நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்
| 
   தவளை கத்தினால் மழை.  | 
 
| 
   அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம்.  | 
 
| 
   தும்பி பறந்தால் தூரத்தில் மழை.  | 
 
| 
   எறும்பு ஏறில் பெரும் புயல்.  | 
 
| 
   மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.  | 
 
| 
   தை மழை நெய் மழை.  | 
 
| 
   மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.  | 
 
| 
   தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.  | 
 
| 
   புற்று கண்டு கிணறு வெட்டு.  | 
 
| 
   வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்.  | 
 
| 
   காணி தேடினும் கரிசல் மண் தேடு.  | 
 
| 
   களர் கெட பிரண்டையைப் புதை.  | 
 
| 
   கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி. கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.  | 
 
| 
   நன்னிலம் கொழுஞ்சி. நடுநிலம் கரந்தை. கடை நிலம் எருக்கு.  | 
 
| 
   நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்.  | 
 
| 
   ஆடிப்பட்டம் பயிர் செய்.  | 
 
| 
   விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.  | 
 
| 
   மழையடி புஞ்சை. மதகடி நஞ்சை.  | 
 
| 
   களரை நம்பி கெட்டவனும் இல்லை. மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.  | 
 
| 
   உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ.  | 
 
| 
   அகல உழவதை விட ஆழ உழுவது மேல்.  | 
 
| 
   புஞ்சைக்கு நாலு உழவு. நஞ்சைக்கு ஏழு உழவு.  | 
 
| 
   குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.  | 
 
| 
   ஆடு பயிர் காட்டும். ஆவாரை கதிர் கட்டும்.  | 
 
| 
   கூளம் பரப்பி கோமியம் சேர்.  | 
 
| 
   ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.  | 
 
| 
   நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.  | 
 
| 
   காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.  | 
 
| 
   தேங்கி கெட்டது நிலம். தேங்காமல் கெட்டது குளம்.  | 
 
| 
   கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.  | 
 
| 
   சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும்.  | 
 
| 
   விதை பாதி வேலை பாதி.  | 
 
| 
   காய்த்த வித்திற்கு பழுது இல்லை.  | 
 
| 
   பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.  | 
 
| 
   கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது.  | 
 
| 
   ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள்
  வைத்த தனம்.  | 
 
| 
   கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும்.  | 
 
இதை PDF ஆகப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment