Wednesday 24 August 2022

இன்றைய செய்திகள் – 25.08.2022 (வியாழன்)

இன்றைய செய்திகள் – 25.08.2022 (வியாழன்)

இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுவர் சிறுகதை தொகுப்புக்காக ஜி. மீனாட்சிக்கும், யுவ புரஸ்கார் விருது ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ எனும் கவிதை தொகுப்புக்காக ப. காளிமுத்துவிற்கும் வழங்கப்பட உள்ளது.

நீட் தேர்வு முடிவுகளுக்காக தமிழக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 மருத்துவ சிகிச்சைக்காகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்கா செல்கிறார்.

சீனாவில் வரலாறு காணாத வெப்ப அலை வீசுவதால் மக்கள் வறட்சியில் தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் அதி நவீன டிரோன்கள் விரைவில் இந்திய முப்படைகளில் பயன்படுத்தப்பட உள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment