Friday 31 December 2021

நா பிறழ் மற்றும் நா நெகிழ் பயிற்சிக்கான சொற்றொடர்கள்

நா பிறழ் மற்றும் நா நெகிழ் பயிற்சிக்கான சொற்றொடர்கள்

1.

ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி. கிழ நரி முதுகில ஒரு பிடி நரை முடி.

2.

யார் தைத்த சட்டை? இது எங்கள் தாத்தா தைத்த சட்டை.

3.

ஏழைக் கிழவர் வாழைப்பழத் தோல் வழுக்கிச் சறுக்கி விழுந்தார்.

4.

ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள்.

5.

கொக்கு நெட்டைக் கொக்கு. நெட்டைக் கொக்கு இட்ட முட்டை கட்டை முட்டை.

6.

புட்டும் புதுப்புட்டு. தட்டும் புதுத் தட்டு. புட்டைக் கொட்டி விட்டுத் தட்டைத் தா.

7.

கரடி கருங்கரடி. கரடி பொடனி கரும் பொடனி.

8.

அவனும் அவளும் அவலும் தெள்ளு மாவும் தின்றார்கள்

9.

மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை ஆகப் பதினான்கு ஓலை.

10.

பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது

11.

அவளை அவலளக்கச் சொன்னேன், அவளும் அவலளக்கவில்லை. இவளை அவலளக்கச் சொன்னேன், இவளும் அவலளக்கவில்லை. அவளும் இவளும் அவலளக்காவிட்டால், எவள் அவலளப்பாள்?

12.

வியாழக்கிழமை ஆழமான குழியில் வாழைப்பழம் அழுகிக் கொழுகொழுத்து விழுவதைக் கண்ட குழந்தைகள் அழத் தொடங்கினர்.

13.

தோவாழாக்கோட்டையிலே மூவாழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழாயிரத்து எழுநூற்று எழுபத்தேழு வாழைப்பழம்!

14.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்குக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா.

15.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது.

16.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

No comments:

Post a Comment