Monday, 7 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.07.2025)

1) தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2) நிகழ் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

3) பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

4) நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

5) தாய்மொழிக் கல்வியே வாழ்வியலை மேம்படுத்தும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

6) திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நேற்று சிறப்புடன் நடைபெற்றது.

7) ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 57000 கன அடியாக அதிகரித்துள்ளது.

8) பயங்கரவாதம் மனித குலத்திற்குப் பெரும் சவாலாக இருப்பதாக பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

Education & GK News

1) Chief Minister M.K. Stalin has announced that hostels operating in schools and colleges in Tamil Nadu will be called Social Justice Hostels.

2) 20 percent more students have been admitted to government arts and science colleges in the current academic year.

3) Counseling for engineering courses began yesterday.

4) 41 lakh students have benefited from the Naan Muthalvan scheme.

5) Supreme Court Chief Justice P.R. Kawai has said that mother tongue education will improve livelihoods.

6) The consecration of the Murugan temple at Tiruchendur was held with great ceremony yesterday.

7) The water flow to Okenakkal has increased to 57000 cubic feet.

8) Prime Minister Narendra Modi has spoken at the BRICS conference that terrorism is a major challenge for humanity.

Sunday, 6 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.07.2025)

1) பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் இடைநின்ற மாணவர்கள் குறித்த களப்பணி கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் தொடங்க உள்ளது.

2) நாட்டின் முதல் கூட்டுறவு பல்கலைக்கழகத்திற்கு குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

3) சர்வதேச விண்வெளி மையத்தில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்சு சுக்லா ஆய்வு செய்து வருகிறார்.

4) இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

5) மீண்டும் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

6) மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

7) இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் 430 ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்த கவாஸ்கரின் 54 வருட சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

8) இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிகெட் போட்டியில் 1014 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 1000 ஓட்டங்கள் குவிப்பது இதுவே முதன் முறையாகும்.

9) அமெரிக்காவில் நடைபெற்ற தடகளப்போட்டியில், கோலூன்றி தாண்டுதல் பிரிவில் சேலம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் தேவராஜ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

10) பெங்களூரு, கன்டீவ்ரா மைதானத்தில் நடந்த சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்ற ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா (86.18 மீ.,) எறிந்து முதலிடம் பிடித்தார்.

11) குரேஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில் 2 ஆவது முறையாக குறுகிய இடைவெளியில் மேக்னஸை கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தார் தமிழகத்தின் சதுரங்க சாதனையாளர் குகேஷ்.

12) அமெரிக்கா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார் எலான் மஸ்க்.

Education & GK News

1) Field survey on out-of-school children and dropouts to begin from August 1.

2) Home Minister Amit Shah laid the foundation stone of the country's first cooperative university in Gujarat's Anand district.

3) Subhanshu Shukla is conducting a study on bone health at the International Space Station.

4) The consecration ceremony of the Tiruchendur Subramania Swamy Temple is being held today.

5) Mettur dam filled for the second time again.

6) Senior Tamil scholar Perunkavikko V.M. Sethuraman passed away due to old age.

7) Indian Test cricket team captain Shubman Gill has created a new record by scoring 430 runs. With this, he has broken Gavaskar's 54-year-old record of highest run scorer in Test cricket.

8) India created a record by scoring 1014 runs in a Test cricket match against England. This is the first time that India has scored 1000 runs in Test cricket.

9) In the athletics competition held in the United States, head constable Devaraj from Muthunayakanpatti, Salem, has won gold in the pole vault category and created a record.

10) In the javelin throwing competition held at the Canteeva Stadium in Bengaluru, where international stars participated, India's Neeraj Chopra won first place with a throw of (86.18 m).

11) In the rapid chess tournament held in Croatia, Tamil Nadu's chess record holder Kukesh created a record by defeating Magnus Carlsen for the second time in a short period.

12) Elon Musk has launched a new party named America Party.

Saturday, 5 July 2025

சில சொல் வேறுபாடுகள்!

சில சொல் வேறுபாடுகள்!

ஈ – தா – கொடு

ஈ – தா – கொடு போன்ற சொற்களுக்குப் பொதுவாக ‘ஒன்றை அளித்தல்’ என்று பொருள் கொண்டாலும், இச்சொற்களிடையே நுட்பமான வேறுபாடுகள் இருப்பதாகத் தமிழறிஞர்கள் குறிப்பிடுவர்.

‘ஈ’ என்பது யாசிப்பவர் யாசித்துத் ‘தாருங்கள்’ என்று கேட்பதைக் குறிக்கும்.

‘தா’ என்பது சமநிலையில் இருப்போர் தமக்கு இப்பொருளைத் தாருங்கள் என்று கேட்பதைக் குறிக்கும்.

‘கொடு’ என்பது உயர்நிலையில் இருப்போர் தாழ்நிலையில் உள்ளோரிடம் இதை எமக்குக் கொடு எனக் கேட்பதைக் குறிக்கும்.

உண்ணல் - தின்னல்

உண்ணல் – தின்னல் எனும் சொற்களின் பொருளும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் இச்சொற்களுக்கு இடையே நுட்பமான வேறுபாடுகள் உண்டு.

‘உண்ணல்’ என்பது பசியடங்க வயிற்றை நிரப்புதலைக் குறிக்கும்.

‘தின்னல்’ என்பது சிறிதளவு உண்ணுதலைக் குறிக்கும். 

*****

Friday, 4 July 2025

பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரத்தில் (ATM) பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்!

பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரத்தில் (ATM)

பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்!

பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிப்பது பலவிதங்களில் நன்மையாக அமையும். அவையாவன,

ஆள்நடமாட்டம் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ள தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரப் பகுதிகளைத் (ATM Located Area) தேர்ந்தெடுங்கள்.

பண அட்டையின் ரகசிய எண்ணைப் பதிவிடும் போது பிறர் பார்க்காத வண்ணம் இயந்திரத்தின் அருகில் நின்று பதிவிடுங்கள். யாராவது அருகில் வந்து நீங்கள் பதிவிடும் எண்ணைப் பார்ப்பதாகத் தெரிந்தால் கூச்சப்படாமல் அவரைத் தள்ளி நிற்குமாறு சொல்லுங்கள்.

பண அட்டையின் ரகசிய எண்ணை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் மாற்றம் செய்யுங்கள்.

பண அட்டையின் ரகசிய எண்ணை அட்டையிலேயே எழுதி வைக்காதீர்கள்.

இயந்திரத்தில் பரிவர்த்தனை முழுவதுமாக முடிந்து வங்கியின் முகப்புத் திரை தோன்றும் வரை இயந்திரத்தை விட்டு அகலாதீர்கள்.

பணம் எடுத்த பின்பு ஏதோ அவசரத்தில் அல்லது வேறு ஏதோ நினைப்பில் பண அட்டையை இயந்திரத்திலிருந்து எடுக்க மறக்காதீர்கள்.

உங்களது பண அட்டையானது காணாமல் போனாலோ அல்லது தொலைந்து போனாலோ உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவித்து அந்த அட்டையை முடக்குங்கள்.

பண அட்டை மூலமாக நீங்கள் எந்தப் பரிவர்த்தனை செய்தாலும் உடடினயாக உங்கள் அலைபேசி எண்ணுக்குச் செய்தி வரும் வகையில் வங்கிக்குச் சென்று உங்கள் அலைபேசி எண்ணைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

யாரிடமும் பண அட்டையைக் கொடுத்துப் பணம் எடுத்து வரச் சொல்லாதீர்கள்.

பண அட்டையைக் கொடுத்து யாரையும் பணம் எடுத்துக் கொடுக்கச் சொல்லி உதவி கேட்காதீர்கள். நீங்களே பணம் எடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.

கூட்டமாக இருக்கிறது என்பதற்காகப் பணம் எடுக்கும் போது அவசரம் காட்டாதீர்கள் மற்றும் பதற்றம் அடையாதீர்கள்.

பொதுவாக மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரப் பகுதிகள் கூட்டமாக இருக்கும். இயன்றவரை மாதத்தின் முதல் ஐந்து நாட்ககளில் பணம் எடுப்பதை மாற்றிக் கொண்டு, அதன் பிறகு பணம் எடுப்பதற்கேற்ப உங்கள் பண நிர்வாகத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். கூட்டத்தைத் தவிர்க்க இத்திட்டமிடல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*****

Thursday, 3 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.07.2025)

1) சூலை 6 அன்று சிறந்த 100 அரசுப் பள்ளிகளுக்கான 10 லட்ச ரூபாய் விருதையும், 76 பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழன் விருதையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்குகிறார்.

2) தமிழகத்தில் மின் வாகனங்களுக்கான மின்னேற்றும் மையங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை 89258 72398 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை இந்த எண்ணை அழைக்கலாம். ev.charging@tnebnet.org என்ற மின்னஞ்சல் மூலமும் தகவல்களை பெறலாம்.

3) அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது.

4) பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

5) பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

6) 9000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய மைக்ரோ சாப்ட் முடிவு செய்துள்ளது.

7) காஸா போர் நிறுத்த நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

8) ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயப் போட்டியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு வீரர்கள் பலியாகினர்.

Education & GK News

1) On July 6, School Education Minister Anbil Mahesh Poyyamozhi will present a prize of Rs. 10 lakh for the top 100 government schools and the Professor Anbazhlan Award for 76 schools.

2) You can find out where the charging stations for electric vehicles are in Tamil Nadu by calling 89258 72398. You can call this number from 8 am to 8 pm. You can also get information by emailing ev.charging@tnebnet.org.

3) The Amarnath Yatra began yesterday.

4) Prime Minister Narendra Modi was given a grand welcome in Ghana.

5) Prime Minister Narendra Modi was honored with Ghana's highest award.

6) Microsoft has decided to lay off 9,000 employees.

7) US President Trump has announced that Israel has accepted the Gaza ceasefire conditions.

8) Two players died in a car racing accident in Spain.

Wednesday, 2 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.07.2025)

1) மாணவர்களை வளர்த்தெடுக்கவே புதுப்புது திட்டங்கள் தீட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2) சிவகங்கை மாவட்டம், திருபுவனம் கோயில் காவலாளி கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) மாற்றி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

3) தமிழகக் காவல் துறையில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

4) புதிய தலைமை மருத்துவமனைகளுக்கு விரைவில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5) தக்காளி விலை திடீரென உயர்ந்து கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

6) 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு ஒரு லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது.

7) இந்திய கப்பற்படையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தமால்  போர்க்கப்பல் சேர்க்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

8) ‘எண்ம இந்தியா’ (டிஜிட்டல் இந்தியா) திட்டம் நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

9) பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கு எட்டு நாள் பயணமாக இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டார்.

10) அதிகப் பயன்பாட்டு நேரங்களில் இரு மடங்கு கட்டணம் வசூலித்துக் கொள்ள ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Education & GK News

1) Chief Minister M.K. Stalin has said that new schemes are being planned to develop students.

2) The Chief Minister has ordered the transfer of the murder case of the Thiruvuvanam temple guard in Sivaganga district to the Central Bureau of Investigation (CBI).

3) DGP Shankar Jiwal has said that all unauthorized special forces in the Tamil Nadu Police Department are being disbanded.

4) Health Minister M. Subramanian has said that doctors will soon be appointed to new head hospitals.

5) Tomato prices have suddenly increased and are being sold at Rs 50 per kg.

6) The central government has allocated one lakh crore rupees to create 3.5 crore jobs.

7) The Russian-made INS Thamal warship was inducted into the Indian Navy and dedicated to the nation.

8) Prime Minister Narendra Modi has said that the ‘Digital India’ project will eliminate inequalities in the country.

9) Prime Minister Narendra Modi left Delhi today for an eight-day visit to five countries.

10) The central government has allowed Ola and Uber to charge double the fare during peak hours.

Tuesday, 1 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.07.2025)

1) நீர்ச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் வகையில் மணி அடித்தால் தண்ணீர் அருந்தும் திட்டம் அரசுப் பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ளது.

2) நாட்டுக்கான சேவையே மருத்துவத் தொழில் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

3) காவல் நிலைய மரணங்களுக்குக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4) காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5) ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து 65000 கன அடியாக அதிகரித்துள்ளது.

6) சூலை 7 இல் நடைபெறும் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குச் சிறப்புத் தொடர்வண்டியை நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே தென்னகத் தொடர்வண்டி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

7) சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உடல் சிதறி பலியாகினர்.

8) ஐதாராபாத் ரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 41 பேர் பலியாகியுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

9) ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

10) கடந்த நிதியாண்டில் 22.08 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூலாகியுள்ளது. ஐந்தாண்டுகளில் வரி வசூல் மூலம் கிடைக்கும் தொகையானது இரட்டிப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Education & GK News

1) A scheme to drink water by ringing a bell has been implemented in government schools to address water scarcity.

2) President Draupadi Murmu has said that the medical profession is a service to the country.

3) Chief Minister M.K. Stalin has said that strict action will be taken against police station deaths.

4) A flood warning has been issued for people living along the banks of the Cauvery and Kollidam rivers.

5) The water inflow to Okenakkal has increased to 65,000 cubic feet.

6) The Southern Railway has arranged a special train for the Tiruchendur temple festival to be held on July 7 between Nellai and Tiruchendur.

7) Seven people were killed in a firecracker factory explosion near Sattur.

8) 41 people have died in a boiler explosion at a Hyderabad chemical plant. The condition of many is critical.

9) Normal life has been affected due to floods in Jharkhand and Odisha.

10) In the last financial year, the Goods and Services Tax (GST) collection was Rs 22.08 lakh crore. It is noteworthy that the amount collected through tax collection has doubled in five years.