Saturday, 31 May 2025

உலக அனுபவம் சொல்லும் உன்ன மொழிகள்!

உலக அனுபவம் சொல்லும் உன்ன மொழிகள்!

பணம் ஒரு தடையே அல்ல. ஒரு யோசனை கூட தோன்றாமல் இருப்பதுதான் மாபெரும் தடை.

-          கென் ஹகுடா

 

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க வழி அதை மடித்து பைக்குள் வையுங்கள் என்பதுதான். (அநாவசியமாகப் பணத்தைப் பையிலிருந்து எடுத்து செலவழிக்காதீர்கள்)

-          கிம் ஹப்பார்ட்

 

பாதை எங்கெல்லாம் போகிறதோ, அங்கெல்லாம் போகாதீர்கள். எங்கே பாதை இல்லையோ அங்கு செல்லுங்கள். பாதையை உருவாக்குங்கள்.

-          எமர்சன்

 

கையில் பணமில்லாத நிலை நம் சுயமரியாதையை குழைத்து விடும். சம்பாதிப்பது மேன்மையானவர், கண்ணியமானவர் என்ற புகழைத் தானே கொண்டு வரும்.

-          ஜான் சோபோரிக்

 

நீங்கள் சம்பாதிக்கும் பணம்தான் உங்களைப் பற்றி நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பின் அடையாளம்.

-          இடாவு கோயெனிக்கன்

 

நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அதிலுள்ள பிரச்சனைகளையும் சவால்களையும் கண்டறிவதற்கும் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு.

-          டேவிட் ராக்வெல்

 

நிறைய பணத்தை வைத்துக் கொண்டு ஏழையாக வாழ விரும்புகிறேன்.

-          பிக்காஸோ

 

உங்களின் மிகப் பெரிய சொத்து உங்களின் சம்பாதிக்கும் திறன்.

-          பிரெய்ன் டிரேசி

 

கால்பந்தை விட ஒப்பந்தங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கிறேன்.

-          பீலே

 

முதலீடு பணத்தை வேலை வாங்குகிறது. பணத்தைப் பாதுகாக்க ஒரே வழி அதை முதலீடு செய்வதுதான்.

-          கிரேன்ட் கார்டோனே

 

மிகச் சிறந்த பழிவாங்கல் என்பது மகத்தான வெற்றி பெறுவதுதான்.

-          பிரான்க் சினாட்ரா

 

மனிதர்கள் அவர்களுக்குத் தேவையானதை அரிதாகவே வாங்குகிறார்கள். அவர்களுக்கு விருப்பமானத்தைத்தான் எப்போதும் வாங்குகிறார்கள்.

-          சேத் கோடின்

 

நீங்கள் வெற்றி பெறுவது தற்செயலாக நடந்து விடாது. முன் தயாரிப்புகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

-          ரோஜர் மாரிஸ்

 

பேசுவதற்கு முன் கவனியுங்கள். எழுதுவதற்கு முன் யோசியுங்கள். முதலீடு செய்வதற்கு முன் ஆராயுங்கள். விமர்சனம் செய்வதற்கு முன் காத்திருங்கள். விடுவதற்கு முன்பு முயன்று பாருங்கள். ஓய்வுக்கு முன் சேமித்து விடுங்கள்.

-          வில்லியம் ஆர்தர்வார்டு

 

ஓர் யோசனையின் மதிப்பு அதைப் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது.

-          எடிசன்

 

வெற்றியின் சுவையைக் கூட்டும் ஒரு சுவைதான் தோல்வி.

-          ட்ரூமேன் கபோட்

 

வியாபாரம் என்பது விளையாட்டும் போரும் கலந்த ஒரு கலவை.

-          ஆன்ட்ரே மௌரேய்ஸ்

*****

Friday, 30 May 2025

இந்தியாவின் வண்ண நகரங்களை அறிந்து கொள்வோமா?

இந்தியாவின் வண்ண நகரங்களை அறிந்து கொள்வோமா?

இந்தியாவில் மஞ்சள் நகரம் (தங்க நகரம்), நீல நகரம், இளஞ்சிவப்பு நகரம், வெள்ளை நகரம், சிவப்பு நகரம், ஆரஞ்சு நகரம் என நிறங்களை அடிப்படையாகக் கொண்ட நகரங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோமா?

1. மஞ்சள் நகரம் அல்லது தங்க நகரம்

தங்க நகரம் என அழைக்கப்படுவது ஜெய்சால்மர். இது ராஜாஸ்தானில் உள்ளது. இந்நகரின் கோட்டைகள், அரண்மனைகள், மணல் முகடுகள், ஏரிகள் போன்றவை சூரிய ஒளியில் தங்க நிறமாக ஜொலிக்கின்றன. இந்நகரை நிறுவியர் ராவ் ஜெய்சால். அவரது நினைவாக இந்நகரம் ஜெய்சால்மர் எனப்படுகிறது.

2. நீலநகரம்

நீல நகரம் என அழைக்கப்படுவது ஜோத்பூர். இந்நகரமும் ராஜஸ்தானில்தான் உள்ளது. இந்நகரின் வீடுகள், மதில்கள் அனைத்துக்கும் நீல நிறமே அடிக்கப்படுகின்றன. இந்நகரில்தான் இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைந்துள்ளது.

3. இளஞ்சிவப்பு நிறம்

இளஞ்சிவப்பு நிறம் என அழைக்கப்படுவது ஜெய்ப்பூர். இந்நகரமும் ராஜஸ்தானில்தான் உள்ளது. இந்நகரமே ராஜஸ்தானின் தலைநகரமும் ஆகும். இந்நகரில் உள்ள கோட்டைகள், அரண்மனைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிப்பதால் இந்நகருக்கு இப்படி ஒரு பெயர்.

4. வெள்ளை நகரம்

வெள்ளை நகரம் என அழைக்கப்படுவது உதய்பூர். இந்நகரமும் ராஜஸ்தானில்தான் உள்ளது. இந்நகரை நிர்மாணித்தவர் உதய்சிங். அவரது பெயரால் இந்நகரம் வழங்கப்படுகிறது. இந்நகரம் ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரின் அரண்மனைகள், கோட்டைகள் வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பதால் இந்நகருக்கு இப்படி ஒரு பெயர்.

5. சிவப்பு நகரம்

சிவப்பு நகரம் என அழைக்கப்படுவது ஆக்ரா. இது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது. இந்நகரின் பெரும்பாலான அரண்மனைகள், கோட்டைகள் சிவப்பு நிறத்தில் உள்ளதால் இப்படி ஒரு பெயர். ஆனால் தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, சிக்கந்திரா போன்றவை வெள்ளை நிறத்திலானவை.

6. ஆரஞ்சு நகரம்

ஆரஞ்சு நகரம் என அழைக்கப்படுவது நாக்பூர். இது மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ளது. ஆரஞ்சுகள் அதிகம் விளைவதால் இந்நகரத்திற்கு இப்படி ஒரு பெயர். மேலும் இந்நகரில் உள்ள அரசு கட்டடங்களும் பொது கட்டடங்களும் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ளன.

இந்தியாவில் உள்ள வண்ண நகரங்களில் பெரும்பாலானவை ராஜஸ்தானில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு நகரமும், ஆரஞ்சு நகரமும் மட்டுமே வேறு மாநிலங்களில் உள்ளன.

*****

Thursday, 29 May 2025

இப்படிப் படித்துப் பாருங்கள்!

இப்படிப் படித்துப் பாருங்கள்! எப்படி இருக்கிறது என்ற கூறுங்கள்!

எப்படி படிக்க வேண்டுமோ அப்படிப் படித்தால் படிக்கும் அனுபவம் இனிமையாகவும் மதிப்பெண்களை அள்ளித் தருவதாகவும் இருக்கும். அதற்கு எப்படிப் படிக்க வேண்டும்? இப்படிப் படித்தால் நீங்கள் ஒருமுறை படித்தாலும் பலமுறைப் படித்ததற்குச் சமம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால்,

1. சத்தமிட்டுப் படியுங்கள்

சத்தமிட்டுப் படிக்கும் போது உங்கள் வாய், கண், காது ஆகிய மூன்று புலன்களும் இயங்குகின்றன. மனதுக்குள் படிக்கும் போது உங்கள் கண் என்கிற ஒரு புலன் மட்டுமே இயங்குகிறது. அதிகப் புலன்கள் இயங்கும் போது உங்கள் கவனம் கூடுதலாகிறது. மனமும் ஒருநிலைப்படுகிறது. சத்தமிட்டுப் படிப்பது உங்கள் நினைவில் பதிய ஏதுவாகிறது. மேலும் சத்தமிட்டுப் படிப்பது உங்கள் நீண்ட கால நினைவில் சேகரமாகிறது. மனதுக்குள் படிப்பது குறுகிய கால நினைவில் சேகரமாகிறது.

2. பாடங்களைப் படங்கள் ஆக்குங்கள்

நீங்கள் படிப்பது எழுத்துகளாக உள்ளன. எழுத்துகளாக நீங்கள் படிப்பதைப் படங்களாக மாற்றுங்கள். மூளையானது நினைவுகளைப் படங்களாகவே பதிவு செய்து கொள்கிறது. எழுத்துகளை நினைவில் கொள்வதை விட படங்களை நினைவில் கொள்வது எளிது. ஒரு சிறுநீரகத்தைப் பற்றிப் படிப்பதை விட, அதை நீங்கள் படம் வரைந்து பாகங்கள் குறித்துப் பார்த்து விட்டால் உங்களால் சிறுநீரகத்தை எப்போதும் மறக்க முடியாது.

3. மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள்

நீங்கள் அரை மணி நேரம் படித்தால் ஐந்து நிமிடம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஐந்து நிமிட ஓய்வில் அரை மணி நேரத்தில் என்ன படித்தீர்கள் என்பதை மனதில் ஓட்டிப் பாருங்கள். இப்படிச் செய்தால் நீங்கள் படித்தது எப்போதும் மறக்காது.

4. விளக்கிச் சொல்லிப் பாருங்கள்

நீங்கள் படித்ததை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்ல முடிகிறதா எனப் பாருங்கள். அப்படிச் சொல்ல முடிந்தால் நீங்கள் கற்றது உங்களுக்கு எப்போதும் மறக்காது. ஒருவேளை அப்படி விளக்கிச் சொல்ல யாரும் கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே விளக்கிச் சொல்லிப் பாருங்கள்.

5. குறிப்புகள் எடுத்துக் கொள்ளுங்கள்

பல பக்கங்களில் நீங்கள் படித்ததைச் சில பக்கங்களில் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுகளுக்கு நீங்கள் தயாராகும் போது பல பக்கங்களைச் சில மணி நேரங்களில் படித்து விட முடியாது. அப்போது சில பக்கங்களில் நீங்கள் எழுதிய குறிப்புகளைப் பார்ப்பது பல பக்கங்களைப் படித்துப் பார்த்தற்கான நினைவையும் நிறைவையும் தரும். இது தேர்வைத் தன்னம்பிக்கையோடும் படித்தவற்றை நினைவில் கொண்டு வந்து  திறம்பட எழுதவும் உங்களுக்கு உதவும்.

இந்த ஐந்து முறைகளில் படித்துப் பாருங்கள். படிப்பில் நீங்கள் முதலிடத்தில் இருப்பீர்கள். படிப்பில் எப்போதும் நீங்கள் முதலிடத்தில் இருக்க வாழ்த்துகள்!

*****

Monday, 26 May 2025

நாம் ஏன் ரத்தன் டாடாவை நினைவு கூர வேண்டும்?

நாம் ஏன் ரத்தன் டாடாவை நினைவு கூர வேண்டும்?

அவமானங்கள், தோல்விகள் யாருக்கு இல்லை. நான் மட்டும் டாடா, பிர்லாவாக இருந்திருந்தால் அவமானங்கள், தோல்விகள் இல்லாமல் எப்படி சாதித்திருப்பேன் என்று சொல்கிறீர்களா? டாடாவுக்கே அவமானங்களும் தோல்விகளும் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் கடந்து சாதனை படைத்தவர்தான் ரத்தன் டாடா.

யார் இந்த ரத்தன் டாடா?

டாடா நிறுவனத்தை உருவாக்கிய ஜாம்ஷெட்ஜியின் பிள்ளைகள் இருவருக்கும் வாரிசுகள் இல்லை. அவரது இரண்டாவது மகன் ரத்தன் மறைந்த போது அவர் மனைவி நவாஜ்பாய் தத்தெடுத்து வளர்த்த நேவல் டாடாவுக்குப் பிறந்தவர்தான் ரத்தன் டாடா.

டாடாவுக்கும் பிரச்சனைகள் இருந்தன

10 வயதில் பெற்றோர்கள் பிரிந்ததால் பாட்டியிடம் வளர்ந்தவர் ரத்தன் டாடா. கூச்ச சுபாவம் உள்ளவர். தன்னம்பிக்கை இல்லாத இளைஞனாக இருந்தவர். காதல் வாழ்விலும் தோல்வியுற்றவர். பாட்டியின் அழைப்பால் இந்தியா வந்தவர். அப்போது ஜே.ஆர்.டி டாடாவின் பொறுப்பில் டாடா நிறுவனங்கள் இருந்தன.

ஜே.ஆர்.டி டாடா ரத்தனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் ஏதேதோ வேலைகளைக் கொடுத்தார். ஜே.ஆர்.டி. டாடாவுக்கும் ரத்தனுக்கும் ஒத்துப் போகவில்லை என்பது நிறுவனத்தில் எல்லாருக்கும் தெரிந்த ரகசியமாக இருந்தது. ஜே.ஆர்.டி. டாடா மனம் மாறி நிறுவனத்தை ரத்தனிடம் ஒப்படைத்த போது அவருக்கு வயது 53.

டாடாவுக்கும் நட்டம் ஏற்படும்

ரத்தன் டாடாவின் முக்கியமான சாதனை டாடா நிறுவனத்தைச் சர்வதேச நிறுவனமாக மாற்றியது. இதற்காக அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றை வாங்கினார். அதனால் ஒரு கட்டத்தில் டாடா நிறுவனமே நட்டத்தில் தடுமாறியது. ஆனால் ரத்தன் டாடா ஓய்வு பெற்ற போது சரிபாதி டாடா நிறுவனத்தின் வருமானம் வெளிநாடுகளிலிருந்து வந்தது.

டாடாவுக்கும் அவமானங்கள் நேர்கின்றன

ஒரு கட்டத்தில் டாடாவின் மகிழ்வுந்து தயாரிப்பு பிரிவு (கார் பிரிவு) நட்டத்தில் தள்ளாடியது. அதனால் டாடாவின் மகிழ்வுந்து பிரிவைப் போர்டு நிறுவனத்துக்கு விற்கப் போய் அவமானப்பட்டார் ரத்தன் டாடா. ஆனால் காலம் அப்படியே போய் விடுமா? பொறுமையோடு முயற்சியைக் கைவிடாதோருக்குக் காலம் கை கொடுக்கும் அல்லவா! பின்னாட்களில் போர்டு நிறுவனம் நட்டத்தில் தவித்த போது அவர்களின் ஜாகுவார், லேண்ட் ரோவர் பிராண்டுகளை வாங்கினார் ரத்தன் டாடா.

நம்பகத்தன்மையைக் கைவிட முடியாது

ஜப்பானில் இருக்கும் டோகோமா நிறுவனத்துடன் தொலைதொடர்பு துறையில் இறங்கிய டாடா நிறுவனம் அதில் நட்டத்தைச் சந்தித்த போதும் அந்த நிறுவனத்துக்குத் தர வேண்டிய இழப்பீட்டை முறையாகத் தந்தவர் ரத்தன் டாடா. ஆனால் அந்த இழப்பீட்டைத் தரக் கூடாது என மறுத்தவர் சைரஸ் மிஸ்ட்ரி. இதற்காக நிறுவனத்திலிருந்து சைரஸ் மிஸ்ட்ரியையும் தூக்கி அடிக்க தயங்கவில்லை ரத்தன் டாடா. நட்டம் வருகிறது என்பதற்காக நம்பகத்தன்மையைக் கைவிட முடியாது என்பது அவரது நிலைபாடு.

எளிமையின் சொந்தக்காரர்

டாடா, பிர்லா இந்தியாவின் பணக்காரர்கள் என்பது நாடறிந்த உண்மை. ரத்தன் டாடாவிடம் பணக்காரத்தனத்தையோ, பகட்டுத்தனத்தையோ பார்க்க முடியாது. அவர் எளிமையின் அடையாளம். அவரைச் சுற்றி பெரிய பரிவாரங்களைப் பார்க்க முடியாது. மும்பையிலிருந்து டெல்லி செல்லும் போது அவர் தனது கைப்பையைத் தூக்கிக் கொண்டு தனியாகத்தான் விமானம் ஏறுவார். அவர் வீட்டு வாசலில் கூட கடும் பாதுகாப்பு இருக்காது.

ஏன் ரத்தன் டாடா நினைவுகூரப்படுகிறார்?

ஒரு முடிவை எடுத்துச் செயல்படுத்தும் போது அது சரியாகவும் அமையலாம். தவறாகவும் போகலாம். தவறாகப் போகும் போது அதைச் சரியானதாக மாற்றும் வேலையைச் செய்ய வேண்டும் என்பது ரத்தன் டாடாவின் கொள்கை. அதை அப்படிச் செய்தும் காட்டியவர் அவர். அதற்காகத்தான ரத்தன் டாடா தற்போதும் நினைவு கூரப்படுகிறார்.

உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் ரத்தன் டாடாவின் குணங்களை உங்கள் வாழ்வில் பிரதியெடுத்துக் கொள்ளலாம். நல்ல குணங்களை நம் வாழ்வில் பிரதியெடுப்பதன் மூலமாக இந்த உலகிற்கு நாமும் நல்லவராக வாய்ப்புகள் இருக்கின்றனதானே!

*****

Sunday, 25 May 2025

சிறப்பாகப் படிப்பதற்கான 5 குறிப்புகள்

சிறப்பாகப் படிப்பதற்கான 5 குறிப்புகள்

பள்ளிக்கூடம் துவங்க உள்ள நிலையில் யாருக்குத்தான் சிறப்பாகப் படிக்க ஆசை இருக்காது? அந்த ஆசை நிறைவேற கடினமாக உழைப்பது முக்கியமெனினும் நுட்பமும் நுணுக்கமும் தெரிந்து படிப்பது அதை விட முக்கியமானது. உங்களுக்குப் படிப்பில் பயன்படும் முக்கிய நுணுக்கங்களும் நுட்பங்களும் இதோ!

1. முக்கிய சொற்கள்

நீங்கள் நான்கு பக்கங்கள் படித்தாலும், நாற்பது பக்கங்கள் படித்தாலும் அப்பக்கங்களில் இடம் பெற்றுள்ளவற்றை ஐந்தாறு முக்கிய சொற்களில் அடக்கி விட முடியும். அந்த முக்கிய சொற்களைக் குறிப்புகளாக எழுதிக் கொள்ளுங்கள்.

2. சிறியதே சிறப்பு

எவ்வளவு பெரிய பத்தியானாலும் அது ஒவ்வொரு வாக்கியங்களால் ஆனதே. எத்தனை பக்கங்கள் என்றாலும் அவை ஒவ்வொரு பத்தியால் ஆனதே. எவ்வளவு பெரியதாக ஒரு புத்தகம் இருந்தாலும் அது ஒவ்வொரு பக்கங்களால் ஆனதே. ஆகவே நீங்கள் எவ்வளவு பெரிய பகுதியைப் படிப்பதாக இருந்தாலும் அதைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு படியுங்கள். சிறு சிறு பகுதிளாகப் பிரித்துக் கொண்டு படிக்கும் போது அது உங்களை எளிமையாக உணர வைக்கும். சிறிது சிறிதாகப் படிக்க ஆரம்பித்து நீங்கள் ஒரு பெரிய பகுதியைப் படித்து முடித்திருப்பீர்கள்.

3. அவ்வபோது மீள்பார்வை

 ஒரு மரக்கன்றை நட்டு விடுவதாலேயே அது மரமாகி விடாது. அவ்வபோது அதைப் பார்க்க வேண்டும்; பராமரிக்க வேண்டும்; நீருற்ற வேண்டும். அது போல ஒரு முறை படித்து விடுவதாலேயே படிப்பது அப்படியே பச்சக்கென்று மூளையில் ஒட்டிக் கொண்டு விடாது. அவ்வபோது படித்ததை மீள்பார்வை செய்ய வேண்டும். இது தற்காலிக மறதிகளால் பாடப்பொருள் மறந்து போவதைத் தடுக்கும்.

4. தொடர்ச்சியாகப் படித்தல்

நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறிய அளவில் படித்திருக்கலாம். அது ஒரு பெரிய குறையில்லை. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகப் படிக்கும் அளவானது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கும். சிறுதுளி பெருவெள்ளம் ஆவது போல, சிறுக சிறுகத் தொடர்ந்து செய்தால் எவ்வளவு பெரிய பாடத்தையும் உங்களால் படித்து விட முடியும்.

5. மாறாத ஒழுக்கம்

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படித்தல், குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து படித்தல், படிப்பதற்குக் குறிப்பிட்ட முறையைப் பயன்படுத்துதல் போன்ற மாறாத பழக்கங்கள் உங்களால் எதையும் படிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கக் கூடியவை. அப்படி ஒரு தன்னம்பிக்கை உங்களுக்கு வந்து விட்டால் உங்களால் எதையும் படிக்க முடியும். இதற்கு அடிப்படை மாறாத ஒழுக்கமே. மாறாத ஒழுக்கத்தால் உங்கள் படிப்பில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணி விட முடியும்.

நீங்கள் படிக்கும் போது மேற்படி நுட்பங்களையும் நுணுக்கங்களையும் இணைத்துக் கொண்டு உங்கள் கல்வியில் மாற்றத்தை உருவாக்கி முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகள்!

*****

Saturday, 24 May 2025

மனித நேயமும் கல்வி நேயமும் மிக்க ஐன்ஸ்டீன்!

மனித நேயமும் கல்வி நேயமும் மிக்க ஐன்ஸ்டீன்!

மனித நேயத்தைக் கற்றுத் தராத கல்வி கல்வியே அல்ல என்பது ஐன்ஸ்டீனின் உறுதியான நிலைப்பாடு. அவர் கடந்த நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞானி மற்றும் மாபெரும் கல்விநேயம் மிக்கவர்.

அமைதி என்பது ஆழமான புரிதலால் ஏற்படுவது. அதை அடக்குமுறையால் ஏற்படுத்தி விட முடியாது என்பது அவரது கருத்து.

குழந்தைகளின் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஐன்ஸ்டீன் அக்கறை காட்டினார். அவர்களின் மனதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அவர்களது மனவியலைக் கொலை செய்யும் கொலைகாரர்கள் என்றார் அவர்.

ஐன்ஸ்டீன் எளிமையானவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர். தொடர்வண்டியில் பயணித்தால் மூன்றாம் வகுப்பில்தான் பயணிப்பார்.

ஐன்ஸ்டீன் காந்தியடிகள் மீது தனிமதிப்பு கொண்டிருந்தார். அவரது அறையில் காந்தியடிகளின் படம் மாட்டப்பட்டிருந்தது. காந்தியடிகள் மறைந்த போது இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை வருங்காலத் தலைமுறையால் நம்ப முடியாது என்றார் ஐன்ஸ்டீன்.

காந்தியடிகளோடு அவரை ஒப்பிட்ட போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர் அவர். காந்தியடிகள் அளவுக்கு மனித குலத்துக்கு தான் நன்மை செய்யவில்லை என்றும், தான் ஏதோ சில கோட்பாடுகளைக் கண்டுபிடித்துள்ளேன், அவ்வளவுதான் என்றார்.

நியூட்டனுக்குப் பிறகு இயற்பியலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் ஐன்ஸ்டீன். அவரது சிறப்பு சார்பியல் கோட்பாடு இயற்பியலில் பெரும் புரட்சியையே நிகழ்த்தியது.

ஒளியின் வேகமானது காலம், வெளி, நிறை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றார் ஐன்ஸ்டீன். ஒளியின் வேகத்தில் செல்லும் பொருளின் நீளம் குறைவதுடன், காலம் குறைவதையும் ஆனால் நிறை அதிகரிப்பதையும் அவர் கணித்தார். E = mc2 என்ற சமன்பாடு அவரது சிறப்பு சார்பியல் கோட்பாட்டை விளக்கியது.

ஒளிமின் விளைவுக்கான அவரது சமன்பாடுகள் பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டன. 1921 இல் ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

*****

Friday, 23 May 2025

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கும் விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசின் தலைமைச் செயலர் நா. முருகானந்தம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கும் 2010 ஆம் ஆண்டு சட்டத்தையும், அதன் 2020 திருத்தச் சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு, முழுமையாகத் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கே அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 ஆம் வகுப்பு வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாகத் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 2010 ஆம் ஆண்டு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ் வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இதர மொழிகளைப் பயிற்று மொழியாக (Medium of instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

1 ஆம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாகப் பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ்நாட்டில் தங்களது கல்வியினைச் சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். அதாவது, பள்ளிக் கல்வியைப் பொருத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொருத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் / கல்லூரி / பல்கலைக்கழக முதல்வர் / பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும். மேற்படி சான்றிதழ்கள் பணியில் உள்ள அலுவலர்களால் மட்டும் அளிக்கப்பட வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற அலுவலர்களால் அளிக்கப்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாகத் தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் அல்லர்.

பள்ளிக்குச் சென்று பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள் எழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராகத் தேர்வெழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். அதாவது, பள்ளிக் கல்வியைப் பொருத்தமட்டில், சம்பந்தப்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தனித்தேர்வைப் பொருத்தமட்டில் இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும், உயர்கல்வியைப் பொருத்தமட்டில் தொழிற்பயிற்சி நிலையம் / கல்லூரி / பல்கலைக்கழக முதல்வர் / பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்வித் தகுதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட பணியாளர் தெரிவு முகமைகள் (Recruiting Agencies) / பணிநியமன அலுவலர்கள் (Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களின் உண்மைத்தன்மையினை சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் பணியாளர் தெரிவு முகமைகள் (Recruiting Agencies) / பணிநியமன அலுவலர்கள் (Appointing Authorities) உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்தும், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தால் அக்கல்லூரி ஏற்கெனவே இணைவு பெற்றிருந்த பல்கலைக்கழகப் பதிவாளரிடம் இருந்தும் தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ்களைத் தேர்வர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை உறுதி செய்ய இயலாத நிலையில், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள 20%முன்னுரிமை ஒதுக்கீடானது நேரடி பணி நியமனத்திற்கான ஒவ்வொரு தேர்வு நிலையிலும் (முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் இதரநிலைகள்) பதவி வாரியாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****

Tuesday, 20 May 2025

+2 முடித்த மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை விவரங்களும் சேர்க்கைக்கான இறுதி நாட்களும்

+2 முடித்த மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை விவரங்களும் சேர்க்கைக்கான இறுதி நாட்களும்

பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேற்கொண்டு உயர்கல்வி பயில்வதற்கான கல்லூரி சேர்க்கை விவரங்களும், சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாட்களும் அடங்கிய விவரம் வருமாறு,

TNEA – Engineering Colleges

For: Govt + Private Engineering Colleges

Last Date: 06.06.2025

Apply Here : www.tneaonline.org

 

TNGASA – Arts & Science Colleges

For: Govt Arts & Science Colleges

Last Date: 27.05.2025

Apply Here : www.tngasa.in

 

TNAU – Agriculture Courses

For: Agri, Horti, Forestry, (Govt + Pvt)

Last Date: 31.05.2025

Apply Here : www.tnau.ac.in

 

Polytechnic Admission

For: Govt Diploma Colleges

Last Date: 06.06.2025

Apply Here : www.tnpoly.in

 

TNDALU – Law Colleges

For: Govt + Private Law Colleges

Last Date: 31.05.2025

Apply Here: www.tndalu.ac.in

Monday, 19 May 2025

+2 வுக்குப் பின் இவ்வளவு படிப்புகளா?

+2 வுக்குப் பின் இவ்வளவு படிப்புகளா?

மருத்துவம், பொறியியல் இவற்றோடு +2 வுக்குப் பின் பின் படிக்க எத்தனை படிப்புகள் உள்ளன என்பதை அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

நீங்களே பாருங்கள். எவ்வளவு படிப்புகள் உள்ளன என்று.

Science Courses (3 Years) :

Bsc Physics

Bsc Chemistry

Bsc Botany

Bsc Zoology

Bsc Computer science

Bsc Mathematics

Bsc PCM

Bsc CBZ

Bsc Forestry

Bsc Dietician & Nutritionist

Bsc Home Science

Bsc Agriculture Science

Bsc Horticulture

Bsc Sericulture

Bsc Oceanography

Bsc Melsorology

Bsc Arthopology

Bsc Forensic Science

Bsc Food technology

Bsc Diary Technology

Bsc Hotel Management

Bsc Fashion Design

Bsc Mass Communication

Bsc Electronic Media

Bsc Multimedia

Bsc 3D Animation

Commerce Courses :

CA Chatted Account

CMA Cost Management Account

 CS Company Secretary (Foundation)

B.Com Regular

B.Com Taxation &Tax Procedure

B.Com Travel & Tourism

B.Com Bank Management

B.Com Professional

BBA  /. BBM Regular

BFM Bachelor of Financial Management

BMS

BAF

Humanities Courses :

Advertising

BS General

Criminology

Economics

Fine Arts

Foreign languages

Home Science

Interior Design

Journalism

Library Science

Physical Education

Political Science

Psychology

Social Work

Sociology

Travel and Tourism

Management Courses :

Business Management

Bank Management

Event Management

Hospital Management

Hotel Management

Human Resources Managemet

Logistics Management

Law Courses (3 / 5 Years) :

LLB,

BA+LLB

B.Com + LLB

BBM+LLB,

BBA. +LLB

MEDICAL COURSES :

MBBS

BUMS Unani

BHMS Homeopathy

BAMS Ayurveda

BSMS Sidha

BNYS Naturopathy

BDS Dental

BVSc Veterinary.

PARAMEDICAL COURSES :

Nursing

Pharm D

B.Pharm

D.Pharm

M. Pharm

Anesthesia technical

Cardiac Care technical

Perfusion technology

Cathllab technology

Clinical Optometry

Dental Hygiene

Dental Mechanic

Dental Technician

Health Inspector

Medical imaging & Tech...

Medical Lab technician

Medical Records tech

Medical X Ray Technician

Nuclear Medicine Tech

Occupational Therapist

Operation theater Tech

Ophthalmic Assistant

PHYSIOTHERAPY

Radiographic Assistant

Radiotherapy Technician

Rehabilitation Therapy

Respiratory Therapy Tech.

Blood Transfusion Tech..

Bsc Renal Dialysis

B.Tech Engineering (4year) :

Petro chemical Engineering

Petroleum Engineering

Civil Engineering

Mechanical Engineering

Aeronautical Engineering

Aerospace Engineering

Agricultural Engineering

Architecture Engineering

Automobile Engineering

Automation & Robotics Eng.

Avionics Engineering

Biomedical Engineering

Bio technological Eng..

Chemical Engineering

Ceramics Engineering

Computer Science Engi..

Electronics &Comm.Engi.

Electrical & Electronics Engi.

Environmental Science Engi.

Information Science Engi

Industrial Engineering

Industrial Production Engi..

Instrumental Technology

Marine Engineering

Medical Electronics Engi..

Mining Engineering

Manufacturing Science Engi.

Naval Architecture Engi....

Nanotechnology Engi..

Polymer Technology Engi..

Silk Polymar Engi...

Carpet Technology Engi...

Textile engineering

Robotics

Genetic

POLYTECHNIC (10 th class) :

Civil engineering

Mechanical engineering

Automobile engineering

Computer science engi.....

Electronics and communication Engineering

Electrical engineering

Petro chemical engineering

Management :

BBA /BBM

BBA Aviation

BBA Air Cargo Management

BBA Aeronautical

BBA Retail Marketing

BBA Customer Care Management

BBA Airline & Airport Management

BBA Cargo Management

BBA Office Management

BBA Store Management

BBA Mall Management

BBA Logistics

BCA SAP

BCA Cloud Computing

MBA Logistics

         Aviation

         HR

         Management

Architecture (5 years  +2)

B.Arch (NATAis Compulsory)

M.Arch .

இவ்வளவு படிப்புகளில் உங்களுக்குப் பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்து முன்னேற வாழ்த்துகள்!

*****