Tuesday 21 January 2020

இரண்டு நாட்களுக்கு லேசான மழைப்பொழிவு

இரண்டு நாட்களுக்கு லேசான மழைப்பொழிவு
22.01.2020 - புதன்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த சென்னை வானிலை ஆய்வு மைய தகவலாவது,

தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில் நாளையும் நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுவையின் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும். 
இதற்கு அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் வறண்ட வானிலையே காணப்படும். 
சென்னையைப் பொறுத்தளவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பகுதியளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும்.

******


No comments:

Post a Comment