Wednesday, 10 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 11.06.2026

1) இந்திய வரலாற்றில் 4,398 இந்தியப் பிரதமராகப் பதவி வகித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

2) மறைந்த 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

3) தமிழக முதலமைச்சர் விஜய் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார்.

4) தமிழகத்தில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என தமிழக அரசு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

5) குஜராத்தில் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மெட்டா கைகோர்த்துள்ளது.

6) ஈரானை கடுமையாக தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

7) கனடாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

Education & GK News

1) Prime Minister Narendra Modi has set a new historical record by serving as India's Prime Minister for 4,398 days.

2) The mortal remains of the late 'Iyakkunar Imayam' Bharathiraja are being laid to rest today with full state honors.

3) Tamil Nadu Chief Minister Vijay has traveled to Delhi for a three-day visit.

4) The Tamil Nadu government has issued a strict order prohibiting the sale of alcohol to individuals under the age of 21.

5) Meta has partnered with Reliance to establish a massive artificial intelligence data center in Gujarat.

6) US President Donald Trump has warned that Iran will face a severe attack.

7) The Canadian government has imposed a sweeping ban on the use of social media by individuals under the age of 16.

லவ் யுவர்செல்ப் – ஒரு யுரேகா மொமெண்ட்!

லவ் யுவர்செல்ப் – ஒரு யுரேகா மொமெண்ட்!

உங்களை உங்களுக்குப் பிடிக்கிறதா?

என்ன சார் கேள்வி இது, எனக்காகத்தானே நான் மூச்சு விடுறேன்? என்று கேட்கலாம்.

ஆனால், பலரது மூளை ஒரு விசித்திரமான அல்காரிதத்தில் ஓடுகிறது.

நான் பத்து கிலோ எடை குறைத்த பிறகுதான் எனக்கு என்னைப் பிடிக்கும், பேங்க் பேலன்ஸ் ஆறு இலக்கத்தைத் தொட்டால்தான் நான் சக்சஸ் என நினைப்பேன் என்று நிபந்தனைகள் போட்டுக்கொண்டே இருக்கிறோம். அவை நிறைவேறுவதன் அடிப்படையில்தான் என்னை எனக்குப் பிடிக்கும் என்கின்ற பிடிவாதத்தோடு வாழ்கிறோம்.

உண்மை என்னவென்றால், செல்ப் லவ் என்பது ஓர் இலக்கல்ல; அது ஒரு மென்பொருள் அப்டேட். இப்போதே, இங்கே, இருக்கும் நிலையிலேயே உங்களை ஏற்றுக்கொள்வதுதான் அதன் சோர்ஸ் கோட்.

உங்களை உங்களுக்குப் பிடிக்க என்ன செய்வது?

உங்கள் நேரம், உங்கள் உழைப்பு, உங்கள் உணர்வுகள் என இவை எல்லாவற்றிற்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. உங்களை மதிக்காத, உங்கள் எனர்ஜியை உறிஞ்சும் எமோஷனல் வேம்பயர்களைத் தள்ளி வையுங்கள். இந்த விசயத்தில் தூரம் என்பது சில சமயம் ஆரோக்கியமானது.

நோ என்று சொல்வது ஒரு கலை. மற்றவர்களுக்கு உங்கள் தேவைகளைத் தெளிவாகச் சொல்வது தப்பில்லை. எல்லைக் கோடுகளை வரைவது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம், ஆனால் உங்கள் மன அமைதிக்கு அதுவே பாதுகாப்பு வேலி. லிமிட்டோடு இருப்பது அன்லிமிடெட் திருப்தியை வாரி வழங்கும்.

உங்களைப் பாராட்டி வந்த மெசேஜ்கள், மெயில்கள், கடிதங்கள் என இதையெல்லாம் ஒரு போல்டரில் போட்டு வையுங்கள். எப்போதாவது நாம் எதற்கும் லாயக்கில்லை என்று தோன்றும் ரப்பிஷ் மொமென்ட்களில் அதை எடுத்துப் படியுங்கள். நீங்கள் எவ்வளவு ஆஸம் என்பது உங்களுக்கே புரியும்.

ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுங்கள். வாழ்க்கையில் நீங்கள் நன்றியோடு இருக்கும் மூன்று விஷயங்களை எழுதுங்கள். அப்புறம் இன்னும் ஒரு மூன்று. இது ஒரு பழைய டெக்னிக்தான், ஆனால் மூளையின் நெகட்டிவ் பயாஸை உடைக்க இதுவே சிறந்த சுத்தியல்.

நமக்கு நாமே மிகப்பெரிய விமர்சகர். கண்ணாடி முன்னால் நின்று, ஏன் இப்படி இருக்கே? என்று கேட்பதற்குப் பதில், ஒரு நல்ல நண்பனிடம் பேசுவது போலப் பேசுங்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தும் சியர்லீடராக மாறுங்கள். நெகட்டிவ் சிந்தனைச் சுழலில் சிக்காதீர்கள்.

வாழ்க்கை என்பது ஒரு பரிசு. இந்த டிரஸை ஒரு விசேஷத்துக்குப் போட்டுக்கலாம், இந்த ஸ்கெட்ச் புக்கை அப்புறம் பயன்படுத்தலாம் என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள். அந்த டிரஸைப் போடுங்கள், ருசியான உணவை சமைத்துச் சாப்பிடுங்கள். இன்றுதான் மிகச்சிறந்த விசேஷம்!

சந்தோஷம் என்பது ரொம்பவே வல்னரபிள். இவ்வளவு சந்தோஷமா இருக்கோமே, ஏதும் ஆகிடுமோ? என்கிற பயம் வரும். அந்தப் பயத்தை விரட்ட கிராட்டிட்யூட் எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்களை நேசிப்பது என்பது ஏதோ சுயநலம் என்று நினைக்காதீர்கள். அது ஒரு அடிப்படைத் தேவை. உங்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், உங்களால் மற்றவர்களை எப்படி நேசிக்க முடியும்?

நாளை முதல் நான் மாறப்போகிறேன் என்பது ஒரு சடங்கு. இன்று எனக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்பது ஒரு சாதனை.

இன்று மாலை கண்ணாடியைப் பார்த்து ஒரு சின்னப் புன்னகை செய்யுங்கள். பரவாயில்லை, நீ ஒரு நல்ல ஆள்தான் என்று உங்களிடமே சொல்லிக்கொள்ளுங்கள். அந்த ஒரு நொடி உங்கள் மூளையின் டோபமைன் அளவை எகிற வைக்கும். உங்கள் செல்ப் லவ் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

லெட்ஸ் ஸ்டார்ட் யுவர் யுரேகா மொமெண்ட்!

*****

Tuesday, 9 June 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.06.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.06.2026

1) சிங்கப்பெண் அதிரடிப் படையைத் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

2) தமிழக முதல்வர் இன்றுஅரசு முறைப் பயணமாக டில்லி செல்கிறார்.

3) நீட் மறுதேர்வு தவறில்லாமல் நடத்தப்படும் என தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.

4) அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியதை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்தது.

5) நார்வே செஸ் தொடரை வென்று சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு, முதல்வர் விஜய் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

Education & GK News

1) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay inaugurated the 'Singappenn' special task force.

2) The Tamil Nadu Chief Minister is traveling to Delhi today on an official visit.

3) Dharmendra Pradhan has stated that the NEET re-examination will be conducted without any errors.

4) A US court struck down the hike in H-1B visa fees implemented by US President Trump.

5) Chief Minister Vijay praised Tamil Nadu player Praggnanandhaa for his historic victory in the Norway Chess tournament and awarded him an incentive of Rs.50 lakh.

குட்டிப் பிசாசுகளும் கொஞ்சம் சைக்காலஜியும்!

குட்டிப் பிசாசுகளும் கொஞ்சம் சைக்காலஜியும்!

ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது ஏதோ ஸ்கூல் பீஸ் கட்டுவதோ, லஞ்ச் பாக்ஸ் பேக் செய்வதோ அல்ல. அது ஒரு சக மனிதரின் சுயமரியாதை எனும் மென்பொருளை உருவாக்குவதற்குச் சமம்.

சைக்காலஜிஸ்ட்டுகள் என்ன சொல்கிறார்கள் என்றால், நீங்கள் குழந்தையிடம் சரியாக கம்யூனிகேட் செய்யாவிட்டால், அவர்கள் சுவிட்ச் ஆப் ஆகிவிடுவார்கள் என்கிறார்கள். அதாவது, அவர்களுக்குள் ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு, உங்களை உள்ளே விடமாட்டார்கள். அப்புறம் அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது.

அந்தச் சின்னஞ்சிறு மூளைகளுடன் எப்படி ஒரு ஹெல்தி ரிலேஷன்ஷிப் வைத்துக்கொள்வது?

உங்கள் நெருங்கிய நண்பர் ஒரு கதை சொல்லும்போது பாதியிலேயே தடுத்துவிட்டு, இரு, வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருக்கு என்று போனைப் பார்ப்பீர்களா? மாட்டீர்கள்தானே. அதே மரியாதையை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள். நீங்கள் அடிக்கடி குறுக்கிட்டால், நான் சொல்வது அப்பாவிற்கு முக்கியமில்லை, என்கிற மெசேஜ் அவர்கள் அடிமனதில் பதிவாகிவிடும். அவர்களுக்குச் செவி கொடுப்பதுதான் ஹெல்தி ரிலேஷன்ஷிப்பிற்கான முதல் படி.

முக்கியமான விஷயங்களை நாலு பேருக்கு முன்னால் வைத்துப் பேசாதீர்கள். மற்றவர்கள் முன்னால் அவர்களைச் சங்கடப்படுத்துவது, எதிர்காலத்தில் உங்கள் மேல் ஒரு தீராத பகையையும், வெறுப்பையும்  உண்டாக்கும். எதற்கும் ஒரு தனிமை தேவை. அவர்களின் உணர்வுகளை மதிப்பது இரண்டாவது படி.

சின்னக் குழந்தைகளிடம் பேசும்போது, கோபுரம் போல உயர்ந்து நின்று பேசாதீர்கள். அவர்களின் உயரத்திற்கு இறங்கி வந்து, கண்கள் நேருக்கு நேர் சந்திக்கும்படி  வைத்துப் பேசுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கும். இந்தப் பாதுகாப்பு உணர்வைத் தருவதுதான் மூன்றாவது படி.

குழந்தைகள் எதையாவது சொல்லும்போது, ம்... அப்புறம்?, இது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே, இன்னும் கொஞ்சம் சொல்லேன் போன்ற டோர் ஓப்பனர் வாசகங்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் தொனி உண்மையாக இருக்க வேண்டும். ஓப்பனா பேசு என்று சொல்லிவிட்டு, அவர்கள் பேசும்போது டிவியைப் பார்த்தால் இது ஒர்க்அவுட் ஆகாது! அவர்களைச் சுவாரசியப்படுத்துவது நான்காவது படி.

பயங்கரக் கோபமாக இருக்கும்போது எமர்ஜென்சி இல்லை என்றால், உடனே ரியாக்ட் செய்யாதீர்கள். கொஞ்சம் நிதானமாக, ஆப்ஜெக்டிவ் ஆகப் பேசுங்கள். மிக முக்கியமாக, குழந்தைகளை லேபிள் செய்யாதீர்கள். அதாவது, தவறு, நீ ஒரு முட்டாள் குழந்தை என்பதெல்லாம் வேண்டவே வேண்டாம். கோபம் உண்டாகும் சூழலிலும் அவர்களை மதித்து எதிர்மறையாக ரியாக்ட் செய்யாமல் இருப்பது ஐந்தாவது படி.

குழந்தைகள் செய்த செயல் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் அந்த குழந்தைகள் தவறானவர்கள் அல்ல. அவர்கள் எப்போதுமே உங்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்கிற நம்பிக்கையில் இருக்க வேண்டும். அதுதான் அவர்களுடனான ஹெல்தி ரிலேஷன்ஷிப்பின் ரகசியம். அதற்கு மேற்படி ஐந்து படிகளும் உங்களுக்கு உதவும்.

பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு லேபரட்டரி சோதனை போன்றது. அங்கே அன்பும், புரிதலும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். நான் உன் அப்பா, நான் சொல்றதக் கேளு, என்கிற பழைய காலத்து அல்காரிதம் இப்போது எடுபடாது.

நவீன யுகத்தில் குழந்தைகளுக்குத் தேவைப்படுவது ஒரு அத்தாரிட்டி அல்ல; ஒரு மெண்டார். அவர்களை ஒரு தனி மனிதனாக மதிக்கக் கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் அவர்கள் ஒரு அற்புதமான மனிதராக மலர்வார்கள்.

இன்று மாலை உங்கள் குழந்தை பள்ளி முடிந்து வரும்போது, செல்போனைத் தள்ளி வைத்துவிட்டு, அவர்கள் உயரத்திற்கு இறங்கி உட்கார்ந்து, இன்னைக்கு ஸ்கூல்ல என்ன ஸ்பெஷல்? என்று கேட்டுப் பாருங்களேன். அந்த ஒரு நொடியிலேயே உங்கள் இருவருக்கும் இடையிலான பெரிய சுவரைத் தகர்த்தெறியலாம்.

*****

Monday, 8 June 2026

ஹார்ட் டூ ஹார்ட் – இணைவோம்! இனிப்போம்!!

ஹார்ட் டூ ஹார்ட் – இணைவோம்! இனிப்போம்!!

மைண்ட்புல்னஸ் என்றால் ஏதோ நீங்கள் மட்டும் பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு இன்னர் பீஸ் தேடுவது என்று நினைக்காதீர்கள். அது உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்குமான ஒரு ஷேர்டு சாப்ட்வேர். குறிப்பாக ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இது மிக முக்கியம்.

உங்கள் வீடு ஒரு ஹேப்பி பிளேஸ் ஆக இருக்க வேண்டும் என்றால், உங்கள் எமோஷனல் தேவைகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களின் லட்சியங்களுக்கு நீங்கள் தோள் கொடுக்க வேண்டும்.

அதற்கான வழிமுறைகள் என்ன என்கிறீர்களா? இதோ அவை.

வாழ்க்கை போர் அடிப்பதற்குக் காரணமே அதன் ரிப்பீட்டட் மோட் தான். ஒன்றாகச் சேர்ந்து சமைப்பது, ஒரு சைக்கிள் ரேஸ் போவது அல்லது வாரா வாரம் ஒரு டேட் நைட் என எதையாவது புதிதாகச் செய்யுங்கள். இது குடும்ப உறுப்பினர்களோடு உங்கள் பாண்டிங்கை ஸ்ட்ராங் ஆக்கும்.

எப்போதும் ஒட்டியே இருக்க வேண்டும் என்பதில்லை. எனக்கு ஒரு மணி நேரம் தனியா இருக்கணும், என்று சொல்வது தப்பில்லை. உங்களுக்கு நீங்களே நேரம் ஒதுக்கிக் கொண்டால்தான், உங்கள் பார்ட்னருக்குத் தர உங்களிடம் எனர்ஜி மிச்சமிருக்கும். அவர் எவ்வளவு ஸ்பேஸ் எதிர்பார்க்கிறார் என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அவங்கதானே, எங்க போகப் போறாங்க? என்கிற அசட்டுத் துணிச்சல்  வேண்டாம். அவ்வப்போது சின்னச் சின்ன சர்ப்ரைஸ் கொடுங்கள். இன்னைக்கு உன்னோட டிரெஸ் ஸ்டைல் சூப்பர், என்று ஒரு சின்ன காம்ப்ளிமென்ட் கொடுப்பதில் ஜிஎஸ்டி எதுவும் கிடையாது!

மனதில் எதையும் பூட்டி வைக்காதீர்கள். ஒளிவுமறைவு இல்லாத பேச்சு கசப்பான உணர்வுகளைக் குறைக்கும். முக்கியமாக, அவர்கள் சொல்லும் போது சட்டென்று ரியாக்ட் செய்யாமல், கொஞ்சம் நிதானித்து ரெஸ்பான்ட் செய்யுங்கள்.

உறவு நன்றாகப் போகிறதா? எதற்கெல்லாம் நீங்கள் நன்றியோடு இருக்கிறீர்கள் என்று ஒரு லிஸ்ட் போடுங்கள். ஆனால், அங்கே மரியாதையே இல்லை, லட்சியங்கள் வேறுபடுகிறது என்றால், அந்த உறவிலிருந்து கொஞ்சம் ஸ்பேஸ் விட்டு விலகி இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

சின்னச் சின்ன சண்டைகள் ஆரோக்கியமானதுதான். ஆனால், ஒரே விஷயம் லூப் போலத் திரும்பத் திரும்ப வந்து சண்டையாக மாறினால், அது பெர்சனல் அட்டாக் ஆக மாறினால், அது ஓர் ஆபத்து அறிகுறி.

அப்போது ஒரு புரொபஷனல் கவுன்சிலரைக் கூட அணுகுவதில் தப்பில்லை. அவர்கள் ஒரு சேப் ஸ்பேஸ் உருவாக்கித் தருவார்கள். அங்கே சண்டை வராமல், பிரச்சனையின் வேர் எது என்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் ஒரு மிரர் போல உங்களுக்கு உதவுவார்கள்.

உறவுகள் என்பது எப்போதும் ஒரு சிக்கலான அல்காரிதம். அங்கே ஈகோ நுழையும்போது அவுட்புட் எர்ரர் காட்டும். அந்த எர்ரரைச் சரி செய்ய மைண்ட்புல்னஸ் என்கிற மெக்கானிக் தேவை.

இன்று மாலை உங்கள் பார்ட்னரிடம் உறவினரிடம் போய், உங்களுக்கு நான் என்ன செய்யணும்னு? என்று ஒரு நிமிடம் கேளுங்கள். அந்த ஒரு நிமிடம் உங்கள் இருவருக்கும் இடையிலான பெரிய சுவரை உடைக்கலாம். உங்கள் மைண்ட்புல் ஹோம் மற்றும் ரிலேஷன்ஸ் அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

Sunday, 7 June 2026

உறவுகள் 2.0 – நவீன காலத்துக்குத் தேவையான ஓர் அப்டேட்!

உறவுகள் 2.0 – நவீன காலத்துக்குத் தேவையான ஓர் அப்டேட்!

உங்கள் பார்ட்னர், குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் ஆகிய இவர்களோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

ஹார்டு டிஸ்க் கிராஷ் ஆனது போல எப்போது பார்த்தாலும் சண்டையா?

அல்லது,

ஸ்மூத் ஆக ஓடிக்கொண்டிருக்கிறதா?

உளவியல் நிபுணர்கள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். சமூகத் தொடர்பு இல்லாமல் மன அழுத்தத்துடன் தனிமையில் இருப்பது, ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பதற்குச் சமம்!

ஆம்,

மன அழுத்தத்துடன் கூடிய தனிமை என்பது ஒரு ஸ்லோ பாய்சன். ஆரோக்கியமான உறவுகள் உங்கள் ஆயுளைக் கூட்டும் ஆன்டி பயாடிக்.

அந்த டாக்சிக் தனிமையைத் தவிர்க்க, உறவுகளில் இருக்கும் பக்குகளை  உங்களை வெர்ஷன் 2.0 ஆக அப்டேட் செய்ய, இதோ வழிகள்.

யாராவது உங்களிடம் பேசும்போது, ம்... ஊம்... என்று போனை நோண்டிக்கொண்டு தலையாட்டுவது லிசனிங் அல்ல. அது வெறும் நாய்ஸ் கேன்சலேஷன்.

பேசப்படுபவரின் கண்களைப் பாருங்கள், ஆனால் முறைக்காதீர்கள்!. குறுக்கே பேசாதீர்கள். உனக்கு என்ன, எனக்கு நடந்ததக் கேளு, என்று உங்கள் கதையை ஆரம்பிக்காதீர்கள்.

அவர் பேசி முடித்ததும், ஓ அப்போ இன்னைக்கு ஆபீஸ்ல உனக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கலைன்னு வருத்தப்படுறியா? என்று அவர் சொன்னதைச் சுருக்கிச் சொல்லுங்கள். இதுதான் ஆக்டிவ் லிசனிங். அப்போதுதான் அவருக்கு, நாம சொல்றதக் கேக்குறதுக்கு ஒரு ஆள் இருக்காங்க என்கிற திருப்தி வரும்.

உறவுகள் குறித்த ஆராய்ச்சி நிபுணர்கள் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி சமாச்சாரத்தைச் சொல்கிறார்கள். ஓர் ஆரோக்கியமான உறவில், ஒரு நெகட்டிவ் விஷயத்திற்கு  ஈடாக ஐந்து பாசிட்டிவ் விஷயங்கள் இருக்க வேண்டுமாம்.

அதாவது, நெகட்டிவிட்டி என்பது உப்பு போல, கொஞ்சம் இருக்கலாம். ஆனால் பாசிட்டிவிட்டிதான் மெயின் டிஷ். உங்கள் பார்ட்னரைத் தட்டிக்கொடுப்பது, ஒரு சின்ன புன்னகை, அந்த வொர்க் சூப்பர் எனப் பாராட்டுவது, யூ ஆர் ஸோ க்யூட் என்று சொல்வது, அமேசிங் என வியப்பை வெளிப்படுத்துவது என  இதெல்லாம் அந்த 5 பாயிண்ட்டில் சேரும்.

ஒரே கூரையின் கீழ் இருந்தாலும், ஆளுக்கொரு பக்கமாக மொபைலில் மூழ்கியிருந்தால் நீங்கள் ஒரு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்தான்.

ஒன்றாகச் சேர்ந்து சமையல் செய்வது, ஒரு சின்ன நடைப்பயிற்சி போவது என ஷேர்டு எக்ஸ்பீரியன்ஸ், ஒன்றாக அமர்ந்து படித்து விவாதிப்பது, பிரச்சனைகளைக் கூடிப் பேசி அலசுவது என சூழ்நிலைகளை உருவாக்குங்கள். கஷ்டமான காலங்களில் இந்த நினைவுகள்தான் குஷின் போல உங்களுக்கு உதவும்.

கலை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது உறவுகளைப் பலப்படுத்தும் ஒரு பாலம். உங்களுக்குப் பிடித்தவர்களை ஓவியமாக வரைந்து கொடுங்கள். அது கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அது அவர்களைக் கவரும். உங்கள் அன்பானவர்களின் சின்ன சின்ன விசயங்களைப் பாராட்டிக் கவிதை எழுதிக் கொடுங்கள். உங்களுக்குத் தையல் தெரியும் என்றால், ஓர் ஆடையைக் கலைநயத்தோடு உருவாக்கிக் கொடுக்கலாம். பின்னல் வேலை தெரியும் என்றால் அதை வைத்தே உறவுகளுக்கும் நட்புகளுக்கும் அருமையாகக் குல்லா போடலாம். இப்படி கலை மூலமாகவும் உறவுகளை வளர்க்கலாம், மனநிலையையும் மேம்படுத்தலாம்.

இந்தக் கலையையே ஒருவராக அல்லாமல் இருவராக, இன்னும் சிலராக சேர்ந்து செய்யும் போது அது வாழ்க்கைக்கு எனர்ஜி டானிக்தான்.

எல்லாருடனும் சேர்ந்து புது விஷயங்களைச் செய்யும்போது மூளையின் வேறுவேறு பகுதிகள் வேலை செய்யும். அது உங்கள் மன அழுத்தத்தை அற்புதமாகக் குறைக்கும்.

உங்கள் துணையுடன் சேர்ந்து ஒரு ஸ்கிராப் புக் செய்யுங்கள். பழைய போட்டோக்கள், டிக்கெட் துண்டுகளை ஒட்டி வையுங்கள். அது ஒரு மெமரி லேன் பயணம்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத ஆட்டோ பைலட் பயணம் கிடையாது என்பதை நாம் முன்பே பார்த்துள்ளோம்.

உறவுகள் என்பது ஒரு செடி போல. அதற்குத் தினமும் அட்டென்ஷன் என்கிற தண்ணீர் ஊற்ற வேண்டும்.

எல்லாரும் இருக்காங்க சார், ஆனா யாரும் என்னைப் புரிஞ்சுக்கல, என்று புலம்புவதற்குப் பதில், நீங்கள் யாரையாவது புரிந்துகொள்ள முயற்சி செய்தீர்களா என்று பாருங்கள்.

இன்று இரவு உங்கள் பார்ட்னரிடமோ அல்லது குழந்தையிடமோ போனைத் தள்ளி வைத்துவிட்டு, ஒரு பத்து நிமிடம் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். ஆக்டிவ் லிசனிங் ஒரு மேஜிக் செய்யும். ஆம், உங்கள் உறவின் ஆயுள் சந்தா இன்று புதுப்பிக்கப்படும்!

*****

Saturday, 6 June 2026

மூளைச் சுருளின் அன்வாண்ட்டட் பைல்களை டெலீட் செய்வது எப்படி?

மூளைச் சுருளின் அன்வாண்ட்டட் பைல்களை டெலீட் செய்வது எப்படி?

நம் மூளை எப்போதும் ஒரு ஓவர்லோடு ஆன ஹார்டு டிஸ்க் போல இருக்கிறது. வாட்ஸ்அப் மெசேஜ், ஆபீஸ் மெயில், இன்ஸ்டா ரீல்ஸ் எனத் தகவல்கள் நம்மைத் தாக்குகின்றன.

விளைவு?

சிஸ்டம் ஹேங் ஆகிறது.

இந்த ஹேங் ஓவரை எப்படித் தவிர்ப்பது?

இதற்கு நியூரோ சயின்டிஸ்ட்கள் சில வழிகளைச் சொல்கிறார்கள். அதைக் கொஞ்சம் பார்ப்போமா?

ஒரு நல்ல தூக்கம் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் வாய்ப்பை இரண்டு மடங்காக்குகிறது. ஒரு நாளைக்கு 7 முதல் 10 மணி நேரத் தூக்கம் அவசியம். குளிர்ந்த, இருட்டான அறைதான் மூளைக்கு பிடிக்கும். பகல் தூக்கம் 40 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. அதற்கு மேல் போனால் சிஸ்டம் ஸ்லீப் மோடுக்குப் போய்விடும்!

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நம் முன்னோர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள். இப்போதும் அதுதான் பொன் செய்யும் மருந்து. சூப்பர் மார்க்கெட்டில் 50 வகை தானியங்கள், ட்ரிப் அட்வைசரில் 200 ஹோட்டல்கள் என ஒரு நாளைக்கு நம் மூளை இவ்வளவுதான் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று ஒரு லிமிட் இருக்கிறது. அதற்கு மேல் போனால் நியூரல் பேட்டிக் வந்துவிடும். அப்புறம் தவறான முடிவுகளை எடுப்போம்.

எல்லா விஷயத்திலும் பெஸ்ட் தேடாதீர்கள். ஓரளவுக்கு ஓகே என்கிற முடிவை எடுங்கள். முக்கியமான முடிவுகளுக்கு மூளைச் சக்தியை மிச்சப்படுத்துங்கள்.

சாவி எங்கே? கத்தரிக்கோல் எங்கே? என்று தேடுகிறோம். கார் சாவியைத் தேடுவது போல காரைத் தேடுவதில்லை, ஏன்? இதற்கான பதிலை நீங்களே கொஞ்சம் யோசியுங்கள்.

ஒரே பொருளைப் பல இடங்களில் பயன்படுத்தினால், இரண்டு மூன்று வாங்கி வையுங்கள். கிச்சனுக்கு ஒரு கத்தரிக்கோல், ஆபீஸிற்கு ஒன்று. வீட்டுக்குள் நுழைந்ததும் சாவியைத் தொங்கவிட ஒரு கீ ஹூக்.

பால் வாங்க வேண்டும் என்று ஞாபகம் வர வேண்டுமா? ஒரு காலி பால் பாக்கெட்டை வாசலில் போட்டு வையுங்கள். மூளைக்குத் தரும் வேலையைக் குறையுங்கள். இதை விசுவல் ரிமைண்டர் என்கிறார்கள்.

எப்போதும் எதையாவது கவனித்துக்கொண்டே இருக்காதீர்கள். ரயிலில் வேடிக்கை பார்க்கும்போது அல்லது குளிக்கும்போதுதான் அந்த யுரேகா மொமென்ட் வரும். இதுதான் மூளையின் கிரியேட்டிவ் மோடு. இதற்காக எப்போதும் ஒரு நோட்புக் கையில் இருக்கட்டும். அந்த நேரத்தில் தோன்றும் ஐடியாக்களை உடனே பிடித்துவிடுங்கள்.

எப்போதும் டிஜிட்டல் வேண்டாம்.  பேப்பர் மற்றும் பென்சில் பெஸ்ட். டிஜிட்டல் உங்கள் மூளையை உங்களுக்கே தெரியாமல் சோர்வடைய வைக்கும். பேப்பர் மற்றும் பென்சில் உங்கள் மூளையை ரீஜெனரேட் செய்யும். டிஜிட்டலில் நோட்ஸ் எடுப்பதை விடப் பேப்பரில் எழுதுவது மூளைக்குக் கூடுதல் தெளிவைத் தரும்.

மூளைக்குள் எல்லாவற்றையும் போட்டு வைக்காதீர்கள். உங்கள் வேலைகளை நான்காகப் பிரியுங்கள். அவையாவன,

1) இப்போதே செய்ய வேண்டியவை. மிக முக்கியமான வேலைகள்.

2) முக்கியமான வேலை, ஆனால் உடனே முடிக்க வேண்டியதில்லை. காத்திருக்கலாம். பொறுமையாகச் செய்ய வேண்டிய வேலைகள்.

3) இப்போது முக்கியமில்லை, ஆனால் படிப்படியாகச் செய்ய வேண்டிய வேலைகள்.

4) செய்யவே தேவையில்லாதவை. இந்த வேலைகளைத்தான் முதலில் களையெடுக்க வேண்டும். ஏனென்றால் இவை வேலைகளே அல்ல. ஆக இந்தக் களையெடுத்தலைத்தான் முதலில் செய்ய வேண்டும்!

ஒரே நேரத்தில் நாலு வேலை செய்வது திறமை என்று நினைக்காதீர்கள். அது உங்களை மெதுவாக்கும். எனவே, மல்டி டாஸ்க்கிங் என்ற மாயையில் விழாதீர்கள்.

மொபைல் நோண்டிக்கொண்டே டிவி பார்ப்பது மூளையைக் குழப்பும்.

டிவி பார்த்துக்கொண்டே படித்தால் அந்தத் தகவல் ஸ்ட்ரியட்டம் பகுதிக்குப் போகும்  அது திறமைகளைச் சேமிக்கும் இடம். டிவி பார்க்காமல் படித்தால் அது ஹிப்போகாம்பஸ் பகுதிக்குப் போகும். அது தகவல்களைச் சேமிக்கும் இடம்.

எனவே, ஒரு நேரத்தில் ஒரு வேலை. போரடிக்கும் வேலையாக இருந்தாலும், அதை முடித்துவிட்டு அடுத்ததற்குப் போங்கள்.

ஒரு மெயில் நோட்டிபிகேஷன் வரும்போது உங்கள் ஐக்யூ 10 புள்ளிகள் குறைகிறதாம்! இதைத்தான் நீங்களே விரும்பி ஏற்றுக் கொள்ளும் டெக்னாலஜி டார்ச்சர் என்கிறார்கள் நியூரோ சயின்டிஸ்ட்கள். மெயிலை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் பாருங்கள், 50 முறை அல்ல!

மூளை ஒரு விஷயத்தில் முழுமையாக செட்டில் ஆக 50 நிமிடம் ஆகும். கடினமான வேலைகளுக்கு அந்த நேரத்தை ஒதுக்குங்கள். ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு பிரேக் எடுத்து 30 நிமிடம் நடப்பது அவசியம்.

அப்புறம் ஒரு முக்கியமான விசயம். வேலைகளைத் தள்ளிப்போடுதல் – இது சோம்பேறித்தனம் அல்ல, தன்னம்பிக்கை குறைவு என்கிறது ஆய்வு. தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில்தான் வேலையைத் தள்ளிப்போடுகிறோம். இதை ப்ரோக்ராஸ்டினேஷன் என்கிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு என்றால், இந்த வேலை ஜெயிச்சாலும் தோற்றாலும் நான் நான் தான் என்று உங்களை நீங்களே தேற்றிக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றவர்களை விடத் தோல்வி கண்டவர்களிடம்தான் மூளை அதிகம் கற்றிருக்கிறது என்கிறார்கள் நியூரோ சயின்ட்ஸ்ட்கள்.

வாழ்க்கை என்பது ஒரு பெரிய அல்காரிதம். அதைச் சிக்கலில்லாமல் ரன் செய்ய வேண்டும் என்றால், தேவையில்லாத பைல்களை அடிக்கடி டெலீட் செய்ய வேண்டும். மூளை என்பது ஒரு ஸ்டோரேஜ் டிவைஸ் மட்டுமல்ல, அது ஒரு பிராசஸர். அதற்கு அதிக லோடு கொடுக்காதீர்கள்.

இன்று மாலை உங்கள் ஸ்மார்ட்போனை ஆப் செய்துவிட்டு, ஜன்னல் ஓரம் அமர்ந்து ஒரு பத்து நிமிடம் சும்மா இருங்கள். உங்கள் மூளைத் திரையில் ஓடும் தேவையற்ற பாப்அப் விளம்பரங்கள் மெல்ல மறையும். அதுதான் உண்மையான மெண்டல் கிளாரிட்டி!

*****