Sunday, 11 May 2025

கல்வி ஜனநாயகத்தின் பிதாமகர் ஜான் டூயி!

கல்வி ஜனநாயகத்தின் பிதாமகர் ஜான் டூயி!

ஜான் டூயி ஓர் அமெரிக்க கல்வியாளர். இவர் 1859 இல் பிறந்தார்.

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையை முதலில் ஆதரித்த தத்துவவியலாளர் ஜான் டூயி.

கல்வியானது ஜனநாயகப்படுத்தப்படாத கால கட்டத்தில், மதத்தின் ஆதிக்கத்திலிருந்து கல்வியை மீட்டு அரசாங்கத்தின் கடமையாகக் கல்வியை மாற்றியவர் ஜான் டூயி. இவர் மத சார்பான கல்வியைச் சமூக நோயாகப் பார்த்தார்.

தொடக்கக் காலத்தில் Pragmatist ஆக இருந்தார் டூயி. இவர் ஹெகல் முதல் இமானுவேல் கான்ட் வரையிலான தத்துவவியலாளர்களைக் கற்றறிந்தார்.

1903 இல் The school and the society என்ற நூலை வெளியிட்டார்.

1909 இல் How we think?, Democracy in Education முதலிய நூல்களை வெளியிட்டார்.

1915 இல் The schools of tomorrow வெளிவந்து கல்வியில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. இந்நூலின் தாக்கத்தால் பிரெஞ்சு அரசாங்கம் கிறித்துவ ஆலயங்களின் கட்டுப்பாட்டில் இருந்த கல்வியை அரசுடைமையாக்கியது. 1941க்குள் 27 நாடுகள் கல்வியை அரசின் கடமையாக ஏற்றன.

கல்வி கற்ற ஒருவரையே விடுதலை அடைந்த மனிதராக ஜான் டூயி குறிப்பிடுகிறார்.

கற்பித்தல் கற்றல் செயல்முறையில் பயிற்சி மாறுதலை விளக்கியவர் ஜான் டூயி.

இரண்டாம் உலகப் போரை எதிர்த்ததற்காக அமெரிக்க அரசால் சிறை வைக்கப்பட்டவர் ஜான் டூயி. அதன் காரணமாகச் சில காலம் சீனாவில் தமது கல்விச் செயல்பாடுகளை ஆற்றினார். அவ்வகையில்

ஜான் டூயி 1952 இல் காலமானார்.

*****

No comments:

Post a Comment