Wednesday 5 February 2020

2019 – ஊரக உள்ளாட்சித் தேர்தலின் நம்பிக்கையான முடிவுகள்

2019 – ஊரக உள்ளாட்சித் தேர்தலின் நம்பிக்கையான முடிவுகள்
ஜனநாயக முறையிலான தேர்தலின் சாதனை என்பது அனைத்துத் தரப்பினருக்கும் வயது வேறுபாடின்றி, பாலின வேறுபாடின்றி, சாதி வேறுபாடின்றி மேலும் எவ்வித பாகுபாடுமின்றி அது தரும் வெற்றியே ஆகும். அவ்வகையில் 2019 இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனநாயகத்தின் மேல் உள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ள வெற்றியாளர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் – கே.என்.தொட்டி பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றுள்ள
21 வயது கல்லூரி மாணவி
ஜெய்சந்தியா ராணி
சேலம் மாவட்டம் – அயோத்தியாபட்டினம் ஒன்றியம் – ஒன்றிய கவுன்சிலராக
வெற்றி பெற்றுள்ள
முதுகலை பயிலும் கல்லூரி மாணவி
ப்ரீத்தி மோகன்
 
விருதுநகர் மாவட்டம் – கன்சாபுரம்
பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்றுள்ள துப்புரவுத் தொழிலாளர்
சரஸ்வதி
நாமக்கல் மாவட்டம் – திருச்செங்கோடு ஒன்றியம் -  ஒன்றிய கவுன்சிலராக
வெற்றி பெற்றுள்ள திருநங்கை
ரியா
 



No comments:

Post a Comment