Friday 3 January 2020

மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?


மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
இரண்டாம் பருவத் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் ஜனவரி நான்காம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது பள்ளிகள் ஜனவரி ஆறாம் தேதி திங்கள் கிழமை (06.01.2020) திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவுறாத காரணத்தாலும், வாக்கு எண்ணிக்கைப் பணிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதாலும், வாக்கு எண்ணிக்கை மையங்களாக பல இடங்களில் பள்ளிகள் செயல்படுவதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
            திருவாரூர் மாவட்டத்திற்கு ஜனவரி ஆறாம் தேதி முத்துப்பேட்டை கந்துரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் மாவட்ட பள்ளிகள் இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து ஜனவரி ஏழாம் தேதி (07.01.2020) திறக்கப்படும்.
06.01.2020 பள்ளி திறப்பதற்கான பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் செயல்முறைகளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.



No comments:

Post a Comment