நன்றியுணர்வு – ஒரு மிஸ்ஸிங் அல்காரிதம்!
இன்று
எத்தனை முறை எரிச்சல் பட்டீர்கள்? எத்தனை முறை நெகட்டிவ் விஷயங்களை அசைபோட்டீர்கள்?
இப்போது
யோசித்துப் பாருங்கள். எத்தனை முறை நல்லவேளை, இது நல்லபடியா நடந்தது என்று நினைத்தீர்கள்?
நம்மூர்
மூளைகளுக்கு ஒரு விசித்திரமான குணம் உண்டு. ஆயிரம் ஆசீர்வாதங்கள் இருந்தாலும், காலில்
தைத்த ஒரு சின்ன முள்ளையே நினைத்து அழுவோம்.
பொதுவாக,
நம் மனது எப்போதும் பற்றாக்குறை மோடிலேயே இருக்கிறது.
புது
கார், புது ஷூ, லேட்டஸ்ட் ஐபோன் என ஓடிக்கொண்டே இருப்பதால், கையில் இருப்பதை ரசிக்க
மறந்துவிடுகிறோம். இதற்குப் பெயர்தான் கன்ஸ்யூமரிசம். ஓர் உடனடி சந்தோஷத்திற்காக எதையாவது
வாங்குகிறோம், ஆனால் அது நிரந்தர தீர்வைத் தருவதில்லை.
கடந்த
இருபது ஆண்டுகளில் நாம் ஒன்றை மறந்துவிட்டோம். அதுதான் சாதாரண விஷயங்களில் சந்தோஷப்படுவது.
வாழ்க்கை இப்போது ஒரு பாஸ்ட் பார்வர்டு சினிமா போல ஓடுகிறது.
இதைப்
புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு கேள்வி.
ஒரு
நாளின் இறுதியில் இன்னைக்கு பொழுது எப்படிப் போச்சுன்னே தெரியலையே? என்று புலம்புகிறீர்களா?
அப்படியானால் நீங்கள் வாழ்வதை விட ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதற்கு
என்னதான் தீர்வு என்கிறீர்களா?
எல்லாவற்றையும்
கொஞ்சம் பின்னோக்கி இழுங்கள். சிம்பிளான விஷயங்கள்தான் நமக்கு அதிக சந்தோஷத்தைத் தருகின்றன.
பெரிய
வெற்றிகள் வரும்போதுதான் நன்றி சொல்ல வேண்டும் என்பதில்லை. இரவு சாப்பிடும் உணவின்
ருசி, அன்புக்குரியவரின் ஒரு சின்ன விசாரிப்பு, ஜன்னல் வழியே வரும் அந்த மெல்லிய பூங்கா
காற்று, வசந்த காலத்தின் முதல் பூ என இதையெல்லாம் கவனிக்க ஆரம்பியுங்கள். ரசியுங்கள்.
எல்லாவற்றுக்கும் ஒரு சின்ன தேங்க்ஸ் சொல்லுங்கள். இதன் சின்ன செய்தி என்னவென்றால்,
அந்தந்த நொடியை ரசியுங்கள் என்பதுதான். அந்த சின்ன விசயம் உங்கள் மனதில் பெரிய மாற்றத்தை
உண்டு பண்ணும்.
வாழ்க்கையில்
மேடு பள்ளம் சகஜம். ஒரு டெஸ்டில் பெயில் ஆவது அல்லது ஒரு பிரிவைச் சந்திப்பது என இவையெல்லாம்
பேட் டேஸ் கிடையாது.
இருட்டு
இருந்தால்தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். கஷ்டங்கள்தான் நமக்கு ரெஸிலியன்ஸ் எனப்படும்
மன உறுதியைக் கொடுக்கின்றன.
கஷ்ட
காலத்திலும் ஒரு பாசிட்டிவ் விஷயத்தைத் தேடிப் பிடிக்கும்போதுதான் உங்கள் மென்டல் ஹெல்த்
அப்கிரேட் ஆகிறது.
இன்று
சூரியன் மறைந்தாலும், நாளை மீண்டும் ஒரு புதிய வாய்ப்போடு அது உதிக்கும் என்கிற நம்பிக்கைதான்
வாழ்க்கைச் சுவாரசியத்தின் ரகசிய அடிப்படை.
ஆராய்ச்சிகள்
என்ன சொல்கின்றன தெரியுமா?
நன்றியுணர்வு
உங்கள் இதயத் துடிப்பைச் சீராக்கும், ஆழ்ந்த தூக்கத்தைத் தரும், முக்கியமாக உங்களை
மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
எனவே,
ஒரு பேனா எடுங்கள். இன்று உங்கள் வாழ்க்கையில் நடந்த மூன்று நல்ல விஷயங்களை எழுதுங்கள்.
அது பஸ் கரெக்டா வந்தது என்பதாகக் கூட இருக்கலாம்.
உங்கள்
மூளைக்கு ஒரு புது டிரெயினிங் கொடுங்கள். நெகட்டிவ் விஷயங்களைத் தள்ளிவிட்டு, பாசிட்டிவ்
பொக்கிஷங்களைத் தேட ஆரம்பியுங்கள்.
வாழ்க்கை
என்பது ஒரு முடிவில்லாத வொர்க் டன் லிஸ்ட் கிடையாது. அது ஒரு மேஜிக். அந்த மேஜிக்கைக்
கவனிக்க நமக்குத் தேவைப்படுவது கொஞ்சம் நேரம், அப்புறம் ஒரு சின்ன நன்றியுணர்வு.
ஏன்
சார், இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா? என்று கேட்காதீர்கள். ஒரு வாரம் ட்ரை பண்ணிப் பாருங்கள்.
உங்கள் உலகமே கொஞ்சம் பிரகாசமாகத் தெரியும்.
இன்று
இரவு படுக்கும் முன், இன்னைக்கு நடந்த ஒரு நல்ல விஷயம் இதுதான் என்று உங்கள் பார்ட்னரிடமோ
அல்லது உங்களிடமோ சொல்லிக் கொள்ளுங்கள். அந்த ஒரு நிமிடம் உங்கள் மனதின் பாரத்தைக்
குறைக்கும். உங்கள் ஹேப்பி ஜர்னி அங்கிருந்து தொடங்கட்டும்!
அப்புறம்
இந்த ஸ்லோ லிவ்விங் கட்டுரைகளின் நிறைவு பகுதிக்கு வந்து விட்டோம். உங்களுக்கு இது
நிறைவாகவே இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
வேகமான
வாழ்க்கையைக் கொஞ்சம் மெதுவாக்கிக் கொள்வது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக, ரசிக்கத்தக்கதாக
மாற்றுகிறது என்பதுதான் இதன் தர்க்கம்.
இந்தத்
தர்க்கம் ஒர்க் அவுட் ஆகிறதா என்று பாருங்கள். ஒர்க் அவுட்டானால் சந்தோசம். மற்றவர்களையும்
கொஞ்சம் இந்தக் கட்டுரைகளைப் படிக்கக் கூறுங்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இந்தக்
கட்டுரைகளால் மாறினால் அது ஒரு சந்தோசம்தானே!
*****







