Tuesday, 3 June 2025

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள்

சங்க இலக்கியம் எனப்படுவது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவை கடைச்சங்கக் காலத்தில் எழுந்ததாகக் கருதப்படுகின்றன.

எட்டுத்தொகை நூல்கள் எவையென,

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று

இத்திறத்த எட்டுத் தொகை.”

எனும் பழம்பாடல் கூறுகின்றது. இதன்படி எட்டுத்தொகை நூல்களாவன,

1. நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4. பதிற்றுப்பத்து

5. பரிபாடல்

6. கலித்தொகை

7. அகநானூறு

8. புறநானூறு

இவற்றுள் ஐந்து அக நூல்கள், இரண்டு புற நூல்கள், ஒன்று அகமும் புறமும் கலந்தது. அவற்றின் விவரம் வருமாறு,

அக நூல்கள்

புற நூல்கள்

அகமும் புறமும் கலந்தது

1. நற்றிணை

1. பதிற்றுப்பத்து

1. பரிபாடல்

2. குறுந்தொகை

2. புறநானூறு

 

3. கலித்தொகை

 

4. அகநானூறு

5. ஐங்குறுநூறு

*****

No comments:

Post a Comment