Saturday, 10 May 2025

இன எழுத்துகள் அறிவோமா?

இன எழுத்துகள் அறிவோமா?

நெல்லும் புல்லும் ஓரினம் என்பார்கள்.

அதுபோலவே சில எழுத்துகள் ஓரினமாகும். அப்படி ஓரினமாகும் எழுத்துகளை இன எழுத்து என்பர்.

எழுத்துகள் எப்படி இனமாகும்?

பிறக்கும் இடத்தால் இனமாகும்.

பிறக்கும் முயற்சியால் இனமாகும்.

மாத்திரை, வடிவம் ஆகியவற்றால் இனமாகும்.

உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடில் இனமாகும்.

அதாவது ‘அவுக்கு இன எழுத்து ஆ.

அளபெடையில் நெடிலுக்கு அருகில் இனமான குற்றெழுத்து வருவதைக் காணலாம்.

(எ.கா)

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னும் அவர். (குறள், 653)

மெய்யெழுத்துகளில் இடையின எழுத்துகளுக்கு இனமில்லை.

வல்லினத்துக்கு மெல்லினம் இனமாகும்.

அதாவது ‘க’வுக்கு இன எழுத்து ங.

‘திங்கள்’ எனும் சொல்லில் ஙகர  மெல்லினத்துக்கு அருகே ககர வல்லினம் அமைகிறது.

*****

No comments:

Post a Comment