Thursday, 23 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.07.2026

1) நீட் வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

2) நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடர்ந்து நாள்காவது நாளாகவும் நாடாளுமன்றம் முடங்கியது.

3) நீண்ட தூர இலக்கைத் தாக்கும் குஷா ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

4) 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் 1.83 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

5) தமிழகத்தின் வெப்பநிலை இன்று 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.

Education & GK News

1) Prime Minister Narendra Modi has announced that fast-track courts will be set up to investigate the NEET question paper leak.

2) Parliament remained stalled for the fourth consecutive day over the NEET exam irregularities.

3) The long-range 'Kusha' missile was successfully test-fired.

4) 1.83 lakh people lost their lives in road accidents in 2025.

5) Temperatures in Tamil Nadu are likely to rise by 2 to 4 degrees Celsius today.

மிஸ்டர் ஆவியின் கால்விரல் குறிப்புகள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 30

மிஸ்டர் ஆவியின் கால்விரல் குறிப்புகள்!

1848 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஹைடேஸ்வில் என்ற சிறிய கிராமத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.

அது ஒரு பழைய வீடு.

இரவு நேரத்தில் சுவரில் இருந்து டக்... டக்... என்று சத்தம் கேட்டது. சாதாரண மனிதராக இருந்தால், எலியாக இருக்கும் என்று சுவரில் ஒரு தட்டு தட்டிவிட்டுத் தூங்கச் சென்றிருப்பார்கள்.

ஆனால், அங்கு இருந்த கேத்ரின், மார்கரெட் என்ற பாக்ஸ் சகோதரிகள் அதை விட்டுவிடவில்லை.

"வணக்கம் திரு. ஆவி. நான் இரண்டு முறை தட்டுகிறேன், நீ மூன்று முறை தட்டு" என்று அதை வைத்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.

அதிசயம்!

அந்தச் சத்தமும் பதில் பேசியது.

அவ்வளவுதான்!

இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

"இறந்தவர்களுடன் பேசலாம், அவர்கள் சுவரில் தட்டிச் செய்தி அனுப்புகிறார்கள்!" என்று அமெரிக்காவே பரபரப்பானது. அமெரிக்கா மட்டும் ஆவிகளுக்கு விதிவிலக்கா என்ன? நம் மன்னார்குடி போன்றுதான் அங்கும் நடந்தது.

இதற்கு அந்தப் பாக்ஸ் சகோதரிகள் ஸ்பிரிச்சுவலிசம் என்று ஒரு பெயர் வைத்தார்கள். பாக்ஸ் சகோதரிகள் ஊர் ஊராகச் சென்று மேடை அமைத்து ஆவிகளை வரவழைத்து, சுவரில் தட்ட வைத்து, பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். பெரிய அறிஞர்களும் எழுத்தாளர்களும் வரிசையில் நின்றார்கள்.

சரி, அந்தச் சத்தம் உண்மையிலேயே ஆவி எழுப்பியதுதானா?

சில காலம் கழித்து, அந்தச் சகோதரிகளே உண்மையை வெளிப்படுத்தினார்கள். "அப்படி எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் கால் விரல் மூட்டுகளை நொடித்துத்தான் அந்தச் சத்தத்தை வரவழைத்தோம்!" என்று மேடையிலேயே செய்து காட்டி உண்மையை உடைத்தார்கள்.

ஆனால், இங்குதான் ஒரு சுவாரசியமான மனித உளவியல் இருக்கிறது!

அவர்களே "நாங்கள் ஏமாற்றினோம்" என்று ஒப்புக்கொண்ட பிறகும், மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. "இல்லை. அவர்கள் ஆவிகளுடன் பேசுவதை மறைப்பதற்காகவே இப்போது பொய் சொல்கிறார்கள்!" என்று மக்கள் வாதிட்டார்கள்.

ஏனென்றால், அந்த காலத்தில் ஒரு சின்னக் காயம் பட்டால் கூடத் தொற்று ஏற்பட்டு மரணம் நிச்சயம். குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம். இறந்தவர்களுடன் எப்படியாவது பேசிவிட மாட்டோமா என்கிற அந்த சென்டிமென்ட்தான் ஆவிகளுக்கான மார்க்கெட்டை அன்று தக்க வைத்தது.

அன்று தொடங்கிய அந்த ஆவி வணிகம், இன்று வரை தட்டச்சுப் பொறி, ஓய்ஜா போர்டு, மீடியம் என்று பல்வேறு வடிவங்களில் வளர்ந்து நிற்கிறது.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், மனித மூளைக்கு ஒரு குணம் உண்டு. தனக்கு நெருக்கமானவர்கள் இறந்துவிட்டால், அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவர்கள் எங்கேனும் இருப்பார்கள், நம்மிடம் பேசுவார்கள் என்று நம்பத் தோன்றும். இந்த நம்பிக்கை விருப்பத்தைத்தான் இந்த ஆவி வியாபாரிகள் மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்.

அமானுஷ்யம் என்பது வெளியில் இல்லை; அது நம் பயத்திலும், ஏமாறத் தயாராக இருக்கும் மனத்திலும்தான் இருக்கிறது. சுவரில் தட்டும் சத்தத்தைக் கேட்டுப் பயப்படுவதை விட, வீட்டிற்குள் எலி இருக்கிறதா என்று விளக்கைப்போட்டுப் பார்ப்பதே எப்பொழுதும் புத்திசாலித்தனம்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

டக் டக் பேய்கள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 29

டக் டக் பேய்கள்!

மன்னார்குடி அருகே அந்தக் காலத்து பழைய வீடு.

நேரம் இரவு 10:30.

அந்த வீட்டு ஹாலில் நாற்பது பேர் மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். நடுவில் பதினான்கு வயது திவ்யாவும், பன்னிரண்டு வயது ரம்யாவும் மரப் பலகையில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தார்கள்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இரண்டு அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் அவர்களின் நிழல் சுவரில் பிரம்மாண்டமாக ஆடியது.

"தாத்தா. வந்திருக்கீங்களா? வந்திருந்தா ஒரு தட்டு தட்டுங்க." என்றாள் திவ்யா, கண்களை மூடிக்கொண்டு.

அடுத்த நொடி,

டக்!

விட்டத்திலிருந்தோ, சுவரிலிருந்தோ அந்தச் சத்தம் தெளிவாகக் கேட்டது. கூட்டத்தில் ஒரு சிலிர்ப்பு.

"ஒரு தட்டுன்னா 'ஆமா' ரெண்டு தட்டுன்னா 'இல்லை'. இப்ப யாரு கேள்வி கேட்கறீங்க?"

கூட்டத்தில் இருந்த ஆடிட்டர் சுந்தரம் முன்னால் வந்தார். வேர்த்து விறுவிறுக்க, "என் பொண்ணுக்கு இந்த வருஷம் கல்யாணம் நடக்குமா?" என்றார்.

டக்!

ஆடிட்டர் சுந்தரம் கண்ணீரோடு ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை அங்கே இருந்த தட்டில் வைத்தார். கூட்டம் பரவசத்தில் மூழ்கியது.

அந்த இரவு நேரத்திலும் மூலையில் அமர்ந்து சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராமராஜன் ஒரு பயோ மெடிக்கல் என்ஜினீயர். அவனுக்கு இந்த ஆவி ஆட்டம் சுத்தமாக மூடநம்பிக்கையாகப் பட்டது.

அடுத்த நாள் மதியம்.

திவ்யாவும் ரம்யாவும் திண்ணையில் உட்கார்ந்து நொங்கு தின்று கொண்டிருந்தார்கள். ராமராஜன் மெதுவாக அவர்களிடம் போனான்.

"ஏய் திவ்யா. நேத்து நைட்டு தாத்தா உண்மையாவே வந்தாரா?"

திவ்யா சுற்றும் முற்றும் பார்த்தாள். குறும்புச் சிரிப்பு சிரித்தாள். "அண்ணே... தாத்தாவாவது, தம்பியாவது! எல்லாம் ஒரு ட்ரிக்!"

"ட்ரிக்கா? எப்படிடி? சுவரில் ஸ்பீக்கர் எதுவும் வெச்சிருக்கீங்களா? நான் நேத்து ராத்திரி புல்லா செக் பண்ணிட்டேன், ஒயர் எதுவும் இல்லையே!"

ரம்யா சத்தமாகச் சிரித்தாள். "ஒயராவது, கத்தரிக்காயாவது! இதோ பாரு அண்ணே."

அவள் தன் கால் பெருவிரலை லேசாக வளைத்து சுடக்கு எடுத்தாள்.

டக்!

அதே சத்தம்! மரத் தரையில் அவள் பெருவிரல் எலும்பு முட்டி அந்தச் சத்தத்தை உருவாக்கியது. பலகையில் கால் வைத்திருப்பதால் அந்தச் அதிர்வு சுவரில் இருந்து வருவது போல எதிரொலிக்கும்.

ராமராஜன் ஆச்சரியப்பட்டுப்போனான். "அடப்பாவிங்களா! பெருவிரல் சுடக்கை வெச்சுக்கிட்டா ஊரையே ஏமாத்துறீங்க?"

திவ்யா அப்ஸெட்டானாள். "அண்ணே. தயவுசெஞ்சு அப்பாக்கிட்ட சொல்லிடாதீங்க. நாங்க சும்மா விளையாட்டுக்கு ஆரம்பிச்சது. அப்புறம் ஊர்க்காரனுங்க காசு தர ஆரம்பிச்சதும் அப்பாவே இதை பிசினஸ் ஆக்கிட்டாரு!"

"நான் யார் கிட்டயும் சொல்லல. ஆனா இன்னைக்கு நைட்டு உண்மையைப் புரிய வைக்கிறேன்" என்றான் ராமராஜன்.

அன்று இரவு. அதே கூட்டம். ஆடிட்டர் சுந்தரம் மீண்டும் வந்திருந்தார்.

ராமராஜன் சட்டென்று எழுந்து, "எல்லாரும் நிறுத்துங்க! இது ஆவியும் இல்லை, பேயும் இல்லை! இந்த ரெண்டு பொண்ணுங்களும் காலில் இருக்குற விரலை சுடக்கு எடுத்து உங்களை ஏமாத்துறாங்க!" என்று கத்தினான்.

திவ்யாவும் ரம்யாவும் பயந்துபோய், "ஆமா. நாங்க ஏமாத்திட்டோம். எங்களை மன்னிச்சுடுங்க" என்று உண்மையைக் கதறி அழுதே சொல்லிவிட்டார்கள்.

கூட்டம் ஒரு நிமிடம் அமைதியானது. பிரகாஷ் வெற்றிப் புன்னகையோடு பார்த்தான்.

ஆடிட்டர் சுந்தரம் மெதுவாக எழுந்தார். பிரகாஷைப் பார்த்து எரிச்சலாக, "தம்பி! நீ சும்மா இருப்பா. பொண்ணுங்க பயத்துல ஏதோ உளறுதுங்க. நேத்து இது டக்னு ஒரு தட்டு தட்டுன அப்புறம்தான் எனக்குப் பொண்ணு பார்க்க வரேன்னு போன் வந்துச்சு! இது தாத்தாவோட ஆசிர்வாதம் இல்லாம வேற என்ன?" என்றார்.

பக்கத்தில் இருந்த இன்னொருவர், "ஆமாப்பா. ஆவிங்க சில சமயம் இந்த மாதிரி பொண்ணுங்க உடம்புல இறங்கித்தான் உண்மை பேசும். நீ சின்னப் பையன், உனக்கு இதெல்லாம் புரியாது. தள்ளிப்போ!" என்றார்.

அடுத்த பத்து நிமிடத்தில் ராமராஜன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டான்.

ராமராஜன் தெருவில் நடந்து வந்தான். பின்னால் அதே டக்... டக்... சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. தட்டில் காசுகளும் விழுந்து கொண்டுதான் இருந்தன.

மனிதனுக்கு உண்மை தேவையில்லை. தன் நம்பிக்கைக்கு சாதகமான ஒரு பொய் மட்டுமே தேவைப்படுகிறது!

ஆனால், இந்த மன்னார்குடி மேட்டருக்கு ஒன்றே முக்கால் நூற்றாண்டு வரலாறு இருக்கிறது. ஆனால், அது நாளைக்கு.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Wednesday, 22 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.07.2026

1) பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்துக்குக் காமராஜர் பெயர் சூட்டப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2) அரசுப் பள்ளிகளில் நீர் எழில் பள்ளித் திட்டத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்.

3) நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

4) தமிழகத்தில் இன்று இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்.

5) பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்டோருக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Education & GK News

1) The Tamil Nadu government has announced that the school breakfast scheme will be named after Kamarajar.

2) School Education Minister Rajmohan inaugurated the 'Neer Ezhil Palli' scheme in government schools.

3) The Central Government has announced its readiness to discuss the NEET question paper leak in Parliament.

4) Temperatures in Tamil Nadu are expected to rise above normal levels today.

5) A ban on social media usage has been imposed on individuals under the age of 15 in France.

Tuesday, 21 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.07.2026

1) சூலை 30 முதல் +2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

2) ஆகஸ்ட் 5 இல் தமிழக பட்ஜெட் தாக்கலாகிறது.

3) குடியரசு துணைத்தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகிறார்.

4) எதிர்க்கட்சிகளின் அமளியால் இரண்டாவது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடங்கியது.

5) அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழைக்கு 21 பேர் பலியாகியுள்ளனர்.

Education & GK News

1) Original mark sheets will be issued to Class 12 students starting July 30.

2) The Tamil Nadu budget will be presented on August 5.

3) Vice President C.P. Radhakrishnan is visiting Coimbatore today.

4) Parliament was stalled for the second consecutive day yesterday due to the uproar caused by opposition parties.

5) Twenty one people have lost their lives due to heavy rains in Assam.

மரணத்தின் அட்வான்ஸ் புக்கிங்!

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் – 28

மரணத்தின் அட்வான்ஸ் புக்கிங்!

மனிதனுக்கு எப்போதுமே இரண்டு விஷயங்கள் மீது அலாதியான ஆசை உண்டு.

ஒன்று, எதிர்காலத்தை முன்னாடியே தெரிந்து கொள்வது.

இன்னொன்று, அடுத்தவனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வது.

இந்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் வருவதுதான் செயின்ட் மார்க்ஸ் ஈவ் பேண்டஸி!

ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளில் ஒரு விசித்திரமான நம்பிக்கை இருந்தது. வருஷத்துக்கு ஒருமுறை, அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, கிராமத்தில் இருக்கிற தேவாலய வாசலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும். நடு இரவில் சரியாக 'டங்... டங்...' எனப் பன்னிரண்டு மணி அடிக்கும்போது, தேவாலயத்தின் கதவுகள் தானாகத் திறக்குமாம்.

அங்கே ஓர் ஊர்வலம் நடக்கும்.

ஆனால், அது வழக்கமான ஊர்வலம் இல்லை. அதில் செத்துப் போன ஆன்மாக்கள் வரப் போவதில்லை. அடுத்த ஒரு வருஷத்தில் யார் யாரெல்லாம் சாகப் போகிறார்களோ, அவர்களின் பெட்ச் எனப்படும் நிழல் உருவங்கள் வரிசையாக உள்ளே நுழைந்து வெளியே வருமாம்!

யோசித்துப் பாருங்கள். மரணத்தின் அட்வான்ஸ் புக்கிங் சிஸ்டம்!

பெட்ச் என்றால் என்னவென்றால், அது உங்களின் டூப்ளிகேட். தட் மீன்ஸ் ஆவி உலகில் உலவும் உங்களுடைய ஷாடோ காப்பி.

இந்த ஊர்வலத்தில் உங்கள் பக்கத்து வீட்டு ராமசாமியோ, எதிர் வீட்டு ஆண்டணியோ நிழல் உருவமாக நடந்து போனால், கன்பார்மாக அடுத்த 365 நாட்களுக்குள் அவருக்கு டிக்கெட் முடிந்தது என்று அர்த்தம்.

இதில் சில லாஜிக்கல் வெரைட்டிகளும் உண்டு:

அந்தப் பெட்ச் மெதுவாக நடந்து போனால், நோய் வாய்ப்பட்டு, மெல்ல மெல்ல இறக்கும்.

ஒருவேளை வேகமாக ஓடினால் அல்லது தட்டுத்தடுமாறி விழுந்தால், திடீர் விபத்து அல்லது அசம்பாவிதம் நடந்து காலியாகும்!

முழு உருவமாக இல்லாமல் பாதியிலேயே மறைந்தால், அந்த நபருக்கு லேசான கண்டம், ஆனால் தப்பித்துவிடுவார்.

நம்ம ஊரில் "எமனை நேரில் பார்த்தேன்" என்பார்களே, கிட்டத்தட்ட அதே கான்செப்ட். ஆனால், கொஞ்சம் ஐரோப்பிய மேக் அப்!

இப்போது யோசித்துப் பாருங்கள்! நள்ளிரவு 12 மணிக்குக் குளிரில் நடுங்கிக்கொண்டு தேவாலய வாசலில் உட்கார்ந்து, யார் சாகப்போகிறார்கள் என்று பார்ப்பதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்?

ஒருவேளை, அந்த ஊர்வலத்தில் வரிசையாக ஆட்கள் போய்க்கொண்டிருக்கும்போது, கடைசியாக நீங்கள் நடந்து போவதைப் பார்த்தால்?

"ஐயோ. அடுத்தது நாமதானா!" என்று அதிர்ச்சியிலேயே அங்கே பாதிப் பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும்தானே?

அந்தக் கதையில் பிரகாசுக்கும் ஸ்டீபனுக்கும் நடந்தது அதுதான்.

ஆனால் அது உண்மையா?

அறிவியல் வளராத காலத்தில் மனிதன் பயத்தை ஆளுமை செய்யக் கண்டுபிடித்த தீர்வுதான் இது போன்ற மூடநம்பிக்கைகள். "யாருக்கு எப்போது மரணம் வரும் என்று யாருக்கும் தெரியாது" என்ற பிரபஞ்ச உண்மையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், "இல்லை இல்லை, எனக்குத் தெரியும். நான் நேற்று இரவு தேவாலய வாசலில் பார்த்தேன்!" என்று மனித மூளை உருவாக்கிய ஒரு க்ரைம் த்ரில்லர்தான் இந்த நம்பிக்கை.

இப்போது டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்துவிட்டது! ஆப்பிள் வாட்ச் இதயத் துடிப்பைப் பார்த்து "டாக்டரைப் பார்" என்கிறது. கூகுள் மேப் டிராபிக்கைக் காட்டுகிறது. ஆனால், 500 வருடங்களுக்கு முன்பே மனிதன் மரணத்துக்கான லைவ் டிராபிக் பார்க்க தேவாலய வாசலில் காத்துக் கிடந்திருக்கிறான் என்பதை நினைத்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

வாழ்க்கையின் அழகு என்னவென்றால், அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று தெரியாமல் இருப்பதுதான். அதை முன்கூட்டியே பார்த்துவிட்டால், அப்புறம் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கிறது?

ஆனால், அதற்கு அமானுஷ்யத்தை சதா தேடிக் கொண்டிருக்கும் உங்கள் மனம் விட வேண்டுமே! அது எப்போதும் ஒரு பிரிடிக்சனைத் தேடிக் கொண்டேதான் இருக்கும். அதை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே, இங்கே உள்ளே வந்து விட்டால், அப்புறம் நோ எக்சிட்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Monday, 20 July 2026

வீடுகளுக்கான புதிய மின் கட்டணம்

வீடுகளுக்கான புதிய மின் கட்டணம்

வீட்டுப் பயன்பாட்டுக்கான புதிய மின் கட்டண விவரத்தைக் கீழே காண்க.

*****