Thursday, 12 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.03.2026

1) போரை நிறுத்த ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார். அவையாவன, ஈரானின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், எதிர்காலத்தில் மீண்டும் தாக்க மாட்டோம் என சர்வதேச உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

2) இந்தியாவின் எரிவாயு நிரப்பப்பட்ட கப்பலை ஹோர்முஸ் நீர்ச் சந்தி வழியாகக் கடக்க ஈரான் அனுமதித்தது. இதனால் விரைவில் இந்தியாவில் எரிவாயு தட்டுபாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3) இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4) பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு செல்கிறார்.

5) மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் மோடி ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.

6) இந்தியாவின் 2025-26 நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

7) பிப்ரவரி மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 3.21% ஆக உயர்ந்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான பஞ்சாப் ஆளுநர் மைக்கேல் ஓ டயரை லண்டனில் இந்தியப் புரட்சியாளர் உத்தம் சிங் சுட்டுக் கொன்ற தினம் இன்று.

2) வில்லியம் ஹெர்ஷல் சூரிய குடும்பத்தின் ஏழாவது கோளான யுரேனஸை 1781 இல் கண்டுபிடித்த தினம் இன்று.

3) ஆக்சிஜனைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான பிரிட்டிஷ் வேதியியலாளர் ஜோஸப் பிரிஸ்ட்லீ 1733 இல் பிறந்த தினம் இன்று.





Education & GK News

1) Iranian President Masoud Pezeshkian has laid down three conditions to stop the war. These are: Iran's rights must be recognized; compensation must be provided for damages caused by the war; and an international guarantee must be given that no further attacks will be launched in the future.

2) Iran has permitted an Indian vessel carrying gas cargo to pass through the Strait of Hormuz. Consequently, it is expected that the gas shortage in India will be alleviated soon.

3) The Central Government has stated that there is no likelihood of a petrol or diesel shortage occurring in India.

4) Prime Minister Narendra Modi is visiting the state of Assam today.

5) Prime Minister Modi held a telephonic conversation with the Iranian President regarding the prevailing war situation in West Asia.

6) India's economic growth for the 2025-26 fiscal year is estimated to be 7.6%.

7) Retail inflation for the month of February has risen to 3.21%.

On This Day in History…

1) Today marks the day when Indian revolutionary Udham Singh shot and killed Michael O'Dwyer—the Governor of Punjab responsible for the Jallianwala Bagh massacre—in London.

2) Today marks the day in 1781 when William Herschel discovered Uranus, the seventh planet of the solar system.

3) Today marks the birthday of British chemist Joseph Priestley—one of the discoverers of oxygen—who was born in 1733.

Wednesday, 11 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.03.2026

1) நேற்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 9.09 லட்சம் மாணவர்கள் எழுதினர். சுமார் 11,898 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2) தமிழகப் பள்ளிகளில் வரும் ஆண்டுகளில் ஆறாம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

3) எரிவாயு தட்டுபாட்டால் 30 சதவீதம் மின்சார அடுப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

4) தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை ராஜ்பவனில் பதவியேற்கிறார்.

5) மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

6) கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தனது கையிருப்பில் இருந்து 172 மில்லியன் பேரல் எண்ணெயை வெளியிட முடிவு செய்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாகிரகத்தை 1930 இல் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கிய தினம் இன்று.

2) www என்பதற்குக் காரணமான இணைய மேலாண்மைக்கான தனது முதல் திட்ட அறிக்கையை டிம் பெர்னர்ஸ் லீ 1989 இல் சமர்ப்பித்த தினம் இன்று.

3) 1993 இல் மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 300 பேர் இறந்த தினம் இன்று.






Education & GK News

1) About 9.09 lakh students wrote the Class 10th public examination that began yesterday. According to reports, about 11,898 students did not appear for the examination.

2) It is planned to introduce subjects related to artificial intelligence from Class 6 onwards in Tamil Nadu schools in the coming years.

3) Sales of electric stoves have increased by 30 percent due to gas shortage.

4) Rajendra Vishwanath Arlekar will take oath as the Additional Governor of Tamil Nadu at the Raj Bhavan in Chennai today.

5) The Union Cabinet has approved granting international airport status to Madurai Airport.

6) The United States has decided to release 172 million barrels of oil from its reserves to control crude oil prices.

Today in history…

1) Today is the day Mahatma Gandhi started his famous Salt Satyagraha from Sabarmati Ashram in Ahmedabad in 1930.

2) Today is the day Tim Berners-Lee submitted his first project report for the management of the Internet, which gave rise to www, in 1989.

3) Today is the day around 300 people died in the Mumbai serial blasts in 1993.

Tuesday, 10 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.03.2026

1) இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.

2) வளைகுடா போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகிப்பதில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

3) தமிழகத்தின் பல மாநகரங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

4) தட்டுபாடு காரணமாக வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளையை மட்டும் விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

5) எரிவாயு உருளை தட்டுபாட்டால் உணவகங்களில் உணவின் விலை அதிகரித்துள்ளது. பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

6) சமையல் எரிவாயு உருளையைப் பதுக்குபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இச்சட்டம் பதுக்கல்காரர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையிலானது.

7) ராமேஸ்வரம் - மங்களூரு மற்றும் நெல்லை - மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

8) பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.

9) பெட்ரோல், டீசல் தட்டுபாடு காரணமாக பாகிஸ்தானில் இரண்டு வாரங்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

10) டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசுத் தொகை பிசிசிஐ அறிவித்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் 2011 இல் பெரும் விபத்து ஏற்பட்ட தினம் இன்று.

2) உலக சுகாதார நிறுவனம் (WHO), கோவிட்-19 வைரஸ் பரவலை அதிகாரப்பூர்வமாக ஓர் உலகளாவியப் பெருந்தொற்றாக 2020 இல் அறிவித்த தினம் இன்று.

3) பென்சிலினைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் 1955 இல் இயற்கை எய்திய தினம் இன்று.






Education & GK News

1) SSLC public exams start from today.

2) There is a shortage in the supply of cooking gas in India due to the Gulf War.

3) The supply of gas cylinders for commercial use has been stopped in many cities of Tamil Nadu.

4) Due to the shortage, the Central Government has decided to supply only gas cylinders for domestic use.

5) The price of food in restaurants has increased due to the shortage of gas cylinders. Many restaurants have closed.

6) The Central Government has warned that strict action will be taken against those who hoard cooking gas cylinders under the ESMA Act. This Act provides for imprisonment of three months to seven years for hoarders.

7) Prime Minister Narendra Modi will inaugurate 5 new train services today, including the Rameswaram-Mangalore and Nellai-Mangalore Express.

8) Prime Minister Narendra Modi is visiting Tamil Nadu today.

9) Schools and colleges in Pakistan have been closed for two weeks due to petrol and diesel shortage.

10) BCCI has announced a prize money of Rs 131 crore for the Indian team that won the T20 World Cup.

Today in history…

1) Today is the day when a major accident occurred at the Fukushima nuclear power plant in 2011 due to a powerful earthquake and tsunami in Japan.

2) Today is the day when the World Health Organization (WHO) officially declared the spread of the Covid-19 virus a global pandemic in 2020.

3) Today is the day Alexander Fleming, who discovered penicillin, passed away in 1955.

Monday, 9 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.03.2026

1) நாளை பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. 9,09,397 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

2) நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

3) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ. 92.33 ஆகக் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

4) வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவுக்கு எரிபொருள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது.

5) சென்னையில் வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

6) சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7) நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பொறுப்பேற்கவுள்ளார்.

வரலாற்றில் இன்று…

1) அலெக்சாண்டர் கிரஹாம் பெல் வெற்றிகரமாகத் தனது முதல் தொலைபேசி 1876 இல் அழைப்பை மேற்கொண்ட தினம் இன்று. Mr. Watson, come here, I want to see you என்று கூறியதுதான் தொலைபேசியில் பதிவான முதல் வாக்கியம்.

2) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான சாவித்ரிபாய் புலே 1897 இல் மறைந்த தினம் இன்று.

3) பிரெஞ்சு வானியலாளர் சார்லஸ் மெஸ்ஸியர் 1779 இல் விண்வெளியில் புகழ்பெற்ற ரிங் நெபுலாவைக் கண்டறிந்த தினம் இன்று.






Education & GK News

1) The public exams for Class 10 are set to begin tomorrow. 9,09,397 students are appearing for the exam.

2) The deadline to apply for the NEET exam has been extended till tomorrow.

3) The value of the Indian rupee against the US dollar has fallen to an unprecedented level of Rs. 92.33.

4) The war situation in the Gulf countries has affected the supply of fuel to India.

5) Indian Oil Corporation has announced that it will stop the supply of commercial cooking gas cylinders in Chennai.

6) Restaurants in Bengaluru have been announced to close from today due to cylinder shortage.

7) Balendra Shah will take charge as the new Prime Minister of Nepal.

Today in history…

1) Today is the day Alexander Graham Bell successfully made his first telephone call in 1876. The first sentence recorded on the phone was Mr. Watson, come here, I want to see you.

2) Today marks the death anniversary of India's first female teacher and social reformer Savitribai Phule in 1897.

3) Today marks the discovery of the famous Ring Nebula in space by French astronomer Charles Messier in 1779.

Sunday, 8 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.03.2026

1) இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் (யுபிஎஸ்சி) மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2) பட்டயக் கணக்காளர் (CA) இடைநிலைத் தேர்வில் மதுரையைச் சேர்ந்த லோகப்பிரியா தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

3) வட இந்தியாவில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. டெல்லியில் இன்று வெப்பநிலை 38°C வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

4) கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 91.60 ரூபாயாகச் சரிந்துள்ளது.

5) நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரிககாரின் 1934 இல் பிறந்த தினம் இன்று.

2) உலகப்புகழ் பெற்ற பார்பி பொம்மை 1959 இல் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தினம் இன்று.

3) உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் சாகிர் உசேன் 1951 இல் பிறந்த தினம் இன்று.


Education & GK News

1) Rajeshwari from Madurai's Vadipatti has set a record by securing second place at the All India level in the Indian Civil Services Examination (UPSC).

2) Lokapriya from Madurai has set a record by securing first place at the National level in the Chartered Accountant (CA) Intermediate Examination.

3) A heat wave has started in North India. The temperature in Delhi is expected to reach 38°C today.

4) The Indian rupee has depreciated to Rs 91.60 against the US dollar due to the rise in crude oil prices.

5) India has retained the T20 World Cup title by winning the final against New Zealand.

Today in history…

1) Yuri Gagarin, the first human to go into space, was born in 1934.

2) Today is the day the world famous Barbie doll was first introduced in 1959.

3) Today is the birthday of world renowned tabla player Ustad Sakir Hussain in 1951.

Saturday, 7 March 2026

செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய முடியுமா?

செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய முடியுமா?

கேட்பதற்கு எளிதாக இருந்தாலும், செவ்வாயில் விவசாயம் என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம்.

காரணம் அங்கே நிலம் கிடையாது. முழுக்க சிவப்பு கலர் மணல். பார்க்க அழகாக இருக்கும். அதில் செடி கிளம்புவது நம் பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்புவது போல. அப்படியே கிளப்பினாலும் அதில் பெர்குளோரேட் என்ற நச்சு இருக்கிறது. அந்த மண்ணில் விளைந்த தக்காளியைச் சாப்பிட்டால், அடுத்த நிமிடம் செவ்வாய் கிரகத்தைத் தாண்டி பரலோகம் போக வேண்டியிருக்கும்.

இதை எப்படியோ சமாளித்துவிட்டால், அப்புறம் தண்ணீர்?

நமது ஊர் காவிரித் தண்ணீர், தாமிரபரணித் தண்ணீர் போல பாய்வதற்கு அங்கே வாய்க்கால், வரப்புகள் எல்லாம் கிடையாது. எல்லாம் ஐஸ் கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. அதை உருக்கி, சுத்தம் செய்து, அப்புறம்தான் செடிக்கு ஊற்ற வேண்டும். அதுவும் தண்ணீரிலேயே எல்லா சத்துகளையும் கலந்து ஊற்ற வேண்டும். அதற்குப் பெயர் ஹைட்ரோபோனிக்ஸ். செவ்வாயில் அதுதான் எடுபடும்.

இதைச் சமாளித்து விட்டால், அடுத்து அங்கே வெயில் ரொம்ப கம்மி. மங்கலான பல்பை எரியவிட்டது போல இருக்கும். அதனால் குறைமாதக் குழந்தைகளை இன்குபேட்டரில் வைப்பதைப் போல வைத்து, ஸ்பெஷல் எல்இடி விளக்குகளை எரிய விட வேண்டும்.

இதையும் சமாளித்து விட்டால், வளிமண்டல ஓட்டையைச் சமாளிக்க வேண்டும். சூரியனின் கதிர்வீச்சு நேராக வந்து மண்டையைப் பிளக்கும். அதனால் விவசாயத்தை நிலத்தடியில் அல்லது தடிமனான கண்ணாடி அறைகளுக்குள் தான் செய்ய முடியும்.

மற்றபடி செவ்வாயில் 95 சதவீதம் கார்பன்-டை-ஆக்சைடுதான். தாவரங்களுக்கு இது ஜாலிதான், ஆனால் விவசாயம் பண்ண நினைக்கும் விவசாயிக்கு மூச்சுத் திணறிவிடும்.

இவ்வளவையும் சரி பண்ணினால் அங்கே என்ன விளையும் என்றால், உருளைக் கிழங்கு, தக்காளி, கீரை வகைகள்தான்.

பொன்னி அரிசியையும், துவரம் பருப்பையும் பேக் பண்ணிக் கொண்டு போனால், அங்கே விளைந்த அவற்றைச் சாம்பார் வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குப் பூமியிலேயே விவசாயம் செய்து இங்கேயே சாம்பார் வைத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்கிறீர்களா?

ஆக அங்கு விவசாயம் பண்ண முடியாது என்பதல்ல, பண்ணுவதற்கு இன்னும் சில பல வருடங்கள் ஆகும். ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மொத்தத்தில் மேலே நாம் சொன்ன அவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன செவ்வாயில் விவசாயம் செய்வதில். பூமியில் மட்டும் பிரச்சனைகளே இல்லையா, அதற்கு செவ்வாயில் விவசாயம் பண்ணப் புறப்படுவதே மேல் என்று அங்கு கிளம்பி விட்டால், அங்கும் நம் அரசியல்வாதிகள் வந்து உங்களை டிராக்டரோடும், கோவணத்தோடும் அங்குள்ள கிரகாளுமன்றத்தின் முன்னால் போராட விட்டாலும் விட்டு விடுவார்கள்.

*****

Friday, 6 March 2026

வெடிக்கின்ற எரிமலை மேல் தண்ணீர் ஊற்றினால் என்னவாகும்?

வெடிக்கின்ற எரிமலை மேல் தண்ணீர் ஊற்றினால் என்னவாகும்?

எரிமலை மேல், அதுவும் வெடிக்கின்ற எரிமலை மேல் தண்ணீர் ஊற்றுவது செல்லூராருக்குத் தோன்றியது போல பலே ஐடியா! ஆனால் நிஜம் எப்படி இருக்கும்?

வெடிக்கிற எரிமலை மேல் பத்து லாரி தண்ணீரை ஊற்றி அணைக்க நினைப்பது, கொழுந்து விட்டு எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவதற்குச் சமம். அப்படிச் செய்தால் ஊற்றுகிற தண்ணீர் வெடிகுண்டாக மாறும்.

தண்ணீர் நெருப்பை அணைக்கும். ஆனால் நெருப்பு வேறு, லாவா வேறு. எரிமலை வெடிக்கும் போது வெளியே வருவது லாவா. அது ஆயிரம் டிகிரி செல்சியஸ்க்கு மேல் நெருப்புக் குழம்பாக இருக்கும் பாறை. அதனால் அதன் மீது தண்ணீரை ஊற்றினால், அது சடார் என்று ஆவியாகும். அந்த ஆவிக்கு பயங்கரமான அழுத்தம் இருக்கும். அது எரிமலையை அணைக்காது, இன்னும் வேகமாக வெடிக்க வைக்கும், அதாவது ஒரு பிரஷர் குக்கர் வெடிக்கிற மாதிரி.

இங்கு என்ன அறிவியல் நடக்கிறது என்றால், ஒரு துளி தண்ணீர் நீராவியாக மாறும்போது அதன் கனஅளவு சுமார் 1,600 மடங்கு அதிகமாகும். இதனால் லாவாவின் மேல் பகுதி திடீரெனக் குளிர்ந்து இறுகும். ஆனால் உள்ளே இருக்கும் அழுத்தம் அந்தப் பாறையைத் துண்டு துண்டாகச் சிதறடிக்கும். இது பாறைச் சிதறல்களை வெடிகுண்டு போல நாலாபுறமும் சிதறச் செய்யும். சுருக்கமாகச் சொன்னால் இது ஹைட்ரோ எக்ஸ்புளோஷன். அதாகப்பட்டது, நீங்கள் ஊற்றும் தண்ணீர் ஒரு பெரிய வெடிகுண்டாக மாறி எரிமலையை இன்னும் மோசமாக வெடிக்கச் செய்யும்.

இதை இன்னும் உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், எரிமலை மேல் தண்ணி ஊற்றுவது என்பது, கொதிக்கின்ற தாளிப்புச் சட்டியில் ஒரு சொட்டுத் தண்ணீர் விழுந்தால் எப்படித் தெறிக்குமோ, அதனுடைய மெகா சைஸ் வெர்ஷனாக இருக்கும்.

அதனால் எரிமலை வெடிக்கின்ற போது அதன் மேல் தண்ணீர் ஊற்றுகின்ற தீப்பொறி திருமுகம் பாணி வேலைகள் இங்கு வேலைக்கு ஆகாது.

*****