Monday 20 April 2020

காய்கறி விடுகதைகள் - 3

காய்கறி விடுகதைகள் - 3

வ.எண்
விடுகதை
விடை
1.
உச்சாணி மரத்திலே உலக்கை கட்டித் தொங்குகிறது. அது என்ன?
முருங்கைக் காய்
2.
பூப் பூவா பூத்திருப்பாள் மகராசி. தலையில் வைக்க முடியுமா? அது என்ன நீ யோசி!
காலிஃப்ளவர்
3.
பச்சைப் பெட்டியில் முத்துச்சரம். அது என்ன?
வெண்டைக்காய்
4.
தோலை உரித்தாலும் அழ மாட்டான். உரித்தவனை அழ வைக்காமல் ஓய மாட்டான். அவன் யார்?
வெங்காயம்
5.
பெட்டியைத் திறந்தால் மூட முடியாது. அது என்ன?
தேங்காய்


No comments:

Post a Comment