Tuesday 23 August 2022

இன்றைய செய்திகள் – 24.08.2022 (புதன்)

இன்றைய செய்திகள் – 24.08.2022 (புதன்)

அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 30 இல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்களுக்கான குருப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அம்பன்தோட்டாவிற்கு வந்த சீன உளவுக் கப்பல் நேற்று புறப்பட்டுச் சென்றது.

டெல்டா மாவட்டங்களில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment