Tuesday, 3 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.03.2026

இன்று தேசிய பாதுகாப்பு தினம்

1) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை இன்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2) பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதியும் வெளியாகும்.

3) தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பள்ளிகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

4) நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 8 ஆகும்.

5) மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.

6) தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) ஐயா ஸ்ரீ வைகுண்டர் 1833 இல் பிறந்த தினம் இன்று.

2) 1837 இல் சிகாகோ நகரம் உருவாக்கப்பட்ட தினம் இன்று.

3) 1961 இல் இந்தியாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட தினம் இன்று.


Education & GK News

Today is National Security Day

1) Hall tickets for students appearing for the 10th standard public examination can be downloaded from today.

2) The results of the 12th standard public examination will be released on May 8 and the results of the 10th standard public examination will be released on May 10.

3) In view of the assembly elections in Tamil Nadu, it is planned to conduct the annual  examinations for schools in advance.

4) The last day to apply for the NEET exam is March 8.

5) The district-wise final voter list will be released today.

6) As the temperature has started to increase in many districts of Tamil Nadu, the Meteorological Department has said that there is a possibility of moderate rain in some districts.

Today in history…

1) Today is the birth anniversary of Sir Vaikundar in 1833.

2) Today is the anniversary of the founding of the city of Chicago in 1837.

3) Today is the anniversary of the commissioning of India's first aircraft carrier, INS Vikrant, in the Indian Navy in 1961.

Monday, 2 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.03.2026

இன்று உலக வனவிலங்கு தினம்

&

உலக செவித்திறன் தினம்.

1) நேற்று தொடங்கிய +2 பொதுத்தேர்வைத் தமிழகத்தில் 8.27 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

2) +1 தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

3) இன்று மாலை 3.20 முதல் 6.47 வரை இந்தியாவில் பகுதி நேர சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்நிகழ்வின் போது சந்திரன் செந்நிறமாகக் காட்சி அளிக்கும். இது ப்ளட் மூன் எனப்படுகிறது.

4) அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

5) இன்று ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

6) சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 3.44 லட்சமாக அதிகரித்துள்ளது.

7) வளைகுடா போர் பதற்றம் காரணமாக ஜோர்டான் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடியுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் 1847 இல் பிறந்த தினம் இன்று.

2) உலகின் பிரபலமான இதழான டைம் பத்திரிகை 1923 இல் தொடங்கப்பட்ட தினம் இன்று.

3) முகலாயப் பேரரசர் ஔரங்கசிப் 1707 இல் மறைந்த தினம் இன்று.

Education & GK News

Today is World Wildlife Day

&

World Hearing Day.

1) 8.27 lakh students wrote the +2 public exams that started yesterday in Tamil Nadu.

2) +1 exams begin today.

3) A partial lunar eclipse will occur in India from 3.20 pm to 6.47 pm today. During this event, the moon will appear red. This is called a blood moon.

4) A total lunar eclipse will occur in countries like America and Australia.

5) Today is the Holi festival celebrated across the country.

6) The number of daily passengers on the Chennai Metro has increased to 3.44 lakh.

7) Jordan has temporarily closed its airspace due to the Gulf War tension.

Today in history…

1) Alexander Graham Bell, the inventor of the telephone, was born in 1847.

2) Today is the day the world's famous Time magazine was launched in 1923.

3) Today marks the death anniversary of Mughal Emperor Aurangzeb in 1707.

Sunday, 1 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.03.2026

1) இன்றிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.

2) இந்த ஆண்டு முதல் பனிரெண்டாம் வகுப்பு கணக்குப் பதிவியல் பாடத்திற்குக் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11 முதல் தொடங்குகின்றன.

4) புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீம் அதிகரித்துள்ளது.

5) ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.

6) ஈரானின் உயர் மட்டத் தலைவர் கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7) போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் 350 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

8) டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட்டில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) 1896 இல் ஹென்றி பெக்கொரல் யுரேனியத்திலிருந்து கதிரியக்கம் வெளிப்படுவதைக் கண்டறிந்த நாள் இன்று.

2) 1956 இல் பிரான்சிடமிருந்து மொராக்கோ சுதந்திர பெற்ற தினம் இன்று.

3) 1949 இல் இந்தியாவின் நைட்டிங்கேல் எனப் புகழப்படும் சரோஜினி நாயுடு மறைந்த தினம் இன்று.

Education & GK News

1) The Class XII public exams are starting from today.

2) From this year, calculators have been allowed for Class XII Accountancy.

3) The Class X public exams are starting from March 11.

4) The number of female students going to college has increased by 34 percent due to the Innovative Women's Program.

5) The US and Israeli attacks on Iran have intensified.

6) Reports indicate that Iran's top leader Khamenei has been killed.

7) 350 flights to Gulf countries have been canceled due to war tensions.

8) The Indian team has advanced to the semi-finals of the T20 World Cup cricket.

Today in history…

1) Today is the day Henri Becquerel discovered radioactivity from uranium in 1896.

2) Today is the day Morocco got independence from France in 1956.

3) Today is the anniversary of the death of Sarojini Naidu, who was hailed as the Nightingale of India in 1949.

Saturday, 28 February 2026

வியோமித்ரா – விண்வெளியில் ஓர் இந்திய மேனகை!

வியோமித்ரா – விண்வெளியில் ஓர் இந்திய மேனகை!

வியோமித்ரா – இதென்ன ஏதோ மாத்திரையின் பெயர் போல இருக்கிறது என யோசிக்கிறீர்களா? இது மாத்திரையல்ல. சிட்டி ரோபோவின் சகோதரி என்று சொல்லலாம். இவள் ஒரு பெண்.

ககன்யான் விண்கலத்தில் வேலை செய்யப் போகும் பெண் ரோபோதான் இந்த வியோமித்ரா.

இவள் ஒரு ஹ்யூமனாய்டு. அதாவது, நம்மைப் போலவே உருவம் கொண்ட, ஆனால் ரத்தமும் சதையும் இல்லாத ஒரு இயந்திரப் பெண்.

வியோம் என்றால் விண்வெளி, மித்ரா என்றால் நண்பன்.

இஸ்ரோ இதைச் செய்திருக்கிறது. 2026 இல் மிகப்பெரிய சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை நிஜமாகப்போகிறகிறது.

ககன்யான் விண்கலத்தில் மனிதர்கள் ஏறுவதற்கு முன்னால், ரிஸ்க் எடுக்கப் போவது இந்த அரை உடல் ரோபோதான்.

ஆம், இவளுக்கு இடுப்புக்குக் கீழே கால்கள் கிடையாது. அது ஏன்? ஏனிந்த விசித்திரம்? விண்வெளியில் எடை கிடையாது, அப்புறம் எதுக்குக் கால்கள்? விண்வெளியில் மிதந்து கொண்டே வேலை செய்ய இடுப்புக்கு மேல் உள்ள பாகங்களே போதும்.

விண்கலத்தின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, சுவிட்சுகளை இயக்குவதற்கும், கேபினில் இருக்கும் அழுத்தத்தை அளப்பதற்கும் கால்கள் எதற்கு? அங்கு வியோமித்ரா ஓட்டப் போட்டியிலா கலந்து கொள்ளப் போகிறாள்? ஆகவே கால்கள் இல்லை. இது விண்கலத்தின் எடையைக் குறைக்கவும், அதிகப்படியான கருவிகளை வைக்கவும் இஸ்ரோ செய்திருக்கும் மேஜிக்.

இவளுடைய புத்திசாலித்தனம் மூளையில் அல்ல, சிலிக்கான் சில்லுகளில் இருக்கிறது. வியோமித்ரா, அங்கே விண்வெளியில் ஆக்சிஜன் அளவு என்ன? என்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கேட்டால், கண்கள் சிமிட்டி, எல்லாம் நார்மல் அல்லது கொஞ்சம் கூட ஆக்ஸிஜன் இல்லை அல்லது ஆக்ஸிஜன் குறைகிறது இப்படி அந்தச் சூழ்நிலைக்கேற்ற ஒரு பதிலைச் சொல்லும்.

வியோமித்ராவுக்கு சில உணர்வுகள் கூட உண்டு. விண்கலம் அதிவேகமாக மேலே போகும்போது ஏற்படும் நடுக்கத்தை உணர்ந்து டேட்டாவாக மாற்றி பூமிக்கு அனுப்புவாள். அது எப்படி என்றால், விண்கலம் பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டிச் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் புவிஈர்ப்பு விசை மாற்றங்களை இவளது உடலில் உள்ள சென்சார்கள் துல்லியமாகக் கணக்கிடும். அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்தால் உடனடியாகத் தகவல் சொல்லும். விண்கலத்திற்குள் வெப்பம் அதிகமானால் எச்சரிக்கை மணி அடிக்கும்.

அப்புறம் இவளுடைய வேறு வேலைகள் என்னவென்றால்…

முன்பே சொன்னபடி வியோமித்ரா என்பது வெறும் பொம்மை அல்ல, அது ஓர் இயந்திரத் தோழி. விண்வெளியில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்கூட்டியே சந்திப்பதுதான் இவளுடைய வேலை.

ககன்யான் விண்கலத்தின் உள்ளே ஏகப்பட்ட பொத்தான்கள், இணைப்புகள் மற்றும் திரைகள் இருக்கும். வியோமித்ரா தனது கைகளால் இந்தச் சுவிட்சுகளை இயக்க முடியும். தரைக்கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வரும் கட்டளைகளை ஏற்று, விண்கலத்தின் பாகங்களைச் சரிபார்ப்பதும் இவள் வேலை.

வியோமித்ராவுக்குப் பேசத் தெரியும். விண்வெளி வீரர்கள் எதிர்காலத்தில் அவளிடம் பேசும்போது, அவர்களின் குரலைப் புரிந்து கொண்டு பதில் சொல்லும் ஆற்றல்  இவளுக்கு உண்டு. எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டால், சென்சார் தரவுகளை ஆய்வு செய்துவிட்டு ஆமாம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்லும்.

சுருக்கமாகச் சொன்னால், வியோமித்ரா ஒரு ஸ்பேஸ் டெஸ்ட் டிரைவர். இவள் தரும் தரவுகளை வைத்துதான், அடுத்த முறை இந்திய வீரர்கள் விண்வெளிக்குச் செல்லும் போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் உறுதி செய்யப்படும்.

விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லாத நிலையில், ஒரு சாதாரணத் திரவம் கூடக் கோள வடிவில் மிதக்கும். அந்தச் சூழலில் ஒரு ரோபோவின் மோட்டார் சரியாக இயங்குமா என்பது நம் இஸ்ரோ சயின்டிஸ்ட்டுகளுக்கு இருக்கும் முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு வியோமித்ரா சரியாக இயங்கி பதில் தந்து விட்டால், அடுத்த ஆண்டு மனிதர்கள் விண்வெளிக்குப் போவது உறுதி.

ஆக, இயந்திரப் பெண்ணே, விண்வெளிக்குப் போய் வந்து இந்தியர்களை அழைத்துச் செல்ல சீக்கிரமே நல்ல சேதியைக் கூறுவாயாக!

*****

Friday, 27 February 2026

ஆசிரியர் 2.0

ஆசிரியர் 2.0

ஆசிரியர் வகுப்புக்குள் நுழைகிறார். கையில் புத்தகம், சாக்பீஸ். எதிரே நாற்பது தலைகள். ஆனால், ஒரு தலை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. எல்லாம் குனிந்தே இருக்கும் தலைகள். மொபைல் பார்த்து பார்த்து அப்படி ஆகிவிட்டன. எல்லாம் வீட்டை விட்டு வந்து விட்டாலும் அங்கிருக்கும் டிவி, மொபைல் திரை நினைவுகளிலியே இன்னும் மூழ்கி இருக்கின்றன.

இன்றைய மாணவர்களில் பெரும்பாலானோர் டிஜிட்டர் அடிமைகள் அல்லது டிஜிட்டல் நோயாளிகள். இது போன்றவர்களுக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் ஸ்லோ மோஷன் படம் பார்ப்பது போலத்தான் இருக்கும்.

யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 30 வினாடிகளில் உலகத்தைப் பார்த்துப் பழகியவ அவர்களால் ஆசிரியரின் தொண்டைத் தண்ணீர் வற்றுவதைப் புரிந்து கொள்ள முடியாது.

ஆசிரியரை விட டிஜிட்டல் அல்காரிதம்கள் அவர்களின் கவனித்தலை நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. ஆசிரியர்கள் அவற்றுக்கு ஈடு கொடுத்து மாறா விட்டால் மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்ப முடியாது. என்ன செய்யலாம் இதற்கு?

ஆசிரியர்கள் இனியும் விரிவுரையாளர்களாக இருப்பது வேலைக்கு ஆகாது. அவர்கள் சுவாரசியர்களாக மாற வேண்டும். எப்படி மாறலாம்?

ஓர் ஆச்சரியமூட்டும், அதிர்ச்சியூட்டும் கேள்வியோடு வகுப்பறைக்குள் நுழையலாம். உதாரணத்துக்குச் செவ்வாயில் விவசாயம் செய்ய முடியுமா? என்று ஆரம்பிக்கலாம்.  தாவரங்களைப் போல மனிதர்களால் ஏன் உணவு தயாரிக்க முடியவில்லை என்று கேட்கலாம். இன்று டைனோசர்கள் நம்மோடு வாழ்ந்தால் எப்படி இருக்கும்? என்று யோசிக்க வைக்கலாம்.

தமிழ்ப் பாடம் என்றால் திருவள்ளுவர் நம் முன் வந்து நின்றால் எப்படி இருக்கும்? குமரி முனையில் தன்னுடைய சிலையைப் பார்த்து அவர் என்ன சொல்வார்? இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்கலாம். இது மாணவர்களை இழுத்துப் பிடிக்கும். அவர்களுக்குத் தோன்றும் சுவாரசியமான பதில்களைச் சொல்ல அனுமதிக்க வேண்டும். இவையெல்லாம் கொஞ்சம் ஓவர் எக்ஸாக்கிரேஷன்தான். ஆனால் வேறு வழியில்லை.

ஆசிரியர் இப்படிக் கேள்வி கேட்டதைப் போல, மாணவர்கள் பாடம் சம்பந்தமாகச் சுவாரசியமாகக் கேள்வி கேட்பதை அனுமதிக்க வேண்டும். சிறந்த கேள்விகளுக்குப் பரிசு கொடுக்கும் ஒரு புதிய முறையைக் கொண்டு வரலாம். வழக்கமாகப் பதில் சொல்பவருக்குத்தானே பரிசு. இப்படி மாற்றிச் செய்வது அவர்களது சிந்தனையைத் தூண்டிப் பாடத்தைக் கவனிக்கச் செய்யும்.

ஆசிரியர்களுக்குப் பதில் தெரியாத கேள்விகளை மாணவர்கள் கேட்கக் கூடும். பதற்றம் அடைய வேண்டாம். கூகுள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் என்று அவர்களைக் கொண்டே விடையைத் தேடச் சொல்லலாம். அவர்கள்தான் செல்போன் பயன்பாட்டில் கில்லாடிகளாயிற்றே. ஆசீரியரை விட விரைவாகப் பதிலைக் கொண்டு வருவார்கள். பிறகு அந்தப் பதில் எந்த அளவுக்குச் சரியானது என்பதை வகுப்பறையில் விவாதிக்கலாம். அதில் ஆசிரியர்கள் கில்லாடிகளாயிற்றே.

சில நேரங்களில் மாணவர்கள் தவறான கேள்விகளைக் கேட்கக் கூடும். தவறான பதில்களைச் சொல்லக் கூடும். அவற்றைத் தவறென்று முத்திரை குத்தி விடக் கூடாது.  அத்தவறிலிருந்து சரியான கேள்வியை அல்லது பதிலை நோக்கித் திருப்ப வேண்டும்.

மாணவர்கள் விரல் தேய செல்போனை வீட்டில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதைக் கல்வி சார்ந்து பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும். கண்டதையும் கூகுளில் தேடுவதைக் கல்வி சார்ந்து தேடும் வகையில் மாற்றி அமைக்கலாம். அவர்கள் அறிவு சார்ந்து விடை தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டு, விடைகளை முதலில் வாட்ஸ்ஆப்பில் அனுப்பச் சொல்லலாம். இது ஓர் தேவையில்லாத ஆணிதான். இந்த ஆணியை அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இப்படி படிப்படியாக அவர்களை மடைமாற்றி பாட ஆர்வம் கொண்டவராக மாற்றி விடும் போது அவர்கள் நிறைய கேள்வி கேட்கவும், சிந்திக்கவும், பாடம் தொடர்பான கவனத்திலும் வந்து விடுவார்கள். அதன் பிறகு பாடத்தைக் கவனிக்க அவர்களுக்கு நேரம் போதாது.

ஆக மொத்தத்தில் வகுப்பறை என்பது அமைதியாக இருக்க வேண்டிய மியூசியம் அல்ல, அது சத்தமும், விவாதமும், தவறுகளும் நடக்க வேண்டிய, கேள்விகள் கேட்டுப் பதில்கள் தேட வேண்டிய  ஓர் ஒர்க் ஷாப்.

ஆசிரியர் என்பவர் இனி டெக்ஸ்ட் புக்கின் டேட்டா பேங்க் அல்ல. அவர் மாணவர்களின் செயின் ரியாக்சனைக் கல்வியை நோக்கி தூண்டி விட வேண்டிய கிரியா ஊக்கி.  அதற்கேற்ப ஆசிரியர் ஒரு படி இறங்கினால், மாணவர்கள் ஆசிரியருக்காக நூறு படிகள் ஏறி வருவார்கள்.

*****

Thursday, 26 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.02.2026

இன்று தேசிய புரத தினம்.

1) தேர்தல் நடைமுறைகளில் எவ்வித பாரபட்சமும் காட்டப்பட மாட்டாது, விதிமுறை மீறல்கள் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2) இஸ்ரேல் நாட்டின் மிக உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

3) இந்தியா இஸ்ரேல் இடையே 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

4) கனடா பிரதமர் மார்க் கார்னி அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

5) ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) இன்று உலக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினம்.

2) இன்று மராத்தி மொழி தினம்.

3) பிரபல ஹாலிவுட் நடிகையான எலிசபெத் டெய்லர் 1932 இல் பிறந்த தினம் இன்று.

Education & GK News

Today is National Protein Day.

1) The Election Commission of India has said that no discrimination will be shown in the electoral process and violations of the rules will not be tolerated.

2) Prime Minister Narendra Modi has been awarded the highest award of the country of Israel.

3) 16 MoUs have been signed between India and Israel.

4) Canadian Prime Minister Mark Carney is visiting India today on an official visit.

5) India has won a big victory in the T20 cricket match against Zimbabwe.

Today in history…

1) Today is World NGO Day.

2) Today is Marathi Language Day.

3) Today is the birthday of famous Hollywood actress Elizabeth Taylor in 1932.

Wednesday, 25 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.02.2026

1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 101.

2) ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

3) 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது.

4) பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இஸ்ரேலின் டெல் அவிவ் சென்றடைந்தார்.

5) நாளை மறுதினம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளார்.

6) இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று தமிழகம் வருகிறார்.

வரலாற்றில் இன்று…

1) 1991 இல் சர் டிம் பெர்னர்ஸ்-லீ உலகின் முதல் வெப் பிரவுசரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்திய தினம் இன்று.

2) 1935 இல் ராபர்ட் வாட்சன்-வாட் வானொலி அலைகளைப் பயன்படுத்தி விமானங்களைக் கண்டறியும் ரேடார் கருவியின் செயல்பாட்டை முதல்முறையாகச் செய்து காட்டிய தினம் இன்று.

3) 1802 இல் விக்டர் ஹியூகோ பிறந்த தினம் இன்று. இவர் எழுதிய Les Misérables மற்றும் The Hunchback of Notre-Dame ஆகிய நாவல்கள் உலகப் புகழ் பெற்றவை.





Education & GK News

1) Senior leader of the Communist Party of India, R. Nallakannu, passed away due to old age and ill health. He was 101 years old.

2) The passing score of the Teacher Eligibility Test has been reduced from 50 percent to 40 percent for the differently-abled.

3) The central government is soon to launch a cervical cancer vaccination program for girls under the age of 14.

4) Prime Minister Narendra Modi reached Tel Aviv, Israel on an official visit.

5) Prime Minister Narendra Modi is scheduled to visit Chennai the day after tomorrow.

6) Chief Election Commissioner of India, Gyanesh Kumar, is coming to Tamil Nadu today.

Today in history…

1) Today is the day when Sir Tim Berners-Lee introduced the world's first web browser to the public in 1991.

2) Today is the day when Robert Watson-Watt first demonstrated the operation of a radar device that detects aircraft using radio waves in 1935.

3) Today is Victor Hugo's birthday in 1802. His novels Les Misérables and The Hunchback of Notre-Dame are world famous.