Saturday 27 January 2024

தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியம்தானா?

தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியம்தானா?

அண்மையில் சென்னையில் 2024 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் தமிழக முதல்வர் தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலராக மாற்றுவதே அரசின் இலக்கு என்று அறிவித்தார். உண்மையில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது தமிழகத்திற்குச் சாத்தியம்தானா?

இதற்கான பதிலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பதிலிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

ரகுராம் ராஜன் என்ன சொல்கிறார் தெரியுமா?

இந்தியாவில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு என்பது நான்கு சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்த நான்கு சதவீதம் என்பது 15 சதவீதமாக மாறினால்தான் பெரிய அளவில் வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் உண்டாகும். உற்பத்தித் துறையை வளர்க்க கூடுதல் சலுகை தருவதில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. சலுகைகளால் மட்டுமே வளர்ச்சியைக் கொண்டு வந்து விட முடியாது.

முன்பு நம்மிடம் 2000 நபர்கள் பணிபுரியக் கூடிய ஆலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 20000 நபர்கள் பணி புரியக் கூடிய ஆலைகள் நம்மிடம் இருக்கின்றன. தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் என்ற வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஆண்டுக்கு தமிழகம் 18 சதவீதம் வளர்ச்சி அடைய வேண்டும்.

தமிழகத்தின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது சாத்தியம்தான். ஆனால் அதற்கு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 18 சதவீதம் வளர்ச்சி அடைய வேண்டும். ஆண்டுக்கு 18 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் அளவிற்குத் தமிழகம் திட்டமிட்டால் மட்டுமே 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கைத் தமிழகம் எட்டிப் பிடிக்க முடியும்.

*****

No comments:

Post a Comment