Thursday, 18 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.06.2026

1) 17 ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.

2) தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என ஆளுநர் உரையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3) தமிழக அரசு சார்பில் 'சமூக நீதி கணக்கெடுப்பு' நடத்தப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) தமிழகத்தை 2036க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட உள்ளது.

5) போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட உள்ளது.

6) அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்தது.

Education & GK News

1) The first session of the 17th Legislative Assembly commenced yesterday with an address by Governor Rajendra Vishwanath Arlekar.

2) The Tamil Nadu government stated in the Governor's address that the two-language policy will continue to be in effect in the state.

3) The Governor's address announced that a 'Social Justice Survey' would be conducted by the Tamil Nadu government.

4) An 'Investors' Promotion Commission' is set to be established to transform Tamil Nadu into a $1.5 trillion economy by 2036.

5) Special teams will be formed in every district to curb the movement of narcotics.

6) The US-Iran peace agreement came into effect yesterday.

நீலப் பிசாசும் நிம்மதி விரதமும்!

நீலப் பிசாசும் நிம்மதி விரதமும்!

எல்லாருடைய வரவேற்பறையும் இப்போது ஒரு விசித்திரமான நீல நிற ஒளியில் மூழ்கியிருக்கிறது. இது ஏதோ ஆர்டிஸ்டிக் லைட்டிங் என்று நினைக்காதீர்கள். கணவர் போனில் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கிறார், மனைவி யூடியூப்பில் புதுப்புது ரெசிப்பிகள் பார்க்கிறார், மகள் ஐபேடில் இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கிறாள், மகன் லேப்டாப்பில் ஹோம்வொர்க் செய்துகொண்டே பார்ட்டிக்கு மெசேஜ் அனுப்புகிறான்.  இன்னும் வீட்டில் யாரும் இருந்தால், முகமே தெரியாத பேஸ்புக் நண்பர்களின் போஸ்ட்களைப் பார்த்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், நமக்கு உதவ வேண்டிய தொழில்நுட்பம், இப்போது நம்மை அடிமையாக்கத் தொடங்கிவிட்டது.

நாம் செல்போனுக்கு மட்டும் அடிமையாகவில்லை, அதைச் சுற்றி மிக மோசமான பழக்கங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 33 முறை போனைச் செக் செய்தால், வருடத்தில் 30 நாட்கள் போன் திரையிலேயே முடியும். இதற்குப் பின்னால் ஒரு சைக்காலஜி இருக்கிறது. ஒரு நோட்டிபிகேஷன் வரும்போது மூளையில் டோபமைன் சுரக்கிறது. யாராவது லைக் போட்டிருப்பார்களோ? என்கிற அந்த எதிர்பார்ப்பு ஒரு போதை.

விளைவு?

குழந்தைக்குக் கதை சொல்லும்போது கூட வாட்ஸ்அப் பிங் சத்தத்தைத் தவிர்க்க முடிவதில்லை. இதற்குப் பெயர்தான் டிஸ்பங்க்சனல் ரிலேஷன்ஷிப்.

இதிலிருந்து தப்பிக்க பல வழிகள் இருக்கின்றன. சில வழிகள் இதோ,

முதல் வழி வெளியே கிளம்புங்கள். ஜிம்முக்குத்தான் போக வேண்டும் என்பதில்லை. ஒரு சாதாரண நடைப்பயிற்சி உங்கள் மனதைச் சாந்தப்படுத்தும்.

இரண்டாவது வழி சமையல் செய்யுங்கள். இன்ஸ்டன்ட் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, மெனக்கெட்டு ஒரு உணவைச் சமைத்துப் பாருங்கள். அந்தப் போகஸ் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸைக் காலி செய்யும்.

மூன்றாவது வழி மியூசியம் அல்லது கேலரிக்குச் செல்லுங்கள். அமைதியான சூழலில் கலைப் பொருட்களைப் பார்ப்பது ஆன்மாவுக்கு ஒரு டானிக்.

நான்காவது வழி புத்தகங்களின் வாசனையை அனுபவியுங்கள். குழந்தைகளுக்குப் புது உலகத்தைக் காட்ட இதுவே சிறந்த இடம்.

ஐந்தாவது வழி பல்லாங்குழியோ அல்லது தாயம் போன்ற போர்டு கேம்ஸ்களோ விளையாடுங்கள். அந்த விளையாட்டுகள் உறவுகளை பலப்படுத்தும்.

ஆறாவது வழி ஒரு லாங் டிரைவ். மேப் பார்க்காமல், இலக்கு இல்லாமல் செல்லுங்கள். பிடித்த பாடல்களை அலற விடுங்கள்.

ஏழாவது வழி பழைய அலமாரியைச் சுத்தம் செய்வது ஒரு சிறந்த தெரபி. தேவையற்றதை அப்புறப்படுத்தும் போது மனசும் லேசாகும்.

எட்டாவது வழி எதையுமே செய்யாமல் ஓர் இடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது இப்போது இது ஒரு மிக அரிதான கலை. அதைமுயற்சித்துப் பாருங்கள்.

ஒன்பதாவது வழி ஒரு மொழி அல்லது ஒரு கைவினைப் பொருளைச் செய்வது பற்றிக் கற்க ஆரம்பியுங்கள். மூளைக்குத் தரும் ஒரு சவாலாக இது இருக்கட்டும்.

பத்தாவது வழி குழந்தைகளுடன் சேர்ந்து படம் வரையுங்கள், வண்ணம் தீட்டுங்கள். இது ஒரு சிறந்த மைண்ட்புல் ஆக்டிவிட்டி.

இதற்கு மேலும் வழிகள், நீங்கள் யோசிக்க யோசிக்க கிடைக்கும்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத ஸ்க்ரோலிங் கிடையாது. நோட்டிபிகேஷன்களை ஆப் செய்யுங்கள். நீங்கள் மெசேஜுக்குப் பதில் சொல்லாவிட்டால் உலகம் ஒன்றும் அழிந்துவிடாது.

தொழில்நுட்பம் ஒரு கருவி மட்டுமே; அது எஜமானன் ஆகிவிடக் கூடாது.

இன்று இரவு படுக்கும்போது போனை உங்கள் படுக்கையறைக்கு வெளியே வைத்துவிட்டுத் தூங்குங்கள். காலை எழுந்ததும் முதல் ஐந்து நிமிடம் ஜன்னல் வழியே வானத்தைப் பாருங்கள், போன் திரையை அல்ல. உங்கள் டிஜிட்டல் விடுதலை அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

Wednesday, 17 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.06.2026

1) இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

2) இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு 863 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

3) நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% ஆக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

4) ஜி7 உச்சிநாட்டில் பங்கேற்ற பிரதமர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

5) ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார்.

Education & GK News

1) The Tamil Nadu Legislative Assembly session begins today with the Governor's address.

2) India's total exports have risen to an all-time high of $863 billion.

3) The World Bank has projected India's economic growth rate to be 6.6% for the current fiscal year.

4) While participating in the G7 summit, the Prime Minister held discussions with US President Donald Trump and British Prime Minister Keir Starmer.

5) After concluding the G7 summit, Prime Minister Narendra Modi arrived in Paris, the capital of France.

ப்ரீத்திங் டாட் காம் – மூச்சோடு ஒரு நேர்காணல்!

ப்ரீத்திங் டாட் காம் – மூச்சோடு ஒரு நேர்காணல்!

நாம் ஒரு நாளைக்குச் சராசரியாக 17,000 தடவை மூச்சு விடுகிறோம். ஆனால், அதில் எத்தனை மூச்சு ஒழுங்கான மூச்சு?

சிறுவயதிலிருந்தே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகி, நம் தசைகளை இறுக்கி வைத்துக்கொண்டதால், இயற்கையாக மூச்சு விடும் திறனை நாம் தொலைத்துவிட்டோம்.

மூச்சு விடும் முறையை மாற்றினால், உங்கள் உடல் நலம் மட்டுமல்ல, மனநலமும் வெர்ஷன் 2.0 ஆக மாறும்.

நம்மில் பலர் நெஞ்சுக்கூடு வழியாக மட்டுமே மூச்சு விடுகிறோம். உண்மையில் உதரவிதானம் எனப்படும் அந்தத் தசைதான் வேலையைச் செய்ய வேண்டும்.

பதற்றமாக இருக்கும்போது மூச்சு ஆழமில்லாமல் வேகமாக இருக்கும். இது உங்கள் எனர்ஜியை உறிஞ்சும் ஒரு மால்வேர்.

நீங்கள் தப்பாக மூச்சு விடுகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் சில இருக்கின்றன.

அடிக்கடி பெருமூச்சு விடுதல் முதல் அறிகுறி. உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும்போது மூளை தரும் வார்னிங் இது.

அடிக்கடி கொட்டாவி விடுவது இரண்டாவது அறிகுறி. இன்னும் ஆக்சிஜன் வேண்டும் என உடல் கேட்கிறது.

இரவில் பற்களைக் கடிக்கும் பழக்கம் மூன்றாவது அறிகுறி. இது தீவிரமான ஸ்ட்ரெஸ்ஸைக் குறிக்கிறது. இதனால் மூச்சில் கவனம் மிஸ்ஸாகி ஏதோ அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி நான்காவது அறிகுறி. நெஞ்சால் மட்டுமே மூச்சு விடுபவர்களுக்கு, கூடுதல் காற்றுக்காகக் கழுத்துத் தசைகள் கஷ்டப்பட்டு வேலை செய்ய ஆரம்பிக்கும். அதன் விளைவுதான் இந்த வலி.

இதை எப்படிச் சரி செய்வது என்கிறீர்களா?

தூக்கத்திற்கு முன் செல்போனை நோண்டுவதற்குப் பதில், மூச்சையும் மனதையும் இப்படிச் சீராக்கலாம்.

உங்களுக்குப் பிடித்தமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சிறிது நேரம் செலவிடுவது மனதை லேசாக்கும். அதுவே மனதை நேராக்கி உங்கள் மூச்சைச் சீராக்கும்.

கிண்டில் போன்ற டிஜிட்டல் திரைகள் வேண்டாம். காகிதப் புத்தகங்கள் உங்கள் ஸ்ட்ரெஸ் லெவலைக் குறைத்து, அல்சைமர் வராமல் தடுக்கும் ஒரு கேடயம். உங்கள் ஸ்ட்ரெஸ் குறையும் போது உங்கள் மூச்சும் முறையாகும்.

மெல்லிசைப் பாடல்கள் இதயத் துடிப்பைச் சீராக்கும். இதயத்துடிப்பு சீரானால் மூச்சும் சீராகும்.

இன்று நடந்ததை விட, நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் குறித்து வையுங்கள். அப்போதுதான் மூளை கவலையை டவுன்லோட் செய்துவிட்டு நிம்மதியாகத் தூங்கும். மனக்கவலையோ, மனஇறுக்கமோ இல்லையென்றால் மூச்சு ரிலாக்ஸாக இயங்கும்.

மூச்சு என்பது வெறும் காற்று உள்ளே போய் வருவது மட்டுமல்ல, அது உங்கள் உடலின் ரிதம்.

மூச்சு விடக்கூட நேரமில்லை சார் என்று சொல்லாதீர்கள். ஐந்து நிமிடம் அமைதியாகப் படுத்துக்கொண்டு உங்கள் வயிற்றின் அசைவைக் கவனிப்பதன் மூலம் நீங்கள் ஒரு புது மனிதராகலாம்.

அப்புறம், பிராணாயமம். ஒரு மாஸ்டரைப் பிடித்துக் கற்றுக் கொண்டு தினம் ஐந்து நிமிடம் செய்தால் கூட போதும். மூச்சு சீராவதற்கு அது ஒரு நல்ல முறை. 

நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு இவையெல்லாம் உங்கள் மூச்சைச் சீராக்க பெரிதும் உதவும். இவற்றில் உங்களுக்குப் பிடித்த ஒன்றை தினமும் இருபது நிமிடமாவது செய்யுங்கள்.

இன்று இரவு படுக்கும்போது, ஒரு ஐந்து நிமிடம் உங்கள் கையை வயிற்றின் மேல் வைத்து ஆழமாக மூச்சு விடுங்கள். வயிறு பலூன் போல உப்பி இறங்கட்டும். அந்த ஓர் அமைதி. அதுதான் நீங்கள் தேடும் ஆரோக்கியம். நாளை காலை நீங்கள் ஒரு புது மனிதராக எழுவீர்கள். ஆல் தி பெஸ்ட்!

*****

Tuesday, 16 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.06.2026

1) தமிழக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

2) தமிழகத்தின் உண்மையான மொத்தக் கடன் சுமை 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3) 17 ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (ஜூன் 18) ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

4) நீட் தேர்வு முடியும் வரை இந்தியாவில் பிரபல தகவல் தொடர்பு செயலியான டெலிகிராம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

5) தமிழகத்தில் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 15,032 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Education & GK News

1) Tamil Nadu Finance Minister Mariya Wilson released a white paper yesterday.

2) It has been reported that Tamil Nadu's actual total debt burden has risen to Rs. 13.18 lakh crore.

3) The first session of the 17th Tamil Nadu Legislative Assembly begins tomorrow (June 18) with the Governor's address.

4) Telegram, a popular messaging app in India, has been temporarily blocked until the NEET examination concludes.

5) An allocation of Rs. 15,032 crore has been made to further strengthen the power infrastructure in Tamil Nadu.

பல கோடி நியூரான்களும் ஒரு கப் தியானமும்!

பல கோடி நியூரான்களும் ஒரு கப் தியானமும்!

தியானம் – ஒரு மென்டல் ஓவர்ஹால்!

தியானம் என்றவுடன் ஏதோ இமயமலைக்குச் சென்று தாடி வளர்த்துக்கொண்டு அமர்வது என்று நினைக்க வேண்டாம் என்பதை நாம் முன்பே சொல்லி விட்டோம். தியானம் என்பது ஒரு ஸ்பிரிச்சுவல் தெரபி. இன்னும் புரியும்படிச் சொன்னால், உங்கள் மூளை என்கிற சூப்பர் கம்ப்யூட்டருக்குத் தரும் ஒரு குயிக் ரீபூட்.

தியானத்தை விளக்குவது கஷ்டம், ஆனால் அனுபவிப்பது சுலபம். ஒரே நேரத்தில் ஆழமான அமைதியையும், கூர்மையான விழிப்புணர்வையும் அடைவதுதான் இதன் சோர்ஸ் கோட்.

தியானம் செய்யச் சரியான வழி, தவறான வழி என்று எதுவுமே கிடையாது. உங்களுக்குப் பிடித்த ஒரு பிம்பம், ஒரு சத்தம் அல்லது உங்கள் மூச்சு என இதில் எதாவது ஒன்றில் கவனத்தைக் குவியுங்கள்.

இடையில் உங்கள் கவனம் சிதறி வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருக்குமோ? என்று மூளை தாவினால், பரவாயில்லை. மெல்ல அதைக் காதைப் பிடித்து மீண்டும் நீங்கள் செலுத்தும் கவனத்தின் மீது உட்கார வையுங்கள். அவ்வளவுதான் விசயம்!

தியானம் செய்தால் ஞானம் கிடைக்கும், மன அமைதி வரும் என்று நினைத்து உட்காராதீர்கள். அப்படி நினைத்தால், அமைதி வந்து விட்டதா? இன்னும் வரவில்லையா? ஞானம் கிடைத்து விட்டதா? எப்போது கிடைக்கும்? என்று மனம் ஓடிக் கொண்டிருக்கும். தியானம் பண்ணும்போது நீங்கள் உலகத்துக்கே உருப்படாத ஓர் ஆளாக, சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள் என்ற உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

மூச்சைக் கவனிக்கும் போது, அடடா நான் மூச்சு விடுகிற லட்சணமே சரியில்லையோ, இடது மூக்கில் காற்று கம்மியாக வருகிறதோ, வலது மூக்கில் எல்லாம் அவுட்டோ என்று பிஹெச்டி அளவுக்குப் போய் விடக் கூடாது. உடல் எதையும் ஒழுங்காகத்தான் செய்யும் என்று நம்பிக்கை வையுங்கள். நீங்கள் வெறுமனே மூச்சைக் கவனியுங்கள். அது அப்படி இப்படி என எப்படி இருந்தாலும் நோ ப்ராப்ளம்.

தியானத்தில் உட்கார்ந்த உடனே, நாளைக்கு காலையில் என்ன குழம்பு வைக்கலாம்? அவன் அன்றைக்கு ஏன் அப்படி சொன்னான்? என்பன போன்ற உலகமகா சிந்தனைகள் எல்லாம் வரும். எண்ணங்களை அடக்க நினைப்பது ஓடுகின்ற ரயிலை கையை நீட்டி நிறுத்துவது போன்றது.

வருகின்ற எண்ணங்களை அப்படியே வேடிக்கை பாருங்கள். ஓஹோ. இப்போது நமக்கு இந்த மொக்கையான எண்ணம் வருகிறதா? என்று மனதை ஒரு மூன்றாவது மனிதர் போல வேடிக்கை பாருங்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள்.

நாம் ஏற்கனவே சொன்னபடி தியானம் செய்வதற்கு இமயமலைக்கு போக வேண்டாம், அமேசானில் ஸ்பெஷலாகப் பாயும் வாங்க வேண்டாம். உங்கள் வீட்டு சோபா, இல்லையென்றால் கட்டில் ஏன், கம்ப்யூட்டர் சேர் கூட அல்லது தரை கூட ஓகேதான். ஆனால், உட்கார்ந்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கி விழுந்து, அப்புறம் அது நித்ரா தியானம் ஆகி விடாமல் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தியானம் செய்ய உட்காரும் போது மொபைலைச் சைலண்ட்டில் போடுவது போதாது. அதை அடுத்த அறையில் வைத்து விடுவது நலம். இல்லையென்றால், எந்தக் குரூப்பில் யார் மெசேஜ் போட்டிருப்பார்கள் என்பதற்கான இதயத் துடிப்பு உங்கள் ஆன்மாவை விட வேகமாகத் துடிக்கும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தியானம் என்பது மூளையை ஆப் செய்வது இல்லை. மூளை பண்ணுகின்றற அலப்பறைகளை எல்லாம் பார்த்தபடி நீ நடத்து ராஜா என்று சும்மா உட்கார்ந்து பார்க்கிறதுதான். தினமும் ஒரு 10 நிமிஷம் இப்படி சும்மா இருக்கப் பழகுங்கள். அதுவே பெரிய தியானம்தான்!

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத லூப் கிடையாது என்பதை நாம் எத்தனையோ முறை சொல்லி விட்டோம். மூளை என்பது ஒரு ஸ்டோரேஜ் டிவைஸ் மட்டுமல்ல, அது ஒரு பிராசஸர். அதற்குத் தேவைப்படும் போதெல்லாம் இப்படி ஒரு ரீபூட் கொடுப்பது ஆரோக்கியம். அதை தியானம் அழகாகச் செய்து கொடுக்கும்.

எனக்குத் தியானம் வராது சார், என்று சொல்லாதீர்கள். உங்கள் மூச்சை நீங்கள் கவனிக்க ஆரம்பிக்கும் அந்த நொடியே நீங்கள் தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இன்று இரவு படுக்கும்போது, ஓர் ஐந்து நிமிடம் எதையும் யோசிக்காமல் உங்கள் மூச்சை மட்டும் கவனித்துப் பாருங்களேன். அந்த ஓர் அமைதி வரும் பாருங்கள். அதுதான் நீங்கள் தேடும் நிம்மதி அல்லது அமைதி. அப்புறம், நாளை காலை நீங்கள் ஒரு புது மனிதராக எழுவீர்கள். ஆல் தி பெஸ்ட்!

*****

Monday, 15 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.06.2026

1) தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

2) ஈரான் அமெரிக்க அமைதி ஒப்பந்தம் சூன் 19 இல் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

3) அரசு முறை பயணமாக ஸ்லோவாக்கிய சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

4) ஹோர்முஸ் நீர்ச்சந்தியை இந்திய சரக்குக் கப்பல் திஷா பாதுகாப்பாகக் கடந்தது.

5) கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை 4500 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

Education & General Knowledge News – 16.06.2026

1) Tamil Nadu Chief Minister Vijay has announced that the breakfast scheme currently implemented in Tamil Nadu government schools will be extended up to the eighth standard.

2) US President Donald Trump has announced that the Iran-US peace agreement is set to be signed on June 19.

3) Indian Prime Minister Narendra Modi received an enthusiastic welcome upon his arrival in Slovakia for an official visit.

4) The Indian cargo ship 'Disha' safely navigated through the Strait of Hormuz.

5) The price of gold has risen by more than Rs. 4,500 over the past four days.

******