Monday 31 May 2021

இந்திய மருத்துவத் துறையில் 555 பணியிடங்கள்

இந்திய மருத்துவத் துறையில் 555 பணியிடங்கள்

            தமிழ்நாடு இந்திய மருத்துவத் துறையில் Dispenser மற்றும் Therapeutic Assistant (ஆண் மற்றும் பெண்) ஆகிய 555 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிக்கத் துவங்கும் நாள்

28.05.2021

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

15.06.2021

Dispenser பணிவாய்ப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறியவும் விண்ணப்ப படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21052951.pdf

Therapeutic Assistant பணிவாய்ப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறியவும் விண்ணப்ப படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_for_Recruitment_of_Clrks_CWE_Clerk_VI.pdf

Sunday 30 May 2021

Engineering படித்தவர்களுக்கு NTPC இல் 280 பணிகள்

Engineering படித்தவர்களுக்கு NTPC இல் 280 பணிகள்

            National Thermal Power Corporation எனும் NTPC நிறுவனத்தில் Electrical, Electronics, Instrumentation பிரிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் 280 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

10.06.2021

மேலும் இப்பணிவாய்ப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://ntpccareers.net/main/folders/Archives/advt/05_21%20NTPC_Employment%20Ad_Eng_21_May_2021.jpg

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://ntpccareers.net/et2021/hm.php

Saturday 29 May 2021

செய்திகளைப் பகிர்ந்து கொள்வது தலைமுறைகளுக்கு நல்லது

செய்திகளைப் பகிர்ந்து கொள்வது தலைமுறைகளுக்கு நல்லது

நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இவ்வலைப்பூவின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று. அவ்வபோது நல்ல செய்திகள் பலவற்றையும் இவ்வலைப்பூவின் மூலமாகப் பகிர்ந்தும் வந்திருக்கிறேன். ஒரு சில செய்திகள் பலரால் நன்கு அறியப்பட்டிருந்தாலும் அதை அறியாத சிலர் இருக்கலாம் என்று பகிரப்பட்ட செய்திகளும் இருக்கின்றன.

அண்மையில் சந்தித்த பெரியவர் ஒருவர் பாரதிதாசன் கவிதைகளில் ஆழமுடையவராக இருந்தார். பேசப் பேச அவரது உரையாடல் ஒவ்வொன்றும் பாரதிதாசன் கவிதைகளாக வந்து விழுந்து கொண்டே இருந்தது ஆச்சரியம். எப்படிச் சூழலுக்குப் பொருத்தமாக அவருக்கு பாரதிதாசனின் கவிதை வரிகளே உரையாடல் வரிகளாக அமைகின்றன என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பாரதிதாசன் கவிதைகளில் ஊறி ஆழ்ந்து தோய்ந்திருந்தால்தான் அது சாத்தியம் எனப் பட்டது. “தனியார்மயத்துக்கு எதிராகவும் பாவேந்தர் பாடியிருக்கிறார், தெரியுமோ?” என்றதும் “அப்படியா!” என்ற ஆச்சரியம் விலகாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார்,

“தனியாரிடத்தில் வாணிகம் இருந்தால்

சரி விலைக்குச் சரக்கு அகப்படுமா?

எள் முதல் அரசினர் கொள்முதல் செய்க!

எப்பாங்கும் கடை வைத்து விற்பனை செய்க!”

என்று பாரதிதாசனின் வரிகளை. “அவரோட அடிபொடி பட்டுக்கோட்டை பாடியிருக்கிற வரி தெரியுமோ?” என்றார் அடுத்த பீடிகையைப் போட்டுக் கொண்டே. அதற்கும் ஆச்சரியமான பார்வை ஒன்று மட்டுமே என்னிடம் இருந்தது. அவரே தொடர்ந்தார்,

            “எழுதிப் படிச்சு அறியாதவன்தான்

            உழுது உழைச்சு சோறு போடுறான்

            எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி

            நல்லா நாட்டைக் கூறு போடுறான்”

பாட்டாகப் பாடி விட்டு கபகபவென்று சிரித்தார். அவ்வளவுதான், அவர் யாரென்று விசாரித்து அறிந்து கொள்வதற்கு முன் ஆள் காணாமல் போய் விட்டார். விசாரித்த போது அவரைப் பற்றிச் சொன்னார்கள், “அவர் அப்படித்தாம்பீ! ஒரு மாதிரி. யாருக்கும் பிடி கொடுக்க மாட்டாம். ஏதோ பாட்டுப் புஸ்தகத்துல ஏதேதோ படிச்சிட்டு ஔறுவாம். நீங்க ஒண்ணும் நெனைச்சாகுதுங்கம்பீ! எல்லாம் மனக்கோளாறு.” என்று. எனக்கென்னவோ யாருக்கு மனக்கோளாறு என்பதில் நிறைய கேள்விகள் இருந்தன.

            மற்றுமொரு சம்பவம். “உங்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். விரிவாக்கம் என்னவென்று தெரியுமா?” என்று சுமார் பனிரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை கேட்ட போது, “அது கோரொனா பரிசோதனைதானே?” என்றேன் நான். “அது எல்லாருக்கும் தெரியும். நான் கேட்டது விரிவாக்கம்.” என்றாள் அந்தப் பெண் கண் விழிகள் இரண்டையும் உருட்டியபடி. யாருக்குத் தெரியும் அந்த விரிவாக்கம் என்று நான் நெற்றியைச் சுருக்கிய போது அந்தப் பெண்ணே சொன்னாள், “Reverse Transcription Polymerase Chain Reaction” என்று. இந்தக் காலத்துக் குழந்தைகள் நிறைய செய்திகளை அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்தக் குழந்தையிடம், “பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டையின் பாடல் எதாவது தெரியுமா?” என்றேன். தெரியாது என்பது போலத் தலையை ஆட்டினாள். நான் முன்பு பெரியவரிடம் கேட்ட இரண்டு பாடல்களையும் சொன்னேன். “வாவ்! சூப்பர்!” என்றவள் “இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்றாள். நான் மேலும் சில பாடல்களைச் சொல்லி விட்டு பாரதிதாசன் கவிதைகள் பற்றியும் பாட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடல்கள் பற்றியும் புத்தகங்கள் இருப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். என்னிடமிருந்து சில செய்திகளைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சி அந்தப் பெண் குழந்தைக்கு. அந்தக் குழந்தையிடமிருந்து நான் சில செய்திகளைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சி எனக்கு. இக்கால குழந்தைகளோடு உரையாடுவது ஆரோக்கியமானதாகத்தான் இருக்கிறது. நமக்குத் தெரியாத செய்திகள் அவர்களிடம் இருக்கின்றன. அவர்களுக்குத் தெரியாத செய்திகள் நம்மிடம் இருக்கின்றன. இரண்டும் ஒன்று கலந்தாக வேண்டும்.

*****

Friday 28 May 2021

எல்சாட் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

எல்சாட் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சட்டம் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்புவோர் எல்சாட் நுழைவுத் தேர்வினை எழுதலாம். ப்ளஸ்டூவில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றோர் இத்தேர்வினை எழுத தகுதி பெற்றோர் ஆவர். ஆன்லைனில் எழுதும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மே 29 கடைசி நாள். தேர்வு நாள் June 12. மேலும் இது குறித்த விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.lsac.org/

Thursday 27 May 2021

Ph.D. சேர Defence Institute க்கு விண்ணப்பிக்கலாம்

Ph.D. சேர  Defence Institute க்கு விண்ணப்பிக்கலாம்

            Ph.D. சேர Defence Institute of Advanced Technology க்கு விண்ணப்பிக்கலாம்.

Ph.D. க்கு விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்

24.05.2021

Ph.D. க்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

23.06.2021

 மேலும் இப்படிப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://117.236.165.231/eDIATOlnApplication/Login.aspx

Wednesday 26 May 2021

Ph.D. சேர Birla Institute க்கு விண்ணப்பிக்கலாம்

Ph.D. சேர  Birla Institute க்கு விண்ணப்பிக்கலாம்

            Ph.D. சேர Birla Institute of Technology க்கு விண்ணப்பிக்கலாம். மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 25,000/- வழங்கப்படும்.

Ph.D. க்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

10.06.2021

 

மேலும் இப்படிப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.bitmesra.ac.in/Notice_Details-98826688?cid=1&nid=277

Tuesday 25 May 2021

கொரோனாவுக்கான இந்திய மருத்துவக் கையேடு

கொரோனாவுக்கான இந்திய மருத்துவக் கையேடு

            கொரோனாவை எதிர்கொள்வதற்கான மூலிகை முறையிலான மருத்துவம் மற்றும் அன்றாடம் உண்ணும் உணவு முறை குறித்த கையேட்டினை வெளியிட்டுள்ளது இந்திய மருத்துவ முறையின் சித்த மருத்துவத் துறை. கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வரும் சூழ்நிலையில் இக்கையேடும் இக்கையேட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளும் பயன்தரத்தக்கதாக உள்ளது. இக்கையேட்டினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Monday 24 May 2021

PG & Ph.D. சேர IIST க்கு விண்ணப்பிக்கலாம்

PG & Ph.D. சேர  IIST க்கு விண்ணப்பிக்கலாம்

            P.G. & Ph.D. சேர IIST எனும் Indian Institute of Space Science and Technology க்கு விண்ணப்பிக்கலாம்.

P.G. க்கு விண்ணப்பிக்கத் துவங்கும் நாள்

21.05.2021

P.G. க்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

16.06.2021

Ph.D. க்கு விண்ணப்பிக்கத் துவங்கும் நாள்

27.05.2021

Ph.D. க்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

24.06.2021

மேலும் இப்படிப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://admission.iist.ac.in/

Sunday 23 May 2021

IREL இல் Manager பணியிடங்கள்

IREL இல் Manager  பணியிடங்கள்

            IREL எனும் Indian Rare Earths Limited இன் Manager பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

21.06.2021

மேலும் இப்பணிவாய்ப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.irel.co.in/documents/20126/167125/Recruitment+Notification+for+Executives+2021+%281%29.pdf/d5e5d426-474f-17eb-0393-88fed46988e4?t=1621495960073

Saturday 22 May 2021

Diploma, BE, BTech, BSc, BCA படித்தவர்களுக்கு NAL இல் பணிகள்

Diploma, BE, BTech, BSc, BCA படித்தவர்களுக்கு NAL இல்  பணிகள்

            Diploma, B.E., B.Tech., B.Sc., B.C.A. படித்தவர்கள் NAL எனும் National Aerospace Laborataries இன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கத் துவங்கும் நாள்

17.05.2021

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

04.06.2021

மேலும் இப்பணிவாய்ப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.wbpcb.gov.in/files/Su-02-2021-02-42-24NCAP_Recruitment_Advertisement.pdf

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.wbpcb.gov.in/files/Th-07-2021-07-18-20Application%20Form.pdf 

Friday 21 May 2021

மினிமலிஸம் – சரியான வாழ்க்கைத் தத்துவம்

மினிமலிஸம் – சரியான வாழ்க்கைத் தத்துவம்

            பெரும்பாலான புலனப் பதிவுகளிலும், முகநூல் பதிவுகளிலும் மினிமலிஸம் குறித்து வாசித்த போது அசந்து போனேன். அநேகமாக என் வாழ்க்கை முறை அப்படித்தான் இருக்கிறது. யாரோ என் வாழ்வைப் படமெடுத்த போட்டது போல்தான் இருந்தது மினிமலிஸம் குறித்த கருத்துகளை வாசித்த போது. நீங்களும் படித்திருப்பீர்கள். நல்ல கருத்துகளை எத்தனை முறைப் படித்தாலும் குறையொன்றும் நேர்ந்து விடப் போவதில்லை. நல்ல கருத்துகளை மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது உண்டாகும் ஆழமான புரிதல் நம்மையும் அறியாமல் நம்மிடம் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. அதனால் மினிமலிஸம் குறித்து எனக்கு வந்தப் பதிவுகளை மீண்டும் உங்களது பார்வைக்குப் பதிவிட விரும்புகிறேன்.

மினிமலிஸம்

மினிமலிஸத்தை நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை முறை எனக் குறிப்பிடலாம்.

மினிமலிஸத்தின் தோற்றம்

ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆறு இலக்க சம்பளம், கார்கள், வீடுகள், விருந்து, கொண்டாட்டம் என சகல வசதியோடு வாழ்க்கையை அனுபவித்த இளைஞர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் ஏதோ குறைவதை உணர்ந்தார்கள். வாழ்வில் ஒரு வெற்றிடம் இருப்பதை அறிந்தார்கள். வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில்  எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்ந்தார்கள். மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட நொடியில் அவர்களுக்குத் தோன்றிய கோட்பாடே மினிமலிஸம் என்பதாகும்.

மினிமலிஸத்தின் அடிப்படை

இன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாசாரம் பெருகி விட்டது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை என்கிற கருத்து பரவி வருகிறது.  உண்மையில் பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை. அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது. மினிமலிஸத்தின் அடிப்படை இதுதான்.

மினிமலிஸம் குறித்த சரியான புரிதல்

மினிமலிஸம் என்றால் கஞ்சப்பிசினாரியாக வாழ்வது என்று நினைக்கிறார்கள். அல்லது எல்லாவற்றையும் விலக்கி விட்டுத் துறவியைப்போல வாழ்வது என்றும் நினைக்கிறார்கள். ஆனால் மினிமலிஸம் என்பது கஞ்சப்பிசிரித்தனமும் இல்லை, துறவு வாழ்க்கையும் இல்லை. மினிமலிஸம் என்பது அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது ஆகும். உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால் நோய்கள் எப்படி வருமோ அதுபோலத்தான் வாழ்க்கையில் தேவையில்லாத பொருள்கள் சேர்வதும். இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த அவசியமில்லா நுகர்வுதான்.

அநாவசிய நுகர்வு

அநாவசிய அவசியமில்லா நுகர்வு என்றால் நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என அவசியமில்லாமல் வாங்கிக் குவித்துப் பயன்படுத்துகிற எல்லாமே தேவையில்லாத அநாவசிய அவசியமில்லா நுகர்வுதான்.

அவசியமானதை அதிகப்படுத்திக் கொள்ளும் வாழ்க்கை

“மினிமலிஸ்டுகள் குறைவோடு வாழ்பவர்கள் இல்லை. அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு, அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்” என்பது ஜோஷூவாவின் கருத்து.

நம்மிடமும் இருக்கும் மினிமலிஸம்

மினிமலிஸம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு மினிமலிஸம். இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின் வழியாக நம் முன்னோர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வைக் கட்டமைத்தார்கள்.

மில்லியனர் மினிமலிஸ்ட்கள்

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும் மினிமலிஸ்டுகள்தான் என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மையாகும். உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் அதற்கு நல்ல உதாரணம் ஆவார். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ அப்படியேதான் அவர் இன்றுவரை இருக்கிறார். 1958 இல் நெப்ராஸ்காவில் வாங்கிய அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார். “தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ அதையே செய்யுங்கள். அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்” என்கிறார் வாரன் பஃபெட்.  அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிஸ மில்லியனர்கள் உலகில் அதிகம்.

மினிமலிஸ வாழ்க்கைக்கான 5 வழிகள்

            மினிமலிஸ வாழ்க்கை வாழ்வதற்கான ஐந்து விசயங்களை ஜோஷுவா குறிப்பிடுகிறார். அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல்

மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான். நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

2. குறைவான பொருள்களில் வாழ்வது

            வீட்டு பீரோவில் 30 சட்டைகள் இருக்கும். இணையத்தில் புதிய சலுகை ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும். அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது அவசியம்.  இதனால் அவசியமில்லாமல் இருக்கிற பொருள்களை மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுத்துக் கொள்ளலாம்.

3. வருங்காலத்திற்குத் திட்டமிடல்

வருங்காலத்துக்குத் தேவையான முன்னேற்பாடுகள் மிக மிக முக்கியம் ஆகும். மாதந்தோறும் வரவு செலவு விவரங்களைக் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்த வேண்டும். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது அவசியம் ஆகும்.

4. ஒவ்வொரு வாங்குதலையும் கேள்வி கேட்பது

எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்குமுன் இது எனக்கு அவசியம்தானா? இது இல்லாமல் வாழ முடியுமா? என்ற கேள்விகளை எழுப்பிக் கொள்ள வேண்டும். ஒன்றை வாங்குவது அவசியமில்லை என்று தோன்றினால் அதை வாங்க வேண்டியதில்லை. ஒரு பொருள் இல்லாமல் வாது முடியும் என்றால் என்றால் அதை வாங்க அவசரம் காட்ட வேண்டியதில்லை.

5.  அடுத்தவர்களுக்கு வழங்குவது

உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர்களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேரும் பின்பற்றுகிற மகிழ்ச்சிக்கான ரகசிய வழிமுறையாகும். மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள். அது உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்.

மினிமலிஸத்தின் அழைப்பு

மேற்கூறிய ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன் சேமிப்பையும் அதிகப்படுத்தும். குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை வாழ உதவும். இப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும் சிறப்பாக வாழமுடிந்தது. அவ்வண்ணம் வாழ அழைப்பதுதான் மினிமலிஸ வாழ்க்கை முறை. இப்போது சொல்லுங்கள் இது போன்ற கருத்துகளை எத்தனை முறை வாசித்தாலும் அது வாழ்க்கைக்குப் பயனுள்ளதுதானே! பயனுள்ள இந்தப் பகிர்வைப் பலருக்குப் பகிர்ந்து நீங்களும் தினந்தோறும் படியுங்கள். உங்கள் மனதில் உங்களை அறியாமல் ஒரு மாற்றம் உண்டாகும்.

*****

இதனை PDF ஆகப் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download 

Thursday 20 May 2021

BE, BTech படித்தவர்களுக்கு NTPC இல் 280 பணிகள்

BE, BTech படித்தவர்களுக்கு NTPC இல் 280 பணிகள்

            B.E., B.Tech. படித்தவர்கள் NTPC எனும் National Thermal Power Corporatiok இன் 280 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கத் துவங்கும் நாள்

21.05.2021

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

10.06.2021

மேலும் இப்பணிவாய்ப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://drive.google.com/file/d/1d4Vsw_-zNSIo8OfdXfFZiMKxCzz1bVYT/view

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.ntpccareers.net/

Wednesday 19 May 2021

ITI, Diploma, BE/ BTech, Any Degree படித்தவர்களுக்கு DFCCIL பணிகள்

ITI, Diploma, BE/ BTech, Any Degree படித்தவர்களுக்கு DFCCIL பணிகள்

            ITI, Diploma, BE / BTech, Any Degree படித்தவர்கள் DFCCIL எனும் Dedicated Freight Corridor Corp of India இன் 1074 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கத் துவங்கும் நாள்

24.04.2021

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

23.05.2021

மேலும் இப்பணிவாய்ப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://dfccil.com/upload/Final-Advt-04_2021_0UAK.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/70799/Instruction.html

Tuesday 18 May 2021

ITI, Diploma, BE/ BTech, Any Degree படித்தவர்களுக்கு BNP பணிகள்

ITI, Diploma, BE/ BTech, Any Degree படித்தவர்களுக்கு BNP பணிகள்

            ITI, Diploma, BE / BTech, Any Degree படித்தவர்கள் BNP எனும் Bank Note Press இன் 135 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கத் துவங்கும் நாள்

12.05.2021

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

11.06.2021

மேலும் இப்பணிவாய்ப்பு குறித்த மேலதிக விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://bnpdewas.spmcil.com/UploadDocument/ADVT_ENG.a05dd3d2-5894-41b7-985a-557fa92a0a05.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://ibpsonline.ibps.in/bnpdwvpmar21/