Thursday, 2 April 2026

புதிய நிதியாண்டில் அரங்கேறும் புதிய விதிகள்!

புதிய நிதியாண்டில் அரங்கேறும் புதிய விதிகள்!

தவிர்க்க வேண்டியதும், கவனிக்க வேண்டியதும்!

2025 – 2026 புதிய நிதியாண்டிலிருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாகிறது மற்றும் சில புதிய நிதி சார்ந்த விதிகளும் அமலாகின்றன. இவை பெரும்பாலும் ரொக்க பரிமாற்றத்தைக் குறைப்பதாக உள்ளன. இவற்றைப் பின்பற்றுவதும், கடைபிடிப்பதும் அபராதம் மற்றும் தேவையற்ற பணப் பிடித்தங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். அப்படிப்பட்ட 15 விதி சார்ந்த நெறிமுறைகளை இங்கு காண்போம்.

1. தனிப்பட்ட கடன்களில் 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் கூடாது

உறவினர்களிடமோ அல்லது வேறு நபர்களிடமோ 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கடன் வாங்கவோ அல்லது வாங்கிய கடனை ரொக்கமாகத் திருப்பிச் செலுத்தவோ கூடாது (Sec 269SS & 269T). மீறினால், எவ்வளவு தொகை ரொக்கமாகப் பரிமாறப்பட்டதோ அதே அளவு 100% அபராதம் விதிக்கப்படும்.

2. கூட்டுறவுச் சங்க பரிவர்த்தனைகளுக்கும் ரொக்க கட்டுபாடு

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளோர், இந்தச் சங்கங்களில் இருந்து 20,000 ரூபாய்க்கு மேல் கடனை ரொக்கமாகப் பெறுவதோ அல்லது திரும்பச் செலுத்துவதோ கூடாது. இதுவும் வருமான வரித்துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டதே.

3. இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் எந்தவொரு ரொக்கப் பரிவர்த்தனையும் கூடாது

நிலம், நகை வாங்குதல், மருத்துவமனை செலவுகள் அல்லது சுபநிகழ்ச்சி என எந்தவொரு நிகழ்வுக்கும் ஒரு நாளில் ஒரு நபரிடமிருந்து 2 லட்ச ரூபாய்கு மேல் ரொக்கமாகப் பெறவோ, கொடுக்கவோ கூடாது (Sec 269ST). மீறினால் 100% அபராதம் விதிக்கப்படும்.

4. குழந்தைகளின் கல்லூரி / கல்விக் கட்டணம்

உங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காகக் கல்லூரிகளில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கட்டணம் செலுத்த வேண்டாம். கல்வி நிறுவனங்கள் தாங்கள் பெறும் பெரிய ரொக்கத் தொகைகளை SFT மூலமாக வருமான வரித்துறைக்கு நேரடியாகத் தெரிவித்து விடுவார்கள்.

5. வங்கியில் பணம் செலுத்துவதற்கான வரம்பு

ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணம் செலுத்தினால், அது தானாகவே வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டு விடும். ரொக்கமாக 10 லட்ச ரூபாய்க்கு மேல் FD அல்லது அஞ்சலகத் திட்டங்களில் முதலீடு செய்தாலும் IT கண்காணிப்பிற்கு உள்ளாகும்.

6. வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு

வங்கியில் இருந்து அதிகப்படியான ரொக்கப் பணம் எடுப்பதைத் தவிர்க்கவும் (Sec 194N). கடந்த 3 ஆண்டுகளாக ITR தாக்கல் செய்யாதவர் என்றால், ஒரு நிதியாண்டில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2% TDS பிடிக்கப்படும். சரியாக ITR தாக்கல் செய்பவராக இருந்தால், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எடுத்தால் 2% TDS பிடிக்கப்படும்.

7. கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்

ஒரு நிதியாண்டில் உங்களின் கிரெடிட் கார்டு பில்லுக்காக ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வங்கியில் செலுத்தினால், அது வருமான வரித்துறையின் AIS பதிவேட்டில் வந்துவிடும். பில்களை Netbanking / UPI மூலமே செலுத்தவும்.

8. வரி விலக்கு கோரும் முதலீடுகள் (80G & 80D)

அறக்கட்டளைகளுக்கு 2,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை அளித்தால், வருமான வரியில் விலக்கு கிடைக்காது. காப்பீட்டுப் பிரீமியத்தை ரொக்கமாகச் செலுத்தினால் வரி விலக்கு கோர முடியாது.

9. சொத்து மற்றும் Mutual Funds (AIS கண்காணிப்பு)

AIS (Annual Information Statement) மூலம் உங்களின் பெரிய பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன. 30 லட்ச ரூபாய்க்கு மேல் அசையாச் சொத்துக்கள் (நிலம்/வீடு) வாங்கினாலோ அல்லது விற்றாலோ பதிவேட்டில் வந்துவிடும். ஒரு நிதியாண்டில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் கண்காணிப்பிற்குச் செல்லும்.

10. பழைய வாகனங்கள் வாங்குதல் / விற்றல்

பழைய கார்களை வாங்கும்போது அல்லது விற்கும்போது 2 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பரிமாற்றம் செய்யக்கூடாது. இதுவும் Sec 269ST விதியின் கீழ் 100% அபராதத்திற்கு வழிவகுக்கும்.

11. போலி வாடகை ரசீதுகள் வேண்டாம்

வருமான வரி விலக்கு பெறுவதற்காகப் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் பெயரில் போலி வாடகை ரசீதுகளைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்கவும். வாடகையை ரொக்கமாகக் கொடுக்காமல் வங்கிப் பரிமாற்றம் மூலமாகவே வீட்டின் உரிமையாளருக்குச் செலுத்த வேண்டும். ஆண்டு வாடகை ஒரு லட்ச ரூபாயைத் தாண்டினால் வீட்டின் உரிமையாளரின் PAN எண் கட்டாயம். இதில் முரண்பாடு இருந்தால் IT நோட்டீஸ் வரும்.

12. Form 16 ஐ மட்டும் நம்பி ITR தாக்கல் செய்யக் கூடாது

படிவம் 16 உங்கள் சம்பள விவரங்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால், நீங்கள் வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி மற்றும் FD வட்டி ஆகியவற்றையும் உங்கள் ITR இல் கணக்கில் காட்ட வேண்டும். இவற்றை மறைத்துவிட்டு Form 16ஐ மட்டும் வைத்து ITR தாக்கல் செய்தால், Defective Return நோட்டீஸ் அனுப்பப்படும்.

13. விடைத்தாள் திருத்தும் பணி & இதர வருமானங்கள்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, தேர்தல் பணி அல்லது வேறு ஏதேனும் பகுதிநேர வேலைகள் மூலம் கிடைக்கும் மதிப்பூதியம் முழுவதும் வரிக்கு உட்பட்டதே. இந்தத் தொகைகள் அரசுத் துறைகள் மூலமாகவே உங்கள் கணக்கிற்கு வருவதால், இவை நேரடியாக AIS இல் பதிவாகிவிடும். எனவே, ITR இல் Other Income பிரிவில் இதைக் காட்டத் தவறாதீர்கள்.

14. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்கள்

விடுமுறை நாட்களில் வெளிநாட்டுச் சுற்றுலா செல்பவர்கள், அதற்கான கட்டணத்தை ரொக்கமாக செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் ஒரு லட்சத்தைத் தாண்டினால், TCS (Tax Collected at Source) விதிகளின்படி அது வருமான வரித்துறையின் நேரடிக் கண்காணிப்பிற்குச் சென்றுவிடும்.

15. PAN, ஆதார் மற்றும் SR இல் பெயர் முரண்பாடு

உங்கள் PAN கார்டு, ஆதார் கார்டு மற்றும் பணிப்பதிவேடு (Service Register - SR) ஆகிய மூன்றிலும் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதில் எழுத்துப் பிழைகளோ அல்லது மாறுபாடுகளோ இருந்தால், உங்களுக்கு வர வேண்டிய வருமான வரி ரீஃபண்ட் கிடைக்காமல் முடங்கிவிடும்.

மேற்படி நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது இனி வரும் காலத்திற்கு அவசியமான அவசியமாகும். இயன்ற வரை ரொக்கப் பரிமாற்றத்தைத் தவிர்த்து இணைய வழி, காசோலை வழி, யுபிஐ வழி மற்றும் இதர டிஜிட்டல் வழியிலான பரிமாற்றங்களைச் செய்வது நலம் பயக்கும்.

*****

Wednesday, 1 April 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.04.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.04.2026

இன்று சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்.

1) தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் ஏப்ரல் 20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம்.

2) வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 195.50 உயர்த்தப்பட்டுள்ளது.

3) ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே நிரந்தர தலைநகரம் அமராவதி என்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

4) ஈரானின் கடற்படை மற்றும் ஏவுகணைத் திறனை முழுமையாக முடக்கும் வகையில் ஆபரேஷன் எபிக் பியூரி என்ற பெயரில் அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

5) அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் ஆப்பிள், கூகுள், மெட்டா போன்ற 18 முக்கிய அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைப்போம் என ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.

6) 2026 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.3% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

7) தமிழகத்தின் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) இன்று உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்.

2) 1805 இல் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் பிறந்த தினம் இன்று. இவரது பிறந்த தினமே சர்வதேச குழந்தைகள் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3) தந்தியைக் கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் 1872 இல் மறைந்த தினம் இன்று.

Education & GK News

Today is International Children's Book Day.

1) Applications for admission under the 25% reservation quota in private schools can be submitted from April 20 to May 18.

2) The price of commercial LPG cylinders has been hiked by Rs. 195.50.

3) A bill designating Amaravati as the sole permanent capital of Andhra Pradesh has been passed in Parliament.

4) The United States is continuing its attacks—under the codename 'Operation Epic Fury'—with the aim of completely neutralizing Iran's naval and missile capabilities.

5) Iran's Revolutionary Guard Corps has warned that if the United States does not cease its attacks, they will target 18 major American technology companies, including Apple, Google, and Meta.

6) The International Monetary Fund (IMF) has projected that global economic growth will stand at 3.3% in 2026.

7) The Meteorological Department has stated that temperatures in Tamil Nadu are likely to rise by 2 to 3 degrees Celsius above normal levels.

Today in History…

1) Today is World Autism Awareness Day.

2) Today marks the birth anniversary of Hans Christian Andersen, who was born in 1805. It is noteworthy that his birthday is celebrated as International Children's Book Day.

3) Today marks the death anniversary of Samuel Morse, the inventor of the telegraph, who passed away in 1872.

Tuesday, 31 March 2026

தபால் ஓட்டைப் போடுவது எப்படி?

அஞ்சல் வாக்கை செலுத்தும் முறை

2026 ஏப்ரல், 23 இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கைச் செலுத்தும் முறை குறித்து இங்கு காண்போம்.

சட்டமன்றத் தொகுதி உள்ள மாவட்டத்தில் பணியாற்றுவோருக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பிலேயே அஞ்சல் வாக்குச் சீட்டு கிடைக்கும். கிடைக்கப் பெறாதவர்களுக்கும், வெளிமாவட்டத்தினருக்கும் அதன்பிறகு ஒரு சில நாளில் அஞ்சல் வழியே வந்து சேர்ந்துவிடும்.

அஞ்சல் வாக்களிக்கத் தரப்படும் காக்கி உறையில் என்னென்ன இருக்கும்?

எப்படி நிரப்புவது?

எங்கே சமர்ப்பிப்பது? என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அஞ்சல் வாக்கில் வழங்கப்படும் காக்கி உறையின் உள்ளே,

1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A)

2. வாக்குச் சீட்டு

3. இரண்டு உறைகள் (A Cover & B Cover)

4. வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) உள்ளிட்டவை இருக்கும்.

வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) படிவத்தைத் தனியே எடுத்து உங்கள் வசமே வைத்துக் கொள்ளுங்கள். இதை உறையில் வைத்து அனுப்பத்தேவையில்லை.

1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A) :

வாக்காளராகிய நீங்கள் கொடுக்க வேண்டிய உறுதிமொழிப்படிவம் இரு பக்கங்களில் இருக்கும். இதில் முன்பக்கம் மட்டும் நிரப்பினால் போதும். கையொப்பமிடத் தெரியாத / இயலாதவர்களுக்குத் தான் பின் பக்கம்.

உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட வேண்டிய தொடர் எண் என்பது, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் வரிசை எண். இந்த எண் வாக்குச் சீட்டின் பின்புறம் / மேல் பகுதியில் அச்சிடப்பட்டிருக்கும்.

உறுதிமொழிப் படிவத்தின் மேல்பகுதியில் இடும் உங்களின் கையொப்பமும், வெளி உறையில் (B cover) இடும் கையொப்பமும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உறுதிமொழிப் படிவத்தின் கீழ்ப் பகுதியில் A / B grade அலுவலர்களிடம் சான்றொப்பம் பெறப்பட வேண்டும். பெரும்பாலும் பயிற்சி மையத்திலேயே இதில் சான்றொப்பமிட வட்டாட்சியர்கள் தயார்நிலையில் இருப்பர்.

வெளியிடங்களில் பெற வேண்டுமெனில் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், அரசு மருத்துவர் உள்ளிட்டோரிடம் சான்றொப்பம் பெறுவது சிறந்தது. எளியதும் கூட.

சான்றோப்பத்துடன் சார்ந்த அலுவலரின் Seal ஐயும் பெற மறவாதீர்.

2. வாக்குச் சீட்டு :

தங்களது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் அடங்கிய வாக்குச் சீட்டில் தாங்கள் விரும்பும் கட்சியின் வேட்பாளரது சின்னத்தில் Ball Point பேனாவில் Tick அடித்து, முன்னர் மடிக்கப்பட்டபடியே மடிக்கவும்.

ஏதேனுமொரு சின்னத்தில் நீங்கள் அடிக்கும் டிக்கைத் தவிர்த்து, வேறு எந்தவிதக் குறியீடோ, கையொப்பமோ வாக்குச்சீட்டில் இடப்படக் கூடாது. அவ்வாறு வேறு அநாவசியக் குறிகள் இடம் பெறின் அவ்வாக்குச்சீட்டு செல்லாத வாக்காகி விடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

3. உறை A :

A உறையின்மேல் FORM 13B என்ற தலைப்பிட்டு சில விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

வாக்குச் சீட்டின் வரிசை எண்ணை A உறையின்மேல் உரிய இடத்தில் எழுதவும்.

அதன்பின், டிக் அடித்து மடித்து வைத்திருக்கும் வாக்குச் சீட்டினை A உறையினுள் வைத்து உறையை ஒட்டிவிடவும்.

4. உறை B :

B உறையின்மேல் FORM 13C என்ற தலைப்பிட்டு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுலர் முகவரி உள்ளிட்ட  விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

B உறையின்மேல் இடது புறத்தில் தங்களது கையொப்பத்தை இட வேண்டும். இக்கையொப்பம் முன்னர் உறுதிமொழிப் படிவத்தில் இடப்பட்ட தங்களது கையொப்பத்தை ஒத்திருப்பது அவசியம்.

இதன்பின் பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிப் படிவம் மற்றும் வாக்குச் சீட்டு வைத்து ஒட்டப்பட்ட உறை A ஆகிய இரண்டையும் B உறையின் உள்ளே வைத்து உறையை ஒட்டிவிட வேண்டும்.

இப்போது உங்களது அஞ்சல் வாக்கு தயார்.

இனி, இந்த B உறையை பயிற்சி மையம் / தங்களது தொகுதிக்கான துணை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Taluk Office) / தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Collector Office) உள்ளிட்ட இடங்களில் உள்ள அஞ்சல் வாக்கிற்கான பெட்டிகளில் போட்டுவிடலாம்.

மேற்படி இடங்களுக்கு நேரில் செல்ல இயலவில்லை எனில், அருகிலுள்ள அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டால், அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமே கொண்டு சேர்த்துவிடும். இதற்கென Stamp ஏதும் ஒட்டத் தேவையில்லை.

நீங்கள் அனுப்பும் அஞ்சல் வாக்கு பூர்த்தி செய்யப்பட்ட உறை, 2026, மே 4 அன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் தங்களது தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை அடைந்திருக்க வேண்டும். இதற்கு ஒரு மாத கால அவகாசமிருப்பினும் அஞ்சல் ஓட்டு உங்கள் கையில் கிடைத்து உடன் உங்கள் வாக்களிக்கும் கடமையை முடித்து உரிய வகையில் சென்று சேர்த்துவிடுவது நலம்.

உங்கள் வாக்கு! உங்கள் உரிமை!

உங்கள் அஞ்சல் வாக்கை நன்முறையில் செலுத்த வாழ்த்துகள்!

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.04.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.04.2026

1) இன்று முதல் தமிழகத்தின் 60 சுங்கச் சாவடிகளில் கட்டணம் 5 சதவீதம் உயர்கிறது.

2) இன்று முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலாகிறது.

3) Form 16 மற்றும் Form 16A ஆகியவை இனி முறையே Form 130 மற்றும் Form 131 என மாற்றப்படுகின்றன.

4) மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் இன்று தொடங்குகின்றன.

5) இன்று முதல் பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் அட்டையை மட்டும் பிறந்த தேதி சான்றாகப் பயன்படுத்த முடியாது. பத்தாம் வகுப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

6) அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகள் இன்னும் 2 முதல் 3 வாரங்களில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

7) இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் பயங்கரவாத ஆட்சியை முழுமையாக ஒடுக்கும் வரை இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.

வரலாற்றில் இன்று…

1) 1935 இல் இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட தினம் இன்று.

2) 1949 இல் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் இன்று.

3) 1973 இல் புராஜெக்ட் டைகர் எனும் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

4) 1976 இல் ஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

5) 2004 இல் கூகுள் நிறுவனம் ஜிமெயிலை அறிமுகம் செய்த தினம் இன்று.


Education & GK News

1) Effective today, toll charges at 60 toll plazas across Tamil Nadu will increase by 5 percent.

2) A new Income Tax Act comes into force starting today.

3) Forms 16 and 16A have now been redesignated as Forms 130 and 131, respectively.

4) The first phase of the population census operations begins today.

5) From today onwards, an Aadhaar card alone can no longer be used as proof of date of birth when applying for a PAN card; a Class 10 certificate or a passport has been made mandatory.

6) US President Donald Trump has stated that the ongoing military operations in Iran will come to an end within the next 2 to 3 weeks.

7) Israeli Prime Minister Benjamin Netanyahu has declared that Israel's attacks will continue until Iran's terrorist regime is completely dismantled.

Today in History…

1) Today marks the day the Reserve Bank of India was established in 1935.

2) Today marks the day the NATO alliance was formed in 1949.

3) Today marks the day 'Project Tiger'—a tiger conservation initiative—was launched in 1973.

4) Today marks the day Apple Inc. was founded in 1976.

5) Today marks the day Google introduced Gmail in 2004.

Monday, 30 March 2026

அரோரா என்றால் என்ன? - வானில் ஒரு மேஜிக் ஷோ!

வானத்தில் ஒரு மேஜிக் ஷோ!

ஜனவரி மாதம், சுவிட்சர்லாந்து அல்லது ரஷ்யாவின் எல்லையில் நின்று ராத்திரி வானத்தைப் பார்த்தீர்கள் என்றால், திடீர் என்று ஓர் அதிசயம் நடக்கும். வானமே ஒரு பெரிய கலர் டிவியாக மாறி விடும். பச்சை, சிவப்பு, ஊதா என்று விதவிதமான வர்ணங்கள் வானத்தில் திரை மாதிரி ஆடும். இதைப் பார்த்தால் யாருக்குமே ஒரு நிமிஷம் மூச்சு நின்று விடும். இதுக்குத்தான் அரோரா என்று பெயர்.

வட துருவத்தில் தெரிந்தால் அது அரோரா போரியாலிஸ், தென் துருவத்தில் தெரிந்தால் அது அரோரா ஆஸ்ட்ராலிஸ்.

இப்போது நமக்கு இதெல்லாம் அயனைசேஷன், மேக்னட்டோஸ்பியர் என்று அறிவியலாகத் தெரிகிறது. ஆனால், முன்னாடி இருந்தவர்களுக்கு?

அவர்கள் இது நம் முன்னோர்களின் ஆன்மா என்று நம்பினார்கள்.  அதற்கு மரியாதை தர வேண்டும் என்று அந்த வெளிச்சம் வரும்போது விசிலடிக்க மாட்டார்கள், கையைக் காட்டிச் சுட்டிக்காட்ட மாட்டார்கள். அவ்வளவு பவ்யம், அவ்வளவு மரியாதை.

மாவோரி மக்கள் இதைப் பார்த்த போது இதை அவர்கள் முன்னோர்கள் போட்ட கேம்ப் ஃபயர் என்று நினைத்தார்கள்.

ஆஸ்திரேலிய பழங்குடியினர் பயந்தே விட்டார்கள். ஏதோ வானத்தில் காட்டுத்தீ பிடித்து விட்டது, இது அழிவுக்கான அறிகுறி என்று நடுங்கியிருக்கிறார்கள்.

1619 இல் கலீலியோ இதற்கு அரோரா போரியாலிஸ் என்று நாமகரணம் செய்து வைத்தார். அரோரா என்றால், ரோமானிய விடியல் தேவதை. போரியஸ் என்றால், கிரேக்க வட பகுதி தேவன். அவர் என்ன நினைத்ததார் என்றால், சூரிய ஒளி அட்மாஸ்பியரில் பட்டு எதிரொளிக்கிறது என்றார். ஆனால் அது தவறு.

அப்புறம் பெஞ்சமின் பிராங்க்ளின், இதெல்லாம் மின்சாரம் தொடர்பானது என்றார்.  மேக்னடிக் போலில் சார்ஜ் அதிகமானால் இப்படித் திரையாகத் தெரியும் என்று ஒரு தியரியைப் போட்டு ஓரளவுக்கு உண்மைக்குப் பக்கத்தில் வந்தார்.

நிஜமான காரணம் தெரிந்தது 1851இல். எட்வர்ட் சாபி என்வர், சூரிய புள்ளிகளுக்கும் இந்த அரோராவுக்கும் ஒரு லிங்க் இருப்பதைக் கண்டறிந்தார். சூரியன் எங்கேயோ இருக்கிறது. அது எப்படி இங்கே இருக்கின்ற காற்றை வெளிச்சமாக்குகிறது என்று மற்றவர்கள் கிண்டலடித்தார்கள்.

ஆனால் 1859 இல் ஒரு சம்பவம் நடந்தது. கேரிங்டன் ஈவென்ட் அன்றைக்கு டெலிகிராப் ஒயர்கள் எல்லாம் பயங்கரமாகச் சூடாகி, ஆபரேட்டர்களுக்கு ஷாக் அடித்தது. பேட்டரி இல்லாமலேயே மெசேஜ் போனது. வானமே ரத்தச் சிவப்பாக மின்னியது. அப்போதுதான் தெரிந்தது, சூரியன் சும்மா இருப்பதில்லை, அது ஏதோ துகள்களை பூமிக்கு மேல வீசி எறிகிறது என்று.

எப்படி நடக்கிறது இந்த மேஜிக் என்றால், சூரியன் ஒரு பெரிய பிளாஸ்மா உருண்டை. அதில் இருந்து எப்போதும் புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் விண்வெளியில் தெறித்து விழும். விழும். இதற்கு சூரியக் காற்று என்று பெயர்.

பூமிக்கு ஒரு மேக்னடிக் கவசம் இருக்கிறது. அந்தக் கவசம் இந்த சூரியக் காற்றை அப்படியே வளைத்து வட துருவத்துக்கும் தென் துருவத்துக்கும் கொண்டு போய் விடும். அங்கே இருக்கின்ற ஆக்சிஜன், நைட்ரஜன் அணுக்கள் மேல் இந்த துகள்கள் மோதும்போது, அந்த அணுக்கள் எனர்ஜி ஆகிப் பிரகாசிக்கும்.

ஆக்சிஜன் மேல் மோதினால், பச்சை அல்லது சிவப்பு கலர்.

நைட்ரஜன் மேல் மோதினால், நீலம் அல்லது ஊதா கலர்.

சூரியன் இப்போது தன்னுடைய சோலார் மேக்ஸிமம் கட்டத்தில் உள்ளது. அதாவது ரொம்ப ஆக்டிவாக இருக்கிறது. அதனால் இப்போது இந்த் மார்ச், ஏப்ரல் மாதத்தில் அரோரா பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வானத்தில் வெறும் கலர் மட்டும் இல்லாமல், இப்போ புதிதாக ஸ்டீவ் என்று ஓர்  ஊதா கலர் கோடும், புரோட்டான் பான்கேக் என்று சில சிவப்பு வடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இது வெறும் அறிவியல் மட்டும் இல்லை, பிரபஞ்சத்துக்கும் நமக்கும் இருக்குற ஒரு மர்மமான பந்தம். ஒருவேளை நீங்கள் ஐஸ்லாந்து பக்கமோ அல்லது அலாஸ்கா பக்கமோ போனால், அந்த ராத்திரி மேஜிக்கைப் பார்க்கலாம். ஆனால் அங்கே போவதற்கு ஒரு பிளைட் டிக்கெட் தேவைப்படும்! எடுத்து விட்டீர்கள் என்றால் பார்த்து விடலாம். அவ்வளவுதான் விசயம்.

*****

Sunday, 29 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.03.2026

1) தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 17 முதல் தொடங்குகிறது.

2) வரும் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு சூன் 4 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

3) புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

4) தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 11 மணியிலிருந்து துவங்குகிறது. ஏப்ரல் 6 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

5) பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு 10 ரூபாய் குறைத்துள்ளது.

6) ரிலையன்ஸ், நயாரா போன்ற தனியார் நிறுவன பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

7) வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களிடமும் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

8) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நோ கிங்க்ஸ் என்ற முழக்கத்தோடு போராடத் தொடங்கியுள்ளனர்.

9) ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நடவடிக்கைகளுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

10) வளைகுடா போர் காரணமாக ஈரானின் பணவீக்கம் 50.6 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் இன்று…

1) 1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராக மகாத்மா காந்தி அழைப்பு விடுத்த தினம் இன்று.

2) புகழ்பெற்ற டச்சு ஓவியர் வான்கா 1853 இல் பிறந்த தினம் இன்று.

3) மயக்க மருந்தைப் பயன்படுத்தி உலகின் முதல் அறுவை சிகிச்சை கிராபோர்ட் லாங் என்பவரால் அமெரிக்காவில் 1842 இல் நடந்த தினம் இன்று.




Education & GK News

1) Summer vacation for schools in Tamil Nadu begins on April 17.

2) It has been announced that schools for the upcoming academic year will reopen on June 4.

3) The renowned Tiruvarur Aazhi Therottam (Chariot Festival) took place yesterday; thousands of devotees participated, holding the ropes and pulling the chariot.

4) The filing of nominations for the Tamil Nadu Legislative Assembly elections begins today at 11:00 AM. Nominations may be filed until April 6.

5) The Central Government has reduced the excise duty on petrol and diesel by Rs.10.

6) The price of petrol has been hiked by Rs.5 per liter at petrol stations operated by private companies such as Reliance and Nayara.

7) Prime Minister Narendra Modi held a video conference consultation with all State Chief Ministers regarding the extraordinary situation arising from the Gulf War.

8) The people of the United States have begun protesting against President Donald Trump under the slogan "No Kings."

9) European nations have been expressing their opposition to the military actions undertaken by US President Donald Trump.

10) Reports indicate that Iran's inflation rate has risen to 50.6 percent as a result of the Gulf War.

Today in History…

1) Today marks the day in 1919 when Mahatma Gandhi issued a call for protest against the Rowlatt Act.

2) Today is the birth anniversary of the renowned Dutch painter, Vincent van Gogh, who was born in 1853.

3) Today marks the day in 1842 when Crawford Long performed the world's first surgical procedure utilizing anesthesia in the United States.

Saturday, 28 March 2026

ஏலியன்ஸ் இருக்கிறார்களா? இல்லையா?

ஹலோ! ஏலியன் யாராவது இருக்கிறீர்களா?

கான்டாக்ட் என்பது கார்ல் சகன் நாற்பது வருடங்களுக்கு முன் எழுதிய நாவல். வானத்தில் இருந்து ஒரு ரேடியோ சிக்னல் வரும், அதில் ஏலியன்ஸ் அனுப்பிய ஒரு விண்கலத்திற்கான ப்ளூ பிரிண்ட் இருக்கும். இதுதான் கதை. சயின்ஸ் பிக்சன்தான், ஆனால் கார்ல் சகன் ஒரு வானியல் அறிஞர் என்பதால், அதில் ஒரு டெக்னிக்கல் நிஜம் ஒட்டியிருக்கும்.

ஆனால் நிஜத்தில்? நூறு வருடமாகக் காதைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம். பிரபஞ்சத்தில் இருந்து ஒரு மிஸ்டு கால் கூட வரவில்லை. நாம் இன்னும் அனாதையாகவே சுற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்பிக்கை இன்னும் சாகவில்லை. ஏனென்றால் நாம் இதுவரை தேடியது ஒரு துளி அளவுதான். இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம்.

ரேடியோ அஸ்ட்ரானமியில் ஒரு முக்கிய எண் இருக்கிறது. 1420.4 MHz. இது ஹைட்ரஜன் அணுக்கள் வெளியிடுகின்ற அதிர்வெண். பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் கொட்டிக் கிடக்கிறது. ஒருவேளை ஏலியன்ஸ் நம்மைத் தொடர்பு கொள்ள நினைத்தால், இந்த யுனிவர்சல் ஹேய்லிங் சேனலைத்தான் பயன்படுத்துவார்கள் என்பது ஒரு கணிப்பு.

1924 இல் செவ்வாய் கிரகத்தில் இருந்து யாராவது பேசுகிறார்களா என்று மிலிட்டரி ரேடியோ மூலமாக ஒட்டுக் கேட்டார்கள்.

அப்புறம் 1960 இல் பிராங்க் டிரேக் என்பவர் ப்ராஜெக்ட் ஓஸ்மா என்ற ஒன்றை ஆரம்பித்தார். இரண்டு நட்சத்திரங்களை குறி வைத்து இந்த 1420 MHz இல் கேட்டார். அப்போது அது ஒரே ஒரு சேனல். இப்போது கிரீன் பேங்க் டெலஸ்கோப்பில் ஒரே நேரத்தில் ஒன் பில்லியன் அதாவது 100 கோடி சேனல்களைக் கவனிக்க முடியும்!

பிராங்க் டிரேக் ஒரு சிம்பிள் ஈக்வேஷன் போட்டார். அதன்படி நம் பால்வெளி மண்டலத்தில் மட்டும் குறைந்தது சில டஜன்களில் இருந்து 5 கோடி நாகரிகங்கள் இருக்க வேண்டும். ஆனால் எல்லாரும் எங்கே போனார்கள்? இதுதான் புகழ்பெற்ற பெர்மி முரண்பாடு. ஒன்று அவர்கள் ரொம்ப தூரத்தில் இருக்க வேண்டும். அல்லது அவர்களுடைய டெக்னாலஜி இன்னும் வளர வேண்டும். அல்லது நாம் இன்னும் சரியாகத் தேட வேண்டும்.

இப்போது இருக்கின்ற டெக்னாலஜி மூலம் லீக்கேஜ் ஆகும் சிறு சிக்னல்களைக் கூட நாம் பிடித்து விட முடியும். அதாவது, ஏலியன்கள் நமக்குச் செய்தி அனுப்ப வேண்டாம், அவர்கள் உலகில் டிவி சிக்னலோ அல்லது ரேடாரோ விண்வெளியில் கசிந்தால் கூட போதும், அவர்களை நாம் பிடித்து விடலாம்.

2030 இல் வர இருக்கின்ற ஸ்கொயர் கிலோமீட்டர் அர்ரே அப்சர்வேட்டரி என்பது ஒரு கேம் சேஞ்சர். தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டெனாக்களை இதற்கென நட்டு வைக்கப் போகிறார்கள். இது 12,000 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கின்ற ஒரு சிக்னலை கூட மோப்பம் பிடித்து விடும்.

இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் புரிகிறது. நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இல்லை. ஆனால் அந்தப் பக்கம் இருந்து ஹலோ சொல்லப் போகும் ஏலியன் யார்? எப்போது சொல்லப் போகிறார்கள் என்பதுதான் இப்போதைக்கு விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

கூடிய சீக்கிரம் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நம்புவோம். ஆகக் காத்திருப்போம். சிக்னல் கிடைக்காமலா போய் விடும்?

வெய்ட் அன்ட் வாட்ச்.

இங்கே காத்திருக்காமல் கதை நகராது. அது இனிமேலும் பிக்சன் கதையாக இருக்காது. ஆம் நிஜக்கதையாகவும் இருக்கக் கூடும்.

*****