எதனால் எது கெடும்?
01) பாராத பயிரும் கெடும். 
 | 
 
02) பாசத்தினால் பிள்ளை கெடும். 
 | 
 
03) கேளாத கடனும் கெடும். 
 | 
 
04) கேட்கும்போது உறவு கெடும். 
 | 
 
05) தேடாத செல்வம் கெடும். 
 | 
 
06) தெகிட்டினால் விருந்து
  கெடும். 
 | 
 
07) ஓதாத கல்வி கெடும். 
 | 
 
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். 
 | 
 
09) சேராத உறவும் கெடும். 
 | 
 
10) சிற்றின்பன் பெயரும் கெடும். 
 | 
 
11) நாடாத நட்பும் கெடும். 
 | 
 
12) நயமில்லா சொல்லும் கெடும். 
 | 
 
13) கண்டிக்காத பிள்ளை கெடும். 
 | 
 
14) கடன்பட்டால் வாழ்வு கெடும். 
 | 
 
15) பிரிவால் இன்பம் கெடும். 
 | 
 
16) பணத்தால் அமைதி கெடும். 
 | 
 
17) சினமிகுந்தால் அறமும் கெடும். 
 | 
 
18) சிந்திக்காத செயலும் கெடும். 
 | 
 
19) சோம்பினால் வளர்ச்சி கெடும். 
 | 
 
20) சுயமில்லா வேலை கெடும். 
 | 
 
21) மோகித்தால் முறைமை கெடும். 
 | 
 
22) முறையற்ற உறவும் கெடும். 
 | 
 
23) அச்சத்தால் வீரம் கெடும். 
 | 
 
24) அறியாமையால் முடிவு கெடும். 
 | 
 
25) உழுவாத நிலமும் கெடும். 
 | 
 
26)உழைக்காத உடலும்  கெடும். 
 | 
 
27) இறைக்காத கிணறும் கெடும். 
 | 
 
28) இயற்கையழிக்கும் நாடும்
  கெடும். 
 | 
 
29) இல்லாலில்லா வம்சம் கெடும். 
 | 
 
30) இரக்கமில்லா மனிதம் கெடும். 
 | 
 
31) தோகையினால் துறவு கெடும். 
 | 
 
32) துணையில்லா வாழ்வு கெடும். 
 | 
 
33) ஓய்வில்லா முதுமை கெடும். 
 | 
 
34) ஒழுக்கமில்லா பெண்டிர்
  கெடும். 
 | 
 
35) அளவில்லா ஆசை கெடும். 
 | 
 
36) அச்சப்படும் கோழை கெடும். 
 | 
 
37) இலக்கில்லா பயணம் கெடும். 
 | 
 
38) இச்சையினால் உள்ளம் கெடும். 
 | 
 
39) உண்மையில்லா காதல் கெடும். 
 | 
 
40) உணர்வில்லாத இனமும் கெடும். 
 | 
 
41) செல்வம்போனால் சிறப்பு
  கெடும். 
 | 
 
42) சொல்பிறழ்ந்தால் பெயரும்
  கெடும். 
 | 
 
43) தூண்டாத திரியும் கெடும். 
 | 
 
44) தூற்றிப்பேசும் உரையும்
  கெடும். 
 | 
 
45) காய்க்காத மரமும் கெடும். 
 | 
 
46) காடழிந்தால் மழையும் கெடும். 
 | 
 
47) குறிபிறழ்ந்தால் வேட்டை
  கெடும். 
 | 
 
48) குற்றம்பார்த்தால் சுற்றம்
  கெடும். 
 | 
 
49) வசிக்காத வீடும் கெடும். 
 | 
 
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும். 
 | 
 
51) குளிக்காத மேனி கெடும். 
 | 
 
52) குளிர்ந்துபோனால் உணவு
  கெடும். 
 | 
 
53) பொய்யான அழகும் கெடும். 
 | 
 
54) பொய்யுரைத்தால் புகழும்
  கெடும். 
 | 
 
55) துடிப்பில்லா இளமை கெடும். 
 | 
 
56) துவண்டிட்டால் வெற்றி கெடும். 
 | 
 
57) தூங்காத இரவு கெடும். 
 | 
 
58) தூங்கினால் பகலும் கெடும். 
 | 
 
59) கவனமில்லா செயலும் கெடும். 
 | 
 
60) கருத்தில்லா எழுத்தும்
  கெடும். 
 | 
 
No comments:
Post a Comment