Tuesday, 7 July 2026

மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான மதிப்பூதிய விவரம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான மதிப்பூதிய விவரம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் குறித்த விவரத்தைக் கீழே காண்க.

*****

Monday, 6 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.07.2026

1) தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

2) திருவள்ளூர் மாவட்ட இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கசிந்த அமோனியா வாயு முழுமையாக சேகரித்து அகற்றப்பட்டுள்ளது.

3) தமிழகத்தில் சூலை 12 வரை மித மழைக்கு வாய்ப்புள்ளது.

4) மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு 13 பேர் பலியாகியுள்ளனர்.

5) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் போர் நிறுத்தம் தொடர்பாக 90 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.

Education & GK News

1) A key consultation regarding the appointment of Vice-Chancellors in Tamil Nadu universities was held under the leadership of Chief Minister C. Joseph Vijay.

2) Ammonia gas that had leaked from a shrimp processing plant in Tiruvallur district has been fully contained and removed.

3) There is a possibility of moderate rainfall in Tamil Nadu until July 12.

4) Thirteen people have lost their lives due to continuous heavy rains in Maharashtra.

5) US President Donald Trump and Russian President Vladimir Putin held a 90-minute telephone conversation regarding a ceasefire.

லாக் செய்யப்பட்ட அறையும் அன்லாக் ஆன ரகசியமும்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 13

லாக் செய்யப்பட்ட அறையும் அன்லாக் ஆன ரகசியமும்

அட்ரஸ் ஜெருசலேம்.

அங்கே ஒரு ரகசிய அறை.

கதவுகள் உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கின்றன.

உள்ளே இருந்த பதினோரு பேருக்கும் அடிவயிற்றில் பயம். காரணம், ரோம சாம்ராஜ்யத்தின் கெடுபிடி ஒருபுறம், தங்களின் போதகர் சிலுவையில் அறையப்பட்டுவிட்டார் என்கிற அதிர்ச்சி மறுபுறம்.

திடீரென்று பாப் அப் விண்டோ ஓப்பன் ஆவது போல, அறையின் நடுவே ஒரு உருவம்.

வேறு யார்?

இயேசுவேதான்.

அங்கே நிலவிய நிசப்தத்தில், சட்டென ஒரு மரண பயம் தொற்றிக்கொண்டது. யூதாஸின் காட்டிக்கொடுப்பு, சிலுவை மரணம் என அடுத்தடுத்த ஷாக்குகளில் இருந்த சீடர்களுக்கு, கதவு பூட்டிய அறைக்குள் திடீரென ஒருவர் பிரசன்னமானதும் மூளை ஹாலுசினேஷன் என்று கணக்குப்போட்டது.

இன்றைய தேதியில் ஒரு பேய் வந்தால் நாம் என்ன செய்வோம்? கேமராவைத் தூக்கிக்கொண்டு ரீல்ஸ் செய்ய ஓடுவோம். ஆனால், அன்று சீடர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

இயேசு நிலைமையை சட்டெனப் புரிந்துகொண்டார்.

அவர் ஒன்றும் சாதாரண போதகர் இல்லையே, மக்களின் மைண்ட் வாய்ஸை அப்படியே கேட்ச் செய்பவர்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவர் அங்கே எந்த ஆன்மீக தத்துவத்தையும் பேசவில்லை. மிக எளிய, நேரடி சயன்ஸ் தியரியைக் கையில் எடுத்தார்.

"ஏன் பயப்படுகிறீர்கள்? உங்கள் இதயத்தில் ஏன் இந்தச் சந்தேகம்? என் கைகளையும் கால்களையும் பாருங்கள். நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காண்கிறபடி, எனக்கு எலும்பும் சதையும் இருக்கிறது. ஒரு பேய்க்கு இப்படி இருக்குமா?"

இயேசு சீடர்களுக்குக் கொடுத்தது ஓர் ஓப்பன் சேலஞ்ச். "வந்து என் பிங்கர் பிரிண்ட்டைச் செக் பண்ணுங்கப்பா!" என்பது போல.

இருந்தாலும் சீடர்களின் முகத்தில் இன்னும் ஆப்டிகல் இல்யூஷன்தானோ என்கிற சந்தேகம் மிச்சமிருந்தது.

இயேசு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்.

"இங்கே சாப்பிட ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டார்.

அவர்கள் ஒரு துண்டு பொரித்த மீனையும், தேன்கூட்டையும் கொடுத்தார்கள். அதை அவர் வாங்கி அவர்கள் கண் முன்னாலேயே சாப்பிட்டார்.

இயேசு தன் உயிர்த்தெழுதலை நிரூபிக்க எந்தப் பெரிய அற்புதத்தையும் அங்கே செய்யவில்லை. மாறாக, மிக எளிமையான தொடுதல், உண்ணுதல் என்ற அன்றாட மனித இயல்புகள் மூலமாகவே தன் இருப்பை வெரிபை செய்தார்.

ஆனால், ஒரு கேள்வி மிச்சம் இருக்கிறது.

இறந்தவர் உயிர்த்தெழ முடியுமா?

சயன்ஸ்படி அதுமேஜிக் அல்லது மிராக்கிள்தான்.

அந்த மிராக்கிள்தான் சிவாஜி படத்தில் ரஜினி சிவாஜியாக செத்து எம்ஜிஆராக உயிர்த்து வருவதற்கான ட்விஸ்ட் வைப்பதற்கு உதவியிருக்க வேண்டும்.

*****

Sunday, 5 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.07.2026

1) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் சூலை 20 முதல் துவங்குகிறது.

2) ஹோர்முஸ் நீரிணையை 15 இந்திய உரக் கப்பல்கள் வெற்றிக்கரமாகக் கடந்தன.

3) மேற்காசிய போரால் ஏற்பட்ட திரவ எரிவாயு பிரச்சனை சீரடைந்ததைத் தொடர்ந்து விநியோகக் கட்டுபாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.

4) தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா மற்றும் மும்பையில் கனமழை பொழிந்து வருகிறது.

5) கனமழையின் காரணமாக மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

6) ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Education & GK News

1) The Monsoon Session of Parliament begins on July 20.

2) Fifteen Indian fertilizer ships successfully passed through the Strait of Hormuz.

3) The Central Government has lifted supply restrictions following the resolution of the liquefied gas issue caused by the conflict in West Asia.

4) Heavy rains are lashing Kerala and Mumbai as the Southwest Monsoon intensifies.

5) Air traffic in Mumbai has been disrupted due to heavy rains.

6) US President Donald Trump has stated that he wishes to bring the Russia-Ukraine war to an end.

கி.முவில் ஒரு ப்ளான்செட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 12

கி.முவில் ஒரு ப்ளான்செட்!

விஞ்ஞானத்துக்கும் அஞ்ஞானத்துக்கும் நடுவே ஒரு மெல்லிய கோடு எப்போதும் உண்டு. நமக்குத் தெரியாத, புரியாத விஷயங்களை அமானுஷ்யம் என்கிறோம். கொஞ்சம் லாஜிக் தெரிந்தால் சயன்ஸ் என்கிறோம்.

நள்ளிரவில் லைட்டை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நாணயம் அல்லது ஒரு மரப்பலகையை வைத்துக்கொண்டு, ஆவி இருக்கிறதா? இங்கே வா என்று ப்ளான்செட் விளையாடுகிறார்களே, இதற்கு ஒரு மிகப்பழைய, பைபிள்கால முப்பாட்டன் வரலாறு இருக்கிறது.

அட்ரஸ் எதுவென்றால், இஸ்ரவேல் நாடு.

காலம் என்று பார்த்தால், இன்றைக்கு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு.

சவுல் என்பவர். இஸ்ரவேலின் முதல் ராஜா. ஆள் உயரமானவர், அழகானவர், ஆரம்பத்தில் நல்லவர்தான். ஆனால், போகப்போக அதிகாரம் தலைக்கேறி, தன் இஷ்டத்துக்கு ஆடி, கடைசியில் மொத்த கிரேஸையும் இழந்துகொண்டிருந்தார்.

சவுல் மன்னனுக்கு ஒரு மிகப்பெரிய தலைவலி ஆரம்பமானது.

எதிரிகளான பெலிஸ்தியர்கள் பெரும் படையோடு போருக்கு வந்துவிட்டார்கள்.

சவுலுக்கு பயத்தில் கை, கால் நடுங்குகிறது. கடவுளிடம் கேட்கிறார், எந்தப் பதிலும் இல்லை. கனவிலும் பதில் இல்லை, தீர்க்கதரிசிகள் மூலமும் மெசேஜ் வரவில்லை. மொத்தத்தில், சவுல் அவுட் ஆப் கவரேஜ் ஏரியாவில் இருந்தார்.

வேறு வழியே இல்லாமல், சவுல் ஒரு விபரீதமான முடிவுக்கு வருகிறார். “இறந்துபோன தனது வழிகாட்டியான சாமுவேலைத் தொடர்புகொண்டு ஐடியா கேட்க வேண்டும்.”

ஆனால், ஒரு சிக்கல்.

சவுல் ராஜாவாக இருந்தபோது, நாட்டில் இருந்த ஆவி பிடிப்பவர்கள், மந்திரவாதிகள் எல்லாரையும் அடித்துத் துரத்தி, "இனிமேல் எவனாவது ஆவி, பேய் என்று சுற்றினால் மரண தண்டனை" என்று சட்டம் போட்டிருந்தார்.

இப்போது அவரே அந்தச் சட்டத்தை மீற வேண்டிய கட்டாயம்.

தன் ஊழியர்களிடம் ரகசியமாகக் கேட்கிறார்: "யாராவது ஆவி பிடிப்பவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா?"

ஊழியர்கள் மெதுவாகக் காதைக் கடித்தார்கள்.

"ஆமா மன்னா. எண்டோர் என்கிற ஊரில் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஆவிகளோடு பேசும் மீடியம் கலை தெரியும்."

சவுல் உடனே தன் ராஜ உடைகளைக் கழற்றிவிட்டு, சாதாரண மனிதனைப் போல வேடமிட்டு, நள்ளிரவில் இரண்டு ஆட்களுடன் கிளம்பினார்.

அன்றைய நள்ளிரவு அமானுஷ்யங்களுக்கு இதுவே ஆரம்பம்!

எண்டோர் ஊர் மந்திரவாதிப் பெண்ணின் வீடு. கதவு தட்டப்பட்டது.

சவுல் மாறுவேடத்தில் நின்று, "எனக்காக நீ ஒரு ஆவியை வரவழைக்க வேண்டும்" என்கிறார்.

அந்தப் பெண் பயந்துவிட்டாள். "யோவ், சவுல் ராஜா இந்த நாட்டில் ஆவி பிடிப்பவர்களைக் கொல்ல உத்தரவிட்டிருப்பது உனக்குத் தெரியாதா? என்னை ஏன் வம்பில் மாட்டிவிடுகிறாய்?" என்றாள்.

சவுல் அவளுக்குச் சத்தியம் செய்து தந்து, ஆவியை வரவழைக்கச் சொல்கிறார்.

"யாருடைய ஆவி வேண்டும்?"

"சாமுவேலின் ஆவி!"

அந்தப் பெண் தன் மந்திர தந்திர வேலைகளைத் தொடங்குகிறாள்.

இன்றைக்கு டேபிளில் விரலை வைத்துக்கொண்டு "ஆவியே வா" என்கிறார்களே, அதுதான் அன்றைய அவளது வித்தை.

திடீரென அந்தப் பெண் பயந்து அலறுகிறாள்!

ஏன்?

வந்திருப்பது சாதாரண ஆவி இல்லை; சாமுவேலின் கம்பீரமான தோற்றம்.

அதே சமயம், வந்திருப்பது சவுல் ராஜாதான் என்பதையும் அவள் கண்டுபிடித்துவிடுகிறாள்.

"ஏன் என்னை ஏமாற்றினாய்? நீதானே சவுல்!" என்று கத்துகிறாள்.

சவுல் தரையில் விழுந்து வணங்கி, "பெலிஸ்தியர் என்னை எதிர்க்கிறார்கள். கடவுள் என்னைவிட்டுப் போய்விட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதான் உங்களை வைத்துக் கூப்பிட்டேன்" என்கிறார்.

பூமிக்கு அடியில் இருந்து வந்த சாமுவேலின் ஆவி அல்லது குரல் என்ன சொன்னது தெரியுமா? எந்த ஒரு நல்ல ஆவியும் சொல்லும் க்ளிஷே பதில் தான், ஆனால் கொஞ்சம் காரமாக,

"கடவுளே உன்னைவிட்டு விலகி, உனக்கு எதிரியாகிவிட்ட பிறகு என்னிடம் ஏன் கேட்கிறாய்? நீ கடவுளின் பேச்சைக் கேட்கவில்லை. அதனால், நாளைக்கு நீயும் உன் மகன்களும் போரில் தோற்று, இறந்து, என்னோடு ஆவிகளின் உலகத்துக்கு வரப்போகிறீர்கள்!"

அவ்வளவுதான்! சவுல் அதிர்ச்சியில் அப்படியே தரையில் சுருண்டு விழுந்தார். பயத்திலும், அன்று முழுதும் சாப்பிடாத பசியிலும் ஆள் அப்படியே கிடந்தார்.

மறுநாள்.

சாமுவேல் சொன்னபடியே போரில் இஸ்ரவேல் தோற்றது, சவுலின் மகன்கள் இறந்தார்கள், சவுலும் தற்கொலை செய்துகொண்டார். கதை முடிந்தது.

இந்த எண்டோர் பெண் செய்தது நிஜமாகவே ஆவியை வரவழைத்ததா, அல்லது சவுலின் குற்ற உணர்ச்சியைப் பயன்படுத்தி அவள் செய்த வென்ட்ரிலோக்விசம்  மற்றும் மைண்ட் ரீடிங் தந்திரமா?

விஞ்ஞானிகள் இதை ஹாலுசினேஷன் அல்லது ஏமாற்று வேலை என்பார்கள். விசுவாசிகளோ அது கடவுளின் அனுமதி என்பார்கள்.

எது எப்படியோ, மனிதனுக்குத் தன் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளும் ஆசையும், மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்கிற பயமும் இருக்கும் வரை, அன்று எண்டோர் பாட்டி, இன்று பிளான்செட், நாளைக்கு ஏதோ ஒரு டிஜிட்டல் ஆவி ஏஐ செயலி என பிசினஸ் நடந்துகொண்டேதான் இருக்கும்!

*****

ஒரு கவிஞனின் கணக்கு வழக்கு

ஒரு கவிஞனின் கணக்கு வழக்கு

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.

முதல் வகை, பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு, தன் வீட்டின் கதவை ஜப்தி அதிகாரிகள் தட்டும் வரை காலம் மாறும் என்று காத்துக்கொண்டிருப்பவர்கள்.

இரண்டாம் வகை, அந்த ஜாமீன் கையெழுத்தை வாங்கிக்கொண்டு, நிம்மதியாகத் தூங்கச் செல்பவர்கள்.

கவியரசு கண்ணதாசன் இதில் முதல் வகையைச் சேர்ந்த பேராளுமை.

அவருடைய இதயம் எப்படிப்பட்டது என்றால், யாராவது வந்து கொஞ்சம் சென்டிமென்ட்டாகப் பேசினால் போதும், உடனே உருகிவிடும். உருகிய இதயம் கவிதையாக மாறினால் பரவாயில்லை; அது கடனுக்கான ஜாமீன் கையெழுத்தாக மாறும்போதுதான் பிரபஞ்சம் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்குகிறது.

பிறருக்காகக் கடன் பட்டு, அந்தக் கடனைத் தன் தோளில் சுமந்துகொண்டு, "அடுத்து என்ன செய்வது?" என்று அவர் சோகத்தின் விளிம்பில் நின்றபோதுதான், தமிழ் சினிமா பாவ மன்னிப்பு கேட்க அவருக்கு ஒரு வாய்ப்பளித்தது.

இயக்குநர் ஏ. பீம்சிங், கண்ணதாசனிடம் ஒரு விசித்திரமான சூழ்நிலையைக் கொடுத்தார்:

"ஹீரோ மகிழ்ச்சியையும் சோகத்தையும் கலந்து பாட வேண்டும்."

சினிமா ஹீரோவுக்கு மட்டுமாவது அது கலவையாக இருந்தது. ஆனால், நிஜ வாழ்க்கையில் கண்ணதாசனுக்கு அது சுத்தமான, கலப்படமில்லாத சோகமாக மட்டுமே இருந்தது.

காரணம், பாட்டு எழுதிக்கொண்டிருந்த அதே வினாடியில், கவிஞரின் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள்.

 ஒரு சராசரி மனிதனுக்கு வீடு ஜப்தியாகிறது என்றால் ரத்த அழுத்தம் ஏறும். ஆனால், ஒரு கவிஞனுக்கு வீடு ஜப்தியாகும்போது பல்லவி பிறக்கிறது.

அப்படிப் பிறந்ததுதான் அந்த வரிகள். "சிலர் சிரிப்பார்... சிலர் அழுவார்... நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்..."

வாழ்வின் ஆகப்பெரும் முரண் இதுதான். உலகம் உங்களைப் பார்த்துச் சிரிக்கும்போது, நீங்கள் உலகைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்; ஆனால் உள்ளுக்குள் அழுதுகொண்டிருக்க வேண்டும்.

கவிஞர் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் தத்துவமாக அடுத்த வரியை வைத்தார். "காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும்."

காலம் மாறியதோ இல்லையோ, அந்தப் பாட்டு தமிழ் சினிமாவின் காலத்தை மாற்றியது.

இந்தப் பாடலை எழுதி முடித்துவிட்டு, ஒரு சூறாவளியைப் போலக் கண்ணதாசன் பதற்றத்துடன் கிளம்பியபோது, அங்கிருந்த வித்வான்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

இசைக்கு மட்டுமன்றி, கவிஞனின் இதயத் துடிப்புக்கும் மெட்டமைக்கத் தெரிந்த எம்.எஸ். விஸ்வநாதன் மட்டும் காரை எடுத்துக்கொண்டு கவிஞரின் வீட்டுக்குப் பின்னாடியே ஓடினார்.

அங்கே கண்ட காட்சி. கவிஞரின் வீட்டு வாசலில் ஜப்தி அதிகாரிகள்.

"என்ன கவிஞரே! இப்படியொரு மரண சோகமான சூழ்நிலையிலா பாட்டு எழுத வந்தீர்கள்?" என்று எம்.எஸ்.வி கண்கள் பனிக்கக் கேட்டார்.

அதற்குக் கண்ணதாசன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில், மனித குலத்தின் ஆகச்சிறந்த சைக்கியாட்ரி தத்துவம்:

“கூட்டத்தில் இருக்கும்போது சிரிக்க வேண்டும்; தனிமையில் மட்டுமே அழ வேண்டும்.”

ஏனெனில், கூட்டத்தில் அழுதால் உலகம் அதை நடிப்பு என்று சொல்லும்.

தனிமையில் சிரித்தால், இந்த உலகம் உங்களை பைத்தியம் என்று முத்திரையிடும்.

மனிதன் என்பவன் ஒரு விசித்திரமான விலங்கு. அவன் தன் துக்கங்களை ஒளித்து வைக்கப் பழகிக்கொள்கிறான். ஏனென்றால், இந்தச் சமூகம் சோகத்தை ஒரு பலவீனமாகவும், தத்துவத்தை ஒரு பொழுதுபோக்காகவும் மட்டுமே பார்க்கிறது.

கண்ணதாசன் தன் சொந்த வீட்டின் கதவுகள் மூடப்படும் தருவாயில், ஒட்டுமொத்த மனித குலத்தின் மனக்கதவுகளையும் திறக்கக்கூடிய ஒரு தத்துவப் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

நாமும் இன்று காரிலோ, டூவீலரிலோ போகும்போது அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே, "என்ன வரிடா!" என்று சிலாகித்துவிட்டு, அடுத்த சிக்னலில் யாரிடமாவது சண்டை போடக் கிளம்பிவிடுகிறோம்.

வாழ்க்கை அப்படித்தான். சிலர் சிரிப்பார்கள், சிலர் அழுவார்கள். கவிஞர்கள் மட்டும்தான் இரண்டுக்கும் நடுவில் நின்று கவிதை எழுதுவார்கள்!

*****

Saturday, 4 July 2026

ஏதென்ஸ் நகரின் மிட்நைட் ஸ்பெஷல்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 11

ஏதென்ஸ் நகரின் மிட்நைட் ஸ்பெஷல்!

ஏதென்ஸ் நகரில் ஒரு பங்களா.

டார்க் வெப்பில் வரும் திகில் கதைகள் தோற்றுப்போகும் அளவுக்கு ஒரு மரணக் காம்பினேஷன்.

நடுராத்திரி.

கிறீச்... லொடலொட... என்று சங்கிலி இழுக்கும் சத்தம் கேட்கும்.

லோக்கல் ஏதென்ஸ்வாசிகள் பயந்து நடுங்கி, அந்தப் பக்கமே போவதை நிறுத்திவிட்டார்கள். ரியல் எஸ்டேட் மதிப்பு அதலபாதாளத்துக்குப் போய்விட்டது.

ஆனால், நம்ம தத்துவஞானி அதெனோடோரஸ் கொஞ்சம் வித்தியாசமான ஆள். "பேயாவது, பிசாசாவது... லாஜிக் இடிக்குதே!" என்று கையில் ஒரு விளக்கு, கொஞ்சம் எழுதுவதற்கான மெட்டிரியலுடன் அந்தப் பாழடைந்த வீட்டுக்குள் ஒற்றை ஆளாகக் குடியேறினார்.

மணி 12.00.

சுற்றுப்புறம் நிசப்தமாக இருந்தது. அதெனோடோரஸ் தனது தத்துவக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தார்.

திடீரென்று சத்தம்.

ஜல்... ஜல்... கரகர...

சத்தம் மெல்ல மெல்ல நெருங்கி, அவர் இருந்த அறைக்குள்ளேயே நுழைந்தது. நிமிர்ந்து பார்த்தார்.

அங்கே ஒரு கெஸ்ட்.

சாதாரண கெஸ்ட் இல்லை; சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒரு அக்மார்க் எலும்புக்கூடு!

நம்ம ஊர் ஆட்களாக இருந்தால் இந்நேரம் அலறி அடித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள். ஆனால் அதெனோடோரஸ் கூலாக, "ஒன் மினிட் பாஸ், இந்த சாப்டரை முடிச்சிட்டு வர்றேன்" என்பது போலச் சைகை காட்டிவிட்டுத் தொடர்ந்து எழுதினார்.

என்ன ஒரு நெஞ்சுரம்!

அந்த எலும்புக்கூடு கடுப்பாகி, தன் விரல்களால் சங்கிலியை ஆட்டி சத்தம் போட்டது. மெல்ல எழுந்து நின்ற தத்துவஞானி, விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு, "சரி, என்னதான் விஷயம்? லீட் பண்ணுங்க" என்றார்.

எலும்புக்கூடு முன்னால் நடக்க, அதெனோடோரஸ் பின்னால் போனார்.

வீட்டின் புழக்கடைத் தோட்டத்திற்குச் சென்ற அந்த உருவம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுவிட்டு திடீரென கற்பூரமாய் மறைந்தது.

பேய்கள் எங்கே மறைகிறதோ, அங்கே தான் க்ளைமாக்ஸுக்கான க்ளூ இருக்கும்!

அடுத்த நாள் காலை. அதெனோடோரஸ் சும்மா இருக்கவில்லை. லோக்கல் நகராட்சி ஆட்களைக் கூப்பிட்டு, அந்த இடத்தை தோண்டச் சொன்னார்.

அங்கே சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு மனித எலும்புக்கூடு இருந்தது!

யாரோ ஒரு துரதிர்ஷ்டசாலி, முறைப்படி அடக்கம் செய்யப்படாமல், சங்கிலியோடு புதைக்கப்பட்டிருக்கிறான்.

அவனது ஆன்மாதான் நோ அப்ஜெக்‌ஷன் சர்டிபிகேட் கிடைக்காமல் அலைந்துகொண்டிருந்தது.

அதெனோடோரஸ் உடனடியாக அந்த எலும்புகளுக்கு முறைப்படி செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடு செய்தார்.

மகாத்மாக்கள் முன்னிலையில் ஈமச்சடங்குகள் சுபமாக முடிந்தது.

அவ்வளவுதான்! அன்றோடு அந்த சங்கிலி சத்தமும் நின்றது,

எலும்புக்கூட்டின் விசிட்டிங்கும் நின்றது.

ஆன்மாவுக்கு மோட்சம் கிடைத்து, பேய் நிரந்தரமாக ஏதென்ஸை விட்டு எஸ்கேப்!

ஆசை, கோபம், அல்லது அநீதி என ஏதோ ஓர் அன்பினிஷ்ட் பிசினஸ்தான் மனிதனைப் பேயாக அலைக்கழிக்கிறது. அதைச் சரிசெய்துவிட்டால், பேயும் டாட்டா காட்டிவிட்டு கிளம்பிவிடும் போலிருக்கிறது.

*****