Monday, 7 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 08.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 08.09.2026

1) மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2) கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

3) சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முன்பதிவு இடைவெளி கிராமப்புறங்களுக்கும் 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

4) தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1356 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நேபாளத்தில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.

6) ரஷ்யா உக்ரைன் இடையே புதிய அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது.


Education & GK News

1) By-elections have been announced for the Maduranthakam and Dharapuram assembly constituencies on October 6.

2) The High Court has ordered that a circular be sent to all police stations regarding the procedures to be followed during arrests.

3) The booking interval for cooking gas cylinders has been reduced to 25 days for rural areas as well.

4) The Meteorological Department has stated that there is a possibility of rain in Tamil Nadu over the next two days.

5) The death toll from the floods in Nepal has risen to 1,356; a national day of mourning was observed in Nepal yesterday.

6) New peace talks between Russia and Ukraine are set to begin.

பேயைக் கண்டால் லைவ் ஸ்ட்ரீம் செய்யவும்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 77

பேயைக் கண்டால் லைவ் ஸ்ட்ரீம் செய்யவும்!

யூடியூப்பில் லைவ் கட் ஆன அடுத்த பத்தாவது நிமிடத்தில், தமிழரசன் தன் நண்பரும் ஆசிரியருமான கணேசுடன் திருப்பத்தூர் பங்களாவுக்குள் சீறிப் பாய்ந்தான்.

ஹாலில் கோவிந்த் தரையில் முழங்கால் மூட்டுகளில் அமர்ந்து, தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் நிலைகுத்தி நின்றன.

தமிழரசன் ஓடிச்சென்று அவனைப் பிடித்தான். "கோவிந்த்! என்னடா ஆச்சு உனக்கு? டேய் என்னை நல்லா உற்றுப் பாருடா!"

கணேஷ் உடனடியாகத் தன் மெடிக்கல் கிட்டில் இருந்த டைஸாபம் ஊசியைக் கோவிந்தின் தோள்பட்டையில் செலுத்தினான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், கோவிந்தின் உடல் தளர்ந்து, அவன் சுயநினைவை இழந்து தமிழரசனின் தோளில் சாய்ந்தான்.

மறுநாள்.

காலை 8:15.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஐ.சி.யூ அறைக்கு வெளியே தமிழரசனும் கணேசும் நின்றுகொண்டிருந்தார்கள். கோவிந்திற்கு ஈ.ஈ.ஜி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் முடிவுகள் வந்திருந்தன.

"பேய் இல்லை. இது சுத்தமான டெம்போரல் லோப் எபிலெப்ஸி மற்றும் மாஸ் ஹிஸ்டீரியா!" என மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மாரியப்பன் ஸ்கேன் பிலிம்களை வெளிச்சத்தில் பிடித்து விளக்கினார்.

"பழைய பாழடைந்த பங்களாக்களின் சுவர்களில் இருக்கும் பழைய பித்தளை மற்றும் இரும்பு கம்பிகள், காற்றில் உள்ள ஈரப்பதத்தால் மின்காந்த அலைகளை வெளியிடும். கோவிந்த் அந்த டைப்ரைட்டருக்கு அருகில் நின்றபோது, அங்கிருந்த அதிகப்படியான மின்காந்தப் புலம் அவனது மூளையின் டெம்போரல் லோப் பகுதியைத் தீவிரமாகத் தூண்டியிருக்கிறது. இந்த பகுதிதான் மனிதனின் நினைவாற்றலையும் கற்பனையையும் கட்டுப்படுத்துவது. அது தூண்டப்பட்டால், இல்லாத உருவங்கள் கண்ணுக்குத் தெரியும்; தொடாத தொடுதல் உணர்வு ஏற்படும்!" மருத்துவர் மாரியப்பன் தொடர்ந்தார்.

"அப்ப டைப்ரைட்டர் எப்படி ஆடுச்சு? அதுக்குள்ள புளூடூத் இல்லை தமிழ். அந்த பங்களாவின் அடியில் நிலத்தடி நீர் வீரியமாகப் பாயும் ஒரு பாதை இருக்கிறது. நள்ளிரவு 3:15 மணிக்கு மழைநீர் உள்ளே புகும்போது ஏற்படும் ஹைட்ராலிக் பிரஷர்  அந்த அறையின் மரத் தரையில் நுண் அதிர்வுகளை உருவாக்கிறது. அந்த குறிப்பிட்ட அலைவரிசையில் டைப்ரைட்டரின் சாவி கம்பிகள் தன்னிச்சையாக ஆடத் தொடங்கின!" கணேஷ் அந்தப் பங்களாவை இஞ்ச் பை இஞ்ச் ஆக ஆய்வு செய்ததிலிருந்து விளக்கினான்.

"அவன் ஆச்சி குரல்ல பேசினானே?" தமிழரசன் கேட்டான்.

"அது டிசோசியேட்டிவ் ஸ்டேட். அளவுக்கு அதிகமான பயம் மூளையைத் தாக்கும்போது, சப் கான்ஷியஸ் மைண்ட் தன் சுய அடையாளத்தை இழந்துவிடும். ஆச்சி கொலை செய்யப்பட்டாள்ன்னு அவனது மூளை அந்தத் தகவலைப் பிடித்துக்கொண்டு, ஆச்சியாகவே தன்னை பாவனை செய்து கொண்டது. இதையே உளவியலில் ஹிஸ்டீரியல் போஸஸன் என்பார்கள்!" என்றார் மருத்துவர் மாரியப்பன்.

"லைவ் ஸ்ட்ரீம்ல தெரிஞ்ச பேய்?" என்று தமிழரசன் கேட்க,

"எவனோ ஒருத்தன் ஹேக் பண்ணி பண்ணுன கிராபிக்ஸ்டா அது. ஹேக்கிங், மேக்னடிக் பீல்ட், ஹைட்ராலிக் பிரசர், டெம்போரல் லோப் அன்ட் சப் கான்ஷியஸ் மைண்ட் பண்ணுன அலப்பறைன்னு எல்லாம் சேர்ந்த டிராமாதான் நேற்று நடந்தது." என்றான் கணேஷ்.

மதியம் 2:00 மணிக்குக் கோவிந்த் மெதுவாகக் கண் விழித்தான். அவன் இதயம் இயல்பான 72 என்ற சராசர இதய துடிப்பு அளவுக்கு வந்திருந்தது.

"தமிழ்!" கோவிந்த் பலவீனமான குரலில் அழைத்தான். "நான் ஏதோ ஆச்சி குரல்ல பேசினேனா? கேமராவுல."

தமிழரசன் சிரித்தான். "நீதானே அதுக்கெல்லாம் ஆசைப்பட்டே. பிறகு ஏன் மயக்கமடிச்சு விழுந்தே. அதெல்லாம் உன் மூளை உனக்கு அடிச்ச விபூதி கோவிந்த்! அறிவியலையும் இயற்பியலையும் ஒழுங்கா கணக்கு போடாம, ஹாரர் டூரிசம் பண்ணப்போனா மூளை இப்படித்தான் ஹேங் ஆகும்!"

கோவிந்த் பெருமூச்சு விட்டான். "அப்போ அந்தப் பங்களால பேய் எதுவும் இல்லையா?"

"இல்ல. ஆனா, இருக்கு! அது எப்படின்னா, அந்தப் பங்களாவோட அடியில் நிலத்தடி நீர் இருக்கிறதை வச்சு, அதை ஒரு மினரல் வாட்டர் பிளாண்ட்டா மாத்துனா, பேயைக் காட்டி சம்பாதிக்க நினைச்ச நீ தண்ணிய வெச்சு சம்பாதிக்கலாம்! வேணும்னா அந்தத் தண்ணிய கொதிக்க வைக்குறப்ப வர்ற நீராவியைக் காட்டி இதுதான் ஆவின்னு பிசினஸ் பண்ணிக்கோ!"

எல்லாரும் சத்தமாகச் சிரித்தார்கள்.

ஆக விசயம் இதுதான். மனிதன் பயப்படும் வரைதான் அமானுஷ்யம்; அதன் பின்னணியில் இருக்கும் லாஜிக்கைக் கண்டுபிடித்துவிட்டால், அது வெறும் இயற்பியல், வேதியியல் மற்றும் உளவியல்தான்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Sunday, 6 September 2026

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 8

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 8

குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.09.2026

1) மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் பத்தாயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2) தீபாவளி பண்டிகைக்கான தொடர்வண்டி முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்திலேயே முடிந்தது.

3) டில்லியில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.

4) பீகாரில் கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5) இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் அங்கு விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது.



Education & GK News

1) The volume of water released from Mettur Dam has been increased to 10,000 cubic feet per second.

2) Train reservations for the Diwali festival were fully booked within just five minutes of opening.

3) Five students lost their lives when a multi-story building collapsed in Delhi.

4) 2.2 million people have been affected by the flooding of the Ganges River in Bihar.

5) Air traffic in Indonesia has been disrupted due to a volcanic eruption.

ஹாரர் டூரிஸம்

அமானுஷ்யங்கன் அட்ரஸ்

அட்ரஸ் – 76

ஹாரர் டூரிஸம்

கோட்டூக்கு கிழக்கே உள்ள திருப்பத்தூர் கிராமத்தின் அந்த 120 வருடப் பெரிய பங்களாவுக்கு வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.

கோவிந்த் தன் ஐபேடில் உள்ள 3டி மேப்பிங் ஆப்பை மூடிவிட்டு காபியை உறிஞ்சினான்.

"என்ன கோவிந்த்! இந்த பங்களாவை நிஜமாவே ஹெரிடேஜ் ரிசார்ட்டா மாத்தப் போறியா?" கேட்டான் தமிழரசன்.

"ஆமாம் தமிழ்! அமிட்டிவில் பங்களாவை வச்சு அமெரிக்காகாரன் கோடிகள்ல பிசினஸ் பண்ணான். இந்த திருப்பத்தூர் பங்களாலயும் 3:15 மணிக்கு ஓர் ஆச்சி அலறுறான்னு கிராமத்துல கட்டுக்கதை கிளப்பி விட்டிருக்காங்க. இதனால நிலத்தின் மதிப்பு கம்மி. நாம அடிமாட்டு விலைக்கு வாங்கி, நைட்ல தங்குற பாரினர்களுக்கு ஹாரர் டூரிசம்ன்னு வித்தா செம காசு!"

"டேய் கோவிந்த்! 1975ல இந்த வீட்டின் ஆச்சி கஸ்தூரி, தன் நகைக்காக சொந்தப் பையனாலேயே கொலை செய்யப்பட்டாங்கடா."

கோவிந்த் சத்தமாகச் சிரித்தான். "தமிழ்! மனித மூளை பயத்துல தனக்குத்தானே பண்ணிக்கிற கன்பர்மேஷன் பயாஸ்தான் இது. நான் இன்னைக்கு நைட் இங்க தங்கி, லைவ் ஸ்ட்ரீமிங் பண்ணப்போறேன். பேயாவது பிசாசாவது ஏதோ ஒண்ணு இங்க இருக்குன்னு சமூக வலைத்தளத்துல நிரூபிச்சா, என்னோட யூடியூப் சேனல் பிச்சுக்கிட்டுப் போகும். ஒருவேளை அப்படியொண்ணும் இங்க இல்லன்னு நிரூபிச்சா  நாளைக்கு இந்த இடத்தோட ரேட் டபுள்! எப்படிப் பார்த்தாலும் லாபம்தான் தமிழ்!"

"சரி, உன் மார்க்கெட்டிங் பிரைன் உன்னைக் காப்பாத்தட்டும்!" தமிழரசன் தன் டூவீலைரை ஸ்டார்ட் செய்து மழையில் மறைந்தான்.

இரவு 3:10.

கோவிந்த் தன் சோனி ஆல்பா கேமராவை ட்ரைபாடில் மாட்டி, யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங்கை ஆன் செய்தான். லைவில் 4,000 பேர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"ஹாய் ப்ரெண்ட்ஸ்! இப்போ மணி 3:10. இன்னும் அஞ்சு நிமிஷத்துல இந்த வீட்டின் ஆச்சி ஆவி வரும்னு சொல்றாங்க. பார்ப்போம்." கோவிந்த் கேமராவைப் பார்த்துப் புன்னகைத்தான்.

திடீரென்று, அவன் கையில் இருந்த டிஜிட்டல் தெர்மோமீட்டர் வெப்பநிலையைக் காட்டியது. 28°C இல் இருந்து சட்டென்று 4°Cக்குச் சரிந்தது.

அவன் மூச்சுக் காற்று காற்றில் பனியாக உறைந்தது.

"ஓகே! இது மைக்ரோ கிளைமேட் மாறுபாடு. பழைய கட்டிடங்கள்ல காத்து சுழலும்போது இப்படி நடக்கும். தமிழரசனுக்குக் கூட இப்படி மருதவனத்துப் பங்களாவுல நடந்திருக்கு." லைவ்வில் இருந்த பார்வையாளர்களுக்கு விளக்கினான். ஆனால் அவன் ஆப்பிள் வாட்ச் இதயம் 115 BPM என்று காட்டியது.

அப்போது, ஹாலில் இருந்த பழைய டைப்பிரேட்டிங் மிஷினின் விசைப் பலகை தன்னிச்சையாகத் தட்டச்சு செய்யத் தொடங்கியது.

'டக்... டக்... டக்...'

கேமரா திரையில் நேரலை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் கமெண்ட்டில் அலறத் தொடங்கினார்கள். "பின்னால் பிசாசு. தப்பிச்சு ஓடுங்க பாஸ்! "

கோவிந்த் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். டைப்ரைட்டரின் ரோலரில் இருந்த பழைய காகிதத்தில் எழுத்துக்கள் விழத் தொடங்கின.

"கோவிந்த்! அமிட்டிவில் கதையைப் போல இது போலி அல்ல. என் பேரன்கள் என் நகையை ஒளித்து வைத்த இடம். இந்த டைப்ரைட்டருக்கு அடியில்தான்!"

கோவிந்தின் கைகள் நடுங்கின. "யார் யார் அது? ப்ளூடூத் ஹேக்கிங்கா?"

டைப்ரைட்டர் மீண்டும் அடித்தது. "நீ ஆச்சி ஆவியைக் காட்டி டூரிஸம் பிசினஸ் செய்ய வந்தாய் அல்லவா? இப்போது பார். உன் யூடியூப் லைவில் 50,000 பேர் பார்க்கிறார்கள்!"

கோவிந்த் கேமரா திரையைப் பார்த்தான். நேரலையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. கமெண்ட்டுகள் கணினியின் வேகத்தை விட வேகமாக ஓடின.

ஆனால், கேமரா திரையில் அவன் உருவத்திற்குப் பின்னால், கம்பீரமான தோற்றத்துடன், கழுத்தில் தங்கக் காசு மாலையுடன் ஒரு முதிய பெண் உருவம் நின்று கொண்டிருந்தது!

கோவிந்த் அலறிக்கொண்டு திரும்பிப் பார்த்தான். அங்கே யாரும் இல்லை. ஆனால் கேமரா திரையில் அந்த உருவம் மெதுவாக அவன் தோளைத் தொட்டது!

அந்த நொடி.

கோவிந்தின் உடலில் ஒரு பயங்கரமான மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அவன் கண்கள் சிவந்தன.

அவன் தன் கையிலிருந்த ஐபேடை தூக்கி எறிந்தான். யூடியூப் கேமராவை நேராகப் பார்த்து, தன் சொந்தக் குரல் இல்லாமல், ஒரு 80 வயதுப் பாட்டியின் குரலில் பேசத் தொடங்கினான்:

"என் நகையைத் திருடுன பசங்களை இன்னும் நான் விடலடா. இந்த பங்களாவுக்கு வர்ற அத்தனை பேரையும் நான்தான் வரவேற்பேன்டா!"

கேமராவின் லைவ் ஸ்ட்ரீம் சடாரென சிக்னல் லாஸ்ட் என்று கட் ஆனது.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.09.2026

1) டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

2) தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் நவம்பர் 1க்குள் பெயர்ப்பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3) புதிய உலக வரைபடத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

4) சூப்பர் எல் நினோ விளைவால் இந்தியாவில் மழை குறையவும் வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

5) வியட்நாமில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில், டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா 2026 ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றார்.









Education & GK News

1) Water was released from the Kallanai Dam today for Delta irrigation.

2) The High Court has ordered that nameboards in Tamil must be displayed at shops across Tamil Nadu by November 1st.

3) The United Nations has approved a new world map.

4) The 'Super El Niño' phenomenon is likely to lead to reduced rainfall and rising temperatures in India.

5) Johairy Mola from the Dominican Republic won the 'Miss World' title for the year 2026 at the pageant held in Vietnam.

Saturday, 5 September 2026

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 7

குரூப் 2 & 2A மாதிரி வினா விடை – 7

குரூப் மற்றும் ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க. 

*****