சில பயனுள்ள மருத்துவ மொழிகள்
சில பயனுள்ள
மருத்துவ மொழிகளைப் படித்த போது, இது அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டிய சங்கதி எனத்
தோன்றியது. அச்சங்கதிகள் இதோ!
கோழைக்கு எதிர் தூதுவளை. நம்
  குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை. 
 | 
 
வாதத்தை அடக்கும் முடக்கத்தான்..நல்
  வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான். 
 | 
 
 கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. 
 | 
 
மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும்
  கரிசலாங்கண்ணி. 
 | 
 
குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. 
 | 
 
சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை. 
 | 
 
கோழையை இளக்கும் குப்பைமேனிச்
  சாறு. 
 | 
 
அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான். 
 | 
 
காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை. 
 | 
 
ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை. 
 | 
 
தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத்
  தூதுவளைக்கீரை. 
 | 
 
வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம்
  பழுதில்லை. 
 | 
 
கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும்
  புசியாதே. 
 | 
 
நன்னாரி மேனியைப் பொன்னாக்கும். 
 | 
 
விடா சுரத்திற்கு விஷ்ணுக்
  கரந்தை. 
 | 
 
 விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். 
 | 
 
ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும். 
 | 
 
வில்வம் பித்தம் தீர்க்கும்.
   
 | 
 
காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு,
  மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும் .  
 | 
 
அனைத்து வியாதிக்கும் அருகம்புல்
  சாறு. 
 | 
 
No comments:
Post a Comment