டூர் அன்ட் டிராவல் – டிக்கெட் டூ பீஸ்!
உலகம்
இப்போது ஒரு இரைச்சல் பெட்டி. டெக்னாலஜி டார்ச்சர், டைம் பிரஷர் என இதிலிருந்து தப்பிக்கத்தான்
நாம் லீவு போட்டுவிட்டு ஊர் சுற்றக் கிளம்புகிறோம். ஆனால், அங்கே ஒரு வேடிக்கை நடக்கும்.
நம்முடைய டைட் ஷெட்யூல் வொர்க் லிஸ்ட்டையும்,
கவலையையும் பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டு வந்தாலும், அவை ஏதோ ஒரு ரகசிய பாஸ்போர்ட்
வைத்துக்கொண்டு நம்முடனேயே வந்துவிடும்.
ஹோட்டல்
ரூமில் உட்கார்ந்து ஆபீஸ் மெயில் பார்ப்பது சுற்றுலா அல்ல. அந்தந்த ஊரின் காற்றை, மணத்தை,
சுவையை அந்தந்த நொடியில் அனுபவிப்பதுதான் மைண்ட்புல் டிராவல்.
நம்மவர்கள்
ஊருக்குக் கிளம்பும்போதே ஒரு பெர்பெக்ட் பிளான் வைத்திருப்பார்கள். மேகமில்லாத வானம்,
டிராபிக் இல்லாத ரோடு, சமர்த்தான குழந்தைகள் என இப்படி ஒரு கற்பனை.
உண்மை
அப்படி இருக்காது. திடீரென்று மழை பெய்யும். பார்க்க வேண்டும் என்று பிளான் செய்து
வைத்திருந்த மியூசியம் மூடியிருக்கும்.
ஐயோ,
பிளான் சொதப்பிடுச்சே, என்று கவலைப்படாமல், ஒரு குடையை எடுத்துக் கொண்டு மழையை ரசியுங்கள்.
டிராவல் பிளானில் இல்லாத ஒரு சந்தைக் கடையைப் பார்த்தால் உள்ளே நுழைந்து வேடிக்கை பாருங்கள்.
எதிர்பார்ப்பைக் குறைத்தால் ஏமாற்றம் இருக்காது.
கிடைத்த
மூன்று நாட்களில் அந்த ஊரின் எல்லா இடத்தையும் பார்த்தே தீரவேண்டும் என்று ஒரு வெறியோடு
அலையக் கூடாது. காலையில் 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை ஓட்டம் என்றால் அது
சுற்றுலா அல்ல, ஒரு மராத்தான் ஓட்டம்.
உங்கள்
டிராவல் பிளான் லிஸ்ட்டை இரண்டாகப் பிரியுங்கள். அதாவது, கட்டாயம் பார்க்க வேண்டியவை
மற்றும் நேரம் இருந்தால் பார்க்கலாம் என இரண்டாக.
கட்டாயம்
பார்க்க வேண்டியதை மட்டும் பிளான் செய்யுங்கள். மற்றதை உங்கள் அன்றைய எனர்ஜி லெவலுக்கு
விட்டுவிடுங்கள். சும்மா ஓரிடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும் ஓர் அலாதி இன்பம்தான்.
சுற்றுலா
போவது என்பது போனில் ரீல்ஸ் போடுவதற்காக அல்ல. அவுட் ஆப் ஆபீஸ் மெசேஜைப் போட்டுவிட்டு,
நோட்டிபிகேஷனை ஆப் செய்யுங்கள்.
போட்டோ
எடுங்கள், தப்பில்லை. ஆனால் அது உங்கள் நினைவுகளுக்காக இருக்கட்டும், சோஷியல் மீடியா
கன்டென்ட்டுக்கானதாக இருக்கக் கூடாது. அந்த லேண்ட்ஸ்கேப்பை உங்கள் கண்கள் முதலில் கேமரா
இல்லாமல் பார்க்கட்டும்.
குரூப்பாகப்
போகும்போது எல்லாரும் பார்க்கிற இடத்தைப் பார்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை. எல்லாரும்
பாருக்குப் போகிறார்கள், உங்களுக்குப் பிடிக்கவில்லையா? போகாதீர்கள். ரூமில் உட்கார்ந்து
ஒரு நாவல் படிக்கப் பிடிக்குமா? அதையே செய்யுங்கள்.
நீங்கள்
வந்தது ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க, கூட்டத்தில் ஒருவராகக் கஷ்டப்பட அல்ல. உங்கள் நேரத்தை
உங்களுக்காகச் செலவழியுங்கள்.
போனை
சைலன்ட்டில் போட்டுவிட்டு, அந்த ஊரின் சத்தங்களைக் கேளுங்கள். புது உணவின் சுவையை நிதானமாக
அனுபவியுங்கள்.
லோக்கல்
ஆட்கள் பேசினால் காது கொடுத்துக் கேளுங்கள். கேள்விகள் கேளுங்கள். வியூ பாயிண்டில்
இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் எக்ஸ்ட்ராவாக நில்லுங்கள். இரவு தூங்கும் முன் அன்றைய தினத்தின்
பிடித்தமான ஒரு விஷயத்தை டைரியில் குறியுங்கள். இது உங்கள் பயணத்தை இன்னும் ரிச் ஆக்கும்.
வாழ்க்கை
என்பது ஒரு முடிவில்லாத சர்டிபிகேட் தேடல் கிடையாது. பயணம் என்பது புதிய இடங்களைப்
பார்ப்பது மட்டுமல்ல, நம்மை நாமே புதிய கோணத்தில் பார்ப்பது.
எங்க
போயிட்டு வந்தீங்க? என்று கேட்டால், எல்லா இடத்தையும் கவர் பண்ணிட்டோம், என்று சொல்லாதீர்கள்.
அந்த ஊர் மழை வாசனை இன்னும் என் மூக்கிலேயே இருக்கு, என்று சொல்லுங்கள். அதுதான் சக்சஸ்புல்
பயணம்!
அடுத்த
முறை டூர் போகும்போது, ஓர் அரை மணி நேரம் எதையுமே பார்க்காமல், எதையும் படம் பிடிக்காமல்,
அந்த ஊரின் ஒரு பெஞ்ச்சில் சும்மா உட்கார்ந்து பாருங்களேன். அந்த ஊரின் ஆன்மா உங்களோடு
பேசும். உங்கள் மைண்ட்புல் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!
*****