Sunday 22 September 2019

தமிழா! நினது நீர் நிலைகள்!



            குளம், குட்டை, ஆறு, ஓடை, வாய்க்கால், ஏரி, கண்மாய், கிணறு, கடல்  - இப்படி நாம் அறிந்த நீர் நிலைகளின் பெயர்கள் குறைவு. இதுவும் காலப்போக்கில் குளம், குட்டைகள், ஏரிகள் இல்லாமல் போய் இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. அண்மையில் நீர்நிலைகள் தொடர்பாக தமிழில் புழங்கும் நாற்பத்துக்கும் மேற்பட்ட பெயர்களை அறிந்த போது அசந்து போனேன். அப்பெயர்களைத் தமிழின் செழுமைக்கும், தமிழர்களின் நீர் மேலாண்மைக்கும் மிகச் சிறந்த சான்றுகளாகக் கருதுகிறேன்.
            நீரே வளமைக்கு ஆதாரம். தமிழின் வளமைக்கும் நீர் நிலைகள் குறித்த இப்பெயர்கள் பெரிய சான்றாதாரம்.
            திருக்குறளில் 'ஊருணி' என்ற நீர் நிலையின் பெயரைக் காணலாம்.
            ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம்
            பேரறி வாளன் திரு.             (குறள் எண் : 215)
என்ற குறளில் 'ஊருணி' என்ற அச்சொல்லைக் காணலாம். தமிழின் வளமான அச்சொற்களைக் காப்பதற்காகவேனும் நீர்நிலைகளை நாம் காக்கலாம் என்று அச்சொற்கள் ஒவ்வொன்றையும் படிக்கும் போது தோன்றியது. உங்களுக்கும் அப்படித் தோன்றலாம். படித்துப் பாருங்கள். இவையன்றி உங்கள் பகுதியில் புழங்கும் இன்னபிற சொற்களும் இருக்கக் கூடும். அப்படி இருப்பின் அவை பற்றிப் பின்னூட்டம் இடுங்கள். இப்பட்டியலில் கூடுதல் வரவாகட்டும்.
1. அகழி,
2. அருவி,
3. ஆறு,
4. இலஞ்சி,
5. ஆழிக்கிணறு,
6. உறைகிணறு,
7. ஊருணி,
8. ஊற்று,
9. ஏரி,
10. ஓடை,
11. கட்டுக்கிணறு,
12. கடல்,
13. கண்மாய்,
14. கலிங்கு,
15. கால்,
16. கால்வாய்,
17. குட்டம்,
18. குட்டை,
19. குண்டம்,
20. குண்டு,
21. குமிழி,
22. குமிழி ஊற்று,
23. குளம்,
24. கூவம்,
25. கூவல்,
26. வாளி,
27. கேணி,
28. சிறை,
29. சுனை,
30. சேங்கை,
31. தடம்,
32. தனிக்குளம்,
33. தாங்கல்,
34. திருக்குளம்,
35. தொடுகிணறு,
36. தெப்பக்குளம்,
37. நடைகேணி,
38. நீராழி,
39. பிள்ளைக் கிணறு,
40. பொங்கு கிணறு,
41. பொய்கை,
42.  மடு,
43. மடை,
44. மதகு,
45. மறுகால்,
46. வலயம்,
47. வாய்க்கால்.
*****

No comments:

Post a Comment