Sunday 5 May 2024

பனிரெண்டாம் வகுப்பு (+2) – 2024 தேர்வு முடிவுகள்!

பனிரெண்டாம் வகுப்பு (+2) – 2024 தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார்கள்.

பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட போதே தேர்வு முடிவுகள் மே மாதம் ஆறாம் தேதி திங்கள் கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்கள் பள்ளிகளில் கொடுத்திருந்த அலைபேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரங்கள் வழக்கம்போல குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும் அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் சென்றும் தெரிந்துகொள்ளலாம்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைய தள இணைப்புகளைச் சொடுக்கவும்.

 https://tnresults.nic.in/

அல்லது

 https://dge.tn.gov.in/

*****

No comments:

Post a Comment