Tuesday 28 February 2023

சீனிவாச ராமானுஜம் குறித்த கணிதத் திரைப்படங்கள்

சீனிவாச ராமானுஜம் குறித்த கணிதத் திரைப்படங்கள்

கணிதம் தொடர்பான திரைப்படங்கள் மாணவர்களின் கணித ஆர்வத்தைத் தூண்ட வல்லவை. இத்திரைப்படங்களை மாணவர்களைக் காண செய்வதன் மூலம் மாணவர்களின் கணித ஆர்வத்தைத் தூண்ட முடியும். இத்திரைப்படங்கள் மாணவர்களுக்குக் கணித மேதைகளாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டாக்கும்.

முதலில் இந்திய கணித மேதையான சீனிவாச ராமானுஜம் குறித்த திரைப்படங்களைக் காண்போம். கணித மேதை என்றால் நம் அனைவரின் நினைவுக்கு வருபவரும் அவர்தானே.

சீனிவாச ராமானுஜம் பிறந்த நாளான டிசம்பர் 22 தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்டவர் குறித்து நாம் அறிந்து கொள்ள இத்திரைப்படங்கள் உதவும்.

சீனிவாச ராமானுஜம் குறித்த மூன்று திரைப்படங்களை யூடியூப்பில் காண இயலும்.

Ø முதல் திரைப்படம் ஞான ராஜசேகரன் இயக்கிய நேரடித் தமிழ்த் திரைப்படம்.

Ø இரண்டாவது ‘The man who knew infinity’ என்ற ஆங்கிலத் திரைப்படம்.

Ø மூன்றாவது ‘The man who knew infinity’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கப் படம்.

இம்மூன்று திரைப்படங்களுமே சீனிவாச ராமனுஜம் குறித்த நல்ல புரிதலையும் கணித ஆய்வுகள் குறித்த ஆர்வத்தையுத் தர வல்லவை.

ஞான ராஜசேகரன் இயக்கிய சீனிவாச ராமானுஜம் குறித்த தமிழ்ப் படத்தைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://youtu.be/zx6QsOdA4cQ

சீனிவாச ராமானுஜம் குறித்த ‘The man who knew infinity’ என்ற ஆங்கிலப் படத்தைக் காண (Play செய்யவும்) …

சீனிவாச ராமானுஜம் குறித்த ‘The man who knew infinity’ என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ் மொழியாக்கத்தைக் காண (Play செய்யவும்) …

*****

Monday 27 February 2023

தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28

தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28

தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி – 28 இல் கொண்டாடப்படுகிறது.

ஏன் கொண்டாடப்படுகிறது?

சர்.சி.வி.ராமன் நினைவாக.

அப்படியானால் அதுதான் அவரது பிறந்த நாளா?

இல்லை, அவர் பிறந்தது நவம்பர் 7 இல்.

வருடம் 1888.

அவரது நினைவாகக் கொண்டாடப்படுகிறதா?

அதுவும் இல்லை, அவர் இறந்தது நவம்பர் 21 இல்.

வருடம் 1970.

பிறகேன் பிப்ரவரி 28 இல் கொண்டாடப்பட வேண்டும்?

சர்.சி.வி.ராமன் தனது ராமன் விளைவை இந்த உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அந்த நாளைத்தான் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம்.

எத்தனையோ அறிவியல் அறிஞர்கள் இந்தியாவில் இருக்கும் போது சர்.சி.வி.ராமன் கண்டுபிடிப்பை அறிவித்த நாளை மட்டும் ஏன் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாட வேண்டும்?

சர்.சி.வி.ராமன்தான் இந்தியாவின் முதல் நோபல் பரிசு (1930 இல்) பெற்ற அறிவியல் அறிஞர். அதற்கு முன்பு இந்தியாவிலிருந்து இரபீந்திரநாத் தாகூர்தான் நோபல் பரிசு பெற்றிருந்தார். அது இலக்கியத்திற்காக.

அது மட்டுமில்லை, அறிவியலில் முதல் நோபல் பரிசு பெற்ற ஆசியரும் அவர்தான். அதாவது ஆசிய கண்டத்தில் பிறந்து அறிவியல் துறையில் முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி.ராமன்தான்.

அது மட்டுமில்லை, வெள்ளையரல்லாத அறிவியிலில் நோபல் பரிசு பெற்ற முதல் அறிஞரும் அவர்தான்.

அது மட்டுமில்லை, இந்தியாவில் கல்வி கற்று, இந்தியாவிலிலேயே ஆய்வு மேற்கொண்டு நோபல் பரிசு பெற்றவரும் அவர்தான்.

அது மட்டுமில்லை, தன் வாழ்நாளில் எவ்வளவோ வெளிநாட்டு அழைப்புகள் வந்தும் தன் ஆயுட்காலம் முழுவதும் இந்தியாவில் பணியாற்றி இந்தியாவிலேயே ஆய்வு மேற்கொண்ட அறிஞரும் அவர்தான்.

அது மட்டுமில்லை, நோபல் உரையின் போது இந்திய சுதந்திரம் பற்றியோ இந்திய சுதந்திர வீரர்கள் பற்றியோ எவ்வித பேச்சும் இடம்பெறக் கூடாது என ஆங்கிலேய அரசு எச்சரித்திருந்த போதும் இந்திய சுதந்திர வீரர்களை வணங்கி தன்னுடைய நோபல் உரையைத் தொடங்கியவர்தான் சர்.சி.வி.ராமன்.

அது மட்டுமில்லை, எத்தனையோ இந்திய விஞ்ஞானிகளை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் இந்தியாவிலேயே ஆய்வு செய்ய வற்புறுத்தியவரும் சர்.சி.வி.ராமன்தான்

இப்படிப்பட்டவருக்காக, இந்தியாவிற்கு அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறக் காரணமாக இருந்த ராமன் விளைவை அறிவித்த நாளை தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுவது சிறப்புதானே.

 இவரைப் பற்றிக் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

Sir Chadrasekara Venkata Raman என்ற பெயரின் சுருக்கம்தான் சர்.சி.வி.ராமன் என்பதாகும். தமிழில் குறிப்பிட வேண்டுமென்றால் சர் ச.வெ.ராமன் என்று குறிப்பிடலாம்.

சர் என்பது ஆங்கிலேய அரசு அவருக்கு அளித்த பட்டமாகும்.

வெங்கடராமன் என்பது அவரது பெயர்.

சந்திரசேகரன் என்பது அவரது தந்தையார் பெயர்.

சர்.சி.வி.ராமனின் நினைவாகத் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை தருவதாகும்.

எப்படி?

சர்.சி.வி.ராமன் ஒரு தமிழர்.

அவர் பிறந்தது திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவலில்.

அவரது பள்ளிப்படிப்பு அவரது தந்தையின் வேலை நிமித்தமாக விசாகப்பட்டினத்தில் நிகழ்ந்திருந்தாலும் கல்லூரி படிப்பு படித்ததெல்லாம் சென்னை மாநிலக் கல்லூரியில்தான். நமது தமிழ்நாட்டில்தான்.

அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகள் இயற்பியல் பேராசிரியராகவும் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் 15 ஆண்டுகள் விஞ்ஞானியாகவும் பணி புரிந்திருக்கிறார்.

இந்தியர்களின் அறிவியல் ஆய்வுகளை உலகறியச் செய்யும் நோக்குடன் Indian Journal of Physics, Current Science ஆகிய ஆய்விதழ்களைத் தொடங்கி நடத்தியுள்ளார்.

அறிவியல் அறிஞர்களை உருவாக்குவதற்காக Indian Science Academy, Current Science Association ஆகிய அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

இவருக்கு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் Fellow of Royal Society, Knighthood, Hughes of Royal Society. Sir போன்ற சிறப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசு 1954 இல் பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. முதன் முதலாக பாரதரத்னா விருது பெற்ற மூவரில் இவரும் ஒருவர். அத்துடன் அம்மூவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூவரில் மற்ற இருவர் ராதாகிருஷ்ணனும் ராஜாஜியும் ஆவர்.

மைசூர் அரசர் இவருக்கு ராஜ்சபாபூசன் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்.

இத்தாலிய தேசம் மேட்யூச்சி பதக்கம் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

பிலடெல்பியா நிறுவனம் பிராங்ளின் பதக்கம் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

ரஷ்ய தேசம் அகில உலக லெனின் பரிசு வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

இப்படிப்பட்டவர் தன்னுடைய கண்டுபிடிப்பை அறிவித்த நாளைத் தேசிய அறிவியல் தினமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 28 இல் கொண்டாடுவது இந்தியர்களாகிய நமக்குச் சிறப்புதானே.

*****

Sunday 26 February 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘எ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘எ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘எ’ – வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் சொற்கள் அடங்கிய பயிற்சி அட்டவணை

‘எ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளும்

சொற்களும்

எழுத்துகள்

சொற்கள்

கெ

கெண்டி

செங்கல்

கட்டெறும்பு

எண்ணெய்

தெரு

நெல்

நெல்லிக்காய்

பெட்டி

மெழுகுவர்த்தி

வெல்லம்

தெப்பம்

வெப்பம்

செடி

வெடி

செருப்பு

நெருப்பு

நெய்

மெய்

செம்பருத்தி

செண்பகம்

மென்மை

பெண்மை

தெற்கு

தென்னாடு

வெற்றிடம்

தெருவிளக்கு

செக்கு

பெருமை

பெருக்கல்

வகுத்தல்

ஙெ

செ

ஞெ

டெ

ணெ

தெ

நெ

பெ

மெ

யெ

ரெ

லெ

வெ

ழெ

ளெ

றெ

னெ

*****

Saturday 25 February 2023

National Science Day – February 28

National Science Day – February 28

National Science Day is celebrated annually on February – 28.

Why is it celebrated?

In memory of Sir C.V. Raman.

So is that his birthday?

No, he was born on November 7.

The year was 1888.

Celebrated in his memory?

Not even that, he died on November 21.

The year is 1970.

When should it be celebrated on February 28?

The day Sir C.V. Raman announced his Raman effect to the world is February 28. We celebrate that day as National Science Day.

Why celebrate only the day when Sir C.V. Raman announced his discovery as National Science Day when there are so many scientists in India?

Sir C.V. Raman was India's first Nobel Prize-winning scientist (in 1930). Before that, Rabindranath Tagore was the recipient of the Nobel Prize from India. It is for literature.

Not only that, he was also the first Asian to win the Nobel Prize in Science. Sir C.V.Raman was the first Nobel laureate in the field of science born in the Asian continent.

Not only that, but he was the first non-white scientist to win the Nobel Prize in Science.

Not only that, he was also a Nobel laureate who studied in India and conducted research in India.

Not only that, he was also a scholar who worked in India throughout his life and did research in India despite receiving many foreign calls during his life.

Not only that, it was Sir C.V. Raman who started his Nobel speech by paying homage to the Indian freedom fighters even though the British government had warned him not to talk about Indian freedom or Indian freedom fighters during the Nobel speech.

Not only that, it was Sir C.V. Raman who persuaded many Indian scientists to conduct research in India instead of sending them abroad.

For such a person, it is special to celebrate the day of the announcement of the Raman effect, which led to the Nobel Prize in science for India, as National Science Day.

 Don't you want to know a little about him?

Sir C.V. Raman is an abbreviation of the name Sir Chadrasekara Venkata Raman.

Sir is the title given to him by the British government.

His name is Venkataraman.

Chandrasekaran is his father's name.

Celebrating National Science Day in memory of Sir C.V. Raman is a matter of pride for all of us Tamilians.

How?

Sir C.V. Raman was a Tamilian.

He was born in Thiruvanaikaval near Trichy.

Although his schooling took place in Visakhapatnam due to his father's work, his college education was at Madras Presidency College, in our Tamil Nadu.

He has worked as a Professor of Physics at Calcutta University for 15 years and as a Scientist at the Indian Institute of Science, Bangalore for 15 years.

He has started Indian Journal of Physics and Current Science with the aim of making the scientific studies of Indians known to the world.

He has created organizations like Indian Science Academy and Current Science Association to produce scientists.

He has Fellow of Royal Society, Knighthood, Hughes of Royal Society during the British rule. Specials like Sir have been honoured to him.

After India's independence, the Government of India conferred the Bharat Ratna Award in 1954. He is one of the first three recipients of the Bharat Ratna award. It is also noteworthy that all three are Tamils. The other two of the trio are Radhakrishnan and Rajaji.

The King of Mysore honored him by giving him the title of Rajsaba Bhusan.

The Italian nation has awarded the Matteucci Medal.

Franklin Medal awarded by the Philadelphia Society.

The Russian nation has been honored by the International Lenin Prize.

It is special for us Indians to celebrate the day when such a man announced his discovery as National Science Day every year on February 28.

*****

Friday 24 February 2023

பேக்கேஜ்டு உணவுகளில் கவனிக்க வேண்டியவை

பேக்கேஜ் உணவுகளில் கவனிக்க வேண்டியவை

பதப்படுத்தப்பட்ட மற்றும் அடைக்கப்பட்ட (பேக்கேஜ்டு) உணவு மற்றும் பான வகையறாக்களில் நாம் பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டும். இவ்வித கவனித்தல் மிக அவசியமாகும். தற்காலங்களில் அத்தியாவசியமான ஒன்றாகும்.

உணவு மற்றும் பானங்களை பேக்கேஜ்டு நிலையில் வாங்கும் போது பின்வரும் மூன்று குறியீடுகளில் ஏதேனும் ஒன்று அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

1) FSSAI

2) ISI

3) Agmark

FSSAI

இக்குறியீட்டை நீங்கள் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட (பேக்கேஜ்டு) உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களில் பார்க்கலாம். Food Safety and Standards Authority o India என்பதன் சுருக்கமே FSSAI என்பதாகும்.

ISI

தண்ணீர் புட்டிகள் போன்றவற்றில் நீங்கள் இக்குறியீட்டைப் பார்க்கலாம். Indian Standards Institute என்பதன் சுருக்கமே ISI என்பதாகும்.

Agmark

எண்ணெய், தானியங்கள், பருப்பு வகைகள், சமையலறைப் பொருட்கள், தேன், மசாலாப் பொருட்கள் போன்ற விவசாயத்தோடு தொடர்புடைய பொருட்கள் அடங்கிய பொட்டலங்களில் இக்குறியீட்டை நீங்கள் பார்க்கலாம். Agriculture Mark என்பதன் சுருக்கமே Agmark என்பதாகும்.

இக்குறியீடுகளில் ஏதேனும் ஒன்றாவது நீங்கள் வாங்கும் அடைக்கப்பட்ட (பேக்கேஜ்டு) உணவுப்பொருள் அல்லது பானம் அடங்கிய உறையில் இருக்க வேண்டும். அப்பொருள்களே விற்பனைக்கான அங்கீகாரம் பெற்றதும் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கேற்றதும் ஆகிய பொருட்களாகும். இக்குறியீடுகள் இல்லாத உணவுப்பொட்டலங்களைப் பானங்களை வாங்குவதைத் தவிர்ப்பது நலமாகும்.

இத்துடன் நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் சைவமாக அசைவமா என்பதைக் குறிப்பிடும் பச்சை மற்றம் சிவப்பு குறியீடுகளைப் பார்த்தும் வாங்கலாம்.

தற்போது ஆர்கானிக் பொருள் என்பதைக் குறிக்கும் Jaivik Bharat என்ற குறியீட்டைக் கவனித்தும் வாங்கலாம்.

இத்துடன் உணவுப்பொருளின் தயாரிப்புத் தேதி (Mfg Date), காலாவதி தேதி (Expiry Date) குறித்த தகவல்களையும் கவனித்து வாங்கலாம்.

சில உணவுப்பொருள் பொட்டலங்களில் Best Before … என்று குறிப்பிட்டிருப்பதையும் கவனித்து வாங்கலாம். இந்த Best Before … என்பது குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடு வரை பொருளின் தயாரிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பதைக் குறிப்பதாகும். இதனால் அக்காலக்கெடுவைக் கடந்த உணவுப்பொருட்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தரத்திற்கான குறியீடுகளில் குறைவு ஏற்படும் என்பதைக் குறிப்பதற்காகும் அதாவது அந்தக் காலக்கெடு காலத்தைச் சிறிது கடந்திருந்தாலும் வேறு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனலாம். ஆனால் Expiry Date காலக்கெடு அப்படிப்பட்டதல்ல. அந்தத் தேதியைக் கடந்த உணவுப்பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக Best Before … என்பதில் செய்து கொள்ளும் சமாதானத்தை Expiry Dateஇல் செய்து கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகவல் பயனுடையதாக இருந்தால் அனைவரும் பயன்பெற பகிருங்கள். விழிப்புணர்வை உருவாக்குங்கள். உங்களது கருத்துகளையும் தயக்கமின்றித் தெரிவியுங்கள். இன்னும் கூடுதல் விவரங்கள் தங்களுக்குத் தெரிந்திருப்பின் அதையும் அனைவரும் நலன் கருதி தெரிவியுங்கள்.

*****

Thursday 23 February 2023

Leave Management Systemத்திற்கான Leave Module Manual

Leave Management Systemத்திற்கான Leave Module Manual

TNSED செயலியில் ஆசிரியர்கள் பதிவேற்ற வேண்டிய விடுப்பு விவரங்களுக்கான (Leave Management System) விவரங்கள் அடங்கிய Manual For Leave Moduleஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

*****

மண்டல அளவிலான குழு பார்வையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மண்டல அளவிலான குழு பார்வையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மண்டல அளவிலான குழு பார்வையின் போது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்

1. காலை வழிபாட்டுக் கூட்டம்

அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப் பண் பிழையின்றிப் பாடுவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இன்றைய செய்தி ( தமிழ் & ஆங்கிலம்), திருக்குறள் & பழமொழி அதன் விளக்கம் , ஆசிரியர் உரை இடம்பெறுதல் வேண்டும்.

2. பள்ளி வளாகம்

பள்ளி வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுதல் வேண்டும்.

குப்பைகளை எரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படின் அதற்காக பள்ளி வளாகத்தில் Cement RCC Rings பயன்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் தேவையற்ற பொருட்கள் இருப்பின் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்

3. வகுப்பறைகள்

வகுப்பறைகள் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு குப்பைத் தொட்டி இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மிதியடிகள் வகுப்பிற்கு வெளியே வரிசையாக விடப்பட்டிருக்க வேண்டும்.

காற்றோட்டமான போதிய வெளிச்சத்துடன் கூடிய வகுப்பறையாக இருக்க வேண்டும்.

TLM மற்றும் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

கரும்பலகைகள் (கீழ்மட்டக் கரும்பலகைகள் உட்பட) வண்ணம் தீட்டப்பட்டு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

மின்சாதனப் பொருட்கள் மற்றும் மின் இணைப்புகள் உரிய பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. கழிவறைகள்

மாணவர்கள் அனைவரும் கழிவறையை பயன்படுத்தும் வகையில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

தினந்தோறும் தூய்மைப்படுத்தப்பட்டுத் தண்ணீர் வசதியுடன் இருக்க வேண்டும்.

5. ஆசிரியர் செயல்பாடு

அனைத்து மாணவர்களும் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வருகை புரிவதை ஆசிரியர் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

முறையாக வருகை புரியாத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

பாடக்குறிப்பு மற்றும் கற்பித்தல் துணைக்கருவிகள் துணையுடன் வகுப்பு எடுக்க வேண்டும்.

எண்ணும் எழுத்தும், படைப்பாற்றல் கற்பித்தல் முறை என அந்தந்த வகுப்புகளுக்கு உரிய முறையில் வகுப்புகளை எடுக்க வேண்டும்.

மாணவர்களுடன் கலந்துரையாடுதல், கேள்வி கேட்டல், மதிப்பீடு செய்தல், பாடப் பொருளைப் புரியும் வகையில் கற்பித்தல், கற்றல் விளைவுகளின் அடிப்படையில் கற்பித்தலை அமைத்திருத்தல் ஆகியவற்றுக்குக் கற்பித்தலின் போது ஆசிரியர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மாணவர்களின் குறிப்பேடுகள், கட்டுரை ஏடுகள் போன்றவற்றை முறையாக அவ்வப்பொழுது திருத்தித் தேதியுடன் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.

6. பதிவேடுகள்

பள்ளியின் அனைத்து பதிவேடுகளும்  புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

7. எண்ணும் எழுத்தும்

களங்கள் முறையாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தந்த வாரத்திற்கான செயல்பாடுகள் ( TLM) புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர் கையேட்டின் அடிப்படையில் வகுப்பறைச் செயல்பாடு அமைய வேண்டும்.

பயிற்சி ஏடுகளில் மாணவர்கள் முறையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

8. SALM

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இம்முறையில் பாடம் கற்பிக்கப்பட வேண்டும். Trays முறையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

9. ALM

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையில் பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.

புதிய வார்த்தைகள் ,மன வரைபடம், தொகுத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

10. கட்டுரை ஏடு

மாதத்திற்கு ஒரு கட்டுரையென எழுதப்பட்டு ஆசிரியரால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தேதியுடன் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.

கட்டுரைகளைக் கரும்பலகையில் எழுதிப் போட்டு அதனை அப்படியே மாணவர்களை எழுதச் செய்யக்கூடாது. முதலில் தலைப்பினை தெரிவித்து அது சம்பந்தமாக மாணவர்களுக்கு தெரிந்த கருத்துகளை எழுதி வரச் செய்து திருத்தம் செய்து அதன் பிறகு கூடுதல் தகவல் அளித்து மனப்பாடம் செய்து வரச் சொல்லி அதன் பிறகு கட்டுரை ஏடுகளில் எழுதச் செய்திருக்க வேண்டும்.

11. மெல்லக் கற்கும் மாணவர்கள்

நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கென உரிய பயிற்சி ஏடுகள், பதிவேடுகள் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். Bridge Course Books பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

செயல் திட்டம் அமைத்து மாணவர்களின் அடிப்படை எண்ணறிவு & எழுத்தறிவு மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

12. STEM

வானவில் மன்றச் செயல்பாடுகளை முறையாக செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

13. ITK

இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு  ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் செல்வதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

14. GRANTS

பள்ளியின் தேவையின் அடிப்படையில் மற்றும் செய்லமுறைகளில் தெரிவித்துள்ளவாறு SNA மூலம் செலவினம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

SMC கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே செலவினம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளியின் பெயர்ப் பலகை புதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அறிவிப்பு பலகையில் நிதி வரவு  விபரம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

புதிய பொருட்கள் வாங்கப்பட்டிருப்பின் இருப்பு பதிவேட்டில் பதியப்பட்டிருக்க வேண்டும்.

15. EMIS

ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு தினந்தோறும் முறையாக குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Library books, PSTM ஆகிய அனைத்து விவரங்களும் அவ்வப்பொழுது பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக ஆதார் எண் பெற முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து அம்சங்களையும் மண்டல அளவிலான குழு பார்வையின் போது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்வது நலமாகும்.

*****