ஆசிரியர்
தகுதித் தேர்வு (TET)
கல்வி
உளவியல் தொடர்பான முக்கிய குறிப்புகள் - 4
1) அகமுகன், புறமுகன் என மனிதர்களை இருவகையாக பிரித்தவர்
கார்ல் யூங்
2) சிக்கல் தீர்வு முறைச் சோதனையை அறிமுகப்படுத்தியவர்
ஆஸ்போர்ன்
3) புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர்
மால்ட்ஸ் மேன்
4) ஆக்கத்திறனும், நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர்
டரான்சு
5) தார்ஸ்டன் கருத்துப்படி நுண்ணறிவின் வகைகள்
7
6) நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர்
தார்ன்டைக்
8)நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
ஆல்பிரட் பினே
9) நுண்ணறிவு ஈவு என்ற சொல்லை பயன்படுத்தியவர்
டெர்மன்.
10) ஆக்கத் திறன் மதிப்பீட்டிற்கு உதவும் 3 வகையான சோதனைகளை உருவாக்கியவர்
கில்பர்ட்
11) புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர்
கிரகாம் வாலஸ்
12) மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள்
நிரல் வழிக் கற்றல் நூல்கள்
13) ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர்
ஐஸென்க்
14) ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர்
கில்போர்டு
15) மனிதர்கள் என்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு மற்றும் நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர்
கெம்ப்
16) சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது
பள்ளி
17) மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர்
ஹேட்பீல்டு
18) ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர்
மார்கன் கிங்
19) ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனச்சிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர்
மார்கன் கிங்
20) மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள்
60
*****

No comments:
Post a Comment