ஜெயித்த கதைகள் எப்படி ஜெயிக்க வைக்கின்றன?
டிவியைத்
திறந்தால் போர், போனைத் திறந்தால் எகனாமிக் கிரைசிஸ், வெளியே போனால் க்ளைமேட் சேஞ்ச்.
உலகமே ஒரு எர்ரர் மெசேஜ் போலத்தான் தெரிகிறது. ஆனால், இருட்டு அதிகமாகும்போதுதான் ஒரு
சின்ன மெழுகுவர்த்தி வெளிச்சம் கூட லேசர் போலத் தெரியும்.
இங்கே
ஒளிந்திருப்பது ஒரு சின்ன லாஜிக். உலகம் அழிகிறது என்று ஒரு பக்கம் அலறிக் கொண்டிருக்கும்போதே,
இன்னொரு பக்கம் ஒருவன் தன் கனவை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறான். இக்கட்டான சூழலிலும்சிரித்துக்
கொண்டு சந்தோஷமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
இது
வெறும் பீல் குட் சமாச்சாரம் அல்ல. ஆம், தன்னம்பிக்கைக் கதைகள் நிஜத்திலிருந்து திசைதிருப்புவன
அல்ல. மாறாக, ஆர்வமும் முயற்சியும் எவ்வளவு பலமானது என்பதை நிரூபிப்பவை. இதற்குப் பின்னால்
ஓர் அறிவியல் இருக்கிறது. பாசிட்டிவ் கதைகளைப் படிக்கும்போது உங்கள் மூளைக்குள் சில
ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன.
அதனால்,
மன அழுத்தம் குறைகிறது. நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகிறது. பிறருக்கு உதவும் எண்ணம்
எட்டிப்பார்க்கிறது.
சுருக்கமாகச்
சொன்னால், ஜெயித்த கதைகளைப் படிக்கும்போது, உங்கள் மூளை அதைத் தன் வெற்றியாகவே பாவித்துப்
பிரதிவினை செய்கிறது.
ஜெயித்த
கதைகளில் வருபவர்கள் கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனாக இருக்கலாம், 90 வயதிலும் சாதித்த
மூதாட்டியாக இருக்கலாம். சிறையில் இருக்கும் ஒரு கைதியாகவும் இருக்கலாம்.
அவர்கள்
ஸ்பெஷல் ஆட்கள் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சாதாரண ஆட்களாகவும் இருக்கலாம். ஆனால்,
முயற்சி என்கிற பட்டனை மட்டும் தட்டிவிட்டு, ஆர்வம் எனும் ரோலர் கோஸ்டரில் ஏறி சாதித்த
அசாதாரணர்கள் அவர்கள்.
ஆரியன்
சுக்லா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 14 வயதுப் பையன். ஒரே நாளில் ஆறு உலக சாதனைகளை காலி
செய்திருக்கிறான். கால்குலேட்டரை விட வேகமாக மனக்கணக்கு போடுகிறான். இவனுடைய நியூரான்
நெட்வொர்க்குகள் எப்படி இவ்வளவு வேகமாக பயரிங் ஆகின்றன? ஒருவேளை இவன் மூளையில் சூப்பர்
கம்ப்யூட்டர் சிப் எதாவது ரகசியமாகப் பொருத்தப்பட்டிருக்குமோ என்று சந்தேகம் வரலாம்.
இல்லை, இது ப்யூர் ஹ்யூமன் இன்டெலிஜென்ஸ்.
வில்லியம்
கம்வம்பா, மலாவி தேசத்து பையன். சாப்பாட்டுக்கே வழியில்லை. ஆனால், 14 வயதில் பழைய இரும்புச்
சாமான்களை வைத்து ஒரு காற்றாலையை உருவாக்கி
தன் வீட்டுக்கு மின்சாரம் கொடுத்திருக்கிறான். கூகுள் இல்லாத காலத்திலேயே இவன் செய்த
இந்த பிரமிப்பு ஒரு பெரிய அறிவியல் மித்.
ஜெனிவீவ்
வியா காவா, 45 வருடம் டீச்சராகப் பணிபுரிந்தவர். மிகச் சாதாரணமாக வாழ்ந்துவிட்டுப்
போனார். ஆனால் அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது, ரகசியமாகச் சேர்த்து வைத்த பணத்தை ஸ்பெஷல்
நீட்ஸ் மாணவர்களின் ஸ்காலர்ஷிப்புக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.
மேடம்
சி.ஜே. வாக்கர், சாதாரண நிலையில் இருந்து மில்லியனராக உயர்ந்தவர்.
ரோசா
பார்க்ஸ், ஒரு பேருந்து இருக்கையில் அமர்ந்தபடி ஒரு மாபெரும் புரட்சியைத் தொடங்கி வைத்தவர்.
இவர்களைப் பற்றியெல்லாம் அடுத்தடுத்து கொஞ்சம் விரிவாகவேப் பார்ப்போம்.
இப்போது
விசயத்துக்கு வருவோம்.
இப்படி
ஜெயித்த கதைகள் ஏராளம் இருக்கின்றன. அவை ஜெயித்த கதைகள் மட்டுமல்ல, அவற்றைப் படிக்க
படிக்க படிப்போரை ஜெயிக்க வைக்கும் கதைகளும் கூட.
இந்நிஜ
கதைகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி ஒன்றிருக்கிறது. அது என்னவென்றால்,
நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் ஒரு வேலிதான் லிமிட். ஆனால், சில மனிதர்களுக்கு இந்த
வேலி தெரிவதே இல்லை. அவர்கள் ஜெயிக்கிறார்கள், சாதிக்கிறார்கள்.
ஆம்,
மாற்றத்தை உருவாக்குபவர்கள் எப்போதுமே மைக்கை பிடித்துக் கத்துபவர்கள் அல்ல. அமைதியாக,
பிடிவாதமாக தன் வேலையைச் செய்து கொண்டிருப்பவர்கள்.
இந்த
உலகம் கொலாப்ஸ் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் இவர்களைப் போன்றவர்கள்தான். சாதாரண மனிதர்களிடம்
ஒளிந்திருக்கும் இந்த எக்ஸ்ட்ரார்டினரி அம்சம்தான் மனித இனத்தின் மிகப் பெரிய பிளஸ்
பாயிண்ட். அதுதான் ஆர்வமும் விடாமுயற்சியும்.
இதிலிருந்து
நாம் அறிந்து கொள்ள வேண்டியது நமக்குத் தேவைப்படுவது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆர்வத்துடன்
கூடிய விடாமுயற்சி என்கிற அந்த ஒரு சின்ன ஸ்பார்க் என்பதுதான்.
இது
குறித்துத் தொடர்ந்து பேசுவோம். காத்திருங்கள்.
*****


















