Saturday, 14 February 2026

டைனோசர்கள் ஏன் நம்மோடு வாழவில்லை?

டைனோசர்கள் ஏன் நம்மோடு வாழவில்லை?

சுமார் ஆறரைக் கோடி வருஷங்களுக்கு முன்னால், பூமியின் சீஇஓ டைனோசர்கள்தான். அப்போது மனிதன் கிடையாது, மொபைல் போன் கிடையாது.

அப்புறம் எப்படி அவை அவுட் ஆப் ஆர்டர் ஆயின?

அது ஒரு மெகா ஆக்சிடென்ட்.

மெக்சிகோ வளைகுடாவில் வந்து விழுந்தது ஒரு விண்கல்.

அதன் தாக்கம் எப்படி இருந்தது தெரியுமா?

ஒரே நேரத்தில் ஒரு கோடி அணுகுண்டுகளை வெடித்தால் எப்படி இருக்குமோ அப்படி!

அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

பூமி முழுக்க கரும்புகை மூடியது.

சூரிய ஒளிக்கு நோ என்ட்ரி.

அப்படியானால் ஒளிச்சேர்க்கை என்னாவது? அதற்கும் விழுந்தது செக் போஸ்ட்.

ஒளிச்சேர்க்கை இல்லையென்றால் என்னவாகும்?

தாவரங்கள் தலைமறைவாகி விட்டன.

இதனால், செடி, கோடிகளைத் தின்ற டைனோசர்கள் காலி. அந்த டைனோசர்களைத் தின்ற பாஸ் டைனோசர்கள் காலி. இந்த செயின் ரியாக்சன் தொடரால் அனைத்து டைனோசர்களும் காலி. விளைவு இன்று நம்மிடையே டைனோசர்கள் இல்லை.

டைனோசர்களின் மிகப்பெரிய பலவீனமே ஷங்கர் படம் போன்ற அவற்றின் பிரம்மாண்டம்தான். ஊத்திக் கொண்டால் கதை கந்தல்தான். இந்தியன் 2 போல ஆகி விடும். அப்படித்தான் ஆகி விட்டது.

ஒருவேளை அந்த விண்கல் மட்டும் விழாமல் இருந்திருந்தால், இன்று உங்களோடு பஸ் ஸ்டாண்டில் ஒரு டைனோசர் க்யூவில் நின்று கொண்டிருக்கும். அல்லது கண்டபடி அலைந்து கொண்டிருக்கும் தெருநாய் போலவோ, பசுமாடு போலவோ நகரத்து வீதிகளில் திரிந்து கொண்டிருக்கும். அல்லது உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு குட்டி டைனோசர் திருட்டுத்தனமாக நுழைந்து குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும்.

நல்லவேளை, இயற்கையானது மனிதன் என்கிற அடுத்த புராஜெக்ட்டுக்கு வழிவிட நினைத்தது. டைனோசர்களை மியூசியத்திற்கு அனுப்பிவிட்டு, நம்மை தியேட்டர் பக்கம் அனுப்பி வைத்தது. நாம் தியேட்டரில் ஜுராசிக் பார்க் படத்தைக் கைதட்டிப் பார்த்தபடி பொழுது போக்கிக் கொண்டோம்.

*****

No comments:

Post a Comment