Monday, 20 July 2026

வீடுகளுக்கான புதிய மின் கட்டணம்

வீடுகளுக்கான புதிய மின் கட்டணம்

வீட்டுப் பயன்பாட்டுக்கான புதிய மின் கட்டண விவரத்தைக் கீழே காண்க.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.07.2026

1) இந்தியாவில் டெங்குக் காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2) எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் முடங்கியது.

3) ஜம்மு காஷ்மீர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

4) பிரிட்டன் பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

5) உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வென்றது.

Education & GK News

1) Approval has been granted for a dengue fever vaccine in India for the first time.

2) The first day of the Parliament's monsoon session was disrupted by the uproar caused by opposition parties.

3) The death toll from the rains and floods in Jammu and Kashmir has risen to 23.

4) Andy Burnham has assumed office as the Prime Minister of Britain.

5) Spain won the championship title at the football World Cup.

நிழல்களின் ஊர்வலம்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 27

நிழல்களின் ஊர்வலம்

ஏப்ரல் 24.

நள்ளிரவு 11.45.

ஊட்டிக்கு அருகில் இருக்கும் அந்தப் பழமையான தேவாலயத்தின் கல் சுவர்களில் பனி ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது.

பிரகாஷ் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். டிஜிட்டல் திரை 11:46 எனக் காட்டியது.

அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்டீபன், தன் ஓவர் கோட் பாக்கெட்டிற்குள் கைவிட்டுப் புகையிலை பாக்கெட்டை எடுத்தான்.

"பிரகாஷ், இன்னும் நேரம் இருக்கு. கிளம்பிடலாம். இது தேவையில்லாத வேலை," என்றான் ஸ்டீபன். அவன் குரலில் நடுக்கம்.

பிரகாஷ் லேசாகச் சிரித்தான். "ஏன் ஸ்டீபன்? பயமா? இங்கிலாந்துல நூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த செயின்ட் மார்க்ஸ் ஈவ் நம்பிக்கையை இந்த ஊட்டி சர்ச் வாசல்ல வச்சு டெஸ்ட் பண்றதுல உனக்கு என்ன பயம்? அடுத்த ஒரு வருஷத்துல யார் சாகப் போறாங்களோ, அவங்களோட பெட்ச் அதாவது நிழல் உருவம் இப்போ இந்த தேவாலய கதவைத் திறந்துட்டு உள்ள போகும். இதுதானே கதை? சயின்ஸ் இதை ஒத்துக்கும்னு நினைக்கிறியா?"

"இது வெறும் கதை இல்லை பிரகாஷ். எங்க தாத்தா சொல்லியிருக்கார். இதை உண்மையாவே பார்த்துட்டுப் பைத்தியமானவங்க இந்த ஊர்ல உண்டு."

"பார்ப்போம். எனக்கு லாஜிக் வேணும்."

நள்ளிரவு 11:59.

சுற்றிலும் நிசப்தம். காற்றின் இரைச்சல் கூட நின்றுபோனது போல ஒரு மரத்துப் போன அமைதி. பனி மூட்டம் தேவாலயத்தின் பிரதான மரக் கதவுகளை மெல்ல மூடியது.

சரியாக 12.00.

தேவாலயத்தின் கோபுர மணி அடிக்கத் தொடங்கியது.

டங்... டங்... டங்...

பன்னிரண்டாவது மணி அடித்த கணத்தில், அந்த அதிசயம் மற்றும் அதிர்ச்சி நடந்தது.

தேவாலயத்தின் கனமான பூட்டப்பட்ட பிரதான கதவுகள், எந்தச் சத்தமும் இல்லாமல் மெதுவாகத் திறந்துகொண்டன!

பிரகாஷ் தன் கையில் இருந்த கேமராவின் ரெக்கார்டிங் பட்டனை அமுக்கினான். அவன் இதயம் லேசாக வேகமெடுத்தது.

ஏதோ ஏமாற்று வேலை என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

திடீரென, தேவாலய வாசலுக்கு எதிரே இருந்த இருட்டிலிருந்து ஓர் உருவம் நடந்து வரத் தொடங்கியது.

அது ஒரு மனித உருவம். ஆனால், அதற்கு நிறமில்லை. உடலின் எல்லைகள் தெளிவில்லாமல், புகையால் செய்யப்பட்டது போல ஒரு நிழல் உருவம். அது மெதுவாக நடந்து சென்று சர்ச்சின் திறந்த கதவுக்குள் நுழைந்தது.

பிரகாஷ் உறைந்துபோனான். "ஸ்டீபன். அதைப் பார்த்தியா?"

ஸ்டீபன் பதிலே சொல்லவில்லை. அவன் கண்கள் அகலத் திறந்திருந்தன.

இரண்டாவதாக ஓர் உருவம் வந்தது. அது தட்டுத்தடுமாறி ஓடிவந்து கதவுக்குள் நுழைந்தது.

"டேய் பிரகாஷ். அது... அது நம்ம ஊர் கிளப் செக்ரட்டரி ரத்தினம் மாதிரியே இருக்குடா! அவரோட வாக்கிங் ஸ்டைல்!" என்று அலறினான் ஸ்டீபன்.

"இல்லை. இது ஏதோ லைட் எபெக்ட். ஆப்டிகல் இல்லுஷன்." பிரகாஷ் தன் மூளைக்கு லாஜிக் தேடினான். ஆனால் அவன் கை நடுங்கியது.

மூன்றாவதாக ஓர் உருவம் இருட்டிலிருந்து வெளிப்பட்டது.

அந்த உருவம் தேவாலயத்தை நோக்கி நகரவில்லை. அது நேராக பிரகாஷையும் ஸ்டீபனையும் நோக்கித் திரும்பியது.

பனி மூட்டத்தில் அந்த உருவத்தின் முகம் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

அது வேறு யாருமல்ல, பிரகாஷ்!

அதே ஜீன்ஸ். அதே டீசர்ட். அதே கேமரா. ஆனால், அந்த நிழல் உருவத்தின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. கண்கள் வெறித்துப் பார்த்தன.

பிரகாஷுக்கு மூச்சு அடைப்பது போல இருந்தது. "நா... நானா? அடுத்த ஒரு வருஷத்துல, நானா?"

அந்த நிழல் உருவம் பிரகாஷைக் கடந்து, மெதுவாகச் சென்று தேவாலயத்தின் கதவுக்குள் நுழைந்தது. இப்போது கதவுகள் டாம் என்ற சத்தத்துடன் மூடிக்கொண்டன.

சுற்றிலும் பழையபடி அமைதி.

ஸ்டீபன் கதறி அழுதான். "பிரகாஷ். வேண்டாம்டா. இங்கிருந்து ஓடிடலாம்!"

பிரகாஷ் தன் கையில் இருந்த கேமராவைப் பார்த்தான். டிஜிட்டல் திரையில் எந்தப் பதிவும் இல்லை. வெறும் எர்ரர் செய்தி மட்டுமே மிதந்தது.

அவன் தோளைத் தொட்டு, "கிளம்பலாம் ஸ்டீபன்." என்றான்.

ஆனால், அவன் குரல் அவனுடையதாகவே இல்லை. மிகத் தொலைவிலிருந்து கேட்பது போல இருந்தது.

பிரகாஷ் மெதுவாகக் கீழே குனிந்து பார்த்தான்.

நிலா வெளிச்சத்தில், ஸ்டீபனின் நிழல் தரையில் நீளமாக விழுந்திருந்தது.

பிரகாஷுக்கு மட்டும் நிழலே இல்லை!

*

கதை அவ்வளவுதான்.

இப்போது மேட்டருக்கு வருவோம்.

இக்கதையின் பின்னே இருக்கும் செயின்ட் மார்க்ஸ் ஈவ் என்பது என்ன?

பெட்ச் என்பது என்ன?

அது குறித்த டீட்டெயிலிங்கிற்கு, நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் 33 கேள்விகள்

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் 33 கேள்விகள்

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் 33 கேள்விகளைக் கீழே காண்க. 

*****

Sunday, 19 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.07.2026

1) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

2) ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று புறப்பட்டார்.

3) ஐம்மு காஷ்மீரில் பெய்த கனமழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.

4) ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.

5) பேட்மின்டனில் ஜப்பான் ஓப்பன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார் பி.வி. சிந்து.


Education & GK News

1) The Monsoon Session of Parliament begins today.

2) President Droupadi Murmu left yesterday for a three-day state visit to European countries.

3) Twelve people have lost their lives due to heavy rains in Jammu and Kashmir.

4) The United States is intensifying its attacks on Iran.

5) P.V. Sindhu became the first Indian to win the Japan Open badminton title.

டுபாக்கூர் பேயின் மரண வாக்குமூலம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 26

டுபாக்கூர் பேயின் மரண வாக்குமூலம்!

அந்தக் காக் லேன் தெருவில் பத்தாயிரம் பேர் கூடியிருந்தார்கள். விஞ்ஞானிகள், அறிஞர்கள், ஏன், புகழ்பெற்ற எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் வரை எல்லாரும் அந்த வீட்டு வாசலில் தவம் கிடந்தார்கள்.

லண்டன் நகரமே ஸ்தம்பித்தது.

சீப் இன்ஸ்பெக்டர் தாமஸ், புகழ்பெற்ற புலனாய்வளார் ஜான் எலியட்டின் தற்காலிக அலுவலக அறைக்குள் நுழைந்தார்.

"ஜான், லண்டன் மாநகரமே நடுங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் கணவனைக் கைது செய்யச் சொல்லி மேயர் வரை அழுத்தம் கொடுக்கிறார்கள். என்ன செய்யப் போகிறாய்?"

ஜான் தன் பைப் புகையை மெதுவாக ஊதினார். சிறு புன்னகையை உதிர்த்தார்.

"தாமஸ், ஆவிகள் கிரிமினல் கேஸ் போடுவதை நான் நம்ப மாட்டேன். ஆத்மாவுக்கு ஆர்சனிக் வேதியியல் தெரியாது. இங்கே ஏதோ ஹியூமன் எரர் நடக்கிறது."

"அப்படின்னா?" என்றார் தாமஸ் புரியாமல்.

"இன்று இரவு இறுதி ஆட்டம். வாருங்கள்." என்றார் ஜான்.

அதே அறை.

நள்ளிரவு.

இம்முறை எலிசபெத்தின் கைகள் படுக்கையோடு சேர்த்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தன. வாயில் துணி அடைக்கப்பட்டிருந்தது. அவள் அசையக் கூட முடியாது.

"இப்போது சத்தம் வரட்டும், பார்ப்போம்," என்றார் இன்ஸ்பெக்டர் ஜான்.

நேரம் நகரத் தொடங்கியது.

12:00...

12.05…

12:10...

12.15…

12.20…

12.25…

12:30…

… … …

… … …

அறையில் நிசப்தம்.

எந்தச் சத்தமும் இல்லை.

"பார்த்தீர்களா இன்ஸ்பெக்டர்? எலிசபெத் அசையவில்லை என்றால் பேயும் வராது. பிகாஸ், த கேர்ள் இஸ் எலிசபெத்!" ஜான் புன்னகைத்தார்.

"ஆனால் ஜான், அவள் கைகள் கட்டப்பட்டிருந்த போது கூட கடந்த வாரம் சத்தம் வந்ததே?" எமிலி கேட்டாள்.

"அங்குதான் அந்தத் தவறு நடந்தது எமிலி. தாமஸ், அந்தப் பெண்ணின் படுக்கையைத் தூக்குங்கள்."

தாமஸ் படுக்கையைத் தூக்கினார். மெத்தைக்கு அடியில், எலிசபெத் உடுத்தியிருந்த மேலங்கியின் உள்பகுதியில் ஒரு தடிமனான, ஆறு இன்ச் மரக்கட்டை கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.

ஜான் அதைத் கையில் எடுத்தார். "சிம்பிள் மெக்கானிக்ஸ் எமிலி. கைகள் கட்டப்பட்டிருந்தாலும், அவள் தன் கால்களாலும் இடுப்பாலும் இந்த மரக்கட்டையைக் கட்டிலில் உரசி, தட்டி சத்தம் எழுப்பியிருக்கிறாள். ஒரு தேர்ந்த தட்டச்சு செய்பவள் போல. இதைத் துல்லியமாகச் செய்திருக்கிறாள்."

"எதற்காக?" தாமஸ் கேட்டார்.

இப்போது அறையின் மூலையில் நின்றுகொண்டிருந்த எலிசபெத்தின் தந்தை ரிச்சர்ட் பார்சன்ஸ் நடுங்கத் தொடங்கினான்.

"அவள் அப்பாவுக்காக!" ஜான் பார்சன்ஸை முறைத்தார்.

"பிரான்சிஸ் லின்க்ஸுக்கும் இவனுக்கும் பணத் தகராறு. அவனைப் பழிவாங்க, தன் மகளையே பேயாக மாற்றியிருக்கிறான் இந்த அயோக்கியன்."

பார்சன்ஸ் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு நியூகேட் சிறைக்குக் கூட்டிக்கொண்டு போகப்பட்டான்.

எமிலி ஜானைப் பார்த்துக் கேட்டாள். "ஜான், ஒரு நிமிடம் நான் நிஜமாகவே பேய் என்று பயந்துவிட்டேன். பேய்களுக்குக் கூட எவ்வளவு கிரிமினல் மூளை பார்த்தீர்களா?"

ஜான் லேசாகச் சிரித்தார்.

"பேய்களுக்கு மூளை கிடையாது எமிலி, ஏன்னா அவை இல்லவே இல்லை. ஆனால், பேய்களை உருவாக்கும் மனிதர்களுக்கு இருக்கிறதே. அது அக்மார்க் கிரிமினல் மூளை. விஞ்ஞானம் இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை ஒரு மரக்கட்டையை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த லண்டன் நகரத்தையே மிரட்டும். இனி அது முடியாது. கேஸ் குளோஸ்டு!"

இப்போது அந்தக் காக் லேன் தெருவில் ஈ, காக்கா கூட இல்லை, ஏன்… பேயும் இல்லை.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 18 July 2026

பேயின் பைனரி கோட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 25

பேயின் பைனரி கோட்!

அட்ரஸ் எதுவென்றால், லண்டனின் காக் லேன் பகுதி.

வருடம் 1762.

நேரம் இருள் போர்த்திய நள்ளிரவு.

அப்பகுதியே பனியில் உறைந்திருந்தது.

அந்த வீட்டிற்குள் நுழைந்தால், ஒரு விசித்திரமான சத்தம் கேட்டது. ஏதோ ஒரு பூனை சுவரை நகத்தால் பிறாண்டுவது போன்ற ‘கீச் கீச்’ சத்தம். அப்புறம் ‘டக் டக்’ என்று தட்டும் சத்தம்.

அந்தக் காலத்து லண்டன்வாசிகளுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை. டிவி கிடையாது, நெட்பிளிக்ஸ் கிடையாது. உடனே பேய்... பேய்... என்று கிளம்பி விட்டார்கள்.

அந்தப் பேய் வீட்டின் அறையில் இப்போது மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள். புகழ்பெற்ற புலனாய்வாளர் டாக்டர் ஜான் எலியட் தன் பாக்கெட் கடிகாரத்தைப் பார்த்தார்.

நள்ளிரவு 12:05.

அவருக்குப் பக்கத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கண்கள் சொருகப் படுத்திருந்தாள் பதினொரு வயது சிறுமி எலிசபெத். அவள் முகத்தில் ஒரு விசித்திரமான அமைதி.

"ஜான், எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள் எமிலி. அவள் ஜானின் இளம் உதவியாளர்.

"பயப்படாதே எமிலி. பயம் என்பது ஒரு ரசாயன விபத்து. அட்ரினலின் சுரக்கிறது, அவ்வளவுதான். கவனி." ஜான் தன் ஸ்டெதாஸ்கோப்பைத் தயார் செய்தார்.

திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது.

கீச்... கீச்... ஸ்க்ராட்ச்...

யாரோ சுவரை நகத்தால் பிறாண்டுவது போன்ற சத்தம். மிக அருகில்.

அடுத்த நொடி, டக்... டக்... டக்...

அறையின் வெப்பநிலை சட்டென்று குறைந்தாற் போல் ஒரு பிரமை. எமிலி ஜானின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

"யார் அது?" ஜான் குரலை உயர்த்திக் கேட்டார்.

மறுபடி டக்... டக்...

"இங்க பார், நீ மனிதனாக இருந்தால் ஒருமுறை தட்டு. ஆவியாக இருந்தால் இருமுறை தட்டு." ஜான் ஒரு பைனரி கோடை உருவாக்கினார்.

டக்... டக்....

எமிலிக்கு மூச்சுத் திணறியது. "ஜான்... இது... இது ஏதோ சொல்ல வருது!"

"கேட்போம். உனக்கு என்ன வேண்டும்?"

சுவரில் இருந்து சத்தம் எக்கோ அடித்தது போலக் கேட்டது. ஒரு குறிப்பிட்ட தாள லயத்தில் தட்டல்கள் விழுந்தன. ஜான் தன் டைரியில் அதை டிகோட் செய்யத் தொடங்கினார். ஒரு தட்டல் 'ஏ', இரண்டு தட்டல் 'பி'...

ஐந்து நிமிட மௌனத்திற்குப் பின் ஜான் டைரியைப் பார்த்தார். அவர் நெற்றியில் வேர்வை துளிர்த்தது.

"என்ன எழுதியிருக்கிறது ஜான்?" எமிலி பதற்றமானாள்.

ஜான் டைரியைக் காட்டினார். அதில் இருந்த ஆங்கில வார்த்தைகள்:

'NOT SMALLPOX... ARSENIC... HUSBAND... MURDER'

"மை காட்! இது பிரான்சிஸ் லின்க்ஸ் என்பவரின் மனைவி பானி. சில மாதங்களுக்கு முன்னால் சின்னம்மை வந்து இறந்ததாகச் சொல்லப்பட்டவள். அவளுடைய ஆவிதான் இது!" எமிலி கத்தினாள்.

நான்கு பேரில் ஒருவராக இருந்த இன்ஸ்பெக்டர் தாமஸ் வெலவெலத்துப் போனார்.

"அப்படின்னா, பிரான்சிஸ்ஸின் வொய்ப் சின்னம்மை வந்து சாகல. அவரு கொடுத்த ஆர்சனிக்கலதான் இறந்திருக்கா. ஸோ, மர்டர். இப்போ என்ன பண்றது ஜான்?" என்றார் படபடப்பாக.  

தாமஸின் அதே கேள்விதான் நமக்கும்.

இப்போது என்ன செய்வது?

பேய் கொடுத்திருக்கும் ஸ்டேட்மென்டை வைத்து பிரான்சிஸ்ஸைத் தூக்கி ஜெயிலில் போட்டு, பிறகு தூக்கில் போடுவதா? இதெல்லாம் கப்சா என்று கேஸை மூடுவதா?

தாமஸ் என்ன செய்யப் போகிறார்? ஜான் என்ன சொல்லப் போகிறார்?

நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****