Monday 29 August 2022

இன்றைய செய்திகள் – 30.08.2022 (செவ்வாய்)

இன்றைய செய்திகள் – 30.08.2022 (செவ்வாய்)

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊனமுற்றோர் மற்றும் விதவைப் பெண்களுக்கான உதவித்தொகையையும் தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5 முதல் தொடங்க உள்ளது.

45 வது நாளாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியுடன் நிரம்பி வழிகிறது.

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதி மன்றம் அறிவிப்பு.

5 ஜி தொலைதொடர்பு சேவையை தீபாவளிக்குள் சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா போன்ற மாநகரங்களுக்கு வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பலத்த மழைக்கு 1000 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment