Friday, 12 December 2025

ஸ்பைடர்மேனின் பிறப்பும் புதிய ரத்த வகையும் இ20 பெட்ரோலும்!

ஸ்பைடர் மேனின் பிறப்பு

சிலந்தி மனிதன் (ஸ்பைடர் மேன்) படக்கதைகளைப் (காமிக்ஸ்) படித்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. படித்து வியந்தவர்கள் திரையில் பார்த்து ரசிக்காமலும் இருக்க முடியாது.

ஸ்பைடர் மேன் காமிக்ஸ் முதன் முதலில் வெளியானது 1962, ஆகஸ்ட் 1 இல் அமேசிங் பேன்டசி என்ற காமிக்ஸ் புத்தகத்தில். கிட்டதட்ட 63 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் பொலிவு குன்றாமல்தான் இருக்கிறார் இந்தச் சிலந்திப் பூச்சி மனிதர்.

*****

புதிய ரத்த வகை

நமக்கு ஏ, பி, ஏபி, ஓ இவற்றில் +, - என சில ரத்த வகைகளைத் தெரியும். இதைத் தாண்டிய புதிய ரத்த வகைகளும் இருக்கின்றன. அண்மையில் கர்நாடகம், கோலாரில் CRIB (Cromer India Bengaluru) என்ற புதிய ரத்த வகை 38 வயது பெண்மணியிடம் கண்டறியப்பட்டுள்ளது. வினைபுரியும் நிலையில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் இவ்வகை ரத்தத்தின் சிறப்பம்சமாகும்.

*****

இ20 பெட்ரோல்

ஒரு சில இரு சக்கர வாகனத்தில் E20 Compliance என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படியென்றால் என்ன?

20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் என்பதுதான் அதன் பொருள்.

எத்தனால் என்பது பெட்ரோலைப் போலக் கிடையாது. குறைவான கார்பனையே உமிழும். மேலும் எத்தனால் வெளியிடும் கார்பன் – டை – ஆக்சைடைத் தாவரங்கள் உள்வாங்கிக் கொள்ளும். இதெல்லாம் பெட்ரோலில் சாத்தியப்படாது.

பெட்ரோலை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். எத்தனாலை நாம் கரும்புச்சாறு, மக்காச்சோளம் மற்றும் வீணாகும் தானியங்களிலிருந்து தயாரித்துக் கொள்ள முடியும். இதனால் இறக்குமதி குறையும், விவசாயமும் பலன் பெறும், பலம் பெறும்.

ஒரு கணக்கின்படி 20 சதவீத எத்தனாலைப் பெட்ரோலோடு கலப்பதால் நமக்கு 1.1 லட்சம் கோடி அந்நிய செலவாணி மிச்சமாகும். இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் முன்பே குறிப்பிட்டது போலச் சுற்றுச்சூழலுக்கும் இணக்கமாக உள்ளது. விவசாயம் செழிக்கவும் வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலையைக் குறைக்கவும் வாய்ப்புள்ளதா? ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்குமா என்பது விடை காண முடியாத கேள்வி.

*****

Thursday, 11 December 2025

சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன?

சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன?

உங்கள் அலைபேசியின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள செயலிதான் (App) சஞ்சார் செயலி ஆகும்.

திருடு போகும் செல்போன்களை கண்டறிவதற்கும், இணைய மோசடிகள் தொடர்பான புகார்களை அளிப்பதற்கும் உதவும் வகையில், கடந்த ஜனவரி மாதம் சஞ்சார் சாத்திஎன்ற செயலியை மத்திய அரசு இச்செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி மூலம், செல்போன் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால், அதைப் பதிவு செய்து அனைத்து தளங்களிலும் முடக்கலாம்.

மோசடி அழைப்புகள், மோசடி குறுஞ்செய்திகள் வரும் எண்களை இந்த செயலி மூலம் ரிபோர்ட் ஸ்பேம்செய்து புகார் அளிக்கலாம்.

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளன, எத்தனை பயனில் உள்ளது என்பதையும் இச்செயலி மூலமாக அறியலாம். உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் சிம் கார்டுகள் பெறப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களை இச்செயலி மூலமாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் இச்செயலி மூலமாக செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணையும் சரிபார்க்கலாம்.

இச்செயலின் பயன் என்னவென்று கேட்டால்,

கடந்த 11 மாதங்களில் மட்டும் சஞ்சார் சாத்தி செயலி உதவியுடன் தொலைந்து போன 7 லட்சத்துக்கும் அதிகமான அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 42 லட்சம் பேர் இந்த செயலியைப் பயன்படுத்தித் தொலைந்த செல்போன்களை அனைத்து தளங்களில் இருந்து துண்டித்துள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் இந்தச் செயலி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம் அல்லவா! அப்படிப் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.12.2025)

1) மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

2) தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணிகள் நாளை மறுநாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3) சென்னை கிண்டியில் 480 கோடியில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

4) இந்தியா அமெரிக்க இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடினர்.

5) இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் கப்பல் வாரணாசியில் இயக்கப்பட உள்ளது.

6) ஒரு மில்லியன் டாலர் செலுத்தினார் அமெரிக்க குடியுரிமை வழங்கும் டிரம்பின் தங்க அட்டைத் திட்டம் அமலுக்கு வந்தது.


Education & GK News

1) Chief Minister M.K. Stalin will launch the second phase of the Women's Rights Fund Expansion Project in Chennai today.

2) Voter registration work in Tamil Nadu has been extended till the day after tomorrow.

3) A high-specialty hospital for children is planned to be set up in Guindy, Chennai at a cost of Rs 480 crore.

4) The two leaders spoke on the phone to improve mutual cooperation between India and the US.

5) The first hydrogen ship built in India is to be operated in Varanasi.

6) Trump's Golden Card scheme, which provides US citizenship, came into effect after paying one million dollars.

Wednesday, 10 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.12.2025 (வியாழன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.12.2025 (வியாழன்)

இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள்.

1) தமிழகமெங்கும் 7 மாவட்டங்களில் 10 நவீன நெல் சேமிப்புக் கிடங்குகளுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் அடிக்கல் நாட்டினார்.

2) அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகளில் அடுத்து வாரம் 20 வால்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

3) வாக்காளர் திருத்தப் படிவங்களை (SIR படிவம்) ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.

4) வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் டிசம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்.

5) உணவுப் பாக்கெட்டுகளில் சைவ மற்றும் அசைவக் குறியீடுகள் கட்டாயம் என தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

6) தமிழகத்தில் கூடுதலாக 6568 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சன பட்நாயக் தெரிவித்துள்ளார்.

7) இண்டிகோ நிறுவன செயல்பாடுகளை மேற்பார்வை செய்ய 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நியமித்துள்ளது.

8) யுனெஸ்கோ கலாச்சாரப் ட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது.

9) 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தடை ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்தது.





Education & General Knowledge News – 11.12.2025 (Thursday)

Today is the birth anniversary of Mahakavi Bharathiyar.

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for 10 modern paddy storage facilities in 7 districts across Tamil Nadu.

2) 20 Volvo buses are to be introduced next week in the buses operated by the State Transport Corporation.

3) Today is the last day to submit voter revision forms (SIR form).

4) Those whose names are missing from the voter list can apply from December 16th.

5) The Tamil Nadu Food Safety Department has stated that vegetarian and non-vegetarian symbols are mandatory on food packets.

6) Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has stated that 6568 new polling stations will be set up in Tamil Nadu.

7) The Directorate General of Civil Aviation has appointed an 8-member committee to oversee IndiGo's operations.

8) The Diwali festival has been included in the UNESCO cultural list.

9) A ban on the use of social media by those under 16 years of age has come into effect in Australia.

Tuesday, 9 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.12.2025 (புதன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.12.2025 (புதன்)

1) தமிழகத்தின் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொழிற்பயிற்சி படிப்புக்கான ஐடிஐ தொடங்கும் பணிகள் ஆயத்தமாகியுள்ளன.

2) சென்னையில் ஜனவரி 16 முதல் 18 வரை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

3) பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாடு புது டெல்லியில் டிசம்பர் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது.

4) இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.58 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது.

5) இந்திய அரிசி உட்பட விவசாய விளைபொருள்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Education & General Knowledge News – 10.12.2025

1) Work is underway to start ITIs for vocational training courses in government high schools and colleges in Tamil Nadu.

2) An international book fair is to be held in Chennai from January 16 to 18.

3) A traditional medicine summit is to be held in New Delhi from December 17 to 19.

4) Microsoft is to invest Rs 1.58 lakh crore in India.

5) US President Donald Trump has said that additional taxes will be imposed on agricultural products including Indian rice.

1) Work is underway to start ITIs for vocational training courses in government high schools and colleges in Tamil Nadu.

2) An international book fair is to be held in Chennai from January 16 to 18.

3) A traditional medicine summit is to be held in New Delhi from December 17 to 19.

4) Microsoft is to invest Rs 1.58 lakh crore in India.

5) US President Donald Trump has said that additional tariffs will be imposed on agricultural products, including Indian rice.

Monday, 8 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.12.2025)

1) மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் உயர்நிலைப் பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2) கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை என முதல்வர் தெரிவித்துள்ளார்.

3) கொரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு இதய நாள தளர்ச்சி அதிகரித்துள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4) தங்கும் விடுதிகளில் எண்ம முறையில் (டிஜிட்டல் முறை) ஆதார் சரிபார்ப்பு நடைமுறைகள் விரைவில் அமலாக உள்ளன.

5) இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள விமான சேவை குளறுபடிகள் படிப்படியாகச் சீரடையத் தொடங்கியுள்ளன.

5) ரஷ்யா நேரடி அச்சுறுத்தல் நாடு இல்லை எனவும் இந்தியா கூட்டாளி நாடு எனவும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

6) தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the Veeramangai Velunachiyar High Level Bridge in Madurai.

2) The Chief Minister has said that it is the duty of citizens to contribute to the Flag Day fund.

3) Medical studies have shown that the incidence of heart failure has increased 4 times after Corona.

4) Digital Aadhaar verification procedures in hotels are coming into effect soon.

5) The flight service disruptions at IndiGo Airlines have gradually started to improve.

5) The new US security policy has declared that Russia is not a direct threat country and India is an ally.

6) Moderate rain is likely in Tamil Nadu for the next six days.

Sunday, 7 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.12.2025)

1) மின்னணு துறையில் இந்தியாவின் தலைநகராகத் தமிழகம் மாறியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2) தொடர் மழையால் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

3) தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி டிசம்பர் 11 இல் துவங்குகிறது.

4) தெற்காசியாவில் பெய்த கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1750 ஐக் கடந்தது.

5) கோவாவில் இரவு கேளிக்கை விடுதியில் எரிவாயு உருளை (சிலிண்டர்) வெடித்ததில் 25 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

6) இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ரத்தாவதால் விமான கட்டணங்கள் ஆறு மடங்கு அதிகமாயுள்ளன.

7) வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்கியிருக்கலாம் என மத்திய அரசு அறிவுத்துள்ளது.

8) தமிழகத்தில் ஆறு நாட்களக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

9) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றது.








Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has proudly stated that Tamil Nadu has become the capital of India in the electronics sector.

2) Dengue incidence has increased in Tamil Nadu due to continuous rains.

3) The work of checking electronic voting machines across Tamil Nadu will begin on December 11.

4) The death toll due to heavy rains in South Asia has crossed 1750.

5) 25 people were killed in a gas cylinder explosion at a nightclub in Goa. Many were seriously injured.

6) Airfares have increased six times due to cancellation of IndiGo flights.

7) Former Bangladesh Prime Minister Sheikh Hasina can stay in India as long as she wants, the Central Government has informed.

8) There is a possibility of moderate rain in Tamil Nadu for six days.

9) India won the one-day cricket match against South Africa.

Thursday, 4 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.12.2025)

1) தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 77.52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் எனத் தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2) பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

3) தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

4) புயல் வலுவிழந்ததால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை அளவு குறைந்தது.

5) இந்தியாவுக்கு வருகை தந்துள்ள விளாதிமிர் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

6) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.43 ஆகச் சரிவு கண்டது.

7) ஏ.வி.எம். சரவணன் வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 86.



Education & GK News

1) The Tamil Nadu Election Commission has said that 77.52 lakh voters may be removed from the electoral roll of Tamil Nadu.

2) The Election Commission has announced that the mango symbol of the Pattali Makkal Katchi has been blocked.

3) Geographical indication has been obtained for Thooyamalli rice and Kaundhapadi sugar.

4) The rainfall in Chennai and its surrounding districts has decreased as the cyclone has weakened.

5) Five-tier security has been provided to Vladimir Putin, who is visiting India.

6) The value of the Indian rupee against the dollar has fallen to 90.43.

7) A.V.M. Saravanan passed away due to old age. He was 86.

Wednesday, 3 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.12.2025 (வியாழன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.12.2025 (வியாழன்)

1) இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் 875 கோடி ரூபாயைத் தனியார் பள்ளிகளுக்குத் தமிழக அரசு விடுவித்தது.

2) தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

3) தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4) 3631 மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5) அலைபேசிகளில் சஞ்சார் சாந்தி செயலி நிறுவுவது கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

6) இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார்.


Education & General Knowledge News – 04.12.2025 (Thursday)

1) The Tamil Nadu government released Rs 875 crore to private schools under the Free Compulsory Education Scheme.

2) The Tamil Nadu Public Service Commission's 2026 schedule has been released.

3) Prime Minister Narendra Modi has expressed pride that the organic farming of Tamil Nadu farmers is amazing.

4) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that 3631 differently-abled persons have been given power in local bodies.

5) The Central Government has announced that it is not mandatory to install the Sanchar Shanti app on mobile phones.

6) Russian President Vladimir Putin is arriving in India today on a two-day visit.

Tuesday, 2 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.12.2025)

1) வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வழவிழந்தது.

2) கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3) கனமழையின் காரணமாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4) சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5) வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹேக்டேருக்கு 20000 ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6) கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது.

7) அடுத்து ஆண்டு ஏப்ரல் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் துவங்க உள்ளன.

Education & GK News

1) The cyclone in the Bay of Bengal has weakened into a depression.

2) Due to heavy rains, schools and colleges in Chennai, Tiruvallur and Kanchipuram districts have been declared holiday.

3) Due to heavy rains, schools in Chengalpattu, Kallakurichi, Villupuram and Cuddalore districts have been declared holiday.

4) Heavy rain warning has been issued for Salem, Namakkal, Tiruppur and Theni districts.

5) Rs. 20,000 per hectare as relief has been announced for crops affected by the northeast monsoon.

6) Maha Deepam is being lit in Tiruvannamalai today on the occasion of Karthigai Deepam festival.

7) Population census work is to begin from April next year.

Monday, 1 December 2025

2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் & வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள்

& வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியலைக் கீழே காண்க.


கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.12.2025 (செவ்வாய்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.12.2025 (செவ்வாய்)

1) கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2) கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

3) கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

4) நேற்று அமளியுடன் தொடங்கிய மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

5) மிலியாய்டோசிஸ் எனும் எலிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மழைநீரில் வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

6) திருப்பரங்குன்றம் மலை உச்சியிலும் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

7) இந்திய திறமைசாலிகளால் அமெரிக்கா அதிகம் பலனடைந்துள்ளதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.







Education & General Knowledge News – 02.12.2025 (Tuesday)

1) Holiday has been declared for schools and colleges in four districts of Chennai, Tiruvallur, Kanchipuram and Chengalpattu due to heavy rain.

2) Anna University semester exams have been postponed in the districts where holiday has been declared due to heavy rain.

3) Chief Minister M.K. Stalin has ordered to provide relief to crops and livestock affected by heavy rain.

4) The Lok Sabha, which started with a ruckus yesterday, was adjourned for the whole day.

5) The Health Department has advised people to avoid walking barefoot in rainwater to prevent the spread of miliiasis, a rat fever.

6) The Madurai High Court bench has ordered the lighting of the Karthigai Deepam at the top of the Thiruparankundram hill as well.

7) Elon Musk has said that America has benefited a lot from Indian talents.

Sunday, 30 November 2025

அரையாண்டு தேர்வு கால அட்டவணை – டிசம்பர் 2025

அரையாண்டு தேர்வு கால அட்டவணை – டிசம்பர் 2025

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரையாண்டு தேர்வு கால அட்டவணையைக் கீழே காண்க.

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.12.2025)

1) இன்று முதல் தமிழகத்தில் தனிநபர் பயன்பாட்டுக்கான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வு (RTO Registration) ரத்து செய்யப்படுகிறது.

2) கரையைக் கடக்காமல் டித்வா புயல் வலுவிழந்தது. தமிழகத்துக்கு மழை அபாயம் நீங்கியது.

3) டித்வா புயலால் ஏற்பட்ட கனமழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50000 ஏக்கர் வயல்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 13000 ஏக்கர் வயல்களும் நீரில் மூழ்கின.

4) தமிழகத்தில் பெய்துள்ள கனமழையால் நீர்த்தேக்கங்கள் 85 சதவீதம் நிரம்பின.

5) சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 49 பேர் காயமடைந்தனர்.

6) டித்வா புயலால் ஏற்பட்ட கனமழையால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.

7) பொருளாதாரம் மற்றும் ராணுவ வலிமையில் இந்தியா உலகின் மூன்றாவது பலம் வாய்ந்த நாடாக உருவாகியுள்ளது.




Education & GK News

1) From today, the Regional Transport Office (RTO) registration for two-wheelers and four-wheelers for personal use in Tamil Nadu will be canceled.

2) Cyclone Titva weakened without making landfall. The threat of rain has been lifted for Tamil Nadu.

3) Due to heavy rains caused by Cyclone Titva, 50,000 acres of fields in Nagapattinam district and 13,000 acres of fields in Thanjavur district were submerged.

4) Due to heavy rains in Tamil Nadu, reservoirs were filled by 85 percent.

5) 11 people died in a collision between government buses near Tirupattur in Sivaganga district. 49 people were injured.

6) The death toll in Sri Lanka due to heavy rains caused by Cyclone Titva has increased to 334.

7) India has emerged as the third most powerful country in the world in terms of economy and military strength.