Wednesday 15 April 2020

ஊரடங்கு வழிகாட்டும் நெறிமுறைகள்

ஊரடங்கு வழிகாட்டும் நெறிமுறைகள்

ஏப்ரல் 20, 2020 க்கு பிறகான ஊரடங்கு வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி அதன் விவரங்கள் வருமாறு,
Ø ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி.
Ø கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை.
Ø விவசாய உபகரணங்கள், உரங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படலாம்.
Ø விவசாயப் பொருள் போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறுவதை மாநில அரசுகள் உறுதி செய வேண்டும்.
Ø மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி.
Ø தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்.
Ø பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்.
Ø ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்.
Ø கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்.

Ø அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை.
Ø ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி.
Ø 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
Ø ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்.
Ø ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
Ø லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி.
Ø நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி.
Ø தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை.
Ø பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.
Ø 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது.
Ø பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்.
Ø எலக்ட்ரீசியன், பிளம்பர்,  மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள் பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.


No comments:

Post a Comment