Tuesday 4 February 2020

ஐந்தாம் வகுப்பு & எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து

ஐந்தாம் வகுப்பு &  எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து
ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்.
இக்கல்வியாண்டில் இருந்து ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் அறிவித்திருந்தார். இவ்வறிவிப்பு தற்போது ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பழைய தேர்வு முறையே தொடரும் என்றும் அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார். இது குறித்த அமைச்சரின் செய்திக் குறிப்பு கூறுவதைக் காண கீழே உள்ள அறிவிப்பைக் காணவும்.




No comments:

Post a Comment