Friday 5 February 2021

சென்னை பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டு அரியர் எழுத வாய்ப்பு


 சென்னை பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டு அரியர் எழுத வாய்ப்பு

            சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் 40 ஆண்டுகள் வரை சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் அரியர் உள்ளவர்கள் தேர்வெழுதி தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்படுவதாகச் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. யு.ஜி.சி. விதிகளின்படி படிப்புக் காலம் முடிவதிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே அரியர் தேர்வெழுதி தேர்ச்சி பெற அனுமதிக்கப்படும். இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கும் இவ்வாய்ப்பு பல வருடங்களாக அரியர் வைத்துள்ளவர்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதம் ஆகும். 1980 – 1981 ஆம் கல்வியாண்டிலுருந்து தற்போது வரை அரியர் வைத்துள்ளோர்கள் இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி 2021 மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் தேர்வுகளில் பங்கேற்று அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற முயற்சிக்கலாம். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://ideunom.ac.in/

No comments:

Post a Comment