Sunday 14 August 2022

இன்றைய செய்திகள் – 15.08.2022 (திங்கள்)

இன்றைய செய்திகள் – 15.08.2022 (திங்கள்)

75 வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக நாடு முழுவதும் மூவர்ணக் கொடியேற்றிக் கொண்டாடப்படுகிறது. தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் தேசியக் கொடியை ஏற்றுகின்றனர்.

தமிழக காவல் துறையினர் 8 பேருக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவின் வாரன் பப்பெட் எனப் புகழப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மும்பையில் நேற்று காலை காலமானார்.

அமெரிக்காவில் எழுத்தாளர் சல்மான் ருஸ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவுக் கப்பலை நிறுத்திக் கொள்ள அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

***

No comments:

Post a Comment