கல்வி உளவியலின் பிதாமகர் இவான் பெட்ரோவிச் பாவ்லோ!
இவான்
பாவ்லோ ரஷ்ய கல்வியாளர். சுருக்கமாகப் பாவ்லோ என்று சொன்னால் கல்வி உளவியல் கற்ற அனைவருக்கும்
புரியும்.
ஆன்மவியலாக
இருந்த உளவியலை மனம் சார்ந்த அறிவியலாக மாற்றியவர் இவான் பாவ்லோ.
கல்வியையும்
உளவியலையும் இணைத்த உளவியலாளர் மற்றும் கல்வியாளர் என்று பாவ்லோவைக் குறிப்பிடலாம்.
இவர்
ரஷ்யாவில் செப்டம்பர் 27, 1849 இல் பிறந்தார். உயிரியலில் பட்டம் பெற்றவர் இவர். மருத்துவத்தில்
அறுவை சிகிச்சை நிபுணராகவும் பட்டம் பெற்றார்.
1881
இல் ஷெராபிமா கார்செஸ்காயாவை மணந்தார். அவர் ஓர் ஆசிரியர். இவர்தான் பாவ்லோவின் ஆய்வுகளைக்
கல்வியின் பால் திருப்பியவர்.
1883
உடலின் முழு சீரணமாதலை நரம்பு மண்டலமே முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதென நிரூபித்து
முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாய்வு முடிவிற்காக 1904 இல் அவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.
கல்வியை
அறிவுசார்ந்த கற்றலாக மாற்றியவர் இவர்தான். கற்போரின் இயல்புகளை இயல்பூக்கங்களின் அடிப்படையில்
விளக்கினார் பாவ்லோ. கல்வி உளவியலில் இவர் கண்டறிந்த ஆக்கநிலையுறுத்தல் வெகு பிரபலம்.
1890
இல் நாய்களுனான இவரது ஆய்வுகள் தொடங்கின. ஒரு நாய்க்கு மணியடித்து எலும்புத் துண்டு
தொடர்ந்து வழங்கப்பெறும் போது ஒரு கட்டத்தில் எலும்புத் துண்டு தரப்படாமலே மணியோசையைக்
கேட்டு நாய்க்கு எச்சில் சுரப்பதைப் பாவ்லோ கண்டறிந்தார். இதுவே அவரது ஆக்கநிலையுறுத்தல்
அடிப்படையிலான அனைத்து ஆய்வுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.
பால்லோவின்
கண்டுபிடிப்புகளைக் கல்வியில் புகுத்தி நடத்தை இயலை வளர்த்தெடுத்தார் பி.எப். ஸ்கின்னர்.
உளவியல்
ரீதியாகத் தண்டனைகள், பரிசுகள், பாராட்டுகள், விளையாட்டுகள் ஆகியன கற்றலில் ஏற்படுத்தும்
மாற்றங்களை அறிவியல் பூர்வமாகப் பாவ்லோ நிரூபித்தார்.
1963
இல் இறக்கும் வரை அயராது ஆய்வில் ஈடுபட்டிருந்தார் பாவ்லோ. தான் இறக்கும் போது கூட
தன் உடலில் ஏற்பட்ட உயிரியல் மாறுபாடுகளை உதவியாளரிடம் பட்டியலிட்டபடியே இறந்தார்.
கல்வி
உளவியலின் தந்தை என பாவ்லோ போற்றப்படுகிறார்.
*****
No comments:
Post a Comment