காவிரி – மலையிலிருந்து கடல் வரை
தலைக்காவிரியில் தோன்றுவதிலிருந்து காவிரிபூம்பட்டினத்தில் கடலில் கலப்பது வரை காவிரி கடக்கும் முக்கிய அணைகள் குறித்த படத்தைக் கீழே காண்க.
*****
பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
காவிரி – மலையிலிருந்து கடல் வரை
தலைக்காவிரியில் தோன்றுவதிலிருந்து காவிரிபூம்பட்டினத்தில் கடலில் கலப்பது வரை காவிரி கடக்கும் முக்கிய அணைகள் குறித்த படத்தைக் கீழே காண்க.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.08.2026
1) கபினி
அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.
2) ஒகேனக்கலுக்கு
வரும் காவிரி நீர் 18000 கன அடியாக அதிகரித்துள்ளது.
3) தமிழக
அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
4) தமிழகத்தின்
வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
5) 2029
இல் இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் தெரிவித்துள்ளார்.
6) 2015
முதல் 2024 காலகட்டத்தில் இந்தியாவில் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. காசநோயால் ஏற்படும்
இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.
Education & GK News
1) Cauvery water released from the Kabini Dam has
reached the Mettur Dam.
2) The inflow of Cauvery water to Hogenakkal has
increased to 18,000 cubic feet per second.
3) The Tamil Nadu government's budget is being presented
today.
4) Tamil Nadu's agriculture budget is being presented
tomorrow.
5) Finance Minister Nirmala Sitharaman has stated that
India will emerge as a five-trillion-dollar economy by 2029.
6) The incidence of tuberculosis in India has declined
between 2015 and 2024; the mortality rate due to tuberculosis has also
decreased.
அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 42
மிஸ்டர் பேயே கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ்!
ஜனார்த்தனன் ஓடிச் சென்ற பிறகு, அந்த அறையின்
மேஜை மீது இருந்த மடிக்கணினியில் ஒரு மென்பொருள் தானாக ஆப் ஆனது.
அது ஒரு முப்பரிமாண லேசர் படவீழ்த்தி. சுப்பையா
தாத்தா என்பவர் நிஜ மனிதரும் அல்ல, பேயும் அல்ல! அது பக்கத்து வீட்டு ஏஐ மாணவன் பரமேஷ்
சுடலைமுத்து உருவாக்கிய ஓர் ஆப்டிகல் இமேஜ்.
நவீன கேமராக்கள் அகச்சிவப்புக் கதிர்களை மட்டுமே
கணிக்கும். ஆனால், லேசர் ஒளியால் உருவாக்கப்பட்ட பிம்பங்களுக்கு வெப்பம் இருக்காது.
அதனால்தான் தெர்மல் கேமராவில் தாத்தாவின் உருவம் வெற்றிடமாகத் தோன்றியது. மைனஸ் 5 டிகிரி
வெப்பநிலை என்பது அந்த பிராஜெக்டர் கருவி வெப்பமடையாமல் இருக்கப் பயன்படுத்தப்பட்ட
லிக்விட் நைட்ரஜன் குளிரூட்டி உருவாக்கிய விளைவு!
மொத்தத்தில் அது ஜனார்த்தனின் பேய் பிடிக்கும்
கிரஷைப் பயன்படுத்திக் கொண்டு பரமேஷ் சுடலைமுத்து விளையாடிய ஒரு ஜாலி விளையாட்டுதான்
அந்தச் சம்பவம்.
இனி விசயத்திற்கு வருவோம்.
தொண்ணூறுகளில் பேய் என்றால் ஒரு கறுப்பு வெள்ளைப்
புகைப்படம், அல்லது மங்கலான ஒரு நிழல் படம். "இதோ பாருங்கள், மரத்தின் பின்னால்
ஏதோ ஆவி தெரிகிறது!" என்று யாராவது ஒரு பிலிம் புகைப்படத்தைக் காட்டுவார்கள்.
மக்கள் பயந்து நடுங்குவார்கள்.
இப்போது காலம் மாறிவிட்டது. பேய் பிடிப்பவர்கள்
இப்போது கையில் வேப்பிலை பிடிப்பதில்லை; கோஸ்ட் ஹண்டிங் கிட் வைத்திருக்கிறார்கள்.
இன்ப்ராரெட் கேமரா, எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டு
சென்சார், எலெக்ட்ரானிக் வாய்ஸ் ரெக்கார்டர் என கையில் ஏந்திக்கொண்டு அவர்கள் நடமாடும்போது,
பார்க்க உண்மையிலேயே நாசா விஞ்ஞானி செவ்வாய் கிரகத்தில் இறங்குவது போல் இருக்கிறது.
அமைதியான அறையில் எலெக்ட்ரானிக் வாய்ஸ் ரெக்கார்டரை
ஆன் செய்துவிட்டு, "இங்கே யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு அமைதியாக
இருப்பார்கள். அப்புறம் ரெக்கார்டிங்கை ரீப்ளே செய்து, பின்னணியில் கேட்கும் லேசான
ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்தைக் கேட்டு, "இதோ பாருங்கள், 'வெளியே போ' என்று ஆவி சொல்கிறது!"
என்பார்கள். நமக்குத்தான் அது பக்கத்து வீட்டு ஏசி கம்ப்ரசரின் சத்தமாகவோ அல்லது பேன்
சத்தமாகவோ தோன்றும்! அவர்களுக்கு அது ஆவியின் குரலாகவே தோன்றும். இது வெறும் தோற்ற
மயக்கம்தான்.
தொழில்நுட்பம் வளர வளர, கேமராக்களின் ரெசல்யூஷன்
கூடிக்கொண்டே போனது. விஜிஏ கேமராவில் தொடங்கி 12 மெகாபிக்சல், 50 மெகாபிக்சல், இப்போது
200 மெகாபிக்சல் வரை வந்துவிட்டோம். ஆச்சரியம் என்னவென்றால், கேமராக்கள் தெளிவடையத்
தெளிவடைய, புகைப்படங்களில் இருந்த பேய்கள் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கி, இறுதியில் மறைந்தே
விட்டன!
முன்பெல்லாம் ஆவி என்று சொல்லப்பட்ட அந்த வெளிச்சப்
புள்ளிகளை விஞ்ஞானிகள் இப்போது சிம்பிளாக தூசு அல்லது கேமரா லென்ஸின் பிரதிபலிப்பு என்கிறார்கள். இருட்டில் ப்ளாஷ் லைட் அடிக்கும்போது
லென்ஸுக்கு மிக அருகில் பறக்கும் குட்டித் தூசு, அவுட் ஆப் போகஸில் பெரிதாக ஒளிரும்.
இந்த இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் ஆவி நம்பிக்கையாளர்கள்,
அது தூசு இல்லை, என் கொள்ளுத் தாத்தாவின் ஆவியேதான் என்று அலறுகிறார்கள்.
இங்கே பிரச்சனை கேமராவில் இல்லை; மனித மூளையில்.
அறிவியலில் இதற்கு பேரிடோலியா என்று பெயர். தெளிவில்லாத வடிவங்களில் நமக்குத் தெரிந்த
உருவங்களைத் தேடும் மூளையின் தந்திரம் இது. நிலவில் பாட்டியைப் பார்ப்பதும், மேகத்தில்
யானையைப் பார்ப்பதும், மங்கலான போட்டோவில் பேயைப் பார்ப்பதும் ஒரே ரகம்தான்.
உண்மையில், பேய்களுக்கு இந்த நவீனக் கேமராக்களைப்
பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஹை டெபனிஷன் கேமராக்கள் வந்தவுடன் அவை அனைத்தும்
அவுட் ஆப் போகஸ் ஆகிவிட்டன.
அறிவியல் எல்லாவற்றையும் விளக்கத் தயாராக இருக்கிறது.
ஆனால், மனிதனுக்கு எப்போதும் கொஞ்சம் மர்மம் தேவைப்படுகிறது. ஏனென்றால், அது வெறும்
தூசு என்று ஒப்புக்கொள்வதை விட, ஆவி என்று நம்புவதில்தான் கொஞ்சம் திரில் இருக்கிறது
அல்லவா!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 04.08.2026
1) தமிழக
பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
2) இந்தியாவில்
உறுப்பு மாற்ற சிகிச்சையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
3) நாடாளுமன்றத்தில்
உச்சநீதிமன்ற நீதிபதிகளை 38 ஆக உயர்த்தும் மசோதா நிறைவேறியது.
4) பீகார்
இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.
5) தமிழகத்தில்
ஆகஸ்ட் 9 வரை மழை வாய்ப்பு உள்ளது.
Education & GK News
1) The Tamil Nadu budget is being presented tomorrow.
2) Tamil Nadu ranks first in India for organ transplant
procedures.
3) A bill to increase the number of Supreme Court judges
to 38 has been passed in Parliament.
4) Prashant Kishor has won the Bihar by-election.
5) There is a possibility of rain in Tamil Nadu until
August 9.
அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் - 41
நானே வருவேன்!
ஜனார்த்தனன் கையில் இருந்த கருவியைப் பார்த்தபோது,
அது பேய் பிடிக்கும் கருவி மாதிரி தெரியவில்லை; செவ்வாய் கிரகத்தில் இறங்கி பாறை மாதிரிகளைச்
சேகரிக்கும் நாசா ரோவர் மாதிரிதான் இருந்தது.
மின்சாரச் சுற்றுகள், எல்.இ.டி திரைகள், இன்ப்ராரெட்
லென்ஸ்கள் என அனைத்தும் மின்னின.
"தம்பி ஜனார்த்தனா! இதையெல்லாம் வெச்சு
நிஜமாவே பேயைப் புடிச்சிரலாமா?" சுப்பையா
தாத்தா தனது வெற்றிலை வாயை அதக்கி விட்டு வினவினார்.
"தாத்தா, இது சாதாரண கேமரா இல்லை. தெர்மல்
இமேஜிங், பக்கா சென்சார், அட்வான்ஸ்டு ரெக்கார்டர் எல்லாம் அடங்கிய கோஸ்ட் ஹன்டிங்
கிட். சயின்டிபிக்கா டீல் பண்ணப்போறோம்!" என்று ஐபோனைத் தூக்கிப் பிடித்தபடி,
அந்தப் பழைய பங்களாவின் நடுஹாலில் நின்றான்.
பக்கத்திலிருந்த மேஜை மீது அந்த அட்வான்ஸ்டு
ரெக்கார்டரை ஆன் செய்துவிட்டு, "இங்கே யாராவது இருக்கீங்களா? இருந்தா பேசுங்க."
என்று ரகசியக் குரலில் கேட்டான்.
சிறிது நேரத்தில் மெல்லிய புஸ்ஸ்ஸ் சத்தம்.
அதை ரெக்கார்டரில் ரீப்ளே செய்து கேட்டபோது, பின்னணியில் மிக மெலிதாக, ம்ம்ம் ம்ம்ம்
என்ற குரல் கேட்டது.
"பார்த்தீங்களா தாத்தா! ரெக்கார்டரில்
வாய்ஸ் ரெக்கார்ட் ஆயிருக்கு! ஆவி பேச ட்ரை பண்ணுது!" ஜனார்த்தனன் எகிறிக் குதித்தான்.
சுப்பையா தாத்தா சிரித்தார். "தம்பி,
அது ஆவி இல்லை. பக்கத்து வீட்டுச் சின்னப்பையன் சளி பிடிச்சு மூக்கை உறிஞ்சுற சத்தம்.
ஜன்னல் வழியா ஆடியோ உள்ளே வந்திருக்கு."
ஜனாத்ர்தனன் சளைக்கவில்லை. "சரி, விஷுவல்
ஆதாரம் தரேன்!" என்று தனது அதிநவீன இன்ப்ராரெட் கேமராவை ஆன் செய்து, இருண்ட மூலையை
நோக்கிப் படம் பிடித்தான்.
காற்றில் ஒரு வெளிச்சப்புள்ளி மிதப்பது திரையில்
தெளிவாகத் தெரிந்தது.
"இதோ பாருங்க! ஆன்மாக்கள் தன் ஆற்றலை
வெளிப்படுத்தும் போது இப்படித்தான் ஒளிரும் கோள வடிவில் தெரியும்!"
தாத்தா பங்களாவின் சுவரில் இருந்த பழைய தூணை
லேசாகத் தட்டினார். காற்றில் மேலும் சில வெளிச்சப் புள்ளிகள் மிதக்கத் தொடங்கின.
"தம்பி, நூறு வருஷத்துப் பங்களா இது.
அப்போல்லாம் கேமரா லென்ஸ் சுமாராக இருந்தப்போ, தூசி மேல பிளாஷ் வெளிச்சம் பட்டு அது
பேய் மாதிரி தெரிஞ்சுது. இப்போ உன் கேமரா இன்ப்ரா ரெட்ங்கறதால, தூசிதான் தெளிவா தெரியுது!
கேமராக்கள் தெளிவடையத் தெளிவடைய, பேய்கள் மறைஞ்சு போயிடும் தம்பி" என்றார் தாத்தா
தத்துவார்த்தமாக.
ஜனார்த்தனன் ஏமாற்றத்துடன் தன் கருவிகளைப்
பைக்குள் பேக் செய்யத் தொடங்கினான். "ச்சே சயின்ஸ் சொல்றதுதான் உண்மை போல. அப்ப
இங்க பேயே இல்லை" என்று அலுத்துக் கொண்டான்.
"ஆமா தம்பி, அறிவியலுக்கு முன்னாடி மூடநம்பிக்கை
நிற்காது." என்றபடி தாத்தா கதவை நோக்கி நடந்தார்.
திடீரென ஜனார்த்தனன் கையில் இருந்த சென்சார்
கருவி பீப் பீப் என உச்சக்கட்ட சத்தத்துடன் அலறத் தொடங்கியது.
ஜனாத்ர்தனன் பதறிப்போய் கேமராவைத் தூக்கித்
தாத்தாவின் திசையை நோக்கினான். தெர்மல் இமேஜிங் திரையில் அறையின் வெப்பநிலை திடீரென
மைனஸ் 5 டிகிரிக்குக் கீழ் சரிந்ததாகக் காட்டியது.
அவன் கேமரா திரையைப் பார்த்தான்.
அங்கே கதவை நோக்கி நடந்து கொண்டிருக்கும் தாத்தாவின்
உடலில் எந்த ஒரு வெப்பக் குறியீடும் இல்லை! கேமரா திரையில் தாத்தா நிற்கும் இடம் வெறும்
வெற்றிடமாக இருந்தது.
ஜனார்த்தனன் தொண்டை வறண்டு போக, "தாத்தா
தாத்தா" என்றான்.
தாத்தா திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தார்.
"தம்பி! கேமரா தெளிவா இருந்தா தூசி தெளிவா
தெரியும்னு சொன்னேன்ல? ஆனா, இந்த மாதிரி டிஜிட்டல் கருவிகள் வர்றதுக்கு முன்னாடியே
அதாவது 1950லயே, இந்தக் பங்களா தீப்பிடிச்சு மெட்ராஸ் கவர்னர் காலத்து சுப்பையா தாத்தா
செத்துப் போயிட்டார்ங்கற ஹிஸ்டரி உனக்குத் தெரியாது போலிருக்கே?"
சொல்லிவிட்டு தாத்தா லேசாகக் காற்றில் மிதக்க,
ஜனார்தனன் தன் ஐபோனையும் பேய் பிடிக்கும் நாசா டைப் கிட் கருவிகளையும் அங்கேயே போட்டுவிட்டு
அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினான்.
இப்போது கேள்வி நேரம்.
பேய்க்கான டிஜிட்டல் கிட் கருவிகள் உண்மையிலேயே பேய்களைக் காட்டுமா?
ஜனார்த்தனன் பார்த்த சுப்பையா தாத்தா உண்மையிலேயே பேயா?
நாளை வரை வெயிட் ப்ளீஸ்!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.08.2026
1) கபினி
அணையிலிருந்து 25000 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் நாளை
தமிழகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2) எம்.பி.பி.எஸ்,
பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3) சூலை
மாதத்தில் இந்தியாவின் ஜி.எஸ்.டி வசூல் 2.11 லட்சம் கோடியாக உள்ளது.
4) நேற்று
ஒரே நாளில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 8 தங்கங்களை வென்று அசத்தியுள்ளது.
5) காமன்வெல்த்
போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Education & GK News
1) 25,000 cubic feet of water is being released into the
Cauvery River from the Kabini Dam; this water is expected to reach Tamil Nadu
tomorrow.
2) Medical counseling for MBBS and BDS courses is
expected to begin on August 13.
3) India's GST collection for the month of July stands
at Rs. 2.11 lakh crore.
4) India put up a spectacular performance by winning
eight gold medals in a single day at the Commonwealth Games yesterday.
5) India has moved up to fourth place in the
Commonwealth Games medal tally.
அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 40
ஆன்மாக்கள் அழைப்பாளர்களா, காப்பாற்றுபவர்களா?
கார்த்திக்
– ரமேஷ் – பிரகாஷ் கதைகளை விஞ்சும் கதைகள் நம் நாட்டை விட வெளிநாடுகளில் அதிகம்.
வில்
பேர்ட் என்ற கனடிய வீரர் சொல்லும் கதை இது. அவர் சொல்கிறார், "போர்க்களத்தில்
நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்த என் அண்ணன்
ஸ்டீவ் ஆவியாக வந்து என் கையைப் பிடித்து இழுத்தான். எழுந்திருடா! என்றான். நான் வெளியே
ஓடி வந்த அடுத்த நிமிடம், நான் தூங்கிய இடத்தை ஒரு குண்டு தரைமட்டமாக்கியது!"
அடடா,
என்ன ஒரு அண்ணன் தம்பி பாசம்! கூகுள் மேப் கூடக் கண்டுபிடிக்க முடியாத ஓர் ஆபத்தை,
பரலோகத்திலிருந்து வந்து எச்சரித்திருக்கிறார் அண்ணன் ஸ்டீவ்.
அதே
நேரத்தில், இன்னொரு பிரிட்டிஷ் வீரரின் கதை இப்படி இருக்கிறது, "அதோ என் அம்மா
நிற்கிறாள். என்னை அழைக்க வந்துவிட்டாள்!" சொல்லி முடித்த அடுத்த விநாடி அவர்
உயிர் பிரிகிறது.
இங்கேதான்
ஒரு பெரிய கேள்வி பிறக்கிறது. பேய்கள் அல்லது ஆவிகள் என்பவை உயிரைக் காக்கும் லைப்
ஜாக்கெட்டா? அல்லது உயிரைக் குடிக்கும் எமதர்மன்களா?
நீங்களே
கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். போர்க்களம் என்பது சாதாரண இடம் அல்ல. அங்கே மரண பயம்,
தூக்கமின்மை, பசி, அட்ரினலின் ரஷ், ரத்த அழுத்தம் என எல்லாமே உச்சத்தில் இருக்கும்.
நமது
மூளை ஒரு பயங்கரமான கம்ப்யூட்டர். மிகக் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும்போது, மூளை
சில சமயம் ஹாலுசினேஷன் எனப்படும் மாயத்தோற்றங்களை உருவாக்கும்.
அப்படியானால்
வில் பேர்டின் விசயத்தில் நடந்து என்ன?
வில்
பேர்டின் ஆழ்மனம் தூக்கத்தில் ஏதோ ஓர் ஆபத்தை அதாவது, குண்டு வரும் சத்தத்தையோ அல்லது
அதிர்வையோ உணர்ந்திருக்கலாம். மூளை உடனடியாக அவரை விழித்தெழச் செய்ய, அவருக்கு மிகவும்
பிடித்த, நம்பிக்கையான அண்ணன் ஸ்டீவின் உருவத்தை ஓர் அலாரம் போலப் பயன்படுத்தியிருக்கலாம்.
அடுத்து
அந்தப் பிரிட்டிஷ் வீரரின் விசயத்தில் என்ன நடந்திருக்கும்?
மரணத்தின்
விளிம்பில், இதயத்தின் இயக்கம் குறையும்போது, மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.
அந்த நேரத்தில் அமைதியைத் தேடும் மனம், உலகிலேயே பாதுகாப்பான இடமான அம்மாவின் நினைவை
வரைந்து காட்டுகிறது.
மனித
மனம் ரொம்பவே சுவாரசியமானது. நமக்கு அசாதாரணமான ஒரு விஷயம் நடக்கும்போது, அதற்கு ஓர்
அற்புதச் சாயம் பூசவே நாம் விரும்புவோம்.
"என்
ஆழ்மனதின் அதிர்வு எச்சரித்தது" என்று சொல்வதை விட, "என் இறந்த அண்ணன் வந்து
காப்பாற்றினான்" என்று சொல்வதில் ஒரு கவித்துவமும், ஆறுதலும் இருக்கிறது அல்லவா?
அதேபோல,
"என் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மயக்கமடைந்தேன்" என்பதை விட, "அம்மா கூப்பிட
வந்துட்டா" என்று சொல்வது மரணத்தின் பயத்தைக் குறைக்கிறது.
ஆவிகள்
உண்மையிலேயே வந்து காப்பாற்றுகின்றனவா அல்லது எமனாக மாறுகின்றனவா?
உண்மையில்,
அங்கே வருவது அண்ணனோ, அம்மாவோ அல்ல. நமது சொந்த மூளைதான்! ஆபத்து காலத்தில் அது நம்மை
ஓட வைக்கும் தேவதையாகவும் மாறுகிறது; மரணத்தின் தருணத்தில் வலியைக் குறைக்க அமைதியைத்
தரும் அன்னையாகவும் மாறுகிறது.
இயற்கையின்
இந்த கெமிஸ்ட்ரி மாயாஜாலம், எந்தப் பேய்க் கதையை விடவும் சுவாரசியமானதுதானே?
இப்போது
கார்த்திக் – ரமேஷ் – பிரகாஷ் கதையில் என்ன நடந்திருக்கும்?
அதைச்
சரியாகக் கமென்ட் பாக்ஸில் சொல்பவர்களுக்கு, அமானுஷ்யங்களின் அட்ரஸ் புத்தகமாக வெளியாகும்
போது அதன் முதல் பிரதி பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****