Thursday 30 May 2024

அரசுப் பணித் தேர்வுகளில் தமிழ்த் தேர்வில் 40% மதிப்பெண் கட்டாயம்!

அரசுப் பணித் தேர்வுகளில் தமிழ்த் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவுத் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011 அரசாணையை எதிர்த்து நிதேஷ் உட்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். காலியாக உள்ள 6244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

No comments:

Post a Comment