ஊரடங்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
ஏப்ரல் 20, 2020 க்கு பிறகான ஊரடங்கு வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு
வெளியிட்டுள்ளது. அதன் படி அதன் விவரங்கள் வருமாறு,
Ø ஏப்ரல்
  20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி. 
 | 
 
Ø கொள்முதல்
  நிலையங்கள் செயல்பட தடையில்லை. 
 | 
 
Ø விவசாய
  உபகரணங்கள், உரங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படலாம். 
 | 
 
Ø விவசாயப்
  பொருள் போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறுவதை மாநில அரசுகள் உறுதி செய வேண்டும். 
 | 
 
Ø மீன்பிடித்
  தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி. 
 | 
 
Ø தேயிலை,
  காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம். 
 | 
 
Ø பால்
  உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம். 
 | 
 
Ø ரிசர்வ்
  வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும். 
 | 
 
Ø கல்வி
  நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம். 
 | 
 
Ø அத்தியாவசியப்
  பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை. 
 | 
 
Ø ஏப்ரல்
  20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி. 
 | 
 
Ø 100
  நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 
 | 
 
Ø ஊரகப்
  பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம். 
 | 
 
Ø ஊரகப்
  பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். 
 | 
 
Ø லாரிகள்
  பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி. 
 | 
 
Ø நெடுஞ்சாலைகளில்
  உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி. 
 | 
 
Ø தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
  வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை. 
 | 
 
Ø பொது
  இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம். 
 | 
 
Ø 5 பேருக்கு
  மேல் பொது இடங்களில் கூட கூடாது. 
 | 
 
Ø பொது
  இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம். 
 | 
 
Ø எலக்ட்ரீசியன்,
  பிளம்பர்,  மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள்
  பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளலாம். 
 | 
 

No comments:
Post a Comment