Saturday 2 May 2020

ஊரடங்கு நீட்டிப்பும் தளர்வுகளும்

ஊரடங்கு நீட்டிப்பும் தளர்வுகளும்

மத்திய அரசின் இரு வார ஊரடங்கு நீட்டிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் பின்வரும் தளர்வுகளும், கட்டுபாடுகளும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
v சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி.
v கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை.
v அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
v உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம்.
v ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், எலக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.

v பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்.
v சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை.
v மொபைல் கடைகள், வீட்டு உபயோக பொருள் கடைகள், மின் மோட்டார் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.
v ஊரக, நகர்ப்புற பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
v தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை.
v கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
v நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்.


No comments:

Post a Comment