Monday, 16 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.03.2026

1) ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அங்கிருந்த 550 இந்தியர்கள் ஆர்மீனியா வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

2) ஹோர்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா கோரிய ராணுவ உதவிக்கு ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் மறுப்புத் தெரிவித்துள்ளன.

3) ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு அமெரிக்கத் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4) வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

5) 'புதிய வருமான வரிச் சட்டம் 2025' வரும் ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது.

6) எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

7) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த படம் உள்ளிட்ட 6 விருதுகளை 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம் வென்றுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கனை கல்பனா சாவ்லா 1962 இல் பிறந்த தினம் இன்று.

2) இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 1990 இல் பிறந்த தினம் இன்று.

3) வங்கதேசத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரகுமான் 1920 இல் பிறந்த தினம் இன்று.

Education & GK News

1) Due to the prevailing war tensions in Iran, 550 Indians were evacuated via Armenia and brought back to India.

2) Several European nations, including Germany, have refused the military assistance requested by the United States to reopen the Strait of Hormuz.

3) Reports indicate that Kharg Island—Iran's key oil terminal—has suffered severe damage in a U.S. attack.

4) The waiting period for booking domestic LPG cylinders has been increased from 21 days to 25 days.

5) The 'New Income Tax Act, 2025' is set to come into effect starting April 2026.

6) The Sahitya Akademi Award for this year has been announced for writer S. Tamilselvan.

7) At the Oscar Awards ceremony held in Los Angeles, the film ‘One Battle After Another’ won six awards, including Best Picture.

Today in History…

1) Today marks the birth anniversary of Kalpana Chawla, the first Indian woman to travel into space (born in 1962).

2) Today marks the birth anniversary of India's star badminton player, Saina Nehwal (born in 1990).

3) Today marks the birth anniversary of Sheikh Mujibur Rahman, revered as the Father of Bangladesh (born in 1920).

சிலிண்டர் புக்கிங்கிற்கு…

சிலிண்டர் புக்கிங்கிற்கு…

தற்போது கேஸ் சிலிண்டரை எளிதாகப் புக்கிங் செய்வதற்கான வழிமுறைகளை குறித்த விவரத்தைக் கீழே காண்க. அத்துடன் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியன எப்படிக் கிடைக்கின்றன என்பதற்கான வரைபடத்தையும் அதற்குக் கீழே காண்க.

கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோலிய பகுதிப் பொருட்கள் கிடைப்பதை விளக்கும் வரைபடம்.

*****

Sunday, 15 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.03.2026

இன்று தேசிய தடுப்பூசி தினம்

1) தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2) தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

3) தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

4) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

5) கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

6) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும்.

வரலாற்றில் இன்று…

1) நவீன விண்வெளி அறிவியலின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் காடர்ட், உலகின் முதல் திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட்டை வெற்றிகரமாக 1926 இல் விண்ணில் செலுத்திய தினம் இன்று.

2) இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் போலியோ சொட்டு மருந்து திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது

3) குழந்தைக் கவிஞர் என்று போற்றப்படும் அழ. வள்ளியப்பா 1989 இல் மறைந்த தினம் இன்று.






Education & GK News

Today is National Vaccination Day.

1) Assembly election dates have been announced for five states, including Tamil Nadu.

2) Voting for the Assembly elections in Tamil Nadu will take place on April 23.

3) The votes cast in the Tamil Nadu Assembly elections will be counted on May 4.

4) Following the announcement of the election dates, the Model Code of Conduct has come into immediate effect across Tamil Nadu.

5) The Gnananpida Award has been announced for the poet Vairamuthu.

6) In the global market, the price of crude oil has crossed the $100-per-barrel mark. This represents a four-year high.

Today in History…

1) Today marks the day in 1926 when Robert Goddard—hailed as the father of modern space science—successfully launched the world's first liquid-fueled rocket.

2) It was on this day in 1995 that the Polio Immunization Program was first launched in India.

3) Today marks the passing of Azha Valliappa—revered as the "Children's Poet"—in 1989.

Saturday, 14 March 2026

பேரன்டிங் பாரடாக்ஸ் என்றால் என்ன தெரியுமா?

பேரன்டிங் பாரடாக்ஸ் என்றால் என்ன தெரியுமா?

குழந்தை பெற்றுக் கொண்டால் நிம்மதி போய் விடும் என்பார்கள். ஆனால் அதுதான் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது என்றும் சொல்வார்கள். இதில் எது உண்மை?

இதை உளவியலில் பேரண்டிங் பாரடாக்ஸ் என்கிறார்கள். அதாவது, குழந்தை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தினசரி டென்ஷன், தூக்கமின்மை, ரத்த அழுத்தம் எல்லாம் ஜாஸ்தி. ஆனால், வாழ்க்கை திருப்தியா இருக்கா? என்று கேட்டால், ஆமாம் என்பார்கள்.

என்ன ஒரு முரண்பாடு?

இதைத் துப்புத் துலக்கப் புறப்பட்டார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள்.

88 புது அப்பாக்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அப்பா ஆவதற்கு முன்னும் பின்னும் மூளை எப்படி வேலை செய்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு.

விஞ்ஞானிகள் எதிர்பார்த்தது என்னவென்றால், அப்பா ஆனதும் எல்லோருக்கும் வாழ்க்கையின் அர்த்தம் கூடிவிடும் என்று.

கிடைத்த முடிவு 50% பேருக்குத்தான் அர்த்தம் கூடியது. மிச்சம் பாதிப் பேருக்கு. ம்ஹூம்.

ஏன் இப்படி என்கிறீர்களா?

மூளைக்குள் சில பிரதேசங்கள் உண்டு.

மூளையில் உள்ள மிடில் ஃப்ரண்டல் கைரஸ் என்பது சுயகட்டுபாட்டுக்கான பிரதேசம்.

சுப்ரா மார்ஜினல் கைரஸ் என்பது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பிரேதேசம்.

யாரெல்லாம் குழந்தையைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டார்களோ, அவர்களுக்கு இந்த இரண்டு இடங்களிலும் தொடர்பானது பின்னிப் பெடலெடுத்தது.

ஆனால், சில பேருக்கு மூளையின் சென்சரி கார்டெக்ஸ் அதிகமாக வேலை செய்தது. இவர்களுக்குக் குழந்தை அழுதால் எரிச்சல் வரும். சத்தம் காதைத் துளைக்கும். மன அழுத்தம் ஏறும். பாவம், இவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு நரகம்!

குழந்தைகளால் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது என்கிறார்களே, அது எப்படி என்கிறீர்களா?

அங்கேதான் இன்சுலர் கார்டெக்ஸ் மற்றும் டெம்போரல் போல் வேலைக்கு வருகின்றன. இவைதான் நம் உணர்வுகளையும், நாம் யார் என்கிற பிம்பத்தையும் ஒட்டு வைக்கும் ஃபெவிகால்.

நடுராத்திரி இரண்டு மணிக்குக் குழந்தை அழும்போது, சனியனே, தூங்க விடமாட்டேங்குதே, என்று நினைக்காமல், என் வாரிசு அழுகிறது, அதைச் சமாதானப்படுத்துவது என் கடமை என்று ஒரு ஹீரோ கதையை மூளைக்குள் ஓட்டினால், அங்கே மன அழுத்தம் காணாமல் போய், அந்த அர்த்தம் பிறந்து விடுகிறது.

குழந்தை வளர்ப்பு குறித்த பெற்றோர்களின் மனதிருப்தி குறித்த ஒரு புள்ளி விவரமும் இருக்கிறது. அது என்னவென்றால்,

குழந்தை உள்ளவர்களுக்கு அதிக மன அழுத்தம் அதே நேரத்தில் அதிக வாழ்க்கை திருப்தியும் இருக்கிறது.

குழந்தை இல்லாதவர்களுக்கு குறைவான மன அழுத்தம் மற்றும் சராசரியான நிம்மதி இருக்கிறது.

குழந்தை வேண்டும் என ஏங்குபவர்களுக்கு வயது ஏற ஏற மன திருப்தி குறைந்து விடுகிறது.

இத்துடன் குழந்தை இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. மூளை அந்தச் சூழலை எப்படி அணுகுகிறது என்பதும் முக்கியம்.

நமது மூளை ஒரு கில்லாடி. நாம் தேர்ந்தெடுக்கும் பாதைக்குத் தகுந்தபடி அது கதைகளை மாற்றிக்கொள்ளும். குழந்தை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என் வாழ்க்கை அர்த்தமுள்ளது என்று உங்கள் மூளைக்குச் சொல்லிக் கொடுக்கத் தெரிந்தால், அதையும் நீங்கள் காலப் போக்கில் ஏற்றுக் கொள்வீர்கள். அவ்வளவுதான் விசயம்.

மொத்தத்தில் உங்கள் மூளையை நீங்கள் கையாள்கிறீர்களா அல்லது சமூகக் கருத்துகளுக்கேற்ப கையாள்கிறீர்களா என்பதுதான் இதில் உள்ள சாராம்சம்.

*****

Friday, 13 March 2026

மனிதனிலிருந்து ஏன் குரங்கு தோன்றவில்லை?

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால்,

மனிதனிலிருந்து ஏன் குரங்கு தோன்றவில்லை?

இது ஒரு செம கேள்வி! பரிணாம வளர்ச்சி என்பது ஒரு ஏணி கிடையாது, ஏறிய பின் இறங்கிக் கொள்ள. அது ஒரு கிளை பிரிந்து செல்லும் மரம். குரங்கும் மனிதனும் ஒரே மூதாதையரிடமிருந்து பிரிந்த இரு வேறு கிளைகள்.

சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் அதன் ஒரு கிளை காடுகளிலேயே தங்கிக் குரங்குகளாக பரிணமித்தன. இன்னொரு கிளை சமவெளிக்கு வந்து நிமிர்ந்து நடந்து மனிதர்களாக மாறி விட்டன.

இயற்கையில் ஏன் மனிதன் மீண்டும் குரங்காக மாறவில்லை என்று கேட்பது, ஏன் ஐபோன் 16 மீண்டும் நோக்கியா 1100 ஆக மாறவில்லை என்று கேட்பது போலத்தான். பரிமாணத்தில் நோ ரிவர்ஸ் கியர்.

மனிதன் ஏற்கனவே குரங்கை விட மேம்பட்டவனாக அப்கிரேட் ஆகிவிட்டான். மீண்டும் குரங்காக மாறுவது என்பது உயிர்வாழத் தேவையான தகுதியைக் குறைத்துக் கொள்வது போல. பரிணாமத்துக்குப் பின்னடைவு பிடிக்காது.

குரங்கு என்பது மனிதனுக்கு முந்தைய ஸ்டாப்பிங். அது காடுகளுக்கு ஏற்ற பெர்பெக்ட் டிசைன். மனிதன் நகரங்களுக்கு அல்லது நகரங்கள் என்ற நரகங்களுக்கு ஏற்ற பெர்பெக்ட் டிசைன்.

ஒரு மீன் ஏன் பறவையாக மாறவில்லை என்று கேட்பதில் அர்த்தமில்லை, ஏனென்றால் கடலில் வாழ்வதற்கு மீன் வடிவம் தான் பெஸ்ட்.

காடுகள் இல்லாத இன்றைய சூழ்நிலையில், நகரங்களுக்கு வந்துவிட்ட குரங்குகள் மீண்டும் மனிதனாகி விடுமா என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழுமானால், பாஸ் அதற்கு நீங்கள் டார்வினாகித்தான் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.

*****

Thursday, 12 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.03.2026

1) போரை நிறுத்த ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார். அவையாவன, ஈரானின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், எதிர்காலத்தில் மீண்டும் தாக்க மாட்டோம் என சர்வதேச உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

2) இந்தியாவின் எரிவாயு நிரப்பப்பட்ட கப்பலை ஹோர்முஸ் நீர்ச் சந்தி வழியாகக் கடக்க ஈரான் அனுமதித்தது. இதனால் விரைவில் இந்தியாவில் எரிவாயு தட்டுபாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3) இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4) பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு செல்கிறார்.

5) மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் மோடி ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.

6) இந்தியாவின் 2025-26 நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

7) பிப்ரவரி மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 3.21% ஆக உயர்ந்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான பஞ்சாப் ஆளுநர் மைக்கேல் ஓ டயரை லண்டனில் இந்தியப் புரட்சியாளர் உத்தம் சிங் சுட்டுக் கொன்ற தினம் இன்று.

2) வில்லியம் ஹெர்ஷல் சூரிய குடும்பத்தின் ஏழாவது கோளான யுரேனஸை 1781 இல் கண்டுபிடித்த தினம் இன்று.

3) ஆக்சிஜனைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான பிரிட்டிஷ் வேதியியலாளர் ஜோஸப் பிரிஸ்ட்லீ 1733 இல் பிறந்த தினம் இன்று.





Education & GK News

1) Iranian President Masoud Pezeshkian has laid down three conditions to stop the war. These are: Iran's rights must be recognized; compensation must be provided for damages caused by the war; and an international guarantee must be given that no further attacks will be launched in the future.

2) Iran has permitted an Indian vessel carrying gas cargo to pass through the Strait of Hormuz. Consequently, it is expected that the gas shortage in India will be alleviated soon.

3) The Central Government has stated that there is no likelihood of a petrol or diesel shortage occurring in India.

4) Prime Minister Narendra Modi is visiting the state of Assam today.

5) Prime Minister Modi held a telephonic conversation with the Iranian President regarding the prevailing war situation in West Asia.

6) India's economic growth for the 2025-26 fiscal year is estimated to be 7.6%.

7) Retail inflation for the month of February has risen to 3.21%.

On This Day in History…

1) Today marks the day when Indian revolutionary Udham Singh shot and killed Michael O'Dwyer—the Governor of Punjab responsible for the Jallianwala Bagh massacre—in London.

2) Today marks the day in 1781 when William Herschel discovered Uranus, the seventh planet of the solar system.

3) Today marks the birthday of British chemist Joseph Priestley—one of the discoverers of oxygen—who was born in 1733.

Wednesday, 11 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.03.2026

1) நேற்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 9.09 லட்சம் மாணவர்கள் எழுதினர். சுமார் 11,898 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2) தமிழகப் பள்ளிகளில் வரும் ஆண்டுகளில் ஆறாம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

3) எரிவாயு தட்டுபாட்டால் 30 சதவீதம் மின்சார அடுப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

4) தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை ராஜ்பவனில் பதவியேற்கிறார்.

5) மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

6) கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தனது கையிருப்பில் இருந்து 172 மில்லியன் பேரல் எண்ணெயை வெளியிட முடிவு செய்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாகிரகத்தை 1930 இல் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கிய தினம் இன்று.

2) www என்பதற்குக் காரணமான இணைய மேலாண்மைக்கான தனது முதல் திட்ட அறிக்கையை டிம் பெர்னர்ஸ் லீ 1989 இல் சமர்ப்பித்த தினம் இன்று.

3) 1993 இல் மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 300 பேர் இறந்த தினம் இன்று.






Education & GK News

1) About 9.09 lakh students wrote the Class 10th public examination that began yesterday. According to reports, about 11,898 students did not appear for the examination.

2) It is planned to introduce subjects related to artificial intelligence from Class 6 onwards in Tamil Nadu schools in the coming years.

3) Sales of electric stoves have increased by 30 percent due to gas shortage.

4) Rajendra Vishwanath Arlekar will take oath as the Additional Governor of Tamil Nadu at the Raj Bhavan in Chennai today.

5) The Union Cabinet has approved granting international airport status to Madurai Airport.

6) The United States has decided to release 172 million barrels of oil from its reserves to control crude oil prices.

Today in history…

1) Today is the day Mahatma Gandhi started his famous Salt Satyagraha from Sabarmati Ashram in Ahmedabad in 1930.

2) Today is the day Tim Berners-Lee submitted his first project report for the management of the Internet, which gave rise to www, in 1989.

3) Today is the day around 300 people died in the Mumbai serial blasts in 1993.