Wednesday, 19 February 2025

இன்றைய செய்திகள் (20.02.2025) - 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன - முதல்வர்

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) இந்தியா – கத்தார் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு நாடுகளின் வணிகத்தை இரட்டிப்பாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2) பென்ஜல் புயல் பாதிப்புக்கு 498 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

3) அனைத்துச் சிறைச்சாலைகளிலும் நூலகங்கள் அமைக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

4) ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முழு உடல் பரிசோதனைக்கு பிப்ரவரி 28க்குள் விண்ணப்பிக்கலாம்.

5) பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பெண்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்கவும் சென்னையில் இளஞ்சிவப்பு முச்சக்கர வாகனத் திட்டம் (பிங்க் ஆட்டோ) செயல்படுத்தப்பட்டு உள்ளது.

6) தமிழகத்தில் இணைய வழி மோசடிகள் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

7) தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றார். இவர் 2029 வரை பதவியில் இருப்பார்.

8) சர்சைக்குரிய கருத்துகளைச் சமூக வலைதளத்தில் பரப்புவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

9) மகா கும்பமேளாவி இதுவரை 55 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

10) உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக விரைவில் ரஷ்ய அதிபருடன் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

11) இந்திய நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

12) இனிவரும் நாட்களில் தமிழகத்தில் இயல்பை விட அதிக வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13) தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 64,000/- ஐக் கடந்தது.

14) அதிக வரி விதிப்பதால் இந்தியாவிடம் அதிக பணம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

English News

1) 7 agreements signed between India and Qatar. Steps have been taken to double the trade between the two countries.

2) The Chief Minister has ordered a relief of Rs 498 crore for the damage caused by Cyclone Fenjal.

3) Deputy Chief Minister Udhayanidhi Stalin has assured that libraries will be set up in all prisons.

4) Teachers above the age of fifty can apply for a full medical check up by February 28.

5) The Pink Auto Scheme has been implemented in Chennai to ensure the safety of women and increase employment opportunities for women.

6) Online fraud has increased two and a half times in Tamil Nadu.

7) Gyanesh Kumar took office as the Chief Election Commissioner. He will hold office until 2029.

8) The Supreme Court has directed the Central Government to take appropriate steps to prevent the spread of controversial comments on social media.

9) 550 million people have taken holy dip in the Maha Kumbh Mela so far.

10) US President Donald Trump has said that he will soon talk to the Russian President regarding the ceasefire in Ukraine.

11) Unemployment in urban India has come down to 6 percent.

12) The Meteorological Department has said that Tamil Nadu will experience higher temperatures than normal in the coming days.

13) Gold prices have again crossed 64,000/- per sovereign.

14) US President Donald Trump has said that India has more money due to high taxes.

Tuesday, 18 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 19.02.2025 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) தமிழக சட்டசபை மார்ச் 14 இல் கூடுகிறது. அன்றைய தினம் தமிழக வரவு செலவு திட்டத்தை (பட்ஜெட்) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

2) திருச்சி மற்றும் மதுரையில் 717 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கான (டைடல் பார்க்) அடிக்கலை முதல்வர் நாட்டினார்.

3) புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட உள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ளார்.

4) பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

5) நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகத் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

6) மொழித் திணிப்பை ஏற்க மாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7) அரசு முறைப் பயணமாக கத்தார் அரசர் ஷேக் ஹமீம் பின் ஹமாத் இந்தியா வந்துள்ளார்.

8) பிப்ரவரி 24 இல் 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளன.

9) டெல்லி மற்றும் பீகார் பகுதிகளில் பதிவான நிலநடுக்க அளவு 4.0 ரிக்டர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

10) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் பயணத்தில் ஈக்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

11) நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 2299 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

12) தமிழகத்தில் அதிகபட்சமாக 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English News

1) The Tamil Nadu Assembly will meet on March 14. Finance Minister Thangam Thennarasu will present the Tamil Nadu budget on that day.

2) The Chief Minister laid the foundation stone for Tidal park worth Rs 717 crore in Trichy and Madurai.

3) Gyanesh Kumar is to be appointed as the new Chief Election Commissioner. He is to take charge today.

4) The Tamil Nadu government has said that the educational certificates of teachers involved in sexual harassment will be cancelled.

5) Dharmendra Pradhan has said that the Central Government is committed to implementing the National Education Policy across the country.

6) Deputy Chief Minister Udhayanidhi Stalin has said that Tamilnadu will not accept language imposition.

7) Qatar King Sheikh Hameed bin Hamad has arrived in India on official visit.

8) 1000 Chief Minister's dispensaries are to be opened on February 24.

9) The earthquake recorded in Delhi and Bihar has been reported to be of 4.0 richter.

10) ISRO is planning to send flies on the first mission of the Gaganyaan project to send humans to space.

11) The country's trade deficit has increased to $ 22.99 billion.

12) The maximum temperature in Tamil Nadu is 98 degrees Fahrenheit, according to the Meteorological Department.

50 வயதைக் கடந்த ஆசிரியர்களுக்கான உடல் பரிசோதனை விண்ணப்பம்

50 வயதைக் கடந்த ஆசிரியர்களுக்கான உடல் பரிசோதனை விண்ணப்பம்

ஐம்பது வயதைக் கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோனை செய்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தைக் கீழே காணவும்.


Monday, 17 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 18.02.2025 (செவ்வாய்)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 18.02.2025 (செவ்வாய்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணி தொடங்கியது.

2) மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

3) ஊராட்சிகளில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

4) கடந்த நான்கு ஆண்டுகளில் 3 லட்சம் குழந்தைகள் மாயமாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5) 2030க்குள் 9 லட்சம் கோடி ஜவுளி ஏற்றுமதி எனும் இலக்கை இந்தியா எட்டும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

6) உலகின் ஆறாவது பெரிய ஜவுளி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.

7) டெல்லியில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

8) பாஸ்டேக் புதிய விதிகள் நேற்றிலிருந்து அமலுக்கு வந்தன.

9) 29,500 டிரோன்கள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10) நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

11) அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

12) இந்தியன் பிரிமியர் லீக்கின் 18வது போட்டிகள் மார்ச் 22 இல் தொடங்குகின்றன.

English News

1) Work has begun on setting up an open-air museum in Keezhadi.

2) The Tamil Nadu Chief Minister has said that the three-language policy should not be made mandatory.

3) Tamil Nadu is at the top in implementing projects in panchayats.

4) The central government has said that 3 lakh children have gone missing in the last four years.

5) The Prime Minister has said that India will achieve the target of 9 lakh crore textile exports by 2030.

6) India is the sixth largest textile exporter in the world.

7) A terrible earthquake occurred in Delhi early yesterday.

8) The new FASTag rules came into effect from yesterday.

9) The central government has said that 29,500 drones have been registered across India.

10) The Health Ministry has said that bird flu is spreading rapidly across the country.

11) Severe floods have occurred in the central and eastern states of the United States and roads have been cut off.

12) The 18th year of the Indian Premier League begins on March 22.

Sunday, 16 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 17.02.2025 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) தமிழக அரசுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்குமாறு தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2) மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான கல்வி நிதி வழங்கப்பட மாட்டாது என தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

3) அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

4) மகா கும்பமேளாவுக்குச் சென்றோரால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி டெல்லி தொடர்வண்டி நிலையத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

5) மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

6) ஓட்டுநர் இல்லாத இரண்டாவது மெட்ரோ ரயில் விரைவில் சென்னை வரவுள்ளது.

7) பிரதமருக்கு எதிராகக் கேலிச்சித்திரம் வெளியிட்டதாக விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

8) கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் 262 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.

English News

1) The Tamil Nadu Chief Minister has appealed to the Central Government to immediately release the education funds to the Tamil Nadu government.

2) Dharmendra Pradhan has stated that education funds for Tamil Nadu will not be released until the Central Government's education policy is accepted.

3) The competitive examination for the post of Assistant Professor at Anna University is to be held on April 5 and 6.

4) 18 people died at the Delhi Railway Station in a stampede caused by people going to the Maha Kumbh Mela.

5) 50 crore people have taken holy dip in the Maha Kumbh Mela so far.

6) The second driverless metro train will soon come to Chennai.

7) The Vikatan website has been blocked for publishing a cartoon against the Prime Minister.

8) For the first time in the last 17 years, BSNL has earned a profit of 262 crores.

Saturday, 15 February 2025

உலகைத் திருத்துவதற்கு முன்பாக உன்னைத் திருத்திக் கொள்! - ஓர் எதார்த்தக் கதை!

உலகைத் திருத்துவதற்கு முன்பாக உன்னைத் திருத்திக் கொள்!

-         ஓர் எதார்த்தக் கதை!

அறிவுரைகள் சொல்வது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.

அந்த அறிவுரைகளைக் கடைபிடிப்பது என்றால் வேப்பெண்ணெய் சாப்பிடுவது மாதிரி.

அறிவுரைகளைப் பொருத்த வரை சொல்பவருக்குக் குஷியாக இருக்கும். கேட்பவருக்கு நசையாக இருக்கும்.

அதனால்தான் திருவள்ளுவர் சொல்கிறார்,

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.” என்று.

இதை விளக்கும்படியான கதை ஒன்றை அறிவோமா?

நண்டுகள் எப்படி நடக்கும் என்பது நமக்கு தெரியும். பக்கவாட்டில்தானே நடக்கும்.

தன் குட்டி நண்டு அப்படி நடப்பதைப் பார்த்த தாய் நண்டு கேட்டது, ஏன் இப்படி பக்கவாட்டில் நடக்கிறாய்? நேராக நடந்தால் குறைந்தா போய் விடுவாய்?

நான் பிறந்ததிலிருந்து இப்படித்தான் நடக்கிறேன். எனக்கு இப்படித்தான் நடக்க வருகிறது என்றது குட்டி நண்டு.

அடப் பாவமே! உன்னை என்ன சொல்வது? உன்னை எப்படி திருத்துவது? என்று அலுத்துக் கொண்டது தாய் நண்டு.

அதற்கு குட்டி நண்டு, கவலைப்படாதே அம்மா. நீ நான் எப்படி நேராக நடக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தால், அப்படியே நடக்கிறேன் என்று தாயின் கவலையைப் போக்க நினைத்தது.

அப்படி வா வழிக்கு என்று தாய் நண்டு குட்டி நண்டுக்கு நடப்பதைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது.

அப்போதுதான் அதற்குத் தானும் பக்கவாட்டில் நடப்பது புரிந்தது. இருந்தாலும் தன் குட்டி நண்டுக்கு நேராக நடப்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முயன்று நேராக நடந்து பார்த்தது.

தாய் நண்டால் நேராக நடக்க முடியவில்லை. நேராக நடக்க முயன்று தலைகுப்புற விழுந்தது.

அது எவ்வளவு முயற்சித்துப் பார்த்தும் நேராக நடக்க முடியவில்லை. அதற்கு மேல் முயற்சிப்பது வீண் என்பது அதற்குப் புரிந்தது.

அது குட்டி நண்டைப் பரிதாபமாகப் பார்த்தது. குட்டி நண்டும் தாய் நண்டைப் பரிதாபமாகப் பார்த்தது.

உனக்கு இப்படித்தான் நடக்க வருகிறது என்றால்அப்படியே நடந்து தொலை என்று கூறி விட்டு தாய் நண்டு பக்கவாட்டில் நகர ஆரம்பித்தது. குட்டி நண்டு அதைப் பின்தொடர ஆரம்பித்தது.

எப்படி இருக்கிறது இந்தக் கதை?

நாம் ஒருவருக்கு அறிவுரை சொல்வதற்கு முன்பாக நாம் அப்படி நடந்து கொள்கிறோமா என்பதை அவதானித்துக் கொள்ள வேண்டும். அப்படி நடக்க முடிந்தால் மட்டுமே நாம் மற்றவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். இல்லையென்றால் அறிவுரை கூறுவதைத் தவிர்ப்பதுதானே நல்லது.

இதைத்தான் நம் முன்னோர்கள், ஊரைத் திருத்துவதற்கு முன்னால் உன்னைத் திருத்திக் கொள் என்று சொன்னார்கள் போலும்.

இக்கதை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

Friday, 14 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 15.02.2025 (சனி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 25.57 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்.

2) பொக்சோ குற்றங்களுக்கு நடவடிக்கை எடுப்பது குறித்து நான்கு நாட்களில் வரைவு அறிக்கை வெளியிடப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

3) அரசுத் துறைகளை நவீனமயமாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

4) மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

5) புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

6) நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மார்ச் 10 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

7) வாரணாசியில் இன்று காசி தமிழ்ச் சங்கமம் தொடங்குகிறது.

8) பிரதமர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

9) அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் எலான் மஸ்குடன் ஆலோசனை நடத்தினார்.

10) நாட்டின் சர்க்கரை உற்பத்தி 13 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

English News

1) 25.57 lakh students are writing the Class 11 and Class 12 public examinations.

2) Anbil Mahesh Poyyamozhi has said that a draft report on taking action against POCSO crimes will be released in four days.

3) The President has said that government departments should be modernized.

4) President's rule was imposed in Manipur.

5) The new Income Tax Bill was introduced in the Lok Sabha.

6) Both houses of Parliament were adjourned till March 10.

7) Kasi Tamil Sangamam begins in Varanasi today.

8) The Prime Minister is on a two-day official visit to the US.

9) The Prime Minister, who is in the US, held discussions with Elon Musk.

10) The country's sugar production has seen a 13 percent decline.

எதிர்பார்ப்புகள் பல விதம்! – ஒரு வித்தியாசமான கதை!

எதிர்பார்ப்புகள் பல விதம்! – ஒரு வித்தியாசமான கதை!

மனித மனம் கடலை விட ஆழமானது. மனித மனதின் ரகசியங்கள் அதிசயமானவை. அப்படிப்பட்ட மனதில் உள்ள எதிர்பார்ப்புகள் விசித்திரமானவை. மனித மனதின் எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் வித்தியாசப்படுகின்றன என்பதை விளக்கும் கதை ஒன்றை அறிவோமா?

ஒரு கடைக்கு நாய் ஒன்று வந்தது. அதன் வாயில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலும், பணமும் இருந்தது. அத்துடன் கழுத்தில், வாங்கிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பையும் மாட்டப்பட்டிருந்தது.

கடைக்காரர் புரிந்து கொண்டார்.

பட்டியலில் இருந்த பொருட்களைப் பையில் போட்டார். பொருட்களுக்கான பணத்தை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தையும் பையில் போட்டார்.

நாய் அவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பியது.

கடைக்காரருக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. இப்படி ஒரு பொறுப்பான நாயை அவர் இதுவரை பார்த்ததில்லை. அந்த நாயைப் பின்தொடர்ந்து போய் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு உண்டாகி விட்டது.

கடையைப் பார்த்துக் கொள்ளுமாறு வேலைக்காரர்களிடம் சொல்லி விட்டு நாயைப் பின்தொடர ஆரம்பித்து விட்டார்.

அந்த நாய் சாலை விதிகளைப் பின்பற்றி இடது புறமாகச் சென்று கொண்டிருந்தது. சாலையில் சிவப்பு விளக்கு எரியும் போது நின்றது. பச்சை விளக்கு எரிந்த பிறகு சாலையைக் கடந்து. பாதசாரிகள் கடக்கும் இடமாகப் பார்த்து சாலையைக் கடந்தது. இதையெல்லாம் பார்த்த கடைக்காரருக்கு வியப்பு தாங்க முடியவில்லை.

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்திலும் ஏறியது. கடைக்காரரும் ஆர்வம் தாங்க முடியாமல் பேருந்தில் ஏறிக் கொண்டார். பையிலிருந்து பணத்தையும் ஒரு துண்டுசீட்டையும் கவ்வி எடுத்து நடத்துநரிடம் கொடுத்து பயணச்சீட்டையும் வாங்கிக் கொண்டது அந்த நாய். இதையெல்லாம் பார்க்க பார்க்க கடைக்காரருக்கு புல்லரித்துப் போய் விட்டது.

தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நாய் குரைத்து நடத்துநரைப் பேருந்தை நிறுத்த வைத்து இறங்கிக் கொண்டது. கடைக்காரரும் இறங்கிக் கொண்டார்.

நாய் தன்னுடைய வீட்டை நோக்கிப் போனது. கடைக்காரரும் போனார்.

வீட்டின் அழைப்பு மணியை அடித்தது நாய். கதவு திறக்கப்படுவதற்காக நாய் காத்திருந்தது. அப்போது கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வீட்டுக்காரர் நாயை அடிக்க ஆரம்பித்து விட்டார்.

கடைக்காரர் அதிர்ச்சியாகி அந்த வீட்டின் உரிமையாளரிடம் அந்த நாய் எவ்வளவு பொறுப்பாக நடந்து கொண்டது என்பதை எடுத்துச் சொன்னார்.

எவ்வளவு பொறுப்பாக நடந்து என்ன பிரயோஜனம்? இந்த நாய் கடைக்குப் போகும்  போது வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு போயிருந்தால், தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி விட்டு கதவைத் திறந்துவிட அழைப்பு மணியை அடித்திருக்காது அல்லவா என்றார் வீட்டுக்காரர்.

கடைக்காரருக்கு இப்போது மனிதர்களை நினைத்து ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் போய் விட்டது.

என்னதான் கடமையைச் சரியாகச் செய்தாலும் மனிதர்களின் எதிர்பார்ப்பை எப்போதும் பூர்த்தி செய்ய முடியாது போலிருக்கிறது என்ற உணர்வுடன் கடையை நோக்கித் திரும்ப ஆரம்பித்தார் கடைக்காரர்.

உண்மைதானே? மனிதர்களின் மனது விசித்திரமானது. அந்த மனதில் அடங்கியிருக்கும் எதிர்பார்ப்புகள் அதை விட விசித்திரமானது இல்லையா?

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

சூரிய கிரகணம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது சூரிய கிரகணம்?

சூரிய கிரகணம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது சூரிய கிரகணம்?

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என இரு வகை கிரகணங்கள் பூமியில் ஏற்படுகின்றன. இவ்விரு கிரகணங்களில் சூரிய கிரகணம் பற்றி இங்கு காண்போம்.

கிரகணம் :

கிரகணம் என்பது வானியல் நிகழ்வாகும்.

ஒளியின் நேர்க்கோட்டு பண்பினால் இது ஏற்படுகிறது.

நேர்க்கோட்டில் செல்லும் ஒளியை மறைப்பதால் நிழல் உருவாகிறது.

உதாரணமாக, சூரியன் கிழக்கில் இருக்கும் போது சூரிய ஒளியை நீங்கள் மறைந்து நின்றால் உங்கள் நிழல் மேற்கில் விழுகிறது இல்லையா!

அதே போல சூரியனைச் சந்திரனை மறைக்கிறது என்றால் அதன் நிழல் பூமியில் விழும் போது என்னவாகும்?

அந்த இடம் இருட்டாகும்.

அவ்விடத்தில் இருப்போரால் சூரியனைப் பார்க்க இயலாத நிலை ஏற்படும். இதுவே கிரகணம்.

இங்கு சூரியனைப் பார்க்க முடியாததால் அது சூரிய கிரகணம்.

அதுவே சந்திரனைப் பார்க்க முடியாமல் பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுந்தால் அது சந்திர கிரகணம்.

ஆகக் கிரகணம் என்பது வானியல் பொருட்கள் சூரிய ஒளியை மறைப்பதால் ஏற்படும் நிழலால் ஏற்படுகிறது.

எதை நம்மால் பார்க்க முடியவில்லையோ, அதன் பெயரால் கிரகணத்தின் பெயர் வழங்கப்படுகிறது. உதாரணமாகச் சூரியனைப் பார்க்க முடியவில்லை என்றால் அது சூரிய கிரகணம், சந்திரனைப் பார்க்க முடியவில்லை என்றால் அது சந்திர கிரகணம்.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, சந்திரனின் நிழல் பூமியில் விழுகிறது. இதனால் சூரியனைப் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது சூரிய கிரகணம் எனப்படும். இது கதிரவ மறைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

சூரிய கிரகணம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வருவதே சூரிய கிரகணம் ஏற்படக் காரணம். இதனால் சூரிய ஒளி பூமியில் விழாமல் சந்திரனால் மறைக்கப்படுகிறது. சூரிய ஒளியைச் சந்திரன் மறைப்பதால் அதன் நிழல் பூமியில் விழுகிறது. இதனால் சூரியனைப் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

சூரிய கிரகணத்தின் வகைகள் யாவை?

சூரிய கிரகணம் தோன்றும் வகையின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன,

1. முழு சூரிய கிரகணம்

இது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.

2. வளைய சூரிய கிரகணம்

இது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.

3. பகுதி சூரிய கிரகணம்.

இது ஆண்டுக்கு இரு முறை ஏற்படுகிறது.

சூரிய கிரகணம் ஏற்படுவதற்கான நிபந்தனை என்ன?

சூரிய கிரகணம், சூரியனுக்கும் புவிக்கும் இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும். இதுவே அதற்கான நிபந்தனை.

சூரிய கிரகணம் எப்போது ஏற்படும்?

அமாவாசை அன்றுதான் ஏற்படும்.

ஓராண்டில் எத்தனை சூரிய கிரகணங்கள் ஏற்படும்?

இரண்டு முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் ஏற்படலாம். சில ஆண்டுகளில் சூரிய கிரகணம் ஏற்படாமலும் போகலாம்.

2025 இல் சூரிய கிரகணம் எப்போது ஏற்படும்?

மார்ச் 29, செப்டம்பர் 21 ஆகிய தேதிகளில் சூரிய கிரணம் ஏற்படும். இக்கிரகணங்கள் பகுதி சூரிய கிரகணங்கள்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணலாமா?

சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது. இதற்கென உள்ள சிறப்புக் கண்ணாடிகள் அணிந்து சிறிது நேரம் பார்க்கலாம். தற்காலத்தில் சூரிய கிரகணங்கள் நிகழும் காலத்தே நேரடி ஒளிபரப்பாகச் செய்யப்படுவதால் தொலைக்காட்சிகளில் அதைப் பார்ப்பது நல்லது.

*****

Thursday, 13 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 14.02.2025 (வெள்ளி)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 14.02.2025 (வெள்ளி)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) எந்தவொரு குழந்தைக்கும் கல்வி புகட்டுவதில் பாகுபாடு இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2) சென்னை,கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகளைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார்.

3) மத்திய அரசு நிதி வழங்காத்தால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

4) நாட்டில் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

5) தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து தலைமைச்செயலாளர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.

6) சென்னையில் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார் கைலாஷ் சத்தியார்த்தி. இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்காகப் போராடி வருபவர் ஆவார்.

7) தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்படும் இலவசங்கள் குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

8) புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

9) தேர்தல் இலவசங்களால் மக்கள் உழைக்க தயாராக இல்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

10) சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார தொடர்வண்டி விரைவில் இயக்கப்பட உள்ளது.

11) அதிநவீன அணு  உலைகளை உருவாக்க இந்தியாவும் பிரான்சும் ஒப்பந்தம் செய்துள்ளன.

12) ஊழல் குறைந்த நாடுகளில் டென்மார்க் முதலிடத்தையும், பின்லாந்து இரண்டாமிடத்தையும், சிங்கப்பூர் மூன்றாமிடத்தையும், இந்தியா 96 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

English News

1) The Supreme Court has said that there should be no discrimination in providing education to any child.

2) School Education Minister Anbil Mahesh Poiyamozhi launched the state-level Vanavil Mandram competitions at the Anna Centenary Library in Kotturpuram, Chennai.

3) Minister Anbil Mahesh Poiyamozhi has said that the future of 40 lakh students is affected if the central government does not provide funds.

4) Governor R.N. Ravi has expressed anguish over the increase in suicides in the country.

5) Chief Secretary N. Muruganantham held a meeting on the increasing sexual abuse against children in Tamil Nadu.

6) Kailash Satyarthi met the Governor in Chennai. He is a Nobel Peace Prize winner and a campaigner for the abolition of child labor.

7) The Supreme Court has expressed strong dissatisfaction with the freebies given in election promises.

8) The new Income Tax Bill was tabled in the Lok Sabha.

9) The Supreme Court has said that people are not willing to work due to election freebies.

10) The first air-conditioned suburban electric train will be launched in Chennai soon.

11) India and France have signed an agreement to build powerful nuclear reactors.

12) Denmark has ranked first, Finland second, Singapore third and India 96th among the least corrupt countries.

Wednesday, 12 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 13.02.2025 (வியாழன்)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 13.02.2025 (வியாழன்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) பள்ளிக் கல்விக்கான 2401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) தமிழகம் முழுவதும் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்களின் விவரங்களைப் பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது. புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

3) நம்பகமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவசியம் எனப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

4) தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) தமிழகத்தில் முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பித்தோரில் 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

6) கிராம அளவில் பெண்களுக்கான நீதிமன்றங்களை நாடு முழுவதும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

7) தங்கம் ஒரு கிராம் விலை எட்டாயிரம் ரூபாயைக் கடந்தது. ஒரு சவரன் விலை 64 ஆயிரத்தைக் கடந்தது.

English News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that the central government has not released Rs 2401 crore for school education.

2) The school education department is collecting details of teachers involved in sexual harassment cases across Tamil Nadu. The school education department has also decided to take strict action against the teachers involved in the case.

3) Prime Minister Narendra Modi said at a conference in France that reliable artificial intelligence technology is necessary.

4) The Meteorological Department has said that there will be dry weather in Tamil Nadu for six days.

5) 840 people have been granted licenses for the Chief Minister's dispensary in Tamil Nadu.

6) The central government has decided to set up village-level women's courts across the country.

7) The price of one gram of gold has crossed eight thousand rupees. The price of a sovereign has crossed 64 thousand.