Sunday 28 April 2024

உணர்வுள்ள குழந்தை வளர்ப்பு

உணர்வுள்ள குழந்தை வளர்ப்பு

அமெரிக்காவின் புரூஸ் லிப்டன் என்பவர் ‘உணர்வுள்ள குழந்தை வளர்ப்பு’ குறித்துக் கூறுகிறார்.

ஏழு வயதிற்குள் குழந்தையின் ஆழ் மனதில் எவையெல்லாம் பதிகிறதோ அவையெல்லாம் அக்குழந்தையின் வாழ்வு முழுமையையும் தீர்மானிக்கிறது என்கிறார்.

ஏழு வயதிற்குள் ஒரு குழந்தை நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் வளர்க்கப்பட்டால், அக்குழந்தையின் வாழ்வு முழுமையையும் அந்நேர்மறைத் தன்மையும் நம்பிக்கை உணர்வும் தீர்மானிக்கின்றன.

அதே குழந்தை ஏழு வயதிற்குள் எதிர்மறையாகவும், அவநம்பிக்கையுடன் வளர்க்கப்பட்டால் அக்குழந்தையின் வாழ்வு முழுமையையும் அவ்வெதிர்மறைத் தன்மையும் அவநம்பிக்கை உணர்வுகளும்தான் தீர்மானிக்கின்றன.

ஒரு குழந்தையின் 95 சதவீத நடத்தையானது அக்குழந்தையின் ஏழு வயதுக்குள் உருவாகும் ஆழ்மனதால் தீர்மானிக்கப்படுகிறது.

நாற்பது வயதில் திடீரெனக் குற்றமிழைக்கும் ஒருவரின் குற்றப் பின்னணியில் ஏழு வயதிற்குள் உருவான ஆழ்மனம் ஒரு காரணமாக இருக்கிறது.

இதன் காரணமாகவே புரூஸ் லிப்டன் ‘உணர்வுள்ள குழந்தை வளர்ப்பு’ குறித்து வலியுறுத்துகிறார்.

குழந்தைகள் நேர்மறையாக வளர்க்கப்பட்டால் அவர்களின் ஆழ்மனமானது நேர்மறைத் தன்மை மிகுந்ததாக இருக்கிறது. எதிர்மறை உணர்வுகளுடன் வளர்க்கப்பட்டால் அவர்களது ஆழ்மனமானது எதிர்மறைத் தன்மை மிகுந்ததாக இருக்கிறது.

குழந்தை நம்பிக்கை தரும் உணர்வுகளுடன் வளர்க்கப்பட்டால் அக்குழந்தையின் ஆழ்மனம் நம்பிக்கை தரும் உணர்வுகளால் நிரம்புகிறது. அவநம்பிக்கை தரும் உணர்வுகளுடன் வளர்க்கப்பட்டால் அக்குழந்தையின் ஆழ்மனமானது அவநம்பிக்கை நிறைந்ததாக இருக்கிறது.

நேர்மறையாகவும் நம்பிக்கை தரும் வகையிலும் ஆக்கப்பூர்வமாகவும் குழந்தைகளை வளர்ப்பது, அதுவும் குறிப்பாக குறைந்தபட்சம் ஏழு வயது வரையிலேனும் வளர்ப்பது அவர்களது ஆரோக்கியமான ஆழ்மனம் உருவாவதற்கு அடிப்படை என லிப்டன் குறிப்பிடுகிறார். குழந்தைகள் அப்படி வளர்க்கப்பட்டால் அறிவுள்ள, பண்புள்ள, ஆரோக்கியமான குடிமக்களாக வளர்வர்.

லிப்டன் கூறுவதுடன்,

“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே!

பின் நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே!”

என்ற ‘நீதிக்குத் தலைவணங்கு’ என்ற திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம் பெற்றுள்ள புலவர் புலமைப்பித்தனின் திரைப்பாடல் வரிகளும் பொருந்திப் போகின்றது அல்லவா!

ஆகவே பெற்றோர்களும் மற்றோர்களும் உணர்வுள்ள குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தினால் வருங்காலத் தலைமுறையை அருமையாகவும் பெருமையாகவும் உருவாக்க முடியும்.

*****

Wednesday 17 April 2024

உங்கள் வாக்குச்சாவடியை (Polling Station) அறிந்து கொள்ள…

உங்கள் வாக்குச்சாவடியை (Polling Station) அறிந்து கொள்ள…

உங்கள் வாக்குச்சாவடி அதாவது Polling Station ஐ அறிந்து கொள்ள கீழே உள்ள இணையதள இணைப்பிற்குச் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணைப் பதிவிட்டுத் திரையில் தோன்றும் Captcha வைப் பதிவு செய்து Search செய்யவும். அதன் மூலம் உங்களது வாக்குச்சாவடியை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் செல்ல வேண்டிய இணையதள இணைப்பிற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://electoralsearch.eci.gov.in/pollingstation

*****

வாக்களிக்கத் தேவையான அடையாள ஆவணம் எவையெவை என்று தெரியுமா?

வாக்களிக்கத் தேவையான அடையாள ஆவணம் எவையெவை என்று தெரியுமா?

வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இடம் பெற்றிருந்தாலும், பூத் ஸ்லிப்பை அவர் கையில் வைத்திருந்தாலும் வாக்களிப்பதற்கு அவர் ஓர் அடையாள ஆவணத்தை வாக்குச்சாவடியில் காட்டி தன்னுடைய அடையாளத்தை அவர் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். இதற்காக வாக்காளர் அடையாள அட்டையை ஒருவர் வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள பின்வரும் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். அவையாவன,

Ø 1.கடவுச் சீட்டு எனும் பாஸ்போர்ட்.

Ø 2. ஓட்டுநர் உரிமம் எனும் ட்ரைவிங் லைசென்ஸ்.

Ø 3. புகைப்படத்துடன் கூடிய அரசு ஊழியர் அடையாள அட்டை.

Ø 4. புகைப்படத்துடன் கூடிய எம்பி., அல்லது எம்எல்ஏ. அடையாள அட்டை.

Ø 5. புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம்.

Ø 6. வருமான வரி அட்டை எனும் பான் கார்ட்.

Ø 7. NPR அட்டை எனும் NPR ஸ்மார்ட் கார்ட்.

Ø 8. புகைப்படத்துடன் கூடிய நூறு நாள் வேலை அட்டை.

Ø 9. மருத்துவ காப்பீடு அட்டை எனும் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் ஸ்மார்ட் கார்ட்.

Ø 10. மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை.

Ø 11. புகைப்படத்துடன் கூடிய பென்சன் அட்டை.

Ø 12. ஆதார் அட்டை.

வாக்காளர் அடையாள அட்டை உட்பட மேற்படிக் குறிப்பிடப்பட்டுள்ள 12 வகையான அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு வாக்காளர் வாக்களிக்க முடியும்.

மேற்கண்ட அடையாள ஆவணங்கள் இருந்தும் வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் இல்லையென்றால் அவர் வாக்களிக்க முடியாது.

அதே போல வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் மேற்படியான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டாமல் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்.

ஆகவே வாக்களிக்கச் செல்லும் வாக்காளர் பூத் ஸ்லிப்போடு, வாக்களிப்பதற்கான மேற்படி அடையாள ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது அவசியம் ஆகும்.

வாக்களியுங்கள்!

உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்!

நன்றி!

வணக்கம்!

*****

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் PRO அறிந்திருக்க வேண்டிய முக்கிய விதிகளும் நெறிமுறைகளும்!

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் PRO அறிந்திருக்க வேண்டிய முக்கிய விதிகளும் நெறிமுறைகளும்!

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (PRO) 49J, 49M, 49N, 49O, 49MA, 49P, CSV, EDC Voters போன்றவை குறித்தும், வாக்குப்பதிவின் முன்னும், பின்னும், வாக்குப்பதிவின் போதும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவும் எளிய விளக்கக் கையேட்டினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

வாக்குச்சாவடி அலுவலர்களது பணிகளும் பொறுப்புகளும்!

வாக்குச்சாவடி அலுவலர்களது பணிகளும் பொறுப்புகளும்!

2024 மக்களவைத் தேர்லில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணிகளையும் பொறுப்புகளையும் எளிமையான முறையில் விளக்கும் இச்சுருக்கக் கையேட்டினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

EVM கன்ட்ரோல் யூனிட்டைச் சீலிடும் முறை!

EVM கன்ட்ரோல் யூனிட்டைச் சீலிடும் முறை!

மாதிரி வாக்குப்பதிவிற்குப் பிறகு வாக்குப் பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டை எவ்வாறு சீலிடுவது என்பதைக் காண கீழே உள்ள காணொளியைக் காணவும்.

*****

Tuesday 16 April 2024

ஆண் – பெண் வாக்காளர்களுக்கான Tally Sheet

ஆண் – பெண் வாக்காளர்களுக்கான Tally Sheet

மக்களவைத் தேர்தல் 2024 இல் பணியாற்றும் Polling Officer 1 க்குப் பயன்படும் ஆண் – பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ள உதவும் Tally Sheet ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்கான கையேடு

தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்கான கையேடு

2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்குப் பயன்படும் சுருக்கமான மற்றும் தெளிவான தேர்தல் விளக்கக் கையேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Friday 12 April 2024

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவங்கள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவங்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்குப் பயன்படும் நிரப்பப்பட்ட அனைத்து வகை மாதிரி படிவங்களையும் ஒரே கோப்பாகப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடு

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடு

2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்குப் பயன்படும் சுருக்கமான மற்றும் தெளிவான விளக்கக் கையேட்டினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Monday 8 April 2024

சிறந்த மாணவர்களின் 20 பண்புகளைத் தெரிந்து கொள்வோமா?

சிறந்த மாணவர்களின் பண்புகள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோமா?

1. அதிகாலையில் முன்பாக எழ வேண்டும். இரவில் ஒன்பது மணிக்கு முன்பாகவே தூங்கிவிட வேண்டும்.

2. அந்தந்த நாள் பாடத்தை அன்றன்றே படித்து விட வேண்டும்.

3. வீட்டுப்பாடத்தைத் தள்ளிப் போடக் கூடாது.

4. கேட்கின்ற பாடத்தை எழுதிப் பார்க்க வேண்டும்.

5. ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.

6. உதவாத வேலைகளை அதாவது அநாவசியமான வேலைகளை விட்டு விட வேண்டும்.

7. தினசரி நாளிதழ்களைப் படிக்க வேண்டும்.

8. நூலகத்தில் புத்தகம் எடுத்து வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

9. சந்தேகங்களைக் கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

10. மற்றவர்களிடம் கூச்சம் இல்லாமல் பழக வேண்டும்.

11. ஒரு செயலைச் செய்வதற்கு முன் இரு முறை யோசித்து செய்ய வேண்டும்.

12. அவசர வெற்றிகளில் ஆர்வம் காட்டக் கூடாது. Slow and steady, win the race என்ற கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.

13. பொறுமையாகவும் நிதானமாகவும் வெற்றி பெறுவதில் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

14. குறுக்கு வழிகளைப் பரிசீலிக்கவே கூடாது. குறுக்கு வழிகளில் வெற்றி பெற நினைப்பது என்பது நேர்வழியில் வெற்றி பெறுவதை விட பல மடங்கு ஆபத்தானது மற்றும் கடினமானது.

15. நீண்ட கால இலக்கை வகுத்து அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

16. நிறைய படிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.

17. விமர்சனப் பூர்வமாக முன் வைக்கப்படும் கருத்துகளை அணுக வேண்டும்.

18. தற்காலிக தோல்விகளை நிரந்தர தோல்விகளாகக் கருதி விடக் கூடாது.

19. அர்ப்பணிப்போடும் முழு மனதோடும் செய்யப்படும் காரியங்கள் தோற்பதில்லை என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

20. தனக்கும் மற்றவர்களுக்கும் எப்போதும் பயனுள்ளவராக இருக்க வேண்டும்.

*****

Sunday 7 April 2024

எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது தெரியுமா?

எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது தெரியுமா?

எப்போதெல்லாம் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை உளவியல் அறிஞர்கள் ஆராய்ந்து தெரிவித்துள்ளார்கள். அதைப் பற்றித் தெரிந்து கொள்வோமா? ஏன் இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலமாகவே அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டறிய முடியும்.

சிறிவர்களிலிருந்து பெரியவர்கள் வரை பொதுவாக எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால்…

ஆசிரியர் தண்டனை கொடுக்கும் போது அல்லது பணியிடத்தில் தண்டனைக்கு உள்ளாகும் போது

அதிகமான வீட்டுப்பாடம் வழங்கப்படும் போது அல்லது பணியிடத்தில் அதிகமான பணிச்சுமை ஏற்படும் போது

பிறந்த நாளுக்கு யாரும் வர மாட்டார்களோ என்று நினைக்கும் போது

உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது

உடன்படிப்பவர்களுடன் அல்லது பழகுபவர்களுடன் பிரச்சனை ஏற்படும் போது

புதிய வீட்டிற்கு மாறும் போது அல்லது புதிய பணியிடத்தில் பணியேற்க வேண்டி வரும் போது

பள்ளிக்கு புதிய ஆசிரியர் அல்லது அலுவலகத்திற்கு புதிய மேலாளர் வரும் போது

பள்ளி கால அட்டவணை மாறும் போது அல்லது பணியிட நேரம் மாற்றத்துக்கு உள்ளாகும் போது

மதிப்பெண்கள் குறைவாக வாங்கும் போது அல்லது பதவி உயர்வுகள் மறுக்கப்படும் போது

தரநிலை அட்டையைப் (ரேங் கார்டு) பெற்றோர்களிடம் காண்பிக்க நேரும் போது அல்லது பணித்திறனின்மை வெளிப்பட்டு மற்றவர்களின் பரிகாசத்துக்கு ஆளாகும் போது

உடன் பிறப்புகளுடன் அல்லது அருகில் குடியிருப்போருடன் சண்டை நேரிடும் போது

பெற்றோர்களுடன் அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சண்டை ஏற்படும் போது

நெருங்கியவர்களின் மரணத்தின் போது

நம்பிக்கையோடு பழகிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மிரட்டும் போது

திருட்டு அல்லது கொலைகளைப் பார்க்கும் போது

பயத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பார்க்கும் போது அல்லது கதைகளைக் கேட்கும் போது

தீவிர நோய்கள் ஏற்படும் போது

பெற்றோர்கள் அல்லது உறவுகள் அல்லது நண்பர்கள் பிரியும் போது

இது போன்ற மனதுக்கு ஒவ்வாத மற்றும் விரும்பாத சூழ்நிலைகள் ஏற்படும் போதெல்லாம் மனதுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படும் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதன் மூலமாக அதிலிருந்து விடுபட முடியும்.

*****

Saturday 6 April 2024

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான முக்கிய குறிப்புகள்

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான

முக்கிய குறிப்புகள்

18வது நாடாளுமன்றத் தேர்தல் – 2024 ஐ நடத்தும் தேர்தல் அலுவலர்களுக்குத் தேவையான முக்கிய குறிப்புகள் அடங்கிய PDF கோப்பினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

Thursday 4 April 2024

எப்படி படிக்க வேண்டும் தெரியுமா?

எப்படி படிக்க வேண்டும் தெரியுமா?

எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு முன்பாகப் படிப்பதை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

படிப்பதை,

1. படிக்கும் முன்பு

2. படிக்கும் போது

3. படித்த பிறகு

என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வோம். இனி ஒவ்வொரு பகுதியிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

படிக்கும் முன்பு

படிப்பதற்குத்  தயாராக இருங்கள்.

ஆரோக்கியமாக இருங்கள்.

தேவையான புத்தகங்களைத்  தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கையோடு இருங்கள்.

வெற்றியைக் கனவு காணுங்கள்.

படிக்கும் போது

படிப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முக்கியமானவற்றை அடிக்கோடிடுங்கள்.

குறிப்புகளை எழுதிக் கொள்ளுங்கள்.

படிப்பவற்றை ஊகித்துப் பாருங்கள்.

சந்தேகத்தைத் தெளிவு செய்து கொள்ளுங்கள்.

படித்த பிறகு

படித்த பாடத்திற்குக் குறிப்புகளைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

மீள் பார்வை செய்யுங்கள்.

படித்தப் பாடங்களை மனதிற்குள் திரைப்படம் போல ஓட விட்டுப் பாருங்கள்.

இனி இந்த முறையின்படி படித்துப் பாருங்கள். மதிப்பெண்களைக் குவியுங்கள்.

*****

Monday 1 April 2024

இந்தியாவைப் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்!

இந்தியாவைப் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்!

பூஜ்ஜியத்தை ஓர் எண்ணாகக் கண்டுபிடித்தது இந்தியர்கள்.

பூமியின் வடிவம், சுழலும் வேகம் போன்ற விவரங்களை கி.பி. 499 இல் ஆர்யபட்டர் கண்டுபிடித்திருந்தார்.

உலகின் முதல் பல்கலைக்கழகமான தட்சசீலப் பல்கலைக்கழகம் கி.மு. 700இல் தொடங்கப்பட்டது.

அறிவியல் பூர்வமான ஆயுர்வேத மருத்துவ முறை கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியாவில் இருந்து வருகிறது.

கப்பலைப் பற்றி ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களுக்குத் தெரியும்.

கி.மு. 1000 இல் எழுதப்பட்ட சூரிய சித்தாந்தம் என்ற நூல் பூமியின் சுற்றளவு 7840 மைல் என்று குறிப்பிடுகிறது.  பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 253000 மைல் என்று குறிப்பிடுகிறது.

கணிதத்தில் பையின் மதிப்பை இந்தியர்கள் முன்பே அறிந்திருந்தனர்.

கராத்தே, குங்பூவுக்கு மூலமான களரி தோன்றியது இந்தியாவில்தான்.

நியூட்டன் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றி அவருக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பாக சித்தாந்த சிரோன்மணி நூலில் பாஸ்கராச்சாரியர் விவரித்துள்ளார்.

யோகா, சிலம்பம் போன்றவற்றின் தாயகம் இந்தியாதான்.

உலகின் தொன்மையான மொழியான தமிழ் இந்தியாவின் மொழிகளுள் ஒன்று.

இந்தியா குறித்த இத்தகவல்கள் உங்களை இந்தியர் என்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்ளச் செய்யும்.

*****