Friday 24 May 2024

பெற்றோர்கள் ஆன்டிராய்டு செல்போன் வாங்க கல்வித்துறை அறிவுறுத்தல்!

பிள்ளைகளின் கல்விச் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட் போன்களையாவது வாங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோருக்குக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 80 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோர்களின் மொபைல் எண்களை உறுதி செய்துள்ளது கல்வித்துறை. இந்த மாதத்திற்குள் ஒரு கோடியே 25 லட்சம் மொபைல் எண்களும் உறுதி செய்யப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதற்கான பணிகளை ஆசிரியர்கள் பெற்றோர்களின் அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு ஒரு முறை கடவுச்சீட்டு பெற்று உறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment