Thursday 16 April 2020

பழ விடுகதைகள் - 2

பழ விடுகதைகள் - 2

வ.எண்
விடுகதை
விடை
1.
ஓகோ மரத்திலே உச்சாணிக் கிளையிலே ஓட்டுச் சட்டியிலே களிமண். அது என்ன?
விளாம் பழம்
2.
தகப்பன் பச்சையாம். மகள் சிவப்பாம். மகன் கருப்பாம். அது என்ன?
தர்பூசணிப் பழம்
3.
உமி போல் பூ பூக்கும். சிமிழ் போல் காய் காய்க்கும். தண்ணீர் குடித்தால் இனிக்கும்.
அது என்ன?
நெல்லிக் கனி
4.
காய் விட்டால் சேர்ந்திருப்பான். பழம் விட்டால் பிரிந்திடுவான். அவன் யார்?
புளியம்பழம்
5.
பூத்தால் மஞ்சள், காய்த்தால் சிவப்பு, பழுத்தால் கருப்பு. அது என்ன?
பேரீச்சம் பழம்


No comments:

Post a Comment