Monday 3 April 2023

கிழமேல், தென்வடல் என்றால் என்னவென்று தெரியுமா?

கிழமேல், தென்வடல் என்றால் என்னவென்று தெரியுமா?

பத்திரங்களில் கிழமேல், தென்வடல், வடபுரம், தென்புரம், மேல்புரம் என்பன போன்ற சொற்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இவற்றின் பொருள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? அவற்றின் பொருளைப் பற்றி இப்பத்தியில் காண்போம்.

கிழமேல் என்றால் கிழக்கிலிருந்து மேற்காக என்று பொருள். தென்வடல் என்றால் தெற்கிலிருந்து வடக்காக என்று பொருள். வடபுரம் என்றால் வடக்குப் பக்கம் என்று பொருள். தென்புரம் என்றால் தெற்குப் பக்கம் என்று பொருள். மேல்புரம் என்றால் மேற்குப் பக்கம் என்று பொருள்.

பத்திரங்களில் கிழமேல் ஜாதியடி 30 என்று எழுதப்பட்டு இருந்தால் கிழக்கு மேற்காக 30 அடி என்று அதற்குப் பொருள்.

தென்வடல் ஜாதியடி 60 என்று எழுதப்பட்டு இருந்தால் தெற்கு வடக்காக 60 அடி என்று பொருள்.

கிழமேல் ஜாதியடி 30, தென்வடல் ஜாதியடி 60 ஆக 1800 சதுர அடி என எழுதப்பட்டு இருந்தால் கிழக்கு மேற்காக 30 அடியும் தெற்கு வடக்காக 60 அடியும் ஆக மனையின் பரப்பு 30 மற்றும் 60 ஐப் பெருக்கி வரும் 1800 சதுர அடி என்பது அதன் பொருளாகும்.

கிழமேல் ஜாதியடி வடபுரம் 20, தென்புரம் 40, தென்வடல் ஜாதியடிமேல்புரம் 30, கீழ்புரம் 50 ஆக 1200 சதுர அடி என்றால் வடக்குப் பக்கம் மற்றும் தெற்குப் பக்க அளவுகளான 20 மற்றும் 40 இன் சராசரியைக் கண்டு 30 என அறிந்து மேற்குப் பக்கம் கிழக்குப் பக்க அளவுகளான 30 மற்றும் 50 இன் சராசரியைக் கண்டு 40 என அறிந்து இவ்விரு 30 மற்றும் 50 ஐப் பெருக்கி வரும் 1500 சதுர அடி என அறிந்து கொள்ள வேண்டும்.

இனி உங்களுக்குப் பத்திரங்களில் காணப்படும் ஜாதியடி அளவுகள் குறித்து எந்தக் குழப்பமும் இருக்காதுதானே.

*****

No comments:

Post a Comment