SMC (2026 – 28) மறுகட்டமைப்பிற்கான பார்வையாளர் படிவம்
பள்ளி மேலாண்மைக் குழு (2026 – 2028) மறுகட்டமைப்பிற்குத் தேவையான பார்வையாளர் படிவத்தைக் கீழே காண்க
*****
பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
SMC (2026 – 28) மறுகட்டமைப்பிற்கான பார்வையாளர் படிவம்
பள்ளி மேலாண்மைக் குழு (2026 – 2028) மறுகட்டமைப்பிற்குத் தேவையான பார்வையாளர் படிவத்தைக் கீழே காண்க
*****
SMC (2026 – 28) மறுகட்டமைப்பிற்கான அழைப்பிதழ்
பள்ளி மேலாண்மைக் குழு (2026 – 2028) மறுகட்டமைப்பிற்குத் தேவையான அழைப்பிதழைக் கீழே காண்க
*****
SMC (2026 – 28) மறுகட்டமைப்பிற்கான சான்றிபிதழ்
பள்ளி மேலாண்மைக் குழு (2026 – 2028) மறுகட்டமைப்பிற்குத் தேவையான சான்றிதழைக் கீழே காண்க
*****
தேசியப் பணிக்குக் கூலி கேட்பது தேசத் துரோகமா என்ன?
நம்
ஊரில் ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடம் எடுப்பதைத் தவிர வேறு
எல்லா வேலைகளையும் கொடுப்பார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். குடும்ப
கட்டுபாட்டுக்கு ஆள் பிடிப்பதில் ஆரம்பித்து, தேர்தல்
பணி வரை சகலமும் அவர்கள் தலையில்தான். இப்போது புதிய வரவு, 2027க்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி.
போன
ஆகஸ்ட் மாதம் முழுவதும், கொளுத்தும்
வெயிலில் ஊர் ஊராகச் சென்று, "உங்க வீட்டில் எத்தனை பேர், தொலைக்காட்சி இருக்கிறதா, அலைபேசி
இருக்கிறதா, இன்னும் வானொலியில்தான் செய்தி கேட்கிறீர்களா?" என்று
நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு கணக்கெடுத்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,
இப்போது ஒரு சின்னஞ்சிறு கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.
"ஐயா, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணி பார்த்தோமே,
அதற்கான மதிப்பூதியத்தைக் கொஞ்சம் தாருங்கள்!"
ஆனால், நமது அதிகார வர்க்கம் எப்படிப்பட்ட பதிலைச் சொல்கிறது தெரியுமா?
"பொறுமையாக இருங்கப்பா. அக்கவுண்ட் டீடெயில்ஸ் எல்லாம் பலமுறை செக்
பண்ணிட்டு இருக்கோம்."
கேட்கவே
புல்லரிக்கிறது! மாதா மாதம் அரசாங்க சம்பளம் எந்த வங்கிக் கணக்குக்குப் போகிறதோ,
அதே வங்கிக் கணக்குக்குத்தான் இந்தப் பணமும் வரப்போகிறது. இதற்கு எதற்குப் 'பலமுறை'
செக்கிங்? என்ன செக் செய்கிறார்கள்? அக்கவுண்ட்டில் ஓட்டை விழுந்து பணம் கீழே ஒழுகி விடும் என்றா? அல்லது டிஜிட்டல் இந்தியாவில், கூகுள் பேயில் டீ குடிக்கிற காலத்தில், பணம் வேறு எங்காவது பயணம்
செய்து விடும் என்றா?
இதில்
ஆசிரியர்கள் தரப்பில் சொல்லப்படும் ஒரு தர்க்கம், நெஞ்சை
உலுக்குகிறது. "ஐயா, இதுவே தேர்தல் பணி என்றால், ஓட்டுப்பதிவு
இயந்திரங்களைத் தூக்கும் போதே பணத்தைக் கையில் கொடுத்து விடுவார்கள். இதில் மட்டும
ஏன் இந்த இழுத்தடிப்பு?" என்று
பரிதாபமாகக் கேட்கிறார்கள்.
அட
பெருமூச்சு விடுகிற ஆசிரியப் பெருமக்களே! உங்களுக்கு உலக
நடப்பே புரியவில்லையே! தேர்தல் என்றால் அங்கே பதிவாகப்போவது அரசியல்வாதிகளின்
தலையெழுத்து. எனவே, அங்கே பட்டுவாடா படுவேகமாக நடக்கும்.
ஆனால், சென்சஸ் என்பது வெறும் தலைகளை எண்ணும் வேலை.
இந்தியாவில் தலைகளுக்கு என்ன மரியாதை இருக்கிறது?
பயிற்சிப்
படியாக ஒரு நாளைக்கு 600 ரூபாய் என்று
அறிவித்துவிட்டு, அதில் 200 ரூபாயைச் செலவினம் என்று அவர்களே கழித்துக்கொண்டு, மிச்சமிருக்கும்
பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது.
மொத்தம் ஒரு லட்சம் பேருக்குச் தர வேண்டிய தொகை சுமார் 102 கோடி
ரூபாய். இந்த 102 கோடியும் இப்போது எந்த வட்டிக்
கணக்கில், என்ன வட்டி விகிதத்தில், யாருடைய
கண்காணிப்பில் பத்திரமாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது என்பது
அந்தப் பரமசிவனுக்குத்தான் வெளிச்சம்.
ஆசிரியர்களைப்
படுத்தும் பாடு இதோடு முடியவில்லை. உள்ளூரில் இருக்கும் ஆசிரியரை உள்ளூரிலேயே
கணக்கெடுக்க விட்டால் அவர் பாட்டுக்கு வேலையை முடித்துவிடுவார் அல்லவா? அது நிர்வாக இயந்திரத்துக்குப் பிடிக்காது. தஞ்சாவூரில்
இருக்கும் ஆசிரியரைத்
திருவாரூருக்குப் போய் கணக்கெடுக்கச் சொல்வார்கள். இது ஒருவகை மன
உறுதி வளர்க்கும் பயிற்சிக் களம். பெண்கள் படும் அவஸ்தையைப் பற்றிச் சொல்லவே
வேண்டாம். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தேசியக் கடமை
என்று கணக்கெடுத்து முடித்தால், கடைசியில் 'உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை நாங்கள் இன்னும் செக் பண்ணி முடிக்கல' என்று பதில்கொடுக்கிறார்கள்.
கணக்கெடுப்பு எடுத்த ஆசிரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய ரூபாய் விரைவில்
கிடைத்துவிட்டால் சரி. இல்லையென்றால், 2027 மக்கள்தொகை
கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணியின்போது, வீட்டுக்காரர்கள்
ஆசிரியர்களைப் பார்த்து, "ஐயா! போன முறை
வந்தீர்களே! அதற்கான பணம் கிடைத்து விட்டதா?" என்று கேட்கும்
நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
இதுதான் இந்தியா!
*****
குரூப் 2 & 2A மாதிரி
வினா விடை – 17
குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வு ஆர்வலர்களுக்குப் பயன்படும் மாதிரி வினா விடைகளைக் கீழே காண்க.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.09.2026
1) மதுரை
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நாளை நடைபெற உள்ளது.
2) வணிகம்
சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைக்கான கட்டண முறை அக்டோபர் 15 முதல் அமலாகிறது.
3) யுபிஐ
பரிவர்த்தனைக் கட்டணம் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 22,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
4) எதிரிகளின்
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள விண்வெளியில் ஆயுதங்களை நிறுவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
5) கச்சா
எண்ணெயின் விலை உயர்வு உலகப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
Education & GK News
1) The consecration ceremony of the Madurai Meenakshi
Amman Temple is scheduled to take place tomorrow.
2) The fee structure for business-related UPI
transactions comes into effect on October 15.
3) The government is expected to generate an annual
revenue of Rs. 22,000 crore from UPI transaction fees.
4) The United States has announced that it has deployed
weapons in space to counter threats from adversaries.
5) The rise in crude oil prices has caused a sharp
decline in global stock markets.
அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 85
புதிய வீட்டின் புதிய பேய்கள்!
"ஆவிகள் சாப்பிட்டது, ஆவி பறக்கும் இட்லியா அல்லது நூடுல்ஸ்
போல இருக்கும் இடியாப்பமா?" என்று சண்டை போடும் ஆசாமிகளை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், டெக்சாஸின் ஒரு வெயில் அடிக்கும் வெறிச்சோடிய மாகாணத்தில், "என் வீட்டுச்
சுவருக்குள் ஒருவரின் மண்டையோடும், டைனிங் டேபிளுக்குக் கீழே ஐந்து எலும்புக்கூடுகளும்
இருக்கின்றன; இரவானால் அவை வந்து ஹாலில் குத்தாட்டம் போடுகின்றன" என்று கோர்ட்
வரைக்கும் போய் அழுதார்கள் சில மனிதர்கள்.
அது 1990களின் தொடக்கம்.
டெக்சாஸ் என்பது அமெரிக்காவின் பரந்த வெளி.
அங்கே, பிளாக் ட்ரம்பெட் கார்டன் என்ற பெயர் ஏதோ கெட்டவார்த்தை
மாதிரி உச்சரிக்கத் தகுதியற்றதாக அந்தப் பகுதி மக்களால் மாற்றப்பட்டது.
அப்போதுதான் அங்கே ஒரு பிரம்மாண்டமான புதிய குடியிருப்புப்
பகுதி உருவானது. விலை மலிவு, பெரிய தோட்டம், விசாலமான ஹால், பார்க்கிங் வசதி. மிடில்
கிளாஸ் அமெரிக்கர்களுக்கு வேறு என்ன வேண்டும்? தன் வாழ்நாள் சேமிப்பைக் கொட்டி வீடுகளை
வாங்கினார்கள்.
குடியேறிய சில மாதங்களிலேயே, இரவில் விநோதக் குரல்கள் கேட்க
ஆரம்பித்தன. ஜன்னல்கள் தன்னிச்சையாகத் திறந்தன. வராந்தாவில் நடக்கும்போது காலடியில்
ஏதோ எலும்பு தட்டுப்படுவது போன்ற பிரமை. குளிக்கும் பாத்ரூமில் திடீரெனக் குளிர் காற்று
வீசியது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், நள்ளிரவில் வீட்டின் சுவர்கள் வழியாக ஏதோ உருவங்கள்
நடமாடுவதாகக் குழந்தைகள் அழுது கூச்சலிட்டன.
விஷயம் பெரிதாக, மீடியாக்கள் கொடிபிடித்தன. "அமெரிக்காவின்
சாத்தானியக் குடியிருப்பு", "எலும்புகள் மீது எழுப்பப்பட்ட நரகத்தின் வாசல்கள்"
என்று தலைப்புச் செய்திகள் பறந்தன.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒன்றுகூடி, கட்டுமான நிறுவனத்தின்
மீது கோர்ட்டில் கோடிக்கணக்கில் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் நீதிபதி ஒரு நிபுணர் குழுவை நியமித்தார்.
நிபுணர் குழு அந்த இடத்தின் பத்திரப் பதிவுகளைத் தோண்டிப் பார்த்தபோது
ஓர் அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
அது எந்தச் சாத்தானியக் கல்லறையும் அல்ல. 19ஆம் நூற்றாண்டின்
இறுதியில், அந்தப் பகுதி ஒரு ஒதுக்குப்புறமான சிறிய சுடுகாடாக இருந்தது உண்மைதான்.
ஆனால், காலப்போக்கில் அந்த ஊர் வளர்ந்த போது, அங்கே இருந்த பெரும்பாலான சடலங்கள் வேறு
இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. ஓரிரு பழைய, ஆவணங்களில் விடுபட்ட கல்லறைகள் மட்டுமே
அங்கே எஞ்சியிருந்தன.
இதைத்தான் ரியல் எஸ்டேட் மூளைக்காரர்கள் சரியாகப் பயன்படுத்திக்
கொண்டனர்.
வீடுகளைக் கட்டி விற்ற நில உரிமையாளர்களுக்கும், டெவலப்பர்களுக்கும்
அங்கே ஒரு பெரிய சிக்கல் இருந்தது. எதிர்பார்த்த விலைக்கு வீடுகள் விற்றுத் தீரவில்லை.
மார்க்கெட் மந்தமாக இருந்தது. வீடுகளின் மதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டிருந்தது.
முதலீடு செய்த பணம் முடங்கியது.
இந்த நஷ்டத்திலிருந்து தப்பிக்க அவர்கள் என்ன செய்தார்கள்?
மிக அற்புதமான ஒரு சைக்காலஜிக்கல் கேமை விளையாடினார்கள்.
"இந்த இடம் சாபக்கேடானது; அங்கே பேய்கள் நடமாடுகின்றன"
என்ற வதந்தியைத் திட்டமிட்டுப் பரப்பினர். வாங்கியவர்களே பீதியடைந்து வீட்டை விட்டு
ஓடினால், அல்லது நீதிமன்றத்தில் வழக்குப் போட்டால், கட்டுமான நிறுவனத்திடமிருந்து பலகோடி
நஷ்டஈடு பெறலாம் என்பதுதான் மாஸ்டர் பிளான்.
இரவில் ஜன்னலைத் தட்டியது பேய் அல்ல, ரிமோட் கண்ட்ரோல் காற்றாடி.
சுவரில் நிழலாடியது அமானுஷ்யம் அல்ல, ஆட்களை வைத்து உருவாக்கப்பட்ட தந்திரமான லைட்டிங்
செட்டப். சமையலறையில் கேட்ட முனகல் குரல்கள், டேப்ரிக்கார்டரில் ப்ளே செய்யப்பட்ட சவுண்ட்
எபெக்ட்ஸ். மலிவான த்ரில்லர் சினிமாக்களில் கூட இவ்வளவு சுவாரஸ்யமாக யோசித்திருக்க
மாட்டார்கள்!
விசாரணையின் முடிவில், பேய்கள் எல்லாம் கோர்ட்டை விட்டு ஓடிவிட்டன.
வழக்கைத் தொடர்ந்தவர்கள் மாட்டிக் கொண்டனர். சில நில உரிமையாளர்களும், வதந்தியைப் பரப்பிய
தரகர்களும் கைது செய்யப்பட்டனர். வீட்டின் விலையைக் காப்பாற்றவும், நஷ்டஈட்டைப் பெறவும்
நடத்தப்பட்ட அசல் மனிதக் கூத்து அது என்பது நிரூபிக்கப்பட்டது.
மனித மனத்தின் ஆழத்தில் இருக்கும் இரண்டு விஷயங்கள் எப்போதும்
மாறாது: ஒன்று இறப்பைப் பற்றிய பயம், இன்னொன்று பணத்தின் மீதான பேராசை. இந்த இரண்டையும்
கலந்து ரியல் எஸ்டேட் கும்பல் அடித்த கூத்துதான் பிளாக் ட்ரம்பெட் கார்டன் சம்பவம்.
பேய்களைப் புரிந்து கொள்வது கூட எளிது. ஆனால், நம்மைச் சுற்றியிருக்கும்
மனிதர்களின் பேராசைப் புத்தியைப் புரிந்துகொள்வதுதான் கடினம். அமானுஷ்யம் என்று நாம்
அஞ்சுவதில் பெரும்பாலானவை, மனிதனின் சுயநலத்தால் உருவாக்கப்பட்ட போலி மாயைகள்தாம்.
ஆக, விஷயம் அமானுஷ்யம் போலத் தெரிந்தாலும், இதன் பின்னணியில்
இருந்தது அக்மார்க் பேய்கள் அல்ல; பாக்கெட்டைக் காலி பண்ணும் ரியல் எஸ்டேட் கந்துவட்டி!
அடுத்த முறை உங்கள் வீட்டுச் சுவரில் நள்ளிரவில் ஏதோ சத்தம்
கேட்டால், உடனே பேய் என்று பயந்து ஓடாதீர்கள். ஒருவேளை அது உங்களுடைய ரியல் எஸ்டேட்
புரோக்கரின் பணக்கவலையாகவும் இருக்கலாம்!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****