நோ சொல்லுங்கள், பிழைத்துக் கொள்ளுங்கள்!
குழந்தை முதலில் கற்கிற வார்த்தை
அம்மா அல்ல, இல்லை என்பதுதான். ஆனால் வளர வளர, அந்த இரண்டு எழுத்து வார்த்தையைச் சொல்ல
நமக்கு நாக்கு குழறுகிறது. அலுவலகத்தில் கூடுதல் வேலை, பிடிக்காத பார்ட்டி அழைப்பு,
கடன் கேட்கும் நண்பன் என எல்லாவற்றிற்கும் யெஸ் சொல்லிவிட்டு, பிறகு தனியாக அமர்ந்து
ரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொள்கிறோம்.
எல்லாவற்றுக்கும் யெஸ் என்பவர்கள்
பாஸ்ட் லிவ்வர்களாகத்தான் இருப்பார்கள். எதற்கெல்லாம் நோ சொல்ல வேண்டும் என்று அறிந்தவர்கள்தான்
ஸ்லோ லிவ்வர்களாக மாற முடியும்.
யெஸ், நோ என்ற இந்த இரண்டு வார்த்தைகளும்
பயன்படுத்ததானே. நோ என்பது பயன்படுத்தக் கூடாத வார்த்தையில்லை. தேவையான போதும் அவசியமான
போதும் பயன்படுத்த வேண்டிய அத்திவாசியமான வார்த்தை அது.
உளவியல் ஆய்வுகள் என்ன சொல்கிறது
என்றால், யாருக்கெல்லாம் நோ சொல்லத் தெரியவில்லையோ, அவர்களுக்கு ஸ்ட்ரெஸ், பர்ன் அவுட்
மற்றும் டிப்ரஷன் வர வாய்ப்பு அதிகம் என்கிறது.
நோ என்பது ஒரு நெகட்டிவ் வார்த்தை
அல்ல; அது உங்கள் செல்ப் கேர்க்கான ஒரு பாசிட்டிவ் ஸ்டேட்மென்ட். நானும் ஒரு மனுஷன்,
எனக்கும் எல்லைகள் உண்டு என்கிற பிரகடனம் அது!
பழங்காலத்தில் மனிதன் கூட்டமாக
வாழ்ந்தான். கூட்டத்தை விட்டு ஒதுக்கப்பட்டால் சாவு நிச்சயம். அந்த சர்வைவல் புத்திதான்
இப்போதும் நம்மைப் படுத்தி எடுக்கிறது. மறுத்தால் நம்மை ஒதுக்கிவிடுவார்களோ? என்கிற
பயம். ஆனால் இப்போது இது வாழ்வா சாவா போராட்டமல்ல; உங்கள் சாய்ஸ். மற்றவர்களுக்கு ஆக்சிஜன்
மாஸ்க் மாட்டும் முன், உங்களுக்கு மாட்டிக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் உயிருடன்
இருந்து மற்றவர்களுக்கு உதவ முடியும்.
நோ சொல்வது முரட்டுத்தனமானது
அல்ல. அதை இடத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றினால் அது பொருத்தமாக ஆகி விடும். உதாரணத்துக்குச்
சில பார்ப்போம்.
வியாழக்கிழமை பிஸி, வெள்ளிக்கிழமை
வேணுமானால் வந்து உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா? இது ஒரு மென்மையான மறுப்பு. இது ஒரு ஜென்டில்
நோ.
எங்கிட்டே தனிப்பட்ட முறையில்
கேட்டதுக்கு தேங்க்ஸ், ஆனால் இந்த புராஜெக்ட்டைச் சிவாததான் பார்த்துக்கிறார். ஸோ அவர்தான்
இதுல முடிவு செய்யணும். இது தெளிவாக, நேராக நின்று சொல்வது. இது ஒரு அஸர்டிவ் நோ.
சாரி, எனக்கு இதில் விருப்பமில்லை.
இப்படிச் சொல்லி விட்டால் மேட்டர் முடிந்தது. நீங்கள் எல்லோருக்கும் நண்பராக இருக்க
வேண்டிய அவசியமில்லை. இது ஒரு ஸ்ட்ராங்கான நோ.
போதுவாக நோ சொல்லும் போது, ஏன்
வர முடியாது என்பதற்குப் பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்காதீர்கள். அது உங்களை பலவீனமாகக்
காட்டும். இல்லை, என்னால் முடியாது, என்று சொல்லிவிட்டு ஒரு சின்ன மௌனத்தை விடுங்கள்.
அந்த மௌனத்தை அவர்களே நிரப்பிக்கொள்வார்கள்.
பயிற்சியே சிறந்த பயிற்சியாளர்
என்பது போல இதற்கும் பயிற்சி தேவை. கண்ணாடி முன்னால் நின்று பேசிப் பாருங்கள். டெலிமார்க்கெட்டிங்
கால்கள் வரும்போது நோ சொல்லிப் பழக ஆரம்பியுங்கள்.
நீங்கள் மறுத்த பிறகும் அவர்கள்
வற்புறுத்தினால், அதே பதிலைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். புரிஞ்சுக்கோங்க, என்னால்
வர முடியாது. ஐ அம் சாரி என்று சொல்லுங்கள். இதில் அதற்கு மேல் ஜஸ்டிபிகேஷன் தேவையில்லை.
மிகவும் வெற்றிகரமான மனிதர்கள்
தங்களுக்கு ஒத்துவராத கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் நோதான் சொல்வார்கள் என்கிறார்கள்.
உறவுகளிலும் சரி, வேலையிலும்
சரி, நீங்கள் எல்லா இடத்திலும் யெஸ் மனிதனாக இருந்தால், கடைசியில் உங்களுக்கென்று ஒரு
தனித்துவம் இல்லாமல் போய்விடும்.
இன்று பிடிக்காத ஒரு விஷயத்திற்கு
தைரியமாக நோ சொல்லிப் பாருங்களேன். அந்தச் சமயத்தில் உங்கள் மனதிற்குள் பிறக்கும் ஒரு
சுதந்திர உணர்வு இருக்கிறதே. அதுதான் நீங்கள் உங்களுக்குக் கொடுத்துக்கொள்ளும் ஆகச்சிறந்த
பரிசு!
*****









