Saturday 10 August 2024

புத்திசாலித்தனத்தையும் தாண்டித் தேவையானது எது தெரியுமா?

வெற்றி பெறுவதற்குப் புத்திசாலித்தனம் மட்டும் போதுமா?

“புத்தியுள்ள மனிதரெல்லாம்

வெற்றி காண்பதில்லை!

வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

புத்திசாலி இல்லை!”

என்று கண்ணதாசன் எழுதிய பாடலைச் சந்திரபாபு பாடுவார். அதற்கு அவரே ஓர் உதாரணமாகவும் ஆகி விட்டார்.

என்ன காரணம்?

வெற்றி பெறுவதற்குப் புத்திசாலித்தனம் மட்டும் போதாதா?

ஆம் போதாதுதான். புத்திசாலித்தனத்தை IQ என்கிறார்கள். அதாவது நுண்ணறிவு ஈவு என்கிறார்கள். இந்த IQவை விட இன்னொரு முக்கியமான ஒன்று இருக்கிறது. அதுதான் EQ. அதாவது உணர்வுச் சமநிலைத் திறனுக்கான ஈவு.

இதைப் பற்றி முதலில் சொல்லி இதற்கென ஒரு புத்தகத்தைப் போட்டவர் டேனியல் கோல்மென்.

அவர் EQவுக்குத் தேவையான ஐந்து முக்கிய கூறுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

அவையாவன,

1. தன்னை அறிதல்.

2. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல்.

3. ஊக்கத்துடன் இருத்தல்.

4. பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல்.

5. சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல்.

ஒருவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை உணர்வு சமநிலையை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும். இல்லையென்றால் என்னதான் புத்திசாலித்தனம் இருந்தாலும் உலக வாழ்வில் வெற்றி பெறுவது என்பது இயலாமல் போய் விடும். சந்திரபாபு போலவே பாடித் திரிய வேண்டியதாகியும் விடும்.

No comments:

Post a Comment