனிக்க ஆரம்பித்தால் வானம் என்பது எவ்வளவு பெரியது, பூக்கள் எத்தனை வகை, பறவைகள் எத்தனை விதம், நிலவு எவ்வளவு அழகானது, இரவு எவ்வளவு குளுமையானது, சூரிய உதயம் எவ்வளவு மலர்ச்சியானது என்று எல்லாம் புலரவும் புரியவும் தொடங்கும்.

இன்று இரவு படுக்கும்போது, சீலிங் பேனைப் பார்த்துக்கொண்டே உங்கள் மூச்சைக் கவனியுங்கள். நாளை காலை நீங்கள் ஒரு புது மனிதராக 2.0 ஆக எழுவீர்கள்.

ஆல் தி பெஸ்ட்!

*****

Wednesday, 3 June 2026

உங்களுக்கான ஒரு கிரியேட்டிவ் விசிட்!

உங்களுக்கான ஒரு கிரியேட்டிவ் விசிட்!

நம் மூளை ஒரு விசித்திரமான மென்பொருள். அதைச் சும்மா வைத்திருந்தால் துருப்பிடித்துவிடும், ஓடிக்கொண்டே இருந்தால் ஹேங் ஆகிவிடும். இதற்கு ஒரு பேட்ச் ஒர்க்தான் கலை.

நம்மில் பலர், எனக்கு வரையத் தெரியாது சார், நான் பாடினால் கழுதை ஓடி வரும், நான் கவிதை எழுதினால் காமெடியாகும் என்று எஸ்கேப் ஆகிறோம். ஆனால், கலை என்பது கண்காட்சியில் வைப்பதற்கல்ல, உங்கள் மனதைச் சீரமைக்க!

மனநல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? உணவு, உடற்பயிற்சிக்கு இணையாகக் கிரியேட்டிவிட்டி மனித ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இது ஒரு மைண்ட்புல் தியானம். உங்கள் மூளையை ரீபூட் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இதோ சில வழிகள். உங்களுக்குப் பயன்படுகிறதா என்ற பாருங்கள்.

நீங்கள் ஓர் இளையராஜாவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கருவியை மீட்டும்போது வரும் அந்த வைப்ரேஷன் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும். உங்களுக்கு வாசிக்கத் தெரியாவிட்டால், இதுவரை கேட்காத ஒரு புது இசையை மைண்ட்புல்லாகக் கேட்டுப் பாருங்கள்.

பழைய புகைப்படங்கள், டிக்கெட் துண்டுகள், பேப்பர் கட்டிங் இதையெல்லாம் ஒரு நோட்டில் ஒட்டுங்கள். இது ஒரு விஷுவல் டைரி. வெட்டுவது, ஒட்டுவது என உங்கள் கைகள் வேலை செய்யும்போது மூளை ஆட்டோபைலட் மோடிலிருந்து வெளியே வரும்.

மண்ணும் நீரும் சேரும்போது ஒரு உயிர் பிறக்கிறது. அதுதான் களிமண் கலை. இதற்காகப் பாட்டர் வீல்  தேவையில்லை. வெறும் கைகளால் அந்த மண்ணின் குளிர்ச்சியையும், தன்மையையும் உணருங்கள். அது மாற மாற உங்கள் மன இறுக்கமும் மாறும்.

இது நல்லாவே இல்லை, என்று உங்கள் தலைக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்குமே, அதை முதலில் மியூட் செய்யுங்கள். ஓவியம் என்பது விளையாட்டு. ஒரு இலக்கோ, முடிவோ இல்லாமல் வண்ணங்களைத் தீட்டுங்கள். நீங்கள் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்றால், உங்கள் ஸ்டைலைத் தூக்கி எறிந்துவிட்டுச் சுதந்திரமாக வரையுங்கள்.

இப்போது பெரியவர்களுக்கான கலரிங் புக்ஸ் சூப்பர் மார்க்கெட்டிலேயே கிடைக்கிறது. அந்தச் சிக்கலான டிசைன்களுக்குள் வண்ணம் தீட்டும்போது உங்கள் கவனம் சிதறாது. இது ஒரு போகஸ்டு மெடிடேஷன்.

கம்பளி நூலோடு விளையாடுவது ஒரு ப்ளோ நிலையை உருவாக்கும். அந்தத் தொடர்ச்சியான கை அசைவுகள் மூளையில் அமைதி தரும் கெமிக்கல்களைச் சுரக்க வைக்கின்றனவாம். உலகெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளை அமைதிப்படுத்த இந்தப் பின்னல் வேலையைச் சொல்லித்தருகிறார்கள். ஆகவே அதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இந்த உலகில் பலரும் இருப்பது வீடு எனும் சிறையில்தானே.

பீரோ நிறையத் துணி இருக்கு சார், ஆனா போட எதுவுமே இல்லை, என்கிற கவலை வேண்டாமென்றால், நீங்களே தைக்க ஆரம்பியுங்கள். இதை நான் செய்தேன் என்று சொல்லும்போது வரும் அந்தத் தன்மானம் இருக்கிறதே, அது எத்திகல் பேஷன் பக்கமும் உங்களை அழைத்துச் செல்லும்.

ஊசி வேலையும் பின்னல் வேலை போன்றதுதான். மெதுவாக, நிதானமாகச் செய்ய வேண்டிய ஒரு காரியம். நூல் சிக்கிக்கொண்டால் டென்ஷன் ஆகாதீர்கள். அந்தச் சிக்கலை எடுப்பதும் ஒரு கலைதான்.

சிறு வயதில் நாம் எல்லாரும் வரைந்தோம். எப்போது நிறுத்தினோம் என்று ஞாபகம் இருக்கிறதா? ஏதோ ஒரு புள்ளியில் அந்த ஆர்வம் நின்றுவிடுகிறது. அதை மீண்டும் ஆரம்பியுங்கள். ஒரு பேனாவை எடுத்து காகிதத்தில் கிறுக்கத் தொடங்குங்கள். உங்கள் மூளைக்கு ஒரு சின்ன இடைவேளை கொடுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத ஓர் ஆட்டோ பைலட் புரோகிராம் கிடையாது. இடையில் கொஞ்சம் எர்ரர் வரும், கொஞ்சம் பக் வரும். கலை என்பது அந்த சிஸ்டத்தை ரீவயரிங் செய்யும் ஒரு டூல்.

நான் ஒரு முட்டை கூட வரையத் தெரியாதவன், என்று ஒதுங்காதீர்கள். கலை என்பது சரியாக வரைவதல்ல. உண்மையாக உணர்வது.

இன்று ஒரு வெள்ளைத்தாளில் ஒரு பென்சிலால் உங்களுக்குத் தோன்றியதை வரையுங்கள். அது ஒரு கோடாக இருந்தாலும் சரி, ஒரு வட்டமாக இருந்தாலும் சரி. அந்தப் பென்சில் காகிதத்தில் உரசும் சத்தத்தைக் கவனியுங்கள். உங்கள் கிரியேட்டிவ் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

கிறுக்கல்கள் என்று சொல்லி கவிதை எழுதினாலும் சரிதான். கிறுக்கல்கள் என்ற பெயரில் ஒரு கவிதை நூலை வெளியிட்டிருக்கிறார் ஒருவர். அப்புறம் என்ன?

லெட் ஸ்டார்ட் மியூசிக்!

*****

Tuesday, 2 June 2026

ஜன்னலுக்கு வெளியே ஒரு ஜிமிக்கி கம்மல்!

ஜன்னலுக்கு வெளியே ஒரு ஜிமிக்கி கம்மல்!

கான்க்ரீட் காடுகளுக்குள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் திரைகளைப் பார்த்துப் பார்த்து நம் மூளை ஹேங் ஆகிவிடுகிறது.

இயற்கையோடு தொடர்பு இல்லாதது மனநலத்தைப் பாதிக்கும் என்று பல ஆய்வுகள் அலறுகின்றன.

டிப்ரஷன், ஆங்க்சைட்டி போன்ற நவீன கால பக்குகளுக்கு இயற்கைதான் சிறந்த பேட்ச்.

அதற்காக உடனே டிரெக்கிங் ஷூ மாட்டிக்கொண்டு இமயமலைக்கு ஓட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்தாலே போதும். அது ஒரு ஹீலிங் ப்ராசஸ்.

நம்மில் பலருக்கு தோட்டம் இருக்காது. ஆனால், ஜன்னலுக்கு வெளியே ஒரு காக்கா உட்காரும் மரம் அல்லது சுவரில் ஊர்ந்து செல்லும் ஒரு செடி இருக்கக்கூடும்.

உங்கள் ஜன்னல் ஓரம் என்ன வளர்கிறது? எந்தப் பூச்சி எப்போது விசிட் அடிக்கிறது? இதை ஒரு துப்பறியும் நிபுணர் போலக் கவனியுங்கள். இயற்கையை நோக்கிய முதல் திருப்பம் மற்றும் திருப்புமுனை இது.

வீட்டுக்குள் அமர்ந்து லஞ்ச் சாப்பிடுவதற்குப் பதில், ஒரு பூங்காவுக்கோ அல்லது மொட்டை மாடிக்கோ ஒரு பிக்னிக் போலச் செல்லுங்கள். நண்பர்களையும் அழையுங்கள். உங்கள் வீட்டு வாசலிலேயே ஒரு நேஷனல் ஜியோகிராபிக் சேனல் ஓடிக்கொண்டிருப்பதை அப்போதுதான் கவனிப்பீர்கள்!

ஏதாவது ஒன்றை உருவாக்குவது ஒரு சிறந்த தியானம். அதை வீட்டுக்குள் உட்கார்ந்தும் செய்யலாம். அவ்வபோது அவுட்டிங் போய் அங்கே உட்கார்ந்தும் செய்யலாம். அப்படிச் செய்யும் போது உங்கள் மூளை டாப் அப் ஆகிறது.

உங்களுக்கு ஓவியம் வரையப் பிடிக்குமா? அல்லது பின்னல் வேலை? அப்படியே அந்தப் பக்கம் ஒரு மரத்தடிக்குப் போய் உட்கார்ந்து செய்யுங்கள்.

உங்களிடம் விலையுயர்ந்த கேமரா இருக்க வேண்டிய அவசியமில்லை. கையில் இருக்கும் போனில் ஒரு பறவையையோ, மேகத்தையோ படம் எடுங்கள். ஒரு கவிதை எழுதுங்கள்.

இப்படிச் செய்து விட்டு, நான் எடுத்து போட்டோவுக்கு லைக்குகள் போதவில்லை, என் கவிதையை யாரும் படிக்கவில்லை என்று புலம்பாதீர்கள். இங்கே ரிசல்ட் முக்கியமல்ல. உங்கள் மூளை அந்த இன்ஸ்பிரேஷன் லூப்பில் சிக்குவதுதான் முக்கியம்.

இயற்கை என்பது ஒரு மிகப்பெரிய வை-பை போன்றது. நீங்கள் அதோடு கனெக்ட் ஆனால், உங்கள் மனதின் வேகம் சீராகும்.

இங்கே குணமாக வேண்டியது நீங்கள். நீங்கள் குணமானதற்கு அவர்கள் மாத்திரை சாப்பிடவில்லை என்று அடம் பிடிக்க வேண்டியதில்லை. இங்கே பாராட்டோ, வாழ்த்தோ எதுவும் முக்கியமில்லை. உங்கள் மனம் ரிப்ரெஷ் ஆகிறதா, அதுதான் முக்கியம்.

கவிதை எழுதுவதிலிருந்து, ஓவியம் வரைவதிலிருந்து, புத்தகம் படிப்பதிலிருந்து பறவைகளை வேடிக்கை பார்ப்பது வரை எது உங்களுக்கு கிக் கொடுக்கிறதோ, அதைச் செய்யுங்கள்.

இயற்கையிடம் போனால் அது உங்களைப் பேச விடாது, உங்களைக் கவனிக்க வைக்கும். அந்த நிசப்தம்தான் உங்கள் மூளைக்குத் தேவையான ரீசார்ஜ்.

இன்று மாலை உங்கள் ஸ்மார்ட்போனை டேபிளில் வைத்துவிட்டு, ஜன்னல் ஓரம் ஒரு ஐந்து நிமிடம் சும்மா நில்லுங்கள். வானத்தின் நிறம் மாறுவதையோ அல்லது ஒரு இலையின் அசைவையோ கவனியுங்கள். அந்த ஐந்து நிமிடம் உங்கள் ஆயுளில் ஒரு மணி நேரத்தைச் சேர்க்கும்!

*****

Monday, 1 June 2026

நிதானமாகப் பூக்கலாம்!

நிதானமாகப் பூக்கலாம்!

தோட்டம் போடுதல் என்பது இயற்கையோடு ஒரு கனெக்சனை ஏற்படுத்திக் கொள்ளும் அற்புதமான முயற்சி. அதைப் பலரும் ஸ்டேட்டஸ் வைப்பதற்கும், நான்கு பேரிடம் காட்டிப் பரவசப்படுத்துவதற்குமான ஒன்றாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உங்களை நீங்களே பரவசப்படுத்திக் கொள்ளும் ஒரு பிரபஞ்ச செயல்.

அதனால் இந்த ஸ்லோ கார்டனிங் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

ஸ்லோ கார்டனிங் என்ற உடனே, ஏதோ சோம்பேறித்தனமாகச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து செடிகளை வேடிக்கை பார்ப்பது என்று நினைக்காதீர்கள். இது ஒரு மைண்ட்செட். செடிகளோடு சேர்ந்து நீங்களும் வளர்வதுதான் இந்தத் தத்துவம். இங்கே செக் லிஸ்ட் கிடையாது, அவசர ரிசல்ட் கிடையாது.

இயற்கை என்பது ஒரு பழைய காலத்து கடிகாரம் போல. அது தன் போக்கில்தான் ஓடும். அதை நாம் 5ஜி வேகத்திற்கு இழுக்க முடியாது.

எப்படி ஒரு கம்ப்யூட்டரில் ரேம் அளவைப் பார்த்து சாப்ட்வேர் போடுவோமோ, அதுபோல உங்கள் தோட்டத்தில் எங்கே வெயில் அடிக்கிறது, எங்கே நிழல் விழுகிறது என்று பாருங்கள்.

உங்களுக்குப் புல்வெளி வெட்டுவது பிடிக்கவில்லையா? விட்டுவிடுங்கள்! அதற்குப் பதில் காட்டுப் பூக்களை வளருங்கள். பட்டாம்பூச்சிகள் வரும். உங்கள் தோட்டம் உங்கள் கேரக்டரின் பிரதிபலிப்பு. அது பக்கத்து வீட்டுக்காரரைப் போல இருக்க வேண்டிய அவசியமில்லை.

நர்சரிக்குச் சென்று வளர்ந்த செடியை வாங்கி வந்து வைப்பது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல. அதில் பசி அடங்கும், ஆனால் திருப்தி இருக்காது.

ஒரு விதையை நட்டு, அது முளைப்பதைக் கவனிப்பது ஒரு கிரியேஷன். அந்த மூலிகைச் செடி வளரும் போது வரும் மணம், நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பாக்கெட் புதினாவில் இருக்காது.

பூச்சிக் கொல்லிகளைத் தூக்கி எறியுங்கள். செடிகளுக்கு இடையே நண்பர்களை உருவாக்குங்கள். மண்ணை உரத்தால் நிரப்பாதீர்கள், மண்ணை மீளுருவாக்கம் செய்யுங்கள்.

தோட்டம் என்பது வெறும் பச்சை நிறம் மட்டுமல்ல.

காற்றில் இலைகள் அசையும் சத்தம், ஒரு சின்ன நீரூற்றின் சலசலப்பு இவற்றைக் கேளுங்கள்..

பழைய நினைவுகளைத்  தூண்டும் மணம் கொண்ட பூக்களை நுகருங்கள்.

ஜன்னல் ஓரம் பறித்த தக்காளி அல்லது துளசியைச் சுவையுங்கள்.

இயற்கையோடு சண்டை போடாதீர்கள், அதோடு கூட்டுச் சேர்ந்து யுனைடெட் கோல்  நோக்கிப் பயணம் செய்யுங்கள்.

கார்டன் சென்டருக்குப் போய் கிரெடிட் கார்டைத் தேய்க்கும் முன், உங்கள் ஸ்டோர் ரூமைப் பாருங்கள்.

பழைய டப்பாக்கள், மரப்பெட்டிகள் போன்றவை பறவைகளுக்கும் செடிகளுக்கும் சிறந்த வீடாக மாறும்.

சத்தம் போடும் பவர் டூல்களை ஓரங்கட்டி விட்டு, பாரம்பரியமான மண்வெட்டி, கலைக்கொத்து எடுத்தால் உங்கள் உடலுக்கும் ஒரு சின்ன எக்ஸர்சைஸ்.

களைகளை உங்கள் எதிரியாகப் பார்க்காதீர்கள். தேனீக்களுக்கு அவைதான்பிடித்தமான ஹோட்டல்!

நீங்கள் நிதானமாகத் தோட்டத்தில் நடக்கும்போதுதான், உங்கள் செடியில் என்ன நோய் இருக்கிறது, எங்கே பூச்சி அரித்திருக்கிறது என்று பார்க்க முடியும். அவசரம் அவசரமாகத் தண்ணீர் ஊற்றிவிட்டு ஓடினால் இதையெல்லாம் கவனிக்க முடியாது.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத லிஸ்ட் சென்டர் கிடையாது. செடிகள் வளர நேரம் எடுக்கும். அந்த நேரத்தை நாம் வெயிட்டிங் டைம் என்று நினைக்காமல், லிவிங் டைம் என்று ரசிக்க வேண்டும்.

இயற்கை ஒருபோதும் அவசரப்படுவதில்லை, ஆனாலும் எல்லாம் சரியாக நடக்கிறது, என்பார்கள். உங்கள் தோட்டமும் அப்படித்தான்.

இன்று மாலை உங்கள் தோட்டத்திலோ அல்லது பால்கனியிலோ ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக உட்கார்ந்து பாருங்களேன். ஓர் எறும்பின் ஓட்டத்தையோ அல்லது ஒரு மொட்டு விரிவதையோ கவனியுங்கள். உங்கள் ஸ்லோ கார்டனிங் அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

Sunday, 31 May 2026

ஜன்னலில் ஒரு நந்தவனம்!

ஜன்னலில் ஒரு நந்தவனம்!

சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்ட, எப்போதோ பறிக்கப்பட்ட, எங்கிருந்தோ வந்த காய்கறிகளை வாங்கிச் சாப்பிட்டு சலித்துப்போய்விட்டதா?

எல்லாம் போலி சார், ஒரிஜினல் ருசியே காணோம், என்று அங்கலாய்ப்பவரா நீங்கள்?

இதோ உங்களுக்கான தீர்வு. அதாவது, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அல்லது ஜன்னல் ஓரத்தில் நீங்களே விளைவித்து, நீங்களே பறித்து, நீங்களே சமைப்பது.

இது வெறும் விவசாயம் மட்டும் அல்ல. இது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். இதில் பிளாஸ்டிக் கழிவு கிடையாது, தேவையற்ற டிரான்ஸ்போர்ட் செலவு கிடையாது. எல்லாவற்றையும் விட, நீங்கள் வளர்த்த செடியில் ஒரு தக்காளி சிவந்து தொங்கும்போது கிடைக்கும் அந்த கிக் இருக்கிறதே, அது அலாதி!

இப்போதெல்லாம் விவசாயம் செய்ய ஏக்கர் கணக்கில் நிலம் தேவையில்லை. கொஞ்சம் ஆர்வமும், கொஞ்சம் எப்போர்ட்டும் இருந்தால் போதும்.

எல்லா செடியும் எல்லா நேரத்திலும் வளராது. எந்த மாதத்தில் எதை நடலாம் என்று கொஞ்சம் கூகுள் செய்யுங்கள்.

உங்கள் வீட்டு மண் களிமண்ணா? மணற்பாங்கானதா? கீரைகள், தக்காளி, பூசணி, பரங்கி, சுரை போன்றவை களிமண்ணில் நன்றாக வரும். கேரட், முள்ளங்கி என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் மண் தேவை.

காய்கறித் தோல், காபித்தூள் கழிவு, முட்டை ஓடு, காய்ந்த இலைகள் இதையெல்லாம் ஒரு பக்கெட்டில் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து வைத்தால், சில நாட்களில் அதுவே சூப்பர் உரம். காசு கொடுத்து ஏன் யூரியா வாங்க வேண்டும்?

எங்கள் வீட்டில் தோட்டம் கிடையாது சார், வெறும் பால்கனி தான் என்கிறீர்களா? கவலையை விடுங்கள். உங்கள் ஜன்னல் ஓரம் ஐந்து மணி நேரம் வெயில் பட்டால் போதும், அங்கே ஒரு குட்டி விவசாயப் புரட்சியை நிகழ்த்தலாம்.

15 செ.மீ தொட்டி இருந்தால் மூலிகைச் செடிகள் வளர்க்கலாம். கேரட், பீன்ஸ், வளர்க்க 25 செ.மீ ஆழமுள்ள தொட்டி தேவை.

காலி டப்பாக்கள், பழைய மரப்பெட்டிகள் என எதையும் விடாதீர்கள். அடியில் கொஞ்சம் கற்களைப் போட்டு தண்ணீர் வடிய வழி செய்தால் போதும்.

எடுத்தவுடனேயே பெரிய செடி வேண்டாம். கொத்துமல்லி அல்லது புதினா செடியை வாங்கி வளர்த்துப் பாருங்கள். அப்புறம் விதையிலிருந்து ஆரம்பிக்கலாம்.

ஆரம்பத்தில் கை கொடுக்கும் நம்பிக்கை செடிகள் என்றால் அவை கீரைகள், அவரை, கொத்தவரை, வெண்டை, தக்காளி, பீர்க்கன், பரங்கி, சுரை, பூசணிதான்.

ஒரு சின்ன மண்வெட்டி, பூவாளி அல்லது பழைய பக்கெட் கூட போதும். இவ்வளவுதான் உங்களுடைய கிட். அழுக்கானாலும் கவலையில்லை என்கிற ஒரு பழைய டிஷர்ட் போட்டுக் கொண்டு களத்தில் இறங்குங்கள்.

விவசாயம் என்பது பொறுமை சார்ந்தது. ஒரு விதையைப் போட்டுவிட்டு, அடுத்த நிமிடம் ஏன் இன்னும் முளைக்கவில்லை? என்று பார்ப்பது டிஜிட்டல் யுகத்து அவசரம். செடி வளர்வதைப் பார்ப்பது ஒரு தியானம். அது உங்களை நிகழ் கணத்தில் இருப்பது எப்படி என்பதைச் சொல்லித்தரும்.

உங்களுக்கு ஒரு சீக்ரெட் தெரியுமா? செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளருமாம். சயின்ஸா, தத்துவமா என்று தெரியவில்லை, ஆனால் உங்கள் அன்பை அவை உணரும் என்பது மட்டும் நிச்சயம்.

இன்று மாலை ஒரு சின்ன தொட்டியில் கொஞ்சம் மண்ணை நிரப்பி, நாலு வெந்தயத்தைப் போட்டுப் பாருங்களேன். அடுத்த வாரம் நீங்கள் உங்கள் கைகளால் பறித்த வெந்தயக் கீரை சாம்பார் உங்கள் டைனிங் டேபிளில் இருக்கும். அந்த ருசிக்கு முன்னால் சூப்பர் மார்க்கெட் காய்கறிகள் பிளாஸ்டிக் பொம்மையாகத் தோன்றும்!

அப்புறம் என்ன? லெட்ஸ் ஸ்டார்ட் மியூசிக்!

*****