Monday, 21 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.07.2025)

1) பிரிட்டன் மற்றும் மாலத்தீவுக்கு நான்கு நாள் அரசு முறைப் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி நாளை புறப்பட உள்ளார்.

2) இந்தியாவின் ராணுவ வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியப்பதாகப் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

3) ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

4) தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அடுத்த மாதத்தோடு ஓய்வு பெற உள்ளார். இதைத் தொடர்ந்த புதிய டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாகியுள்ளன.

5) சென்னை மாநகரில் ஆறு லட்சம் கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்தப்படாமல் உள்ளது.

6) நிகழாண்டில் தமிழகத்தில் 50 இளநிலை மருத்துவப் படிப்பிற்கான (MBBS) இடங்கள் குறைக்கப்படுகின்றன.

7) நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 53,340 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

8) இத்தாலி கார் பந்தயப் போட்டியில் மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Education & GK News

1) Prime Minister Narendra Modi is set to leave for a four-day state visit to Britain and the Maldives tomorrow.

2) The Prime Minister has said that the world is amazed by India's military strength.

3) Parliament was adjourned twice due to the uproar over the Operation Sindhur issue.

4) Tamil Nadu DGP Shankar Jiwal is set to retire next month. Following this, the process of selecting a new DGP has intensified.

5) Property tax on six lakh buildings in Chennai city is unpaid.

6) 50 MBBS seats are being reduced in Tamil Nadu this year.

7) The Tamil Nadu government has said that Rs 53,340 crore crop loans have been given to farmers in four years.

8) Actor Ajith Kumar, who was involved in another accident in an Italian car race, luckily escaped.

Sunday, 20 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (21.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (21.07.2025)

1) குடிநீர், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2) மக்களிடம் கனிவு மற்றும் மரியாதை காட்டுமாறு காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

3) நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நேற்று நிரம்பியது.

4) நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

5) சுத்தகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) எண்ணெயைப் பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் 20 லட்சம் இறப்பதாக கேரள ஆயுர்வேத பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

6) நாளை வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7) ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் சூரிய கிரகணத்தின் போது உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும். இவ்விதம் 6 நிமிடங்கள் உலகம் இருளில் மூழ்குவது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

8) நாட்டின் தூய்மையான நகரமாக எட்டாவது ஆண்டாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

9) அமெரிக்காவில் நடைபெற்று வரும் சதுரங்கப் போட்டியில் உலகின் முதன்மையான சதுரங்க வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

Education & GK News

1) Chief Minister M.K. Stalin has ordered the urban local bodies to complete the drinking water and rainwater drainage works as soon as possible.

2) Chief Minister M.K. Stalin has instructed the police department to show kindness and respect to the people.

3) Mettur dam filled for the third time this year yesterday.

4) The monsoon session of Parliament begins today.

5) The results of a study by the Kerala Ayurveda University indicate that 20 lakh people die every year due to the use of refined oil.

6) The Meteorological Department has said that there is a possibility of heavy rain in some parts of Tamil Nadu till tomorrow.

7) The world will be plunged into darkness for 6 minutes during the solar eclipse on August 2. It is noteworthy that the world will be plunged into darkness for 6 minutes in this way after 100 years.

8) Indore in Madhya Pradesh has been selected as the cleanest city of the country for the eighth year.

9) India's Praggnanandha defeated the world's top chess player, Magnus Carlsen of Norway, in a chess tournament being held in the United States.

Saturday, 19 July 2025

உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும்!

உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும்!

வாழ்க்கை என்பது மனநிலை மற்றும் பழக்கவழக்கங்களைச் சார்ந்தது. வாழ்க்கையில் நல்ல மனநிலையையும் நல்ல பழக்கவழக்கங்களையும் வளர்த்துக் கொள்வது முக்கியம். அதுவே ஒருவரின் வாழ்க்கையை வடிவமைக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு சில பழக்கவழக்கங்களை இங்கே காண்போம்.

முதலில் பணம் குறித்த சரியான மனநிலை மற்றும் பழக்கவழக்கத்தைப் பார்பபோம்.

பணம் என்பது பந்தா காட்டுவதற்கானது அல்ல. தேவையான வசதிகளை உருவாக்கிக் கொள்வதற்கானது. ஆகவே பணத்தை அத்தியாவசியமான மற்றும் அவசியமான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள மட்டும் பயன்படுத்துங்கள்.

உங்களிடம் பணம் இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காக எவ்வித வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். பணத்தை வைத்து உங்களை யாரென்று காட்ட நினைத்தால், அது முடிவில் உங்களை அழித்து விட்டுதான் மறுவேலை பார்க்கும். ஏனென்றால் பணத்திற்கு அப்படிப்பட்ட மறைமுக உள்ளார்ந்த தன்மை இருக்கிறது.

பணத்தைப் பொருத்தமட்டில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது ஒரு விசயமே அன்று. நீங்கள் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதாவது, உங்களால் எவ்வளவு பணத்தை மிச்சம் பண்ண முடிகிறது என்பதுதான் முக்கியம். இந்த உலகில் லட்சம் லட்சமாய்ச் சம்பாதிக்கும் கடன்கார்களும் இருக்கிறார்கள், ஆயிரம் ரூபாய் சம்பாதித்து அதை மிச்சப்படுத்திக் கொண்டே வந்து அதை லட்ச ரூபாயாக மாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

எப்போதும் வரவுக்குள் செலவு செய்யுங்கள். சீக்கிரம் உங்களுக்கான முதலீடுகளை ஆரம்பித்து விடுங்கள். அது நகை வாங்குவதாக, பங்குகள் வாங்குவதாக, நிலம் வாங்குவதாக, உங்களுக்கான சொத்துகளை உருவாக்குவதாக, உங்களுக்கான வியாபாரத்தை ஆரம்பிப்பதாக… என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை விரைவில் இளமையிலேயே ஆரம்பித்துவிடுங்கள்.

இளமையிலேயே ஆரம்பித்து விடும் போது உங்களால் நிறைய சேர்க்க முடியும். விரைவில் பணக்காரர் ஆக முடியும். எதையும் சீக்கிரமாக ஆரம்பித்து விடும் போது காலம் உங்களுக்காக வேலை செய்யும். தாமதம் செய்தீர்கள் என்றால் காலத்திற்காக நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

அடுத்தவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதும் வாழ்க்கையின் முக்கியமானது. அது குறித்தும் அறிந்து கொள்வோம். எப்போதும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்றே யோசித்துக் கொண்டே இருக்காதீர்கள். இதற்கு அர்த்தம் அடுத்தவர்கள் உங்களைப் பற்றி நினைக்க மாட்டார்கள் என்பது அர்த்தமில்லை. அவர்கள் உங்களைப் பற்றி எப்போதாவது நினைப்பார்கள், எப்போதும் அல்ல. ஏதோ சில நேரங்களில் உங்களைப் பற்றி ஆக்ரோஷமாக நினைப்பர்கள். பல நேரங்களில் உங்களைப் பற்றிய நினைப்பே அவர்களுக்கு இருக்காது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அவர்களைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லாத காலம் இது. ஆகவே அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நினைத்துக் கொண்டே இராமல், உங்கள் தலைமுறைக்கான சாம்ராஜ்ஜியத்தைப் பொறுமையாக உருவாக்கிக் கொண்டு இருப்பதில் கவனம் செலுத்துங்கள்.

அடுத்து உங்கள் தலைமுறையை நீங்கள் எப்படி அணுக வேண்டும் என்பதும் முக்கியமானது. நீங்கள் கற்றதை உங்கள் தலைமுறைக்குச் சொல்லிக் கொடுங்கள். சொத்து என்பது பணத்தைக் கொடுப்பது அன்று. பணம் பற்றிய அறிவைக் கொடுப்பது. மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதுதான் நல்லது. கடன் வாங்கி ஒரு பொருளை வாங்குவதைக் கற்றுக் கொடுத்து விடாமல், பணம் குறித்து திட்டம் (பட்ஜெட்) போட்டு வாழ்வதை அவசியம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். இதுதான் அவர்களின் ஆரோக்கியமான மனநிலைக்கும் நல்ல பழக்க வழக்கங்களுக்கும் அவசியம் தேவையான அஸ்திவாரம் ஆகும்.

மனநிலையை அமைத்துக் கொள்வதும் வாழ்க்கையில் முக்கியமானது. அமைதி, ஒழுக்கம், பொறுமை, நிதானம் ஆகிய நான்கு குணங்களையும் நம் மனநிலைகளாகவே வார்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இவை  வெளிப்பட வேண்டும். பழக்கவழக்கங்கள் அனைத்தும் இவற்றை உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் தலைமுறைகளிடம் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குவதை விட, வாழ்க்கைக்கான பொருளைச் சேர்ப்பது முக்கியம் என்பதை எப்போதும் எடுத்துச் சொல்லுங்கள். அத்துடன், எதிலும் குறுகிய கால யோசனையோடு செயல்படாமல், நீண்ட கால யோசனையோடு செயல்பட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

இந்த வாழ்க்கையை நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ, யாருடனும் போட்டி போட வேண்டிய அவசியமே இல்லை. இதை வாழ்க்கையில் புரிந்து கொள்வது மிக முக்கியமானது. வாழ்க்கை என்ன, போட்டிப் போட்டு வெற்றி பெற வேண்டிய ஓட்டப் பந்தயமா? ஆகவே இந்த வாழ்க்கையில் யாருடனும் ஓட்டப் பந்தயத்தில் ஓட வேண்டிய அவசியமே இல்லை. இதையும் உங்கள் தலைமுறைக்குப் பொறுமையாகப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்.

எப்போதும் திடீர் ஆசைகள், திடீர் அந்தஸ்துகள் ஆபத்துகளை விளைவிக்கும் என்பதை அறிந்து அவற்றை விலக்கி வைக்கும் மனோதிடம் வாழ்க்கையில் வேண்டும். தற்காலிக சந்தோசங்களுக்கு ஆசைப்படாமல் நிரந்தர நிம்மதியும், சுதந்திரமும் முக்கியம் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். இதை நீங்கள் புரிந்து கொள்வதோடு, உங்கள் தலைமுறைக்கும் புரியவையுங்கள்.

வாழ்க்கையில் அந்தஸ்து பார்த்துக் கொண்டே நல்ல விசயங்களைத் தவற விட்டு விடக் கூடாது. அந்தஸ்து என்பது பந்தாவோ, ஆடம்பரமே அல்ல. அது தன்முனைப்போடும் தன்மானத்தோடு இருப்பதே. இதைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அப்படித் தவறாகப் புரிந்து கொண்டால் வட்டி கட்டி வாழும் வாழ்க்கையையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் இதைப் புரிந்து கொண்டால் உங்களது சுதந்திரமான வாழ்க்கை நல்ல விசயங்கள் பலவற்றை வட்டியாக உங்களுக்கு வாங்கித் தரும். நீங்களும் உங்கள் தலைமுறையும் புரிந்து கொள்ள வேண்டிய முடிவான விசயம் இதுவே.

மேற்படி அனைத்து விசயங்களையும் புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்தால் நீங்களும் உங்கள் தலைமுறையும் பல்லாண்டு பல்லாண்டு நலமாகவும் வளமாகவும் பலமாகவும் வாழ்வீர்கள்! வாழ்த்துகள்!

*****

Friday, 18 July 2025

ஆப் பண்ணி ஆன் பண்ணினால் ஸ்மார்ட்போன் நன்றாக வேலை செய்யுமா?

ஆப் பண்ணி ஆன் பண்ணினால் ஸ்மார்ட்போன்

நன்றாக வேலை செய்யுமா?

திறன்பேசியாகி விட்ட அலைபேசியை (Smart phone) அணைத்துப் போடும் போது (ஸ்விட்ச் ஆப் பண்ணி ஸ்விட்ச் ஆன் செய்யும் போது) நன்றாக வேலை செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

நாம் அலைபேசியில் தற்காலத்தில் நிறைய செயலிகளைப் (ஆப்களை) பயன்படுத்துகிறோம். அத்துடன் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் அலைபேசியில் செய்கிறோம்.

அதாவது புலனத்தைப் (வாட்ஸ் அப்) பார்த்துக் கொண்டே, இன்ஸ்டாகிராமில் படத்தைப் பதிவேற்றிக் கொண்டே, விளையாட்டை (கேம்) விளையாடிக் கொண்டே, முகநூலில் யாராவது நம் பதிவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதைப் பார்த்துக் கொண்டே… என்று ஏகப்பட்ட வேலையைச் செய்து கொண்டிருப்போம்.

இதனால் நமது அலைபேசியின் தற்காலிக நினைவகப் பகுதியான (ரேம் RAM) அதிகப்படியான நினைவுகளைச் சுமக்க முடியாமல் தடுமாறும்.

இதைத் தவிர்க்க இயக்கத்தில் உள்ள பல செயலிகளின் இயக்கத்தைக் குறைக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல வேலைகளை அலைபேசியில் செய்யாமல் அதையும் குறைக்க வேண்டும். இல்லையென்றால் அலைபேசி செயல்பட முடியாமல் தடுமாறும்.

அது போன்ற நேரங்களில் நாம் அலைபேசியை அணைத்து மீண்டும் போடும் போது (ஸ்விட்ச் ஆப் செய்து ஸ்விட்ச் ஆன் செய்யும் போது) தற்காலிக நினைவுப் பகுதிகளில் அடைத்துக் கொண்டிருந்த அத்தனை சேமிப்புகளும் அகற்றப்பட்டு அலைபேசியின் அப்பகுதியானது தன்னை எவ்வித சேமிப்புகளும் இல்லாமல் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும். இப்போது அலைபேசி தடங்கல் இல்லாமல் வேகமாகச் செயல்படும். இதுவே அலைபேசியை அணைத்துப் போடும் போது (ஸ்விட்ச் ஆப் செய்து ஸ்விட்ச் ஆன் செய்யும் போது) அலைபேசி திறம்பட வேலை செய்வதற்குக் காரணம்.

தினம் ஒரு முறை அலைபேசியை இவ்வாறு அணைத்துப் போடுவது நல்லதே. அதுவும் இல்லாமல் உறங்கும் நேரத்தில் அலைபேசியை அணைத்து விட்டு, விழிக்கும் போது அதற்கும் விழிப்பு கொடுத்தால் அது அலைபேசிக்கு மட்டுமல்லாமல் நம் உடல் மற்றும் மனநலத்திற்குக் கூட நல்லதுதானே!

அத்துடன், உங்களது திறன்பேசியின் (Smartphone) தற்காலிக சேமிப்புப் பகுதி (RAM) மற்றும் நினைவகப் பகுதிக்கேற்ப (Storage) செயலிகளை அளவோடு பயன்படுத்துவதும், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை (Multi tasking) மட்டுப்படுத்திக் கொள்வதும் உங்களது திறன்பேசி திறம்பட இயங்க உதவும்.

*****

Thursday, 17 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.07.2025)

1) சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21 ஆம் தேதி தொடங்குகிறது.

3) பயிர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான 24000 கோடிக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

4) பாஸ்தானில் பருவமழையால் ஏற்பட்ட உயிரிழப்பு 140 ஆக உயர்ந்தது.

5) ஏப்ரல் முதல் சூன் வரையிலான நிகழ் ஆண்டில் பயணிகள் வாகன விற்பனை 1.4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

6) சென்னை, கோவை, தஞ்சை மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரிகளில் அதி நவீன மருத்தியல் ஆய்வகங்களை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Education & GK News

1) Heavy rain warning issued for 10 districts including Chennai and Tiruvallur today.

2) Parliament's monsoon session begins on the 21st.

3) The central government has approved a Rs 24,000 crore scheme to improve crop production.

4) Death toll due to monsoon rains in Pakistan rises to 140.

5) Passenger vehicle sales have declined by 1.4 percent in the current year from April to June.

6) The Tamil Nadu government has issued an order to set up hitech medical laboratories in Chennai, Coimbatore, Thanjavur and Madurai medical colleges.

Wednesday, 16 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.07.2025)

1) இளநிலை மருத்துவ படிப்பிற்கான (எம்பிபிஎஸ்) கலந்தாய்வு சூலை 30 முதல் தொடங்குகிறது.

2) அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு சூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.

3) புதுவை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 சதவீதம் உயர்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

4) மாணவர்கள் படிப்பதற்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை நகரம் 128 ஆவது இடத்தில் உள்ளது. தென்கொரியாவின் சியோல் முதல் இடத்திலும், ஜப்பானின் டோக்கியோ இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் லண்டன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

5) அடுத்த மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் மக்களவைக் கூட்டத்தொடரில் எட்டு மசோத்தாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

6) இந்தியாவின் சூன் மாத வேலை வாய்ப்பின்மை 5.6 சதவீதமாக உள்ளது.

7) சிறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்குரிய வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

8) ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ளது.

Education & GK News

1) The counselling for undergraduate medical courses (MBBS) will start from July 30.

2) Applications for postgraduate courses in government arts and science colleges can be made till July 31.

3) Chief Minister Rangasamy has announced that 10 percent reservation will be given to students studying in Puducherry government schools.

4) Chennai is ranked 128th in the list of cities suitable for students to study. Seoul in South Korea is at the first place, Tokyo in Japan is at the second place, and London in England is at the third place.

5) Eight bills are to be introduced in the Lok Sabha session of Parliament that begins next month.

6) India's unemployment rate in June is 5.6 percent.

7) The Supreme Court has ordered the Tamil Nadu prison authorities to provide facilities for the differently-abled in prisons.

8) NATO has warned that countries trading with Russia will be taxed 100 percent.

Tuesday, 15 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.07.2025)

1) இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா டிராகன் விண்கலத்திலிருந்து பத்திரமாகப் பூமிக்குத் திரும்பினார்.

2) சீன அதிபர் ஜிஜின்பிங்கை இந்திய வெளியுறுவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

3) நாளை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4) தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் நிலை 2 (குரூப் 2) முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

5) சூன் 25 அன்று மாநிலங்களவை உறுப்பினராக கமலஹாசன் பதவியேற்கிறார்.

6) கேரள செவிலியரின் மரண தண்டனையைத் தள்ளி வைப்பதாக ஏமன் தெரிவித்துள்ளது.

7) உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு டொனால்ட் டிரம்ப் 50 நாட்கள் கெடு விதித்துள்ளார்.

8) இந்தியாவில் டெஸ்லாவின் முதல் விற்பனை நிலையம் மும்பையில் திறக்கப்பட்டது.

9) ஐபோன் 17 இன் தயாரிப்பு இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளதான ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Education & GK News

1) Indian astronaut Subhanshu Shukla returned to Earth safely from the Dragon spacecraft.

2) Indian External Affairs Minister S Jaishankar met Chinese President Xi Jinping.

3) An orange alert has been issued for Coimbatore and Nilgiris districts tomorrow.

4) The notification for the TNPSC Group 2 preliminary examination has been announced.

5) Kamal Haasan will take oath as a Rajya Sabha member on June 25.

6) Yemen has announced that it will postpone the death penalty of a Kerala nurse.

7) Donald Trump has given Russia 50 days to end the war in Ukraine.

8) Tesla's first outlet in India was opened in Mumbai.

9) Apple has announced that the production of the iPhone 17 will begin in India next month.

Monday, 14 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.07.2025)

இன்று கர்மவீரர், கல்விக்கண் திறந்த ஏழைப் பங்காளர் காமராசரின் 123 ஆவது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1) ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் 10000 சிறப்பு முகாம்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிதம்பரத்திலிருந்து தொடங்கி வைக்கிறார்.

2) திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடைபெற்றது.

3) நாடு முழுவதும் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் அடுத்த மாதம் துவங்க உள்ளது.

4) நிகழ் ஆண்டில் மூன்றாவது முறையாக வீராணம் ஏரி நிரம்பியது.

5) தொடர் பட்டாசு விபத்துகளைத் தொடர்ந்து விருதுநகரில் உரிய பாதுகாப்புகள் இன்றி செயல்பட்டதாக 200 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.

6) சர்க்கரை நோய், இதய நோய், கொழுப்பு நோய்களின் காரணமாக இனி புகையிலையைப் போன்று சமோசா, ஜிலேபி போன்ற உணவுப் பொருட்களுக்கும் எச்சரிக்கை வாசகத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

7) விம்பிள்டன் டென்னிஸ் சாதனையாளர் பட்டத்தை இத்தாலியின் யானிக் சின்னர் வென்றுள்ளார்.

8) பழம்பெரும் திரைப்பட நடிகை சரோஜாதேவி 87 ஆவது வயதில் நேற்று உடல்நல குறைவால் பெங்களூரில் காலமானார்.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த சரோஜாதேவி பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

50 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட சரோஜா தேவியின் இயற்பெயர் ராதாதேவி கவுடா.

1938 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார் நடிகை சரோஜா தேவி.

60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படம் மூலம் 1955 இல் திரையுலகில் தடம் பதித்தார் சரோஜா தேவி.

1958 இல் தமிழ் சினிமாவில் அறிமுகமான சரோஜா தேவி முன்னணி நாயகர்களாக வலம் வந்த எம்ஜிஆர் உடன் 26 படங்கள், சிவாஜியுடன் 22 படங்களில் நடித்துள்ளார்.

Education & GK News

Today, the 123rd birth anniversary of Karmaveerar Kamarajar, the poor partner who opened the eyes of education, is being celebrated as Education Development Day.

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin will inaugurate 10,000 special camps called ‘Stalin with you’ from Chidambaram today.

2) A Tamil ritual consecration was held at the Thiruparankundram Subramania Swamy Temple yesterday.

3) Intensive special voter registration revision across the country is set to begin next month.

4) Veeranam Lake filled for the third time this year.

5) Following a series of firecracker accidents, 200 cracker factories were closed in Virudhunagar for operating without proper safety measures.

6) Due to diabetes, heart disease and cholesterol diseases, the central government is going to take steps to give warning labels to food items like samosa and jalebi like tobacco.

7) Italy's Yannick Cinner has won the Wimbledon tennis champion.

8) Veteran film actress Saroja Devi passed away yesterday in Bangalore due to ill health at the age of 87.

Saroja Devi, who acted with leading actors including MGR and Sivaji, has received various awards including Padma Shri and Padma Bhushan.

She has acted in more than 200 films in a film career of 50 years.

Saroja Devi, known as Abhinaya Saraswathi, was originally named Radha Devi Gowda.

Actress Saroja Devi was born on January 7, 1938 in Karnataka.

She has acted in Tamil, Kannada, Telugu, Malayalam and Hindi language films for more than 60 years.

Saroja Devi made her mark in the film industry in 1955 with the Kannada film Mahakavi Kalidas.

Saroja Devi, who debuted in Tamil cinema in 1958, acted in 26 films with MGR, who was a leading actor, and 22 films with Sivaji.

Sunday, 13 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (14.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (14.07.2025)

1) தமிழக அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவர்கள் ‘ப’ வடிவில் அமர வைக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

2) 2342 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

3) இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சூலை 27 இல் தமிழ்நாடு வருகிறார்.

4) 72 அரசுப் பள்ளிகளில் 403 புதிய வகுப்பறைகளை முதல்வர் திறந்து வைத்தார். அத்துடன் 100 கோடி மதிப்பில் 1000 ஆண்டுகள் பழைமையான 63 கோயில்களைப் புனரமைப்பதற்கான திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

5) திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோயில் குடமுழுக்கு இன்று நடைபெறுகிறது.

6) யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் ஒன்றாகச் செஞ்சி கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது.

7) திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

8) தமிழகத்திற்கு 18 ஆம் தேதி வரை மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9) மக்கள்தொகையும் ஜனநாயகமும் இந்தியாவின் இரு பெரும் சக்திகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

10) இயந்திரங்களுக்குச் செல்லும் எரிபொருள் தடைபட்டதே அகமதாபாத்தில் நடந்த விமான விபத்துக்குக் காரணம் என்ற முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது.

11) நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல் நலக் குறைவால் காலமானார். இவர் சாமி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Education & GK News

1) The School Education Department has instructed that students should be seated in the ‘ப’ formation in classrooms in Tamil Nadu government schools.

2) Counseling for 2342 secondary teacher posts begins today.

3) Prime Minister Narendra Modi is coming to Tamil Nadu on a two-day visit on July 27.

4) The Chief Minister inaugurated 403 new classrooms in 72 government schools. The Chief Minister also launched a project to reconstruct 63 1000-year-old temples worth 100 crores.

5) The consecration of the Thiruparankundram Subramanya Temple will take place today.

6) Senchi Fort has been declared a UNESCO World Heritage Site.

7) A terrible fire broke out in a freight train near Tiruvallur.

8) The Meteorological Department has said that there is a possibility of rain in Tamil Nadu till the 18th.

9) Prime Minister Narendra Modi has said that population and democracy are the two great strengths of India.

10) Initial reports suggest that the Ahmedabad plane crash was caused by a fuel shortage.

11) Actor Kota Srinivasa Rao, who played the villain in the film Saamy, passed away due to health problems.