Thursday 16 September 2021

சமூக நீதி நாள் உறுதிமொழி

            தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று (17.09.2021) முற்பகல் பத்தரை மணி அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய சமூக நீதி நாள் உறுதிமொழி.

தந்தை பெரியார் பிறந்த நாள்

சமூக நீதி நாள் உறுதிமொழி

            ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அன்பு நெறியும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்.

            சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்.

            சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்.

            மானுடப் பற்றும்  மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்.

            சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்.

இதனை PDF ஆகப் பெறக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1ghJx114C8PXTRZEJyc4lNU0bJSgc4T-i/view?usp=sharing

இப்பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவவும்.

No comments:

Post a Comment