Wednesday, 15 April 2026

திறன் மதிப்பெண் அறிக்கை

திறன் மதிப்பெண் அறிக்கை

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கு மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களுக்கு நடத்தப்பட்ட வாராந்திர தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாதத்தின் கடைசி வாரத்தில் மேற்படி பாடங்களுக்கு நடத்தப்பட்ட மாதாந்திர தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து வழங்குவதற்கான படிவத்தைக் கீழே காண்க.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.04.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.04.2026

இன்று உலக குரல் தினம்.

1) இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

2) சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

3) சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம் 99.92% தேர்ச்சியுடன் தேசிய அளவில் மாநில வரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

4) சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேசிய அளவில் 93.7% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

5) பீகாரின் புதிய முதல்வராகச் சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்றுக்கொண்டார்.

6) சர்வதேச நாணய நிதியம் (IMF) 2026 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.1% ஆகக் குறையும் எனத் தெரிவித்துள்ளது.

7) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது, என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

8) அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஆயத்தங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா ஹோர்முஸ் நீர்ச்சந்தியில் கடற்படை முற்றுகையை அதிகரித்துள்ளது.

9) அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் உட்பட 11 அழிப்புக் கப்பல்கள் மற்றும் 4 தாக்குதல் கப்பல்கள் மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

வரலாற்றில் இன்று…

1) இந்தியாவின் முதல் ரயில் 1853 இல் மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயக்கப்பட்ட தினம் இன்று.

2) சார்லி சாப்ளின் 1889 இல் பிறந்த தினம் இன்று.

3) ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான வில்பர் ரைட் 1867 இல் பிறந்த தினம் இன்று.

Education & GK News

Today is World Voice Day.

1) Parliament convenes today. The Parliamentary Constituency Delimitation Bill is scheduled to be tabled during today's session.

2) The results for the CBSE Class 10 Board Examinations were released yesterday.

3) Tamil Nadu has achieved a remarkable feat by securing the top spot among states nationwide in the CBSE Class 10 Board Examinations, recording a pass percentage of 99.92%.

4) Nationally, 93.7% of students have passed the CBSE Class 10 Board Examinations.

5) Samrat Choudhary has assumed office as the new Chief Minister of Bihar.

6) The International Monetary Fund (IMF) has projected that global economic growth will slow down to 3.1% in 2026.

7) US President Donald Trump has expressed optimism that the conflict with Iran is nearing its end.

8) Even as preparations for peace talks are underway, the United States has intensified its naval presence in the Strait of Hormuz.

9) A total of 11 destroyers—including the US aircraft carrier USS Abraham Lincoln—and 4 assault ships have been deployed in the waters of the Middle East.

On This Day in History…

1) Today marks the anniversary of the launch of India's first passenger train service, which ran between Mumbai and Thane in 1853.

2) Today is the birth anniversary of Charlie Chaplin, who was born in 1889.

3) Today is the birth anniversary of Wilbur Wright—one of the pioneers of aviation—who was born in 1867.

2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பயன்படும் நிரப்பப்பட்ட மாதிரிப் படிவங்கள்

2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பயன்படும் நிரப்பப்பட்ட மாதிரிப் படிவங்கள்

23.04.2026 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலின் போது வாக்குச்சாவடித் தலைமை அலுவலருக்குப் பயன்படும் நிரப்பப்பட்ட மாதிரிப் படிவங்களைக் கீழே காண்க.












*****

Tuesday, 14 April 2026

திறன் செயல்திட்ட அறிக்கைக்கான மாதிரிப் படிவம்

திறன் செயல்திட்ட அறிக்கைக்கான மாதிரிப் படிவம்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் திறன் அடைவு மேம்பாட்டு அறிக்கையினைத் தயாரிக்கத் தேவைப்படும் செயல்திட்ட அறிக்கையைக் கீழே காண்க.

*****

தபால் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி?

தபால் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி?

தபால் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி என்கிற விவரத்தைக் கீழே காண்க.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.04.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.04.2026

இன்று உலக கலை நாள்.

1) தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கும்.

2) நீட் தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

3) பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதியும் வெளியாகும்.

4) யுஜிசி – நெட் தேர்வுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும்.

5) தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் தொடங்குகிறது.

6) 61 நாட்கள் தொடரும் மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.

7) ஆர்மிடெஸ் – 2 விண்கலம் வெற்றிகரமாகத் தனது பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ளது. அதில் பயணித்தவர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளனர்.

8) அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம் குறித்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லமாபாத்தில் விரைவில் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் இன்று…

1) கணிதத்தின் அரசர் எனப் போற்றப்படும் ஆய்லர் 1707 இல் பிறந்த தினம் இன்று.

2) புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை வரைந்த லியொனார்டோ டா வின்சி 1452 இல் பிறந்த தினம் இன்று.

3) சென்னையில் வள்ளுவர் கோட்டம் 1976 இல் திறக்கப்பட்ட தினம் இன்று.

Education & GK News

Today is World Art Day.

1) Online registration for engineering courses in Tamil Nadu will commence during the second week of May.

2) The NEET examination is scheduled to be held on May 3rd.

3) The results for the Class 12 public examinations will be released on May 8th, and the results for the Class 10 public examinations will be released on May 20th.

4) The notification for the UGC-NET examination will be issued at the end of this month.

5) The fishing ban period in Tamil Nadu begins today.

6) During this 61-day fishing ban period, mechanized fishing boats are prohibited from venturing into the sea.

7) The Artemis II spacecraft has successfully completed its mission and returned to Earth; its crew members have landed safely.

8) US President Donald Trump has stated that the second phase of peace talks regarding a ceasefire between the United States and Iran will begin shortly in Islamabad.

Today in History…

1) Today marks the birth anniversary of Euler, who is hailed as the "King of Mathematics" (born in 1707).

2) Today marks the birth anniversary of Leonardo da Vinci, the creator of the world-renowned Mona Lisa painting (born in 1452).

3) Today marks the anniversary of the inauguration of Valluvar Kottam in Chennai (opened in 1976).

Monday, 13 April 2026

சிறுமாற்றங்களும் சிகரத் திருப்பு முனைகளும்!

சிறுமாற்றங்களும் சிகரத் திருப்பு முனைகளும்!

கண்டுபிடிப்புகள் தற்செயலாக நடக்கலாம், ஆனால் வாழ்க்கை மாற நாம் கொஞ்சம் அதை டிசைன் செய்ய வேண்டும்.

பெரிய சபதங்களை விட, சிறு சிறு பழக்கங்களே ஜெயிக்க வைக்கின்றன.

தினமும் இரண்டு மணி நேரம் படிப்பேன், என்று சொல்லாதீர்கள். தினமும் ஒரு பக்கம் படிப்பேன், என்று ஆரம்பியுங்கள். மூளைக்கு இது ஒரு பெரிய சுமையாகத் தெரியாது, அதனால் எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஒத்துழைக்கும். நீங்கள் படிப்பில் சாதிப்பீர்கள்.

மொத்தக் குடும்பத்தையும் மாற்றப் போராடாதீர்கள். நீங்கள் மட்டும் சின்னதாக ஒரு பழக்கத்தை ஆரம்பியுங்கள். காலையில் ஐந்து நிமிடம் ஒன்றாக அமர்ந்து காபி குடிப்பது அல்லது ஒரு குட்டி வாக். ரிப்பிள் எபெக்ட் போல அது மெல்ல மெல்ல எல்லோரையும் தொற்றும். உங்கள் குடும்பம் ஒரு மகத்தான மாற்றத்தை நிகழ்த்தும்.

ஒரு தெருவைச் சுத்தம் செய்யத் தேவையில்லை, ஒரு முதியவருக்கு உதவி செய்யுங்கள் அல்லது ஒரு மரக்கன்று நடுங்கள். நீங்கள் செய்வதைப் பார்த்து மற்றவர்களுக்குள் ஒரு அற எழுச்சி உருவாகும் என்கிறது சமூக அறிவியல்.

கண்டுபிடிப்பாளர்கள் அதிர்ஷ்டசாலிகள் மட்டுமல்ல, அவர்கள் கவனிப்பாளர்கள். ஏன் இது இப்படி நடந்தது? என்று கேட்கும் எவருக்கும் ஒரு புது உலகம் திறக்கக் காத்திருக்கிறது.

லூயிஸ் பாஸ்டர் சொன்னது போல, தயாராக இருக்கும் மனதையே வாய்ப்புகள் தேடி வரும்.

அடுத்த முறை நீங்கள் எதையாவது கீழே கொட்டினால் வருத்தப்பட வேண்டாம். கொஞ்சம் உற்றுப் பாருங்கள், அது ஒரு புதிய கண்டுபிடிப்பின் ஆரம்பமாக இருக்கலாம்!

உலகை மாற்ற, உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள, நீங்கள் புதிய கண்டுபிடிப்பாளராக எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

சிறு சிறு பழக்கங்கள் மூலமாகவும், தங்கள் பலவீனத்தையே பலமாக மாற்றிக் கொள்வதன் மூலமாகவும் இந்த உலகத்தை அண்ணாந்து பார்க்க வைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருவரைப் பற்றி இங்கு காண்போம்.

முதலாமவர், ஓர் ஆசிரியர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஜெனிவீவ் வியா காவா என்பவர் ஒரு ஸ்பெஷல் எஜுகேஷன் டீச்சர். 45 வருடம் ஸ்பெஷல் குழந்தைகளுக்காகவே தன் வாழ்க்கையைத் தாரை வார்த்தவர். அவர் இறந்தபோது, அவர் ஒரு மல்டி மில்லியன் மில்லியனர் என்பது யாருக்கும் தெரியாது.

ஏன் தெரியுமா? அவர் வாழ்ந்த விதம் அப்படி. கிரேட் டிப்ரஷன் காலத்தில் வளர்ந்தவர் என்பதால், ஒரு கூப்பன் பேப்பரைக் கூட வீணாக்க மாட்டார். சிக்கனம் அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது.

அவர் இறந்த பிறகு அவர் வேலை பார்த்த பள்ளிக்கு ஒரு செக் வந்தது. அதன் மதிப்பு ஒரு மில்லியன் டாலர். ஏதோ கொஞ்சம் உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தார், ஆனால் இவ்வளவு பெரிய தொகையா? என்று ஸ்கூல் சூப்பரிண்டெண்ட்டே ஆச்சரியப்பட்டார்.

அந்தப் பணத்தில் வரும் வட்டியில் மட்டும் ஆண்டுக்கு 25,000 டாலர் ஸ்காலர்ஷிப் அந்தப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கிறது. ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கும் தலா 1,00,000 டாலர் கொடுத்திருக்கிறார். சிக்கனம் என்பது கஞ்சத்தனம் அல்ல, அது ஒரு சேமிப்பு, என்பதற்கு இவர்தான் ஆகச்சிறந்த உதாரணம்.

இரண்டாமவர், ஓர் ஓவியர்.

ஸ்டீபன் வில்ட்ஷையர் என்பவர் லண்டனைச் சேர்ந்த ஓவியர். இந்த ஓவியரின் மூளை ஒரு ஹார்டு டிஸ்க் போல. இவருக்கு ஆட்டிசம். ஒன்பது வயது வரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால், ஏழு வயதிலேயே தன் முதல் ஓவியத்தை விற்றவர்.

இவருடைய ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? ஒரு ஹெலிகாப்டரில் ஏறி ஒரு நகரத்தை 20 நிமிடம் பார்த்தால் போதும். கீழே இறங்கி வந்து, அந்த நகரத்தின் ஒவ்வொரு ஜன்னல், ஒவ்வொரு அடுக்கு என அப்படியே தத்ரூபமாக வரைந்துவிடுவார்.

ஒருமுறை நியூயார்க் நகரத்தை 20 நிமிடம் பார்த்துவிட்டு, 19 அடி நீளமுள்ள ஒரு பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்தார். அதில் ஒரு சிறு தவறு கூட கிடையாது. எல்லோரும் பார்ப்பதைப் பார்ப்பார்கள், ஸ்டீபன் ஒரு ஸ்பாஞ்ச் போல எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்வார்.

லண்டன் ஆர்ட் ஸ்கூலில் பட்டம் பெற்ற இவருக்கு, கலைத்துறைக்கான எம்பிஇ விருதும் வழங்கப்பட்டது. ஒருவரது பலவீனம், உலகின் மிகப்பெரிய பலமாக மாறும் என்பதற்கு ஸ்டீபனே சாட்சி.

உலகில் இரண்டு வகை மனிதர்கள் உண்டு. ஒருவர் தன் திறமையையும் பணத்தையும் ஊதிப் பெருக்குபவர்கள். இன்னொருவர், அமைதியாகச் சேர்த்து வைத்து அதை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்பவர்கள். ஜெனிவீவ் போன்ற டீச்சர்களும், ஸ்டீபன் போன்ற கலைஞர்களும் இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் அழகாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தக் கதைகள் உங்களையும் உத்வேகமூட்டி அப்படி மாற்றக் கூடியவை. இது போன்ற நம்பிக்கையூட்டும், ஜெயிக்கத் தூண்டும் கதைகளைத் தொடர்ந்து காண்போம். இணைந்திருங்கள்.

*****