Wednesday 31 August 2022

இன்றைய செய்திகள் – 01.09.2022 (வியாழன்)

இன்றைய செய்திகள் – 01.09.2022 (வியாழன்)

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகமெங்கும் பரவலாக நேற்று மழை கொட்டித் தீர்த்தது. கொடைக்கானலில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கர்நாடக அணையிலிருந்து வெளியேறும் நீர் 2 லட்ச கன அடிகளாக அதிகரிக்கப்பட்ட நிலையில் காவிரி கரையோரப் பகுதிகளுக்குத் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.

புரட்சியாளர் சேகுவேராவன் மகன் கமிலோ குவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.

உலக பணக்காரர்களின் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறினார் கௌதம் அதானி. உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் 3வது இடத்தைப் பிடிப்பது இதுவே முதன் முறையாகும்.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment