தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்கான
தேர்தல் பணிகள்
ஏப்ரல் 2026 இல் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான பணிகளைக் கீழே காண்க.
*****
பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்கான
தேர்தல் பணிகள்
ஏப்ரல் 2026 இல் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான பணிகளைக் கீழே காண்க.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.03.2026
இன்று உலக வானிலை நாள்.
1) இன்று
முதல் மாநிலங்களுக்கு 20% கூடுதல் வணிக ரீதியான கேஸ் சிலிண்டர்களை ஒதுக்க மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
2) பெரும்
பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு
வழங்க உள்ளது.
3) ஹோர்முஸ்
நீர்ச்சந்தியை 48 மணி நேரத்திற்குள் முழுமையாகத் திறக்காவிடில் ஈரான் கடுமையான விளைவுகளை
எதிர்கொள்ள நேரிடும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4) இந்தியப்
பெருங்கடலில் உள்ள அமெரிக்க – பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது
ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
5) ஹோர்முஸ்
நீர்ச்சந்தி மூடப்படும் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்
ஒன்றுக்கு 115 டாலரைத் தாண்டியுள்ளது.
6) தமிழகத்தில்
மார்ச் 26 வரை வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை
ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வரலாற்றில் இன்று…
1) பகத்
சிங், சிவராம் ராஜகுரு மற்றும் சுக்தேவ் தாபர் ஆகிய மூவரும் பிரிட்டிஷ் அரசால் லாகூர்
சிறையில் 1931 இல் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று.
2) இந்தியத்
தொழில்துறையின் தந்தை என அழைக்கப்படும் ஜாம்செட்ஜி டாட்டா 1839 இல் பிறந்த தினம்.
3) இன்று
தேசிய நாய்க்குட்டிகள் தினம்.
Education & GK News
Today is
World Meteorological Day.
1) Starting today, the Central Government has decided to
allocate an additional 20% of commercial gas cylinders to the states.
2) The court is set to deliver its verdict today in the
Sathankulam father-son murder case, which had caused a massive sensation.
3) Donald Trump has warned that Iran will face severe
consequences if it does not fully reopen the Strait of Hormuz within 48 hours.
4) Iran has launched a missile attack on Diego Garcia, a
joint US-British military base located in the Indian Ocean.
5) Crude oil prices in the international market have
crossed the $115-per-barrel mark due to fears that the Strait of Hormuz might
be closed.
6) The Meteorological Department has warned that
temperatures in Tamil Nadu are likely to rise by up to 5 degrees Celsius above
normal levels until March 26.
Today in
History…
1) Today marks the day in 1931 when Bhagat Singh,
Shivaram Rajguru, and Sukhdev Thapar were executed by the British government in
Lahore Jail.
2) Today is the birth anniversary of Jamsetji Tata,
often hailed as the Father of Indian Industry, who was born in 1839.
3) Today is National Puppy Day.
வேகம் என்பது ஒரு போலி கௌரவம்!
நவீன
வாழ்க்கையில் ஒரு விசித்திரமான நோய் பரவியிருக்கிறது. எப்போதும் எதையோ துரத்திக் கொண்டிருக்கிறோம்.
நம் To-do லிஸ்ட்டில் டிக் அடிப்பதையே ஒரு சாதனையாக நினைக்கிறோம். ரொம்ப பிஸியா இருக்கேன்
சார் என்று சொல்வதைப் பெருமை தரும் ஒரு பேட்ஜ் போல அணிந்து கொள்கிறோம்.
உண்மையில்
நாம் வாழ்வது ஆட்டோ பைலட் மோடு. நமக்கே தெரியாமல் மெஷினாக மாறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த
ஓட்டப்பந்தயத்திற்கு ஒரு ஆன்டிடோட் வந்திருக்கிறது. அதன் பெயர் ஸ்லோ லிவிங் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
சிலர்
நினைக்கிறார்கள், ஸ்லோ லிவிங் என்றால் சோம்பேறித்தனம் என்று. அதுதான் இல்லை. இது நேரத்தை
வீணடிப்பது அல்ல, உங்களை மீட்டெடுப்பது.
அவசியமற்ற
விஷயங்களை டெலீட் செய்துவிட்டு, உண்மையில் உங்களுக்குப் பிடித்த, முக்கியமான விஷயங்களுக்கு
ஸ்பேஸ் ஒதுக்குவதுதான் இதன் அடிப்படை. ஒரு காரியத்தை அவசரமாகச் செய்வதை விட, அழகாகச்
செய்வதுதான் இதன் நோக்கம்.
ஸ்லோ
லிவிங்கிற்கு என்று தனி ஆபீஸோ, தலைவரோ கிடையாது. ஆனால், இதைப் பின்பற்றுபவர்கள் சில
பொதுவான விதிகளை வைத்திருக்கிறார்கள்.
வேகமான
வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் ஒரு பதற்றம் இருக்கும். ஆனால் ஸ்லோ லிவிங், அந்தப் பதற்றத்தை
விடுத்து நிகழ்காலத்தை ரசிக்கச் சொல்கிறது. இதுதான் அந்த மைண்ட்ஃபுல்னஸ். இது முதல்
விதி.
ஓடிக்கொண்டே
இருப்பவர்களுக்கு யாருடனும் பேச நேரமிருக்காது. ஸ்லோ லிவிங் என்பது உங்கள் உறவுகளுக்கு,
உங்கள் விருப்பமான ஹாபிக்களுக்கு, மற்றும் இயற்கைக்கு நேரம் ஒதுக்குவதை முக்கியமாகக்
கருதுகிறது. இது ஒரு இனிமையான பிணைப்பை உருவாக்குகிறது. இது இரண்டாம் விதி.
மொத்தத்தில்
வேகமாக ஓடும் ரயிலில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்தால் மரங்கள் எல்லாம் பச்சைக்கோடாகத்தான்
தெரியும். ரயில் மெதுவாகப் போகும்போதுதான் அது தென்னை மரம், இது அரச மரம் என்று அடையாளம்
தெரியும். வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.
பிஸியாக
இருப்பது கௌரவம் அல்ல, நிம்மதியாக இருப்பதுதான் சௌகரியம்! இதுதான் ஸ்லோ லிவ்விங் சொல்ல
வரும் நியதி.
இது
உங்களுக்குப் பொருந்துமா? இது உங்களுக்கு வேண்டுமா? அதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
*****
ஸ்லோ லிவிங் - கொஞ்சம் நில்லுங்கள் ராஜா!
உங்கள்
காலை எப்படித் தொடங்குகிறது?
அலாரம்
அடித்ததும் அந்த ஸ்னூஸ் பட்டனைத் தேடித் தேய்த்துவிட்டு, பிறகு பதறியடித்து எழுந்து,
ஒரு கையில் பிரஷ்ஷும் மறு கையில் பிரெட்டும் பிடித்துக்கொண்டு ஓடுகிறீர்களா? ஆபீஸில்
ஒரு முடிவே இல்லாத To-do லிஸ்ட். சதா காலமும் ஸ்ட்ரெஸ். வீட்டுக்கு வந்தால் சோபாவில்
விழுந்து மொபைலை நோண்டிக்கொண்டே தூக்கம் வராத ஒரு ராத்திரி.
அப்படி
இருந்தால்… ஸ்டாப்! கொஞ்சம் பிரேக் போடுங்கள்.
வாழ்க்கை
என்பது ஓடி முடிக்க வேண்டிய ரேஸ் அல்ல, அது ரசித்து அருந்த வேண்டிய ஒரு ஃபில்டர் காபி.
ஸ்லோ லிவிங் என்ற தத்துவம் பேசுவது அதைத்தான்.
அதாகப்பட்டது,
மெதுவாக.... ஆனால் அர்த்தமுள்ளதாக!
அலாரத்தோடு
மல்யுத்தம் செய்வதை நிறுத்துங்கள். ஐந்து நிமிடம் ஜன்னல் வழியே வானத்தைப் பாருங்கள்.
காபியின் வாசத்தை நுகருங்கள்.
வீடு
என்பது வெறும் கான்கிரீட் பெட்டி அல்ல. அதை நிம்மதி தரும் இடமாக மாற்றுங்கள். தேவையற்ற
குப்பைகளையும், தேவையற்ற டென்ஷன்களையும் டெலீட் செய்யுங்கள்.
வாட்ஸ்அப்
மெசேஜ்களைத் தாண்டி, பக்கத்தில் இருப்பவரின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். குவாலிட்டி
டைம் என்பது ஓர் இன்வெஸ்ட்மென்ட்.
சாப்பிடும்போது சாப்பாட்டின் ருசியை உணருங்கள். நடக்கும்போது
காலடியில் இருக்கும் மண்ணை உணருங்கள். இயற்கையோடு ஒரு சின்ன தொடர்பு எப்போதும் இருக்கட்டும்.
நிம்மதியான
தூக்கம். குறைவான ஸ்ட்ரெஸ். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தச் சின்னச் சின்ன விஷயங்களில்
ஒளிந்திருக்கும் சந்தோஷம் உங்களைப் பார்த்துப் புன்னகைக்கும்.
மெதுவாகத்
தொடங்குங்கள். ஆனால் நிச்சயமாகத் தொடங்குங்கள். ஒரு மகிழ்ச்சியான நீங்கள் உருவாவதற்கு
இதுதான் ரூட் மேப்.
வேகமாக
ஓடினால் லேண்ட்ஸ்கேப் மங்கலாகத் தெரியும். நிதானமாக நடந்தால் தான் பூக்களின் நிறம்
புரியும்! இது குறித்து நாளையும் கொஞ்சம் பார்ப்போம்.
****
ஆண்டுத் தேர்வு அட்டவணை – 2026
முதல்
வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தொகுத்தறித் தேர்வு மற்றும்
ஆண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையைக் கீழே காண்க.
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையைக் கீழே காண்க.
*****
கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.03.2026
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்.
1) ஏப்ரல்
17க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
2) 2026
– 27 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் குழந்தைகளைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3) கேந்திரிய
வித்தியாலயா பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல்
தொடங்குகிறது.
4) மார்ச்
22 வரை தமிழகத்திற்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5) உள்நாட்டு
மருந்து உற்பத்தியை மேம்படுத்த 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பயோபார்மா சக்தி எனும்
திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
6) இந்தியாவின்
அந்நியச் செலாவணி இருப்பு 701.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
வரலாற்றில் இன்று…
1) இன்று
உலக மகிழ்ச்சி தினம்.
2) இன்று
உலக வாய் ஆரோக்கிய தினம்.
3)
1992 இல் சத்தியஜித்ரேக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட தினம் இன்று.
4)
1915 இல் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை வெளியிட்ட தினம் இன்று.
5) ஐசக்
நியூட்டன் 1727 ஆம் ஆண்டு மறைந்த தினம் இன்று.
Education & GK News
Today is
World Sparrow Day.
1) The School Education Department has planned to
complete school examinations by April 17.
2) A target has been set to enroll 4,00,000 children in
government schools during the 2026–27 academic year.
3) Online registration for student admissions at
Kendriya Vidyalaya schools begins today.
4) The Meteorological Department has forecast a
possibility of rain in Tamil Nadu until March 22.
5) A scheme worth Rs. 10,000 crore, titled 'BioPharma
Shakti', has been announced to boost domestic pharmaceutical production.
6) India's foreign exchange reserves have risen to
$701.4 billion.
Today in
History…
1) Today is the International Day of Happiness.
2) Today is World Oral Health Day.
3) Today marks the day in 1992 when Satyajit Ray was
conferred with the Bharat Ratna.
4) Today marks the day in 1915 when Einstein published
his Theory of Relativity.
5) Today marks the day in 1727 when Isaac Newton passed
away.
ஜெயித்த கதைகள் எப்படி ஜெயிக்க வைக்கின்றன?
டிவியைத்
திறந்தால் போர், போனைத் திறந்தால் எகனாமிக் கிரைசிஸ், வெளியே போனால் க்ளைமேட் சேஞ்ச்.
உலகமே ஒரு எர்ரர் மெசேஜ் போலத்தான் தெரிகிறது. ஆனால், இருட்டு அதிகமாகும்போதுதான் ஒரு
சின்ன மெழுகுவர்த்தி வெளிச்சம் கூட லேசர் போலத் தெரியும்.
இங்கே
ஒளிந்திருப்பது ஒரு சின்ன லாஜிக். உலகம் அழிகிறது என்று ஒரு பக்கம் அலறிக் கொண்டிருக்கும்போதே,
இன்னொரு பக்கம் ஒருவன் தன் கனவை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறான். இக்கட்டான சூழலிலும்சிரித்துக்
கொண்டு சந்தோஷமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
இது
வெறும் பீல் குட் சமாச்சாரம் அல்ல. ஆம், தன்னம்பிக்கைக் கதைகள் நிஜத்திலிருந்து திசைதிருப்புவன
அல்ல. மாறாக, ஆர்வமும் முயற்சியும் எவ்வளவு பலமானது என்பதை நிரூபிப்பவை. இதற்குப் பின்னால்
ஓர் அறிவியல் இருக்கிறது. பாசிட்டிவ் கதைகளைப் படிக்கும்போது உங்கள் மூளைக்குள் சில
ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன.
அதனால்,
மன அழுத்தம் குறைகிறது. நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகிறது. பிறருக்கு உதவும் எண்ணம்
எட்டிப்பார்க்கிறது.
சுருக்கமாகச்
சொன்னால், ஜெயித்த கதைகளைப் படிக்கும்போது, உங்கள் மூளை அதைத் தன் வெற்றியாகவே பாவித்துப்
பிரதிவினை செய்கிறது.
ஜெயித்த
கதைகளில் வருபவர்கள் கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவனாக இருக்கலாம், 90 வயதிலும் சாதித்த
மூதாட்டியாக இருக்கலாம். சிறையில் இருக்கும் ஒரு கைதியாகவும் இருக்கலாம்.
அவர்கள்
ஸ்பெஷல் ஆட்கள் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சாதாரண ஆட்களாகவும் இருக்கலாம். ஆனால்,
முயற்சி என்கிற பட்டனை மட்டும் தட்டிவிட்டு, ஆர்வம் எனும் ரோலர் கோஸ்டரில் ஏறி சாதித்த
அசாதாரணர்கள் அவர்கள்.
ஆரியன்
சுக்லா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 14 வயதுப் பையன். ஒரே நாளில் ஆறு உலக சாதனைகளை காலி
செய்திருக்கிறான். கால்குலேட்டரை விட வேகமாக மனக்கணக்கு போடுகிறான். இவனுடைய நியூரான்
நெட்வொர்க்குகள் எப்படி இவ்வளவு வேகமாக பயரிங் ஆகின்றன? ஒருவேளை இவன் மூளையில் சூப்பர்
கம்ப்யூட்டர் சிப் எதாவது ரகசியமாகப் பொருத்தப்பட்டிருக்குமோ என்று சந்தேகம் வரலாம்.
இல்லை, இது ப்யூர் ஹ்யூமன் இன்டெலிஜென்ஸ்.
வில்லியம்
கம்வம்பா, மலாவி தேசத்து பையன். சாப்பாட்டுக்கே வழியில்லை. ஆனால், 14 வயதில் பழைய இரும்புச்
சாமான்களை வைத்து ஒரு காற்றாலையை உருவாக்கி
தன் வீட்டுக்கு மின்சாரம் கொடுத்திருக்கிறான். கூகுள் இல்லாத காலத்திலேயே இவன் செய்த
இந்த பிரமிப்பு ஒரு பெரிய அறிவியல் மித்.
ஜெனிவீவ்
வியா காவா, 45 வருடம் டீச்சராகப் பணிபுரிந்தவர். மிகச் சாதாரணமாக வாழ்ந்துவிட்டுப்
போனார். ஆனால் அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது, ரகசியமாகச் சேர்த்து வைத்த பணத்தை ஸ்பெஷல்
நீட்ஸ் மாணவர்களின் ஸ்காலர்ஷிப்புக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.
மேடம்
சி.ஜே. வாக்கர், சாதாரண நிலையில் இருந்து மில்லியனராக உயர்ந்தவர்.
ரோசா
பார்க்ஸ், ஒரு பேருந்து இருக்கையில் அமர்ந்தபடி ஒரு மாபெரும் புரட்சியைத் தொடங்கி வைத்தவர்.
இவர்களைப் பற்றியெல்லாம் அடுத்தடுத்து கொஞ்சம் விரிவாகவேப் பார்ப்போம்.
இப்போது
விசயத்துக்கு வருவோம்.
இப்படி
ஜெயித்த கதைகள் ஏராளம் இருக்கின்றன. அவை ஜெயித்த கதைகள் மட்டுமல்ல, அவற்றைப் படிக்க
படிக்க படிப்போரை ஜெயிக்க வைக்கும் கதைகளும் கூட.
இந்நிஜ
கதைகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி ஒன்றிருக்கிறது. அது என்னவென்றால்,
நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் ஒரு வேலிதான் லிமிட். ஆனால், சில மனிதர்களுக்கு இந்த
வேலி தெரிவதே இல்லை. அவர்கள் ஜெயிக்கிறார்கள், சாதிக்கிறார்கள்.
ஆம்,
மாற்றத்தை உருவாக்குபவர்கள் எப்போதுமே மைக்கை பிடித்துக் கத்துபவர்கள் அல்ல. அமைதியாக,
பிடிவாதமாக தன் வேலையைச் செய்து கொண்டிருப்பவர்கள்.
இந்த
உலகம் கொலாப்ஸ் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் இவர்களைப் போன்றவர்கள்தான். சாதாரண மனிதர்களிடம்
ஒளிந்திருக்கும் இந்த எக்ஸ்ட்ரார்டினரி அம்சம்தான் மனித இனத்தின் மிகப் பெரிய பிளஸ்
பாயிண்ட். அதுதான் ஆர்வமும் விடாமுயற்சியும்.
இதிலிருந்து
நாம் அறிந்து கொள்ள வேண்டியது நமக்குத் தேவைப்படுவது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆர்வத்துடன்
கூடிய விடாமுயற்சி என்கிற அந்த ஒரு சின்ன ஸ்பார்க் என்பதுதான்.
இது
குறித்துத் தொடர்ந்து பேசுவோம். காத்திருங்கள்.
*****