Monday, 13 April 2026

சிறுமாற்றங்களும் சிகரத் திருப்பு முனைகளும்!

சிறுமாற்றங்களும் சிகரத் திருப்பு முனைகளும்!

கண்டுபிடிப்புகள் தற்செயலாக நடக்கலாம், ஆனால் வாழ்க்கை மாற நாம் கொஞ்சம் அதை டிசைன் செய்ய வேண்டும்.

பெரிய சபதங்களை விட, சிறு சிறு பழக்கங்களே ஜெயிக்க வைக்கின்றன.

தினமும் இரண்டு மணி நேரம் படிப்பேன், என்று சொல்லாதீர்கள். தினமும் ஒரு பக்கம் படிப்பேன், என்று ஆரம்பியுங்கள். மூளைக்கு இது ஒரு பெரிய சுமையாகத் தெரியாது, அதனால் எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஒத்துழைக்கும். நீங்கள் படிப்பில் சாதிப்பீர்கள்.

மொத்தக் குடும்பத்தையும் மாற்றப் போராடாதீர்கள். நீங்கள் மட்டும் சின்னதாக ஒரு பழக்கத்தை ஆரம்பியுங்கள். காலையில் ஐந்து நிமிடம் ஒன்றாக அமர்ந்து காபி குடிப்பது அல்லது ஒரு குட்டி வாக். ரிப்பிள் எபெக்ட் போல அது மெல்ல மெல்ல எல்லோரையும் தொற்றும். உங்கள் குடும்பம் ஒரு மகத்தான மாற்றத்தை நிகழ்த்தும்.

ஒரு தெருவைச் சுத்தம் செய்யத் தேவையில்லை, ஒரு முதியவருக்கு உதவி செய்யுங்கள் அல்லது ஒரு மரக்கன்று நடுங்கள். நீங்கள் செய்வதைப் பார்த்து மற்றவர்களுக்குள் ஒரு அற எழுச்சி உருவாகும் என்கிறது சமூக அறிவியல்.

கண்டுபிடிப்பாளர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமல்ல, அவர்கள் கவனிப்பாளர்கள். ஏன் இது இப்படி நடந்தது? என்று கேட்கும் எவருக்கும் ஒரு புது உலகம் திறக்கக் காத்திருக்கிறது.

லூயிஸ் பாஸ்டர் சொன்னது போல, தயாராக இருக்கும் மனதையே வாய்ப்புகள் தேடி வரும்.

அடுத்த முறை நீங்கள் எதையாவது கீழே கொட்டினால் வருத்தப்பட வேண்டாம். கொஞ்சம் உற்றுப் பாருங்கள், அது ஒரு புதிய கண்டுபிடிப்பின் ஆரம்பமாக இருக்கலாம்!

உலகை மாற்ற, உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள, நீங்கள் புதிய கண்டுபிடிப்பாளராக எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

சிறு சிறு பழக்கங்கள் மூலமாகவும், தங்கள் பலவீனத்தையே பலமாக மாற்றிக் கொள்வதன் மூலமாகவும் இந்த உலகத்தை அண்ணாந்து பார்க்க வைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருவரைப் பற்றி இங்கு காண்போம்.

முதலாமவர், ஓர் ஆசிரியர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஜெனிவீவ் வியா காவா என்பவர் ஒரு ஸ்பெஷல் எஜுகேஷன் டீச்சர். 45 வருடம் ஸ்பெஷல் குழந்தைகளுக்காகவே தன் வாழ்க்கையைத் தாரை வார்த்தவர். அவர் இறந்தபோது, அவர் ஒரு மல்டி மில்லியன் மில்லியனர் என்பது யாருக்கும் தெரியாது.

ஏன் தெரியுமா? அவர் வாழ்ந்த விதம் அப்படி. கிரேட் டிப்ரஷன் காலத்தில் வளர்ந்தவர் என்பதால், ஒரு கூப்பன் பேப்பரைக் கூட வீணாக்க மாட்டார். சிக்கனம் அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது.

அவர் இறந்த பிறகு அவர் வேலை பார்த்த பள்ளிக்கு ஒரு செக் வந்தது. அதன் மதிப்பு ஒரு மில்லியன் டாலர். ஏதோ கொஞ்சம் உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தார், ஆனால் இவ்வளவு பெரிய தொகையா? என்று ஸ்கூல் சூப்பரிண்டெண்ட்டே ஆச்சரியப்பட்டார்.

அந்தப் பணத்தில் வரும் வட்டியில் மட்டும் ஆண்டுக்கு 25,000 டாலர் ஸ்காலர்ஷிப் அந்தப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கிறது. ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கும் தலா 1,00,000 டாலர் கொடுத்திருக்கிறார். சிக்கனம் என்பது கஞ்சத்தனம் அல்ல, அது ஒரு சேமிப்பு, என்பதற்கு இவர்தான் ஆகச்சிறந்த உதாரணம்.

இரண்டாமவர், ஓர் ஓவியர்.

ஸ்டீபன் வில்ட்ஷையர் என்பவர் லண்டனைச் சேர்ந்த ஓவியர். இந்த ஓவியரின் மூளை ஒரு ஹார்டு டிஸ்க் போல. இவருக்கு ஆட்டிசம். ஒன்பது வயது வரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால், ஏழு வயதிலேயே தன் முதல் ஓவியத்தை விற்றவர்.

இவருடைய ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? ஒரு ஹெலிகாப்டரில் ஏறி ஒரு நகரத்தை 20 நிமிடம் பார்த்தால் போதும். கீழே இறங்கி வந்து, அந்த நகரத்தின் ஒவ்வொரு ஜன்னல், ஒவ்வொரு அடுக்கு என அப்படியே தத்ரூபமாக வரைந்துவிடுவார்.

ஒருமுறை நியூயார்க் நகரத்தை 20 நிமிடம் பார்த்துவிட்டு, 19 அடி நீளமுள்ள ஒரு பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்தார். அதில் ஒரு சிறு தவறு கூட கிடையாது. எல்லோரும் பார்ப்பதைப் பார்ப்பார்கள், ஸ்டீபன் ஒரு ஸ்பாஞ்ச் போல எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்வார்.

லண்டன் ஆர்ட் ஸ்கூலில் பட்டம் பெற்ற இவருக்கு, கலைத்துறைக்கான எம்பிஇ விருதும் வழங்கப்பட்டது. ஒருவரது பலவீனம், உலகின் மிகப்பெரிய பலமாக மாறும் என்பதற்கு ஸ்டீபனே சாட்சி.

உலகில் இரண்டு வகை மனிதர்கள் உண்டு. ஒருவர் தன் திறமையையும் பணத்தையும் ஊதிப் பெருக்குபவர்கள். இன்னொருவர், அமைதியாகச் சேர்த்து வைத்து அதை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்பவர்கள். ஜெனிவீவ் போன்ற டீச்சர்களும், ஸ்டீபன் போன்ற கலைஞர்களும் இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் அழகாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தக் கதைகள் உங்களையும் உத்வேகமூட்டி அப்படி மாற்றக் கூடியவை. இது போன்ற நம்பிக்கையூட்டும், ஜெயிக்கத் தூண்டும் கதைகளைத் தொடர்ந்து காண்போம். இணைந்திருங்கள்.

*****

EER படிவங்கள் மாதிரி

EER படிவங்கள் மாதிரி

தேர்ச்சி அறிக்கையோடு சமர்ப்பிக்கப்பட வேண்டிய EER1, EER2, EER3 படிவங்களின் மாதிரிகளைக் கீழே காண்க.



*****

தேர்ச்சி அறிக்கை 2025 – 2026 : சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள்

தேர்ச்சி அறிக்கை 2025 – 2026 : சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள்

2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கான தேர்ச்சி அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்களைக் கீழே காண்க.











*****

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உண்மைத்தன்மைச் சான்றிதழ் பெற…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உண்மைத்தன்மைச் சான்றிதழ் பெற…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான உண்மைத்தன்மைச் சான்றிதழைப் பெறுவதற்கான படிவத்தைக் கீழே காண்க.

*****

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உண்மைத்தன்மைச் சான்றிதழ் பெற…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உண்மைத்தன்மைச் சான்றிதழ் பெற…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான உண்மைத்தன்மைச் சான்றிதழைப் பெறுவதற்கான படிவத்தைக் கீழே காண்க.

*****

Sunday, 12 April 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.04.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.04.2026

1) உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

2) பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

3) எல் நினோ விளைவால் 2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் கடும் வறட்சி ஏற்படக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

4) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரம் நடந்த அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

5) சீனா, ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனப் பொருட்களின் மீது 50% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

6) இந்தியாவின் பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே வயது மூப்பினால் காலமானார். அவருக்கு வயது 92.

வரலாற்றில் இன்று…

1) 1919 இல் இந்தியாவையே உலுக்கிய ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த தினம் இன்று.

2) அமெரிக்காவின் மூன்றாவது அதிபரும், அந்த நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவருமான தாமஸ் ஜெஃபர்சன் 1743 இல் பிறந்த தினம் இன்று.

3) உலகின் மிகச்சிறந்த சதுரங்க வீரர்களில் ஒருவரான கேரி காஸ்பரோவ் 1963 இல் பிறந்த தினம் இன்று.



Education & GK News

1) The Central Government has hiked the export duty on diesel and jet fuel to meet domestic demand.

2) Bihar Chief Minister Nitish Kumar is set to resign from his post today.

3) It has been predicted that India could face a severe drought in 2026 due to the El Niño effect.

4) The mediation talks held between the United States and Iran in Islamabad, Pakistan—which lasted for 21 hours—ended in failure.

5) Donald Trump has warned that a 50% tariff will be imposed on Chinese goods if China supplies weapons to Iran.

6) India's legendary singer Asha Bhosle has passed away due to old age; she was 92 years old.

Today in History…

1) Today marks the anniversary of the Jallianwala Bagh Massacre, an event that shook the entire nation of India in 1919.

2) Today is the birth anniversary of Thomas Jefferson, the third President of the United States and the principal author of the country's Declaration of Independence, who was born in 1743.

3) Today is the birth anniversary of Garry Kasparov, one of the greatest chess players in the world, who was born in 1963.

Saturday, 11 April 2026

நிலா! மீண்டும் நிலா! ஆர்மிடெஸ் உலா!

நிலா! மீண்டும் நிலா! ஆர்மிடெஸ் உலா!

நிலா என்பது கவிஞர்களுக்குத் தட்டு, காதலர்களுக்குத் தூது, குழந்தைகளுக்குச் சோறு. ஆனால் நாசாவுக்கு? அது ஒரு ரீஎன்ட்ரி பாயிண்ட்.

சுமார் ஐம்பது வருஷங்களுக்கு அப்புறம் நிலாவுக்கு மீண்டும் விசிட் அடிக்கத் தீர்மானித்தது நாசா. அந்தத் திட்டத்தின் பெயர் ஆர்டெமிஸ்.

கிரேக்கக் கதைகளில் சூரியக் கடவுள் அப்பல்லோவுக்கு ஒரு ட்வின் சிஸ்டர் உண்டு. அவள்தான் இந்த ஆர்டெமிஸ். பெயர் பொருத்தம் அபாரம்.

1969 இல் அண்ணன் போனார், அதாவது அப்போது அந்தத் திட்டத்தின் பெயர் அப்பல்லோ. இப்போது தங்கை போகிறாள். திட்டத்தின் பெயர் ஆர்மிடெஸ்.

1950களில் ஒரு ஸ்பேஸ் ரேஸ் நடந்தது. அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் யார் பெரியவன் என்கிற ஈகோ யுத்தம் அது.

ரஷ்யா முதலில் ஸ்புட்னிக் அனுப்பியது, யூரி ககாரினை விண்ணுக்குத் தள்ளியது எனச் சோவியத் யூனியன் ஸ்கோர் செய்துகொண்டே போனது.

அப்போது அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடிக்கு சுருக்கென்றது. சீக்கிரமே நிலாவுக்கு ஆள் அனுப்புவோம், என்றார். சொன்னபடியே 1969 இல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் குதித்தார்.

அதைத் தொடர்ந்து மொத்தம் 12 பேர் நிலாவில் நடந்துவிட்டு வந்தார்கள். கடைசியாக 1972 இல் யூஜின் செர்ன் கிளம்பும்போது, கடவுள் புண்ணியத்துல அப்புறம் வருவோம், என்று சொல்லிவிட்டு வந்தார். அந்த அப்புறம் வருவதற்கு ஐம்பது வருஷமாகிவிட்டது.

அன்று அமெரிக்கா Vs ரஷ்யா என்று இருந்த ஸ்பேஸ் யுத்தம், இன்று அமெரிக்கா Vs சீனா என மாறியிருக்கிறது. சீனா நிலாவில் கொடி நடத்த தயாராகி விட்டது.

ட்ரம்ப் பார்த்தார். சீனாவுக்கு முன்னாடி நாம் போக வேண்டும், என்று கையெழுத்துப் போட்டார். அதுதான் இந்த ஆர்டெமிஸ்.

இடையில் நம் இஸ்ரோவும் சந்திரயான் மூலம் சைலண்ட் ஆக வேலை பார்த்துக்கொண்டிருந்தது.

குறிப்பாக, நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் கண்டுபிடித்துச் சொன்னது நம் சந்திரயான்-1 தான் என்பதை இங்கே ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நிலவின் தென்துருவத்தில் சூரிய வெளிச்சமே படாத பள்ளங்கள் உண்டு. அங்கே ஐஸ் கட்டி உருவில் தண்ணீர் ஒளிந்திருக்கிறது. அந்தத் தண்ணீரைப் பிரித்து ஆக்சிஜன் எடுக்கலாம், ராக்கெட் எரிபொருளாக மாற்றலாம்.

இதெல்லாம் எதற்குத் தெரியுமா?

நிலாவை ஒரு பெட்ரோல் பங்கவோ அல்லது பஸ் ஸ்டாண்ட் ஆகவோ மாற்றப் போகிறார்கள்.

இங்கிருந்து அதாவது பூமியில் இருந்து கிளம்பி நிலாவில் வண்டியை நிறுத்தி, அதாவது ராக்கெட்டை நிறுத்தி, அங்கே எரிபொருள் நிரப்பிக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்குப் போகலாம்.

நிலவுதான் இனி ஏவுதளம்.

இதில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஒரிஜின் எனத் தனியார் கம்பெனிகளும் ஐடி கம்பெனி ப்ராஜெக்ட் மாதிரி உள்ளே புகுந்துவிட்டன.

ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி நிலவு பயணம் என்பது வெறும் வெற்றிக்கான போட்டி. இப்போது அது வாழ்வாதாரத்துக்கான தேவை. நிலாவில் பிளாட் போடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

*****