Thursday 4 April 2024

எப்படி படிக்க வேண்டும் தெரியுமா?

எப்படி படிக்க வேண்டும் தெரியுமா?

எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு முன்பாகப் படிப்பதை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

படிப்பதை,

1. படிக்கும் முன்பு

2. படிக்கும் போது

3. படித்த பிறகு

என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வோம். இனி ஒவ்வொரு பகுதியிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

படிக்கும் முன்பு

படிப்பதற்குத்  தயாராக இருங்கள்.

ஆரோக்கியமாக இருங்கள்.

தேவையான புத்தகங்களைத்  தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கையோடு இருங்கள்.

வெற்றியைக் கனவு காணுங்கள்.

படிக்கும் போது

படிப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முக்கியமானவற்றை அடிக்கோடிடுங்கள்.

குறிப்புகளை எழுதிக் கொள்ளுங்கள்.

படிப்பவற்றை ஊகித்துப் பாருங்கள்.

சந்தேகத்தைத் தெளிவு செய்து கொள்ளுங்கள்.

படித்த பிறகு

படித்த பாடத்திற்குக் குறிப்புகளைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

மீள் பார்வை செய்யுங்கள்.

படித்தப் பாடங்களை மனதிற்குள் திரைப்படம் போல ஓட விட்டுப் பாருங்கள்.

இனி இந்த முறையின்படி படித்துப் பாருங்கள். மதிப்பெண்களைக் குவியுங்கள்.

*****

No comments:

Post a Comment