Wednesday, 18 March 2026

ஜெயித்த கதைகள் எப்படி ஜெயிக்க வைக்கின்றன?

ஜெயித்த கதைகள் எப்படி ஜெயிக்க வைக்கின்றன?

டிவியைத் திறந்தால் போர், போனைத் திறந்தால் எகனாமிக் கிரைசிஸ், வெளியே போனால் க்ளைமேட் சேஞ்ச். உலகமே ஒரு எர்ரர் மெசேஜ் போலத்தான் தெரிகிறது. ஆனால், இருட்டு அதிகமாகும்போதுதான் ஒரு சின்ன மெழுகுவர்த்தி வெளிச்சம் கூட லேசர் போலத் தெரியும்.

இங்கே ஒளிந்திருப்பது ஒரு சின்ன லாஜிக். உலகம் அழிகிறது என்று ஒரு பக்கம் அலறிக் கொண்டிருக்கும்போதே, இன்னொரு பக்கம் ஒருவன் தன் கனவை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறான். இக்கட்டான சூழலிலும்சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இது வெறும் பீல் குட் சமாச்சாரம் அல்ல. ஆம், தன்னம்பிக்கைக் கதைகள் நிஜத்திலிருந்து திசைதிருப்புவன அல்ல. மாறாக, ஆர்வமும் முயற்சியும் எவ்வளவு பலமானது என்பதை நிரூபிப்பவை. இதற்குப் பின்னால் ஓர் அறிவியல் இருக்கிறது. பாசிட்டிவ் கதைகளைப் படிக்கும்போது உங்கள் மூளைக்குள் சில ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன.

அதனால், மன அழுத்தம் குறைகிறது. நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகிறது. பிறருக்கு உதவும் எண்ணம் எட்டிப்பார்க்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஜெயித்த கதைகளைப் படிக்கும்போது, உங்கள் மூளை அதைத் தன் வெற்றியாகவே பாவித்துப் பிரதிவினை செய்கிறது.

ஜெயித்த கதைகளில் வருபவர்கள் கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனாக இருக்கலாம், 90 வயதிலும் சாதித்த மூதாட்டியாக இருக்கலாம். சிறையில் இருக்கும் ஒரு கைதியாகவும் இருக்கலாம்.

அவர்கள் ஸ்பெஷல் ஆட்கள் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சாதாரண ஆட்களாகவும் இருக்கலாம். ஆனால், முயற்சி என்கிற பட்டனை மட்டும் தட்டிவிட்டு, ஆர்வம் எனும் ரோலர் கோஸ்டரில் ஏறி சாதித்த அசாதாரணர்கள் அவர்கள்.

ஆரியன் சுக்லா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 14 வயதுப் பையன். ஒரே நாளில் ஆறு உலக சாதனைகளை காலி செய்திருக்கிறான். கால்குலேட்டரை விட வேகமாக மனக்கணக்கு போடுகிறான். இவனுடைய நியூரான் நெட்வொர்க்குகள் எப்படி இவ்வளவு வேகமாக பயரிங் ஆகின்றன? ஒருவேளை இவன் மூளையில் சூப்பர் கம்ப்யூட்டர் சிப் எதாவது ரகசியமாகப் பொருத்தப்பட்டிருக்குமோ என்று சந்தேகம் வரலாம். இல்லை, இது ப்யூர் ஹ்யூமன் இன்டெலிஜென்ஸ்.

வில்லியம் கம்வம்பா, மலாவி தேசத்து பையன். சாப்பாட்டுக்கே வழியில்லை. ஆனால், 14 வயதில் பழைய இரும்புச் சாமான்களை வைத்து ஒரு காற்றாலையை  உருவாக்கி தன் வீட்டுக்கு மின்சாரம் கொடுத்திருக்கிறான். கூகுள் இல்லாத காலத்திலேயே இவன் செய்த இந்த பிரமிப்பு ஒரு பெரிய அறிவியல் மித்.

ஜெனிவீவ் வியா காவா, 45 வருடம் டீச்சராகப் பணிபுரிந்தவர். மிகச் சாதாரணமாக வாழ்ந்துவிட்டுப் போனார். ஆனால் அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது, ரகசியமாகச் சேர்த்து வைத்த பணத்தை ஸ்பெஷல் நீட்ஸ் மாணவர்களின் ஸ்காலர்ஷிப்புக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.

மேடம் சி.ஜே. வாக்கர், சாதாரண நிலையில் இருந்து மில்லியனராக உயர்ந்தவர்.

ரோசா பார்க்ஸ், ஒரு பேருந்து இருக்கையில் அமர்ந்தபடி ஒரு மாபெரும் புரட்சியைத் தொடங்கி வைத்தவர். இவர்களைப் பற்றியெல்லாம் அடுத்தடுத்து கொஞ்சம் விரிவாகவேப் பார்ப்போம்.

இப்போது விசயத்துக்கு வருவோம்.

இப்படி ஜெயித்த கதைகள் ஏராளம் இருக்கின்றன. அவை ஜெயித்த கதைகள் மட்டுமல்ல, அவற்றைப் படிக்க படிக்க படிப்போரை ஜெயிக்க வைக்கும் கதைகளும் கூட.

இந்நிஜ கதைகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி ஒன்றிருக்கிறது. அது என்னவென்றால், நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் ஒரு வேலிதான் லிமிட். ஆனால், சில மனிதர்களுக்கு இந்த வேலி தெரிவதே இல்லை. அவர்கள் ஜெயிக்கிறார்கள், சாதிக்கிறார்கள்.

ஆம், மாற்றத்தை உருவாக்குபவர்கள் எப்போதுமே மைக்கை பிடித்துக் கத்துபவர்கள் அல்ல. அமைதியாக, பிடிவாதமாக தன் வேலையைச் செய்து கொண்டிருப்பவர்கள்.

இந்த உலகம் கொலாப்ஸ் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் இவர்களைப் போன்றவர்கள்தான். சாதாரண மனிதர்களிடம் ஒளிந்திருக்கும் இந்த எக்ஸ்ட்ரார்டினரி அம்சம்தான் மனித இனத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். அதுதான் ஆர்வமும் விடாமுயற்சியும்.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது நமக்குத் தேவைப்படுவது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆர்வத்துடன் கூடிய விடாமுயற்சி என்கிற அந்த ஒரு சின்ன ஸ்பார்க் என்பதுதான்.

இது குறித்துத் தொடர்ந்து பேசுவோம். காத்திருங்கள்.

*****

Tuesday, 17 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.03.2026

இன்று உலக மறுசுழற்சி தினம்

1) முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்று இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

2) ஹோர்முஸ் நீர் சந்தியை மூடியுள்ள ஈரான் அங்கு கண்ணி வெடிகளைப் புதைத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3) ஈரானுக்கு எதிரான போரில் உடன்பாடு இல்லை என அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

4) ஈரானுக்கு எதிரான போரில் நேட்டோ நாடுகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

5) ஈரானின் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் விமானப் போக்குவரத்திற்கான வான் பகுதியை மூடுவதாக அறிவித்துள்ளது.

6) இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுபாடு காரணமாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) இன்று தேசிய பயோ டீசல் தினம்.

2) இன்று ஆயுத தொழிற்சாலை தினம்.

3) டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த ருடால்ப் டீசல் 1858 இல் பிறந்த தினம் இன்று.




Education & GK News

Today is World Recycling Day.

1) School Education Minister Anbil Mahesh has instructed that the annual final examinations for students from 1st standard to 9th standard be conducted and completed by the second week of April.

2) Reports indicate that Iran, having closed the Strait of Hormuz, is currently laying landmines in the area.

3) Joe Kent, Director of the U.S. National Counterterrorism Center, has resigned from his post, citing his disagreement with a war against Iran.

4) U.S. President Donald Trump has alleged that NATO nations have not provided adequate cooperation in the conflict against Iran.

5) Citing attacks by Iran, the United Arab Emirates has announced the closure of its airspace to air traffic.

6) Due to the prevailing fuel shortage in Sri Lanka, the workweek has been restricted to just four days.

Today in History…

1) Today is National Biodiesel Day.

2) Today is Ordnance Factories Day.

3) Today marks the birth anniversary of Rudolf Diesel—the inventor of the diesel engine—who was born in 1858.

Monday, 16 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.03.2026

1) ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அங்கிருந்த 550 இந்தியர்கள் ஆர்மீனியா வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

2) ஹோர்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா கோரிய ராணுவ உதவிக்கு ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் மறுப்புத் தெரிவித்துள்ளன.

3) ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு அமெரிக்கத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4) வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

5) 'புதிய வருமான வரிச் சட்டம் 2025' வரும் ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது.

6) எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

7) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த படம் உள்ளிட்ட 6 விருதுகளை 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம் வென்றுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கனை கல்பனா சாவ்லா 1962 இல் பிறந்த தினம் இன்று.

2) இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 1990 இல் பிறந்த தினம் இன்று.

3) வங்கதேசத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரகுமான் 1920 இல் பிறந்த தினம் இன்று.

Education & GK News

1) Due to the prevailing war tensions in Iran, 550 Indians were evacuated via Armenia and brought back to India.

2) Several European nations, including Germany, have refused the military assistance requested by the United States to reopen the Strait of Hormuz.

3) Reports indicate that Kharg Island—Iran's key oil terminal—has suffered severe damage in a U.S. attack.

4) The waiting period for booking domestic LPG cylinders has been increased from 21 days to 25 days.

5) The 'New Income Tax Act, 2025' is set to come into effect starting April 2026.

6) The Sahitya Akademi Award for this year has been announced for writer S. Tamilselvan.

7) At the Oscar Awards ceremony held in Los Angeles, the film ‘One Battle After Another’ won six awards, including Best Picture.

Today in History…

1) Today marks the birth anniversary of Kalpana Chawla, the first Indian woman to travel into space (born in 1962).

2) Today marks the birth anniversary of India's star badminton player, Saina Nehwal (born in 1990).

3) Today marks the birth anniversary of Sheikh Mujibur Rahman, revered as the Father of Bangladesh (born in 1920).

சிலிண்டர் புக்கிங்கிற்கு…

சிலிண்டர் புக்கிங்கிற்கு…

தற்போது கேஸ் சிலிண்டரை எளிதாகப் புக்கிங் செய்வதற்கான வழிமுறைகளை குறித்த விவரத்தைக் கீழே காண்க. அத்துடன் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியன எப்படிக் கிடைக்கின்றன என்பதற்கான வரைபடத்தையும் அதற்குக் கீழே காண்க.

கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோலிய பகுதிப் பொருட்கள் கிடைப்பதை விளக்கும் வரைபடம்.

*****

Sunday, 15 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.03.2026

இன்று தேசிய தடுப்பூசி தினம்

1) தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2) தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

3) தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

4) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

5) கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

6) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும்.

வரலாற்றில் இன்று…

1) நவீன விண்வெளி அறிவியலின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் காடர்ட், உலகின் முதல் திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட்டை வெற்றிகரமாக 1926 இல் விண்ணில் செலுத்திய தினம் இன்று.

2) இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் போலியோ சொட்டு மருந்து திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது

3) குழந்தைக் கவிஞர் என்று போற்றப்படும் அழ. வள்ளியப்பா 1989 இல் மறைந்த தினம் இன்று.






Education & GK News

Today is National Vaccination Day.

1) Assembly election dates have been announced for five states, including Tamil Nadu.

2) Voting for the Assembly elections in Tamil Nadu will take place on April 23.

3) The votes cast in the Tamil Nadu Assembly elections will be counted on May 4.

4) Following the announcement of the election dates, the Model Code of Conduct has come into immediate effect across Tamil Nadu.

5) The Gnananpida Award has been announced for the poet Vairamuthu.

6) In the global market, the price of crude oil has crossed the $100-per-barrel mark. This represents a four-year high.

Today in History…

1) Today marks the day in 1926 when Robert Goddard—hailed as the father of modern space science—successfully launched the world's first liquid-fueled rocket.

2) It was on this day in 1995 that the Polio Immunization Program was first launched in India.

3) Today marks the passing of Azha Valliappa—revered as the "Children's Poet"—in 1989.

Saturday, 14 March 2026

பேரன்டிங் பாரடாக்ஸ் என்றால் என்ன தெரியுமா?

பேரன்டிங் பாரடாக்ஸ் என்றால் என்ன தெரியுமா?

குழந்தை பெற்றுக் கொண்டால் நிம்மதி போய் விடும் என்பார்கள். ஆனால் அதுதான் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது என்றும் சொல்வார்கள். இதில் எது உண்மை?

இதை உளவியலில் பேரண்டிங் பாரடாக்ஸ் என்கிறார்கள். அதாவது, குழந்தை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தினசரி டென்ஷன், தூக்கமின்மை, ரத்த அழுத்தம் எல்லாம் ஜாஸ்தி. ஆனால், வாழ்க்கை திருப்தியா இருக்கா? என்று கேட்டால், ஆமாம் என்பார்கள்.

என்ன ஒரு முரண்பாடு?

இதைத் துப்புத் துலக்கப் புறப்பட்டார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள்.

88 புது அப்பாக்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அப்பா ஆவதற்கு முன்னும் பின்னும் மூளை எப்படி வேலை செய்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு.

விஞ்ஞானிகள் எதிர்பார்த்தது என்னவென்றால், அப்பா ஆனதும் எல்லோருக்கும் வாழ்க்கையின் அர்த்தம் கூடிவிடும் என்று.

கிடைத்த முடிவு 50% பேருக்குத்தான் அர்த்தம் கூடியது. மிச்சம் பாதிப் பேருக்கு. ம்ஹூம்.

ஏன் இப்படி என்கிறீர்களா?

மூளைக்குள் சில பிரதேசங்கள் உண்டு.

மூளையில் உள்ள மிடில் ஃப்ரண்டல் கைரஸ் என்பது சுயகட்டுபாட்டுக்கான பிரதேசம்.

சுப்ரா மார்ஜினல் கைரஸ் என்பது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பிரேதேசம்.

யாரெல்லாம் குழந்தையைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டார்களோ, அவர்களுக்கு இந்த இரண்டு இடங்களிலும் தொடர்பானது பின்னிப் பெடலெடுத்தது.

ஆனால், சில பேருக்கு மூளையின் சென்சரி கார்டெக்ஸ் அதிகமாக வேலை செய்தது. இவர்களுக்குக் குழந்தை அழுதால் எரிச்சல் வரும். சத்தம் காதைத் துளைக்கும். மன அழுத்தம் ஏறும். பாவம், இவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு நரகம்!

குழந்தைகளால் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது என்கிறார்களே, அது எப்படி என்கிறீர்களா?

அங்கேதான் இன்சுலர் கார்டெக்ஸ் மற்றும் டெம்போரல் போல் வேலைக்கு வருகின்றன. இவைதான் நம் உணர்வுகளையும், நாம் யார் என்கிற பிம்பத்தையும் ஒட்டு வைக்கும் ஃபெவிகால்.

நடுராத்திரி இரண்டு மணிக்குக் குழந்தை அழும்போது, சனியனே, தூங்க விடமாட்டேங்குதே, என்று நினைக்காமல், என் வாரிசு அழுகிறது, அதைச் சமாதானப்படுத்துவது என் கடமை என்று ஒரு ஹீரோ கதையை மூளைக்குள் ஓட்டினால், அங்கே மன அழுத்தம் காணாமல் போய், அந்த அர்த்தம் பிறந்து விடுகிறது.

குழந்தை வளர்ப்பு குறித்த பெற்றோர்களின் மனதிருப்தி குறித்த ஒரு புள்ளி விவரமும் இருக்கிறது. அது என்னவென்றால்,

குழந்தை உள்ளவர்களுக்கு அதிக மன அழுத்தம் அதே நேரத்தில் அதிக வாழ்க்கை திருப்தியும் இருக்கிறது.

குழந்தை இல்லாதவர்களுக்கு குறைவான மன அழுத்தம் மற்றும் சராசரியான நிம்மதி இருக்கிறது.

குழந்தை வேண்டும் என ஏங்குபவர்களுக்கு வயது ஏற ஏற மன திருப்தி குறைந்து விடுகிறது.

இத்துடன் குழந்தை இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. மூளை அந்தச் சூழலை எப்படி அணுகுகிறது என்பதும் முக்கியம்.

நமது மூளை ஒரு கில்லாடி. நாம் தேர்ந்தெடுக்கும் பாதைக்குத் தகுந்தபடி அது கதைகளை மாற்றிக்கொள்ளும். குழந்தை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என் வாழ்க்கை அர்த்தமுள்ளது என்று உங்கள் மூளைக்குச் சொல்லிக் கொடுக்கத் தெரிந்தால், அதையும் நீங்கள் காலப் போக்கில் ஏற்றுக் கொள்வீர்கள். அவ்வளவுதான் விசயம்.

மொத்தத்தில் உங்கள் மூளையை நீங்கள் கையாள்கிறீர்களா அல்லது சமூகக் கருத்துகளுக்கேற்ப கையாள்கிறீர்களா என்பதுதான் இதில் உள்ள சாராம்சம்.

*****

Friday, 13 March 2026

மனிதனிலிருந்து ஏன் குரங்கு தோன்றவில்லை?

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால்,

மனிதனிலிருந்து ஏன் குரங்கு தோன்றவில்லை?

இது ஒரு செம கேள்வி! பரிணாம வளர்ச்சி என்பது ஒரு ஏணி கிடையாது, ஏறிய பின் இறங்கிக் கொள்ள. அது ஒரு கிளை பிரிந்து செல்லும் மரம். குரங்கும் மனிதனும் ஒரே மூதாதையரிடமிருந்து பிரிந்த இரு வேறு கிளைகள்.

சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் அதன் ஒரு கிளை காடுகளிலேயே தங்கிக் குரங்குகளாக பரிணமித்தன. இன்னொரு கிளை சமவெளிக்கு வந்து நிமிர்ந்து நடந்து மனிதர்களாக மாறி விட்டன.

இயற்கையில் ஏன் மனிதன் மீண்டும் குரங்காக மாறவில்லை என்று கேட்பது, ஏன் ஐபோன் 16 மீண்டும் நோக்கியா 1100 ஆக மாறவில்லை என்று கேட்பது போலத்தான். பரிமாணத்தில் நோ ரிவர்ஸ் கியர்.

மனிதன் ஏற்கனவே குரங்கை விட மேம்பட்டவனாக அப்கிரேட் ஆகிவிட்டான். மீண்டும் குரங்காக மாறுவது என்பது உயிர்வாழத் தேவையான தகுதியைக் குறைத்துக் கொள்வது போல. பரிணாமத்துக்குப் பின்னடைவு பிடிக்காது.

குரங்கு என்பது மனிதனுக்கு முந்தைய ஸ்டாப்பிங். அது காடுகளுக்கு ஏற்ற பெர்பெக்ட் டிசைன். மனிதன் நகரங்களுக்கு அல்லது நகரங்கள் என்ற நரகங்களுக்கு ஏற்ற பெர்பெக்ட் டிசைன்.

ஒரு மீன் ஏன் பறவையாக மாறவில்லை என்று கேட்பதில் அர்த்தமில்லை, ஏனென்றால் கடலில் வாழ்வதற்கு மீன் வடிவம் தான் பெஸ்ட்.

காடுகள் இல்லாத இன்றைய சூழ்நிலையில், நகரங்களுக்கு வந்துவிட்ட குரங்குகள் மீண்டும் மனிதனாகி விடுமா என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழுமானால், பாஸ் அதற்கு நீங்கள் டார்வினாகித்தான் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.

*****