Monday 1 April 2024

இந்தியாவைப் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்!

இந்தியாவைப் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்!

பூஜ்ஜியத்தை ஓர் எண்ணாகக் கண்டுபிடித்தது இந்தியர்கள்.

பூமியின் வடிவம், சுழலும் வேகம் போன்ற விவரங்களை கி.பி. 499 இல் ஆர்யபட்டர் கண்டுபிடித்திருந்தார்.

உலகின் முதல் பல்கலைக்கழகமான தட்சசீலப் பல்கலைக்கழகம் கி.மு. 700இல் தொடங்கப்பட்டது.

அறிவியல் பூர்வமான ஆயுர்வேத மருத்துவ முறை கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியாவில் இருந்து வருகிறது.

கப்பலைப் பற்றி ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களுக்குத் தெரியும்.

கி.மு. 1000 இல் எழுதப்பட்ட சூரிய சித்தாந்தம் என்ற நூல் பூமியின் சுற்றளவு 7840 மைல் என்று குறிப்பிடுகிறது.  பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 253000 மைல் என்று குறிப்பிடுகிறது.

கணிதத்தில் பையின் மதிப்பை இந்தியர்கள் முன்பே அறிந்திருந்தனர்.

கராத்தே, குங்பூவுக்கு மூலமான களரி தோன்றியது இந்தியாவில்தான்.

நியூட்டன் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றி அவருக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பாக சித்தாந்த சிரோன்மணி நூலில் பாஸ்கராச்சாரியர் விவரித்துள்ளார்.

யோகா, சிலம்பம் போன்றவற்றின் தாயகம் இந்தியாதான்.

உலகின் தொன்மையான மொழியான தமிழ் இந்தியாவின் மொழிகளுள் ஒன்று.

இந்தியா குறித்த இத்தகவல்கள் உங்களை இந்தியர் என்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்ளச் செய்யும்.

*****

No comments:

Post a Comment