மருத்துவ விடுப்பிற்கான
முகப்புக் கடிதம் & விண்ணப்பம்
மருத்துவ விடுப்பிற்கு வழங்க வேண்டிய முகப்புக் கடிதம், விண்ணப்பம் மற்றும் விடுப்பு முடிந்து பணியில் சேர்வதற்கான முகப்புக் கடிதம் ஆகியவற்றைக் கீழே காண்க.
மருத்துவ விடுப்பிற்கான
முகப்புக் கடிதம் & விண்ணப்பம்
மருத்துவ விடுப்பிற்கு வழங்க வேண்டிய முகப்புக் கடிதம், விண்ணப்பம் மற்றும் விடுப்பு முடிந்து பணியில் சேர்வதற்கான முகப்புக் கடிதம் ஆகியவற்றைக் கீழே காண்க.
இன்றைய கல்வி & பொதுஅறிவுச்
செய்திகள் – 01.02.2025 (சனி)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) 24 மாநிலங்கள்
மற்றும் 4 நாடுகள் பங்கேற்கும் பாரத சாரண சாரணியர் ஒற்றுமைப் பேரணியை பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
2) தமிழக முதல்வர்
வடசென்னை வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3) ஆண்டுக்கு 15 லட்சம்
வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் வருகின்றனர்.
4) சென்னையில் தனியார்
நிறுவனங்களுடன் இணைந்து சொகுசு பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு
செய்துள்ளது.
5) மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் இன்று நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்கிறார்.
6) செயற்கை நுண்ணறிவில்
விரைவில் இந்தியாவுக்கான தற்சார்பு மாதிரிகள் உருவாக்கப்படும் என மத்திய தகவல் தொடர்பு
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
7) ஒரு சவரன் ஆபரணத்
தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு சவரன் தங்கம் 61,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
8) அமெரிக்காவில்
ஹெலிகாப்டரும் விமானமும் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.
9) அமெரிக்காவின்
விமானப் பயணம் பாதுகாப்பானது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
English News
1) School Education Minister Anbil
Mahesh Poyyamozhi flagged off the Bharat Scout Rally, in which 24 states and 4
countries are participating, by waving the flag.
2) Tamil Nadu Chief Minister inspected
the development works in North Chennai.
3) 15 lakh foreigners come to Tamil
Nadu every year for medical treatment.
4) The Metropolitan Transport
Corporation has decided to operate luxury buses in partnership with private
companies in Chennai.
5) Union Finance Minister Nirmala
Sitharaman will present the country's budget in Parliament today.
6) Union Information and
Communications Minister Ashwini Vaishnav has said that autonomous models for
India will soon be created in artificial intelligence.
7) The price of a sovereign of gold
jewelry has reached a new high. One sovereign of gold is being sold for 61,840.
8) 67 people died in a helicopter and
plane collision in the United States.
9) Donald Trump has said that air
travel in the United States is safe.
இருக்கும் இடத்தில் இருந்தால்தான் மதிப்பு – ஒரு கதை!
நாம்
அனைவரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் அந்த இருப்புக்குப் பயன் கிடைக்கும்.
பாலைவனத்தில் ரோஜா செடி வளர முடியாது என்பது போல, வளமான சோலையில் கள்ளிச் செடியும்
வளர முடியாது.
கண்ணதாசனும்
இதைப் பாடல் மூலமாக, பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாரும்
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கருடன் சொன்னதாக ஒரு
திரைப்பாடல் எழுதியிருப்பார்.
இதை
விளக்கும்படியான கதை ஒன்றை அறிவோமா?
குட்டி
ஒட்டகம் தாய் ஒட்டகத்திடம் கேட்டது, நமக்கு ஏன் முதுகில் திமில் இருக்கிறது என்று.
பாலைவனத்தில்
வாழும் நமக்குத் தண்ணீர் கிடைக்கும் போது அதை சேமித்து வைத்துக் கொள்ள திமில் இருப்பதாகத்
தாய் ஒட்டகம் சொன்னது.
உடனே
குட்டி ஒட்டகம் நமக்கு ஏன் கண் இமை கெட்டியாக இருக்கிறது என்று கேட்டது.
அதற்குத்
தாய் ஒட்டகம், பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும் போது அதிலிருந்து கண்களைக் காத்துக்
கொள்ளத்தான் அப்படி இருக்கிறது என்று பதில் சொன்னது.
அடுத்து
குட்டி ஒட்டகம் நமக்கு ஏன் பாதங்கள் இப்படி மெத்தை போல இருக்கிறது என்று கேட்டது.
பாலைவன
மணலில் நடப்பதற்கு வசதியாகத்தான் பாதங்கள் அப்படி இருப்பதாகத் தாய் ஒட்டகம் பதில் சொன்னது.
அடுத்து
குட்டி ஒட்டகம் நமக்கு மட்டும் பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியாக இருக்கிறதே என்று
கேட்டது.
பாலைவனத்தில்
இருக்கும் கடினமான தாவரங்களைத் தின்பதற்காகத்தான் அப்படி இருப்பதாகத் தாய் ஒட்டகம்
சொன்னது.
அதற்கு
மேலும் பொறுக்க முடியாமல் குட்டி ஒட்டகம் கேட்டது, இவ்வளவு தகவமைப்புகளை வைத்துக் கொண்டு
நாம் ஏன் இந்த மிருகக் காட்சிச் சாலையில் சகல வசதிகளோடும் அடைபட்டுக் கிடக்கிறோம் என்று.
அதற்குத்
தாய் ஒட்டகம் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்?
ஆகவே
நாமும் சவால்களை எதிர்கொள்ளும் இடத்தில் இருந்தால்தான் நம்மிடம் இருக்கும் திறமைகளுக்கு
மதிப்பு இருக்கும். எந்தச் சவால்களும் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கையில் நம்முடைய திறமைகளுக்கு
என்ன மதிப்பு இருக்க முடியும்?
பிரச்சனைகளும்
சவால்களும் இல்லாத இடத்தில் நீங்கள் இருப்பது என்பது, சகல தகவமைப்புகளையும் பெற்று
மிருக காட்சிச் சாலையில் இருக்கும் ஒட்டகத்தைப் போலத்தான்.
ஆகவே
சவால்களும் பிரச்சனைகளும் வருகிறதே என்று கலங்காதீர்கள். அவை நம்முடைய திறமைகள் வெளிப்பட
வாய்ப்புகளை வழங்குகின்றன. அவற்றை எதிர்கொண்டு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் யார் என்பதை இந்த உலகத்துக்குக் காட்டுங்கள்.
இந்தக்
கதை உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இது
போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி!
வணக்கம்!
*****
SLAS – OMR Sheet Model
தமிழக அரசுப் பள்ளிகளில்
பிப்ரவரி 04, 05, 06 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான அடைவுத் தேர்வுக்கான
(SLAS) ஒளி வழிக் குறி படிப்பி (OMR) தாளின் மாதிரி வடிவத்தைக் கீழே காண்க.
இன்றைய கல்வி & பொதுஅறிவுச்
செய்திகள் – 31.01.2025 (வெள்ளி)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) திரிவேணி சங்கமத்தில்
கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
2) குடியரசு தின விழா
அணிவகுப்பில் மகா கும்பமேளாவைக் காட்சி படுத்திய உத்திரபிரதேச அலங்கார ஊர்திக்கு முதல்
பரிசு வழங்கப்பட்டுள்ளது.
3) இன்று நாடாளுமன்றம்
கூடுகிறது. 62 சட்ட மசோத்தாக்கள் தாக்கல் ஆகின்றன.
4) தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் நிலை முதன்மைத் தேர்வுக்கான தேர்வறை நுழைவுச்சீட்டைப்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
5) மின்சார சுடுநீர்க்
கருவியை நீரைச் சூடுபடுத்தியதும் மின்சாரத்தை நிறுத்தி விட்டுப் பயன்படுத்துமாறு மின்வாரியம்
அறிவுறுத்தியுள்ளது.
6) சென்னை பெருநகர
தொடர்வண்டி நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தத்திற்கான முன்பதிவு முறை நாளையிலிருந்து ரத்து செய்யப்படுகிறது.
7) அடுத்த 5 ஆண்டுகளில்
100 ராக்கெட்டுகளைச் செலுத்தும் சாத்தியம் உள்ளதாக இஸ்ரோ தலைவரி வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
8) 34,300 கோடி முதலீட்டில்
முக்கிய கனிமத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
9) தென்மேற்கு வங்கக்
கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியால் தமிழகம், புதுவை, காரைக்கால்
பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
English News
1) 30 people died in a stampede at
the Kumbh Mela at Triveni Sangam.
2) The Uttar Pradesh float that
displayed the Maha Kumbh Mela in the Republic Day parade has been awarded the
first prize.
3) Parliament is meeting today. 62
bills are being introduced.
4) The Hall ticket for the Tamil Nadu
Public Service Commission's Group II and IIA main examination can be downloaded.
5) The Electricity Board has advised
that electric water heaters should be switched off after heating the water.
6) The monthly parking reservation
system at Chennai Metro stations will be canceled from tomorrow.
7) ISRO Chairman V. Narayanan has
said that there is a possibility of launching 100 rockets in the next 5 years.
8) The Union Cabinet has approved
major mineral projects with an investment of Rs 34,300 crore.
9) Due to the low pressure area
formed in the southwest Bay of Bengal, there is a possibility of rain in Tamil
Nadu, Puducherry and Karaikal.
மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம்
2016 இல் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது இச்சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடனும் அவர்களுக்கு உரிய உரிமைகளுடனும் நடத்தப்பட வேண்டியது அவசியம். அவர்களுக்குப் பாரபட்சமற்ற கல்வி வழங்க வேண்டியதும் முக்கியமாகும். மேலும் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் குறித்து கீழே காண்க.
இன்றைய கல்வி & பொதுஅறிவுச்
செய்திகள் – 30.01.2025 (வியாழன்)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) திருச்சி மாவட்டம்,
மணப்பாறையில் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தொடங்கி வைத்தார்.
2) 38வது தேசிய விளையாட்டுப்
போட்டிகளை உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
3) பெண்களுக்கு எதிரான
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு
வந்தது.
4) சிற்றுந்துகளுக்கான
பேருந்துக் கட்டண உயர்வு மே 1 முதல் அமலுக்கு வருகிறது.
5) இஸ்ரோவின் நூறாவது
ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
6) நாடாளுமன்றத்தின்
வரவு செலவு (பட்ஜெட்) கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
7) மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் நாட்டின் வரவு செலவு திட்டத்தைத் (பட்ஜெட்) தாக்கல்
செய்கிறார்.
8) தென்மாவட்டங்களில்
நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English News
1) Deputy Chief Minister Udhayanidhi
Stalin inaugurated the Diamond Jubilee of the Bharat Scout in Manapparai,
Trichy district.
2) The Prime Minister inaugurated the
38th National Games in Dehradun, Uttarakhand.
3) The law imposing death penalty for
those involved in sexual crimes against women came into force in Tamil Nadu.
4) The increase in Mini bus fares
will come into effect from May 1.
5) ISRO's hundredth rocket, the GSLV
F15 rocket, was successfully launched.
6) The Budget session of Parliament
begins tomorrow.
7) Union Finance Minister Nirmala
Sitharaman will present the country's budget the day after tomorrow.
8) The Meteorological Department has
said that there is a possibility of heavy rain in the southern districts
tomorrow and the day after tomorrow.
இன்றைய கல்வி & பொதுஅறிவுச்
செய்திகள் – 29.01.2025 (புதன்)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) பள்ளிக் கல்வித் துறையில் 47000 தற்காலிகப் பணியிடங்களை
நிரந்தர பணியிடங்களாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2) நீட் தேர்வில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தேர்வு நேரமும் 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
3) தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள கட்சிக் கொடி கம்பங்களை
12 வாரங்களுக்குள் அகற்ற உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
4) சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
5) ‘சாம்சங் இந்தியா’ தொழிற்சங்கத்துக்குத் தமிழக அரசு அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
6) தேசிய ஊரகத் திட்டத்திற்கான 1635 கோடி நிதியை விடுவிக்குமாறு
மத்திய நிதி அமைச்சரிடம் தமிழக நிதி அமைச்சர் கோரிக்கை வைத்தார்.
7) இந்தியாவில் கிராமப்புற பெண் தொழிலாளர்கள் 15 கோடியாக
அதிகரித்துள்ளனர்.
8) தமிழகத்தில் 104 நாட்கள் நீடித்த வடகிழக்குப் பருவமழை
விலகியது.
9) அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.
10) வங்கதேசத்திற்கு அளித்து வரும் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
11) இந்தியாவிடமிருந்து 3884 கோடிக்கு பிரமோஸ் ஏவுகணைகளை
இந்தோனேசியா வாங்குகிறது.
English News
1) The Tamil Nadu government has
issued an order to convert 47,000 temporary posts in the school education
department into permanent posts.
2) It has been made mandatory to
answer all questions in the NEET exam. The exam time has also been reduced to 3
hours.
3) The High Court has ordered the
removal of party flagpoles from public places and roads in Tamil Nadu within 12
weeks.
4) The Veeranam lake, which supplies
drinking water to Chennai, has reached its full capacity.
5) The Tamil Nadu government has
granted recognition to the ‘Samsung India’ labour union.
6) The Tamil Nadu Finance Minister
has requested the Union Finance Minister to release Rs 1,635 crore for the
National Rural Employment Guarantee Scheme.
7) The number of rural women workers
in India has increased to 15 crore.
8) The 104-day-long northeast monsoon
has ended in Tamil Nadu.
9) Indian Prime Minister Narendra
Modi congratulated Donald Trump on his inauguration as the US President over
the phone.
10) The US has stopped its financial
assistance to Bangladesh.
11) Indonesia is buying BrahMos
missiles from India for 3884 crores.
மருத்துவ விடுப்பிற்கான முகப்புக்
கடிதம் & விண்ணப்பம்
மருத்துவ
விடுப்பிற்கு வழங்க வேண்டிய முகப்புக் கடிதம், விண்ணப்பம் மற்றும் விடுப்பு முடிந்து
பணியில் சேர்வதற்கான முகப்புக் கடிதம் ஆகியவற்றைப் பெற கீழே இணைப்பைச் சொடுக்கவும்.
பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழ்நாடு முழுவதும் 22,931 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்
அமைக்கும் பணியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
2) பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைரவிழா திருச்சி மாவட்டம்,
மணப்பாறையில் இன்று தொடங்குகிறது.
3) ஆட்டோ கட்டணம் பிப்ரவரி 1 முதல் உயர்கிறது. குறைந்தபட்ச
ஆட்டோ கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4) நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்திரகாண்ட் மாநிலம் பொது குடிமைச்
சட்டத்தை அமல்படுத்தியது.
5) ஜிஎஸ்எல்வி எப்15 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று
தொடங்குகிறது.
6) உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாதிமிர்
புதினுடன் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
7) கச்சா எண்ணெய் விலையை மார்ச் மாதத்திலிருந்து உயர்த்த அரபு
நாடுகள் திட்டமிட்டுள்ளன.
8) 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் அந்நாட்டை டெஸ்ட்
கிரிக்கெட்டில் வென்றது வெஸ்ட் இன்டிஸ் அணி.
English News
1) School Education Minister Anbil Mahesh
Poyyamozhi reviewed the work of setting up smart classrooms in 22,931 schools
across Tamil Nadu.
2) The Diamond Jubilee of the Bharat Scout
begins today in Manapparai, Trichy district.
3) Auto fares to increase from February 1.
The minimum auto fare has been fixed at Rs 50.
4) Uttarakhand became the first state in the
country to implement the Common Civil Code.
5) The countdown for the launch of the GSLV
F15 rocket begins today.
6) US President Donald Trump has said that
he will speak to Russian President Vladimir Putin regarding the ceasefire in
Ukraine.
7) Arab countries plan to increase crude oil
prices from March.
8) The West Indies team defeated Pakistan in
Test cricket after 35 years.
பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி கடமைப் பாதையில்
குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்.
2) சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்
கொடியை ஏற்றினார்.
3) ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நிர்வாக முறையை மேம்படுத்தும்
என குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
4) இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு
திகழ்வதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
5) அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால்
40,168 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
6) ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு
வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
7) தமிழகத்தைச் சேர்ந்த சீனி விசுவாநாதன், நல்லி குப்புசாமி,
ஷோபனா, அஜித்குமார் உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
8) இந்தியாவின் முதல் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த
கே.எம். செரியன் காலமானார்.
9) கடந்த ஆண்டு அக்டோபர் 15 இல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை
இன்று விடைபெறுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English News
1) The President hoisted the national flag
on the Delhi Kartavya path on the occasion of the 76th Republic Day
celebrations.
2) Governor R.N. Ravi hoisted the national
flag on the Chennai Marina beach.
3) The President said that one country, one
electoral system will improve the administrative system.
4) The Chief Minister expressed pride that
Tamil Nadu is the second largest economic state in India.
5) 40,168 students have benefited from the
7.5 percent reservation for government school students.
6) The Central Government has announced that
the new unified pension scheme will come into effect from April 1.
7) 13 people from Tamil Nadu, including
Seeni Viswanathan, Nalli Kuppusamy, Shobana, Ajith Kumar, have been announced
as Padma awards.
8) KM Cherian, who successfully performed
India's first heart surgery, passed away.
9) The Meteorological Department has said
that the northeast monsoon, which started on October 15 last year, will end
today.
உலகமே உங்களை விரும்ப என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
– ஓர் அருமையான கதை!
இந்த
உலகம் யாரை விரும்புகிறது தெரியுமா?
கொடுப்பவர்களைத்தான்
விரும்புகிறது.
நீங்களும்
கொடுப்பவர்களாக இருங்கள். அன்பை, கருணையை, உதவிகளைக் கொடுப்பவர்களாக இருங்கள். உலகம்
உங்களையும் விரும்பும்.
இது
குறித்த கதை ஒன்றை இன்று அறிவோமா?
அந்தக்
கல்லூரி இளைஞன் அன்று வெகு சந்தோசமாக இருந்தான்.
அன்று
அவனுக்குப் பிறந்த நாள். அவன் சந்தோசத்துக்குக் காரணம் அவனுக்குப் பிறந்த நாள் என்பது
மட்டுமல்ல, அவனுக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட மகிழ்வுந்தும் காரணம்.
அந்த
மகிழ்வுந்தை அந்த இளைஞனின் அண்ணன் பிறந்த நாள் பரிசாக வழங்கி இருந்தான்.
அந்தப்
பிறந்த நாள் பரிசோடு அந்த இளைஞன் நண்பர்கள் அனைவரையும் உற்சாகமாகச் சந்தித்துப் பேசினான்.
அவனைக்
கண்ட நண்பர்கள் அனைவரும் இப்படி ஓர் அண்ணன் தங்களுக்கு இல்லையே என்று ஏக்கப் பெரு மூச்சு
விட்டார்கள்.
அவர்களில்
ஒரே ஒரு நண்பன் மட்டும் அந்தக் காரை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப்
பார்த்த அந்தக் கல்லூரி இளைஞன், உனக்கும் இப்படி ஓர் அண்ணன் இல்லை என்று ஏங்குகிறாய்தானே
என்று கேட்டான்.
அதற்கு
அந்த நண்பன், இல்லை நண்பா! இப்படி ஓர் அண்ணனாக என் தம்பிகளுக்கு நான் இல்லையே என்று
ஏங்குகிறேன் என்றான்.
ஏக்கம்
என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது அல்லவா!
ஆம்!
இந்தக் கதை நமக்கு எவ்வளவு விசயங்களைச் சொல்கிறது. நாம் அனைவரும் பொதுவாகப் பரிசுகளைப்
பெறுபவர்களாக இருப்பதையே விரும்புகிறோம். ஆனால் நாம் பரிசுகளைக் கொடுப்பவர்களாக இருப்பதை
விரும்ப வேண்டும் என்பதை இந்தக் கதை சொல்கிறது அல்லவா!
ஆகவே,
நாம் பெறுபவர்களாக இருப்பதை விட, கொடுப்பவர்களாக இருப்பதை விரும்புவோமே! இந்த உலகை
மகிழ்விப்போமே! அனைவரையும் மகிழ்வித்து மகிழ்வோமே!
இந்தக்
கதை உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத்
தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி!
வணக்கம்!
*****
பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
அனைவருக்கும் 76 ஆவது குடியரசு தின நல்வாழ்த்துகள்!
1) பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில்
வெற்றி பெற்ற 466 மாணவர்களுக்குக் கலையரசன், கலையரசி விருதுகளைத் துணை முதல்வர் உதயதிநி
ஸ்டாலின் வழங்கினார்.
2) மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு எழும்பூர்
மாளிகையில் சிலைகள் நிறுவப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
3) பெண் குழந்தைகளைச் சாதனைகளைக் கண்டு நாடு பெருமிதம் கொள்வதாகப்
பிரதமர் தெரிவித்துள்ளார்.
4) ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர மின்
கட்டண முறை அமலாகும்.
5) நிலவில் வாழும் உரிமை இந்தியர்களுக்கு இருப்பதாக மயில்சாமி
அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
6) பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்குமாறு
உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
7) மகா கும்பமேளாவில் இதுவரை பத்து கோடி பக்தர்கள் வரை நீராடியுள்ளனர்.
8) தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
English News
Happy 76th Republic
Day to everyone!
1) Deputy Chief Minister Udayathini Stalin
presented Kalaiyarasan and Kalaiyarasi awards to 466 students who won in the
Kalaithiruvizhala organized by the School Education Department.
2) The Chief Minister has announced that
statues of language martyrs Thalamuthu and Natarasan will be installed at
Egmore.
3) The Prime Minister has said that the
country is proud of the achievements of girl children.
4) Monthly electricity billing system will
be implemented after smart meters are installed.
5) Mayilsamy Annadurai has said that Indians
have the right to live on the moon.
6) The High Court has directed the Tamil
Nadu government to take a decision on the bus fare hike within four months.
7) Up to ten crore devotees have taken bath
in the Maha Kumbh Mela so far.
8) Dry weather will prevail in Tamil Nadu
till the 28th.
இன்றைய கல்வி & பொதுஅறிவுச்
செய்திகள் – 25.01.2025 (சனி)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
இன்று தேசிய வாக்களார்
தினம்!
1) கல்வி உதவித் தொகை
வந்துள்ளதாகக் கூறி வங்கிக் கணக்கு எண், கடவுஎண் கேட்கும் அலைபேசி அழைப்புகளை நம்ப
வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
2) தமிழ் நிலப்பரப்பில்
இருந்து இரும்புக் காலம் தொடங்கியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்களுடன் அறிவித்துள்ளார்.
3) 5300 ஆண்டுகளுக்கு
முன்பே தமிழ் நிலத்தில் இரும்பின் பயன்பாடு இருந்துள்ளது.
4) மதுரை மாவட்டம்,
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த்து.
5) நெல்லின் ஈரப்பதம்
குறித்து டெல்டா மாவட்டங்களில் மத்திய ஆய்வுக் குழு ஆய்வு செய்தது.
6) வளர்ந்த பாரதம்
எனும் இலக்கை அடைய ஒற்றுமை அவசியம் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
7) இந்தியாவின் தொழிலக
உற்பத்தி நவம்பரில் 5.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
8) 76வது குடியரசு
தின விழா அணிவகுப்பில் ராணுவத்தின் சஞ்சய், பிரளய் ஆகிய ராணுவ தளவாடங்கள் காட்சிபடுத்தப்பட
உள்ளன.
9) ஜனவரி 29 இல் ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில்
இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
English News
Today is National Voters' Day!
1) The School Education Department
has announced that do not believe the phone calls asking for bank account
numbers, passwords and OTPs claiming that you have received the scholarship
money.
2) Chief Minister M.K. Stalin has
announced with evidence that the Iron Age began in the Tamil land.
3) Iron was used in Tamil land 5300
years ago.
4) The Central Government has cancelled
the auction for the construction of a tungsten mine in Aritapatti, Madurai
district.
5) A Central Research Committee has
conducted a study on the moisture content of paddy in the delta districts.
6) The Prime Minister has said that
unity is necessary to achieve the goal of a developed India.
7) India's industrial production has
grown by 5.2 percent in November.
8) The Army's military equipment
Sanjay and Pralay are to be displayed in the 76th Republic Day parade.
9) ISRO has announced that the GSLV
F-15 rocket will be launched from Sriharikota on January 29.
மனிதர்கள் பலவிதம்! ஒவ்வொருவரும் ஒரு விதம்! –
மனித குணாதிசயம் குறித்த கதை!
சிலருக்கு
என்னதான் உதவி செய்தாலும் அதை ஓர் உதவியாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதிலும்
குறை காண்பார்கள். ஏன் இப்படி என்றால் மனித மனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.
அதை விளக்கும்படியான கதை ஒன்றை அறிவோமா?
ஒரு
சிறுவன் ஒரு நடைபாதைக் கடை போட்டான்.
எந்தப்
பொருள் எடுத்தாலும் ஐந்து ரூபாய் என்று கடைக்குப் பலகையும் வைத்தான்.
மாலையிலிருந்து
இரவு முழுவதும் வியாபாரம் செய்வான்.
அந்தச்
சிறுவனைப் பார்த்த நல்ல மனிதர் ஒருவர், படிக்கின்ற வயதில் இப்படி கடினமாக உழைக்கிறாயே
என்றார்.
அந்தச்
சிறுவன் தான் பள்ளி முடித்து மாலை நேரத்தில் படிப்புச் செலவுக்காக இப்படி நடைபாதைக்
கடை நடத்துவதாகக் கூறினான்.
அந்த
நல்ல மனிதருக்கு அந்தச் சிறுவன் மேல் தனிமதிப்பு வந்து விட்டது. அவனிடம் ஐந்து ரூபாய்
கொடுத்து விட்டு, அவனை ஊக்கப்படுத்திப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கில் எந்த பொருளும்
வாங்காமல் சென்று விட்டார். அன்றிலிருந்து அந்த மனிதர் எப்போது அந்தப் பகுதிக்கு வந்தாலும்
அந்தச் சிறுவனிடம் ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு எந்தப் பொருளும் வாங்காமல் செல்வதை
வழக்கமாக வைத்துக் கொண்டார்.
இதை
அடிக்கடி கவனித்த அந்தச் சிறுவனின் நண்பன் அந்த மனிதரைப் பற்றி எவ்வளவு பெரிய நல்ல
மனிதராக இருக்கிறார் என்று பெருமையாகப் புகழ்ந்து சொன்னான்.
அதைக்
கேட்ட அந்தச் சிறுவன், ஆமாம் பெரிய நல்ல மனிதர் போ என்று சலிப்புடன் கூறினான்.
அவன்
சலிப்புக்குக் காரணம் புரியாமல் அந்த நண்பன் கேட்ட போது, அந்தச் சிறுவன் சொன்னான்,
அப்போது எந்தப் பொருள் எடுத்தாலும் ஐந்து ரூபாய் என்று கடை போட்டேன். ஐந்து ரூபாய்
கொடுத்தார் நியாயம். இப்போது எந்தப் பொருள் எடுத்தாலும் பத்து ரூபாய் என்றல்லவா கடை
போட்டிருக்கிறேன். இப்போது பத்து ரூபாய் கொடுப்பதுதானே நியாயம். இன்னும் பழையபடியே
ஐந்து ரூபாயே கொடுத்து விட்டுப் போகிறாரே என்றான்.
எப்படி
இருக்கிறது இந்தக் கதை?
இப்படியும்
நாட்டில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னதான் உதவி செய்தாலும் அதன் தாத்பர்யத்தைப்
புரிந்து கொள்ள அவர்களால் முடியாது. அவர்களின் மனதில் இந்த உலகை எப்படிப் பார்க்கிறார்களோ
அப்படித்தான் எல்லாவற்றையும் பார்ப்பார்கள்.
இதைத்தான்
திருவள்ளுவர்,
“நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.”
என்று
சொல்கிறாரோ!
இந்தக்
கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத்
தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி!
வணக்கம்!
*****