Friday, 7 August 2026

ஆவி கேமரா ஆக்சன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 45

ஆவி கேமரா ஆக்சன்!

கோனேரிராஜபுரத்தின் பழமையான அந்த வீட்டின் அறையின் காற்றில் ஒருவித ஈரமான மரத்தின் வாசனை. டேபிளின் நடுவே ஒரு வெள்ளைச் காகிதம், அதன் மேல் பளபளக்கும் ஒரு பவுண்டைன் பேனா.

நேரம் நள்ளிரவு 12:15.

எதிரில் அமர்ந்திருந்த வினோத் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தான். "மனோ! வேணாம்டா. ஆட்டோமேட்டிக் ரைட்டிங் பண்ணி ஆவியை வரவழைக்கறது ஆபத்து. உண்மையிலேயே ஏதோ ஆவி வந்துடுச்சுனா என்ன பண்றது?"

மனோகர் லேசாகச் சிரித்தான். "பயப்படாத வினோத்! ஆவியும் இல்லை, பேயும் இல்லை. நம்ம மூளையோட ஐடியோ மேட்டர் என்கிற ஒரு மனோதத்துவ விளையாட்டுதான் இது," என்றபடி, டேபிளின் ஓரத்தில் தன் ஹை டெக் கேமராவை ஆன் செய்து ஸ்டாண்டில் பொருத்தினான்.

இருவரும் கைகளை லேசாகப் பிடித்துக்கொண்டு, ஆள்காட்டி விரலை மட்டும் பேனாவின் மீது வைத்தார்கள்.

"ஆவி கேமரா ஆக்சன். யாராவது ஆவி இருந்தா, தயவுசெய்து இந்த பேனா மூலமா எழுதுங்க." வினோத் குரல் தழுதழுத்தது.

அறையில் ஏசி சத்தம் தவிர வேறு சத்தமில்லை.

ஐந்து நிமிடங்கள் அமைதி.

பிறகு அது நடந்தது.

பேனா லேசாக அதிர்ந்தது. காகிதத்தின் மீது கோடுகள் நகரத் தொடங்கின. வினோத்தின் கண்கள் விரிந்தன. அவனது கை அவனையும் அறியாமல் பேனா பிடித்து எழுதத் தொடங்கியது. அது எழுதியது,  நா-ரா-ய-ண-ன்.

"இது என் தாத்தாவோட பேருடா! 1998ல இறந்துட்டார்!" வினோத் கத்தினான்.

பேனா நிறுத்தாமல் தொடர்ந்து எழுதியது. "நாராயணன் ஒரு கொலையாளி. அவன் இப்போது அறைக்குள்ளேயே உன்னைக் கொல்லப் போகிறான்."

வினோத் அலறி அடித்துக்கொண்டு கையைப் பின்னுக்கு இழுத்தான். பேனா கீழே விழுந்தது.

மனோகர் லேப்டாப்பைத் திறந்து சாவதானமாக கூறினான். "ரிலாக்ஸ் வினோத். உன் ஆழ்மனசுல உன்னோட தாத்தா பத்தின ஏதோ ஒரு பயம் இருக்கு. அதான் உன் விரல்கள் உனக்கே தெரியாம நுட்பமா அசைஞ்சு அப்படி எழுதியிருக்கு. ஆவி வெளியில இருந்து வரல, உன் மூளைக்குள்ள இருந்து வந்திருக்கு. அதான் சயின்ஸ். அவ்ளோதான். வா கிளம்பலாம்."

மனோகர் கேமராவை ஆப் செய்யப் போனவன், திருப்திக்காக அதில் பதிவான வீடியோவை ப்ளே செய்து பார்த்தான்.

அடுத்த நொடி, மனோகரின் உடம்பில் ரத்தம் உறைந்துபோனது.

கேமரா ஜூமில் தெளிவாகத் தெரிந்தது, பேனா எழுதிய அந்த ஐந்து நிமிடங்களும், வினோத்தின் விரல்கள் காகிதத்தை விட இரண்டு அங்குலம் உயரத்தில், காற்றில் அசைவேயில்லாமல் நின்றுகொண்டிருந்தன.

வினோத்தின் கைகள் பேனாவைத் தொடவே இல்லை! பேனா மட்டுமே தானாக இயங்கியிருந்தது.

மனோகரின் தலை மெதுவாக நிமிர்ந்தது. எதிரில் வினோத் அமைதியாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் முற்றிலும் கருப்பாக மாறியிருந்தன. அவனது குரல் ஒரு 80 வயதுக் கிழவனின் கம்பீரமான குரலாக மாறியிருந்தது.

"ஐடியோமோட்டர் எபெக்ட். நல்ல தியரிதான் மனோகர். ஆனா, உன் நண்பன் வினோத்தோட ஆழ்மனசுக்கு நாராயணன் யாருன்னு தெரியாதே? ஏன்னா, அவன் தாத்தா பேரு விஸ்வநாதன்! 1950ல இந்த அறையில ஒருத்தனைக் கொலை பண்ணின நாராயணன் நான்தான்!"

மனோகர் அதிர்ச்சியில் பேச்சற்று நிற்க, அறையின் கதவு தானாக டப்பென்று பூட்டிக்கொண்டது.

சுவரில் இருந்த மின்விளக்குகள் விட்டு விட்டு எரியத் தொடங்கின.

கீழே கிடந்த அந்தப் பேனா, மீண்டும் மெதுவாகக் காற்றில் உயர்ந்து நிமிர்ந்து நின்றது.

எழுத்தாளர்கள் பேனா பிடிப்பது ஊரறிந்த கதை. ஆனால், ஆவிகள் பேனா பிடிப்பது?

கன்பார்மாக வந்தது ஆவிதானா? அல்லது இதுவும் ஒரு டுபாக்கூர் மூவிதானா?

அப்புறம், ஆவிகள் இப்படியெல்லாம் கையெழுத்து பயிற்சி எடுத்துக் கொள்வது ஏன்?

நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

ஆவியே வருக! வருக!!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 44

ஆவியே வருக! வருக!!

மன்னார்குடி, தமிழரசன் வீட்டில் நடந்தது என்ன?

மாரியப்பன் தாத்தா உண்மையில் ஆவியாக வந்து விசிட் செய்தாரா?

அப்படி ஆவியாக வந்து அவர்தான் அந்த டாக் ஷோவை நடத்தினாரா?

அதற்கு முன் நாம் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்கிற்குப் போக வேண்டும்.

தமிழரசனின் அண்ணன் அருளரசன். அவர் அண்மையில்தான் தமிழரசனின் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்த அமானுஷ்ய வேலை செட்டப் அனைத்தும் அவரது மெக்கானிக்கல் என்ஜினியரிங் வேலைதான். அவர் ஒரு மெக்கானிக்கல் மற்றும் சாப்ட்வேர் என்ஜினியர்.

இப்போது கேள்வி என்னவென்றால், அந்த ஐந்து பவுன் சங்கிலியை அவர் நேரடியாகவே கொடுத்திருக்கலாமே. அதற்கு ஏன் இப்படி ஓர் அமானுஷ்ய செட்டப் செய்ய வேண்டும்?

அதற்கு நாம் இப்போது அந்தச் சின்ன ப்ளாஷ்பேக்கைத் தாண்டி, ஒரு பெரிய ப்ளாஷ்பேக்கிற்குப் போக வேண்டும்.

அது நடந்தது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக.

மாரியப்பன் தாத்தா தனது அந்திம காலத்தில், மரணப் படுக்கையில் படுத்திருந்த போது அருளரசனைத் தனியாக அழைத்து அந்த ஐந்து பவுன் சங்கிலியைக் கொடுத்து விட்டு, இதை யாரிடமும் சொல்லி விட வேண்டாம் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு மறைந்து விட்டார்.

மாரியப்பன் தாத்தா மறைந்தாலும், அந்த ஐந்து பவுன் சங்கிலி மேட்டர் மட்டும் தமிழரசன் குடும்பத்தில் மறையாமல், அதைத் தேடும் வேட்டை சுமார் நாற்பது ஆண்டுகளாக நடந்து வந்தது.

அருளரசனும் தாத்தாவுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தால் அந்த ஐந்து பவுன் மேட்டரைத் தாத்தாவின் நினைவையே பாஸ்வேர்டாகப் போட்டு, மனதுக்குள்ளே லாக்கப் செய்து வைத்திருந்தார்.

அண்மையில் தமிழரசன் வீட்டுக்கு அவர் வந்த போது, ஜெயந்தி அந்த ஐந்து பவுன் சங்கிலியைத் தாத்தாவின் நினைவாக வைத்துக் கொள்ள விரும்பி, ஆவி பிடிப்பவர்கள் வரை இறங்கி, அதைக் கண்டுபிடிக்க தீவிரமாக இருந்ததை அறிந்து கொண்டார்.

உண்மையைச் சொல்லி அதை நேரடியாகக் கொடுத்தால், தாத்தா கொடுத்தது உங்களுக்குத்தானே, அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழரசனும் ஜெயந்தியும் சொல்லி விட வாய்ப்புண்டு.

ஆகவேதான் அருளரசன் ஜெயந்தியின் போக்கிலேயே சென்று, தாத்தாவின் ஆவியே தங்கச் சங்கிலியைக் கண்டுபிடித்துத் தருவதைப் போல, அந்தத் தேக்குமர மேஜையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜியனரிங் வேலையைச் செய்து வைத்திருந்தார்.

அதன்படி மேசையைப் பலம் கொண்ட மட்டும் தள்ளினால் மரப் பலகை லேசாக விலகி, உள்ளே இருந்து ஒரு பழைய டைரியும், அதனுடன் ஒரு சிறிய தங்கச் சங்கிலியும் வெளியாகும். அதுவெளியான உடனே, டேப் ரிக்கார்டர் இயங்கும்.  அப்படி அது இயங்கும் வகையில் அதற்கு ஒரு பேட்டரி போட்டு ஒரு செட்டப் வேலையைச் செய்து வைத்திருந்தார் அருளரசன். அதற்கேற்ப தாத்தாவின் குரலை ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸில் உருவாக்கி, இந்த டிஜிட்டல் காலத்திலும் ஆவிக்கு ஒரு ரியலிஸ்டிக் செட்டப்பைக் கொடுக்கும் வகையில், அதை டேப் ரிக்கார்டர் கேஸெட்டில் பதிவு செய்து வைத்திருந்தார்.

ஆக வந்தது தாத்தாவின் ஆவியும் அல்ல. பேசியது ஆவியின் குரலும் அல்ல. எல்லாம் அருளரசனின் என்ஜினியரிங் கெட்டப்பில் உருவான செட்டப் வேலைகள்.

ஆக விசயம் இதுதான். மனிதன் அறிவியலால் விளக்க முடியாததைப் பேய் என்கிறான். ஆனால், கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்தால், அங்கே பேய் இருக்காது, ஒரு மெக்கானிக்கல் என்ஜியனியரிங்கும், மனித அறிவின் புத்திசாலித்தனமும் மட்டுமே இருக்கும்! இப்போதுள்ள உள்ள காலத்தில் அதில் கூடுதலாக ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவும் சேர்ந்திருக்கும். அவ்வளவுதான் விசயம்.

இப்போது மேட்டருக்கு வருவோம். இது வெறும் மன்னார்குடியில் மட்டும் நடந்த சம்பவம் அல்ல.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அப்போது இதுதான் லேட்டஸ்ட் பேஷன். பிரபுக்கள் வீட்டு வரவேற்பறை முதல் எளிய மனிதர்களின் சமையலறை வரை சீயான்ஸ் என்ற பெயரில் ஆவி அழைக்கும் பார்ட்டிகள் பிய்த்துக் கொண்டு போயின.

மாலை நேரங்களில் டீ குடிக்கிறீர்களா? என்பதற்குப் பதிலாகக் கொஞ்சம் ஆவிகளோடு அரட்டை அடிக்கலாமா? என்று கேட்கும் அளவுக்கு நாகரிகக் கூத்தாக அது மாறியது.

அறிவியலும் மூடநம்பிக்கையும் சந்தி சந்தியாகக் கை கோத்துத் திரிந்த ஒரு விசித்திரமான காலம் அது.

நாற்காலியில் அமர்ந்து நடுவில் கைகளைக் கோத்துக்கொண்டால் போதும், கொஞ்ச நேரத்தில் மேஜை ஆடும். டக் டக் எனச் சத்தம் கேட்கும். ஒரு டக் சத்தத்துக்கு ஆம் என்றும், இரண்டு டக் சத்தத்துக்கு இல்லை என்றும் அர்த்தம். செத்துப் போன தாத்தாவிடம் "சொத்து எங்கே வச்சிருக்கீங்க?" என்று எஸ்.எம்.எஸ் அனுப்புவது போலக் கேள்வியும் கேட்கலாம்.

அத்துடன் ஆவிகளைத் தொடர்பு கொள்ள மீடியம் என்றொரு இடைத்தரகர் தேவைப்பட்டார். பெரும்பாலும் பெண்களே இதில் எக்ஸ்பெர்ட்டாக இருந்தார்கள். இருட்டறையில் திடீரென வாயில் இருந்து துணி போன்ற எக்டோபிளாசம் வரவழைப்பது, காற்றில் பெல் அடிப்பது என இவர்களின் மேஜிக் ஷோக்கள் அப்போது பட்டையைக் கிளப்பின.

அப்போது மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானி, "தம்பி, நீங்களாகத்தான் மேஜையைத் தள்ளுகிறீர்கள், தட்டுகிறீர்கள்.  உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் தசை இயங்குகிறது" என்று உண்மையை உடைத்துப் போட்டார்.

ஆனால், உலகம் நம்ப வேண்டுமே.

இதிலும் ஒரு வரலாற்று நகைமுரண் உண்டு.

ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிய ஆர்த்தர் கோனன் டாய்ல் கூட இந்த ஆவி ஆட்டத்தில் தீவிர நம்பிக்கையாளராக இருந்தார்; ஆனால் மாயாஜாலக்காரர் மற்றும் சர்க்கஸ் சாகசக்காரரான ஹூடினி இவர்களின் ட்ரிக்குகளை ஒவ்வொன்றாகப் போட்டுடைத்தார்.

ஆக மேட்டர் இதுதான்.

மனிதனுக்குச் சாவின் மீது எப்போதுமே ஒரு பயமும், அதைக் தாண்டி என்ன இருக்கும் என்ற தீராத ஆர்வமும் உண்டு. அந்தப் பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டதுதான் இந்த சீயான்ஸ் கலாச்சாரம்.

தொழில்நுட்பம் வளராத காலத்தில் இருட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடந்த இந்த விளையாட்டு, இன்றைக்கும் டிஜிட்டல் திரைகளுக்குப் பின்னால் புதுப்புது வடிவங்களில் தொடரவே செய்கிறது. ஏனென்றால், மனித மனதின் அடிப்படையான பயங்களும், எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் மாறவே மாறாது! பாவி மனிதர்களின் ஆவி நம்பிக்கைகளும் அது குறித்த பயங்களும், எதிர்பார்ப்புகளும் அப்படிப்பட்டவை.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Thursday, 6 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.08.2026

1) தமிழக சட்டப்பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

2) யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

3) அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

4) வங்கதேசத்தில் ஆகஸ்ட் 20 இல் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

5) நடப்பு ஆண்டின் முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 இல் நிகழ உள்ளது. இதை ஸ்பெயின், ஐஸ்லாந்து பகுதியில் காண இயலும்.


Education & GK News

1) The agriculture budget was presented in the Tamil Nadu Legislative Assembly yesterday.

2) A bill regarding the levy of charges on UPI transactions was passed in Parliament.

3) The Agni-4 missile was successfully test-fired.

4) The presidential election in Bangladesh is scheduled to be held on August 20.

5) This year's total solar eclipse will occur on August 12; it will be visible from regions in Spain and Iceland.

தாத்தாவின் ஆவியும் ஐந்து பவுன் சங்கிலியும்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 43

தாத்தாவின் ஆவியும் ஐந்து பவுன் சங்கிலியும்!

இரவு 9:30.

மன்னார்குடி.

வடக்கு கோபுர வாசல்.

அய்யனார் கோயில் சந்து.

வீட்டு எண் 100/108.

அந்தக் காலத்து மச்சு வீட்டின் பெரிய ஹால்.

நடுவில் ஒரு பெரிய தேக்குமர ரவுண்ட் டேபிள். அதைச் சுற்றி நான்கு நாற்காலிகள். தமிழரசன், அவன் மனைவி ஜெயந்தி, அவனது ஆசிரியர் நண்பர் ஜூலியஸ். அப்புறம் மாந்திரீக ரத்னா ராகவன்.

மேஜை நடுவில் இரண்டு சிம்னி விளக்குகள்.

"தம்பி தமிழரசன், பேன் ஆப் பண்ணிடு," என்றார் ராகவன்.

"லைட் ஆப் பண்றது சரி. மன்னார்குடி கத்தரி வெயிலுக்கு மின்விசிறியையும் நிறுத்தினால் ஆவி வருதோ இல்லையோ, எனக்கு வேர்க்குரு கண்டிப்பாக வந்துடும் ஐயா," என்றான் தமிழரசன், ஸ்விட்சை ஆப் செய்தபடி.

"சீரியஸா இருங்க. காமெடி பண்ணாதீங்க." ஜெயந்தி தமிழரசனைப் பார்த்து முறைத்தாள். "நம்ம தாத்தா கடைசியா அந்த அஞ்சு பவுன் நகையை எங்கே வச்சார்னு தெரிஞ்சாகணும்."

தமிழரசனுக்கு இந்த இந்த மந்திரம், மாந்த்ரீகம், பேய், பிசாசு மேட்டரில் எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது. ஜெயந்தியின் பிடிவாதத்தால் வேறு வழியின்றி சம்மதித்திருந்தான்.

"சரி. எல்லாரும் கைகளைக் கோத்துக்கோங்க. கட்டைவிரல் தொட்டுக்கிட்டு இருக்கணும்," ராகவன் குரலைத் தணித்து, "ஆவியே வருக.. மறைந்த மாரியப்பனாரே வருக." என்று முணுமுணுத்தார்.

அறை கொஞ்சம் இருட்டானது போலத் தோன்றியது.

சிம்னி விளக்கின் சுடர் காற்றில்லாமல் நிலையாக எரிந்தது.

அமைதி.

தெருவில் ஒரு நாய் குரைத்தது.

தூரத்தில் ராஜகோபாலசுவாமி கோயில் யானை செங்கமலம் பிளிறும் சத்தம் லேசாகக் கேட்டது.

"மாரியப்பனாரே நீங்க இங்க வந்திருந்தா இந்த மேஜையை ஒரு தடவை தட்டுங்க.." என்றார் ராகவன்.

திடீரென்று, டக்!

ஜெயந்தி திடுக்கிட்டாள். "என்னங்க கேட்டதா?"

"மாரியப்பனாரே, அந்த நகை மருதவனத்துல பழைய வீட்டுல இருக்கா?"

டக்! டக்!

இரண்டு தட்டு. அப்படியென்றால். இல்லை.

"அப்போ இந்த அய்யனார் கோயில் சந்து வீட்டுலதான் இருக்கா?"

டக்!

ஒரு தட்டு.  அப்படியென்றால் ஆம்!.

"விடை கிடைச்சிருச்சு!" ராகவன் பரவசமானார்.

தமிழரசன் சடாரென்று எழுந்து போய் ஹால் லைட்டைப் போட்டான். ஒளி பளிச்சென்று அடித்தது. மேஜைக்கு அடியில் குனிந்து பார்த்தான். அங்கே அவனுடைய மகன் கபிலன், கையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்கேலுடன் உட்கார்ந்திருந்தான்.

"டேய் கபிலா! அங்கே என்னடா பண்ற?" என்றாள் ஜெயந்தி.

"அம்மா. நீங்க கொள்ளு தாத்தாகிட்ட கேள்வி கேட்கும் போதெல்லாம், அங்கிள் ராகவன் தன் காலால் மேஜையை முட்டுறாரு. எனக்குப் போர் அடிச்சுது, அதான் நான் ஸ்கேலால கீழ தட்டுனேன்," என்றான் கபிலன் வெகுளித்தனமாக.

ராகவன் திருதிருவென விழித்தார். "அது அறியாமலேயே தசை இயங்குற எபெக்ட்."

தமிழரசன் சிரித்தான். "போலியான ஆவி ஆட்டத்தைக் கண்டுபிடிச்சாச்சு. ராகவன் ஐயா! நீங்க கிளம்புங்க. ஜெயந்தி! தாத்தா நகை எங்கேன்னு தெரியலன்னாலும் பரவாயில்லை, இந்தச் சாமிடியாருக்குக் கொடுக்க வேண்டிய ஐயாயிரம் தப்பித்தது!"

ராகவன் அவசர அவசரமாகப் பையை எடுத்துக்கொண்டு ஓடாத குறையாக வெளியேறினார். "இந்த ராத்திரியில போட்டு இப்படிப் பாடாய்ப் படுத்திட்டீங்களப்பா" என்றபடி ஆசிரியர் ஜூலியசும் சிரித்தபடி விடைபெற்றார்.

*

நள்ளிரவு 12:00 மணி.

கபிலன் நன்றாகத் தூங்கி விட்டான். ஜெயந்தி அரைத் தூக்கத்தில்.

திடீரென விழித்து எழுந்த தமிழரசன் ஹாலில் இருந்த மேஜையை ஓரமாகத் தள்ள முயன்றான்.

"ஜெயந்தி! இந்த மேஜை ரொம்ப எடை அதிகமாக இருக்கு." என்றபடி மேஜையின் அடியில் இருந்த பிளாஸ்டிக் ஸ்கேலை எடுத்தான்.

திடீரென்று, டக்! டக்! டக்!

தமிழரசன் உறைந்துபோனான். சட்டென்று பாய்ந்து ஹால் லைட்டைப் போட்டான். ஜெயந்தியின் அரைத் தூக்கம் கலைந்து முழு விழிப்புக்கு வந்து விட்டாள்.

ஆனால், காலியான அந்தத் தேக்குமர மேஜை தானாக மூன்று முறை பலமாகத் தட்டியது.

ஜெயந்தி பயத்தில் தமிழரசனைப் பிடித்துக் கொண்டாள். "என்னங்க இது?"

மேஜையின் நடுவில் இருந்த மரப் பலகை லேசாக விலகி, உள்ளே இருந்து ஒரு பழைய டைரியும், அதனுடன் ஒரு சிறிய தங்கச் சங்கிலியும் வெளியே வந்தன.

அதே நேரம். அந்தத் தேக்கு மர மேசையின் ஓரத்தில் பெட்டி போன்ற அமைப்பில் வைக்கப்பட்டு இருந்த பழைய நேஷனல் பேனாசோனிக் ரேடியோ, ஸ்விட்ச் போடப்படாமலேயே லேசான கிர்ர்ர் சத்தத்துடன் இயங்கத் தொடங்கியது. அதிலிருந்து தெளிவாக மாரியப்பன் தாத்தாவின் குரல் ஒலித்தது.

"டேய் பேராண்டி தமிழரசா! அந்தச் சாமியார் ஏமாற்றுக்காரன்தான். ஆனா, என் பேத்தி மேல எனக்கு ஆசை இல்லாம போயிடுமா? நகை இந்த மேஜையோட ரகசிய டிராயர்ல இருந்து இந்நேரம் வெளிவந்திருக்கும். எடுத்துக்கடா!"

சத்தம் நின்றது.

ரேடியோ அமைதியானது.

தமிழரசனும் ஜெயந்தியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

தமிழரசன் மெதுவாகச் சொன்னான். "ஜெயந்தி! என்னோட நண்பன் விஜயராமன் தன்னோட பிளாக்ஸ்பாட்டுல ஆவி, கீவி அப்படியெல்லாம் எதுவும் கிடையாதுன்னு எழுதிருக்கான். ஆனா, இது தாத்தாவோட குரல் அப்படியே அச்சுப்பிசகாம. எப்படின்னுதான் தெரியல?"

"போயி உங்க பிரெண்டுகிட்ட சொல்லுங்க. நம்ம முன்னோர்கள் ஆவியா நம்மைச் சுற்றித்தான் இருக்காங்க. இனிமேலாவது ஆவி இல்லை, அதிசயம் இல்லைன்னு எழுதாம ஆவி உண்டுன்னு உண்மையை எழுதச் சொல்லுங்க! நீங்களும் உங்க பிரெண்டுக்குச் சேர்ந்துகிட்டு ஜால்ரா தட்டாதீங்க!" என்றாள் ஜெயந்தி கோபமாக.

தமிழரசன் தலையில் கையை வைத்துக் கொண்டு அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து விட்டான்.

உலகில் அறிவியலால் விளக்க முடியாத ஆவி அதிசயங்களும் நடக்குமோ என்னவோ என்ற கேள்வி அவன் மண்டையைக் குடைய ஆரம்பித்து விட்டது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

வாகன நம்பர் பிளேட்டின் வண்ண ரகசியம்!

வாகன நம்பர் பிளேட்டின் வண்ண ரகசியம்!

வாகனங்களின் நம்பர் பிளேட்டில் இடம் பெறும் வண்ணத்திற்குப் பின்னே உள்ள அறிய வேண்டிய அவசிய தகவலைக் கீழே காண்க.

*****

Wednesday, 5 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.08.2026

1) நேற்று சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

2) தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3) +1 படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

4) இணையத்தில் முன்பதிவு செய்து டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கும் திட்டம் இன்று முதல் அமலாகிறது.

5) தொடர்ந்து நடப்புக் காலாண்டிலும் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.






Education & GK News

1) The Tamil Nadu budget was presented in the Legislative Assembly yesterday.

2) An allocation of Rs. 44,527 crore has been made for the School Education Department in the Tamil Nadu budget.

3) The budget announced that Class 11 students will be provided with modern bicycles along with helmets.

4) The scheme to purchase liquor from TASMAC outlets via online booking comes into effect today.

5) The Reserve Bank has announced that there will be no change in the repo rate for the current quarter as well.

Tuesday, 4 August 2026

காவிரி – மலையிலிருந்து கடல் வரை

காவிரி – மலையிலிருந்து கடல் வரை

தலைக்காவிரியில் தோன்றுவதிலிருந்து காவிரிபூம்பட்டினத்தில் கடலில் கலப்பது வரை காவிரி கடக்கும் முக்கிய அணைகள் குறித்த படத்தைக் கீழே காண்க.

*****