Thursday 30 March 2023

கெஜம், பர்லாங் அளவுகள் பற்றி அறிந்து கொள்வோமா?

கெஜம், பர்லாங் அளவுகள் பற்றி அறிந்து கொள்வோமா?

கெஜம், பர்லாங் போன்ற அளவுகள் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்தவை. தற்காலத்தில் வயதான ஒரு சிலரால் இவ்வளவுகள் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுவதுண்டு. அந்த அளவுகளைப் பற்றி அறிந்து கொள்வோமா? அத்துடன் சாண், முழம் போன்ற அளவுகளுக்குச் சரியான அளவாக எதை எடுத்துக் கொள்வது என்பதற்குக் கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு வழிகாட்டும். மேலும் பல பேச்சுப் புழக்கத்தில் உள்ள அளவுகளுக்கும் கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு வழிகாட்டும்.

1 சாண்

0.75 அடி

1 காலடி

0.75 அடி

1 காலடி

9 அங்குலம் (இஞ்ச்)

1 முழம்

1.375 அடி

1 முழம்

16.5 அங்குலம் (இஞ்ச்)

1 முழம்

41.91 சென்டி மீட்டர்

1 தச்சு முழம்

2.75 அடி

1 தப்படி

3 அடி

1 கெஜம்

2.18 முழம்

1 கெஜம்

3 அடி

1  கெஜம்

4 காலடி

1 கெஜம்

1 தப்படி

1 பர்லாங்

480 முழம்

1 பர்லாங்

660 அடி

1 பர்லாங்

880 காலடி

1 பர்லாங்

220 தப்படி

1 கிலோ மீட்டர்

4375 காலடி

1 கிலோ மீட்டர்

1093 தப்படி

1 மைல்

7041 காலடி

1 மைல்

1760 தப்படி

*****

Wednesday 29 March 2023

நில அளவைக் கணக்குகள்

நில அளவைக் கணக்குகள்

நாம் வழக்கில் பயன்படுத்தும் நில அளவைக் கணக்கீடுகளும் அரசாங்க ஆவணங்களில் பயன்படுத்தும் கணக்கீடுகளும் வேறு வேறு சொற்களால் அமைந்தவை.

புழக்கத்தில் நில அளவைகளைக் குழிக் கணக்கில் சொல்வது பெருவாரியாகப் பயன்பாட்டில் உள்ளது. அரசாங்கக் கணக்குகளில் ஏர்ஸ், ஹெக்டேர் என்ற சொற்களே வழக்கத்தில் உள்ளன. இவ்விரு சொல் வழக்குகளுக்கும் இடையே உள்ள கணக்கீட்டுத் தொடர்பை அறிந்து வைத்துக் கொள்வது எப்போதும் பயன்தரும். அதற்கு கீழே உள்ள அட்டவணை பெரிதும் பயன்படும்.

1 குழி

144 சதுர அடி

1 மா

100 குழி

1 காணி

4 மா

1 சென்ட்

3 குழி (தோராயமாக)

1 கிரவுண்ட்

16.6 குழி (தோராயமாக)

1 ஏக்கர்

3 மா

1 வேலி

20 மா

1 ஏர்

7½ குழி

1 ஹேக்டேர்

7½ மா (தோராயமாக)

1 செய்

6 மா

1 குருக்கம்

1.7 மா (தோராயமாக)

குழி கணக்கு பகுதிக்குப் பகுதி வேறுபடுவதாகும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள 1 குழி = 144 சதுர அடி தஞ்சாவூர் பகுதி வழக்காகும். மதுரைப் பகுதிகளில் 1 குழி என்பது 300 சதுர அடியாகவும், பாண்டிச்சேரி பகுதிகளில் 576 சதுர அடியாகவும் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*****

Tuesday 28 March 2023

ஆவணப் பாதுகாப்புத் தொடர்பாக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆவணப் பாதுகாப்புத் தொடர்பாக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

வீட்டு மனை அல்லது வீடு வாங்கியதும் ஆவணப் பாதுகாப்புத் தொடர்பாக அவசியம் கீழ்காணும் செயல்முறைகளைச் செய்து விட்டால் ஆவணங்கள் தொடர்பாக பிற்காலத்தில் உங்களுக்குத் தேவையான தெளிவுகளையும் விவரங்களையும் அநாவசியத் தேடலின்றி விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ள இந்நடைமுறைகள் பெரிதும் உதவும்.

1. ஆவணக் கோப்புகளைத் தயார் செய்யுங்கள்

வீட்டு மனையாகவோ அல்லது வீடாகவோ நீங்கள் வாங்கிய சொத்துத் தொடர்புள்ள அனைத்து ஆவணங்களையும் முன்பக்கத்தில் பட்டியலிட்டு ஒரு கோப்பைத் தயார் செய்யுங்கள். ஒவ்வொரு உண்மை ஆவணத்தோடும் ஐந்து அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் நகல் (செராக்ஸ்) எடுத்து வைத்துக் கொண்டால் பிற்காலத்தில் தேவைப்படும் போது நகல் எடுப்பதற்காக ஆவணங்களைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அந்த நகல்களில் ஒன்றை எளிதாக விரைவாகக் கேட்ட நொடியில் எடுத்துக் கொடுத்து விடலாம் அல்லது தேவைக்கேற்ப பல வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. முக்கிய சான்றிதழ்களின் தொகுத்து வையுங்கள்

வில்லங்கச் சான்றிதழ்கள், பட்டா மாற்றப்பட்ட சான்றிதழ்கள் போன்றவற்றையும் ஆவணக் கோப்புகளோடு இணைத்து உங்களுக்குத் தேவையான எண்ணிக்கையிலோ அல்லது கூடுதலாகவோ நகலெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உடனடித் தேவைகளுக்கு மற்றும் அத்தேவையின் அவசரகதிக்குச் செயல்பட தயார் நிலையில் இருக்கும் இதுபோன்று முன்கூட்டி எடுத்து வைக்கும் நகல்கள் எப்போதும் உதவும். கல்வி தொடர்பான சான்றிதழ்களுக்கும் இதே அணுகுமுறையைப் பின்பற்றுங்கள்.

3. பெயர் மாற்றச் சான்றுகளைப் பத்திரப்படுத்துங்கள்

மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி ரசீது போன்றவற்றில் உங்களுக்கான பெயர் மாற்றங்களைச் செய்து தொடர்புடைய சான்றுகளோடு பெயர் மாற்றப்பட்ட ரசீதுகளையும் அவற்றின் நகல்களையும் வைத்துக் கொள்ளுங்கள்.

4. முகவரி மாற்றங்களை உடனுக்குடன் செய்து முடியுங்கள்

புதிய வீட்டுக்கு மாறும் போது ஆதார், பான், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் முகவரி மாற்றங்களை விண்ணப்பித்துச் செய்ய வேண்டியிருக்கும். அது போன்ற நிலைமைகளில் பழைய ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் அவற்றில் சில நகல்களையும் வைத்திருக்க வேண்டும். இது போன்ற ஆவணங்களும் நகல்களும் திடீரென்று எப்போதாவது தேவைப்படும். அதே போல மாற்றப்பட்ட ஆவணங்களின் ஆவணங்களோடு அவற்றுக்கும் சில பல நகல்களை எடுத்து வைத்துக் கொள்வது அவசர நிலைமைகளுக்குக் கை கொடுக்கும்.

5. டிஜிட்டல் பாதுகாப்பையும் கையில் எடுங்கள்

தற்காலத்தில் அனைத்து ஆவணங்களையும் பி.டி.எப். ஆக அல்லது புகைப்படமாக மாற்றி பாதுகாக்கக் கூடிய டிஜிட்டல் வசதிகளை நீங்கள் உங்களது அலைபேசி மூலமாகவே செய்து வைத்துக் கொள்ளலாம். இது போன்ற டிஜிட்டல் கோப்புகளைப் பாதுகாப்பாக நீங்கள் உங்கள் மின்னஞ்சல் அல்லது டிரைவ் நினைவகத்திலோ, பென் டிரைவ் போன்றவற்றிலோ, உங்களது தனிப்பட்ட கணினியிலோ, அலைபேசி நினைவகத்திலோ, அரசின் டிஜிட்டல் பாதுகாப்பகத்திலோ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். ஆதார், ஓட்டுநர் உரிமம், பான் போன்றவற்றைப் புகைப்பட வடிவங்களாக அல்லது பி.டி.எப். வடிவமைப்பாக அலைபேசியில் வைத்துக் கொண்டால் எந்நேரமும் உங்களுக்கு அவை பல விதங்களில் பயன்படும். திடீரென்று ஆதார் அட்டையின் நகல் தேவையென்றால் ஆதார் அட்டையைத் தேடி நீங்கள் ஓடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உங்கள் அலைபேசியில் இருக்கும் டிஜிட்டல் வடிவத்தை நீங்கள் துரிதமாக நகலெடுக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது போல அவசியமான முக்கியமான வேறு பல முக்கிய ஆவணங்களை இரு பென் டிரைவ்களில் சேமித்து ஒன்றை வீட்டில் பாதுகாப்பாகவும் மற்றொன்றைக் கைப்பையிலும் வைத்துக் கொள்வதன் மூலமாகத் தேவைப்படும் இடங்களில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஆவணங்கள் தொலைந்து போகும் பட்சத்தில் அவற்றிற்கான நகல்களைக் காட்டி விண்ணப்பிக்கவும் இது போன்ற டிஜிட்டல் ஆவண சேமிப்புகள் உதவும்.

ஆவணப் பாதுகாப்பு தொடர்பாக விவரமானவர்கள் பலர் இது போன்ற பல முறைகளை நடைமுறையில் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் அனுபவங்களிலிருந்தும் அவர்களுடன் உரையாடிய உரையாடல்களிலிருந்தும் இந்தப் பத்தி எழுதப்படுகிறது. இது போன்ற வேறு பல பயனுள்ள தகவல்கள் இருந்தால் அவசியம் அவற்றைக் கருத்துப் பெட்டியில் பகிரவும். பயனுள்ள விவரங்கள் பலருக்கும் பயன்படட்டுமே.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களும் பயன்பெற பகிருங்கள். மேலும் பல பயன்தரும் தகவல்களைக் கொண்ட இந்த வலைப்பூவை உங்கள் நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

*****

 

Sunday 26 March 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஓ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஓ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஓ’ – வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் சொற்கள் அடங்கிய பயிற்சி அட்டவணை

‘ஓ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளும்

சொற்களும்

எழுத்துகள்

சொற்கள்

கோ

கோதுமை

கோடரி

கோழி

சோறு

போர்வை

மோதிரம்

தோரணம்

தொலைநோக்கி

தோட்டம்

தோப்பு

தோழி

நோய் தடுப்பு

கோடை விடுமுறை

பூஞ்சோலை

பேச்சுப்போட்டி

தோகை

சோலை

பெற்றோர்

கோலம்

கோட்டை

போட்டி

கத்தரிக்கோல்

குயிலோசை

ஙோ

சோ

ஞோ

டோ

ணோ

தோ

நோ

போ

மோ

யோ

ரோ

லோ

வோ

ழோ

ளோ

றோ

னோ

*****

Friday 24 March 2023

TNPSC Group 4 தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள…

TNPSC Group 4 தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள…

2022 ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற Group 4 தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK

*****

Monday 20 March 2023

உலக மகளிர் தினமும் உலக ஆடவர் தினமும்

உலக மகளிர் தினமும் உலக ஆடவர் தினமும்

மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம் ஆகும்.

மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான விதையை விதைத்தது 1910 இல் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற உலக மகளிர் மாநாடு ஆகும். இம்மாநாட்டின் தலைவர் கிளாரா ஜெட்கின் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

உலக மகளிர் தினம் மார்ச் எட்டாம் நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. ரஷ்யப் பெண் தொழிலாளிகளின் புரட்சியை நினைவு கூறும் வகையில் உலக மகளிர் தினம் மார்ச் எட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது.

இம்மகளிர் தினம் எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது என்றால் 1911 முதல் கொண்டாடப்படுகிறது.

2011 இல் இதன் நூற்றாண்டு தினம் கொண்டாடப்பட்டது.

மகளிர் தினத்திற்கு உலகளாவிய பார்வை கிடைக்கத் தொடங்கியது ஐக்கிய நாடுகள் சபை இந்நாளைக் கொண்டாடத் தொடங்கியதிலிருந்துதான்.

1975 இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளைக் கொண்டாடத் தொடங்கியதிலிருந்து உலகெங்கும் மகளிர் தினம் மார்ச் எட்டாம் நாளில் பரவலாகப் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகள் உலக மகளிர் தினத்தை விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றொரு முக்கிய அறிவிப்பையும் செய்துள்ளது. 1978 ஐ உலகப் பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது.

இவ்வாண்டான 2023 இல் ஐக்கிய நாடுகள் அவையின் பெண்களுக்கான அமைப்பு ‘பாலின சமத்துவத்துக்கான புதுமை புனைதல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு’ குறித்துச் சிந்தித்துச் செயல்பட அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் பெண்களில் நூற்றுக்கு ஒருவரே முழுமையாகக் கல்வியைக் கற்று முடிக்கிறார். கல்வியை முழுமையாகக் கற்பதிலிருந்து இடைநிற்கும் பெண்கள் அதிகமாக உள்ளனர்.

கல்வியிலும் முன்னேற்றத்திலும் கலாச்சார ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தடைகள் நேரிடும் போது பெண்கள் தளர்ந்து விடுகிறார்கள். பின்தங்கி நின்று விடுகிறார்கள்.

பொருளாதாரத்தைக் கையாள்வதிலும் தயக்கத்தையும் அச்சத்தையும் பெண்கள் உணர்கின்றனர். இதனால் பெண்களின் பொருளாதாரம் ஆண்களால் கையாளப்படுவதாகவே உள்ளது. இதுபோன்ற நிலைகள் மாற வேண்டுமானால் பெண்களுக்கான விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது. அந்த விழிப்புணர்வைத் தரக் கூடிய நாளாக உலக மகளிர் தினம் அமைய வேண்டும் என்பதுதான் உலக மகளிர் தினத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.

பெண்களுக்கான அன்பையும் அறிவையும் விழிப்புணர்வையும் வழங்கும் இனிய நாளாக உலக மகளிர் தினம் அமையட்டும்.

உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவது போல உலக ஆடவர் தினமும் கொண்டாடப்படுகிறது. அது எப்போது கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். உலக ஆடவர் தினம் நவம்பர் 19 ஆம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

உலக மகளிர் தினம்

மார்ச் 8

உலக ஆடவர் தினம்

நவம்பர் 19

*****