Wednesday, 9 September 2026

பேய்களுக்கு டால்டா ஊற்றக் கூடாது!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 79

பேய்களுக்கு டால்டா ஊற்றக் கூடாது!

இரவு பதினொரு மணி.

மருதவனத்தில் இருந்த அந்தப் பேய் பங்களாவில் வழக்கத்திற்கு மாறாக ஒரே வெளிச்சம்.

கோவிந்த், தற்போது ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் மாதம் மூன்று லட்சம் சம்பாதிக்கும் பிசினஸ் மேக்னெட்டாக ஆகியிருந்தான்.

கூகுளில் ஹங்கிரி கோஸ்ட் பெஸ்டிவல் பற்றிப் படித்துவிட்டு, அவனுக்குள் இருந்த கிரியேட்டிவ் மூலையில் தீப்பற்றிக்கொண்டது.

"தமிழரசன்! சீனக்காரன், மெக்சிகோகாரன்லாம் பேய்க்குத் திருவிழா எடுக்கும்போது, நாம ஏண்டா எடுக்கக் கூடாது? தமிழ்நாட்டு ஸ்டைல்ல ஓர் ஆவி திருவிழா. செம கான்செப்ட்ல?"

"டேய், எவனாவது நான்தான் பேய் மாமன், பிசாசு மச்சான்னு வந்து நிப்பான், வேணாம்டா!" என்று பயந்தான் தமிழரசன்.

ஆனால் கோவிந்த் கேட்கவில்லை. வீட்டின் பின் தோட்டத்தில் பந்தல் போட்டான். வாழையிலை விரித்தான். ஆவிகளுக்குப் பிடித்த உணவுகள் என்று மெனு ரெடியானது. காரசார மசாலா தூக்கலாகக் காரசாரமான நாட்டுக்கோழி வறுவல், நல்லெண்ணெய் ஊற்றிய பொடி தோசை, ஒரு குவாட்டர் கட்டிங், இரண்டு பாக்கெட் சிகரெட், நான்கு கலயம் நிறைய கள், பீடி மற்றும் சுருட்டு தலா ஒரு பாக்கெட் என எல்லாம் தயாரானது.

"பேய்களுக்கு வழிகாட்ட சீனாவுல ஆத்துல விளக்கு மிதக்க விடுவாங்க. நாம நம்ம பங்களா குளத்துல காகிதக் கப்பல்ல மெழுகுவர்த்தி ஏத்தி மிதக்க விடுவோம்."  கோவிந்த் ரூல்ஸ் போட்டான்.

நள்ளிரவு 12:00 மணி.

"வாருங்கள் ஆவிகளே! வந்து அருந்துங்கள்!" என்று கோவிந்த் ஆவிகளின் ஸ்டைலில் குரல் கொடுத்துவிட்டு, லைட்டை அணைத்தான்.

பூசணிக்காயைக் குடைந்து லைட் போட்டு வைத்திருந்தார்கள்.

வளிமண்டலத்தில் ஒருவித சலசலப்பு.

திடீரென்று, அந்த இடத்தின் வெப்பநிலை பாதியாகக் குறைந்தது. ஏசி 16 இல் இருந்தால் கூட அவ்வளவு குளிராது.

குளத்தில் மிதந்த காகிதக் கப்பல்கள் திடீரென சுழன்று ஒரே இடத்தில் நின்றன.

இலை முன்னால் ஒரு நிழல் உருவம் தென்பட்டது. தமிழரசனுக்கு வியர்த்துக் கொட்டியது. கோவிந்த் தன் ஆன்ட்ராய்டு போனை எடுத்து லைவ் போட ரெடியானான்.

நிழல் உருவம் வாழையிலையின் முன்னால் உட்கார்ந்தது. சிகரெட் பாக்கெட்டை எடுத்தது. ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தது. தீப்பெட்டி இல்லாமல், அதனுடைய விரல் நுனியிலேயே நெருப்பு பற்றி சிகரெட் புகையத் தொடங்கியது!

"கோவிந்த்! அது நிஜ பேய்டா!" தமிழரசனின் குரல் நடுங்கியது.

அந்த உருவம் குவாட்டர் பாட்டிலைத் திறந்து, சோடா கூட ஊற்றாமல் ஒரே மூச்சில் அடியோடு குடித்தது. பிறகு நாட்டுக்கோழி வறுவலை எடுத்து மொறுமொறுவென்று மென்றது.

சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவாமலே தமிழரசனின் தோளைத் தொட்டது. பனிக்கட்டியை எடுத்து முதுகில் வைத்தது போல தமிழரசனுக்கு உடல் நடுங்கியது.

அந்த ஆவி, பேசத் தொடங்கியது. "தம்பிகளா! கான்செப்ட் நல்லாத்தான் இருக்கு. ஆனா, இந்த பொடி தோசையில நல்லெண்ணெய்க்கு பதிலா டால்டா ஊத்திருக்கீங்க. செத்த பிறகும் எனக்கு கொலஸ்ட்ரால் ஏத்தப் போறீங்களா?"

கோவிந்திற்குத் தொண்டை அடைத்தது. "நீங்க யாரு?"

"நான் 1980ல களப்பால் ரோட்டுடுல பைக் ஆக்சிடென்ட்ல மண்டையை உடைச்சுக்கிட்டு மண்டையைப் போட்ட மொக்கச்சாமி. வருஷ வருஷம் எங்க வீட்ல காராமணி சுண்டலும், பச்சைத் தண்ணியும்தான் வைப்பானுங்க. நீங்க கோழி வறுவலும் குவாட்டரும் வச்சிருக்கீங்கன்னு கூகுள் மேப் காட்டவே ஓடி வந்தேன்."

சொல்லிவிட்டு அந்த ஆவி நக்கலாகச் சிரித்தது. அந்தச் சிரிப்பு நாலா பக்கமும் எதிரொலித்தது.

"சரி, திருவிழான்னா படையல் மட்டும் போதாதே. ஆவி உங்க கூடவே கொஞ்ச நாள் இருக்கணும்ல? அதுதானே தமிழன் விருந்தோம்பல்!"

ஆவி மெல்ல கோவிந்தை நோக்கி நகரத் தொடங்கியது. அதன் கண்கள் ரத்தச் சிவப்பாக மாறியிருந்தன. பூசணிக்காயில் இருந்த மெழுகுவர்த்தி வெளிச்சம் திடீரென நீல நிறமாக மாறியது.

வெளியே பயங்கரமான காற்று வீச, பங்களாவின் கதவுகள் டப் டப் என அடித்துக் கொண்டன.

"டேய் கோவிந்த்! ஹாலோவீன், பூசணிக்காய்னு வெஸ்டர்ன் கல்ச்சர் பண்ணது போதும்டா. ஆவி வீட்டுக்குள்ளேயே செட்டில் ஆகப் போகுது, ஓடுடா!" என்று கத்தியபடி தமிழரசன் கேட்டை நோக்கி ஓடினான்.

கோவிந்த் தன் ஆன்ட்ராய்டு போனைக் கீழே போட்டுவிட்டு, வாழ்க்கையிலேயே அவ்வளவு வேகமாக ஓடியதே இல்லை எனும் அளவிற்கு வீட்டை விட்டு வெளியே ஓடினான்.

பின்னாலிருந்து மொக்கச்சாமி ஆவியின் உரத்த சிரிப்பு ஒலித்துக்கொண்டே இருந்தது: "அட இருங்கப்பா! ஸ்வீட் சாப்பிடாமலே போறீங்களே!"

அடுத்த நாள் காலை.

மருதவனம் பங்களா காலியாகக் கிடந்தது. வாசலில் ஒரு போர்டு தொங்கியது. ‘To Let  பேய்களுக்கு மட்டும் அனுமதி இல்லை!’

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.09.2026

1) தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அரசு முறை பயணமாக இன்று லண்டன் புறப்படுகிறார்.

2) சென்னை, பட்டினப்பாக்கத்தில் 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

3) பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு டில்லியில் நாளை மறுநாள் துவங்க உள்ளது.

4) தமிழகத்தில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்தது.

Education & GK News

1) Tamil Nadu Chief Minister S. Joseph Vijay is leaving for London today on an official visit.

2) A government order has been issued to construct a new Secretariat in Pattinapakkam, Chennai, at a cost of Rs. 1,200 crore.

3) The BRICS summit is set to begin in Delhi the day after tomorrow.

4) The Meteorological Department has stated that temperatures in Tamil Nadu will rise over the next four days.

5) The United States sank five Iranian oil tankers.

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 10

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 10

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

Tuesday, 8 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.09.2026





கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.09.2026

1) திருக்குறள் பன்மொழிச் செயலியை இன்று செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இன்று வெளியிடுகிறது.

2) மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6148 கன அடியாகக் குறைந்தது.

3) பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்தது.

4) இலங்கையில் நிலவும் வறட்சியால் அங்கு ஒருலட்சத்துக்கு மேற்பட்டோர் குடிநீர் தட்டுபாட்டால் பாதிக்கப்பட்டள்ளனர்.

5) ரஷ்யா உக்ரைன் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

Education & GK News

1) The Central Institute of Classical Tamil is launching the 'Thirukkural' multilingual app today.

2) Water inflow into the Mettur Dam has dropped to 6,148 cubic feet per second.

3) The number of people affected by the floods in Bihar has crossed 3.5 million.

4) More than 100,000 people in Sri Lanka are facing a drinking water shortage due to the prevailing drought.

5) Conflict has erupted once again between Russia and Ukraine.

பயத்தின் பேலன்ஸ் ஷீட்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 78

பயத்தின் பேலன்ஸ் ஷீட்

1974, நவம்பர் 13.

நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் உள்ள அமிட்டிவில் நகரம்.

இரவு 3:15 மணி.

112 பெருங்கடல் அவென்யூவில் உள்ள வீட்டில் ரொனால்ட் டிபேவோ ஜூனியர் என்ற 23 வயது இளைஞன், தூங்கிக் கொண்டிருந்த தன் தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் என குடும்பத்தில் உள்ள ஆறு பேரையுமே மார்லின் 35 ரைபிளால் சுட்டுப் படுகொலை செய்தான்.

போலீசிடம் அவன் சொன்ன காரணம், "என் காதுக்குள் கேட்ட ஏதோ ஒரு குரல்தான் என்னை இதைச் செய்யச் சொன்னது!"

வழக்கு முடிந்தது. அவன் சிறைக்குச் சென்றான். ஆனால் அமிட்டிவில் கதை அங்கே முடியவில்லை. அங்கேதான் நிஜமான பிசினஸ் தொடங்கியது.

1975 டிசம்பரில், ஜார்ஜ் லூட்ஸ் மற்றும் கேத்தி லூட்ஸ் தம்பதியினர் தங்கள் மூன்று குழந்தைகளுடன் அந்த வீட்டை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார்கள். படுகொலை நடந்த 13 மாதங்களுக்குப் பிறகு குடியேறியவர்கள், வெறும் 28 நாட்களில் அலறி அடித்துக் கொண்டு அரைகுறை ஆடையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

அவர்கள் சொன்ன அமானுஷ்யப் பட்டியல் நீளமானது. அவை என்னவென்றால், தினமும் அதிகாலை 3:15 மணிக்கு அதாவது, அந்தக் கொலை நடந்த நேரம் ஜார்ஜுக்குத் திடீரென விழிப்பு வரும். சுவர்களில் இருந்து பச்சை நிறத்தில் சேறு போன்று ஒழுகும். குளிர்காலத்திலும் வீட்டின் கதவு அருகில் ஈக்கள் மொய்க்கும். கேத்தி காற்றில் மிதந்தார்; அவரது உடலில் காயங்கள் தோன்றின.

உடனே மீடியாக்கள் மொய்த்தன. எட் மற்றும் லோரேன் வாரன் தம்பதியினர் அங்கே லேண்ட் ஆனார்கள். "இங்கே அமானுஷ்ய பிசாசுகள் இருக்கின்றன!" என்று சான்றிதழ் வேறு கொடுத்தார்கள்.

அமிட்டிவில் அமானுஷ்யத்தின் பின்னணியை உற்றுப் பார்த்தால், அங்கே அமானுஷ்ய சக்தி இல்லை; அங்கே இருந்தது டாலர்களின் பவர்.

பழைய டச்சு பாணி வீடான அதில், கடலோரக் காற்று வீசும்போது கதவுகளும் ஜன்னல்களும் 'டங் டங்' என அடிப்பது இயற்பியல் விதி. ஆனால் பயத்தில் இருந்த லூட்ஸ் குடும்பத்திற்கு அது பேயின் தட்டுதலாகத் தெரிந்தது.

பின்னாளில் வீட்டை ஆய்வு செய்த காவல் துறை அதிகாரிகள், அது கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்ட கசிவால் உண்டான பூஞ்சை என்று நிரூபித்தனர்.

படுகொலை நடந்த நேரம் பற்றிய பயம் மனதின் ஆழத்தில் இருந்ததால், சிர்காடியன் ரிதம் காரணமாக ஜார்ஜின் மூளை தினமும் அதே நேரத்திற்கு அவனுக்கு விழிப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இவ்வளவு உண்மைகளும் எப்போது வெளிவந்தன தெரியுமா?

கொலைகாரன் ரொனால்ட் டிபேவோவின் வழக்கறிஞர் வில்லியம் வெபர் நீதிமன்றத்திற்கு வெளியே உண்மையை உடைத்தா போதுதான்.

லூட்ஸ் தம்பதியினரும், வழக்கறிஞர் வெபரும் சேர்ந்து பல பாட்டில் ஒயின்களைக் குடித்துக்கொண்டே, கற்பனையாக உருவாக்கிய த்ரில்லர் கதைதான் இந்த அமிட்டிவில் பேய்!

அவர்கள் இதை உருவாக்கக் காரணம் என்ன என்கிறீர்களா?

ரொனால்ட் டிபேவோவை "மனநோயாளி, பேய் பிடித்தவன்" என்று நிரூபித்து தண்டனையிலிருந்து காப்பாற்ற வழக்கறிஞருக்கு ஒரு கதை தேவைப்பட்டது. லூட்ஸ் தம்பதியினருக்கு வீட்டை வாங்கிய கடனை அடைக்கப் பணம் தேவைப்பட்டது!

விளைவு?

'தி அமிட்டிவில் ஹாரர்' என்ற புத்தகம் மில்லியன் கணக்கில் விற்றது. படங்கள் வரிசையாக வந்து கோடிகளைக் குவித்தன.

அன்னபெல் பொம்மை, என்பீல்ட் போல்டர்கீஸ்ட் வரிசையில் அமிட்டிவில்லும் ஒரு மாபெரும் மார்க்கெட்டிங் ஜாலம். பிசினஸ் பிய்த்துக் கொண்டு போனது.

பயம் என்பது மனிதனின் மிக பலவீனமான உணர்ச்சி. அதைச் சரியாகப் பேக் செய்து விற்றால், கொலையாளியின் வீடு கூட கோடிகளில் லாபம் தரும் சுற்றுலாத் தலமாக மாறிவிடும் என்பதற்கு அமிட்டிவில் சரியான உதாரணம்!

சுருக்கமாகச் சொன்னால், அமிட்டிவில்லில் வாழ்ந்தது பேய் அல்ல; மனிதர்களின் பேராசை!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 9

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 9

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

Monday, 7 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 08.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 08.09.2026

1) மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2) கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

3) சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு இடைவெளி கிராமப்புறங்களுக்கும் 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

4) தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1356 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நேபாளத்தில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.

6) ரஷ்யா உக்ரைன் இடையே புதிய அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது.


Education & GK News

1) By-elections have been announced for the Maduranthakam and Dharapuram assembly constituencies on October 6.

2) The High Court has ordered that a circular be sent to all police stations regarding the procedures to be followed during arrests.

3) The booking interval for cooking gas cylinders has been reduced to 25 days for rural areas as well.

4) The Meteorological Department has stated that there is a possibility of rain in Tamil Nadu over the next two days.

5) The death toll from the floods in Nepal has risen to 1,356; a national day of mourning was observed in Nepal yesterday.

6) New peace talks between Russia and Ukraine are set to begin.