Saturday 17 August 2024

நிம்மதியான ஓய்வு காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பணி ஓய்வுக்குப் பின் வருமானம் இல்லாத வாழ்வை எதிர்கொள்ள நேரிடலாம். வருமானமின்மையால் நிம்மதியான வாழ்க்கை அமையாமலும் போகலாம். இதை எப்படி எதிர்கொள்வது?

நிம்மதியான ஓய்வு காலத்திற்கு என்ன செய்வது?

பணியில் இருக்கும் காலத்தில் உங்கள் சம்பாத்தியத்தில் பத்து சதவீத தொகையைச் சேமிக்கப் பழகுங்கள். அந்தச் சேமிப்பைக் கலவையாக நிலம், தங்கம், பங்குகள் என்று கலவையாக முதலீடு செய்யுங்கள்.

இதைத்தான் ‘பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன்’ என்ற நூலில் ஜார்ஜ் கிளாட்சன் கூறுகிறார். அதாவது, ஒருவர் வருமானத்தில் பத்து சதவீதத் தொகையைத் தனக்காகச் சேமிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அப்படி வேலையில் சேரும் ஒருவர் ரூ. 20,000/- மாதச் சம்பளம் பெறுவதாக வைத்துக் கொண்டால், அவர் மாதந்தோறும் சேமிக்க வேண்டிய தொகை ரூ. 2,000/- ஆகும். இப்படி ஒருவர் தன் வேலைக்காலம் முழுவதும் சேமித்து, அத்தொகையை நிலம், தங்கம், பங்குகள் என முதலீடு செய்திருந்தால் ஓய்வு பெறும் நாளில் அவரது சேமிப்பின் முதலீட்டுத் தொகையானது நிச்சயம் ஒரு கோடியை எட்டியிருக்கும். அத்தொகையைக் கொண்டு அவர் நிம்மதியாகத் தனது ஓய்வுக் காலத்தை அமைத்துக் கொள்ள முடியும். இதுவே நிம்மதியான ஓய்வு காலத்திற்கு ஒருவர் செய்ய வேண்டியதாகும். 

No comments:

Post a Comment