Tuesday, 23 December 2025

பட்டா, சிட்டா என்றால் என்ன?

பத்திரப் பதிவு ஆவணங்கள் அறிவோமா?

பத்திரப் பதிவுக்கு அவசியமான மற்றும் தேவையான ஆவணங்கள் பத்திரப் பதிவு ஆவணங்கள் ஆகும். அவையாவன, வில்லங்கச் சான்றிதழ் (EC), நிலவரைபடப் புத்தகம் (FMB), பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு என்பன ஆகும். இவை  ஒவ்வொன்றையும் கீழே விரிவாகக் காண்போம்.

வில்லங்கச் சான்றிதழ் (EC – Encumbrance Certificate)

சொத்தின் உரிமை பற்றிய தற்போதைய நிலை என்ன என்பதை அறிய வில்லங்கச் சான்றிதழ் உதவுகிறது. ஓர் இடத்தை வாங்குவதற்கு முன்பு 50 ஆண்டுகளுக்கு வில்லங்கம் பார்ப்பது நல்லது.

நில வரைபடப்புத்தகம் (FMB – Field Measurement Book)

அளவை எண்ணுக்கு உரிய (சர்வே எண்) இடமானது எங்கே இருக்கிறது என்பதை நிலவரைபடப் புத்தகம் தெரிவிக்கிறது. ஓர் இடத்தின் நான்கு புறமும் இருக்கக் கூடிய நிலப்பரப்பானது அளவை எண்ணுடன் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் நிலத்தின் பரப்பளவு, அளவை எண், உட்பிரிவு எண், நடைபாதை, தண்ணீர் செல்லும் பாதைகள், கிணறு, உயர் மின்னழுத்த இணைப்பு போன்ற பல்வேறு விவரங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.

பட்டா

உரிமையாளரை உறுதிப்படுத்தும் தனிநபரின் ஆவணமே பட்டா ஆகும். இந்த பட்டா மூலம்தான் நிலத்தின் உரிமை யாருக்கு உள்ளது என முடிவு செய்யப்படுகிறது. இது வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்படும் ஆவணம் ஆகும். இதில் அந்த இடம் அமைந்திருக்கும் மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா எண், உரிமையாளர் பெயர், புல எண், உட்பிரிவு எண், நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, இடத்தின் பரப்பளவு, தீர்வை (வரி) போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

சிட்டா

சிட்டா என்பது நிலத்தின் உரிமையாளர் குறித்த அரசின் பதிவேடு ஆகும். ஒரு தனிநபருக்கு எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு இது ஆகும். இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண், நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, தீர்வை (வரி) செலுத்திய விவரம் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

அடங்கல்

கிராமத்தில் இருக்கும் மொத்த அளவை எண்கள் அடங்கிய பதிவேடு அடங்கல் ஆகும். இதில் குறிப்பிட்ட அளவை எண்ணுக்குரிய இடம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண், நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

அ பதிவேடு

இது பழைய அளவை எண் பதிவேடு ஆகும். இப்பதிவேட்டில் பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், பட்டா எண், உரிமையாளர் பெயர், இடத்தின் பரப்பளவு, தீர்வை (வரி), விவசாய நிலமா அல்லது அரசு நிலமா அல்லது நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா அல்லது மானாவாரி நிலமா அல்லது தரிசு நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என்பன போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

ஓர் இடத்தை வாங்குவதற்கு முன்பாக மேற்காணும் அனைத்து ஆவணங்களையும் பெற்று அத்துடன் இடத்தின் தற்போதைய பத்திரம் மற்றும் தாய்ப் பத்திரம் (முந்தையப் பத்திரம்) ஆகியவற்றையும் பெற்று நன்கு ஆராய்ந்து, தேவைப்பட்டால் வழக்கறிஞரின் சட்டப்பூர்வமான கருத்தையும் பெற்று வாங்குவது நல்லது.

*****

Monday, 22 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் - 23. 12. 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் - 23. 12. 2025

1) புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு 1.50 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

2) நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஒன்றின் விலை 6.35 ரூபாயாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.

3) டிசம்பர் 26 முதல் புதிய தொடர்வண்டி கட்டணம் அமலாகிறது.

4) பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

5) பூமியின் சுழற்சி மற்றும் காந்தப் புலத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் புதிய முறையை அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

6) 700 பில்லியன் டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் உலகப் பணக்காரர் வரிசையில் தொடர்ந்து முதலிடம் பிடித்தார்.


Education & General Knowledge News - 23.12.2025

1) The Central Government has allocated 1.50 lakh crore for the new rural employment scheme.

2) The price of an egg in the Namakkal region rose to 6.35, reaching a new high.

3) New train fares will come into effect from December 26th.

4) The severe fog prevailing in northern states including Punjab, Haryana, and Uttar Pradesh has affected the normal life of the people.

5) Scientists at Princeton University in the United States have discovered a new method of generating electricity using the Earth's rotation and magnetic field.

6) With a net worth of $700 billion, Elon Musk continued to hold the top spot in the list of the world's richest people.

Saturday, 20 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (21.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (21.12.2025)

1) திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2) 49 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியைத் தமிழக முதல்வர் ஜனவரி 8 இல் துவங்கி வைக்கிறார்.

3) தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவுக்கு ஜனவரி 12 முதல் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகிறது.

4) இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 28 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

5) டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6) 2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மட்டைப்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

7) மலையாள திரையுலகின் பிரபல இயக்குநரும் நடிகருமான  ஸ்ரீனிவாசன் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.



Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the Porunai Museum in Tirunelveli.

2) The Tamil Nadu Chief Minister will inaugurate the 49th Chennai Book Fair on January 8.

3) Linking of Aadhaar number becomes mandatory for train ticket reservations from January 12.

4) India's sugar production has increased by 28 percent.

5) The Meteorological Department has stated that there is a possibility of rain in Tamil Nadu on December 25 and 26.

6) The Indian cricket team for the T20 World Cup to be held in 2026 has been announced.

7) Srinivasan, a renowned director and actor in the Malayalam film industry, passed away due to ill health. He was 69 years old.

Friday, 19 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.12.2025)

1) தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

2) ஜனவரி 5 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

3) பால் கலப்படத்தைத் தடுக்க புதிய பால் கொள்கையைத் தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது.

4) கொடைக்கானலில் உறைபனிப் பருவநிலை தொடங்கியுள்ளது. இதனால் கொடைக்கானல் குட்டி காஷ்மீராகக் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது.

5) டிசம்பர் 23 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Education & GK News

1) The names of 97 lakh voters have been removed from the draft electoral roll published in Tamil Nadu.

2) The Tamil Nadu government is set to distribute free laptops to college students from January 5th.

3) The Tamil Nadu government is soon to release a new milk policy to prevent milk adulteration.

4) The frosty season has begun in Kodaikanal. As a result, Kodaikanal has started to resemble a mini-Kashmir.

5) The Meteorological Department has stated that dry weather is likely to prevail in Tamil Nadu until December 23rd.



ஓ.ஆர்.எஸ்ஸிலும் கலப்படம்!

ஓ.ஆர்.எஸ்ஸிலும் கலப்படம்!

ஓ.ஆர்.எஸ் என்பது உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் போது வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் உப்புச் சர்க்கரைக் கரைசல் ஆகும். இது ஆங்கிலத்தில் ORS (Oral Rehydration Solution) எனப்படுகிறது.

கடைகளில் விற்கப்படும் இக்கரைசலை ஒரு லிட்டர் நீரில் கரைக்கும் போது அதில் 13.5 கிராம் சர்க்கரையும், 2.6 கிராம் சோடியம் குளோரைடும், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடும், 2.9 கிராம் சோடியம் சிட்ரேட்டும் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் கரைசல் பொட்டலங்கள் இப்படி இருப்பதில்லை. அவற்றை ஒரு லிட்டர் நீரில் கரைக்கும் போது 120 கிராம் சர்க்கரையும், 1.17 கிராம் சோடியம் குளோரைடும், 0.79 கிராம் பொட்டாசியம் குளோரைடும், 1.47 கிராம் சோடியம் சிட்ரேட்டும் இருக்கின்றன. அக்கரைசல்களில் சர்க்கரை மட்டுமே அதிகமாக உள்ளது. மற்றவை குறைவாக உள்ளன. இதை லாபமீட்ட நினைக்கும் வியாபார நிறுவனங்கள் செய்யும் மருந்து கலப்படம் என்றே கூறலாம். இக்கரைசல் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் உயிரைக் காப்பாற்றாது. மாறாக உயிரை எடுத்து விடும் எமனாகவும் மாறி விடும்.

இந்த எமகாதாத கலப்படத்தை ஹைதாராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ் என்பவர் பத்து வருடங்களுக்கு மேலாக நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து நிரூபித்துள்ளார். இது போன்ற கலப்பட கரைசல்கள் ஓ.ஆர்.எஸ் என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படக் கூடாது என்று அவர் நீதிமன்ற ஆணையையே பெற்றிருந்தாலும் சந்தையில் கலப்படம் செய்பவர்களுக்கா குறைவு?

இது போன்ற கலப்பட எமன்களிடமிருந்து காத்துக் கொள்ள ஓ.ஆர்.எஸ் கரைசலைச் சுலபமாக நாமே வீட்டில் தயாரித்துக் கொள்ளலாம். ஒரு லிட்டர் நீரில் 6 டீஸ்பூன் சர்க்கரை, ½ டீஸ்பூன் உப்பையும் கலந்து நாமே தயாரித்துக் கொள்ளும் கரைசல் சரியான ஓஆர்எஸ் கரைசலாக அமையும். கலப்படமில்லாமலும் அமையும்.

*****

Thursday, 18 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.12.2025)

1) காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

2) மழை மற்றும் குளிர் காலங்களில் நத்தைகள் மூலமாக மூளை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

3) 2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

4) மாசுகட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாத பழைய வாகனங்கள் டெல்லியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

5) தமிழகத்தில் டிசம்பர் 23 வரை மித மழைக்கு வாய்ப்புள்ளது.


Education & GK News

1) The bill allowing 100 percent foreign direct investment in the insurance sector has been passed in Parliament.

2) Doctors have warned that brain fever is likely to spread through snails during the rainy and cold seasons.

3) Guidelines for conducting Jallikattu in 2026 have been released.

4) Old vehicles without pollution control board approval have been banned from entering Delhi.

5) There is a possibility of moderate rainfall in Tamil Nadu until December 23.

Wednesday, 17 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.12.2025)

1) தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது.

2) 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்குப் பதிலாக வளர்ந்த பாரத ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

3) பிரதமருக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

4) பயன்படாத 71 சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

5) தென்மாவட்டத்துக்குச் செல்லும் தொடர்வண்டிகளின் வேகத்தை அதிகப்படுத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.




Education & GK News

1) The draft electoral roll will be released tomorrow in Tamil Nadu.

2) The Developed India Rural Employment and Livelihood Guarantee Bill was introduced in Parliament, replacing the 100-day employment scheme.

3) The Prime Minister was awarded Ethiopia's highest honour.

4) A bill to repeal 71 obsolete laws was passed in Parliament.

5) It has been decided to increase the speed of trains travelling to the southern districts.