மனித நேயமும் கல்வி நேயமும் மிக்க ஐன்ஸ்டீன்!
மனித
நேயத்தைக் கற்றுத் தராத கல்வி கல்வியே அல்ல என்பது ஐன்ஸ்டீனின் உறுதியான நிலைப்பாடு.
அவர் கடந்த நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞானி மற்றும் மாபெரும் கல்விநேயம் மிக்கவர்.
அமைதி
என்பது ஆழமான புரிதலால் ஏற்படுவது. அதை அடக்குமுறையால் ஏற்படுத்தி விட முடியாது என்பது
அவரது கருத்து.
குழந்தைகளின்
மனதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஐன்ஸ்டீன் அக்கறை காட்டினார். அவர்களின் மனதைப்
புரிந்து கொள்ளாதவர்கள் அவர்களது மனவியலைக் கொலை செய்யும் கொலைகாரர்கள் என்றார் அவர்.
ஐன்ஸ்டீன்
எளிமையானவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர். தொடர்வண்டியில் பயணித்தால் மூன்றாம் வகுப்பில்தான்
பயணிப்பார்.
ஐன்ஸ்டீன்
காந்தியடிகள் மீது தனிமதிப்பு கொண்டிருந்தார். அவரது அறையில் காந்தியடிகளின் படம் மாட்டப்பட்டிருந்தது.
காந்தியடிகள் மறைந்த போது இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை வருங்காலத் தலைமுறையால்
நம்ப முடியாது என்றார் ஐன்ஸ்டீன்.
காந்தியடிகளோடு
அவரை ஒப்பிட்ட போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர் அவர். காந்தியடிகள் அளவுக்கு மனித குலத்துக்கு
தான் நன்மை செய்யவில்லை என்றும், தான் ஏதோ சில கோட்பாடுகளைக் கண்டுபிடித்துள்ளேன்,
அவ்வளவுதான் என்றார்.
நியூட்டனுக்குப்
பிறகு இயற்பியலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் ஐன்ஸ்டீன். அவரது சிறப்பு சார்பியல்
கோட்பாடு இயற்பியலில் பெரும் புரட்சியையே நிகழ்த்தியது.
ஒளியின்
வேகமானது காலம், வெளி, நிறை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றார் ஐன்ஸ்டீன். ஒளியின்
வேகத்தில் செல்லும் பொருளின் நீளம் குறைவதுடன், காலம் குறைவதையும் ஆனால் நிறை அதிகரிப்பதையும்
அவர் கணித்தார். E = mc2 என்ற சமன்பாடு அவரது சிறப்பு சார்பியல் கோட்பாட்டை
விளக்கியது.
ஒளிமின்
விளைவுக்கான அவரது சமன்பாடுகள் பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டன. 1921 இல் ஐன்ஸ்டீனுக்கு
இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
*****
No comments:
Post a Comment