Thursday, 2 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.07.2026

1) மருத்துவம் மற்றும் போறியியல் சேர்க்கையில் நீட், ஜேஇஇ தேர்வு மதிப்பெண்களுடன் பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கும் 50 சதவீதம் முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

2) நீட் மறுதேர்வு முடிவுகள் சூலை 20 இல் வெளியாக உள்ளன.

3) தனியார் பள்ளிகள் உரிமம் பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

4) இந்தியாவில் ஜப்பானின் ஒத்துழைப்புடன் 1000 உயிரி எரிவாயு உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.

5) மேற்காசியப் போரால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு 75,781 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டள்ளது.

Education & GK News

1) The Central Government is considering giving 50% weightage to public examination marks, alongside NEET and JEE scores, for admissions into medical and engineering courses.

2) The results of the NEET re-examination are scheduled to be released on July 20.

3) A new procedure requiring private schools to apply online for their licenses has come into effect.

4) 1,000 biogas production plants are set to be established in India with Japan's collaboration.

5) Indian oil companies have incurred a loss of Rs.75,781 crore due to the conflict in West Asia.

குளியலறைக்குள் ஒரு கொடூர சத்தம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 9

குளியலறைக்குள் ஒரு கொடூர சத்தம்!

பேய்க் கதைகள் நமக்கு புதிதல்ல. ஆனால், இன்றைக்கு நாம் பார்க்கப் போவது உலகப் புகழ்பெற்ற ஒரு கிளாசிக் ஹான்டிங்.

இதைச் சொன்னவர் சாதாரண ஆள் இல்லை. கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் புளூடார்க். அவர் வசித்த கேரோனியா  நகரத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

கதைக்குள் போவோம்.

டேமன்.

அவன்தான் கதையின் நாயகன்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரு கிரேக்கச் சிலை போல அத்தனை அழகு. துரதிர்ஷ்டவசமாக, அதே ஊரில் முகாம் இட்டிருந்த ஒரு ரோமானிய ராணுவ கேப்டனின் கழுகுப் பார்வை இவன் மேல் விழுந்தது.

அந்தக் கேப்டன் டேமனைத் தன் வழிக்குக் கொண்டு வர அநாகரிகமாக வற்புறுத்தினான். மிரட்டினான். அந்த பெடராஸ்டி மேட்டர்தான்.

டேமன் சாதாரண ஆள் இல்லை; அவனுக்குள் கோபக் கனல் கொழுந்துவிட்டு எரிந்தது.

போக்சோ சட்டங்கள் இல்லாத அந்த காலத்தில், தன் வயதொத்த சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டான்.

ஒரு நாள் நள்ளிரவு. ரோமானிய கேப்டன் தனியாக இருக்கும் சமயம் பார்த்து, டேமனும் அவன் நண்பர்களும் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு உள்ளே புகுந்தார்கள்.

கத்தி மின்னியது. ரத்தம் தெறித்தது. கேப்டன் அவுட்!

கொலை நடந்துவிட்டது. நகரம் கொந்தளித்தது.

ரோமானிய ராணுவத்தின் கோபத்திற்குப் பயந்து, கேரோனியா நகர மக்கள் டேமனையும் அவன் நண்பர்களையும் துரத்தினார்கள்.

டேமன் தப்பியோடி மறைந்து வாழ்ந்தான்.

நாட்கள் நகர்ந்தன.

ஊர் மக்கள் ஒரு தந்திரம் செய்தார்கள்.

"டேமன், நடந்தது நடந்துவிட்டது. உன்னை நாங்கள் மன்னித்துவிடுகிறோம். வா, சமாதானமாக ஆகி விடலாம்" என்று தூது அனுப்பினார்கள்.

அப்பாவி டேமன் அதை நம்பி ஊருக்குள் வந்தான்.

அன்று மாலை. அவன் அங்குள்ள ஒரு பொதுக் குளியலறையில் நிம்மதியாகக் குளித்துக் கொண்டிருந்தான்.

நீராவியும், வெந்நீரும் அவனைக் கிறங்கடித்திருக்க வேண்டும். திடீரென்று கதவுகள் உதைத்துத் திறக்கப்பட்டன.

கைகளில் ஆயுதங்களுடன் ஊர் மக்கள்!

நம்பிக்கைத் துரோகம்.

டேமன் தப்பிக்க வழியில்லாமல் அந்த ஈரமான தரையிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான். அவன் ரத்தம் அந்தப் பாதாளக் குளியலறையின் சுவர்களில் தெறித்து உறைந்தது.

அதன்பின்தான் விளையாட்டு ஆரம்பமானது.

டேமன் செத்துவிட்டான்.

ஆனால், அவன் ஆவி அந்த இடத்தை விட்டுப் போகவில்லை.

அவன் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே, அந்தப் பாழடைந்த குளியலறையிலிருந்து விசித்திரமான சத்தங்கள் கேட்கத் தொடங்கின.

ஆரம்பத்தில் அது ஒரு லேசான முனகலாக இருந்தது. போகப் போக, அது ஒரு மரண ஓலமாக, பயங்கரமான ஆக்ரோஷச் சத்தமாக மாறியது. நள்ளிரவில் அந்தப் பக்கமாகப் போனவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

ஊர் மக்கள் பயந்து நடுங்கினார்கள்.

வேறு வழியே இல்லாமல், அந்தப் பேய் குளியலறையின் வாசலை பெரிய கற்களைக் கொண்டு சுவர் எழுப்பி, அத்தோடு சீல் வைத்தார்கள்.

பூமிக்கு அடியில் டேமனின் ஆன்மா பூட்டி வைக்கப்பட்டது.

இதைத்தான், "நான் பிறந்து வளர்ந்த கேரோனியாவில் இன்றும் அந்தச் சத்தம் கேட்கிறது. சுவருக்குப் பின்னாலிருந்து யாரோ ஒருவன் வலியால் முனகும் சத்தத்தை என் காதுகளாலேயே கேட்டிருக்கிறேன்" என்று எழுதினார் புளூடார்க்.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், டேமன் இறந்து கிட்டத்தட்ட 200 வருடங்கள் கழித்து புளூடார்க் வாழ்ந்த காலத்திலும் அந்த முனகல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாம்!

இது நிஜமா? இப்படியும் நடக்குமா?

ஒரு மூடிய அறை அல்லது பாதாளக் குளியலறை என்பது ஒரு சிறந்த ரெசனன்ஸ் சேம்பர் போலச் செயல்படும். அதாவது, வெளியிலிருந்து வரும் மிகச் சிறிய சத்தத்தைக் கூட இந்த மூடிய அறை பல மடங்கு பெருக்கி வெளியேற்றும்.

காதுகளை மூடிக்கொண்டு சங்குக்குள் கேட்கும் சத்தத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அதே அகௌஸ்டிக் விதியின்படி, சுவருக்குள் சிக்கிய காற்று வெளியேறத் தவிக்கும் போது பயங்கரமான முனகல் சத்தம் கேட்டிருக்கலாம்.

என்றாலும், நீங்கள் நள்ளிரவில் அந்தச் சுவருக்குப் பக்கத்தில் தனியாக நிற்கும்போது, "டேமனின் ஆவிதான் அது" என்று மனம் சொல்வதை எந்த விதிகளாலும் தடுக்க முடியாது. அங்கேதான் மனதின் பயம் வேலை செய்கிறது.

சில மரணங்கள் எளிதில் கடந்து போவதில்லை. அவை சத்தமாக மாறுகின்றன!

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

Wednesday, 1 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.07.2026

1) வணிக எரிவாயு சிலிண்டரின் விலை 172 ரூபாய் குறைந்தது.

2) பி.இ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. சூலை 13 முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது.

3) பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

4) டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவை மாற்றி அமைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

5) சூனில் ஜிஎஸ்டி வசூல் 1.95 லட்சம் கோடியகா உள்ளது. கடந்த வருட சூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவீத அதிகரிப்பாகும்.

Education & GK News

1) The price of a commercial gas cylinder has been reduced by Rs.172.

2) The rank list for B.E. admissions has been released; counseling is set to begin on July 13.

3) Hall tickets for the Class 10 supplementary examinations can be downloaded starting today.

4) Prime Minister Narendra Modi has stated that the Digital India initiative has transformed the country.

5) GST collections for June stood at Rs.1.95 lakh crore, marking a 14% increase compared to June of the previous year.

ஆபரேஷன் சுடுகாடு

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 8

ஆபரேஷன் சுடுகாடு

நம்மூரில் நள்ளிரவு 12 மணிக்கு சுடுகாட்டுக்குப் போகச் சொன்னால், பகுத்தறிவு பேசுகிற பப்பரப்பாக்களுக்குக்கூட அடிவயிற்றில் ஜில்லென்று ஐஸ் வைப்பது போல் இருக்கும்.

ஆனால், இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. 2500 வருஷங்களுக்கு முன்பே ஓர் ஆள் இதையெல்லாம் லோக்கலாக டீல் செய்திருக்கிறார். அவர் பெயர் டெமாக்ரிடஸ்.  கிரேக்க நாட்டுத் தத்துவஞானி. நம் அட்ரஸ் தேடும் படலத்தைக் கொஞ்சம் கிரேக்கம் நோக்கித் திருப்புவோம்.

டெமாக்ரிடஸ்க்கு ஒரு சின்ன சந்தேகம். இந்த உலகமே அணுக்களால் ஆனது என்று உலகத்திலேயே முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்ன விஞ்ஞானி அவர். அப்படிப்பட்டவருக்கு இந்த பேய், பிசாசு, சுருளி, மாடன் கதைகள் மேல் பயங்கரக் கடுப்பு.

“பேயாவது, பிசாசாவது. எல்லாம் உங்க மண்டைக்குள் இருக்கும் மேட்டர்!” என்று சவால் விட்டார்.

சொன்னதோடு நிறுத்தவில்லை மனுஷன். ஒரு நாள் நைட்டோடு நைட்டாகத் தன் பாயைச் சுருட்டிக் கொண்டு நேரே சுடுகாட்டுக்கே போய்விட்டார். அங்கிருந்த ஒரு பழைய கல்லறையைத் தேர்ந்தெடுத்து, அதற்குள் படுத்துக் கொண்டார்.

சுற்றிலும் ஒரே இருட்டு. நரிகள் ஊளையிடுகின்றன. எவனோ ஒருத்தன் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறான்.

டெமாக்ரிடஸ் இரவு முழுவதும் படுத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினார்! அப்புறம் பகல் நேரத்தில் அங்கேயே உட்கார்ந்து கொண்டு, அணுக்களைப் பற்றிப் புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டார்.

டெமோக்ரிடஸின் லாஜிக் ரொம்ப சிம்பிள்:

“உலகத்தில் அணுக்களையும், வெற்று இடத்தையும் தவிர வேறு எதுவுமே இல்லை. அப்படியிருக்கும்போது இந்த பேய்கள் எங்கே இருந்து வரும்? அதுகளுக்கு ஏது அணுக்கள்?”

விஷயம் இதோடு முடியவில்லை. சுடுகாட்டைத் தாண்டிப் போகும் ஊர்க்காரர்கள் சிலர் இவரைப் பார்த்துவிட்டு, “அய்யோ... பேய்... அமானுஷ்யம்...” என்று அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்.

உடனே டெமோக்ரிடஸ் கல்லறையிலிருந்து எழுந்து வந்து, ஓடுகிறவனைச் சட்டையைப் பிடித்து நிறுத்தினார்.

“யோவ், நில்லு! இதெல்லாம் வெறும் மனப்பிரமை. உன் கண்ணோட லென்ஸ் வழியா லைட் பாஸ் ஆகும்போது, இருட்டுல மூளை பண்ற கெமிக்கல் லோச்சா இது. உட்காரு, உனக்கு ஆட்டம் தியரி பத்தி கிளாஸ் எடுக்குறேன்” என்று சுடுகாட்டிலேயே டியூஷன் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

பேய்களுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டு, பேயே இல்லை என்று பகுத்தறிவு பேசிய முதல் ஆள் அநேகமாக இவராகத்தான் இருக்கும்!

நம்மூர் சினிமாக்காரர்கள் மட்டும் டெமாக்ரிடஸ் காலத்தில் இருந்திருந்தால், குறிப்பாக சுந்தர்.சி அல்லது ராகவா லாரான்ஸ் அல்லது ராம நாராயணனோ இருந்திருந்தால், அவரையே ஒரு பேய் பட கேரக்டராக மாற்றியிருப்பார்கள். பார்ட் 1, பார்ட் 2 என்று பார்ட்டுகள் பேய்த்தனமாக வெளிவந்திருக்கும். நல்லவேளை, அவர் தப்பித்தார்.

விஞ்ஞானமும் பகுத்தறிவும் ஏதோ நேற்று வந்த ஐடி கம்பெனி மாதிரி நாம் நினைக்கிறோம். ஆனால், அன்றைக்கே ஒரு கிரேக்கக் கிழவன் சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு டார்ச் அடித்து நிரூபித்திருக்கிறார்.

பயம் என்பது வெளியில் இல்லை, நம் மண்டைக்குள் இருக்கிறது!

-          அட்ரஸ்களைத் தேடுவோம்!

*****

Tuesday, 30 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.07.2026

1) புதிய ஊரக வேலைத் திட்டம் இன்று முதல் தமிழகத்தில் அமலாகிறது.

2) இந்திய ராணுவத்தின் 31 ஆவது தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பதவியேற்றுக் கொண்டார்.

3) தென்மேற்குப் பருவமழை தாமதம் ஆவதால் காரிப் விதைப்பு இந்தியாவில் 23 சதவீதம் குறைந்துள்ளது.

4) ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி இன்று இந்தியா வருகிறார்.

5) கவிஞர் புவியரசு நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.

Education & GK News

1) A new rural employment scheme comes into effect in Tamil Nadu today.

2) Dheeraj Seth has assumed office as the 31st Chief of the Indian Army.

3) Kharif sowing in India has declined by 23 percent due to the delay in the Southwest monsoon.

4) Japanese Prime Minister Takachi is visiting India today.

5) Poet Puviyarasu passed away yesterday due to ill health; he was 94 years old.

காது இல்லாத அரசன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 7

காது இல்லாத அரசன்!

ஆவியாக வந்த அரசன், ஆவியைக் கண்டுபிடித்த கதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா?

இதோ அந்த கதை, சாரி வரலாறு.

அப்போது பெர்சியாவை ஆண்டவன் கேம்பிசஸ். இவன் மாவீரன் சைரஸின் மகன். கேம்பிசஸ் எகிப்து நாட்டின் மீது போர் தொடுக்கப் போயிருந்தான்.

அவனுக்கு ஒரு தம்பி இருந்தான், அவன் பெயர் பர்டியா. கேம்பிசஸுக்கு ஒருநாள் ஒரு பயங்கரமான கனவு வந்தது. தன் தம்பி பர்டியா பெர்சிய அரியணையில் அமர்ந்து, அவன் தலை விண்மீன்களைத் தொடுவது போல அந்தக் கனவு இருந்தது.

நம்ம ஊர் ராஜாக்கள் கனவு கண்டால் உடனே ஜோசியரைக் கூப்பிடுவார்கள். ஆனால் கேம்பிசஸ் ஒரு சைக்கோ. உடனே தன் ரகசிய ஏஜென்ட் ஒருவனை அனுப்பி, தம்பியை யாருக்கும் தெரியாமல் அண்டர் கிரவுண்டில் போட்டுத் தள்ளச் சொன்னான். கொலையும் ரகசியமாக நடந்தது.

ஆனால், அங்கேதான் ஒரு ட்விஸ்ட்.

எகிப்தில் இருந்த கேம்பிசஸுக்கு பெர்சியாவில் இருந்து ஒரு பிரேக்கிங் நியூஸ் வந்தது. "உங்கள் தம்பி பர்டியா பெர்சியாவின் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்!"

கேம்பிசஸ் ஷாக் ஆனான். "டேய், நான்தான் அவனைப் புதைக்கச் சொன்னேனே, அவன் எப்படி உயிரோட வந்தான்? பேயா? ஆவியா?" என்று குழம்பி, உடனே பெர்சியாவுக்குக் கிளம்பினான்.

ஆனால், வழியிலேயே அவனது வாள் தவறுதலாக அவன் தொடையைக் கிழிக்க, செப்டிசீமியா ஏற்பட்டு கேம்பிசஸ் இறந்துபோனான். வினை விதைத்தவன் வினை அறுத்தான் கான்செப்ட் வரலாற்றுக்கு ரொம்ப பிடித்தமானது போலும்.

இங்கேதான் என்ட்ரி ஆகிறார் நம்ம கதையின் வில்லன்.

பெர்சியாவில் ஒரு மந்திரவாதிக் கூட்டம் இருந்தது. அவர்கள் ஜோசியம், மாந்த்ரீகம், ரகசிய சடங்குகளில் கில்லாடிகள். அதில் பவ்பதி என்றொரு மந்திரவாதி இருந்தான். விசித்திரம் என்னவென்றால், அவனது முகம் அப்படியே செத்துப்போன இளவரசன் பர்டியா போல அச்சு அசலாக இருந்தது!

இதைத்தான் சயின்ஸ்ல டாப்பில்கேஞ்சர் அதாவது உலகத்துல ஒரே மாதிரி இருக்கின்ற ஏழு பேர் என்கிறது.

ஆனால், இந்த மந்திரவாதிக்கு ஒரு சின்னக் குறை இருந்தது. ஏதோ ஒரு தப்புக்காக முன்னாடியே அவனோட இரண்டு காதுகளையும் வெட்டியிருந்தார்கள்.

இந்தக் காது இல்லாத மந்திரவாதி, இளவரசன் பர்டியா போல வேடமிட்டு, அரண்மனைக்குள்ளேயே அமர்ந்து நாட்டை ஆளத் தொடங்கினான்.

அவன் நிஜமான இளவரசன் இல்லை என்பதால், யாரிடமும் நேரில் பேச மாட்டான். எப்போதும் முகமூடி அல்லது இருட்டில்தான் இருப்பான். ஜனங்கள் அவனை ஒரு அமானுஷ்ய சக்தி கொண்ட அரசனாகவே பார்த்தார்கள்.

காது இல்லாத ஒருத்தன் நாட்டை ஆள்கிறான். யாரும் அவனைக் கண்டுபிடிக்கவில்லையா? பெர்சியன்ஸ் அவ்வளவு டப்பாங்களா? என்றால்,

அங்கேதான் டேரியஸ் உள்ளே வருகிறான்.

அப்போது டேரியஸ் ஒரு சாதாரண ராணுவ அதிகாரி. அவனுக்கு ஏதோ இடிக்கிறதே என்று தோன்றியது. அந்தப் போலி ராஜாவோட அந்தப்புரத்து ராணிகள்ல ஒருத்தி டேரியஸோட ரிலேடிவ். அவகிட்ட ஒரு சீக்ரெட் மிஷன் கொடுத்தான்.

என்ன மிஷன் என்றால், "ராஜா தூங்கும்போது அவனோட தலையில கை வச்சுப் பார். காது இருக்கான்னு செக் பண்ணு!"

ராணியும் அப்படியே செய்ய, அங்கே காதுகள் இல்லை!

மந்திரவாதியின் சதி அம்பலமானது.

டேரியஸும் அவனது நண்பர்கள் ஆறு பேரும் நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்து, அந்த மந்திரவாதியைக் கொன்று, பெர்சியாவைக் காப்பாற்றினார்கள். இதுதான் டேரியஸ் மன்னனாக மாறிய கதை, சாரி வரலாறு!

ஏஸ்கிலஸ் நாடகத்தில் டேரியஸ் ஆவியாக வந்தான், ஆனா நிஜ ஹிஸ்ட்ரியில் டேரியஸ் ஒரு போலியான ஆவியைக் கண்டுபிடித்துக் கொன்று விட்டுதான் மன்னனாகவே ஆனான்!

பயங்கரமான அமானுஷ்ய வரலாறாக இருக்கிறதே என்கிறீர்களா?

இன்னும் அமானுஷ்யங்கள் நிறைய இருக்கிறதே.

- அட்ரஸைத் தேடுவோம்.

*****

Monday, 29 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.06.2026

1) மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டக் குழுவை அமைத்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2) குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

3) தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

4) தவறு செய்வது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

5) யமுனை நதிநீர் பகிர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹரியானா, ராஜாஸ்தான் மாநில அரசுகள் கையெழுத்திட்டன.

Education & GK News

1) The Tamil Nadu government has issued a Government Order (G.O.) constituting a new school curriculum committee headed by Mayilsamy Annadurai.

2) TNPSC has released the results of the Group 2 and 2A Main Examinations.

3) Online application registration for MBBS and BDS courses has commenced in Tamil Nadu.

4) Chief Minister C. Joseph Vijay has ordered government officials to take impartial action against anyone found at fault.

5) The state governments of Haryana and Rajasthan have signed a Memorandum of Understanding (MoU) regarding the sharing of Yamuna river water.