Thursday, 10 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.09.2026

இன்று மகாகவி பாரதியாரின் 105 ஆவது பிறந்த நாள்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893 இல் உலகப் புகழ்பெற்ற உரையைச் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய தினம் இன்று.

1) டில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது.

2) பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

3) நிகழாண்டில் சென்னையில் சைபர் மோசடிகளில் 370 கோடி ரூபாய் பணத்தை மக்கள் பிறகொடுத்துள்ளனர்.

4) 2040க்குள் விண்வெளிக்கு இந்தியரை வெற்றிகரமாக அனுப்புவோம் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

5) இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருக்கலாம் என அமெரிக்க நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.


Education & GK News

Today marks the 105th birth anniversary of the great poet Bharathiyar.

Today also marks the anniversary of the day in 1893 when Swami Vivekananda delivered his world-renowned speech in Chicago, USA.

1) The BRICS summit begins in Delhi tomorrow.

2) Chinese President Xi Jinping is set to visit India for the BRICS summit after a gap of seven years.

3) People in Chennai have lost Rs. 370 crore to cyber fraud this year.

4) The Prime Minister has stated that an Indian will be successfully sent into space by 2040.

5) A US organization has reported that India may possess 190 nuclear bombs.

ஹலோ நான் ஆவி பேசுகிறேன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 80

ஹலோ நான் ஆவி பேசுகிறேன்!

மருதவனம் பங்களாவில் இருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடிய கோவிந்தும் தமிழரசனும், இரு சக்கர வாகனத்தில் விரைந்து, மன்னார்குடி, அய்யனார் கோயில் சந்தில் இருந்த தமிழரசன் வீட்டில் உட்கார்ந்திருந்தார்கள். கோவிந்தின் கைகள் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தன.

"தமிழரசன்! அது நிஜமான பேய்! விரல் நுனியில நெருப்பு வந்துச்சு! என் ஆன்ட்ராய்டு போனை வேற அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்," கோவிந்த் புலம்பினான்.

"நான் அப்பவே சொன்னேன்ல? தமிழ்நாட்டுல பேயைக் கூப்பிட்டா அது காராமணி சுண்டலுக்கு வராது, ஆனா குவாட்டருக்கு கண்டிப்பா வரும்னு!" தமிழரசனின் படபடப்பு இன்னும் மாறவில்லை.

திடீரென்று கோவிந்தின் ஸ்மார்ட் வாட்ச் அதிர்ந்தது. ‘இன்கம்மிங் கால் ப்ரம் கேலக்ஸி எஸ்26+’.

கோவிந்த் பயத்துடன் வாட்சைப் பார்த்தான். கால் அட்டெண்ட் ஆனது. ஸ்பீக்கரில் அதே மொக்கச்சாமி ஆவியின் குரல், "தம்பி கோவிந்த்! உன் ஆன்ட்ராய்டு போன் பேஸ் ஐடி செம ஸ்பீடுப்பா! என் மூஞ்சியைக் காட்டுன உடனே அன்லாக் ஆயிடுச்சு. ஆனா அது என்ன லைவ் போய்ட்டு இருக்கு? மூணு லட்சம் பேர் பார்த்துட்டு இருக்காங்க!"

"டேய்... டேய் மொக்கச்சாமி... என்னடா நடக்குது அங்க?" கோவிந்த் கத்தினான்.

அப்போது அவர்களுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டது. "எந்தக் காலத்துல இருக்கீங்க மிஸ்டர் தமிழரசன் அன்ட் கோவிந்த்? பேய், பிசாசுன்னு இன்னும் நம்பிட்டு?"

திரும்பிப் பார்த்தால், ஜீன்ஸ், டீசர்ட்டுடன் கணேஷ்.

கணேஷ் தன் லேப்டாப்பை மேஜை மீது வைத்துத் திறந்தான். "உங்க மருதவனம் பங்களால நேத்து ராத்திரி நடந்த லைவ் ஸ்ட்ரீமிங்கை நானும் பார்த்தேன். இப்போ கொஞ்சம் இங்க பாருங்க கண்ணா!"

லேப்டாப் திரையில், நேற்றைய வீடியோ ஓடியது.

"நல்லா கவனியுங்க. அந்த மொக்கச்சாமிங்கிற உருவம் நிழலா தெரியும்போது, சுத்தி இருந்த காற்றுல ஓர் ஒளிவிலகல் நடக்குது. அது ஆவி இல்ல. தொட்டு உணரக்கூடிய முப்பரிமாண ஒளி பிம்பம்!" கணேஷ் சுட்டிக் காட்டினான்.

கோவிந்தும் தமிழரசனும் முழித்தார்கள். "முப்பரிமாண ஒளி பிம்பமா?"

"ஆமாம்டா வெண்ணெய்களா!" கணேஷ் சிரித்தான்.  " அங்க இருந்த அல்ட்ராசோனிக் சவுண்ட் வேவ்ஸ் காற்றுல இருந்த ஈரப்பதத்தை ஒரே இடத்துல அடர்த்தி ஆக்கியிருக்கு. அந்த அடர்த்தியான பனிப்படலத்துல, யாரோ தூரத்துல இருந்து லேசர் புரோஜெக்டர் மூலமா அந்த உருவத்தை காட்டியிருக்காங்க."

"அப்போ, அந்த விரல் நுனி நெருப்பு? குவாட்டர் குடிச்சது?" தமிழரசன் கேட்டான்.

"வெரி சிம்பிள்! விரல் நுனியில இருந்தது 'படைசோ எலெக்ட்ரிக் பிளாஸ்மா'  சிகரெட் லைட்டர்ல இருக்கும்ல, அதுதான். அந்த குவாட்டர் பாட்டில் அடியில ஒரு வேக்கம் பம்ப் இருந்திருக்கு. பாட்டிலைத் தொட்ட உடனே திரவம் உறிஞ்சப்பட்டிருக்கு. இட்ஸ் ஆல் பியூர் பிசிக்ஸ் அண்ட் கெமிஸ்ட்ரி!"

தமிழரசனுக்கு மெல்ல அறிவு ஒளி வீசியது. "அப்போ அந்த மொக்கச்சாமி ஆவி?"

"மொக்கச்சாமிங்றவரு நிஜமாவே 1980ல செத்துப் போனவர்தான். ஆனா நேத்து பேசினது அவரோட ஆவி இல்ல. அவர் பழைய வாய்ஸ் ரெக்கார்டிங்கை வச்சு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் உருவாக்கின வாய்ஸ்!"

"யார்டா கணேஷ் இதை பண்ணியிருப்பா?" கோவிந்தின் நரம்புகள் துடித்தன.

கணேஷ் சிரித்தான். "உங்க பங்களாவுக்கு பக்கத்து வீட்டுக்காரன் சுந்தர்தான். விஜயராமன் பேச்சைக் கேட்டுக்கிட்டு, நீங்க தினமும் ராத்திரி 12 மணிக்கு ஆவி ஆராய்ச்சின்னு பண்ணுற அலப்பறைங்க அவனுக்குப் பிடிக்கல. அதனாலத்தான் அமானுஷ்யம்ங்கிற பேர்ல அறிவியலை வச்சு உங்களைப் பங்களாவை விட்டு விரட்டியிருக்கான். இந்தா அவனோட புளூடூத் சிக்னல் ஐடி!"

கணேஷ் லேப்டாப்பில் காட்ட, கோவிந்திற்கும் தமிழரசனுக்கும் ஒரே நேரத்தில் பல்பு எரிந்தது.

"அடப்பாவி சுந்தர்! நம்மள பயமுறுத்த டெக்னாலஜியையா யூஸ் பண்ணுவான்?" கோவிந்த் தலையில் அடித்துக்கொண்டான்.

"மனிதன் பயப்படுற முக்கால்வாசி அமானுஷ்யத்துக்குப் பின்னாடி, ஏதோ ஒரு அறிவியல் விதியும், ஒரு மனிதனின் சூழ்ச்சியும்தான் இருக்கும்!" கணேஷ் லேப்டாப்பை மூடி, கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்தான்.

"சரி கணேஷ்! என்னோட ஆன்ட்ராய்டு போன்?" கோவிந்த் கேட்டான்.

"அதுவா? சுந்தர் போனை கைல எடுத்த உடனே, பேஸ் ஐடி உடனடியா வேலை செய்யல. ஆளு மாட்டிட்டான்! தமிழரசனோட அண்ணன் அன்பரசன் அந்தப் போனோட இப்போ சுந்தர் வீட்லதான் இருக்காப்ல. விஷயம் தெரிஞ்சு அவரும் சேர்ந்து உங்களோட கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம்ன்னுதான் மொக்கச்சாமி குரல்ல உங்களுக்குப் போன் போட்டிருக்காப்புல!" என்று சொல்லிவிட்டு கணேஷ் சிரித்தான்.

கோவிந்தும் தமிழரசனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"டேய் தமிழரசா! பேய் இல்லைன்னு சந்தோஷப்படுறதா, இல்ல நம்ம பிரெண்ட் சுந்தரே நம்மள இப்படி வெச்சு சம்பவம் பண்ணிட்டானேன்னு அசிங்கப்படுறதா?" கோவிந்த் பொங்கினான்.

"நல்ல நேரத்துல வந்தீங்க கணேஷ் அண்ணா! விஜயராமன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இவுங்ப பண்ற ஆவி ஆராய்ச்சிகள நிறுத்தச் சொல்லுங்க. ரெண்டு பேரும் போட்டு படுத்துறாங்க. இங்க வீட்டுல இருக்குறவங்களால தாங்க முடியல!" என்றபடி ஜெயந்தி கணேஷ்க்கு டீ கோப்பையோடு வர, "இவனுங்கள திருத்த முடியாது. பேசாம அந்த ஆவிங்ககிட்டே இவனுங்க பக்கம் வராதீங்கன்னு சொல்லி, அதுகளத்தான் திருத்த முடியும்!" என்றுசொன்னபடி கணேஷ் டீ கப்பை வாங்கினான்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

நீட் மாதிரி வினா விடை – வேதியியல் 1

நீட் மாதிரி வினா விடை – வேதியியல் 1

மருத்துவக் கனவோடு நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 11

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 11

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

Wednesday, 9 September 2026

பேய்களுக்கு டால்டா ஊற்றக் கூடாது!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 79

பேய்களுக்கு டால்டா ஊற்றக் கூடாது!

இரவு பதினொரு மணி.

மருதவனத்தில் இருந்த அந்தப் பேய் பங்களாவில் வழக்கத்திற்கு மாறாக ஒரே வெளிச்சம்.

கோவிந்த், தற்போது ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் மாதம் மூன்று லட்சம் சம்பாதிக்கும் பிசினஸ் மேக்னெட்டாக ஆகியிருந்தான்.

கூகுளில் ஹங்கிரி கோஸ்ட் பெஸ்டிவல் பற்றிப் படித்துவிட்டு, அவனுக்குள் இருந்த கிரியேட்டிவ் மூலையில் தீப்பற்றிக்கொண்டது.

"தமிழரசன்! சீனக்காரன், மெக்சிகோகாரன்லாம் பேய்க்குத் திருவிழா எடுக்கும்போது, நாம ஏண்டா எடுக்கக் கூடாது? தமிழ்நாட்டு ஸ்டைல்ல ஓர் ஆவி திருவிழா. செம கான்செப்ட்ல?"

"டேய், எவனாவது நான்தான் பேய் மாமன், பிசாசு மச்சான்னு வந்து நிப்பான், வேணாம்டா!" என்று பயந்தான் தமிழரசன்.

ஆனால் கோவிந்த் கேட்கவில்லை. வீட்டின் பின் தோட்டத்தில் பந்தல் போட்டான். வாழையிலை விரித்தான். ஆவிகளுக்குப் பிடித்த உணவுகள் என்று மெனு ரெடியானது. காரசார மசாலா தூக்கலாகக் காரசாரமான நாட்டுக்கோழி வறுவல், நல்லெண்ணெய் ஊற்றிய பொடி தோசை, ஒரு குவாட்டர் கட்டிங், இரண்டு பாக்கெட் சிகரெட், நான்கு கலயம் நிறைய கள், பீடி மற்றும் சுருட்டு தலா ஒரு பாக்கெட் என எல்லாம் தயாரானது.

"பேய்களுக்கு வழிகாட்ட சீனாவுல ஆத்துல விளக்கு மிதக்க விடுவாங்க. நாம நம்ம பங்களா குளத்துல காகிதக் கப்பல்ல மெழுகுவர்த்தி ஏத்தி மிதக்க விடுவோம்."  கோவிந்த் ரூல்ஸ் போட்டான்.

நள்ளிரவு 12:00 மணி.

"வாருங்கள் ஆவிகளே! வந்து அருந்துங்கள்!" என்று கோவிந்த் ஆவிகளின் ஸ்டைலில் குரல் கொடுத்துவிட்டு, லைட்டை அணைத்தான்.

பூசணிக்காயைக் குடைந்து லைட் போட்டு வைத்திருந்தார்கள்.

வளிமண்டலத்தில் ஒருவித சலசலப்பு.

திடீரென்று, அந்த இடத்தின் வெப்பநிலை பாதியாகக் குறைந்தது. ஏசி 16 இல் இருந்தால் கூட அவ்வளவு குளிராது.

குளத்தில் மிதந்த காகிதக் கப்பல்கள் திடீரென சுழன்று ஒரே இடத்தில் நின்றன.

இலை முன்னால் ஒரு நிழல் உருவம் தென்பட்டது. தமிழரசனுக்கு வியர்த்துக் கொட்டியது. கோவிந்த் தன் ஆன்ட்ராய்டு போனை எடுத்து லைவ் போட ரெடியானான்.

நிழல் உருவம் வாழையிலையின் முன்னால் உட்கார்ந்தது. சிகரெட் பாக்கெட்டை எடுத்தது. ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தது. தீப்பெட்டி இல்லாமல், அதனுடைய விரல் நுனியிலேயே நெருப்பு பற்றி சிகரெட் புகையத் தொடங்கியது!

"கோவிந்த்! அது நிஜ பேய்டா!" தமிழரசனின் குரல் நடுங்கியது.

அந்த உருவம் குவாட்டர் பாட்டிலைத் திறந்து, சோடா கூட ஊற்றாமல் ஒரே மூச்சில் அடியோடு குடித்தது. பிறகு நாட்டுக்கோழி வறுவலை எடுத்து மொறுமொறுவென்று மென்றது.

சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவாமலே தமிழரசனின் தோளைத் தொட்டது. பனிக்கட்டியை எடுத்து முதுகில் வைத்தது போல தமிழரசனுக்கு உடல் நடுங்கியது.

அந்த ஆவி, பேசத் தொடங்கியது. "தம்பிகளா! கான்செப்ட் நல்லாத்தான் இருக்கு. ஆனா, இந்த பொடி தோசையில நல்லெண்ணெய்க்கு பதிலா டால்டா ஊத்திருக்கீங்க. செத்த பிறகும் எனக்கு கொலஸ்ட்ரால் ஏத்தப் போறீங்களா?"

கோவிந்திற்குத் தொண்டை அடைத்தது. "நீங்க யாரு?"

"நான் 1980ல களப்பால் ரோட்டுடுல பைக் ஆக்சிடென்ட்ல மண்டையை உடைச்சுக்கிட்டு மண்டையைப் போட்ட மொக்கச்சாமி. வருஷ வருஷம் எங்க வீட்ல காராமணி சுண்டலும், பச்சைத் தண்ணியும்தான் வைப்பானுங்க. நீங்க கோழி வறுவலும் குவாட்டரும் வச்சிருக்கீங்கன்னு கூகுள் மேப் காட்டவே ஓடி வந்தேன்."

சொல்லிவிட்டு அந்த ஆவி நக்கலாகச் சிரித்தது. அந்தச் சிரிப்பு நாலா பக்கமும் எதிரொலித்தது.

"சரி, திருவிழான்னா படையல் மட்டும் போதாதே. ஆவி உங்க கூடவே கொஞ்ச நாள் இருக்கணும்ல? அதுதானே தமிழன் விருந்தோம்பல்!"

ஆவி மெல்ல கோவிந்தை நோக்கி நகரத் தொடங்கியது. அதன் கண்கள் ரத்தச் சிவப்பாக மாறியிருந்தன. பூசணிக்காயில் இருந்த மெழுகுவர்த்தி வெளிச்சம் திடீரென நீல நிறமாக மாறியது.

வெளியே பயங்கரமான காற்று வீச, பங்களாவின் கதவுகள் டப் டப் என அடித்துக் கொண்டன.

"டேய் கோவிந்த்! ஹாலோவீன், பூசணிக்காய்னு வெஸ்டர்ன் கல்ச்சர் பண்ணது போதும்டா. ஆவி வீட்டுக்குள்ளேயே செட்டில் ஆகப் போகுது, ஓடுடா!" என்று கத்தியபடி தமிழரசன் கேட்டை நோக்கி ஓடினான்.

கோவிந்த் தன் ஆன்ட்ராய்டு போனைக் கீழே போட்டுவிட்டு, வாழ்க்கையிலேயே அவ்வளவு வேகமாக ஓடியதே இல்லை எனும் அளவிற்கு வீட்டை விட்டு வெளியே ஓடினான்.

பின்னாலிருந்து மொக்கச்சாமி ஆவியின் உரத்த சிரிப்பு ஒலித்துக்கொண்டே இருந்தது: "அட இருங்கப்பா! ஸ்வீட் சாப்பிடாமலே போறீங்களே!"

அடுத்த நாள் காலை.

மருதவனம் பங்களா காலியாகக் கிடந்தது. வாசலில் ஒரு போர்டு தொங்கியது. ‘To Let  பேய்களுக்கு மட்டும் அனுமதி இல்லை!’

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.09.2026

1) தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அரசு முறை பயணமாக இன்று லண்டன் புறப்படுகிறார்.

2) சென்னை, பட்டினப்பாக்கத்தில் 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

3) பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு டில்லியில் நாளை மறுநாள் துவங்க உள்ளது.

4) தமிழகத்தில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்தது.

Education & GK News

1) Tamil Nadu Chief Minister S. Joseph Vijay is leaving for London today on an official visit.

2) A government order has been issued to construct a new Secretariat in Pattinapakkam, Chennai, at a cost of Rs. 1,200 crore.

3) The BRICS summit is set to begin in Delhi the day after tomorrow.

4) The Meteorological Department has stated that temperatures in Tamil Nadu will rise over the next four days.

5) The United States sank five Iranian oil tankers.

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 10

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 10

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****