Friday 10 May 2024

மாவட்ட நீதிமன்றங்களில் 2329 காலி பணியிடங்கள்!

மாவட்ட நீதிமன்றங்களில் 2329 காலி பணியிடங்கள்!

தமிழகமெங்கும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2329 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிகளுக்கான ஊதிய அளவு :  ரூ. 27000 முதல் ரூ. 32000 வரை

வயது வரம்பு : 18 முதல் 34 வரை, SC, ST பிரிவினருக்கு 37 வயது வரை.

கல்வித் தகுதி :

office Assistant, copyist பணிகளுக்கு (Vacancy 654) எட்டாம் வகுப்பு தேர்ச்சி.

Driver பணிக்கு (Vacancy 27) எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் இலகு ரக வாகன லைசென்ஸ் பெற்று 5 வருட பணி அனுபவம்.

Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Writer, Xerox Operator பணிகளுக்கு (Vacancy 467) பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

Watchman, Gardener, Cleanliness Worker, Masalchi, Waterman பணிகளுக்கு (Vacancy 1181) தமிழில் நன்றாக எழுத மற்றும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : சென்னை உயர் நீதிமன்றத்தால் நடத்தப்படும் எழுத்து தேர்வு, தமிழ்மொழி திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில்.

தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் : ரூ. 500; SC, ST, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணபிக்கக கடைசி நாள் : 27.05.2024

விண்ணப்பிக்க வேண்டிய வலைதள முகவரிக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://mhc.tn.gov.in/recruitment/login

*****

No comments:

Post a Comment