Tuesday, 21 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 22.07.2026

1) சூலை 30 முதல் +2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

2) ஆகஸ்ட் 5 இல் தமிழக பட்ஜெட் தாக்கலாகிறது.

3) குடியரசு துணைத்தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகிறார்.

4) எதிர்க்கட்சிகளின் அமளியால் இரண்டாவது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடங்கியது.

5) அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழைக்கு 21 பேர் பலியாகியுள்ளனர்.

Education & GK News

1) Original mark sheets will be issued to Class 12 students starting July 30.

2) The Tamil Nadu budget will be presented on August 5.

3) Vice President C.P. Radhakrishnan is visiting Coimbatore today.

4) Parliament was stalled for the second consecutive day yesterday due to the uproar caused by opposition parties.

5) Twenty one people have lost their lives due to heavy rains in Assam.

மரணத்தின் அட்வான்ஸ் புக்கிங்!

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் – 28

மரணத்தின் அட்வான்ஸ் புக்கிங்!

மனிதனுக்கு எப்போதுமே இரண்டு விஷயங்கள் மீது அலாதியான ஆசை உண்டு.

ஒன்று, எதிர்காலத்தை முன்னாடியே தெரிந்து கொள்வது.

இன்னொன்று, அடுத்தவனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வது.

இந்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் வருவதுதான் செயின்ட் மார்க்ஸ் ஈவ் பேண்டஸி!

ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளில் ஒரு விசித்திரமான நம்பிக்கை இருந்தது. வருஷத்துக்கு ஒருமுறை, அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, கிராமத்தில் இருக்கிற தேவாலய வாசலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும். நடு இரவில் சரியாக 'டங்... டங்...' எனப் பன்னிரண்டு மணி அடிக்கும்போது, தேவாலயத்தின் கதவுகள் தானாகத் திறக்குமாம்.

அங்கே ஓர் ஊர்வலம் நடக்கும்.

ஆனால், அது வழக்கமான ஊர்வலம் இல்லை. அதில் செத்துப் போன ஆன்மாக்கள் வரப் போவதில்லை. அடுத்த ஒரு வருஷத்தில் யார் யாரெல்லாம் சாகப் போகிறார்களோ, அவர்களின் பெட்ச் எனப்படும் நிழல் உருவங்கள் வரிசையாக உள்ளே நுழைந்து வெளியே வருமாம்!

யோசித்துப் பாருங்கள். மரணத்தின் அட்வான்ஸ் புக்கிங் சிஸ்டம்!

பெட்ச் என்றால் என்னவென்றால், அது உங்களின் டூப்ளிகேட். தட் மீன்ஸ் ஆவி உலகில் உலவும் உங்களுடைய ஷாடோ காப்பி.

இந்த ஊர்வலத்தில் உங்கள் பக்கத்து வீட்டு ராமசாமியோ, எதிர் வீட்டு ஆண்டணியோ நிழல் உருவமாக நடந்து போனால், கன்பார்மாக அடுத்த 365 நாட்களுக்குள் அவருக்கு டிக்கெட் முடிந்தது என்று அர்த்தம்.

இதில் சில லாஜிக்கல் வெரைட்டிகளும் உண்டு:

அந்தப் பெட்ச் மெதுவாக நடந்து போனால், நோய் வாய்ப்பட்டு, மெல்ல மெல்ல இறக்கும்.

ஒருவேளை வேகமாக ஓடினால் அல்லது தட்டுத்தடுமாறி விழுந்தால், திடீர் விபத்து அல்லது அசம்பாவிதம் நடந்து காலியாகும்!

முழு உருவமாக இல்லாமல் பாதியிலேயே மறைந்தால், அந்த நபருக்கு லேசான கண்டம், ஆனால் தப்பித்துவிடுவார்.

நம்ம ஊரில் "எமனை நேரில் பார்த்தேன்" என்பார்களே, கிட்டத்தட்ட அதே கான்செப்ட். ஆனால், கொஞ்சம் ஐரோப்பிய மேக் அப்!

இப்போது யோசித்துப் பாருங்கள்! நள்ளிரவு 12 மணிக்குக் குளிரில் நடுங்கிக்கொண்டு தேவாலய வாசலில் உட்கார்ந்து, யார் சாகப்போகிறார்கள் என்று பார்ப்பதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்?

ஒருவேளை, அந்த ஊர்வலத்தில் வரிசையாக ஆட்கள் போய்க்கொண்டிருக்கும்போது, கடைசியாக நீங்கள் நடந்து போவதைப் பார்த்தால்?

"ஐயோ. அடுத்தது நாமதானா!" என்று அதிர்ச்சியிலேயே அங்கே பாதிப் பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும்தானே?

அந்தக் கதையில் பிரகாசுக்கும் ஸ்டீபனுக்கும் நடந்தது அதுதான்.

ஆனால் அது உண்மையா?

அறிவியல் வளராத காலத்தில் மனிதன் பயத்தை ஆளுமை செய்யக் கண்டுபிடித்த தீர்வுதான் இது போன்ற மூடநம்பிக்கைகள். "யாருக்கு எப்போது மரணம் வரும் என்று யாருக்கும் தெரியாது" என்ற பிரபஞ்ச உண்மையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், "இல்லை இல்லை, எனக்குத் தெரியும். நான் நேற்று இரவு தேவாலய வாசலில் பார்த்தேன்!" என்று மனித மூளை உருவாக்கிய ஒரு க்ரைம் த்ரில்லர்தான் இந்த நம்பிக்கை.

இப்போது டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்துவிட்டது! ஆப்பிள் வாட்ச் இதயத் துடிப்பைப் பார்த்து "டாக்டரைப் பார்" என்கிறது. கூகுள் மேப் டிராபிக்கைக் காட்டுகிறது. ஆனால், 500 வருடங்களுக்கு முன்பே மனிதன் மரணத்துக்கான லைவ் டிராபிக் பார்க்க தேவாலய வாசலில் காத்துக் கிடந்திருக்கிறான் என்பதை நினைத்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

வாழ்க்கையின் அழகு என்னவென்றால், அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று தெரியாமல் இருப்பதுதான். அதை முன்கூட்டியே பார்த்துவிட்டால், அப்புறம் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கிறது?

ஆனால், அதற்கு அமானுஷ்யத்தை சதா தேடிக் கொண்டிருக்கும் உங்கள் மனம் விட வேண்டுமே! அது எப்போதும் ஒரு பிரிடிக்சனைத் தேடிக் கொண்டேதான் இருக்கும். அதை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே, இங்கே உள்ளே வந்து விட்டால், அப்புறம் நோ எக்சிட்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

Monday, 20 July 2026

வீடுகளுக்கான புதிய மின் கட்டணம்

வீடுகளுக்கான புதிய மின் கட்டணம்

வீட்டுப் பயன்பாட்டுக்கான புதிய மின் கட்டண விவரத்தைக் கீழே காண்க.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.07.2026

1) இந்தியாவில் டெங்குக் காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2) எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் முடங்கியது.

3) ஜம்மு காஷ்மீர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

4) பிரிட்டன் பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

5) உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வென்றது.

Education & GK News

1) Approval has been granted for a dengue fever vaccine in India for the first time.

2) The first day of the Parliament's monsoon session was disrupted by the uproar caused by opposition parties.

3) The death toll from the rains and floods in Jammu and Kashmir has risen to 23.

4) Andy Burnham has assumed office as the Prime Minister of Britain.

5) Spain won the championship title at the football World Cup.

நிழல்களின் ஊர்வலம்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 27

நிழல்களின் ஊர்வலம்

ஏப்ரல் 24.

நள்ளிரவு 11.45.

ஊட்டிக்கு அருகில் இருக்கும் அந்தப் பழமையான தேவாலயத்தின் கல் சுவர்களில் பனி ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது.

பிரகாஷ் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். டிஜிட்டல் திரை 11:46 எனக் காட்டியது.

அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்டீபன், தன் ஓவர் கோட் பாக்கெட்டிற்குள் கைவிட்டுப் புகையிலை பாக்கெட்டை எடுத்தான்.

"பிரகாஷ், இன்னும் நேரம் இருக்கு. கிளம்பிடலாம். இது தேவையில்லாத வேலை," என்றான் ஸ்டீபன். அவன் குரலில் நடுக்கம்.

பிரகாஷ் லேசாகச் சிரித்தான். "ஏன் ஸ்டீபன்? பயமா? இங்கிலாந்துல நூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த செயின்ட் மார்க்ஸ் ஈவ் நம்பிக்கையை இந்த ஊட்டி சர்ச் வாசல்ல வச்சு டெஸ்ட் பண்றதுல உனக்கு என்ன பயம்? அடுத்த ஒரு வருஷத்துல யார் சாகப் போறாங்களோ, அவங்களோட பெட்ச் அதாவது நிழல் உருவம் இப்போ இந்த தேவாலய கதவைத் திறந்துட்டு உள்ள போகும். இதுதானே கதை? சயின்ஸ் இதை ஒத்துக்கும்னு நினைக்கிறியா?"

"இது வெறும் கதை இல்லை பிரகாஷ். எங்க தாத்தா சொல்லியிருக்கார். இதை உண்மையாவே பார்த்துட்டுப் பைத்தியமானவங்க இந்த ஊர்ல உண்டு."

"பார்ப்போம். எனக்கு லாஜிக் வேணும்."

நள்ளிரவு 11:59.

சுற்றிலும் நிசப்தம். காற்றின் இரைச்சல் கூட நின்றுபோனது போல ஒரு மரத்துப் போன அமைதி. பனி மூட்டம் தேவாலயத்தின் பிரதான மரக் கதவுகளை மெல்ல மூடியது.

சரியாக 12.00.

தேவாலயத்தின் கோபுர மணி அடிக்கத் தொடங்கியது.

டங்... டங்... டங்...

பன்னிரண்டாவது மணி அடித்த கணத்தில், அந்த அதிசயம் மற்றும் அதிர்ச்சி நடந்தது.

தேவாலயத்தின் கனமான பூட்டப்பட்ட பிரதான கதவுகள், எந்தச் சத்தமும் இல்லாமல் மெதுவாகத் திறந்துகொண்டன!

பிரகாஷ் தன் கையில் இருந்த கேமராவின் ரெக்கார்டிங் பட்டனை அமுக்கினான். அவன் இதயம் லேசாக வேகமெடுத்தது.

ஏதோ ஏமாற்று வேலை என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

திடீரென, தேவாலய வாசலுக்கு எதிரே இருந்த இருட்டிலிருந்து ஓர் உருவம் நடந்து வரத் தொடங்கியது.

அது ஒரு மனித உருவம். ஆனால், அதற்கு நிறமில்லை. உடலின் எல்லைகள் தெளிவில்லாமல், புகையால் செய்யப்பட்டது போல ஒரு நிழல் உருவம். அது மெதுவாக நடந்து சென்று சர்ச்சின் திறந்த கதவுக்குள் நுழைந்தது.

பிரகாஷ் உறைந்துபோனான். "ஸ்டீபன். அதைப் பார்த்தியா?"

ஸ்டீபன் பதிலே சொல்லவில்லை. அவன் கண்கள் அகலத் திறந்திருந்தன.

இரண்டாவதாக ஓர் உருவம் வந்தது. அது தட்டுத்தடுமாறி ஓடிவந்து கதவுக்குள் நுழைந்தது.

"டேய் பிரகாஷ். அது... அது நம்ம ஊர் கிளப் செக்ரட்டரி ரத்தினம் மாதிரியே இருக்குடா! அவரோட வாக்கிங் ஸ்டைல்!" என்று அலறினான் ஸ்டீபன்.

"இல்லை. இது ஏதோ லைட் எபெக்ட். ஆப்டிகல் இல்லுஷன்." பிரகாஷ் தன் மூளைக்கு லாஜிக் தேடினான். ஆனால் அவன் கை நடுங்கியது.

மூன்றாவதாக ஓர் உருவம் இருட்டிலிருந்து வெளிப்பட்டது.

அந்த உருவம் தேவாலயத்தை நோக்கி நகரவில்லை. அது நேராக பிரகாஷையும் ஸ்டீபனையும் நோக்கித் திரும்பியது.

பனி மூட்டத்தில் அந்த உருவத்தின் முகம் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

அது வேறு யாருமல்ல, பிரகாஷ்!

அதே ஜீன்ஸ். அதே டீசர்ட். அதே கேமரா. ஆனால், அந்த நிழல் உருவத்தின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. கண்கள் வெறித்துப் பார்த்தன.

பிரகாஷுக்கு மூச்சு அடைப்பது போல இருந்தது. "நா... நானா? அடுத்த ஒரு வருஷத்துல, நானா?"

அந்த நிழல் உருவம் பிரகாஷைக் கடந்து, மெதுவாகச் சென்று தேவாலயத்தின் கதவுக்குள் நுழைந்தது. இப்போது கதவுகள் டாம் என்ற சத்தத்துடன் மூடிக்கொண்டன.

சுற்றிலும் பழையபடி அமைதி.

ஸ்டீபன் கதறி அழுதான். "பிரகாஷ். வேண்டாம்டா. இங்கிருந்து ஓடிடலாம்!"

பிரகாஷ் தன் கையில் இருந்த கேமராவைப் பார்த்தான். டிஜிட்டல் திரையில் எந்தப் பதிவும் இல்லை. வெறும் எர்ரர் செய்தி மட்டுமே மிதந்தது.

அவன் தோளைத் தொட்டு, "கிளம்பலாம் ஸ்டீபன்." என்றான்.

ஆனால், அவன் குரல் அவனுடையதாகவே இல்லை. மிகத் தொலைவிலிருந்து கேட்பது போல இருந்தது.

பிரகாஷ் மெதுவாகக் கீழே குனிந்து பார்த்தான்.

நிலா வெளிச்சத்தில், ஸ்டீபனின் நிழல் தரையில் நீளமாக விழுந்திருந்தது.

பிரகாஷுக்கு மட்டும் நிழலே இல்லை!

*

கதை அவ்வளவுதான்.

இப்போது மேட்டருக்கு வருவோம்.

இக்கதையின் பின்னே இருக்கும் செயின்ட் மார்க்ஸ் ஈவ் என்பது என்ன?

பெட்ச் என்பது என்ன?

அது குறித்த டீட்டெயிலிங்கிற்கு, நாளை வரை வெயிட் ப்ளீஸ்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் 33 கேள்விகள்

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் 33 கேள்விகள்

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் 33 கேள்விகளைக் கீழே காண்க. 

*****

Sunday, 19 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.07.2026

1) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

2) ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று புறப்பட்டார்.

3) ஐம்மு காஷ்மீரில் பெய்த கனமழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.

4) ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.

5) பேட்மின்டனில் ஜப்பான் ஓப்பன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார் பி.வி. சிந்து.


Education & GK News

1) The Monsoon Session of Parliament begins today.

2) President Droupadi Murmu left yesterday for a three-day state visit to European countries.

3) Twelve people have lost their lives due to heavy rains in Jammu and Kashmir.

4) The United States is intensifying its attacks on Iran.

5) P.V. Sindhu became the first Indian to win the Japan Open badminton title.