Thursday, 16 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.07.2026

1) தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதல் கட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு துவங்குகிறது.

2) மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான விவரங்களைப் பொதுமக்கள் சுயமாக இன்று முதல் இணையத்தின் மூலம் வழங்கலாம்.

3) தமிழகத்தில் ரசாயன நிறமூட்டி கலந்த அப்பளம் மற்றும் வற்றல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

4) நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாயின.

5) நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

Education & GK News

1) The first phase of the census in Tamil Nadu begins on August 1.

2) Starting today, the public can voluntarily provide census details online.

3) A ban has been imposed in Tamil Nadu on dried fritters containing chemical coloring agents.

4) The results of the NEET re-examination have been released.

5) Prime Minister Narendra Modi is inaugurating the country's first hydrogen train today.

கருப்புப் பளிங்கின் கடைசி அத்தியாயம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 23

கருப்புப் பளிங்கின் கடைசி அத்தியாயம்!

இப்போது நாம் போகப் போகும் அட்ரஸ் எதுவென்றால், லண்டன்

இருள்.

மரணத்தின் உறைபனி வாசம் அறையை நிரப்பியது.

நொடி முட்கள் நகரும் சத்தம் கூட இல்லை.

காலமே உறைந்துவிட்டது போன்ற அமானுஷ்ய அமைதி.

ஜான் டீயின் நெஞ்சு ஏதோ ஒரு பயத்தில் பிழியப்பட்டது. தன் பாக்கெட்டில் இருந்த தீக்குச்சிப் பெட்டியைத் தட்டி, நடுக்கத்துடன் ஒரு குச்சியை உரசினார்.

சுரீரென்று வெளிச்சம் எழுந்தது. அவர் மேஜை மீதிருந்த மெழுகுவர்த்தியைப் பற்றவைத்தார்.

மஞ்சள் வெளிச்சம் அறையெங்கும் பரவியது.

அங்கே, கதவருகே ஓர் உருவம் நின்றிருந்தது.

அதன் முகத்தைப் பார்த்த ஜான் டீயின் கையில் இருந்த மெழுகுவர்த்தி நழுவித் தரையில் விழுந்தது. அவர் உடம்பின் மொத்த ரத்தமும் உறைந்துபோனது.

ஏனெனில், அங்கே நின்றிருந்தது அவரேதான்!

அதே நீண்ட தாடி, அதே தீட்சண்யமான கண்கள், அதே உடலமைப்பு. ஆனால், அந்த முகத்தில் ஒரு அசுரத்தனமான, குரூரமான புன்னகை இருந்தது.

"நீ... நீ யார்?" ஜான் டீயின் குரல் தொண்டைக்குள்ளேயே செத்தது.

கதவருகே நின்ற இன்னொரு ஜான் டீ பேசவில்லை. மெதுவாக நடந்து வந்து, மேஜை மீது கிடந்த பேனாவைத் தன் கையில் எடுத்தது.

நிஜ ஜான் டீக்கு மூச்சு முட்டியது. பயத்தில் தன் கைகளைப் பார்த்தார்.

அங்கே கைகள் இல்லை!

அவரது விரல்கள் மெதுவாகக் காற்றோடு காற்றாகக் கரைந்து, காற்றில் மிதக்கும் புகை போலத் தெரிந்தன. தன் உடம்பை அவராலேயே தொட முடியவில்லை. எந்த உணர்ச்சியும் இல்லை.

அப்போதுதான் அவருக்கு அந்தப் படுபயங்கரமான உண்மை உறைத்தது.

அவர் பதற்றத்துடன் நாற்காலியில் அமர்ந்திருந்த கெல்லியைப் பார்த்தார்.

கெல்லி இன்னும் அப்படியேதான் அமர்ந்திருந்தான். ஆனால், அவனுடைய முகத்தில் சதை இல்லை. கண்கள் இரண்டும் எப்போதோ வறண்டுபோய்க் குழியாகக் கிடந்தன. அவன் இறந்து பல வாரங்கள் ஆகியிருக்க வேண்டும்! அவனது மண்டை ஓட்டின் மீது தோல் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது.

ஜான் டீக்கு இப்போது எல்லாமே புரிந்தது.

அவர்கள் அந்தக் கிரிஸ்டல் கல்லை முதன்முதலில் தொட்டபோதே, எட்வர்ட் கெல்லி இறந்துவிட்டான். இத்தனை நாட்களாகத் தன் பக்கத்தில் அமர்ந்து, ஆவிகளுடன் பேசுவதாக நடித்தது கெல்லியே அல்ல! அந்தக் கிரிஸ்டல் கல்லுக்குள் இருந்த ஏதோ ஓர் அமானுஷ்ய சக்தி, கெல்லியின் பிணத்தை ஒரு பொம்மை போல இயக்கி அவரிடம் நாடகமாடியிருக்கிறது.

தன் சொந்த ரத்தத்தைக் கொடுத்து அந்தப் பளிங்குத் திரையைத் திறந்ததன் மூலம், ஜான் டீயின் ஆன்மாவையும் அது உறிஞ்சித் தனக்குள் இழுத்துக் கொண்டுவிட்டது.

அசல் ஜான் டீ இப்போது அந்த அக்வமேரின் கருப்புக் கண்ணாடிக்குள்ளே சிறைபிடிக்கப்பட்டுவிட்டார்!

வெளியே,

ஜான் டீயின் உடலைக் கைப்பற்றிய அந்தப் புதிய அமானுஷ்ய சக்தி, கண்ணாடிக்கு முன்னால் வந்து நின்றது. கண்ணாடியின் ஆழத்தில் சிறு புள்ளி போல உறைந்து கிடந்த நிஜ ஜான் டீயைப் பார்த்து நக்கலாகச் சிரித்தது.

பிறகு மேஜையில் இருந்த காகிதத்தை இழுத்து, பேனாவை மையில் நனைத்து எழுதத் தொடங்கியது:

"அமானுஷ்யங்களின் அட்ரஸை அவ்வளவு சீக்கிரம் எவனாலும் கண்டுபிடிக்க முடியாது மிஸ்டர் விஜயராமன்! இதைப் படிக்கும் ஒவ்வொருவரையும் நான் என் ஆவி உலகிற்கு இழுக்கப் போகிறேன்."

கண்ணாடிக்குள்ளே இருந்து நிஜ ஜான் டீ தன் முழு பலம்கொண்டு அலறினார், "ப்ளீஸ் விஜயராமன்! விடாதே. அந்த அட்ரஸை வெளியில் கொண்டு வந்து விடு. இதைப் படிக்கும் இந்த வலைப்பூவின் வாசகர்களைக் காப்பாற்றி விடு!" ஆனால், சத்தம் வெளியே வரவில்லை. அது வெறும் ஒரு கல்லின் பிம்பம் மட்டுமே!

இப்போது உங்களுக்குக் கேள்விகள் எழுகிறதா?

யாரிந்த ஜான் டீ?

யாரந்த எட்வர்ட் கெல்லி?

இந்த கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் வேண்டுமா? அல்லது ஆவிகளின் உலகில் சிக்கிக் கொள்ளாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டுமா?

எதுவாக இருந்தாலும் நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Wednesday, 15 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.07.2026

1) தமிழகத்தில் 950 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குக் கூடுதலாக 150 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2) இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.

3) செமி கண்டக்டர், செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்க 1.9 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

4) நிகழாண்டில் இதுவரை 169 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.

5) இந்தியாவில் சூன் மாத சரக்கு ஏற்றுமதி 15.5 சதவீதம் அதிகரித்துள்ளது.


Education & GK News

1) The number of MBBS seats in Tamil Nadu has been increased by 950; government medical colleges have been allocated an additional 150 seats.

2) A meeting of the Tamil Nadu Cabinet, led by Chief Minister Vijay, is being held today.

3) The Central Government has allocated Rs. 1.9 lakh crore to boost semiconductor and mobile phone manufacturing.

4) Organs have been obtained from 169 donors so far this year.

5) India's merchandise exports rose by 15.5 percent in June.

சாட்சி சொல்லும் சாத்தான்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 22

சாட்சி சொல்லும் சாத்தான்!

விஞ்ஞானம் வேகமெடுத்துக்கொண்டு ஓடும் கி.பி 2026 இல் இருந்து கொஞ்சம் ரிவர்ஸ் கியர் போடுங்கள்.

1681 ஆம் வருடம்.

அட்ரஸ் : லண்டன்.

ஜோசப் கிளான்வில் என்றொரு மேதாவி ஒரு புத்தகம் எழுதினார்.

புத்தகத்தின் பெயர் சடுசிஸ்மஸ் ட்ரையம்பேட்டஸ்.

லத்தீன் பெயர், பெயரைப் படிக்க நினைத்தால் கொஞ்சம் நாக்கு மடிக்கும்.

விஷயம் எளிது. "பேய்களை, பிசாசுகளை நம்பாதவன் ஒரு மகா முட்டாள்; அறிவிலி!" இதுதான் அந்தத் தலைப்பின் பொருள்.

இன்றைக்கு யாராவது இப்படிப் புத்தகம் எழுதினால், "ப்ரோ, கொஞ்சம் சைக்கியாட்ரிஸ்ட்டைப் போய் பாருங்க" என்று கமெண்ட் பாக்ஸில் கழுவி ஊற்றுவோம். ஆனால் அன்று அதுதான் சட்டம், அதுதான் அறிவியல்!

அப்போது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சூனியக்காரி வேட்டைகள் படு பிரபலம்.

ஒரு பெண்ணை சூனியக்காரி என்று நிரூபிக்க என்ன ஆதாரம் வேண்டும் தெரியுமா? டிஎன்ஏ கிடையாது, கைரேகை கிடையாது, சிசிடிவி புட்டேஜ் தேவையே இல்லை.

நீதிமன்றத்தில் கூண்டு ஏறும் ஒரு பத்து வயது சிறுமி, திடீரென்று நடுங்கி, கையை நீட்டி,

"அதோ அந்தப் பெண்ணின் தோள் மேல் ஒரு கருப்புப் பேய் உட்கார்ந்திருக்கிறது! எனக்கு மட்டும் அது தெரிகிறது!" என்று கத்தினால் போதும்.

முடிந்தது கதை. அந்தப் பெண்ணுக்கு அன்று மாலை மரண தண்டனை நிச்சயம்.

இதற்குப் பெயர் ஸ்பெக்ட்ரல் எவிடென்ஸ். அதாவது, கண்ணுக்குத் தெரியாத சாட்சியம்.

குற்றம் சாட்டப்பட்டவரின் உடலை விட்டு அவரது ஆன்மாவோ அல்லது ஒரு பேயோ வெளியே வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும் வடிவில் டார்ச்சர் செய்யும் என்பது அன்றைய கோர்ட் நம்பிய தியரி.

இங்கே லாஜிக்கே இல்லையே. அந்த லாஜிக் எங்கே போனது?

இங்கேதான் மனித மூளையின் ஆகச்சிறந்த முரண்பாடு ஒளிந்திருக்கிறது.

இப்போது கேள்வி என்னவென்றால், பேய் இருக்கிறதா என்று எப்படித் தெரியும்?

அதற்குப் பதில் என்னவென்றால், அந்தச் சிறுமி சொல்கிறாளே, அதுதான் சாட்சி என்பதே.

இப்போது கேள்வி என்னவென்றால், அந்தச் சிறுமி பொய் சொன்னால்?

அதற்கும் பதில் இருக்கிறது. பேய்களைப் பார்க்கும் சக்தி குழந்தைகளுக்குத்தான் இருக்கிறது என்று சடுசிஸ்மஸ் புத்தகம் சொல்கிறதே!

இதுதான் அந்த மரண தண்டனைக்கான லாஜிக். ரொம்ப கொடூரமாக இருக்கிறது என்கிறீர்களா? அப்படித்தான் இருந்தது அப்போது.

இப்படியெல்லாம், ஒரு கற்பனையான, கண்ணுக்குத் தெரியாத, நிரூபிக்க முடியாத ஒரு வஸ்துவை சாட்சியாக வைத்து, ரத்தமும் சதையுமான நிஜ மனிதர்களைக் கொன்று குவித்தார்கள் என்பது எவ்வளவு பெரிய சோகம்.

அறிவியலின் அடிப்படை என்பது காண்பது, சோதிப்பது, நிரூபிப்பது. ஆனால் அன்று, நம்பாதவன் அறிவிலி என்ற ஒற்றை வரியைக் கொண்டு லாஜிக்கை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து விட்டார்கள்.

இதையெல்லாம் படித்துவிட்டு "என்னடா முட்டாள்தனம்!" என்று நாம் சிரிக்கலாம். ஆனால், வாட்ஸ்அப் பார்வேர்டுகளையும், டீப் பேக் வீடியோக்களையும், யாரோ சொன்னார்கள் என்ற வதந்திகளையும் அப்படியே நிஜமென்று நம்பி இன்றும் நாம் செய்யும் ஆன்லைன் விச் ஹண்ட்களை யோசித்துப் பார்த்தால், நமக்கும் சடுசிஸ்மஸ் மனிதர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது.

அன்று பேய்கள் சாட்சி. இன்று பார்வேர்ட் மெசேஜ்கள் சாட்சி.

விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. மனிதன்? அதுதான் அமானுஷ்யங்களை இன்னமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

Tuesday, 14 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.07.2026

1) தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

2) மதுரையில் அதிகபட்சமாக 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.

3) பருவமழை தாமத்ததால் இந்தியாவில் காரீப் சாகுபடி பணிகள் தாமதமாகி உள்ளன.

4) ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழந்தார். இதற்கு இந்தியா தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

5) இந்தியா பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலாகிறது.

Education & GK News

1) Temperatures exceeding 100 degrees Fahrenheit have been recorded in several parts of Tamil Nadu.

2) A maximum temperature of 108.5 degrees Fahrenheit was recorded in Madurai.

3) Kharif cultivation activities in India have been delayed due to the late arrival of the monsoon.

4) An Indian sailor lost his life in an attack carried out by Iran in the Strait of Hormuz; India has expressed its condemnation of the incident.

5) The trade agreement between India and Britain comes into effect today.

மரணத்துக்குப் பின் ஓர் ஓடிபி

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 21

மரணத்துக்குப் பின் ஓர் ஓடிபி

பைலேண்ட் அபேயில் நடந்த கதை இப்போது நடந்தால் எப்படி இருக்கும்?

அட்ரஸ் : சென்னையின் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு.

நள்ளிரவு இரண்டு மணி.

கணேஷ் தன் லேப்டாப்பில் உலகத்தை உலுக்கும் ஏதோ ஒரு மொக்கையான கோடிங் செய்துகொண்டிருந்தான்.

திடீரென ஏசி குளிர்காற்று நின்றது. ஓசியில் வந்த கரண்ட் கட் இல்லை. அறையின் மூலையில், ரேடியம் வாட்ச் டயல் போல லேசான நீல ஒளியுடன் ஒரு நபர் சப்பணம் கட்டி அமர்ந்திருந்தார்.

கணேஷ் பயப்படவில்லை. ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவனுக்குப் பேயைப் பார்த்து பயப்படும் அளவுக்கு ரத்த ஓட்டம் இருப்பதில்லை.

"யார்? மாசக் கடைசியில் திருட வந்தீங்களா? அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ்தான் இருக்கு. பேங்க்லேயே தேடிட்டு இருக்காங்க."

"நான் திருடன் இல்லை, பேய்" என்றது அந்த உருவம், விப்ரோவில் அப்ரைசல் வாங்கிய நபர் போலச் சோகமாக.

"அப்படியென்றால் என் சட்டையைக் கிழிக்கப் போகிறாயா? பதினைந்தாம் நூற்றாண்டு கதை போல?"

"இல்லை தம்பி. நான் போன வாரம் கார்டியாக் அரெஸ்ட்டில் செத்த பக்கத்து பிளாட் சுந்தரம். சாகும்போது நாலு கிரெடிட் கார்டில் மினிமம் டியூ கட்டாமல் செத்துவிட்டேன். இப்போது மேலோகத்தில் என் சிபில் ஸ்கோர் பூஜ்ஜியமாக இருக்கிறது. எமலோக வாசலில் லோன் ரிஜெக்ட் ஆனவன் போல நிக்க வச்சிருக்காங்க. மோட்சத்துக்கு விசா கிடைக்கவில்லை."

"நான் என்ன செய்ய வேண்டும்? பாவம் புண்ணியம் என்று பேசினால் எனக்குப் பிடிக்காது."

"பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை. என் டெஸ்க்டாப்பில் ஒன்டைம் பாஸ்வேர்ட் வரும். கொஞ்சம் கூகுள் பேயில் அந்த இரண்டு லட்சத்தைக் கட்டிவிடு தம்பி. சிபில் ஸ்கோர் ஏறிவிடும். அந்த வெள்ளி ஸ்பூன் கதையெல்லாம் உனக்குத் தெரியும்தானே? அன்று ஸ்பூன், இன்று கார்டு."

கணேஷ் லேப்டாப்பை மூடினான். முகம் எந்தச் சலனமும் இன்றி அமிதாப் பச்சன் போல இருந்தது.

"முடியாது. அடுத்த மாசம் லே ஆப் வரப்போகிறது. நானே கார்டு கட்ட முடியாமல் பேயாகப் போகிறேன். இரண்டு பேரும் பேயாக எமலோக வாசலில் சந்திப்போம். அங்கே பேசிக்கொள்ளலாம்."

பேய் பெருமூச்சுவிட்டது.

கலிகாலத்தில் யாரிடமும் இரக்கமில்லை என்று நினைத்திருக்கலாம். அது அப்படியே காற்றோடு காற்றாக, தன் ஓடிபியோடு மறைந்தது.

கணேஷ் மீண்டும் கோடிங் செய்ய ஆரம்பித்தான்.

இப்படித்தான் எழுத வேண்டும் அந்தக் கதையை. ஏன் இப்படி கதை விடுகிறார்கள் என்று விளக்குவதை விட, இப்படி ஒரு கதையை உருவாக்கிக் காண்பித்து விட்டால், அதற்கு அப்புறம், அதற்கு மேலும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை பாருங்கள். அதற்காகத்தான் கதைக்கு மேல் இந்தக் கதை. இனி நீங்களும் பேய்க் கதையை உருவாக்கலாம்தானே?

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

Monday, 13 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.07.2026

1) வீரியமிக்க கொரோனோ பரவல் தமிழகத்தில் இல்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2) கவிஞர் வைரமுத்துவுக்கு நேற்று ஞானபீட விருது வழங்கப்பட்டது.

3) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79.

4) ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்காக 20 சதவீத வரி வசூலிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

5) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய மகளிர் அணி வென்றது.


Education & GK News

1) The Department of Public Health has stated that there is no spread of a virulent strain of coronavirus in Tamil Nadu.

2) Poet Vairamuthu was presented with the Jnanpith Award yesterday.

3) Tamil writer and Sahitya Akademi Award winner Poomani has passed away; he was 79.

4) US President Donald Trump has announced that a 20 percent levy will be charged for the security of ships passing through the Strait of Hormuz.

5) The Indian women's team won the Test cricket match against England.