Friday, 26 June 2026

மம்மிக்களைத் தோண்டினால் மரணம் நிச்சயமா?

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 3

மம்மிக்களைத் தோண்டினால் மரணம் நிச்சயமா?

எகிப்தியர்களைப் பொறுத்தவரை சாவு என்பது ஒரு லாங் டிராவல். உடல் கெடாமல் இருக்க மம்மி ஆக்க வேண்டும், கல்லறைக்குள் தங்கம், பொருள் எல்லாம் வைக்க வேண்டும்.

இதிலாவது அவர்கள் அமைதியாக இருந்தார்களா?

இல்லை.

அவர்களின் நம்பிக்கையின்படி, யாராவது கல்லறையைத் தோண்டினாலோ அல்லது வாரிசுகள் திதி கொடுக்கக் காசு கஞ்சத்தனம் பண்ணினாலோ, ஆத்மா நேராக பூமிக்கு வந்து விசிட் அடிக்கும்.

ஒரு கணவன் தன் இறந்த மனைவிக்கு ஒரு லெட்டர் எழுதி அவளது கல்லறையிலேயே வைத்தானாம், "உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? ஏன் என் உடம்பை இப்படிப் படுத்துகிறாய்?"  - ஆவியுடன் ஒரு நேரடி முதல் கடிதப் போக்குவரத்து இதுதான்.

எகிப்தியர்கள் ஏன் உடம்பைக் கெடாமல் பாதுகாத்தார்கள்? அவர்களுக்குப் பேய் ஆவதில் ஆசையா? இல்லை.

அவர்களுடைய தியரிப்படி மனிதனுக்கு இரண்டு ஆன்மாக்கள் உண்டு. ஒன்று 'கா', இன்னொன்று 'பா'. மனிதன் இறந்த பிறகு இந்த ஆன்மாக்கள் பிரபஞ்சத்தைச் சுற்றிவிட்டு மீண்டும் சொந்த உடம்பிற்குள் வந்து புகுந்துகொள்ளும். அப்படி வரும்போது பாடி டேமேஜ் ஆகி அழுகிப் போயிருந்தால் ஆன்மாவுக்குக் கோபம் வந்துவிடும். பிறகு அது அலைந்து திரியும்.

இதான் பின்னாட்களில் மம்மி பேய் கதைகளாக உருமாறியது. எகிப்தியர்கள் உடலைத் தைத்த விதம் ஒரு அட்வான்ஸ்டு சர்ஜரி.

முதலில் மூக்கு வழியாக ஒரு கொக்கியை விட்டு மூளையை வெளியே இழுத்துவிடுவார்கள். ஏனெனில் மூளைதான் முதலில் அழுகும்.

பிறகு கல்லீரல், நுரையீரல், குடல் போன்ற உள்ளுறுப்புகளைத் தனியாக எடுத்து கனோபிக் ஜாடிகளில் வைப்பார்கள்.

இதயத்தை மட்டும் உடம்பிற்குள்ளேயே விட்டுவிடுவார்கள். ஏன் தெரியுமா? அனுபிஸ் என்ற எகிப்திய கடவுள், மறுஉலகில் மனிதனின் இதயத்தை ஒரு பறவையின் இறகோடு வைத்து எடை பார்ப்பாராம். பாவம் அதிகமாக இருந்தால் இதயம் கனக்குமாம். நல்ல கற்பனைதான் இல்லையா?!

பிறகு நேட்ரான் என்ற உப்புக்கலவையில் உடலை நாற்பது நாட்கள் ஊறவைத்து, மல்லிகை, லாவண்டர் எண்ணெய் தடவி, கிலோமீட்டர் கணக்கான லினன் துணியால் சுற்றுவார்கள். அவ்வளவுதான், நூடுல்ஸ் ரெடி என்று மம்மிக்கள் சொல்வது போல, இப்போது மம்மிக்கள் நிஜமாகவே ரெடி.

உண்மையில் எகிப்தியர்கள் மம்மிகளைப் பேய்களாகப் பார்க்கவில்லை. அவை மதிக்கப்பட வேண்டிய முன்னோர்கள் என்றே பார்த்தார்கள்.

பிறகெப்படி மம்மிக்கள் குறித்த பேய்க்கதைகள் உருவாகின என்கிறீர்களா?

மம்மி பேய்க்கதைகளுக்கு மிக முக்கியமான ஸ்டார்ட்டிங் பாயிண்ட் ஹோவர்ட் கார்ட்டர் என்பவர்தான். அவர்தான் 1922 இல் இவர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.

அந்தக் கல்லறை வாசலில் ஒரு எகிப்திய வாசகம் எழுதப்பட்டிருந்தது: "பாரோவின் தூக்கத்தைக் கெடுப்பவன் எவனோ, அவனுக்கு மரணம் தன் சிறகுகளால் தீர்ப்பளிக்கும்."

ஜஸ்ட் ஒரு எச்சரிக்கை போர்டுதான். நாமெல்லாம் 'இங்கே வண்டி நிறுத்தாதே' என்று போர்டு வைப்பதில்லையா, அதுபோல.

ஆனால், அடுத்த சில மாதங்களில் அந்தக் கண்டுபிடிப்போடு சம்பந்தப்பட்ட லார்ட் கார்னர்வான் ஒரு கொசு கடித்து, அது இன்ஃபெக்ஷன் ஆகி இறந்துபோனார். அடுத்தடுத்து அந்த டீமில் இருந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்தார்கள். ஆனால் ஹோவர்ட் கார்ட்டர் இறக்கவில்லை என்பது வேறு விசயம்.

உடனே மீடியாக்கள் கிளம்பின. "சாபம்! மம்மியின் சாபம்!" என்று பேப்பர்களை விற்றார்கள்.

இது மம்மிக்களின் பேய்த்தனமான வேலையா?

அதெல்லாம் எதுவும் இல்லை.

மூவாயிரம் வருஷமாக மூடி வைக்கப்பட்ட ஒரு ஏர் டைட் அறைக்குள் சூரிய வெளிச்சமே பட்டிருக்காது இல்லையா!

அங்கே அஸ்பெர்கிலஸ் நைகர் போன்ற ஆபத்தான பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் மியூட்டேஷன் ஆகி, ஒரு பயோ வெப்பன் போலக் காத்திருந்தது.

கதவைத் திறந்தவுடன் அதைச் சுவாசித்தவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள்.

அப்படியானால் ஹோவார்ட் கார்ட்டர் எப்படித் தப்பித்தார்?

அவர் சில நாட்கள் மட்டும் எகிப்துக்கு வந்துவிட்டுப் போனவர் அல்ல; பல வருடங்கள் எகிப்தியப் பாலைவன தட்பவெப்பநிலையிலேயே வாழ்ந்ததால், அவரது நோய் எதிர்ப்புச் சக்தி அந்தச் சூழலுக்குப் பழகியிருந்தது.

அவர் மற்றவர்களைப் போல அவசரப்படவில்லை. அவர் ஒரு தேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர். அந்தப் பெட்டகத்தைத் திறந்தவுடனேயே உள்ளே இருக்கும் பழமையான காற்றைச் சுவாசிப்பது ஆபத்து என்பதை உணர்ந்து, முறையான காற்றோட்ட வசதிகளைச் செய்த பிறகே உள்ளே முழுமையாக வேலை செய்ய ஆரம்பித்தார்.

அவசரப்பட்டவர்களும், திடீர் விசிட்டில் கண்டுபிடிப்பாளர்களாக ஆசைப்பட்டவர்களும்தான் காலியானார்கள். கார்ட்டர் காலியாகவில்லை.

பேய்களை விடவும் மனிதர்களின் கற்பனைக்குத்தான் சக்தி அதிகம் என்பதற்கு ஹோவர்ட் கார்ட்டரின் வாழ்க்கையே ஒரு சாட்சி!

ஸோ, பேய் இல்லை, பூஞ்சைதான் வில்லன்! ஆனால், வில்லன் பட்டத்தைத் தட்டிக்  கொண்டு போனது பேய்கள்தான். இந்தப் பேய்த்தனத்தை வைத்துக் கொண்டு ஹாலிவுட் பேய் படங்களாகச் சுட்டித் தள்ளியது. பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்ற கதைதான் இந்தப் பேய் கதையிலும்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Thursday, 25 June 2026

சாகாமலிருக்க ஒரு ரூட் மேப்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்!

அட்ரஸ் – 2

சாகாமலிருக்க ஒரு ரூட் மேப்!

இந்தப் பேய்கள் எல்லாம் இந்த உலகில் எப்போது அட்மிட் ஆனார்கள் தெரியுமா?

சுமேரியர் காலத்திலேயே கியூனிபார்ம் எழுத்துக்களில் பேய்களைப் பற்றி எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

கில்காமேஷ் பற்றி அங்கே காவியமே எழுதியிருக்கிறார்கள்.

யார் இந்த கில்காமேஷ்?

கி.மு. 1800. மெசபடோமியாவில் உரூக் நகரத்தின் கிங்.

மூன்றில் இரண்டு பங்கு கடவுள், ஒரு பங்கு மனிதன் என கில்காமேஷ் போன்ற ஒரு டிசைனை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது.

கில்காமேஷ் பயங்கரமான திமிர் பிடித்த ஆள். ஆஜானுபாகுவான உடம்பு, அதீத அறிவு, எக்கச்சக்க பவர் உள்ளவன்.

மக்களும் கடவுளும் யோசித்தார்கள், இவனை அடக்க ஒரு ஆப்போசிட் போர்ஸ் வேண்டும் என்று. அப்படி உருவானவன்தான் என்கிடு. அவன் ஒரு காட்டுவாசி. காட்டில் மிருகங்களோடு மிருகமாக, ஷேவிங் செய்யாத தாடி, தலைமுடியுடன் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்து, உரூக் நகரத்துக்குள் அழைத்து வந்தார்கள்.

ஒரு திருவிழா கூட்டத்தில் கில்காமேஷும் என்கிடுவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டார்கள்.

கமலும் ரஜினியும் மோதுவது போன்ற சண்டை. செ மாஸ் பைட். உரூக் நகரத்தின் சுவர்கள் அதிர்ந்தன. தூசிகள் பறந்தன. ஒரு கட்டத்தில் ட்விஸ்ட் அடித்தது ஸ்க்ரீன் ப்ளே... ‘டேய், நீ செம கட்டைப்பா!’ என்று கில்காமேஷ் சிரிக்க, ‘நீயும் சளைச்சவன் இல்லை!’ என்று என்கிடு கையை குலுக்கினான்.

இப்படி எதிரிகளாக வேண்டிய இருவரும் தடிமனான நண்பர்களானார்கள்.

சும்மா இருந்தால் கில்காமேஷுக்கு போர் அடிக்கும். "என்கிடு, வா ஒரு அட்வென்ச்சர் போவோம். அந்த சிடார் காட்டில் இருக்கும் 'ஹம்பாபா' என்ற அரக்கனைப் போட்டுத்தள்ளலாம். வரலாற்றில் நம் பெயர் நிலைத்து நிற்க வேண்டும்" என்றான்.

என்கிடுவுக்கு கொஞ்சம் பயம். "டேய், அவன் வாய் வழியா நெருப்பு வரும், வேணாம்டா" என்றான்.

"வாடா பாத்துக்கலாம்!" என்று கில்காமேஷ் இழுத்துக்கொண்டு போனான். சூரியக் கடவுளின் உதவியோடு, ஒரு ஹை வோல்டேஜ் சண்டைக்குப் பிறகு ஹம்பாபாவின் தலையை சீவினார்கள்.

இங்கேயும் ஒரு ட்விஸ்ட் ஆரம்பமானது.

கில்காமேஷின் சிக்ஸ்பேக் உடம்பையும் வீரத்தையும் பார்த்துவிட்டு, சொர்க்கத்தின் காதல் தேவதை இஷ்தார் நேராக லேண்ட் ஆகி, "என்னை கல்யாணம் பண்ணிக்கோ" என்றாள்.

ஹீரோ சும்மா இருப்பானா? செம நக்கல் அடித்தான்.

ஈகோ டச் ஆன இஷ்தார், கடுப்பாகி சொர்க்கத்துக் காளையை பூமிக்கு அனுப்பி உரூக் நகரத்தை அழிக்கப் பார்த்தாள். ஆனால், நம்ம தக் லைப் பார்ட்னர்கள் கில்காமேஷும் என்கிடுவும் சேர்ந்து அந்த காளையையும் காலி செய்தார்கள்.

கடவுள்களுக்கு கோபம் தலைக்கேறியது. "ரொம்ப ஆடுகிறான்கள். காளையையும் கொன்றுவிட்டார்கள். அதனால் என்கிடு சாகட்டும்" என்று சாபமிட்டார்கள்.

என்கிடுவுக்கு ஒரு விசித்திரமான நோய் வந்து, படுக்கையில் விழுந்து, கில்காமேஷின் கையைப் பிடித்தபடியே இறந்து போனான்.

இங்குதான் கில்காமேஷ் உடைந்து போனான். அதுவரை மரணத்தைப் பற்றி யோசிக்காதவனுக்குள் ஒரு பயங்கரமான இருள் புகுந்தது.

'நாளைக்கு நமக்கும் இதே நிலைமைதானா? இந்த உடம்பு, இந்த வீரம் எல்லாம் மண்ணோடு மண்ணாகிவிடுமா?' என சயின்ஸ் மற்றும் பிலாசபி கலந்த ஒரு கேள்வி அவனுக்குள் எழுந்தது.

இந்தக் கேள்வியால், மரணத்தை வெல்லும் ரகசியத்தைக் கண்டுபிடிக்க கில்காமேஷ் கிளம்பினான்.

உலகப் பெருவெள்ளத்தில் தப்பித்து, கடவுள்களால் அமரத்துவம் கொடுக்கப்பட்ட உத்நாபிஷ்டிம் என்ற கிழவரைத் தேடி காடு, மலை, இருட்டு குகைகள் என அலைந்தான். நம்ம ஊர் மார்க்கண்டேயன் கதை மாதிரி இருக்கிறது என்கிறீர்களா? உலக நாடுகளின் எல்லா கதைகளும் இப்படித்தான் இருக்கும் போல.

கடைசியில் அந்தக் கிழவரைக் கண்டுபிடித்து விட்டான். அவர் ஒரு சீக்ரெட் சொன்னார். "கடலின் அடியில் ஒரு மூலிகை இருக்கிறது. அதைச் சாப்பிட்டால் இளமை திரும்பும்."

கில்காமேஷ் கடலுக்குள் குதித்து, அந்த மூலிகையைப் பறித்தான். "இதை ஊருக்குப் போய், வயசானவங்களுக்குக் கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டு அப்புறம் நான் சாப்பிடுறேன்" என்று மெடிக்கல் எத்திக்ஸோடு கிளம்பினான்.

வழியில் ஒரு குளம். அப்பாடா என்று மூலிகையைக் கரையில் வைத்துவிட்டு, குளிக்கப் போனான் கில்காமேஷ்.

அப்போது அங்கே மெதுவாக ஊர்ந்து வந்த ஒரு பாம்பு, அந்த மூலிகையை லபக் என்று விழுங்கிவிட்டு, தன் பழைய தோலைக் உரித்துவிட்டு புதுப் பொலிவோடு இளமையோடு நகர்ந்து சென்றது.

கரையேறி வந்த கில்காமேஷ் பார்த்தான். மூலிகை காலி. பாம்பு இளமையாகிவிட்டது.

அவனுக்கு 'க்ளிக்' என்றது.

அவனுக்குப் புரிந்துவிட்டது. மனித உடலுக்கு எக்ஸ்பைரி டேட் உண்டு. அதை மாற்ற முடியாது. ஆனால், நாம் செய்யும் சாதனைகள், நாம் உருவாக்கும் கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம் மரணத்தை வெல்ல முடியும்.

கடைசியில் அவன் தன் கதையை, தான் கடந்து வந்த அத்தனை சாகசங்களையும், தோல்விகளையும், தேடல்களையும் ஒரு கற்பலகையில் செதுக்கி வைத்தான்.

கில்காமேஷ் செத்துப்போனான். ஆனால், 4000 வருடங்கள் கழித்து இன்று நாமும் அவனைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவன் தேடிய மரணமில்லாப் பெருவாழ்வு அவனுக்குக் கிடைத்துவிட்டது... அவன் எழுதிய எழுத்து வடிவில்!

இதுதான் அந்த மெசபடோமியா தத்துவம். மனுஷன் சாவான். அவனது சாதனைகள் சாகாது. 4000 வருஷத்துக்கு முன்னாடியே எழுதிட்டாங்க பாஸ்!

இருந்தாலும் மெசபடோமியர்களுக்கு மறு உலகம் பற்றி சில கான்செப்ட்கள் உண்டு. அது குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

மெசபடோமியர்களின் மறு உலகம் ரொம்பப் போரடிக்கிற இடம். அங்கே ஆத்மாக்கள் வெறும் நிழல்களாக அலைவார்கள். அங்கே ஜாலியாக இருக்க ஒரே வழி என்னவென்றால், பூமியில் இருக்கும் உங்கள் வாரிசுகள் உங்களுக்கு ஒழுங்காகப் படையல் போட வேண்டும் என்பதுதான். ஏழு பிள்ளைகள் பெற்றவனுக்கு அங்கே விஐபி ட்ரீட்மென்ட். ஒரு பிள்ளை கூட இல்லாத பெண், அங்கே உடைந்த மண்பாண்டம் போல எறியப்படுவாள். சென்டிமென்ட் பிளஸ் பயம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ் என்று போட்டு விட்டு, இதில் இன்னும் பேய் வரவில்லையே என்கிறீர்களா? ப்ளீஸ் வெயிட்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

தமிழக அமைச்சர்களின் தொடர்பு எண்களும் மின்னஞ்சல் முகவரிகளும்

தமிழக அமைச்சர்களின் தொடர்பு எண்களும் மின்னஞ்சல் முகவரிகளும்

தமிழக முதலமைச்சர் உட்பட அனைத்துத் துறை அமைச்சர்களையும் தொடர்பு கொள்வதற்கான அலைபேசி எண்களையும் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிகளையும் கீழே காண்க.

*****

Wednesday, 24 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.06.2026

1) தமிழகத்தில் சூன் 27 முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) மும்பையில் விடிய விடிய பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

3) ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முடக்கும் தீர்மானத்தை அமெரிக்காவின் செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

4) பிரான்சில் நிலவி வரும் கடும் வெப்ப அலைக்கு 18 பேர் பலியாகியுள்ளனர்.

5) தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. ஒரு பவுன் 1,06,800 ரூபாயாக விற்பனையாகிறது.




Education & GK News

1) The Meteorological Department has forecast heavy rains in Tamil Nadu starting June 27.

2) Normal life in Mumbai has been disrupted due to overnight rains.

3) The US Senate has passed a resolution to block military actions against Iran.

4) Eighteen people have died due to the severe heatwave in France.

5) Gold prices are witnessing a continuous decline; a sovereign is currently selling at Rs. 1,06,800.

பேயோகம் = பேய் + யோகம் – பேய்களின் யோகம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 1

பேயோகம் = பேய் + யோகம் – பேய்களின் யோகம்!

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை வாழ்ந்த மனிதர்களில் வெறும் ஒரு சிறு பகுதிதான் இப்போது உயிரோடு இருக்கிறோம். மிச்சம் பேர் எங்கே?

எங்கே போயிருப்பார்கள்? ரீசைக்கிளிங் ஆகியிருப்பார்களா? அல்லது பேய்களாகப் பின்னால் நின்று நாம் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா?

அந்த நிழல் மனிதர்கள்

நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இடத்திலும், முன்பு வாழ்ந்து மறைந்த டஜன் கணக்கான மனிதர்களின் நிழல்கள் ஒளிந்திருக்கின்றன. சிலருக்கு அந்த நினைவுகளே போதும். ஆனால் சில ஆத்மாக்களுக்கு அது மட்டும் போதவில்லை. அவர்கள் பேய் என்கிற லேபிளோடு ரீஎன்ட்ரி கொடுக்கிறார்கள்.

இது ஏதோ நேற்று நேரு ஸ்டேடியத்தில் ஆரம்பித்த கதையல்ல. எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, மனிதன் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதையும், அங்கிருந்து ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து வருபவர்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

பேய்கள் குறித்த நாட்டுப்புறவியல்

ஏன் சில ஆத்மாக்களால் அந்தப் பக்கம் செட்டில் ஆக முடியவில்லை?

பேய்களின் நாட்டுப்புறவியலில் இதற்குச் சில பதில்கள் உண்டு. அது என்ன கூறுகிறது என்றால்,

பழிவாங்கும் ஆவிகள் : கணக்கு தீர்க்க வராதவர்கள்.

சோக கீதங்கள் : இன்னும் அந்தப் பழைய நினைவிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.

பாசப் போராட்டங்கள் : அன்புக்குரியவர்களைப் பிரிய மனமில்லாத சென்டிமென்ட் பேய்கள்.

இது கலாச்சாரங்களைக் கடந்த ஒரு விஷயம். எகிப்திய பிரமிடு முதல் இன்றைய இமெயில் யுகம் வரை பேய்கள் நம்மைத் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

சயின்ஸ் vs நம்பிக்கை

"என்ன சார், 2026 இல் உட்கார்ந்து பேய் என்கிறீர்களே?" என்று கேட்கலாம். ஒரு புள்ளிவிவரம் இதோ. இதற்குப் பிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

2019 இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 45 சதவீத அமெரிக்கர்கள் இப்போதும் பேய்களை நம்புகிறார்கள்.

பகுத்தறிவு என்னதான் டார்ச் அடித்துப் பார்த்தாலும், மரணம்தான் முடிவு என்பதை ஏற்க நம் மூளையின் ஒரு பகுதி மறுக்கிறது. இந்த மெட்டீரியலிச உலகத்துக்கும், ஆவிகள் உலவும் மாய உலகத்துக்கும் நடுவே ஏதோ ஒரு லிங்க் இருக்கிறது. அது குவாண்டம் பிசிக்ஸா அல்லது வெறும் மனப்பிரமையா என்ற தேடல் இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

மர்மங்களின் தேடல்

மதங்களும் புராணங்களும் பேய்களுக்கு ஏகப்பட்ட விளக்கங்களைக் கொடுத்துவிட்டன. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இவை எல்லாமே நம் நரம்பு மண்டலத்தின் விளையாட்டாகவோ அல்லது இன்ப்ரா சவுண்ட் போன்ற அலைவரிசைகளின் விளைவாகவோ இருக்கலாம்.

ஆனால், ஒரு திறந்த மனதுள்ள ஆராய்ச்சியாளனுக்குத் தேவைப்படுவது ஆதாரங்கள். ஒரு சில ஆத்மாக்களுக்கு வெறும் நினைவுகளாக இருப்பது மட்டும் போதவில்லை; சில நேரங்களில் அவர்கள் பேய்களாகவே திரும்பி வருகிறார்கள் என்பதுதான்பேய்களைப் பற்றிப் பேசுவர்களின் அடிநாதம்.

கடைசியாக…

பேய்கள் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. அந்த பயம் தரும் த்ரில் இருக்கிறதே... அதுதான் மனிதன் கண்டுபிடித்ததிலேயே மிகச் சிறந்த பொழுதுபோக்கு! ஆக இது குறித்து அறிந்து கொள்ள நிறைய இருக்கிறது. அறிந்து கொள்வோம் ஒவ்வொன்றாக.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Tuesday, 23 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.06.2026

1) டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்.

2) மத்திய பல்கலைக்கழங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

3) +2 துணைத்தேர்வுகள் எழுதுவோருக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாகிறது.

4) திருவள்ளூர் மாவட்ட இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா கசிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 9 ஆக அதிகரித்துள்ளது.

5) உலகளாவியல் சவால்களை எதிர்கொள்வதில் பிரிக்ஸ் கூட்டமைப்பு சிறப்பாகச் செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

6) கார்பன் மாசை எதிர்கொள்வதற்கான நுட்பங்களைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

Education & GK News

1) The notification for the TNPSC Group 1 examinations has been released; applications can be submitted starting June 30.

2) The results of the Common University Entrance Test (CUET) for central universities have been announced.

3) Hall tickets for students taking the Class 12 supplementary examinations are being released today.

4) The death toll from the ammonia gas leak at a shrimp processing plant in Tiruvallur district has risen to nine.

5) Prime Minister Narendra Modi has stated that the BRICS alliance is performing effectively in addressing global challenges.

6) UN Secretary-General António Guterres has stated that artificial intelligence should be utilized to develop technologies for tackling carbon emissions.

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

ஓர் ஆவி பறக்கும் முன்னுரை

உங்களுக்குப் பேய் பிடிக்குமா?

கேள்வியே தப்பு என்கிறீர்களா?

உங்களுக்குப் பேய்களைப் பிடிக்குமா என்று கேட்டிருக்க வேண்டும்.

பெரும்பாலானவர்களின் பதில் 'இல்லை' என்பதாகத்தான் இருக்கும். ஆனால், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு, தனியாக இருக்கும்போது, பின்னால் ஏதோவொரு நிழல் அசைவது போல் தெரிந்தால்... சட்டென்று இதயத்துடிப்பு எகிறுகிறதே, அது ஏன்?

விஞ்ஞானம் இதை 'அட்ரினலின் ரஷ்' என்கிறது. பயம் என்பது மூளையின் அமிக்தலா  பகுதி தரும் ஒரு தற்காப்பு எச்சரிக்கை. அவ்வளவுதான்.

இருந்தாலும், பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, மனித நாகரிகம் வளர்ந்த வேகத்திற்கு இணையாகப் பேய்க் கதைகளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றனவே, அது எப்படி?

குகை மனிதன் நெருப்பை விசித்திரமாகப் பார்த்த காலத்திலிருந்து, இன்றைய ஐடி ஊழியர் நள்ளிரவில் லிப்ட்டில் தனியே போகப் பயப்படுவது வரை, பயம் மாறவில்லை. உருவங்கள் மட்டும்தான் மாறியிருக்கின்றன.

ஒரு லாஜிக் என்னவென்றால், உலகில் இதுவரை பிறந்து இறந்த மனிதர்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்து எண்ணூறு கோடி.

இவர்களில் ஒரு சதவீதத்தினர் பேயாக மாறினாலும், இந்நேரம் உலக மக்கள் தொகையை விட பேய்களின் மக்கள் தொகை அதிகமாக இருந்திருக்க வேண்டும். நிலைமை அப்படியானால், இந்நேரம் பஸ் ஸ்டாண்டிலும், தியேட்டரிலும், ஏன்... உங்கள் சோபாவிலும் கூட ஒரு பேய் உட்கார்ந்திருக்க இடமுண்டு.

ஆனால், நமக்கு ஏன் தெரிவதில்லை?

அப்படியென்றால் பேய்கள் இல்லையா? அல்லது நம் கண்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு அலைவரிசையில் அவை இயங்கிக் கொண்டிருக்கின்றனவா? சிலர் சொல்வது போல, "இருப்பதாக நினைத்தால் இருக்கிறது, இல்லாததாக நினைத்தால் இல்லை" என்பதுதானா?

இப்போது பேய்களைப் பற்றி உங்களுக்கும் யோசிக்கத் தோன்றுகிறதா?

ரொம்ப நாளாகவே எனக்கும் ஓர் ஆசை. பேய்களைப் பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும் என்று.

ஆக இந்தத் தொடரை ஆரம்பித்தால், உங்கள் யோசனைக்கும் ஒரு வடிகால் கிடைத்து விடும். எனக்கும் ஒரு தொடர் எழுத வாய்ப்பு கிடைத்து விடும். ஒரே கல்லில் இரண்டு பேய், சாரி மாங்காய் கான்செப்ட்தான்.

இந்தத் தொடர் எழுத வாய்ப்பளிக்கும் விஜயராமனுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அப்படியானால் இந்தத் தொடரை எழுதுவது யார்? அதுவும் விஜயராமன்தான். அப்படியானால் இந்தத் தொடரை எழுதும் விஜயராமனுக்குத் தொடரை எழுத வாய்ப்பு தரும் விஜயராமனும் நன்றித் தெரிவித்துக் கொள்ள வேண்டுமா என்றால் அதுவும் சரிதான். இதென்ன கொலைவெறி கான்செப்ட்டாக இருக்கிறதா என்று நினைத்தால், நீங்கள் ‘அமானுஷ்யத்தின் அட்ரஸ் தொடருக்குத் தயாராகி விட்டீர்கள்.

இந்தத் தொடர் பேய்களைப் பிடிப்பதற்கானது அல்ல. நம் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் பயத்தின் வேர்களைப் பிடிப்பதற்கான ஒரு சிறு முயற்சி. கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் அனுபவம், நிறைய அமானுஷ்யம் நிறைந்தது.

ஜன்னலை மூடிவிடுங்கள். கதவைத் தாழிடுங்கள். விளக்கை அணைக்க வேண்டாம்... கொஞ்சம் டிம் மட்டும் செய்து கொள்ளுங்கள்.

தொடங்குவோம்.

நாளையிலிருந்து ஒவ்வொரு அட்ரஸாகத் தேடுவோம்.

*****