Thursday 21 December 2023

தேசிய கணித தினம்

தேசிய கணித தினம்

தேசிய கணித தினம் எப்போது கொண்டாடப்படுகிறது தெரியுமா?

டிசம்பர் 22 அன்று தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது இன்றுதான்.

ஏன் அந்தத் தினத்தில் தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

அன்றுதான் கணித மேதையான சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாள். இவர் தமிழகத்தைச் சார்ந்த கணித மேதை என்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும். இவர் கும்பகோணம் கல்லூரியில் கல்வி பயின்றவர் என்பது தஞ்சைவாசிகளுக்குப் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும். அவரது மனைவியின் பெயர் ஜானகியம்மாள்.

சீனிவாச ராமானுஜம் பிறந்தது 22.12.1887 இல். இறந்தது 26.04.1920 இல். அவர் வாழ்ந்தது 33 ஆண்டுகள். அதற்குள் அவர் கணித உலகில் நிகழ்த்திய சாதனைகள் அளவிடற்கரியன.

அவரது 125வது பிறந்த தினம் 26.12.2011 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது.

அந்த விழாவுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையேற்றார்.

இந்த விழாவில்தான் கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடுவது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2012 முதல் ஒவ்வொராண்டும் டிசம்பர் 22 வது நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் தகவல் கணித ஆர்வமுள்ள உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment