Friday, 12 December 2025

ஸ்பைடர்மேனின் பிறப்பும் புதிய ரத்த வகையும் இ20 பெட்ரோலும்!

ஸ்பைடர் மேனின் பிறப்பு

சிலந்தி மனிதன் (ஸ்பைடர் மேன்) படக்கதைகளைப் (காமிக்ஸ்) படித்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. படித்து வியந்தவர்கள் திரையில் பார்த்து ரசிக்காமலும் இருக்க முடியாது.

ஸ்பைடர் மேன் காமிக்ஸ் முதன் முதலில் வெளியானது 1962, ஆகஸ்ட் 1 இல் அமேசிங் பேன்டசி என்ற காமிக்ஸ் புத்தகத்தில். கிட்டதட்ட 63 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் பொலிவு குன்றாமல்தான் இருக்கிறார் இந்தச் சிலந்திப் பூச்சி மனிதர்.

*****

புதிய ரத்த வகை

நமக்கு ஏ, பி, ஏபி, ஓ இவற்றில் +, - என சில ரத்த வகைகளைத் தெரியும். இதைத் தாண்டிய புதிய ரத்த வகைகளும் இருக்கின்றன. அண்மையில் கர்நாடகம், கோலாரில் CRIB (Cromer India Bengaluru) என்ற புதிய ரத்த வகை 38 வயது பெண்மணியிடம் கண்டறியப்பட்டுள்ளது. வினைபுரியும் நிலையில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் இவ்வகை ரத்தத்தின் சிறப்பம்சமாகும்.

*****

இ20 பெட்ரோல்

ஒரு சில இரு சக்கர வாகனத்தில் E20 Compliance என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படியென்றால் என்ன?

20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் என்பதுதான் அதன் பொருள்.

எத்தனால் என்பது பெட்ரோலைப் போலக் கிடையாது. குறைவான கார்பனையே உமிழும். மேலும் எத்தனால் வெளியிடும் கார்பன் – டை – ஆக்சைடைத் தாவரங்கள் உள்வாங்கிக் கொள்ளும். இதெல்லாம் பெட்ரோலில் சாத்தியப்படாது.

பெட்ரோலை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். எத்தனாலை நாம் கரும்புச்சாறு, மக்காச்சோளம் மற்றும் வீணாகும் தானியங்களிலிருந்து தயாரித்துக் கொள்ள முடியும். இதனால் இறக்குமதி குறையும், விவசாயமும் பலன் பெறும், பலம் பெறும்.

ஒரு கணக்கின்படி 20 சதவீத எத்தனாலைப் பெட்ரோலோடு கலப்பதால் நமக்கு 1.1 லட்சம் கோடி அந்நிய செலவாணி மிச்சமாகும். இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் முன்பே குறிப்பிட்டது போலச் சுற்றுச்சூழலுக்கும் இணக்கமாக உள்ளது. விவசாயம் செழிக்கவும் வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலையைக் குறைக்கவும் வாய்ப்புள்ளதா? ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்குமா என்பது விடை காண முடியாத கேள்வி.

*****

Thursday, 11 December 2025

சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன?

சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன?

உங்கள் அலைபேசியின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள செயலிதான் (App) சஞ்சார் செயலி ஆகும்.

திருடு போகும் செல்போன்களை கண்டறிவதற்கும், இணைய மோசடிகள் தொடர்பான புகார்களை அளிப்பதற்கும் உதவும் வகையில், கடந்த ஜனவரி மாதம் சஞ்சார் சாத்திஎன்ற செயலியை மத்திய அரசு இச்செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி மூலம், செல்போன் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால், அதைப் பதிவு செய்து அனைத்து தளங்களிலும் முடக்கலாம்.

மோசடி அழைப்புகள், மோசடி குறுஞ்செய்திகள் வரும் எண்களை இந்த செயலி மூலம் ரிபோர்ட் ஸ்பேம்செய்து புகார் அளிக்கலாம்.

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளன, எத்தனை பயனில் உள்ளது என்பதையும் இச்செயலி மூலமாக அறியலாம். உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் சிம் கார்டுகள் பெறப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களை இச்செயலி மூலமாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் இச்செயலி மூலமாக செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணையும் சரிபார்க்கலாம்.

இச்செயலின் பயன் என்னவென்று கேட்டால்,

கடந்த 11 மாதங்களில் மட்டும் சஞ்சார் சாத்தி செயலி உதவியுடன் தொலைந்து போன 7 லட்சத்துக்கும் அதிகமான அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 42 லட்சம் பேர் இந்த செயலியைப் பயன்படுத்தித் தொலைந்த செல்போன்களை அனைத்து தளங்களில் இருந்து துண்டித்துள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் இந்தச் செயலி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம் அல்லவா! அப்படிப் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.12.2025)

1) மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

2) தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணிகள் நாளை மறுநாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3) சென்னை கிண்டியில் 480 கோடியில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

4) இந்தியா அமெரிக்க இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடினர்.

5) இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் கப்பல் வாரணாசியில் இயக்கப்பட உள்ளது.

6) ஒரு மில்லியன் டாலர் செலுத்தினார் அமெரிக்க குடியுரிமை வழங்கும் டிரம்பின் தங்க அட்டைத் திட்டம் அமலுக்கு வந்தது.


Education & GK News

1) Chief Minister M.K. Stalin will launch the second phase of the Women's Rights Fund Expansion Project in Chennai today.

2) Voter registration work in Tamil Nadu has been extended till the day after tomorrow.

3) A high-specialty hospital for children is planned to be set up in Guindy, Chennai at a cost of Rs 480 crore.

4) The two leaders spoke on the phone to improve mutual cooperation between India and the US.

5) The first hydrogen ship built in India is to be operated in Varanasi.

6) Trump's Golden Card scheme, which provides US citizenship, came into effect after paying one million dollars.

Wednesday, 10 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.12.2025 (வியாழன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.12.2025 (வியாழன்)

இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள்.

1) தமிழகமெங்கும் 7 மாவட்டங்களில் 10 நவீன நெல் சேமிப்புக் கிடங்குகளுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் அடிக்கல் நாட்டினார்.

2) அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகளில் அடுத்து வாரம் 20 வால்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

3) வாக்காளர் திருத்தப் படிவங்களை (SIR படிவம்) ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.

4) வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் டிசம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்.

5) உணவுப் பாக்கெட்டுகளில் சைவ மற்றும் அசைவக் குறியீடுகள் கட்டாயம் என தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

6) தமிழகத்தில் கூடுதலாக 6568 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சன பட்நாயக் தெரிவித்துள்ளார்.

7) இண்டிகோ நிறுவன செயல்பாடுகளை மேற்பார்வை செய்ய 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நியமித்துள்ளது.

8) யுனெஸ்கோ கலாச்சாரப் ட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது.

9) 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தடை ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்தது.





Education & General Knowledge News – 11.12.2025 (Thursday)

Today is the birth anniversary of Mahakavi Bharathiyar.

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for 10 modern paddy storage facilities in 7 districts across Tamil Nadu.

2) 20 Volvo buses are to be introduced next week in the buses operated by the State Transport Corporation.

3) Today is the last day to submit voter revision forms (SIR form).

4) Those whose names are missing from the voter list can apply from December 16th.

5) The Tamil Nadu Food Safety Department has stated that vegetarian and non-vegetarian symbols are mandatory on food packets.

6) Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has stated that 6568 new polling stations will be set up in Tamil Nadu.

7) The Directorate General of Civil Aviation has appointed an 8-member committee to oversee IndiGo's operations.

8) The Diwali festival has been included in the UNESCO cultural list.

9) A ban on the use of social media by those under 16 years of age has come into effect in Australia.

Tuesday, 9 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.12.2025 (புதன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.12.2025 (புதன்)

1) தமிழகத்தின் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொழிற்பயிற்சி படிப்புக்கான ஐடிஐ தொடங்கும் பணிகள் ஆயத்தமாகியுள்ளன.

2) சென்னையில் ஜனவரி 16 முதல் 18 வரை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

3) பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாடு புது டெல்லியில் டிசம்பர் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது.

4) இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.58 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது.

5) இந்திய அரிசி உட்பட விவசாய விளைபொருள்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Education & General Knowledge News – 10.12.2025

1) Work is underway to start ITIs for vocational training courses in government high schools and colleges in Tamil Nadu.

2) An international book fair is to be held in Chennai from January 16 to 18.

3) A traditional medicine summit is to be held in New Delhi from December 17 to 19.

4) Microsoft is to invest Rs 1.58 lakh crore in India.

5) US President Donald Trump has said that additional taxes will be imposed on agricultural products including Indian rice.

1) Work is underway to start ITIs for vocational training courses in government high schools and colleges in Tamil Nadu.

2) An international book fair is to be held in Chennai from January 16 to 18.

3) A traditional medicine summit is to be held in New Delhi from December 17 to 19.

4) Microsoft is to invest Rs 1.58 lakh crore in India.

5) US President Donald Trump has said that additional tariffs will be imposed on agricultural products, including Indian rice.

Monday, 8 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.12.2025)

1) மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் உயர்நிலைப் பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2) கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை என முதல்வர் தெரிவித்துள்ளார்.

3) கொரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு இதய நாள தளர்ச்சி அதிகரித்துள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4) தங்கும் விடுதிகளில் எண்ம முறையில் (டிஜிட்டல் முறை) ஆதார் சரிபார்ப்பு நடைமுறைகள் விரைவில் அமலாக உள்ளன.

5) இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள விமான சேவை குளறுபடிகள் படிப்படியாகச் சீரடையத் தொடங்கியுள்ளன.

5) ரஷ்யா நேரடி அச்சுறுத்தல் நாடு இல்லை எனவும் இந்தியா கூட்டாளி நாடு எனவும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

6) தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the Veeramangai Velunachiyar High Level Bridge in Madurai.

2) The Chief Minister has said that it is the duty of citizens to contribute to the Flag Day fund.

3) Medical studies have shown that the incidence of heart failure has increased 4 times after Corona.

4) Digital Aadhaar verification procedures in hotels are coming into effect soon.

5) The flight service disruptions at IndiGo Airlines have gradually started to improve.

5) The new US security policy has declared that Russia is not a direct threat country and India is an ally.

6) Moderate rain is likely in Tamil Nadu for the next six days.

Sunday, 7 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.12.2025)

1) மின்னணு துறையில் இந்தியாவின் தலைநகராகத் தமிழகம் மாறியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2) தொடர் மழையால் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

3) தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி டிசம்பர் 11 இல் துவங்குகிறது.

4) தெற்காசியாவில் பெய்த கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1750 ஐக் கடந்தது.

5) கோவாவில் இரவு கேளிக்கை விடுதியில் எரிவாயு உருளை (சிலிண்டர்) வெடித்ததில் 25 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

6) இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ரத்தாவதால் விமான கட்டணங்கள் ஆறு மடங்கு அதிகமாயுள்ளன.

7) வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்கியிருக்கலாம் என மத்திய அரசு அறிவுத்துள்ளது.

8) தமிழகத்தில் ஆறு நாட்களக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

9) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றது.








Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has proudly stated that Tamil Nadu has become the capital of India in the electronics sector.

2) Dengue incidence has increased in Tamil Nadu due to continuous rains.

3) The work of checking electronic voting machines across Tamil Nadu will begin on December 11.

4) The death toll due to heavy rains in South Asia has crossed 1750.

5) 25 people were killed in a gas cylinder explosion at a nightclub in Goa. Many were seriously injured.

6) Airfares have increased six times due to cancellation of IndiGo flights.

7) Former Bangladesh Prime Minister Sheikh Hasina can stay in India as long as she wants, the Central Government has informed.

8) There is a possibility of moderate rain in Tamil Nadu for six days.

9) India won the one-day cricket match against South Africa.