Monday, 29 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.06.2026

1) மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டக் குழுவை அமைத்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2) குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

3) தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

4) தவறு செய்வது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

5) யமுனை நதிநீர் பகிர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹரியானா, ராஜாஸ்தான் மாநில அரசுகள் கையெழுத்திட்டன.

Education & GK News

1) The Tamil Nadu government has issued a Government Order (G.O.) constituting a new school curriculum committee headed by Mayilsamy Annadurai.

2) TNPSC has released the results of the Group 2 and 2A Main Examinations.

3) Online application registration for MBBS and BDS courses has commenced in Tamil Nadu.

4) Chief Minister C. Joseph Vijay has ordered government officials to take impartial action against anyone found at fault.

5) The state governments of Haryana and Rajasthan have signed a Memorandum of Understanding (MoU) regarding the sharing of Yamuna river water.

பேயின் பிரஸ்மீட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 6

பேயின் பிரஸ்மீட்!

இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்பாக ஆவிகளை வைத்து ஒரு டிராமாவே ப்ளே பண்ணியிருக்கிறார்கள். அதன் அட்ரஸ் எதுவென்றால் அதுதான், கிமு 472 இன் ஏதென்ஸ் நகரம்.

அன்று அவர்களுக்கு நெட்பிளிக்ஸோ, அமேசான் பிரைமோ கிடையாது. நாடக மேடைகள் மட்டும்தான் ஒரே ஓடிடி. கிரேட்டர் டைனீஷியா திருவிழாவில் ஏதென்ஸ் நகரமே திரண்டிருக்கிறது. அங்கேதான் ஏஸ்கிலஸ் என்கிற அன்றைய த்ரில்லர் மன்னன், தன் புதிய ஸ்கிரிப்ட்டை அரங்கேற்றுகிறான். நாடகத்தின் பெயர் தி பெர்சியன்ஸ்.

இதை ஒரு பொலிட்டிக்கல் சைக்காலஜிக்கல் பிக்‌ஷன் எனலாம். காரணம், நாடகம் நடக்கும்போது பெர்சியா நிஜமாகவே ஏதென்ஸின் பரம்பரை எதிரி நாடாக உயிரோடு இருந்தது. ஏஸ்கிலஸ் செம தில்லுக்காரன். எதிரி நாட்டின் கதையை, தன் நாட்டு ரசிகர்களுக்கு முன்னால் லைவ் ஆகப் போட்டுக் காட்டுகிறான்.

கதை என்னவென்றால், ஒரு பேயின் பிரஸ் மீட் என ஒன்லைனில் கூறி விடலாம்!

இதே அந்த நாடகம் தொடங்குகிறது.

நாடகத்தின் ஓப்பனிங்கே அதிரடி. பெர்சியாவின் சூப்பர் ஸ்டார் மன்னன் டேரியஸ் இறந்துவிட்டான். இப்போது அவன் மகன் செர்க்ஸஸ் அரியணையில். அவனுக்கு நம்மதான் உலக மகா டான் என்கிற மிதப்பு. ஏதென்ஸ் மீது படை எடுத்துப் போகிறான். விளைவு? சலாமிஸ் கடற்போரில் செர்க்ஸஸின் படைகளை ஏதென்ஸ் துவம்சம் செய்கிறது. செர்க்ஸஸ் தன் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வருகிறான்.

பெர்சியத் தலைநகரில் இருக்கும் அவனது அம்மா ராணி அட்டாஸாவுக்கும், அமைச்சர்களுக்கும் பிபி எகிறுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல், மறைந்த மன்னன் டேரியஸின் கல்லறைக்கு முன்னால் கூடுகிறார்கள். அமானுஷ்ய மந்திரங்களை ஓதி, ஒரு ஸ்பிரிச்சுவல் ஹாட்லைன் மூலமாக டேரியஸின் ஆவியை நெட்வொர்க்கில் பிடிக்கிறார்கள்.

நம் ஊர் பேய் படங்கள் போல கரும்புகை, அகோரப் பற்கள், ரத்தக் கறை எல்லாம் இல்லாமல், டேரியஸின் ஆவி செம கிளாஸாக, மேடையில் அப்பியர் ஆனது.

இது அன்றைய மெக்கானிக்கல் ஸ்பெஷல் எபெக்ட்ஸ். மேடைக்கு அடியில் ஒரு ரகசியக் கதவு வைத்து, அதன் வழியே ஆவி நடிகரை மேலே தூக்கினார்கள் என்பதுதான் அந்த டிராமா டெக்னிக்.

ராணியும் அமைச்சர்களும் பயந்து நடுங்க, டேரியஸ்ஸின் ஆவி மைக்கைப் பிடித்தது (அப்போது மைக்கெல்லாம் இல்லை) அதாவது பேசத் தொடங்கியது.

"ஏன் இப்படி அலறுறீங்க? விஷயத்தை சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு அண்டர்வேர்ல்ட்ல அதாவது, பாதாள உலகத்துல ஓவர்டைம் டியூட்டி இருக்கு. சீக்கிரம் போகணும்!"  இதுதான் அந்த ஆவியின் கன்னிப் பேச்சு.

விசயத்தைச் சொன்னார்கள்.

விஷயத்தைக் கேட்டதும் டேரியஸ் ஆவிக்கு பயங்கரக் கோபம். தன் மகனின் முட்டாள்தனங்களை பாயிண்ட் பாயிண்ட்டாகப் பட்டியலிட்டது.

"நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த எம்பயரைக் கட்டினேன்? என் மகன் ஒரு இடியட். ஹெலஸ்பாண்ட் கடலில் பாலம் கட்டி இயற்கையையே கட்டுப்படுத்த நினைச்சான். அவன் வெறும் மனுஷன், ஆனா கடவுளுக்குச் சமமா ஆடப் பார்த்தான். இதுக்கு பேர்தான் அசாத்தியமான ஆணவம்!" என்று டேரியஸ் மேடையிலேயே செர்க்ஸஸை கிழித்துக் தொங்கவிட்டது.

சுருக்கமாகச் சொன்னால், அது ஒரு லைவ்-டெலிகாஸ்ட் ஃபேமிலி பஞ்சாயத்து. திட்டித் தீர்த்துவிட்டு ஆவி மீண்டும் அண்டர் கிரவுண்டுக்குள் எஸ்கேப் ஆனது.

இதை அப்போதுள்ள மக்கள் நம்பினார்களா என்றால் நம்பினார்கள்.

வெறும் தத்துவம் பேசினா எவனும் கேட்க மாட்டான். எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், ஆணவம் தலைக்கேறினால் அழிவு நிச்சயம்ங்கிற மெசேஜை, ஒரு டெட் கிங் வந்து சொன்னாத்தான் மைண்ட்ல ஸ்ட்ராங்கா பதியும்னு பிளான் பண்ணான் அந்த மன்னன். அன்றைய த்ரில்லர் டெக்னிக் அது!

2400 வருடங்களுக்கு முன்பே, ஒரு கிரேக்க மேடையில் ஆவி தோன்றி, தன் குடும்பத்தை ரோஸ்டிங் செய்து, ஆணவத்தின் விளைவை விளக்கியது ஒரு மாஸ்டர்பீஸ் அமானுஷ்யம்!

இப்படி டேரியஸ் ஆவியை வைத்து ஏஸ்கிலஸ் ஒரு பிளே பண்ணியிருந்தாலும், டேரியஸ் ஆட்சிக்கு வந்த்தே ஆவியைக் கண்டுபிடித்ததன் மூலமாகத்தான். அது என்ன கதை என்கிறீர்களா? இது கதையல்ல. வரலாறு. அதற்குக் கொஞ்சம் நாளை வரை காத்திருங்கள்.

- அட்ரஸைத் தேடுவோம்.

*****

Sunday, 28 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.06.2026

1) பருவநிலை மாற்றத்தால் தெற்குலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2) முதியோர் இல்லங்கள் பெருகுவது கவலைக்குரியது எனத் தமிழக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் தெரிவித்துள்ளார்.

3) நேற்று நாடு தழுவிய அளவில் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தமிழகத்தில் 52 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

4) அரசு மரியாதையுடன் மறைந்த இயக்குநர் கே. பாக்கியராஜின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

5) அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் ஈரான் அமெரிக்க இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.

Education & GK News

1) Prime Minister Narendra Modi has stated that nations of the Global South have been severely affected by climate change.

2) Tamil Nadu Governor R.V.Arlekar has expressed concern over the proliferation of old-age homes.

3) Polio drops were given to children across the country yesterday; in Tamil Nadu, more than 5.2 million children received the vaccine.

4) The mortal remains of the late director K. Bhagyaraj were laid to rest yesterday with state honors.

5) Hostilities have resumed between Iran and the United States, despite a peace agreement having been reached.

ஆவிகளுக்குக் கன்சல்டிங் ஆபீஸ் நடத்திய கிரேக்கர்கள்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 5

ஆவிகளுக்குக் கன்சல்டிங் ஆபீஸ் நடத்திய கிரேக்கர்கள்

இன்றைக்குச் சுமார் 2800 வருஷங்களுக்கு முன்னால். அதாவது கிமு எட்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் ஹோமர் என்றொரு கண் தெரியாத கவிஞர் வாழ்ந்து வந்தார்.

திடீரென ஹோமரை அட்ரஸ் தேடி விசாரிக்கக் காரணம், அமானுஷ்யங்களுக்கு அவரும் ஓர் அட்ரஸ் தருகிறார்.

அவர் எழுதிய இரண்டு மெகா சீரியல் காவியங்கள்தான் இலியட் மற்றும் ஒடிஸி. இன்றைக்கு நாம் பார்க்கும் கேம் ஆப் த்ரோன்ஸ் கதைகளுக்கெல்லாம் தாத்தா இது. அந்த வகையில் ஹோமர் தான் உலகின் முதல் பெஸ்ட் செல்லிங் த்ரில்லர் எழுத்தாளர்!

அவருடைய கதைகளில் வரும் பேய்கள், நம் ஊர் ரத்தக் காட்டேரிகள் போல மரத்தில் தலைகீழாகத் தொங்குபவை அல்ல. அவை மிகவும் விசித்திரமானவை.

ஹோமரின் உலகத்தில் மனிதன் இறந்துவிட்டால் நேராக ஹேடிஸ் எனப்படும் பாதாள உலகத்திற்குப் போய்விடுவான். அங்கே போனவர்கள் எல்லாரும் வெறும் நிழல் உருவங்கள் ஆகி விடுவார்கள்.

அவர்களுக்கு உருவம் இருக்கும், ஆனால் எடை இருக்காது. தொட நினைத்தால் காற்று போலக் கலைந்துவிடுவார்கள். எல்லாவற்றையும் விடக் கொடுமை, அவர்களுக்குப் பழைய நினைவுகள் எதுவுமே இருக்காது. ஒரு வகையான மெமரி வைப் செய்யப்பட்ட ரோபோக்கள் போல அலைந்து கொண்டிருப்பார்கள்.

இந்த ஆவிகள் எப்படி நடமாடும் தெரியுமா?

ஹோமர் ஒரு சூப்பர் கற்பனையைச் சொல்கிறார். அவை சாதாரணமாகப் பேசாது. குகைக்குள் கூட்டமாக இருக்கும் வௌவால்கள் எப்படி கீச் கீச் என்று சத்தமிடுமோ, அப்படித்தான் இந்த ஆவிகளும் சத்தமிடுமாம்!

சரி, இந்த வௌவால் பேய்களிடம் எப்படிப் பேசுவது?

அதற்கு ஹோமர் ஒரு பயோ கெமிக்கல் ஐடியா வைத்திருந்தார்.

ஒடிஸி கதையின் ஹீரோவான ஒடிஸியஸ், தன் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள பாதாள உலகத்திற்குப் போவான்.

அங்கே இருக்கும் ஆவிகளிடம் அவன் எப்படிப் பேசுவான் தெரியுமா?

இப்படியெல்லாம் இடையில் கேள்வி கேட்காமல் பதில் சொல் என்கிறீர்களா?

ஒரு சிறிய குழி தோண்டி, அதில் ஆடு மாடுகளைப் பலியிடுவான். ரத்தம் குழியில் தேங்கியதும், பேய்கள் கூட்டம் கூட்டமாக வௌவால்கள் போலக் கத்திக்கொண்டே ஓடி வரும். அந்த ரத்தத்தை ஒரு சொட்டு குடித்த உடனே, ஆவிகளின் மெமரி கார்டு வேலை செய்யத் தொடங்கும்! தங்களின் பழைய நினைவுகள் திரும்பி, மனிதக் குரலில் பேச ஆரம்பிக்கும்.

அதாவது, ரத்தம் என்பது அந்தப் பேய்களுக்கான ஒரு ரீசார்ஜ் கூப்பன் போலச் செயல்பட்டது. ரத்தம் குடித்தால் தான் பேச முடியும், இல்லையென்றால் மீண்டும் வௌவால் மோட் தான்!

இரத்தம் குடிச்ச உடனே பேய்க்கு மெமரி வருமா? இது என்ன விஜயராமா இப்படிப் பொளந்து கட்டுகிறாய் என்கிறீர்களா?

விசயம் இருக்கிறது.

அன்றைய மனிதனுக்கு உயிர் என்பது ரத்தத்தில் தான் இருக்கிறது என்று ஓர் எண்ணம் இருந்தது. உடலில் இருந்து ரத்தம் வெளியேறினால் மனிதன் இறந்து விடுவான் இல்லையா? அப்படியானால், இறந்த ஆவிகளுக்குக் கொஞ்சம் ரத்தத்தைக் கொடுத்தால், தற்காலிகமாக உயிர் பெற்றுப் பேசும் என்று நம்பினார் ஹோமர். அதுதான் விசயம்.

இன்றைக்கு நாம் த்ரில்லர் படங்களில் பார்க்கும் வாம்பயர் கதைகளுக்கு வித்திட்டதே 2800 வருடங்களுக்கு முன்பு ஹோமர் எழுதிய இந்த இரத்த நுகரும் வௌவால் பேய்கள்தான்.

தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்திலேயே, மனித மூளை எவ்வளவு பிரமாதமாகத் த்ரில்லர் காட்சிகளைக் கிராபிக்ஸ் செய்து பார்த்திருக்கிறது பார்த்தீர்களா?

கிரேக்கத்தைப் பார்க்க வந்து அவர்களில் ஒருவரான ஹோமரைப் பிடித்து அமானுஷ்யத்திற்கு அட்ரஸ் கேட்டுக் கொண்டிருந்த நமக்குக் கிரேக்கர்களின் அமானுஷ்ய அட்ரஸ்கள் இன்னும் வேண்டுமென்றால் அவைதான் இவை.

கிரேக்கர்களுக்குப் பேய்கள் மேல் எவ்வளவு பயம் இருந்ததோ, அவ்வளவு நக்கலும் இருந்தது. திடீரென்று வீட்டில் அமானுஷ்ய நடமாட்டம் தெரிந்தால், அவர்கள் பேய்களை ஓட்டப் பயன்படுத்திய ஒரு வழிமுறை என்ன தெரியுமா?

சத்தமாகச் சிரிப்பது மற்றும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது!

பேய்கள் என்பவை மிகவும் சீரியஸான, ஈகோ பிடித்த கேரக்டர்கள் என்பதால், நாம் சத்தமாகச் சிரித்தாலோ அல்லது அசிங்கமாகத் திட்டினாலோ, "இவன் நமக்கு மரியாதை தரமாட்டான்" என்று அபசெட் ஆகி ஓடிவிடுமாம்! என்ன ஒரு கிரேக்க ஐடியா பாருங்கள்.

யாருக்காவது பேய் பிடித்திருந்தால் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகிறதா என்று செக் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இந்நேரம் உங்களுக்கு வந்து விட்டதுதானே?

உலகெங்கும் இப்படி ஆவி மேட்டர்கள் எல்லாம் உட்டாலக்கடி காமெடிகளாத்தான் இருக்கின்றன. அதனால்தான் தமிழ் சினிமாக்கள் பேய்களை வைத்தும் காமெடிப் படங்களாகச் சுட்டுத் தள்ளுகின்றன போலும்.

அப்புறம், எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று கேட்க அன்று கிரீஸில் ஒரு அமானுஷ்ய ஆபீஸே இருந்தது. அதன் பெயர் நெக்ரோமண்டியோ அதாவது மரணத்தின் கோவில்.

அங்கே போனால், உங்களை உடனே பேய்களிடம் கூட்டிப் போக மாட்டார்கள். முதலில் ஓர் இருட்டறையில் அடைப்பார்கள். சில குறிப்பிட்ட மூலிகைகளையும், பன்றி இறைச்சியையும் சாப்பிடக் கொடுப்பார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு சுரங்கப் பாதை வழியாக உங்களை நிலவறைக்குக் கூட்டிப் போவார்கள். அங்கே அடர்ந்த புகைக்கு நடுவே, இறந்த உங்களின் உறவினர்களின் ஆவிகள் காற்றில் மிதந்து வந்து உங்களிடம் பேசும்!

நிஜமாகவா என்கிறீர்களா?

விசயம் இதுதான். அந்தக் கோவிலின் நிலவறையில் பிரம்மாண்டமான இரும்பு கியர்களும், கப்பி அமைப்புகளும் இருந்தன. ஆவிகள் என்று நம்பப்பட்டவை, உண்மையில் பூசாரிகள் மேலே இருந்து கயிறுகள் மூலம் இறக்கிய மரப்பொம்மைகள்! அன்றைய அமானுஷ்யத்தின் பின்னால் இருந்த பியூர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அது. இப்படியெல்லாம் ஆவிகள் என்று காதில் பூ சுத்த இன்ஜினியரிங் மேட்டர்களைப் பயன்படுத்தியதுதான் கிரேக்கம்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 27 June 2026

ஆவிகளின் அரசாங்கம்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 4

ஆவிகளின் அரசாங்கம்

மெசபடோமியா, எகிப்து என்று பார்த்துக் கொண்டே வந்தால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனி அமானுஷ்ய வரலாறே இருக்கிறது. சீனாவை எடுத்துக் கொண்டால் அங்கு ஆவிகளுக்குத் தலபுராணமே இருக்கிறது.

இன்றைக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிமு 1400 வாக்கில் சீனாவில், ஷாங் வம்சத்து அரசர்களுக்குப் மரணம் என்பது ஒரு புல் ஸ்டாப் கிடையாது. அது வெறும் ஒரு டிரான்ஸ்பர்.

ஒருவர் இறந்துவிட்டால் அவர் நேராக குய் எனப்படும் ஆவியாக மாறிவிடுவார். இதுதான் சீனர்களின் அன்றைய நம்பிக்கை. இந்த ஆவிகளுக்கு ஏகப்பட்ட பசி, தாகம், மற்றும் ஈகோ இருக்கும். அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியது பூமியில் இருக்கும் வாரிசுகளின் கடமை.

அப்படியே விட்டுவிட்டால்? அவ்வளவுதான்.

ஆபீஸ் மேனேஜர் கோபித்துக் கொண்டால் இன்க்ரிமென்ட்டை கட் செய்வது போல, இந்த மூதாதையர் பேய்கள் கோபித்துக் கொண்டால் வறட்சி, பஞ்சம், தலைவலி, காய்ச்சல் என்று குடும்பத்தையே காலி செய்துவிடுவார்கள்.

"இன்றைக்குப் போருக்குப் போகலாமா வேண்டாமா?"

"ராணிக்கு ஆண் குழந்தை பிறக்குமா?"

"நாளைக்கு மழை பெய்யுமா?" என இப்படி எந்தக் கேள்வி இருந்தாலும், அதை நேரடியாக அன்று ஆவிகளிடம் இமெயில் அனுப்பிக் கேட்க முடியாதுஎன்பதால் சீனர்கள் ஒரு விசித்திரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள்.

அதன்படி ஆமை ஓடுகளையோ அல்லது மாடுகளின் தோள்பட்டை எலும்புகளையோ எடுத்துக் கொள்வார்கள். அதில் தங்களின் கேள்விகளைச் செதுக்குவார்கள். பிறகு, ஒரு பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியை அந்த எலும்பின் மீது வைப்பார்கள்.

வெப்பம் தாங்காமல் அந்த எலும்பு டக் என்று வெடித்துப் பிளக்கும். அந்தப் பிளவுகளின் வடிவத்தை வைத்து, "ஆவிகள் 'ஓகே' சொல்லிவிட்டன" என்றோ "இல்லை, கோபமாக இருக்கின்றன" என்றோ ஜோசியர்கள் டீகோட் செய்வார்கள்.

ஷாங் வம்சத்து மக்கள் தங்களின் மூதாதையர் பேய்களை எப்போதும் வெல்வெட் கைகளில் கையாண்டார்கள். பேய்களுக்குப் பசித்தால் ஆபத்து என்பதால், வெண்கலப் பாத்திரங்களில் பிரமாதமான உணவு, ஒயின் போன்றவற்றை நிரப்பிப் படைத்தார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், அது பேய்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வகையான அன்பான லஞ்சம். நீங்கள் எவ்வளவு ராயலாகப் படைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு பேய்கள் உங்களைக் காப்பாற்றும் என்ற விசித்திரமான லாஜிக் அது.

அறிவியல் வளராத அந்தக் காலத்தில், தற்செயலாக நடக்கும் நல்லவற்றுக்கும் கெட்டவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் தேட மனித மூளை ஆசைப்பட்டது. சீனர்கள் அதற்கு ஆவிகள் என்று பெயரிட்டார்கள்.

இன்றைக்கு நாம் கம்ப்யூட்டர் க்ராஷ் ஆனாலோ, மொபைல் சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ கஸ்டமர் கேரைத் திட்டி மெயில் அனுப்புகிறோம் அல்லவா?

அன்று ஷாங் வம்சத்துச் சீனன், தனக்குக் காய்ச்சல் வந்தால் "என் தாத்தாவின் ஆவிக்கு ஏதோ கோபம்" என்று ஆமை ஓட்டைத் தீயில் காட்டிப் பதில் தேடிக் கொண்டிருந்தான்.

தொழில்நுட்பம்தான் மாறியிருக்கிறது. மனிதனின் பயமும், யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் அப்படியேதான் இருக்கிறது!

சீனாவின் விசயத்தை இத்தோடு முடித்து விடுவதற்கில்லை. அதற்கு முன்பே சுமார் 4200 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அமானுஷ்ய புராண வரலாறும் சீனாவுக்கு இருக்கிறது.

அது கிமு 2200. அங்கே கூகுள் மேப்ஸ் கிடையாது. வெதர் அப்ளிகேஷன் கிடையாது. ‘நாளை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’ என்று சொல்ல வானிலை மையம் கிடையாது. ஆனால், சீனா முழுக்க ஒரே ஒரு நதி. அதுதான் மஞ்சள் நதி.

இன்றைக்கு சென்னை மழையற்கே நாம் அலறுகிறோமே, அன்று அந்த மஞ்சள் ஆறு நினைத்தால் ஒரு நாடே காலி. திடீரென்று உடைந்த அணையாய் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும். மக்கள் மரங்களின் மீதும் மலைகளின் மீதும் ஏறி நின்று, "ஆவிகளே, எங்களைக் காப்பாற்றுங்கள்!" என்று கதறிக் கொண்டிருந்த காலம் அது.

அப்போதுதான் மக்களைக் காப்பாற்ற ஒரு மனிதர் என்ட்ரி ஆகிறார். ஆவர்தான் யூ. ஆங்கிலத்தில் you என்று சொல்லும் யூ அல்ல, பெயரே ‘யூ’தான்.

யூ சாதாரண ஆள் இல்லை. இன்றைய ஐ.ஐ.டி சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் செய்யத் தயங்கும் ஒரு மெகா ப்ராஜெக்ட்டை அவர் கையில் எடுத்தார். அதுதான் மஞ்சள் ஆற்றின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது.

அதற்கு முன்னால் அவர் அப்பா குன் இதே ப்ராஜெக்ட்டை கையில் எடுத்து பெயிலியர் ஆகி, தேவர்களிடம் மரண தண்டனை வாங்கியிருந்தார்.

அப்பாவிடம் இல்லாத ஒரு விசேஷ டெக்னாலஜி யூவிடம் இருந்தது. அதுதான் அமானுஷ்யக் கூட்டணி!

யூ நேராகப் போனார். ஆற்றின் அடியில் இருந்த ஆவிகளுடனும், அசுரர்களுடனும் டீல் பேசினார்.

டீல் ஒர்க் அவுட் ஆக, ஒரு பெரிய மஞ்சள் டிராகன் தன் வாலால் தரையைக் கீறிக்கொண்டே போனது. அதுதான் யூவுக்கு ரூட் மேப்.

டிராகனுக்குப் பின்னால் ஒரு பெரிய கருப்பு ஆமை தன் முதுகில் அமானுஷ்ய சக்தியுள்ள மண்ணைச் சுமந்து கொண்டு வந்தது. எங்கே தண்ணீர் அதிகமாக இருக்கிறதோ, அங்கே அந்த மண்ணைப் போட்டால், அது ஸ்பாஞ்ச் போலத் தண்ணீரை உறிஞ்சி, தானாகவே வளர்ந்து பெரிய மலையாக மாறியது!

யூ என்ன செய்தார் தெரியுமா?

தண்ணீரைத் தடுத்து நிறுத்தாமல், அந்த அமானுஷ்ய ஆற்றின் ஆவிகளின் உதவியோடு மலைகளைத் துளைத்து கடலுக்குப் புதிய பாதைகளை அமைத்தார்.

இந்த அமானுஷ்யப் பணியில் யூ எவ்வளவு மும்முரமாக இருந்தார் என்றால், 13 வருடங்கள் தன் வீட்டின் வாசலைக் கடந்து போனாராம். உள்ளே மனைவியும் குழந்தையும் இருந்தும், தன் கடமையிலிருந்து விலகவில்லை.

ஒருவேளை வீட்டுக்குள் போனால் ஆவிகளின் சாபம் வேலை செய்யாமல் போய்விடுமோ என்ற பயம் அவருக்குள் இருந்திருக்கலாம்.

ஆமை மண் சுமப்பதாவது, டிராகன் வழி காட்டுவதாவது? இதெல்லாம் சயின்ஸா? என்ன விஜயராமன் இதெல்லாம்? சும்மா இப்படி கதை விடுகிறாய்? என்று நீங்கள் கேட்கலாம்.

அன்று மனிதனுக்குப் பெரிய தொழில்நுட்பம் கிடையாது. ஆனால், மஞ்சள் ஆற்றின் வெள்ளத்தைத் திசைதிருப்பிய யூ என்பவன் ஒரு பிரமாதமான இன்ஜினியர் என்பது நிஜம்.

ஒரு சாதாரண மனிதனால் இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய முடியாது என்று அன்றைய மக்கள் நினைத்தார்கள். எனவேதான், அவனுக்குப் பின்னால் ஒரு டிராகனையும், ஒரு மந்திர ஆமையையும் கிராபிக்ஸ் கார்டு போலச் சொருகி, அதை ஒரு அமானுஷ்யக் காவியமாக மாற்றிவிட்டார்கள்!

சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் அசாத்தியமான உழைப்புக்கு அன்று அவர்கள் கொடுத்த சூப்பர் நேச்சுரல் கலரிங்தான் இந்தச் சீனக் கதைகள்! இப்போது உங்களுக்கு ஓ.கே.தானே? அப்புறம், இன்னும் தேட வேண்டிய அட்ரஸ்கள் நிறைய இருக்கின்றன.

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

Friday, 26 June 2026

மம்மிக்களைத் தோண்டினால் மரணம் நிச்சயமா?

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 3

மம்மிக்களைத் தோண்டினால் மரணம் நிச்சயமா?

எகிப்தியர்களைப் பொறுத்தவரை சாவு என்பது ஒரு லாங் டிராவல். உடல் கெடாமல் இருக்க மம்மி ஆக்க வேண்டும், கல்லறைக்குள் தங்கம், பொருள் எல்லாம் வைக்க வேண்டும்.

இதிலாவது அவர்கள் அமைதியாக இருந்தார்களா?

இல்லை.

அவர்களின் நம்பிக்கையின்படி, யாராவது கல்லறையைத் தோண்டினாலோ அல்லது வாரிசுகள் திதி கொடுக்கக் காசு கஞ்சத்தனம் பண்ணினாலோ, ஆத்மா நேராக பூமிக்கு வந்து விசிட் அடிக்கும்.

ஒரு கணவன் தன் இறந்த மனைவிக்கு ஒரு லெட்டர் எழுதி அவளது கல்லறையிலேயே வைத்தானாம், "உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? ஏன் என் உடம்பை இப்படிப் படுத்துகிறாய்?"  - ஆவியுடன் ஒரு நேரடி முதல் கடிதப் போக்குவரத்து இதுதான்.

எகிப்தியர்கள் ஏன் உடம்பைக் கெடாமல் பாதுகாத்தார்கள்? அவர்களுக்குப் பேய் ஆவதில் ஆசையா? இல்லை.

அவர்களுடைய தியரிப்படி மனிதனுக்கு இரண்டு ஆன்மாக்கள் உண்டு. ஒன்று 'கா', இன்னொன்று 'பா'. மனிதன் இறந்த பிறகு இந்த ஆன்மாக்கள் பிரபஞ்சத்தைச் சுற்றிவிட்டு மீண்டும் சொந்த உடம்பிற்குள் வந்து புகுந்துகொள்ளும். அப்படி வரும்போது பாடி டேமேஜ் ஆகி அழுகிப் போயிருந்தால் ஆன்மாவுக்குக் கோபம் வந்துவிடும். பிறகு அது அலைந்து திரியும்.

இதான் பின்னாட்களில் மம்மி பேய் கதைகளாக உருமாறியது. எகிப்தியர்கள் உடலைத் தைத்த விதம் ஒரு அட்வான்ஸ்டு சர்ஜரி.

முதலில் மூக்கு வழியாக ஒரு கொக்கியை விட்டு மூளையை வெளியே இழுத்துவிடுவார்கள். ஏனெனில் மூளைதான் முதலில் அழுகும்.

பிறகு கல்லீரல், நுரையீரல், குடல் போன்ற உள்ளுறுப்புகளைத் தனியாக எடுத்து கனோபிக் ஜாடிகளில் வைப்பார்கள்.

இதயத்தை மட்டும் உடம்பிற்குள்ளேயே விட்டுவிடுவார்கள். ஏன் தெரியுமா? அனுபிஸ் என்ற எகிப்திய கடவுள், மறுஉலகில் மனிதனின் இதயத்தை ஒரு பறவையின் இறகோடு வைத்து எடை பார்ப்பாராம். பாவம் அதிகமாக இருந்தால் இதயம் கனக்குமாம். நல்ல கற்பனைதான் இல்லையா?!

பிறகு நேட்ரான் என்ற உப்புக்கலவையில் உடலை நாற்பது நாட்கள் ஊறவைத்து, மல்லிகை, லாவண்டர் எண்ணெய் தடவி, கிலோமீட்டர் கணக்கான லினன் துணியால் சுற்றுவார்கள். அவ்வளவுதான், நூடுல்ஸ் ரெடி என்று மம்மிக்கள் சொல்வது போல, இப்போது மம்மிக்கள் நிஜமாகவே ரெடி.

உண்மையில் எகிப்தியர்கள் மம்மிகளைப் பேய்களாகப் பார்க்கவில்லை. அவை மதிக்கப்பட வேண்டிய முன்னோர்கள் என்றே பார்த்தார்கள்.

பிறகெப்படி மம்மிக்கள் குறித்த பேய்க்கதைகள் உருவாகின என்கிறீர்களா?

மம்மி பேய்க்கதைகளுக்கு மிக முக்கியமான ஸ்டார்ட்டிங் பாயிண்ட் ஹோவர்ட் கார்ட்டர் என்பவர்தான். அவர்தான் 1922 இல் இவர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.

அந்தக் கல்லறை வாசலில் ஒரு எகிப்திய வாசகம் எழுதப்பட்டிருந்தது: "பாரோவின் தூக்கத்தைக் கெடுப்பவன் எவனோ, அவனுக்கு மரணம் தன் சிறகுகளால் தீர்ப்பளிக்கும்."

ஜஸ்ட் ஒரு எச்சரிக்கை போர்டுதான். நாமெல்லாம் 'இங்கே வண்டி நிறுத்தாதே' என்று போர்டு வைப்பதில்லையா, அதுபோல.

ஆனால், அடுத்த சில மாதங்களில் அந்தக் கண்டுபிடிப்போடு சம்பந்தப்பட்ட லார்ட் கார்னர்வான் ஒரு கொசு கடித்து, அது இன்ஃபெக்ஷன் ஆகி இறந்துபோனார். அடுத்தடுத்து அந்த டீமில் இருந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்தார்கள். ஆனால் ஹோவர்ட் கார்ட்டர் இறக்கவில்லை என்பது வேறு விசயம்.

உடனே மீடியாக்கள் கிளம்பின. "சாபம்! மம்மியின் சாபம்!" என்று பேப்பர்களை விற்றார்கள்.

இது மம்மிக்களின் பேய்த்தனமான வேலையா?

அதெல்லாம் எதுவும் இல்லை.

மூவாயிரம் வருஷமாக மூடி வைக்கப்பட்ட ஒரு ஏர் டைட் அறைக்குள் சூரிய வெளிச்சமே பட்டிருக்காது இல்லையா!

அங்கே அஸ்பெர்கிலஸ் நைகர் போன்ற ஆபத்தான பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் மியூட்டேஷன் ஆகி, ஒரு பயோ வெப்பன் போலக் காத்திருந்தது.

கதவைத் திறந்தவுடன் அதைச் சுவாசித்தவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள்.

அப்படியானால் ஹோவார்ட் கார்ட்டர் எப்படித் தப்பித்தார்?

அவர் சில நாட்கள் மட்டும் எகிப்துக்கு வந்துவிட்டுப் போனவர் அல்ல; பல வருடங்கள் எகிப்தியப் பாலைவன தட்பவெப்பநிலையிலேயே வாழ்ந்ததால், அவரது நோய் எதிர்ப்புச் சக்தி அந்தச் சூழலுக்குப் பழகியிருந்தது.

அவர் மற்றவர்களைப் போல அவசரப்படவில்லை. அவர் ஒரு தேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர். அந்தப் பெட்டகத்தைத் திறந்தவுடனேயே உள்ளே இருக்கும் பழமையான காற்றைச் சுவாசிப்பது ஆபத்து என்பதை உணர்ந்து, முறையான காற்றோட்ட வசதிகளைச் செய்த பிறகே உள்ளே முழுமையாக வேலை செய்ய ஆரம்பித்தார்.

அவசரப்பட்டவர்களும், திடீர் விசிட்டில் கண்டுபிடிப்பாளர்களாக ஆசைப்பட்டவர்களும்தான் காலியானார்கள். கார்ட்டர் காலியாகவில்லை.

பேய்களை விடவும் மனிதர்களின் கற்பனைக்குத்தான் சக்தி அதிகம் என்பதற்கு ஹோவர்ட் கார்ட்டரின் வாழ்க்கையே ஒரு சாட்சி!

ஸோ, பேய் இல்லை, பூஞ்சைதான் வில்லன்! ஆனால், வில்லன் பட்டத்தைத் தட்டிக்  கொண்டு போனது பேய்கள்தான். இந்தப் பேய்த்தனத்தை வைத்துக் கொண்டு ஹாலிவுட் பேய் படங்களாகச் சுட்டித் தள்ளியது. பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்ற கதைதான் இந்தப் பேய் கதையிலும்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Thursday, 25 June 2026

சாகாமலிருக்க ஒரு ரூட் மேப்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்!

அட்ரஸ் – 2

சாகாமலிருக்க ஒரு ரூட் மேப்!

இந்தப் பேய்கள் எல்லாம் இந்த உலகில் எப்போது அட்மிட் ஆனார்கள் தெரியுமா?

சுமேரியர் காலத்திலேயே கியூனிபார்ம் எழுத்துக்களில் பேய்களைப் பற்றி எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

கில்காமேஷ் பற்றி அங்கே காவியமே எழுதியிருக்கிறார்கள்.

யார் இந்த கில்காமேஷ்?

கி.மு. 1800. மெசபடோமியாவில் உரூக் நகரத்தின் கிங்.

மூன்றில் இரண்டு பங்கு கடவுள், ஒரு பங்கு மனிதன் என கில்காமேஷ் போன்ற ஒரு டிசைனை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது.

கில்காமேஷ் பயங்கரமான திமிர் பிடித்த ஆள். ஆஜானுபாகுவான உடம்பு, அதீத அறிவு, எக்கச்சக்க பவர் உள்ளவன்.

மக்களும் கடவுளும் யோசித்தார்கள், இவனை அடக்க ஒரு ஆப்போசிட் போர்ஸ் வேண்டும் என்று. அப்படி உருவானவன்தான் என்கிடு. அவன் ஒரு காட்டுவாசி. காட்டில் மிருகங்களோடு மிருகமாக, ஷேவிங் செய்யாத தாடி, தலைமுடியுடன் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்து, உரூக் நகரத்துக்குள் அழைத்து வந்தார்கள்.

ஒரு திருவிழா கூட்டத்தில் கில்காமேஷும் என்கிடுவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டார்கள்.

கமலும் ரஜினியும் மோதுவது போன்ற சண்டை. செ மாஸ் பைட். உரூக் நகரத்தின் சுவர்கள் அதிர்ந்தன. தூசிகள் பறந்தன. ஒரு கட்டத்தில் ட்விஸ்ட் அடித்தது ஸ்க்ரீன் ப்ளே... ‘டேய், நீ செம கட்டைப்பா!’ என்று கில்காமேஷ் சிரிக்க, ‘நீயும் சளைச்சவன் இல்லை!’ என்று என்கிடு கையை குலுக்கினான்.

இப்படி எதிரிகளாக வேண்டிய இருவரும் தடிமனான நண்பர்களானார்கள்.

சும்மா இருந்தால் கில்காமேஷுக்கு போர் அடிக்கும். "என்கிடு, வா ஒரு அட்வென்ச்சர் போவோம். அந்த சிடார் காட்டில் இருக்கும் 'ஹம்பாபா' என்ற அரக்கனைப் போட்டுத்தள்ளலாம். வரலாற்றில் நம் பெயர் நிலைத்து நிற்க வேண்டும்" என்றான்.

என்கிடுவுக்கு கொஞ்சம் பயம். "டேய், அவன் வாய் வழியா நெருப்பு வரும், வேணாம்டா" என்றான்.

"வாடா பாத்துக்கலாம்!" என்று கில்காமேஷ் இழுத்துக்கொண்டு போனான். சூரியக் கடவுளின் உதவியோடு, ஒரு ஹை வோல்டேஜ் சண்டைக்குப் பிறகு ஹம்பாபாவின் தலையை சீவினார்கள்.

இங்கேயும் ஒரு ட்விஸ்ட் ஆரம்பமானது.

கில்காமேஷின் சிக்ஸ்பேக் உடம்பையும் வீரத்தையும் பார்த்துவிட்டு, சொர்க்கத்தின் காதல் தேவதை இஷ்தார் நேராக லேண்ட் ஆகி, "என்னை கல்யாணம் பண்ணிக்கோ" என்றாள்.

ஹீரோ சும்மா இருப்பானா? செம நக்கல் அடித்தான்.

ஈகோ டச் ஆன இஷ்தார், கடுப்பாகி சொர்க்கத்துக் காளையை பூமிக்கு அனுப்பி உரூக் நகரத்தை அழிக்கப் பார்த்தாள். ஆனால், நம்ம தக் லைப் பார்ட்னர்கள் கில்காமேஷும் என்கிடுவும் சேர்ந்து அந்த காளையையும் காலி செய்தார்கள்.

கடவுள்களுக்கு கோபம் தலைக்கேறியது. "ரொம்ப ஆடுகிறான்கள். காளையையும் கொன்றுவிட்டார்கள். அதனால் என்கிடு சாகட்டும்" என்று சாபமிட்டார்கள்.

என்கிடுவுக்கு ஒரு விசித்திரமான நோய் வந்து, படுக்கையில் விழுந்து, கில்காமேஷின் கையைப் பிடித்தபடியே இறந்து போனான்.

இங்குதான் கில்காமேஷ் உடைந்து போனான். அதுவரை மரணத்தைப் பற்றி யோசிக்காதவனுக்குள் ஒரு பயங்கரமான இருள் புகுந்தது.

'நாளைக்கு நமக்கும் இதே நிலைமைதானா? இந்த உடம்பு, இந்த வீரம் எல்லாம் மண்ணோடு மண்ணாகிவிடுமா?' என சயின்ஸ் மற்றும் பிலாசபி கலந்த ஒரு கேள்வி அவனுக்குள் எழுந்தது.

இந்தக் கேள்வியால், மரணத்தை வெல்லும் ரகசியத்தைக் கண்டுபிடிக்க கில்காமேஷ் கிளம்பினான்.

உலகப் பெருவெள்ளத்தில் தப்பித்து, கடவுள்களால் அமரத்துவம் கொடுக்கப்பட்ட உத்நாபிஷ்டிம் என்ற கிழவரைத் தேடி காடு, மலை, இருட்டு குகைகள் என அலைந்தான். நம்ம ஊர் மார்க்கண்டேயன் கதை மாதிரி இருக்கிறது என்கிறீர்களா? உலக நாடுகளின் எல்லா கதைகளும் இப்படித்தான் இருக்கும் போல.

கடைசியில் அந்தக் கிழவரைக் கண்டுபிடித்து விட்டான். அவர் ஒரு சீக்ரெட் சொன்னார். "கடலின் அடியில் ஒரு மூலிகை இருக்கிறது. அதைச் சாப்பிட்டால் இளமை திரும்பும்."

கில்காமேஷ் கடலுக்குள் குதித்து, அந்த மூலிகையைப் பறித்தான். "இதை ஊருக்குப் போய், வயசானவங்களுக்குக் கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டு அப்புறம் நான் சாப்பிடுறேன்" என்று மெடிக்கல் எத்திக்ஸோடு கிளம்பினான்.

வழியில் ஒரு குளம். அப்பாடா என்று மூலிகையைக் கரையில் வைத்துவிட்டு, குளிக்கப் போனான் கில்காமேஷ்.

அப்போது அங்கே மெதுவாக ஊர்ந்து வந்த ஒரு பாம்பு, அந்த மூலிகையை லபக் என்று விழுங்கிவிட்டு, தன் பழைய தோலைக் உரித்துவிட்டு புதுப் பொலிவோடு இளமையோடு நகர்ந்து சென்றது.

கரையேறி வந்த கில்காமேஷ் பார்த்தான். மூலிகை காலி. பாம்பு இளமையாகிவிட்டது.

அவனுக்கு 'க்ளிக்' என்றது.

அவனுக்குப் புரிந்துவிட்டது. மனித உடலுக்கு எக்ஸ்பைரி டேட் உண்டு. அதை மாற்ற முடியாது. ஆனால், நாம் செய்யும் சாதனைகள், நாம் உருவாக்கும் கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம் மரணத்தை வெல்ல முடியும்.

கடைசியில் அவன் தன் கதையை, தான் கடந்து வந்த அத்தனை சாகசங்களையும், தோல்விகளையும், தேடல்களையும் ஒரு கற்பலகையில் செதுக்கி வைத்தான்.

கில்காமேஷ் செத்துப்போனான். ஆனால், 4000 வருடங்கள் கழித்து இன்று நாமும் அவனைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவன் தேடிய மரணமில்லாப் பெருவாழ்வு அவனுக்குக் கிடைத்துவிட்டது... அவன் எழுதிய எழுத்து வடிவில்!

இதுதான் அந்த மெசபடோமியா தத்துவம். மனுஷன் சாவான். அவனது சாதனைகள் சாகாது. 4000 வருஷத்துக்கு முன்னாடியே எழுதிட்டாங்க பாஸ்!

இருந்தாலும் மெசபடோமியர்களுக்கு மறு உலகம் பற்றி சில கான்செப்ட்கள் உண்டு. அது குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

மெசபடோமியர்களின் மறு உலகம் ரொம்பப் போரடிக்கிற இடம். அங்கே ஆத்மாக்கள் வெறும் நிழல்களாக அலைவார்கள். அங்கே ஜாலியாக இருக்க ஒரே வழி என்னவென்றால், பூமியில் இருக்கும் உங்கள் வாரிசுகள் உங்களுக்கு ஒழுங்காகப் படையல் போட வேண்டும் என்பதுதான். ஏழு பிள்ளைகள் பெற்றவனுக்கு அங்கே விஐபி ட்ரீட்மென்ட். ஒரு பிள்ளை கூட இல்லாத பெண், அங்கே உடைந்த மண்பாண்டம் போல எறியப்படுவாள். சென்டிமென்ட் பிளஸ் பயம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ் என்று போட்டு விட்டு, இதில் இன்னும் பேய் வரவில்லையே என்கிறீர்களா? ப்ளீஸ் வெயிட்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****