மருத்துவக் காப்பீட்டிற்கான
குடும்ப உறுப்பினர்கள் விவரப் படிவம்
ஆசிரியர்கள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்திலிருந்து செலுத்தும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரப் படிவத்தைக் கீழே காண்க.
*****
பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
மருத்துவக் காப்பீட்டிற்கான
குடும்ப உறுப்பினர்கள் விவரப் படிவம்
ஆசிரியர்கள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்திலிருந்து செலுத்தும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரப் படிவத்தைக் கீழே காண்க.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.07.2026
1) கரூர்
சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை உயர்நீதி மன்றம்
ரத்து செய்துள்ளது.
2) தமிழக
அரசின் வருவாயைப் பெருக்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
3) தமிழக
முதல்வரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
4) அமைதி
வழியில் போராடும் உரிமையை மறுக்க முடியாது என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
5) காமன்வெல்த்
பளு தூக்குப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம்
வென்றார்.
Education & GK News
1) The High Court has set aside the government jobs
granted to the families of those who lost their lives in the Karur incident.
2) A committee headed by Montek Singh Ahluwalia has been
constituted to boost the Tamil Nadu government's revenue.
3) The Tamil Nadu Chief Minister's office is being
shifted to the tenth floor of the Namakkal Kavignar Maligai.
4) The Supreme Court has stated that the right to
protest peacefully cannot be denied.
5) Raja Muthupandi from Tamil Nadu won a silver medal in
the Commonwealth weightlifting competition.
அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 34
சாம்பார், சாவு மற்றும்
பெஸ்ட் செல்லர்!
மறுமலர்ச்சிக் காலம் என்று கூறியதும் நமக்கு
என்ன நினைவுக்கு வரும்? மைக்கேல் ஆஞ்சலோவின் சிற்பங்கள், டாவின்சியின் மோனாலிசா
புன்னகை, கலிலியோவின் தொலைநோக்கி, அத்துடன் பூமி உருண்டை என்று உலகிற்குச் சொன்ன
அறிவியல் அறிஞர்கள்.
"கடவுள் படைத்தார், நாம் வாழ்கிறோம்"
என்று அமைதியாக இருந்த மனிதர்கள் அனைவரும், திடீரென்று விழித்துக் கொண்டு
"ஏன்?", "எதற்கு?", "எப்படி?" என்று கேள்வி கேட்கத்
தொடங்கிய காலம் அது. அறிவியலும் கலையும் சிறந்து விளங்கின.
ஆனால், இவ்வளவு அறிவு வளர்ந்த பிறகும்
மனிதனுக்கு ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை. அதுதான் மரண பயம்!
பூமி சூரியனைச் சுற்றுகிறதா அல்லது சூரியன்
பூமியைச் சுற்றுகிறதா என்று ஆராய்ச்சி செய்தவன் கூட, "நாம் இறந்த பிறகு
அடுத்து என்னவாகும்?" என்று யோசிக்கும்போது லேசாக நடுங்கித்தான்
போயிருக்கிறான். அதுதான் மனித இயல்பு. அறிவு வளர வளர பயமும் புதிது புதிதாக வடிவம்
எடுக்கும்.
அப்போதுதான் அந்த ஐரோப்பியப் புத்தக
வியாபாரிகளுக்கு ஒரு விசித்திரமான யோசனை தோன்றியிருக்கிறது.
"கேள்வி கேட்கும் மக்கள் கூட்டம்
அதிகமாகிவிட்டது. சரி, இவர்களுக்கு மரண பயத்தைக் காட்டி ஒரு வணிகம் செய்தால்
என்ன?"
அப்படி உருவானதுதான் "எப்படிச் சாவது?" என்பதை ஒரு
கலையைப் போல எடுத்துச் சொன்ன புத்தகங்கள். அதில் ஒன்றுதான் "Ars
Moriendi" புத்தகம்.
மற்றபடி நீடாமங்கலத்தில் நீங்கள்
தேடிப் பார்த்தாலும் டிமான்டி காலனியும் இருக்காது, அந்தப் பதின்மூன்றாம் குறுக்குத்
தெருவையும் காண முடியாது. எனக்கு நீடாமங்கலத்தில் மார்த்தாண்டம் என்ற பெயரில் நண்பரும்
யாரும் இல்லை.
யோசித்துப் பாருங்கள், இன்றைக்குக் கடைகளுக்குச்
சென்றால் "எப்படிப் பணக்காரன் ஆவது?", "எப்படி வெற்றி
பெறுவது?" என்று சுயமுன்னேற்றப் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதேபோல பதினைந்து
மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் பெஸ்ட் செல்லராக இருந்தது இந்த "எப்படிச்
சாவது?" ரகப் புத்தகங்கள்தான்!
அப்போது அச்சுக்கூடம் புதிதாக வந்திருந்த நேரம்.
பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக அச்சிடப்பட்டவை இந்தப் புத்தகங்கள்தான். மக்களும்
போட்டி போட்டுக்கொண்டு வாங்கிப் படித்திருக்கிறார்கள்.
புத்தகத்தில் அப்படி என்னதான் இருந்தது
என்கிறீர்களா?
ஒருவர் சாவுப் படுக்கையில் கிடக்கும்போது, அவரது
ஆத்மாவைப் பிடிக்கப் பிசாசும் தேவதையும் சண்டை போடுமாம். சாவுகின்ற போதும்
சண்டையா? என்று கேட்காதீர்கள்.
பிசாசு வந்து, "நீ வாழ்க்கையில் செய்த
தவறெல்லாம் நினைவிருக்கிறதா? உனக்கு நரகம்தான்!" என்று பயமுறுத்துமாம்.
உடனே தேவதை வந்து, "பயப்படாதே, கடைசி
நிமிடத்தில் கடவுளை நம்பு, சொர்க்கத்திற்குச் சென்றுவிடலாம்" என்று அறிவுரை
கூறுமாம்.
இந்தக் கடைசி நேரப் போராட்டத்தில் வெற்றி பெறுவது
எப்படி? நிதானமாக உயிரை விடுவது எப்படி? அழுது புலம்பாமல், கண்ணியமாக உயிரைத்
துறப்பது எப்படி? என்று ஸ்டெப் பை ஸ்டெப் கெயிடன்ஸ் அன்ட் கௌன்சிலிங்
மேட்டர்களைத்தான் எப்படிச் சாவது வகையறா புத்தகங்களில் கதை அளந்தார்கள்.
சொல்லப்போனால், அது அக்காலகட்டத்தின்
"மரணத்திற்கான பயனர் கையேடு"
மனிதனின் மிகப்பெரிய பலவீனமே அவனது பயம்தான்.
அந்தப் பயத்தை வைத்து வணிகம் செய்வது இன்று நேற்று வந்த கலை அன்று. மறுமலர்ச்சிக்
காலத்திலேயே அது மிக நேர்த்தியாக நடந்திருக்கிறது.
அறிவியல் வளர்ந்து எல்லாவற்றையும் கேள்வி கேட்ட
காலத்திலும், மரணம் என்ற அந்த ஒரே ஒரு விடை தெரியாத கேள்விக்கு முன்னால் மனிதன் கை
கட்டித்தான் நின்றான். "வாழும்போது எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்தாலும்,
சாகும்போது ஒழுங்காகச் செத்துவிட வேண்டும்" என்ற மனநிலைக்கு வந்து விட்டான்.
அந்தக் கால கட்டங்களில் ரோஜர் பேக்கனும்,
டெகார்ட்டும் தத்துவம் பேசியிருக்கலாம். ஆனால், இரவில் தூங்கச் செல்லும்போது
"நாளைக் காலை விடியும்போது கண் விழிக்கவில்லை என்றால் என்ன செய்வது?"
என்று நினைத்துப் பார்த்து, அந்தப் புத்தகத்தைப் புரட்டிய சராசரி மனிதன்தான் அன்று
உலகில் பெரும்பான்மையாக இருந்தான்.
அறிவியல் இவ்வளவு தூரம் வளர்ந்து, செவ்வாய்
கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் இந்த நூற்றாண்டில் நாம் மட்டும் மாறிவிட்டோமா
என்ன?
இன்றைக்கும் "100 ஆண்டுகள் வாழ வைக்கும்
மாத்திரை", "ஆயுளை நீட்டிக்கும் உணவு முறை" என்று எத்தனையோ புதிய
விஷயங்கள் வந்துகொண்டுதானே இருக்கின்றன.
அன்று "எப்படிச் சாவது?" என்று
புத்தகம் படித்தான்.
இன்று "எப்படிச் சாகாமல் இருப்பது?"
என்று கூகுளில் தேடுகிறான்.
வடிவம் தான் மாறியிருக்கிறது. மனிதனின் அந்தப்
பயம்? அது அப்படியேதான் இருக்கிறது! அது இருக்கும் வரை அமானுஷ்யத்திற்குக் குஷியோ
குஷிதான்.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.07.2026
1) நாடாளுமன்றத்தில்
தேர்வு முறைகேடுகள் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
2) நீட்
தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பதவியை ராஜினாமா செய்தார்.
3) புதிய
மத்திய கல்வி அமைச்சராகப் பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்றுக் கொண்டார்.
4) தமிழகத்தில்
அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு வெப்பம் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
5) காமன்வெல்த்
பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் தங்கம் வென்றார். ரிஷிகாந்த் வெள்ளி
வென்றார்.
Education & GK News
1) A bill addressing examination irregularities is being
tabled in Parliament today.
2) Union Education Minister Dharmendra Pradhan resigned,
taking responsibility for the NEET exam paper leak.
3) Pralhad Joshi has assumed office as the new Union
Education Minister.
4) Temperatures in Tamil Nadu are likely to rise by up
to four degrees Celsius over the next four days.
5) India's Mirabai won gold and Rishikant won silver at
the Commonwealth Weightlifting Championship.
அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் - 33
மரணத்தின் பாஸ்வேர்ட்!
நீடாமங்கலம்,
டிமாண்டி காலனி, பதின்மூன்றாம் குறுக்குத் தெரு.
நேரம்
நள்ளிரவு 1:30.
மார்த்தாண்டம்
தன் லேப்டாப் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது காபிக் கோப்பை குளிர்ந்து
போய் பல மணி நேரமாகியிருந்தது. அவன் ஒரு தொல்பொருள் ஆய்வாளன், அதைவிட முக்கியமாக, தேவையில்லாத
விஷயங்களில் மூக்கை நுழைக்கும் சுபாவம் கொண்டவன்.
ஜெர்மனியில்
உள்ள ஒரு பழைய புத்தக சேகரிப்பாளரிடமிருந்து அவனுக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. பதினைந்தாம்
நூற்றாண்டைச் சேர்ந்த, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் அச்சிடப்பட்ட அசல்
"Ars Moriendi" புத்தகத்தின் ஓர் அரிய பிரதி. தமிழில் சொல்வதென்றால், புத்தகத்தின்
தலைப்பு எப்படிச் சாவது?
புத்தகத்தைப்
புரட்டியபோது, கடைசிப் பக்கத்தில் ஒரு விசித்திரமான லத்தீன் வாசகமும், அதற்குக் கீழே
மரக்கட்டையில் செதுக்கப்பட்ட ஓர் ஓவியமும் இருந்தது. சாவுப் படுக்கையில் இருக்கும்
ஒரு மனிதன், அவனைச் சுற்றித் தேவதைகளும் பிசாசுகளும். ஆனால், உற்றுப் பார்த்தபோதுதான்
தெரிந்தது, அந்தப் பிசாசின் கையில் இருப்பது ஒரு விசித்திரமான வடிவியல் வடிவம்.
"என்ன
இது? கூகுள்ல கூட இந்த இமேஜ் இல்லையே?" மார்த்தாண்டம் தனக்குள் முணுமுணுத்தான்.
திடீரென்று,
அறையின் வெப்பநிலை சட்டென்று குறைந்தது. ஏசியின் கூலிங் அதிகரித்தது போல அல்ல, ஒரு
மயானத்தின் குளுமை.
அவனது
மொபைல் போன் திரையில் தானாக ஒரு மெசேஜ் டைப் ஆகத் தொடங்கியது.
"புத்தகத்தைப்
படித்தாயா, மார்த்தாண்டம்?"
மார்த்தாண்டம்
திடுக்கிட்டு எழுந்து நின்றான். "யார் அது? ஹேக் பண்ணிட்டியா?"
மொபைலில்
அடுத்த மெசேஜ்:
"பதினைந்தாம்
நூற்றாண்டில் எப்படிச் சாவது என்று புத்தகம் எழுதினார்கள். ஆனால், அந்தப் புத்தகத்தின்
13 ஆவது அத்தியாயத்தில் என்ன இருந்தது என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால், அதை வாசித்த
எவனும் உயிரோடு இருந்ததில்லை!"
மார்த்தாண்டத்திற்கு
முதுகுத்தண்டில் ஒரு குளிர்ச்சி பரவியது.
"இது
ஏதோ பாட் செய்யும் வேலை" மார்த்தாண்டம் தன்னைத் தேற்றிக்கொண்டு, லேப்டாப்பில்
அந்த ஓவியத்தை ஜூம் செய்தான். அந்த வடிவியல் வடிவத்தின் நடுவே, சிறிய எழுத்துக்களில்
தமிழ் போன்ற ஒரு வரி!
"மரணத்திற்குப்
பின் என்ன இருக்கிறது என்று அறியும் ஆர்வம் உனக்கு இருக்கிறதா?"
அடுத்த
கணம், அறையின் விளக்குகள் படபடவென மின்னத் தொடங்கின. லேப்டாப் திரையில் இருந்து ஒரு
விசித்திரமான அதிர்வெண் ஒலி கேட்கத் தொடங்கியது. அது காதுகளில் ஒலிக்கவில்லை. நேரடியாக
மூளையின் நியூரான்களில் அதிர்ந்தது!
மார்த்தாண்டத்தின்
கைகள் நடுங்கின. அவன் அந்த Ars Moriendi புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை மீண்டும் பார்த்தான்.
அதில் இருந்த பிசாசின் கண்கள் பளிச்சிடுவது போல் அவனுக்குத் தோன்றியது.
அப்போது
அவனது வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ பைல் வந்தது. அனுப்பியவர் Unknown.
அதை
ப்ளே செய்தான்.
ஒரு
குரல் மனிதக் குரல் போல இல்லை, டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட அமானுஷ்யக் குரல்,
"மறுமலர்ச்சிக்
காலத்தில் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியபோது, மரண பயத்தைப் பயன்படுத்தி ஒரு கதையை
உருவாக்கினோம். எப்படிச் சாவது என்பது புத்தகத்தின் தலைப்பு மட்டும் அல்ல மார்த்தாண்டம்.
அது ஒரு சங்கேத குறியீடு அந்தப் பக்கத்தைப் பார்த்த அடுத்த 10 நிமிடங்களில், மனித மூளையின்
கார்டெக்ஸ் பகுதி செயலிழக்கத் தொடங்கும்!"
மார்த்தாண்டம்
தன் கைகளைப் பார்த்தான். லேசாக மரத்துப் போகத் தொடங்கியிருந்தது!
"இல்லை.
இது பயத்தால் ஏற்படும் பேனிக் அட்டாக்." மார்த்தாண்டம் அறிவியலைத் துணைக் கூப்பிட்டான்.
"அப்படியும்
இருக்கலாம்." பின்னாடியிருந்து ஒரு குரல் கேட்டது!
மார்த்தாண்டம்
அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தான். அறையின் மூலையில், நிழல்கள் திரண்டு ஒரு மனித
உருவம் போல் வடிவமெடுத்தன. அதன் கையில். அதே 15 ஆம் நூற்றாண்டுப் புத்தகம்!
"நீ
மறுமலர்ச்சிக் காலத்தின் அறிவியலை நம்புகிறாய். ஆனால் மரணம் என்பது அறிவியலுக்கும்
அப்பாற்பட்ட ஒரு நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கின் பாஸ்வேர்ட்தான் இந்தப் புத்தகம்.
அதைத் திறந்துவிட்டாய்!"
மார்த்தாண்டத்தின்
மூச்சுத் திணறியது. கண்கள் இருண்டன. லேப்டாப் திரையில் அந்த வடிவியல் வடிவம் இப்போது
வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது.
அவன்
தன் கடைசி முயற்சியாக மொபைலை எடுத்து, தன் நண்பன் விஜயராமனுக்கு ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினான்:
"Ars
Moriendi புத்தகத்தைத் திறக்காதே!"
திறக்காதே
என்று சொன்னால் திறப்பதுதானே மனித குணம்.
நாளை
திறப்போம் அந்தப் புத்தகத்தை.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****
அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 32
பயத்தின் அதிர்வெண் 20
ஹெர்ட்ஸ்!
சுப்பிரமணியம் மற்றும் ராகவனுக்கு நேர்ந்த
அமானுஷ்யங்களைத் தாண்டி, இதன் பின்னாலிருக்கும் அறிவியலையும், வரலாற்றுப்
பக்கங்களையும் புரட்டினால் சில சுவாரஸ்யமான உண்மைகள் ஆவிகளைப் போல அணிவகுக்கின்றன.
சுப்பிரமணியம் சொன்ன பர்மா காட்டுச் சம்பவம்
புதிதல்ல. சரியாக 1914 ஆம் ஆண்டு, முதல் உலகப்போரின் போது பெல்ஜியத்தில் உள்ள
மான்ஸ் என்ற இடத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்ததாகப் பதிவாகியுள்ளது.
முதல் உலகப்போர் அப்போதுதான் சூடுபிடிக்கத்
தொடங்கியிருந்தது. பெல்ஜியத்தில் உள்ள மான்ஸ் என்ற ஊரில் பிரிட்டிஷ் படைகளுக்கும்
ஜெர்மன் படைகளுக்கும் பயங்கர மோதல்.
பிரிட்டிஷ் ராணுவத்தின் எண்ணிக்கை வெறும்
80,000.
எதிரே வந்த ஜெர்மன் படைகளோ 1,60,000.
சுருக்கமாகச் சொன்னால், இரண்டுக்கு ஒன்று.
தப்பிக்க வழியே இல்லை. பிரிட்டிஷ் வீரர்கள்
கொத்து கொத்தாக மடியத் தொடங்கினார்கள். இனி அவ்வளவுதான், இன்றுடன் கதை முடிந்தது
என்று நினைத்த தருணத்தில் ஓர் அதிசயம் நடந்தது!
வானத்தில் திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி. அதில் 1415
ஆம் ஆண்டு அஜின்கோர்ட் போரில் மடிந்த பழங்கால வில்லாளிகளின் ஆவிகள் வில்லும்
அம்பும் ஏந்தி ஜெர்மன் படைகளை முன்னோக்கி வரவிடாமல் தடுத்ததாகவும் செய்திகள்
பரவின.
ஜெர்மன் குதிரைகள் மிரண்டு ஓடினவாம். பிரிட்டிஷ்
வீரர்கள் பாதுகாப்பாகப் பின்வாங்கி உயிர் தப்பினார்களாம்.
ஆனால் இதன் பின்னணியில் இருந்த கப்சா அக்மார்க்
திருநெல்வேலி அல்வா.
அது என்ன என்கிறீர்களா?
ஆத்தர் மேச்சன் என்ற எழுத்தாளர், தி போமன் என்ற தலைப்பில்
ஒரு புனைகதையை லண்டன் பத்திரிகை ஒன்றில் எழுதினார்.
போரின் பேரழிவாலும், பயத்தாலும் உறைந்துபோய்
இருந்த மக்களுக்கு இந்தக் கதை ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. "இது கதை
இல்லை, உண்மையில் நடந்தது" என்று மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.
கதையில் இருந்த வில்லாளிகள், நாளடைவில் சிறகு
முளைத்த தேவதைகளாக மாறினார்கள்! அவர்களை மான்ஸ் தேவதைகள் என்றே மக்கள் கதைகளைப்
பரப்பத் தொடங்கினார்கள்.
ஒருபுனைகதை நடந்த சம்பவம் போலவே மாறி விட்டது.
பர்மா காட்டில் சுப்பிரமணியத்தின் குழுவிற்கும்,
ஜிம்கானா கிளப்பில் ராகவனுக்கும் நடந்த சம்பவங்களுக்கு பின்னணியிலும் அதே
சாத்தியக்கூறுகள்தான் உள்ளன.
மனிதக் காதுகளால் 20 ஹெர்ட்சுக்குக் கீழே உள்ள
ஒலிகளைக் கேட்க முடியாது. ஆனால், உடலாலும் மூளையாலும் அதை உணர முடியும்.
பர்மா காட்டின் நில அதிர்வு அல்லது புயல்
காற்றினால் உருவான 18Hz முதல் 19Hz வரையிலான இன்ப்ராசவுண்ட், மனிதக் கண் விழிகளைச்
லேசாக அதிரச் செய்யும்.
இது பார்வையின் ஓரங்களில் நீல நிற ஒளிரும்
பிம்பங்கள் போன்ற தோற்ற மயக்கத்தை உருவாக்கும்.
மேலும், இது இதயத் துடிப்பை எகிற வைத்து,
உச்சகட்ட பயத்தையும், தீவிரமான சந்தர்ப்பங்களில் மாரடைப்பையும் உண்டாக்கும்.
ஜப்பானிய வீரர்கள் ரத்தக் காயமின்றி இறந்து கிடந்ததற்கு இதுவே முக்கிய காரணம்.
காடுகளில் அழுகும் தாவரங்கள் மற்றும்
எலும்புகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் மற்றும் பாஸ்பைன் வாயுக்கள் ஆக்ஸிஜனுடன்
சேர்ந்து எரியும்போது நீல நிறத்தில் ஒளிரும்.
பயத்தின் உச்சத்திலிருந்த 18 வீரர்களில்
ஒருவருக்கு சிப்பாய் கலக உருவங்கள் தோன்றியிருக்கலாம். அதை அவர் அலறிய போது, மரண
பயத்திலிருந்த மற்ற வீரர்களின் மூளையும் அதே பிம்பத்தைப் பிரதிபலித்திருக்கலாம்.
மனநல மருத்துவத்தில் இதை கூட்டு மனநோய் என்பார்கள்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக இது சுப்பிரமணியம்
வாயால் சுட்ட வடையாகவும் இருக்கலாம். அந்த வடையைக் காக்கா தூக்கிப் போகாமல்,
ராகவன் தூக்கிக் கொண்டு போவாரா என்று கூட அவர் எதிர்பார்த்திருக்கலாம்.
அப்படியென்றால் ராகவன் கண்ணெதிரே சுப்பிரமணியம்
மறைந்தது எப்படி?
ஜன்னலுக்கு வெளியே மின்னிய ஏதோ ஒரு பலத்த
மின்சார வெளிச்சம் ராகவனின் விழித்திரையில் சுப்பிரமணியத்தின் நிழலைச் சில நொடிகள்
உறைந்து போகச் செய்திருக்கலாம்.
அந்த இடைவெளியில் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம்
இருட்டில் வெளியேறி இருக்கலாம்.
வெளியே கேட்ட மிலிட்டரி பூட்ஸ் சத்தம்? அது
மெட்ராஸ் கடற்கரைச் சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப்
ராணுவத்தின் நிஜமான அணிவகுப்பாகவும் இருந்திருக்கலாம்.
ஆக, எல்லாவற்றையும் தொகுத்துச் சொன்னால், இயற்கை
அமானுஷ்யமானது அல்ல; மனித மூளைதான் உலகிலேயே மிகச் சிறந்த மாயாஜாலக்காரன். பயம்,
எதிர்பார்ப்பு, காட்டின் வாயுக்கள் மற்றும் அதிர்வுகள் அல்லது கற்பனைகளும்
கப்சாக்களும் சேர்ந்து எழுதிய ஒரு நாடகமே ஆவிகளின் அணிவகுப்பு.
- அட்ரஸைத்
தேடுவோம்!
*****
அமானுஷ்யத்தின் அட்ரஸ்
அட்ரஸ் - 31
ஆவிகளின் அணிவகுப்பு!
1944
ஆம் வருடம்.
கடிகாரத்தின்
வினாடி முள் நகர மறுத்தது. இரவு மணி 2:15.
மெட்ராஸ்
ஜிம்கானா கிளப்பின் லைப்ரரி அறையில் பேன் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. எதிரே உடலெங்கும்
வியர்க்க, பதற்றத்தில் நடுகங்களுக்கிடையே உட்கார்ந்திருந்தார் கமாண்டர் சுப்பிரமணியம்.
அவருக்கு எதிரே டாக்டர் ராகவன்.
"ராகவா,
நான் சொல்றத நீ நம்ப மாட்ட. சைக்காலஜிக்கலா இது மாஸ் ஹலூசினேஷன்னு நீ ஈஸியா சொல்லிருவ.
ஆனா…"
"சுப்பிரமணியம்,
பர்ஸ்ட் ரிலாக்ஸ்," என்றான் ராகவன். அவரே தொடர்ந்தார், "இப்போ ரெண்டாம் உலகப்போர்
உச்சத்தில் இருக்கு. பர்மா பார்டர்ல ஜப்பான்காரன் பிச்சியெடுக்கறான். நீங்க ஆளுங்களை
இழந்துட்டு இங்க மெட்ராஸுக்கு வந்திருக்கீங்க. ஸ்ட்ரெஸ் அதிகமா இருந்தா மூளை என்ன வேணா
பிம்பத்தை உருவாக்கும். அதான் சயின்ஸ்."
"சயின்ஸாவது
மண்ணாங்கட்டியாவது!" சுப்பிரமணியம் கத்தினார். "அன்னைக்கு இரவு பர்மா காட்டில்
நடந்தது என்ன தெரியுமா?"
ராகவன்
சுப்பிரமணியத்தின் கன்னத்தில் தட்டிக் கொடுத்து விட்டு, தன் டிரேட்மார்க் புன்னகையோடு
பார்த்தார். "சொல்லுங்க, கேட்டுடுவோம்."
"மழை
கொட்டிக் கொண்டிருந்தது. காட்டின் அடர்த்தி வெளிச்சத்தை முற்றிலும் விழுங்கியிருந்தது.
என்னையும் சேர்த்து பிரிட்டிஷ் இந்தியப் படையில் எஞ்சியிருந்தது வெறும் 18 வீரர்கள்
மட்டுமே. எதிரே ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜப்பானியப் படைப்பிரிவு எங்களை வளைத்துவிட்டது.
எங்ககிட்ட அம்யூனிஷன் தீர்ந்து போச்சு ராகவன். சாகறதைத் தவிர வேற வழி இல்லை. நாங்க
எல்லாரும் துப்பாக்கியைக் கீழே வச்சிட்டு எங்க குலதெய்வத்தை கும்பிட ஆரம்பிச்சிட்டோம்."
"அப்புறம்?"
"திடீர்னு
காட்டுக்குள் ஓர் அசாதாரணமான அமைதி. மழை நின்ன மாதிரி ஒரு பீலிங். அப்புறம் ஓர் ஒளி.
நிலா வெளிச்சத்தை விட ஆயிரம் மடங்கு அதிகமா ஒரு நீல நிற வெளிச்சம் மரங்களுக்கு நடுவுல
பாய்ஞ்சுது."
ராகவன்
நிமிர்ந்து உட்கார்ந்தார். "பிலமென்ட் எஃபெக்ட்டா? அல்லது ஏதேனும் பாஸ்பரஸ் பாம்?"
"இல்லை!"
சுப்பிரமணியத்தின் குரல் நடுங்கியது. "அந்த வெளிச்சத்துக்குள்ள இருந்து உருவங்கள்
வெளிப்பட்டன. ஒண்ணு ரெண்டு இல்லை, நூற்றுக்கணக்கான உருவங்கள். அவங்க உடம்புல சாதாரண
துணி இல்லை. 1857 சிப்பாய் கலகத்துல செத்துப் போன இந்திய வீரர்களின் சீருடை! கையில
பழைய ரகத் துப்பாக்கிகள். அவங்க உடம்பு வழியா மரம், செடி எல்லாம் ஊடுருவித் தெரிஞ்சது!"
"வாட்?"
"ஆமா!
அந்த ஆவிகள் முன்னாடி நகர்ந்து போனது. ஜப்பானிய வீரர்கள் அலறி அடிச்சுட்டு துப்பாக்கியால்
சுட்டாங்க. ஆனா குண்டுகள் அந்த ஆவிகள் உடம்பைத் தாண்டிப் போய் மரத்துல பாய்ஞ்சுது.
அடுத்த பத்தே நிமிஷம். எந்த ஆயுதமும் இல்லாம, வெறும் அந்த ஆவிகளின் பிரசன்னத்தாலயே
ஜப்பானியப் படை பயந்து, ஒருத்தரையொருத்தர் மிதிச்சுட்டு ஓடிப்போய்ட்டாங்க. அத்தனை பேரையும்
அந்த ஆவிகள் துரத்திட்டுப் போய் காட்டுக்குள்ள மறைஞ்சுது."
ராகவன்
அமைதியாக யோசித்தார். "எல்லாம் தீவிரமான மரண பயத்தில் மூளை உருவாக்கும் கூட்டு
பிரமை"
"அதுக்கு
அப்புறம் அந்தச் சம்பவத்தால அன்னைக்கு செத்துப் போன 30 ஜப்பானிய பிணங்களை நான் என்
கண்ணால பார்த்தேனே ராகவன்? அவங்க உடம்புல ஒரு காயமும் இல்லை. பயத்துல இதயமே வெடிச்சு
செத்திருந்தாங்க! அது எப்படி?"
ராகவன்
தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்தார்.
"நீங்க
சொல்றது சுவாரஸ்யமா இருக்கு சுப்பிரமணியம். நோட் பண்ணிக்கிறேன். ஆனா சயின்ஸ்ல இன்ப்ராஸவுண்ட்
ஒன்னு இருக்கு. 20 ஹெர்ட்ஸ்க்கு கீழே உள்ள சப்தம். அதை மனுஷனால கேட்க முடியாது. ஆனா
மூளை உணரும். அது பயத்தை, மாய பிம்பங்களை, ஏன், ஹார்ட் அட்டாக்கைக் கூட உண்டாக்கும்.
பர்மா காட்டுல இருந்த ஏதோ ஓர் எரிமலை வாயு அல்லது நில அதிர்வு அந்தச் சப்தத்தை உருவாக்கியிருக்கலாம்."
சுப்பிரமணியம்
விரக்தியாகச் சிரித்தார். "நீ நம்ப மாட்ட ராகவன். எனக்குத் தெரியும்."
"சரி,
அந்த ஆவிகள் உங்ககிட்ட ஏதாச்சும் பேசுச்சா?"
சுப்பிரமணியம்
ராகவனின் கண்களை நேராகப் பார்த்தார்.
"ஒரே
ஒரு வார்த்தை ராகவன். அந்தப் படையின் முன்னாடி நின்ன தளபதி உருவம் என்னை திரும்பிப்
பார்த்து, நாம்ம மெட்ராஸில் சந்திப்போம்னு தமிழ்ல சொன்னுச்சு."
லைப்ரரியின்
மின்சாரம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது.
அறை
இருளில் மூழ்கியது.
ஜிம்கானா
கிளப்பின் ஜன்னல்கள் பலமாக அதிரத் தொடங்கின. மெட்ராஸில் மழை பெய்யாத அந்த நள்ளிரவில்,
ஜன்னலுக்கு வெளியே ஒரு நீல நிற ஒளி படர ஆரம்பித்தது.
ராகவன்
டார்ச் லைட்டை அடித்தார்.
சுப்பிரமணியத்தின்
இருக்கை காலியாக இருந்தது!
ஆனால்,
அறையின் மூலையில்,. பழைய 1857 ஆம் ஆண்டின் சீருடை அணிந்த ஒரு கம்பீரமான உருவம் நின்று
கொண்டிருந்தது. அதன் கண்கள் நிலா வெளிச்சத்தைப் போல மின்னின.
ராகவனின்
கையில் இருந்த டார்ச் லைட் நடுக்கத்தில் கீழே விழுந்தது.
அந்த
உருவம் ராகவனைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தது.
"டாக்டர்
ராகவன்! சயின்ஸ் எல்லாத்துக்கும் பதில் சொல்லிரும்னு நினைக்காதீங்க!"
அவ்வளவுதான்.
மின்சாரம்
மீண்டும் வந்தது.
அறையில்
ராகவன் மட்டுமே தனியாக நின்று கொண்டிருந்தார்.
வெளியேயிருந்து
மிலிட்டரி பூட்ஸ் சப்தம் டக் டக் என மொத்த மெட்ராஸ் நகரத்தின் வான்வெளியிலும் எதிரொலித்துக்
கொண்டிருந்தது!
சுப்பிரமணியம்
சொன்னது உண்மைதானா?
இப்போது
அதைச் சொன்ன சுப்பிரமணியம் எங்கே?
ராகவனுக்கு
நடந்த அமானுஷ்யங்கள் நிஜம்தானா?
-
அட்ரஸைத்
தேடுவோம்!
*****